புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிக்கொத்து 11 கவிதைகள் (கிரிகாசன்) new


   
   

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Mar 27, 2012 4:56 pm

First topic message reminder :

ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு இழை திறக்காமல் தொடர்ந்து 10 கவிதைகளுக்கு இவ்விழை பாவிப்பேன். இடம் ஒதுக்கிவிட்டேன். அதன்பின் கருத்துக்கள் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

கவிதை 1
மழைவிட்ட காலைநேரம்


தடதட எனஇடி தொலைவெழக் கருமுகில்
தரும்மழை ஓய்ந்துவிட
திடுதிடு மெனமனம் திகிலுறப் பெரும்புயல்
தீர்ந்தொரு அமைதிபெற
சிடுசிடு என மனம் சினந்தவள் முகமெனச்
சிவந்திடும் வான்வெளிக்க
வெடவெட எனக்குளிர் வீசிடும் காற்றிடை
விடியலில் வெளிநடந்தேன்

கலகல வென ஒலி எழுமதி காலையில்
கதிரவன் வரும்திசையில்
பளபள எனும்ஒளி பரவிட இருளவன்
பயமெழத் தலை மறைந்தான்
கொளகொள எனநீர் கொட்டிய மழைவிடக்
கூடிய தூவானம்
சிலபல துளிகளைச் சிதறிடத் தூறலில்
சிணு சிணுத்திடக் காணும்

சலசல எனும்குளி ரோடையில் மழைவிழச்
சடுதியில் நீர் பெருகி
கிளுகிளு எனநகை புரிபவள் போல்மனக்
கிளர்வுடன் அதுவிரைய
மளமள எனவளர் மரங்களும் நீரிடை
மலர்களும் சருகுதிர்த்தே
விழவிழ விரிந்திடும் இயற்கையின் அலையெனும்
வியனுறு கலை வியந்தேன்

வகைவகை யெனப்பல மலர்விரி சுனையிடை
வடிவுடன் தாமரைகள்
தகதக எனஒளிர் கதிரவன் தனையெண்ணித்
தளர்வுற இதழ் விரியும்
பளபள எனவெயில் பகலென வருமுதல்
பறவைகள் துயில் கலையும்
படபட என அவை பரப்பிய சிறகுடன்
பறந்திடும் வான் வெளியும்

கடகட வெனஉருள் காளைகள் வண்டியில்
கவினுறு சந்தமெழும்
அடியடியென அவன் அதட்டியும் நடைதரும்
அழகினை அவைபேணும்
மடமட எனமது வருந்திய வண்டினம்
மலர்களில் மயங்கிவிடும்
கொடுகொடு வெனச்சிறு குழந்தைகள் அன்பினை
கொண்டிட அழதுகொழும்

எழஎழ விழுந்திடும் சிலந்தியும் வலைதனில்
எழும்விழும் பின்னுயரும்
அழஅழ ஆவதுஎதுவுமே இலையென
அடுத்ததை செய உணர்த்தும்
குளுகுளு எனப் பொழில் குளிர்வினை யெடுமலர்
குலவிடும் இனிதென்றலும்
குறுகுறு எனமனம் கொளும்சுக உணர்வினைக்
கொண்டிடச் செய்தகலும்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 30, 2012 9:44 pm

நன்றிகள் காளைவேந்தன் அவர்களுக்கு

கவிதை 8

மீண்டும் துளிர்க்கும் மரங்கள்

மீண்டும் துளிர்க்கும் மரங்கள்

போவன முகிலும் இருளும் துயிலும்
புலரும் பொழுதினிலே
ஆவன ஒளியும் விழியும் மலரும்
அழகும் காலையிலே
தாவின அணிலும் கிளியும் கனிகள்
தாங்கிய மரங்களிலே
மேவின மகிழ்வும் இனிமை உணர்வும்
மீண்டும் வாழ்வினிலே

தேய்வது பிறையும் அறமும் நீதி
திரிவது மெய்மையென
காய்வது வெயிலில் நனைந்தோர் பொருளும்
கண்களில் நீரெனவும்
ஓய்வது இலதாய் உயிரும் உடலும்
ஒன்றாய் துடித்திருந்தோம்
பாய்வது பகையும் நதியும் குருதி
பலரின் உயிர்களென

ஏனது என்றே எண்ணிச் சோர்ந்து
இருந்தோர் வாழ்வினிலே
போனது பொய்யும் திமிரும் கருமை
புன்மை செயலெனவே
வானது மீதில் தெரிதே ஒளியும்
வருதே வசந்தமென
காணுது மீண்டும் துளிர்கள் வாழ்வுக்
கேங்கும் மரங்களிலே !

....

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 30, 2012 10:20 pm

என்னங்க வீட்டுல சண்டை பிடிக்கிறதில்லயா.நானும்தான். வர்ற கோபத்துக்கு
ரெம்பத்தான் திட்டி தீர்த்துவிட்டேன் எப்படியா?? இப்படி!!

கவிதை 9

சச்சரவு

நிலவைப் பிடித்திடையே நீள்விழிகள் வைத்ததென
நேசமுறும் பெண்ணழகை நினைத்தேன்
கலகம் பிறக்கவெனக் காட்டினிடை இருளள்ளி
காரிகை படைத்தென்ன இறைவா?
மலரை எடுத்தழகு மல்லிகையின் வாசமிட்டு
மகளைப் படைத்தை யென்று மறந்தேன்
மகிழ்வை உடைக்கவென மாங்காய் முறித்தொழுகு
மாம்பாலும் உதடு பட்ட மகிழ்வேன்?

அழகைப் படைத்தவனே அழகுக்கு அழகெடுத்து
அசைந்துவரும் சிலை படைத்தாயென்றே
பழகக் கிடைத்தவளைப் பாயிட்டுப் பார்த்து மனம்
பாதிக்கு மேலிழந்த னிறைவா
குழவிக்கூ டென்றறியா கொண்டசுவைத் தேனள்ளிக்
கொள்ளவெனப் பற்றினனே பிழையா
அழவைத்துப் பார்த்திடவோ அசைந்துவரும் நிழலீந்து
அதற்கெனவோர் பேச்சளித்தாய் இறைவா

தழலைச் சிவந்திருக்கத் தந்தாய்மா ணிக்கமெனத்
தாவிக்கை பற்றவைத்த தலைவா
சுளகைப் பிடித்தவர்க்கு சொல்லிவைத்து விட்டனையோ
சொல்லால் அடிக்குவிதம் முறையா
குழலையென் கைகொடுத்துக் கூடியெழும் கீதமெனக்
கொள்ளென்று பரிசளித்தை மகிழ்வாய்
அழுகை பிறக்குமது ஆனந்தகீதமெனில்
அடுத்துவரு பிறவியென மறைத்தாய்

விழக் கையை நீகொடுத்து வேண்டுமொரு வாழ்வீந்து
வெற்றியினைத் தருவையென்று நினைக்க
நிழலைக் கொள் தருவைத்து நில்லென்று சொல்லிச்சிரம்
நேரெதைநீ நெளியவைத்து நின்றாய்?
மழலைப் பூங்கொத்தினையான் மடியிட்டுப் பாசமழை
மகிழென்று மாதர் வரமீந்தாய்
குழலை முடிப்பவளின் குணம் சினந்து கொஞ்சலெனக்
குளிர்ச்சுனையில் கொதிநீரேன் இறைத்தாய்?

*****

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Apr 01, 2012 4:50 am

இயற்கை, வாழ்க்கை, கயமை, இளமை

கவிதை 10
இயற்கை

பூக்காடும் புள்ளினங்கள் போம்வானமும்
பொழுதோடிக் கதிர் வீழும் பொன்மாலையும்
தேக்கோடு பெருஞ்சோலை சில்வண்டினம்
சிறுமந்தி விளையாடும் மூங்கில்வனம்
தீக்காடோ என்றஞ்சச் செம் பூக்களும்
சிதறும்பின் சேர்ந்தோடும் மந்தைகளும்
நீக்காத திரைமூடும் முகிலோவியம்
நின்றாலும் நடைபோடும் இளஞ்சூரியன்

பூக்காது முகை தூங்கும் அயல்தாமரை
புனலாடக் குதிபோடும் நிரையாயலை
தேக்காது தேன்ஈயும் மலர்கொள்வனம்
திகழன்பு மாதர்கள் தெரு ஊர்வலம்
போக்காக நடைபோடப் பொழுதோடிடும்
பூங்காற்று வயலோரம் பாடுங்குயில்
நாக்கோடு சுவைகூட்டக் நறுந்தேனடை
நாள்தோறும் கண்முன்னே பேரின்பமே

வாழ்க்கை

மூக்காலே புகைதள்ளும் பெரும்வண்டிகள்
முன்னாலே நெடுஞ்சாலை மிதிவண்டியும்
சாக்காலே நிறைமூட்டை இழுமாடுகள்
சரிந்தும்கீ ழுருளாத பெருவண்டியும்
போக்காலே குறுக்கோடும் ஒருஜன்மமும்
போறேன்னு சொன்னாச்சா எனும் கூச்சலும்
நோய்க்காக விரைவண்டி கூப்பாடிட
நிறைகின்ற வாழ்வோடு மரத்தினடி

தீக்காயும் வெயிலுக்கு திருமண்டபம்
தின்றாறித் துயில்கொள்ள திருமஞ்சனம்
நோக்காயம் படுமேனி கொண்டோமிந்த
நிலமைக்கு விதியென்ற உழைப்பாளிகள்
ஆ..காணும் இடமெங்கும் நிறைந்தாரென்ன
அநியாயம் ஏமாற்றம் அதிகாரமும்
நாக்காலே பொய்சொல்லும் நடிப்போரினால்
ஞாலத்தில் உருவான நடையானதே!

(நாளை மிகுதி)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Apr 03, 2012 11:13 pm

(தொடர்ச்சி......)

கயமை

ஆக்காத சோறெண்ணி அடுப்போடுநல்
ஆனந்த சயனத்தில் ஒருபூனையும்
வேக்காடு இல்லாத வெறும்பானையும்
விரதத்தை தினங்காணும் சிறுபிள்ளைகள்
நீக்காத வறுமைக்கு நீருண்டுவாழ்
நலிந்தாலும் எலும்பொடு நடைகொண்டவர்
போக்காத ஏழ்மைக்கு பதில்சொல்பவர்
போகத்தின் மாயைக்குள் சிக்குண்டிட

தூக்காக பணமூட்டை தொலைதேசமும்
தெரியாமல் மறைக்கின்ற செல்வந்தர்கள்
வாக்காக பலநூறு மொழிகூறிப்பின்
வந்தேறும் அரசாட்சி வாழ்வென்றபின்
நோக்காக தன்பாடு நிறை கண்டிடும்
நீதிக்கு கண்கட்டு நெறியாளர்கள்
காக்காது கைவிட்ட மாந்தர்களே
கடிதென்ற வாழ்வுக்கு கதியாவரே

இளமை

நன்நூல்கள் தமிழ்கூறி நயம்பேசிடும்
நன்மாடம் பூஞ்சோலை நிகழ்மண்டபம்
புன்னகைச் சிறுவர்கள் பெண்கூடியே
பந்தாடும் மகிழ்வெங்கே; பரிதாபமாய்
எந்நேரம் கணனிக்கு இரையானதோர்
இடும் சத்தம் சுடுமோசை எதிராட்களும்
வன்மைக்கு துணையாகும் விளையாட்டுகள்
வளர்பிஞ்சு மனங்கொல்லும் கொடுநஞ்சுகள்

எண்கற்றல் எழுத்தோடு இறைபக்தியும்
இல்லாது புயல்போன்று எதுஎண்ணினும்
கண்ணுக்குமுன்காணும் கடுவேகமும்
கைகெட்டா தாயின்கொள் கடுங்கோபமும்
பெண்ணுக்கு ஆண் நேரென் நிகர்வாழ்வென்று
பிழைசெய்யும், சிலபோக்கும் மென்மைகெட
தண்மைக்கு சூடேங்கும் மனமானது
தருமோ நல்லெதிர்கால வாழ்வென்பது


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Apr 03, 2012 11:45 pm

கவிதை

தினம் சக்தி வேண்டி

சுத்த சக்தி வித்து முன்றன்
சித்தமுள் விதைத்திடில்
சித்தி காணும் நீயெழுந்து
செல்லுமெந்த பாதையும்
இத்தரை தனில் எடுத்துன்
ஈர்கரங்கள் செய்திடும்
எத்துணை பெரும் வினைக்கும்
ஏதுபங்க மில்லையாம்

சத்தியத்தின் தேவதைக்குச்
சற்றும் மாறே இன்றிடில்
நித்தியம் உனக்கு நீதி
நிச்ச யித்த தாகிடும்
வைத்துள் அன்பு வார்த்தை கூறு
வாழ்வி லேற்றம் கண்டிட
வித்தை யாம்செ யல்திறன்கள்
வெற்றி வாகை சூடுமே

அண்ட சராசரங்கள்கட்டி
ஆளு மந்தச் சக்தியை
மண்ட லத்தின் ரூப மற்ற
மாசிலா வெண் ஜோதியை
கொண்டிருத்தி நின்னகத்தே
கொள்ள இன்பம் ஒன்றதே
கண்டிருக்கும் வாழ்வுஎன்றும்
காலகால மாகவே

சுற்றி யோடும் எத்திசைக்கும்
செல்லு மிந்த பூமியைப்
பற்றி ஓர்விசைக்குள் வைத்துப்
பார்ப்ப திந்தச் சக்தியாம்
வெற்றி யாகும் உள்ளிரத்தம்
வீறு கொண்டு சுற்றிட
உற்றதான சக்திவேண்டி
உள்மனத்தில் எண்ணிடில்

நித்த மும்நல் சக்தி யேற்றி
நாளும் மின்கலத் தினை
வைத்தி யங்கச் செய்வ தாக
வாழு மிந்த தேகமும்
புத்தொளி கிழக் கெழுந்த
போது நாளில் ஓர்தரம்
சுத்த சக்தி அன்னைதா நின்
சக்தி யென்று கேட்டிடு

முன்னை யுன்றன் அன்னை பெற்ற
அன்னையுந் தன் னன்னையின்
அன்னை யிற்கு முன்னிருக்கும்
அன்னை அன்னை யர்க்கொரு
தன்நிகர்த்த லேதுமற்ற
தாயும் சக்தி தந்திடேல்
என்னதான் நடக்கும் வையம்
ஏதுன் கண்கள் காணுமோ?

*************

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக