புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது Poll_c10வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது Poll_m10வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது Poll_c10 
7 Posts - 64%
heezulia
வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது Poll_c10வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது Poll_m10வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது Poll_c10வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது Poll_m10வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 04, 2009 9:50 am

இலங்கைத் தமிழர்களுக்காக, "வணங்காமண்' கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள், கொழும்பு துறைமுகத்தில், எடுப்பதற்கு ஆள் இல்லாமல் கிடக்கிறது. இந்திய செஞ்சிலுவைச் சங்கமும், இந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டதால், நிவாரணப் பொருட்கள் அனைத்தும் வீணாகி வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து, "கருணைத் தூதுவன்' என்ற அமைப்பு உருவாக்கப் பட்டது.


இந்த அமைப்பின் சார்பில், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் திரட்டப்பட்ட உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் ஏற்றிய, "கேப்டன் அலி' கப்பல், கடந்த மே மாதம் 7ம் தேதி பிரான்சில் இருந்து இலங்கைக்கு கிளம்பியது. "வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் என, இவற்றிற்கு பெயரிடப்பட்டது. நிவாரணப் பொருட்களை இறக்க இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தது. சென்னையைச் சேர்ந்த, "மனிதம்' என்ற அமைப்பு, நிவாரணப் பொருட்களை சென்னை துறைமுகத்தில் இறக்க முடிவு செய்து, அனுமதி கோரியது; இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மத்திய அமைச்சர் ராஜா மூலமாக தமிழக அரசு வலியுறுத்தலும், சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.


இதற்கிடையே, கொத்தபயே ராஜபக்ஷே தலைமையில், இந்தியா வந்த இலங்கை உயர்மட்டக் குழு, நிவாரணப் பொருட்களை ஏற்பதாக உறுதியளித்தது. ஜூலை 3ம் தேதி, சென்னை துறைமுகத்திற்கு வணங்காமண் கப்பல் வந்து சேர்ந்தது. நிவாரணப் பொருட்கள் இறக்கப் பட்டன. நான்கு நாட்கள் சோதனைக்குப் பிறகு, 27 கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு, "கேப் கலோராடா' என்ற கப்பல் மூலமாக, நிவாரணப் பொருட்கள் கொழும்பு எடுத்துச் செல்லப்பட்டது. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் இந்தப் பொருட்கள் கொழும்பிற்கு அனுப்பப் பட்டன. நிவாரணப் பொருட்களை, கொழும்பில் இறக்கி வைத்துவிட்டு கப்பல் புறப்பட்டுச் சென்றுவிட்டது. துறைமுகக் கட்டணத்தை செலுத்துவது யார், உரிய ஆவணங்கள் இல்லை என பல காரணங்களைக் கூறி, அந்தப் பொருட்களை கிடப்பில் போட இலங்கை அரசு முயற்சித்தது. அதோடு, இந்த பொருட்களை ஆகஸ்ட் 15ம் தேதி ஏலம் விடுவதாக அறிவிப்பும் வெளியானது.


இந்நிலையில், துறைமுகக் கட்டணத்தை செலுத்துவதற்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் முன்வந்தது. ஆனால், கட்டணத்தைத் தள்ளுபடி செய்வதாகக் கூறிய இலங்கை அரசு, அதற்கான ஆவணங்களை கொடுக்காமல் காலம் தாழ்த்தியது. அதோடு, நிவாரணப் பொருட்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரி நிர்ணயித்து, அதைக் கட்டுமாறும் நிர்பந்தம் கொடுத்தது. இலங்கை அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்திய நிலையில், இந்த நிவாரணப் பொருட்களை தாங்கள் எடுக்கப்போவதில்லை என, கடந்த செப்டம்பர் 26ம் தேதி இந்திய செஞ்சிலுவைச் சங்கம், கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இதற்கும் இலங்கை அரசிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. நிவாரணப் பொருட்களை அனுப்பிய கருணைத் தூதுவன் அமைப்பு, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகள் விலகிக் கொண்டுள்ள நிலையில், 884 டன் நிவாரணப் பொருட்கள், கேட்பதற்கு ஆள் இல்லாத நிலையில் கொழும்பு துறைமுகத்தில் கிடக்கின்றன



வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 04, 2009 9:57 am

இந்தியாவினதும் இலங்கையினதும் கூட்டுச்சதி, சொந்த பந்தங்கள் தமது மக்களுக்கு கொடுப்பதையும் விடவில்லை, திட்டம் செய்து தமிழ்ர்களை ஒழிக்கும் சதி



வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 1:20 pm

உங்களுக்கு தெரியுமா ..இந்த பொருள்களில் ..மீனுவும் கொடுத்த பொருள்கள் உண்டு.. நாம கொடுத்தவை சின்ன அளவே ..சிறிய குழந்தைகளுக்கு பால் மா டின்கள் கொடுத்தோம்..அவை அந்த குழந்தைகள் அருந்தாமலேயே வீணாகின்றதே,, வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது 67637



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக