புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
32 Posts - 42%
heezulia
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
2 Posts - 3%
prajai
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
1 Post - 1%
jothi64
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
398 Posts - 49%
heezulia
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
26 Posts - 3%
prajai
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_m10கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிக்கொத்து 11 கவிதைகள் (கிரிகாசன்) new


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Mar 27, 2012 4:56 pm

ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு இழை திறக்காமல் தொடர்ந்து 10 கவிதைகளுக்கு இவ்விழை பாவிப்பேன். இடம் ஒதுக்கிவிட்டேன். அதன்பின் கருத்துக்கள் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

கவிதை 1
மழைவிட்ட காலைநேரம்


தடதட எனஇடி தொலைவெழக் கருமுகில்
தரும்மழை ஓய்ந்துவிட
திடுதிடு மெனமனம் திகிலுறப் பெரும்புயல்
தீர்ந்தொரு அமைதிபெற
சிடுசிடு என மனம் சினந்தவள் முகமெனச்
சிவந்திடும் வான்வெளிக்க
வெடவெட எனக்குளிர் வீசிடும் காற்றிடை
விடியலில் வெளிநடந்தேன்

கலகல வென ஒலி எழுமதி காலையில்
கதிரவன் வரும்திசையில்
பளபள எனும்ஒளி பரவிட இருளவன்
பயமெழத் தலை மறைந்தான்
கொளகொள எனநீர் கொட்டிய மழைவிடக்
கூடிய தூவானம்
சிலபல துளிகளைச் சிதறிடத் தூறலில்
சிணு சிணுத்திடக் காணும்

சலசல எனும்குளி ரோடையில் மழைவிழச்
சடுதியில் நீர் பெருகி
கிளுகிளு எனநகை புரிபவள் போல்மனக்
கிளர்வுடன் அதுவிரைய
மளமள எனவளர் மரங்களும் நீரிடை
மலர்களும் சருகுதிர்த்தே
விழவிழ விரிந்திடும் இயற்கையின் அலையெனும்
வியனுறு கலை வியந்தேன்

வகைவகை யெனப்பல மலர்விரி சுனையிடை
வடிவுடன் தாமரைகள்
தகதக எனஒளிர் கதிரவன் தனையெண்ணித்
தளர்வுற இதழ் விரியும்
பளபள எனவெயில் பகலென வருமுதல்
பறவைகள் துயில் கலையும்
படபட என அவை பரப்பிய சிறகுடன்
பறந்திடும் வான் வெளியும்

கடகட வெனஉருள் காளைகள் வண்டியில்
கவினுறு சந்தமெழும்
அடியடியென அவன் அதட்டியும் நடைதரும்
அழகினை அவைபேணும்
மடமட எனமது வருந்திய வண்டினம்
மலர்களில் மயங்கிவிடும்
கொடுகொடு வெனச்சிறு குழந்தைகள் அன்பினை
கொண்டிட அழதுகொழும்

எழஎழ விழுந்திடும் சிலந்தியும் வலைதனில்
எழும்விழும் பின்னுயரும்
அழஅழ ஆவதுஎதுவுமே இலையென
அடுத்ததை செய உணர்த்தும்
குளுகுளு எனப் பொழில் குளிர்வினை யெடுமலர்
குலவிடும் இனிதென்றலும்
குறுகுறு எனமனம் கொளும்சுக உணர்வினைக்
கொண்டிடச் செய்தகலும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Mar 27, 2012 4:57 pm

2. வது கவிதை

நான் என்னும் இவன்

புரியாத பாடம் அறியாத மொழியில்
தினம்தினம் படிப்பவன் நான்
தெரியாத திசையில் தேரினைஒட்டித்
திக்கற்றுச் செல்பவன் நான்
கரியான இரவில் காகத்தை தேடி
கண்மூடிச்செல்பவன் நான்
பரிமீது ஏறி பரலோகம் தேடும்
பாவத்தின் காதலன் நான்

விரியாத வானம் விசையற்ற பூமி
விருப்போடு வாழ்பவன் நான்
எரியாத வெய்யோன் இறங்காதமேகம்
இதனூடே வாழ்பவன் தான்
பெரிதான ஞானம் பிறக்காத புத்தி
பெருமோட்சம் பெறஆசை காண்
கரியாகும் மேனி காத்திடத் தீயில்
கடுந்தவம் செய்பவன் யான்

சிரிக்காத கண்கள் சினந்தோடும் சொற்கள்
சிலைபோலும் இதயமும்தான்
சரிந்தோடும் நதியாய் வழிமாறியோடி
விதியெண்ணி அழுபவன் நான்
விரிந்தோடும் பாம்பை வளர்த்திடஎண் ணி
வளைபுற்றில் கரம் வைப்பேன் காண்
பிரிந்தோடும் பாதை இரண்டாகப் போனால்
பிழைவழி செல்பவன் நான்

முறிகின்ற முருங்கை மரம்மீது ஊஞ்சல்
மகிழ்வோடு கட்டுவேன் காண்
அரிகின்ற போது நுனிக்கிளை நின்று
அடிக்கிளை வெட்டுவேன் காண்
திரிகின்ற தென்றல் புயலாகும்போது
தெருவிலே எதிர் நடப் பேன்
புரிவதோ எல்லாம் பிழைஎன்கிறார்கள்,
பெரும்பிழை இவர்மொழிதான்



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Mar 27, 2012 4:57 pm

கவிதை 3

நினைவும் வாழ்வும்

மலர்கள்மேனி அனலின்மூச்சு மருகச்செய்யுதோ - இன்ப
மாலைநேர முலவும்வேளை மனதில் துன்பமோ?
உலரும் வேளை கருமைமேகம் உதிரும் தூறலோ - நன்கு
உறங்கும்வேளை இடியினோசை அதிர வானமோ?
புலரும் வேளை கதிரும்கூதல் போக வைக்குமோ -அன்றிப்
பரவும் சூடு வலியென்றாகப் பாடு துன்பமோ ?
பலரும் வந்து பாடிஆடிப் பழகும் போதிலே -நிற்கும்
பளிங்குமேடை உருளும்பாறை பனி யென்றாகுமோ?

வசந்தம் வீசு மாலைநேரம் வந்த புயலிதோ - அன்பு
விளையுங் காலை வேகமழையில் விளையுந் துன்பமோ?
அசதியாகத் துயிலும்கொள்ள ஆந்தைஅலறுமோ - கட்டில்
அசைந்து பேய்கள் உறையும் காட்டில் இருந்தபோலுமோ?
திசையும் திக்கும் தெரிந்திடாத திக்கில் பயணமோ - கால்கள்
தேர்ந்திடாத ஒற்றைப்பாதை துளைக்குங் கற்களோ?
அசைந்திடாத காற்றும் மூச்சின் ஆழம் காணுதோ - உள்ளே
இருந்துஆடும் உயிர்துடித்து என்ன வாகுதோ?

இனியராகம் மீட்டுங் கைகள் ஏந்தும்வீணையோ - கைகள்
இசையும் மீட்ட எழுந்த ராகம் எதுமுகாரியோ?
பனிதிரண்டு இலையிலோடி துளிவிழுந்ததோ - கண்கள்
பலமிழந்து அழுதுநாளும் வலியிழந்த்தோ?
புனிதகோவில் மணியுமாடிப் பரவுமோசையோ - ஓசை
படரவானில் இடியென்றாகிப் புவி அதிர்ந்ததோ
கனியின்மீது தேனைஊற்றிக் கடித்தினிக்குமோ - நாவில்
கசந்து வேம்பின் சுவையென்றாகிக் காணும் கோலமோ

தனிமையாக முழுநிலாவும் தண்மை ஓடைநீர்- இன்பம்
தருமுலாவில் அலறும்ஓசை இதயம் உறையுமோ
வனிதைகாணக் காதல்கொண்டு வந்தணைக் கையில் - காணல்
கனவு என்று மனைவிதொட்டுத் துயில் எழுப்பவோ
குனிந்து கோவிற் தெய்வம்வேண்டக் கருணைதாருமோ - அன்றி
கொண்டபாரம் வீழும்வண்ணம் குடைசரிக்குமோ
மனிதவாழ்வில் ஒன்று மாறி வேறென்றாகுமோ - மஞ்சம்
மலர்கள் தூவித் துயிலஎண்ண மலருள் முட்களோ?


..

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Mar 27, 2012 4:58 pm

கவிதை 4

தீ அணைந்த பாதை

(ஒரு நண்பனின் சினத்தை துயரத்தை மாற்ற எழுதியது)

ஒளியிருந்த திசையை நோக்கி ஓடினேன்
. உள்ள இருள் விடியும் நம்பித் தேடினேன்
பழியிருக்கும் போலப் பாதை தோன்றுதே
. பகலினொளி பார்த்து மனம் ஏங்குதே
வழியிருக்கும் என்று எண்ணிஓடினேன்
. வாசமிடும் மலர்களெ ன்று தேடினேன்
குழிருக்கும் போலப் பாதை தோன்றுதே
. குடியிருக்க வீடு எங்குமில்லையே!

தளை யெடுக்க வென்று பயிர் நாட்டினேன்
. தண்மை நீருமூற்றி மனம் தேறினேன்
விளையும் போலத் தோற்றம் காணவில்லையே
. வினைகள் ஏது வெளிச்சம் காணவில்லையே
மழைவிடத்தூ வானம் மாறாக் காண்பதேன்?
. மஞ்சள் சிவப் பென்று மாறுங் கோலமேன்?
தலையிற் பட்ட அம்பி னாலே மானது
. தரைவிழுந்த துள்ள லுள்ளம் காணுதே!

துளையெடுக்கும் வேதனையும் ஏதையா?
. துன்பமென்று எண்ணும் நிலை ஏனையா?
மலையடுக்கில் மண்குவியல் தேறுமா?
. மாற்றம் கண்டு மயங்குவது மேனையா?
தலையெடுக்கும் வேளையினித் தகமையைத்
. தனியேமனம் கொண்டு நலம் காணுவோம்
விலை கொடுத்து வாங்கத் துயர் மலிவெனில்
. வீணிலதை விட்டு பாதை ஏகலாம்

மறதியென்று ஒன்றை யீந்த ஆண்டவன்
. மனதில் வைத்த கோலமேது மாற்றுவோம்
பிறவி என்று பூமிவந்த பிழையய்யா
. பிறந்த பின்னே பாசம் அனபு தவறய்யா
கறந்த பாலைக் குடிக்கப்பசி காணலாம்
. காண்பவரில் நன்மை கறந் தேற்பதோ
இறந்து போகும்வரையுந் துன்பம் இயல்புதான்
. எதுவென் றாலும் தூக்கி எறிந்தேகுவோம்

...

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Mar 27, 2012 5:21 pm

கவிதை 5

அதிஷ்டமில்லாதவன்

நீரில் எழுதிவைத்தேன் நித்திரையில் பூப்பறித்தேன்
. நெஞ்சிலெழும் கற்பனையை போற்றினேன்
வேரில்(லா) செடியை வெட்டி விதைநிலத்தில் ஊன்றிவைத்து
. விளையும் என்றுகாத்து நிதம் ஏங்கினேன்
ஊரும்வானிடையே ஓடிவண்ண நிலவெறிக்க
. உலரவென்று துணிதுவைத்து விரித்தவன்
பேரில் பெரியவனாய் புகழெடுக்க வேண்டுமென்று
. பேரை மாற்றி மாற்றிப் பார்த்து தோற்றவன்

நாரில்பூ இணைத்தே நல்லதொரு மாலை கொண்டேன்
. நாரிருக்க பூஉதிர்ந்து போனதேன்?
ஊரில் மேகம் மழை ஊற்றுகின்றபோது எந்தன்
. உச்சிமுகில் மட்டும் பொய்த்துப் போனதேன்?
தேரில் தெய்வவலம் தெருவெங்கும் போன தெந்தன்
. திக்கில் மட்டும் இருள்படர்ந்து காண்பதேன்?
யாரில் உண்மையின்று உள்ளதெனும் ஐயமதில்
. ஏதுமனம் என்னை எதிர்த் தேகலேன்?

சீறும்அலைகடலில் சிறு படகில்செல்ல மழை
. சிந்த ஓட்டைபோட்டு ஓடவிட்டவன்
ஆறில் நீர்நடந்து அருவியென மாறத்திசை
. அறிதலின்றி நேர்படகு விட்டவன்.
போரில் வெல்லவொரு தந்திரமென் றெண்ணி அலர்
. பூவை அம்பில் வைத்து வீசித் தோற்றவன்
ஏரில் வயலுழுது எள்ளு விதைத் தறுவடைக்கு
. ஏக்கமுடன் நெற்கதிர்க்காய் காத்தவன்

வாரிக் குதித்துவெள்ளம் வயல் வரம்பை மீறியதாய்,
. வாலறுந்த பட்ட மென்றுஆனவன்
கூரில் லாக்கத்தி யெனக் கூர்மையில்லாப் புத்தியதும்
. கொண்டு இந்தப் பூமியிலே வாழ்பவன்
பேரில்லாப் பிள்ளையெனப், பெண்ணறியாக் காதல்மனம்,
. பொன்னிலவு பொய்த்த வானமாகினேன்
பாரிலுள்ள வாழ்வு நடுப் பாதையிலே முள்ளிருக்கப்
. பார்வைவிழி மூடியிருள் செல்பவன்.

...

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Mar 27, 2012 5:23 pm



படித்தேன் பரவசபட்டேன். அருமை நண்பரே.




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Mar 27, 2012 5:25 pm

மு.வித்யாசன் wrote:

படித்தேன் பரவசபட்டேன். அருமை நண்பரே.

நன்றிகள்1 தங்கள் அன்பு என்றும் ஊக்கம்தரும்!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Mar 27, 2012 5:33 pm

கவிதை 6

ஒளி வரும் இனியென்ன !

பொடிபடத் துயர்தனை உடைபட விடுபுறப்
படுபகை யினிமறந்தே
துடியிள மனமதில் தொகையென வரமகிழ்
வுடனிரு துணிவெழவே
கடிதென வுளமனக் கடுகயமை கள்தெளி
வுறவெடு உளமகிழ்வே
மடியிடை கிடதமி ழன்னைமலர் முகமதை
மலர்வுறச் செயநிதமே

படியினைப் பலகடந் தனமினி யெனஒளி
பகல்வரத் துயருறவோ
முடிதனை உடையமன் னவனெனப் பெருமையில்
மலர்ந்திட எது தடையோ
இடிமின்னல் பொழிமழை யுடனிருள் விலகிய
தினிச்சுக மெனமறந்தே
படிகவி தைகள்பல முறபல முறையவை
பருகிட மதுஎனவே

தடிதனைக் கரமதில் எடுகுரு வினைக்கொடுந்
தவறெனக் கருதுவமோ
படிதனைப் பலகடந் திடஅடி தனையுளம்
பதமுற வெனஅறிவோம்
கொடிதென நினவுறக் கருதுவ தெவருமில்
குளமிடை கமலமென
வடிவினை யெடுமலர் வரும் கிழக் கெனும்திசை’
விடிவுறக் கதிரொளியே!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Mar 28, 2012 8:34 pm

கவிதை 7

தமிழை அருந்து அதுவே மருந்து

கலையும் கனவின் கற்பனை யாவும்
கவலைதந்தே போகும்
அலையும் மனதில் ஆசைகள் எழவே
தொலையும்நிம்மதி தானும்
மலையும் எதிரே நிற்பதுபோலும்
மனதுள் துயரம் சூழும்
கலையும் தமிழும் இசையும்கூடின்
கணமே துன்பம் போகும்

இலையும் தளிரும் பூவும் பூக்கும்
இளமை கொண்டே தமிழும்
குலையும் கொள்ளும் கனியின் இனிமை
கொண்டே நிதமும் காணும்
அலையும்கடலும் அதுபோல் ஆழ
மறியாத் தமிழின் பெருமை
தொலையும் வண்ணம்இன்றிப் பேசத்
தமிழை முழுதாய் கொள்வோம்

குலையும் நடுங்கும் கொடுமைசெய்வோர்
கொத்தும் பாம்பும்கூட
அலையும் காற்றி லெழும் இன்னிசையாம்
அதிலே மயக்கம் கொள்ளும்
வலையும் மீனைக் கொள்ளும் அதுபோல்
வண்ணத் தமிழும் எம்மில்
நிலையும் மாற்றும் நெஞ்சை கவரும்
நினைவை அன்பால் வெல்லும்

தலையும் மேவி வெள்ளம்பாயும்
நிலையும் வந்தாலென்ன
அலையும் கதிரும் இரவில்தோன்றி
ஒளியைத் தந்தாலென்ன
சிலையும் உயிரைப் பெற்றே வீதி
சென்றாலும் நற்தமிழோ
கலையும் இன்பம் தமிழின் இனிமை
காணும் என்றும் மாறா

இலையென் வாழ்வில் தமிழேயின்றி
இன்னோர் மொழி; எவ் வூறு
நிலை யென்றாலும் தமிழே யன்றி
நில்லா துயிரும் கூடு
விலை யென்றில்லா வாழ்வில் துயரம்
விலகும் தமிழைப் பாடு
தொலை வென்றாலும் சுற்றும் மனதோ
தமிழ் சொல் எந்தன் நாடு

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Fri Mar 30, 2012 1:35 pm

[quote="kirikasan"]
மு.வித்யாசன் wrote:

படித்தேன் பரவசபட்டேன். அருமை நண்பரே.


நன்றிகள்1 தங்கள் அன்பு என்றும் ஊக்கம்தரும்!
kirikasan wrote:



கவிக்கொத்து 11 கவிதைகள்   (கிரிகாசன்)   new Image00045y
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக