புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_m10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_m10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_m10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10 
11 Posts - 4%
prajai
பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_m10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10 
9 Posts - 4%
Jenila
பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_m10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10 
4 Posts - 2%
Rutu
பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_m10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_m10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10 
2 Posts - 1%
Barushree
பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_m10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_m10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10 
2 Posts - 1%
jairam
பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_m10பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 08, 2012 2:07 pm

பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இலவச மருத்துவ பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

திருப்பூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பீதி ஏற்பட்டது.

சென்னையிலும் சிலருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து தமிழக அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

25 படுக்கைகளுடன் தனி வார்டு

பன்றிக் காய்ச்சல் நோயைத் தடுப்பதற்காக தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தண்டையார்பேட்டை தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக 25 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனி வார்டுகளை சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் நேற்று பார்வையிட்டு சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் எழும்பூர் குடும்ப நல பயிற்சி மையத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் விஜய் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பன்றிக் காய்ச்சல்

பன்றிக் காய்ச்சல் என்பது இன்புளூயன்சா `எச்1என்1' என்ற வகை வைரஸ் கிருமிகளால் உருவாகும் நோயாகும். 1920-1930-ம் ஆண்டுகளில் மெக்ஸிகோ நாட்டில் இந்த நோய் பன்றிகளிடம் காணப்பட்டது. பின்னர் இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்கத் தொடங்கியது. தற்போது பன்றிகளின் மூலம் இந்த நோய் பரவுவதில்லை. நோய் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இருந்தே மற்றவர்களுக்குப் பரவுகிறது.

பன்றிக் காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு தும்மல், இருமல், மூக்கில் நீர் வடிதல், தொண்டை வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். பன்றிக் காய்ëச்சல் நோய் பாதிக்கப்பட்டவரின் சுவாச மண்டலத்தில் இருந்து தும்மல் அல்லது இருமல் வரும்போது வெளியேறும் சளித்திவலைகள் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பன்றிக் காய்ச்சல் நோய் பரவுகிறது.

கடந்த ஆண்டுகளில் பாதிப்பு

வயதானவர்கள் (70 வயதுக்கு மேற்பட்டவர்கள்), சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இருதய நோய், கல்லீரல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தீவிரமாக பாதிக்க வாய்ப்புள்ளது. இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் இந்த நோய் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாட்டில் 2009-ம் ஆண்டு பன்றிக் காய்ச்சலால் 3,047 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 10 பேர் இறந்தனர். 2010-ம் ஆண்டு இந்த நோய் பாதித்த 1,405 நபர்களில் 24 பேர் மரணமடைந்தனர். 2011-ம் ஆண்டு இந்த நோயின் தாக்கம் மிகவும் குறைந்து 34 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த ஆண்டு 29 பேர்...

இந்த ஆண்டு நேற்று வரை 29 (சென்னை 14, கோவை 11 உள்பட 29 பேர்) நபர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இந்த நோய் காணப்படுகிறது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள நல்லிகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த 75 வயது விவசாயி சி.கந்தசாமி பன்றிக் காய்ச்சல் நோய்க்கு பலியாகி உள்ளார். தாமதமாக நோய் கண்டறியப்பட்டதும், அவரது வயதுமே உயிரிழப்பிற்கு காரணம் ஆகும்.

இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய 26 நபர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக டாமி புளு மருந்து வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவக் குழு கண்காணிப்பில் இருக்கின்றனர். கந்தசாமியின் உறவினர்கள் யாரும் பன்றிக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்படவில்லை.

அரசு மருத்துவமனைகளில் இலவச பரிசோதனை

ஒருவருக்கு காய்ச்சல், தலைவலி இருந்தால் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் பாரசிட்டமால் மாத்திரையில் குணமாக வேண்டும். அவ்வாறு குணமாகாமல் காய்ச்சல் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தால் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். பன்றிக்காய்ச்சல் நோய் தாக்குதல் இருப்பதாக டாக்டர் சந்தேகப்பட்டால், உடனே குறிப்பிட்ட நபரின் தொண்டை சளி மாதிரியை எடுத்து ஆர்டி-பிசிஆர் என்ற பரிசோதனை நடத்த வேண்டும். இந்தப் பரிசோதனையில்தான் பன்றிக்காய்ச்சல் நோயை உறுதிப்படுத்த முடியும்.

சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவனம் மற்றும் சென்னை, மதுரை, கோவை, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தப் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. இவை தவிர தமிழ்நாடு முழுவதும் 12 தனியார் ஆய்வுக்கூடங்களில் இந்தப் பரிசோதனையை செய்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்


தனியார் ஆய்வுக் கூடங்களில் பரிசோதனை செய்தால் 7 ஆயிரம் ரூபாய் வரை வாங்குகிறார்கள். எனவே, அரசு மருத்துவமனைகளிலே பொதுமக்கள் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசு அங்கீகாரம் அளிக்கப்படாத தனியார் ஆய்வுக் கூடங்களில் பன்றிக் காய்ச்சல் நோய் பரிசோதனை செய்யக்கூடாது. அதையும் மீறி செய்தால் சம்பந்தப்பட்ட ஆய்வுக்கூட நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தங்களுக்கு பன்றிக் காய்ச்சல் வந்து விடுமோ என்ற பயத்தில் தடுப்பூசி எதையும் போட வேண்டாம். டாக்டர் பரிந்துரை செய்யாமல் பன்றிக் காய்ச்சல் நோய் பரிசோதனை செய்ய வேண்டாம். மருந்துக் கடைகளில் மருந்து எதையும் வாங்கிச் சாப்பிட வேண்டாம்.

தமிழ்நாட்டில் இந்த நோயின் தாக்கம் குறைவாக இருக்கிறது. அரசு போர்க்கால அடிப்படையில் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்புப் பணியை மேற்கொள்வதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

தடுப்பூசி

பன்றிக் காய்ச்சல் நோயை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி பச்சோந்தி போல அடிக்கடி நிறம் மற்றும் தன்மையை மாற்றிக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் அந்த கிருமிக்கு வீரியம் குறைவாக இருப்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. பன்றிக் காய்ச்சல் நோயைத் தடுப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் 25 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் கட்டமாக இந்த வார்டுகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.

தற்போதைய சூழ்நிலையில் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பூசி பொதுமக்கள் அனைவருக்கும் போட வேண்டிய அவசியம் இல்லை. இரண்டாம் கட்டமாக, இந்த நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு தேவை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும்.

விமான நிலையம், ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு மையம்

பன்றிக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறி இருப்பவர்கள் அருகில் உள்ள டாக்டரை அணுகி, ஆரம்ப நிலையிலே நோயைக் கண்டறிந்து ஓசால்டாமாவீர் மருந்துகளை சாப்பிட்டால் நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும். இதன்மூலம் இறப்பினைத் தவிர்க்கலாம். பன்றிக் காய்ச்சல் நோய் கண்காணிப்புப் பணியில் 3 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து வருவோரிடம் இருந்தும் பன்றிக் காய்ச்சல் நோய் பரவுவதைத் தடுப்பதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையங்கள் இன்று முதல் (ஞாயிற்றுக்கிழமை) செயல்படும். பெங்களூரில் இரண்டு பேர் பன்றிக் காய்ச்சலால் இறந்துள்ளனர். எனவே, ஓசூரில் ஒரு கண்காணிப்பு மையம் செயல்படும்.

ரூ.55 லட்சம் ஒதுக்கீடு

பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்புப் பணிக்காக, மத்திய அரசிடம் இருந்து முதல்கட்டமாக 25 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு உள்ளன. மேலும் தேவையான அளவுக்கு தடுப்பூசி வாங்குவதற்கு தமிழக அரசு ரூ.55 லட்சம் ஒதுக்கியுள்ளது. இதனைக் கொண்டு 55 ஆயிரம் தடுப்பூசி வாங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் கூறினார்.

பேட்டியின்போது, சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் பொற்கைப் பாண்டியன், கூடுதல் இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

தினதந்தி



பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 2:12 pm

இப்போது தான் கடலூர் புயல் பிரச்சனை தீர்ந்து ஓய்ந்தது.அதற்குள் பன்றி காய்ச்சல் தொடங்கிவிட்டது.
சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக