புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_m10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10 
53 Posts - 42%
heezulia
இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_m10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_m10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_m10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_m10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_m10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_m10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_m10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10 
304 Posts - 50%
heezulia
இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_m10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_m10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_m10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_m10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10 
21 Posts - 3%
prajai
இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_m10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_m10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10 
3 Posts - 0%
Barushree
இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_m10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_m10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_m10இன்றைய தேவை கருணைக் கோயில்கள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய தேவை கருணைக் கோயில்கள்!


   
   
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Thu Jun 21, 2012 10:16 pm

”மனித சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய் மகனே!” என்று இறக்கும் வரை மகனிடம் அந்தத் தந்தை அடிக்கடி சொல்வார். அந்தத் தந்தை ஒரு சாதாரண ’லஸ்ஸி’ கடையை நடத்தி வந்தவர். ஆனால் மகன் தேர்ந்தெடுத்த தொழிலோ சூதாட்ட க்ளப். சூதாட்ட க்ளப்பில் ஏராளமான சொத்துக்கள் சேர்த்த மகனின் மனதில் தந்தை சொன்னது நீண்ட நாளுக்கு ஒரு உறுத்தலாக இருந்தது. மனித சமூகத்திற்கு நல்லது செய்வதற்குப் பதிலாக மனித சமூகத்தைப் படுகுழியில் தள்ளும் சூதாட்டம் மூலமாகப் பணம் சம்பாதிக்கிறோமே என்ற உறுத்தல் நாளாவட்டத்தில் அதிகமாகவே அந்தத் தொழிலிற்கு முழுக்குப் போட்ட மகன் சம்பாதித்த பணத்தை தந்தை சொன்னபடி மனித குலத்திற்கு நல்லது செய்யப் பயன்படுத்த தீர்மானித்தார். அவர் பெயர் பிக்காபாய் சாதியா. குஜராத்தில் பாவநகர் மாவட்டத்தில் உள்ள பாலிடானா நகரைச் சேர்ந்தவர்.

என்ன செய்வது என்று யோசித்த சாதியா ஒரு கோயில் கட்டத் தீர்மானித்து பாதி கட்டியும் முடித்து விட்டார். அந்த சமயத்தில், 2002ஆம் ஆண்டில், போலீசாரால் கற்பழிக்கப் பட்ட மனநிலை குன்றிய பெண் ஒருத்தியைப் பற்றி பத்திரிக்கைச் செய்தியில் படித்தார். வசிப்பிடம், ஆதரவு இல்லாமல் மனநிலையும் சரியில்லாமல் தெருக்களில் திரியும் மனிதர்களின் நிலைமை அவரை மனதைப் பெரிதும் பாதித்தது. கோயில் வேலையைப் பாதியில் நிறுத்திய சாதியா அதை இது போன்ற ஆதரவில்லாமல் மனநிலை குன்றியவர்களின் காப்பகமாகக் கட்டி முடித்தார். அதைத் தானே பராமரிக்கவும் முடிவு செய்தார்.

கைவிடப்பட்ட அத்தகைய மனநிலை குன்றிய நபர்களைக் காப்பகத்திற்கு அழைத்து வரும் ரிக்‌ஷாக்காரர்களுக்கு ஆரம்பத்தில் நூறு ரூபாய் ஊக்கப் பணமாகவும் கொடுத்தார். இன்று வரை அவரது காப்பகம் 180 நபர்களுக்கு அன்பும் ஆதரவும் கொடுத்திருக்கிறது.

மனநிலை குன்றியவர்களைப் பாதுகாத்துப் பராமரிப்பது மிக மிக கஷ்டமான காரியம். அதற்கு நிறைய பொறுமையும், அதீத அன்பும் தேவை. பிக்காபாய் சாதியாவிடம் பணத்தைப் போலவே அன்பும், பொறுமையும் கூட அதிகமாக இருந்தன. அதிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கும் அவரது தினசரி வாழ்க்கை சுலபமானதாக இருக்கவில்லை. ஆனால் அனாதரவாக நின்ற மனநிலை குன்றிய மக்களைத் தன் பாதுகாப்பிற்குக் கொண்டு வந்து அவர்களில் பலரைக் குணப்படுத்தி இயல்பு நிலைக்குத் திரும்ப வைப்பதிலும், பலரை அவர்களது குடும்பத்தாருடன் சேர்த்து வைப்பதிலும் கிடைத்த நிறைவைப் பெரியதாக அவர் நினைத்தார். அவர் காப்பகத்திற்கு வந்த 180 பேரில் 60 பேர் அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து இயல்பு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை அவர் பெருமையுடன் தெரிவிக்கிறார்.

பல வருடங்களுக்கு முன் சூரத்தில் நிர்க்கதியாகத் திரிந்த தாரா என்ற பெண்ணை அழைத்து வந்து அவருடைய காப்பகத்தில் சிகிச்சை செய்ததில் இரண்டு வருடம் கழித்து அந்தப் பெண் குணமானார். அவருக்கு மராத்தி மட்டுமே தெரியும். மராத்திய மொழி அறியாத சாதியா அம்மொழி அறிந்த வங்கி அதிகாரி ஒருவரை வரவழைத்து அந்தப் பெண்ணின் சொந்த கிராமம் பூனாவின் அருகில் இருந்த சதாரா என்ற கிராமம் என்பதை அறிந்தார். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து அந்தப் பெண்ணை அவருடைய குடும்பத்தாருடன் சேர்த்திருக்கிறார்.

அதே போல இரண்டு வருடங்களுக்கு முன் தலாஜா என்ற நகரத்தில் நிர்வாணமாக, இடது கை வெட்டப்பட்ட நிலையில் ஒரு மனநிலை குன்றிய பெண் விழுந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்து விரைந்து சென்று அவளை தன் காப்பகத்திற்கு அழைத்து வந்து, அதிர்ச்சி மனநிலையில் இருந்த அப்பெண்ணிற்கு சிகிச்சை தந்து சில வாரங்களில் அவளைக் குணப்படுத்தி இருக்கிறார். பின் அந்தப் பெண்ணிடம் விலாசம் பெற்று குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். கணவருடன் ஷப்னம் என்ற அந்தப் பெண் நல்ல முறையில் டில்லியில் வாழ்கிறார். ஷப்னம் இப்போதும் அவருடன் போனில் பேசுவதுடன் காப்பகத்திற்கு வந்தும் போகிறாராம்.

(கடந்த 31-05-2012 டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் பிக்காபாய் சாதியா பற்றிய கட்டுரை வந்துள்ளது.)

சாதாரண கோயில் கட்ட நினைத்து கருணைக் கோயில் கட்டி முடித்த பிக்காபாய் சாதியாவின் தந்தை இப்போது இருந்திருந்தால் மகனின் சேவையில் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. 180 பேருக்கு அபயம் கொடுத்து அதில் 60 பேருக்கு மறுவாழ்வும் ஏற்படுத்திக் கொடுத்த அந்த நல்ல மனிதர் இன்றும் மனிதம் இங்கு மரித்து விடவில்லை என்பதைக் காட்டி இருக்கிறார்.

கோயில்கள் அவசியம் தான். ஆனால் ஒரே பகுதியில் ஒன்றிரண்டுக்கு மேற்பட்ட கோயில்களைக் கட்டிக் கொண்டே போவதைக் காட்டிலும் பிக்காபாய் சாதியா கட்டியது போல காப்பகங்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோருக்கும் அன்பு இல்லங்கள், ஏழை எளிய மாணவர்களுக்குக் கூடுதலாகக் கற்றுக் கொடுக்கும் கல்விக்கூடங்கள் போன்ற கருணைக் கோயில்களைக் கட்டினால் கண்டிப்பாக கடவுளும் அந்த உன்னத இடங்களில் மனமுவந்து வந்து நிரந்தரமாகக் குடியிருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

- என்.கணேசன்
http://enganeshan.blogspot.in/

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jun 21, 2012 10:46 pm

கோயில்கள் அவசியம் தான். ஆனால் ஒரே பகுதியில் ஒன்றிரண்டுக்கு மேற்பட்ட கோயில்களைக் கட்டிக் கொண்டே போவதைக் காட்டிலும் பிக்காபாய் சாதியா கட்டியது போல காப்பகங்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோருக்கும் அன்பு இல்லங்கள், ஏழை எளிய மாணவர்களுக்குக் கூடுதலாகக் கற்றுக் கொடுக்கும் கல்விக்கூடங்கள் போன்ற கருணைக் கோயில்களைக் கட்டினால் கண்டிப்பாக கடவுளும் அந்த உன்னத இடங்களில் மனமுவந்து வந்து நிரந்தரமாகக் குடியிருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
எனது கருத்தும் இதுவே! சூப்பருங்க

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Jun 22, 2012 9:31 am

என்னை பொறுத்தவரை பிக்காபாய் தான் கடவுள்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jun 22, 2012 3:44 pm

பயனுள்ள கருத்தை பதிந்தமைக்கு நன்றி நண்பரே மகிழ்ச்சி



செந்தில்குமார்
e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Fri Jun 22, 2012 4:22 pm

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு

நன்றி நண்பரே



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 22, 2012 5:48 pm

பிக்காபாய் ஐ எவ்வளவு பாராட்டினாலும் தகும் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக