புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 7 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 7 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 7 Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 7 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 7 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 7 Poll_c10 
2 Posts - 20%
heezulia
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 7 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 7 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 7 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!


   
   

Page 7 of 29 Previous  1 ... 6, 7, 8 ... 18 ... 29  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 11:16 pm

First topic message reminder :

ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு

நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 3
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா

[You must be registered and logged in to see this link.]

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 2
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி

[You must be registered and logged in to see this link.]

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 1
24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்


Spoiler:




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 26, 2012 8:13 am

பதில் சொல்ல பம்மும் நண்பர்: அசுரன்
கேள்வி என் ஒன்று:
இன்றைய பாட முறை திட்டத்தில் மதிப்பென்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும், அரசுக்கும் இது தவறென்று தெரியும். தெரிந்திருந்தும் புரிந்து படிக்க பணிக்காது, மதிப்பென்களுக்கே முக்கியத்துவம் தரும் இந்நிலை பற்றிய தங்கள் கருத்தென்ன?

இந்தியா போன்ற நாடுகளில் ஜனத்தொகை பெருக்கத்தால் இப்படிப்பட்ட போட்டி மனப்பான்மையை வளர்க்க உதவும் கல்வி தான் பொருத்தமாக இருக்கும், ஏனென்றால் படித்த அனைவருக்கும் வேலை தருவது என்பது பகற்க்கனவே, அதனால் சிறந்தவர்களை (சிறந்தவற்றை) தேர்ந்தெடுக்க மதிப்பெண்கள் பெரும் பங்காற்றுகின்றது.

நம் இந்திய கல்வி முறையில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது, வெளிநாடுகளில் உள்ள கல்விமுறை என்பது அந்தந்த துறைகளில் பாடங்களில் படிக்கும் மாணவ மாணவிகள் அதை முழுவதும் செயல்முறைகல்வியாக படித்துவருகின்றனர், இந்தியாவில் மட்டும் புத்தகத்தையும் ஆசிரியரின் நடத்துல்கள் விளக்கங்களையுமே மட்டும் கேட்டு மாணவர்கள் படிக்கின்றனர்,

இப்போது வந்திருக்கும் சமச்சீர் கல்வியில் முறையில் செயல்வழி கற்றல், விஷீவல் எடுகேஷன், நேரில் சென்று கற்றதை காண்தல், முப்பருவ கல்விமுறை என அறிமுகப்படுத்தியிழுக்கிறார்கள். ஆனால் குறை என்னவென்றால் இதையெல்லாம் செயல்படுத்துவது ஆசிரியர்கள் தான் என்றாலும் அதை செயல்படுத்த முழு பொறுப்பும் உள்ள பள்ளி நிர்வாகம் மறுப்பதால் தான் அரைகுரை படித்த மாணவர்கள் உருவாகிறார்கள்.

என் கருத்து என்னவென்றால் அரசாங்கம் நேர்மையான முறையில் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கெடாமல் (டியுஷன் எடுக்கும் ஆசிரியர்களுக்கு நான் எதிரி) பள்ளி நிர்வாகத்தின் மண்டையில் ஆணி அடித்து இதை செயல்படுத்த வைக்க வேன்டும், இல்லையேல் அதன் அங்கிகாரத்தை ரத்து செய்து அந்த பள்ளிக்கூடத்தையும் அரசே ஏற்று நடத்த வேன்டும். ஆசிரியர்களாக பள்ளிகளில் எதையும் செய்துவிட முடியாது என்பது ஆசிரிய பெருமக்களுக்கு நன்கு தெரிந்த விசயம், நிர்வாகம் முட்டுக்கட்டை போட்டால் ஆசிரியர்கள் ஒன்றும் செய்ய இயலாது... காசு செலவாகிற விசயம் என்றால் நமக்கு சிலவேளைகளில் திட்டுகளும் கிடைக்கும். நான் நிறைய இதுபோன்று வாங்கியிருக்கிறேன்.

இதற்கு என்னதான் தீர்வு?
இதற்கான தீர்வை அரசாங்கம் தான் எடுக்க முடியும், கல்வித்துறையின் கடிவாளம் அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது. அதனால் தனியாக ஆசிரியர்களாலோ அல்லது பெற்றோர்களாலோ எதையும் செய்துவிட முடியாது. ஒன்று செய்யலாம், நமது பிள்ளைகளை பன்னாட்டு பள்ளிகளில் சேர்ப்பது இதற்கு தீர்வாக அமையும், ஆனால் செலவு என்று பார்த்தால் இதையெல்லாம் பணம் படைத்தவர்கள் தான் செய்ய முடியும், செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

காசுக்காக பள்ளி நேரமல்லாத மற்ற வேளைகளில் டியூஷன் எடுப்பது, பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்வது சட்டப்படி குற்றம். அப்படிப்பட்டவர்களை எனக்கு அரவே பிடிக்காது. என் மனைவியும் ஒரு ஆசிரியை தான், அரசாங்க பள்ளியில் பணிபுரிகிறார்கள், எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகும் போது (1999) என் நண்பர்கள் எல்லாரும் "டேய் நீ லக்கி டா, உன் ஒய்ஃப் நல்லா டியூசன் எடுத்து சம்பாரிக்கலாம்" என்றார்கள்.

கல்யாணமான அந்த மாதத்தில் இருந்து இன்று வரை எனது மனைவி டியூசன் எடுக்கிறாள், அவள் பணிபுரியும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஏழைகள், சிலநேரம் சாப்பாட்டுக்கு கூட காசு இல்லாமல் சிரமப்படுகிறவர்கள், நானும் ரொம்பவே ஸ்டிரிக்டாக சொல்லிட்டேன் என்ன ஆனாலும் டியூசன் எடுக்கிறதை மட்டும் விட்டுறாதே என்று, அவளும் எனது பேச்சுக்கு மறுபேச்சு இல்லாமல் மாலையில் பள்ளி முடிந்ததும் சில ஆண்டுகள் எங்கள் வீட்டின் மாடியில் பாடம் எடுத்து வந்தாள், இப்போது பள்ளியிலே அனுமதி கேட்டு குறைந்தது 30 மாணவர்களுக்காவது டியூசன் எடுத்து வருகிறாள், கால் காசு கூட வாங்காமல் வருடம் தோரும் ஒரு 20 மாணவர்களுக்கு பள்ளிக்கட்டணம் தன் சொந்த செலவில் செலுத்துகிறாள் மனைவியையே இந்த டிரில் எடுத்த நான் எப்படி இருப்பேன்னு நினைக்கிறீங்க புன்னகை (வேறு ஒரு சமயம் வரும்போது சொல்கிறேன்.)

ஆசிரியனாகிய என்னிடம் இப்படி தீர்வு என்ன என்று கேட்டால் எனக்கு தெரிந்த பதில் ஆசிரியர்கள் பொதுநல மனப்பான்மையோடு மாணவர்களை அனுகவேன்டும், ஏழைமாணவர்களை கண்டெடுத்து அவர்களை வளர்த்து தங்களால் ஆன உதவிகளை செய்யவேண்டும். இப்படி எல்லா ஆசிரியர்களும் செய்ய ஆரம்பித்தால் எந்த கல்வி முறையானாலும் சரி நல்ல சமுதாயம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது.






அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 26, 2012 8:27 am

கே. பாலா wrote:தொடர்ந்து 9 ஆண்டுகள் ஆங்கிலம் நடத்தி தொடர்ந்து பல ஆண்டுகள் 100 சதம் தேர்ச்சி அளித்தேன் ..என்னிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள் ...அன்பான புன்னைகையை இன்றும் பெற்றுவருவது சந்தோஷம் தருகிறது )

ஒரு ஆசிரியர் 100 சதவிகிதம் தேர்ச்சியை தருவது என்பது அந்த ஆசிரியரின் 100 சதம் உழைப்பை காட்டுகிறது. அதாவது அவர் அந்த பள்ளியில் வகுப்பில் 100 சதவிகிதம் மாணவர்களின் உள்ளத்தில் நிறைந்தால் மட்டுமே இது சாத்தியம்.

சபாஷ் பாலா சார்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 26, 2012 11:18 am

பதில் சொல்ல பம்மும் நண்பர்: இளமாறன்
கேள்வி என் நான்கு:


ஒரு திரியில் உங்களது கருத்தை இலை மறை காயாக தெரிவித்து இருந்தீர்கள் - தற்பொழுது நம் ஈகரையில் தமிழின் தரம் குறைந்துள்ளதாக அல்லது குறைந்து வருவதாக. எதனால் அப்படி சொன்னீர்கள்? அளவுகோல் என்பது எதிலுமே ஆளுக்கு ஆள் மாறுபடும். அப்படி இருக்க எதை வைத்து பொத்தாம் பொதுவாக அவ்வாறு உங்களை சொல்லத் தூண்டியது?

வணக்கம்..

உங்கள் கேள்வி நியாயமானதே ... தமிழ் ஆசிரியர்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்... சென்னை தமிழ் நெல்லை தமிழ் என்று எங்கும் தமிழில் வித்தியாசம் உண்டு என்பதை ஏற்று கொள்கிறேன்.ஆனால் அதற்காக திருக்குறளில் விளக்கம் தரும் தமிழ் ஆசிரியர் பேமானி சொமாரி பம்முதல் என்று விளக்கவுரை தரமுடியாது என்றே நினைக்கிறேன்.

உங்கள் கேள்வியை நன்றாக படியுங்கள் ...பதில் சொல்ல பம்மும் நண்பர்... பம்மும் என்பது என்ன நண்பரே.. தமிழா நீ பேசுவது தமிழா ???

ஈகரை தமிழ் விதி முறைகள் பகுதியில் சிவா சொல்லி இருப்பது
பார்க்க [You must be registered and logged in to see this link.]

நான் யாரையும் மன நோக செய்ய விரும்புவதில்லை ... என்னை பொருத்தவரை தரம் குறைந்தது போல எனக்கு உணர்ந்த்தேன் தவறு இருப்பின் மன்னிக்கவும்







நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 11:18 am

கே. பாலா wrote:வணக்கம் .கொலவெறி..என்னையும் ..ஆசிரியர் என்று நம்பியதுக்கு நன்றி ! எனக்கே நம்பிக்கையில்லை !
நான் வேலைக்கு படித்தது ..ஆசிரியர் பட்டயம் மட்டும்தான் ...(Diploma in Teacher Education)..இடைநிலை ஆசிரியர் பணி ,,
முன்பு தமிழ் இலக்கியத்தில் ..பி,ஏ. முடித்திருந்தேன் .
பதவி உயர்வுக்கு தகுதியாக்கிக்கொள்ள நினைத்தபோது ...ஆங்கிலத்திற்கு ..தமிழைவிட வாய்ப்பு அதிகம் என்பதால் ஆங்கிலத்தில் ஒருபட்டமும் ..பி.எட் .டும்...முடித்து 2007 லிருந்து ஆங்கில ஆசிரியரக இருக்கிறேன் (1995 லிருந்து இடைநிலையாசிரியராக இருந்தேன் )
எனது பணிக்காலத்தில் நான் பெருமையாக கருதுவது .
1996 இடும்பவனம் என்ற சிறு கிராமத்தில் இருக்கும் அரசு மேல் நிலைபள்ளியில் பணிக்கு சென்றபோது இடைநிலையாசிரியராக எனது பணி 6லிருந்து 8 ஆம் வகுப்புவரைதான் என்றாலும் அங்கே ..முதுகலை (11, மற்றும் 12) வகுப்புகளுக்கு ஆங்கில ஆசிரியர் இல்லை என்ற காரணத்தால் ..நான் 11. மற்றும் 12 வகுப்புகளுக்கு மட்டும் தொடர்ந்து 9 ஆண்டுகள் ஆங்கிலம் நடத்தி தொடர்ந்து பல ஆண்டுகள் 100 சதம் தேர்ச்சி அளித்தேன் ..என்னிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள் ...அன்பான புன்னைகையை இன்றும் பெற்றுவருவது சந்தோஷம் தருகிறது)
தங்களது யதார்த்தமான பதிலுக்கு நன்றி பாலா சார். சூப்பருங்க

படித்து வேலையில் இருக்கும் பொழுது நம்மில் பலர் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறி விட்டது என்று நினைத்து மேலே படிக்கும் வாய்ப்புகளையும், வேலையில் உத்தியோக உயர்வுக்கும் தங்களை தயார் செய்து கொள்ளாமலே பின் பனி ஒய்வு பெறுகையில் அடடா அதை பண்ணி இருக்கலாம், இதை பண்ணி இருக்கலாம் என்று நினைப்பது உண்டு.

வரும் வாய்ப்புகளை எவ்வாறு பயன் படுத்திக் கொள்வது, பின்னர் அதனால் சமூகத்துக்கு -மாணவர் சமூகத்துக்கு என்ன பயனை தர முடியும் என்பதை நல்ல பொறுப்பான ஆசிரியராக சிந்தித்து செயல் பட்டுள்ளீர்கள் -அது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது - உங்கள் மாணவர்களுக்கு தந்ததைப் போலவே.

நன்றி பாலா சார்.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 26, 2012 1:32 pm

பதில் சொல்ல பம்மும் நண்பர்: ஜாகீதாபானு
கேள்வி என் ஐந்து:


நானறிந்தவரை உங்களைப் போல் வெகுளியான நண்பரை நான் இத்தளத்தில் கண்டதில்லை. எதற்குமே கோபப் படாமல், எத்துனை கிண்டல்கள், கேலிகள் நண்பர்கள் செய்தாலும் அனைத்தையும் சிரித்துக் கொண்டே பதில் தருகிறீர்கள். சிறு குழந்தை போல் சிரித்துக் குதிக்கிறீர்கள். பாட்டி என்று இங்கு அழைப்பதின் ரகசியம் நானறியேன். ஒரு பெண்ணுக்கு வயதை கேட்டாலே கோவம் வரும் அதுவும் உங்களை பாட்டி என்று அழைப்பதை நீங்கள் பொருட் படுத்தாமலே வளைய வருகிறீர்கள். எப்படி இது சாத்தியம்? உங்கள் அணுகுமுறையை சொன்னால் நாங்களும் அதை பின்பற்ற முயலுவோம். எங்க தாத்தா எச்சி துப்பி காயறதுக்கு முன் விளையாடிட்டு வந்துடனும்ன்னு சொன்ன மாதிரி கோபப் படக் கூடாதுன்னு சொன்னாரு - அதுனால தான் என்று பதில் சொல்லாதீர்கள். நன்கு யோசித்து நீங்கள் தரும் பதில் கண்டிப்பாக பயன் தரும் பானு எங்களுக்கு.

நான் யோசிச்சு சொல்லுற அளவுக்கு கேள்வி ஒண்ணும் கஷ்டமாயில்லையே..... ஜாலி
நம் ஈகரை உறவுகள் தானே கிண்டல் செய்ராங்க ... எனக்கு இங்கே வந்தால் ஏதோ ஒரு கூட்டு குடும்பத்துக்குள் இருப்பது போல் பீலிங்க் வரும்... நம் குடும்பத்தில் நம்மை கிண்டல் செய்தால் எப்படி எடுத்துக் கொள்வோமோ அப்படி தான் இதையும் எடுத்துக் கொள்வேன் ...வேற யாராவது கிண்டல் பண்ணினா..... நான் ரெடி, நீ ரெடியா அவ்ளோ தான்
என்னை எல்லோரும் உரிமையாக நம்ம பானு தானே(பாட்டி)கேலி , கிண்டல் செய்வது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.....இதில் மன வருத்தம், கோவமோ கொள்ள எதுவுமே இல்ல.... புன்னகை

என்னை விட மூத்தவர் என்னை ஆண்டி என்று சொன்னாலும் கோவம் வராது ...ஏன்னா அவர் ஆண்டி என்று சொல்வதால் என் வயது கூடிவிடப்போகிறதா ...தங்கை என்று சொல்வதால் வயது குறைந்துவிடப் போகிறதா...

அதற்காக எனக்கு கோவம் வராது என்று தப்பா நினைக்க வேணாம் ...எனக்கும் ரொம்ப மோசமா கோவம் வரும்..

என்னை பாட்டி என்று அழைக்க காரணம் இந்த லிங்கில் [You must be registered and logged in to see this link.] 35 ,36 பகுதியில் பாருங்க அதிலிருந்து தான் நான் எல்லோருக்கும் பாட்டியானேன் ....

இதிலிருந்து நீங்க என்ன பயன் பெறப் போறீங்கணு தெரியல ஒன்னும் புரியல

அப்பாடா ..கொலைவெறி கேள்விக்கு சரியா பதில் சொல்லிட்டேன்..... ஓகே!!!!



[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 26, 2012 1:50 pm

அனைவரின் பதில்களும் மிக அருமை ... நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 2:23 pm

இளமாறன் wrote:[வணக்கம்..
உங்கள் கேள்வி நியாயமானதே ... தமிழ் ஆசிரியர்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்... சென்னை தமிழ் நெல்லை தமிழ் என்று எங்கும் தமிழில் வித்தியாசம் உண்டு என்பதை ஏற்று கொள்கிறேன்.ஆனால் அதற்காக திருக்குறளில் விளக்கம் தரும் தமிழ் ஆசிரியர் பேமானி சொமாரி பம்முதல் என்று விளக்கவுரை தரமுடியாது என்றே நினைக்கிறேன்.

உங்கள் கேள்வியை நன்றாக படியுங்கள் ...பதில் சொல்ல பம்மும் நண்பர்... பம்மும் என்பது என்ன நண்பரே.. தமிழா நீ பேசுவது தமிழா ???

ஈகரை தமிழ் விதி முறைகள் பகுதியில் சிவா சொல்லி இருப்பது
பார்க்க [You must be registered and logged in to see this link.]

நான் யாரையும் மன நோக செய்ய விரும்புவதில்லை ... என்னை பொருத்தவரை தரம் குறைந்தது போல எனக்கு உணர்ந்த்தேன் தவறு இருப்பின் மன்னிக்கவும்

தங்கள் பதிலுக்கு நன்றி இளமாறன்.


என்னுடைய கேள்வி - நீங்கள் அவ்வாறு சொன்னதால் - எப்படி நாம் அதை தவிர்த்து நல்ல தமிழ் எழுத வேண்டும் என அறிந்து கொள்ளவே.


நான் தமிழ் படிக்காதவன் - பள்ளியில். எனது முயற்சியில் நானே கற்றுக் கொண்டதுவே என் தமிழ் - வீட்டிலும், நான் பழகிய வட்டத்திலும் இருந்து படித்ததே. நான் முறையாக தமிழ் படிக்காததற்கு வருந்தியது உண்டு முன்பு. இப்பொழுது வருந்துவதில்லை.


ஒரு புறம் தமிழை வளர்க்க வேண்டும் என்ற அரை கூவல்கள் - மறுபுறம் நல்ல தமிழ் படிக்க ஆர்வம் இருப்பவர் தன் அரை குறை தமிழ் அறிவைக் கொண்டு கற்றுக் கொள்ளலாம் என்று வந்தால் - அவர்களை நல்ல தமிழ் அறிந்தால் மட்டுமே உனக்கு இடம் இங்குண்டு என்று மிரட்டினால் என்ன பண்ணுவது?


இருக்கும் ஆயிரம் வேலைகளில் இப்படி இங்கு வருவதன் மூலம் எனைப் போல் அரை குறை தமிழ் நண்பர்கள் பயன் பெறுவோம்.


யாராவது இங்கிருப்பவரில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் தமிழ் மட்டுமே பேசி வாழ்ந்திட முடியுமா?


மற்ற கலாச்சாரங்கள், மொழி என்று அனைத்திலும் மல்டி கல்சுரலிசம் வந்து விட்டது. அப்படி வராத மொழிகள் பெரும்பாலும் வளரவே இல்லை என்பது என் கருத்து.


நான் சில வார்த்தைகள் உபயோகிப்பது தவறு என்று தெரிந்தல்ல - தெரியாமல் தான்.


உங்கள் கருத்தை பகிர்ந்ததில் தவறென்ன இருக்கிறது நண்பரே? மன்னிக்க நான் யார்?

மீண்டும் தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 2:56 pm

[quote="அசுரன்"]
்தியா போன்ற நாடுகளில் ஜனத்தொகை பெருக்கத்தால் இப்படிப்பட்ட போட்டி மனப்பான்மையை வளர்க்க உதவும் கல்வி தான் பொருத்தமாக இருக்கும், ஏனென்றால் படித்த அனைவருக்கும் வேலை தருவது என்பது பகற்க்கனவே, அதனால் சிறந்தவர்களை (சிறந்தவற்றை) தேர்ந்தெடுக்க மதிப்பெண்கள் பெரும் பங்காற்றுகின்றது.

நம் இந்திய கல்வி முறையில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது, வெளிநாடுகளில் உள்ள கல்விமுறை என்பது அந்தந்த துறைகளில் பாடங்களில் படிக்கும் மாணவ மாணவிகள் அதை முழுவதும் செயல்முறைகல்வியாக படித்துவருகின்றனர், இந்தியாவில் மட்டும் புத்தகத்தையும் ஆசிரியரின் நடத்துல்கள் விளக்கங்களையுமே மட்டும் கேட்டு மாணவர்கள் படிக்கின்றனர்,

இப்போது வந்திருக்கும் சமச்சீர் கல்வியில் முறையில் செயல்வழி கற்றல், விஷீவல் எடுகேஷன், நேரில் சென்று கற்றதை காண்தல், முப்பருவ கல்விமுறை என அறிமுகப்படுத்தியிழுக்கிறார்கள். ஆனால் குறை என்னவென்றால் இதையெல்லாம் செயல்படுத்துவது ஆசிரியர்கள் தான் என்றாலும் அதை செயல்படுத்த முழு பொறுப்பும் உள்ள பள்ளி நிர்வாகம் மறுப்பதால் தான் அரைகுரை படித்த மாணவர்கள் உருவாகிறார்கள்.

என் கருத்து என்னவென்றால் அரசாங்கம் நேர்மையான முறையில் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கெடாமல் (டியுஷன் எடுக்கும் ஆசிரியர்களுக்கு நான் எதிரி) பள்ளி நிர்வாகத்தின் மண்டையில் ஆணி அடித்து இதை செயல்படுத்த வைக்க வேன்டும், இல்லையேல் அதன் அங்கிகாரத்தை ரத்து செய்து அந்த பள்ளிக்கூடத்தையும் அரசே ஏற்று நடத்த வேன்டும். ஆசிரியர்களாக பள்ளிகளில் எதையும் செய்துவிட முடியாது என்பது ஆசிரிய பெருமக்களுக்கு நன்கு தெரிந்த விசயம், நிர்வாகம் முட்டுக்கட்டை போட்டால் ஆசிரியர்கள் ஒன்றும் செய்ய இயலாது... காசு செலவாகிற விசயம் என்றால் நமக்கு சிலவேளைகளில் திட்டுகளும் கிடைக்கும். நான் நிறைய இதுபோன்று வாங்கியிருக்கிறேன்.

இதற்கு என்னதான் தீர்வு?
இதற்கான தீர்வை அரசாங்கம் தான் எடுக்க முடியும், கல்வித்துறையின் கடிவாளம் அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது. அதனால் தனியாக ஆசிரியர்களாலோ அல்லது பெற்றோர்களாலோ எதையும் செய்துவிட முடியாது. ஒன்று செய்யலாம், நமது பிள்ளைகளை பன்னாட்டு பள்ளிகளில் சேர்ப்பது இதற்கு தீர்வாக அமையும், ஆனால் செலவு என்று பார்த்தால் இதையெல்லாம் பணம் படைத்தவர்கள் தான் செய்ய முடியும், செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

காசுக்காக பள்ளி நேரமல்லாத மற்ற வேளைகளில் டியூஷன் எடுப்பது, பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்வது சட்டப்படி குற்றம். அப்படிப்பட்டவர்களை எனக்கு அரவே பிடிக்காது. என் மனைவியும் ஒரு ஆசிரியை தான், அரசாங்க பள்ளியில் பணிபுரிகிறார்கள், எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகும் போது (1999) என் நண்பர்கள் எல்லாரும் "டேய் நீ லக்கி டா, உன் ஒய்ஃப் நல்லா டியூசன் எடுத்து சம்பாரிக்கலாம்" என்றார்கள்.

கல்யாணமான அந்த மாதத்தில் இருந்து இன்று வரை எனது மனைவி டியூசன் எடுக்கிறாள், அவள் பணிபுரியும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஏழைகள், சிலநேரம் சாப்பாட்டுக்கு கூட காசு இல்லாமல் சிரமப்படுகிறவர்கள், நானும் ரொம்பவே ஸ்டிரிக்டாக சொல்லிட்டேன் என்ன ஆனாலும் டியூசன் எடுக்கிறதை மட்டும் விட்டுறாதே என்று, அவளும் எனது பேச்சுக்கு மறுபேச்சு இல்லாமல் மாலையில் பள்ளி முடிந்ததும் சில ஆண்டுகள் எங்கள் வீட்டின் மாடியில் பாடம் எடுத்து வந்தாள், இப்போது பள்ளியிலே அனுமதி கேட்டு குறைந்தது 30 மாணவர்களுக்காவது டியூசன் எடுத்து வருகிறாள், கால் காசு கூட வாங்காமல் வருடம் தோரும் ஒரு 20 மாணவர்களுக்கு பள்ளிக்கட்டணம் தன் சொந்த செலவில் செலுத்துகிறாள் மனைவியையே இந்த டிரில் எடுத்த நான் எப்படி இருப்பேன்னு நினைக்கிறீங்க புன்னகை (வேறு ஒரு சமயம் வரும்போது சொல்கிறேன்.)

ஆசிரியனாகிய என்னிடம் இப்படி தீர்வு என்ன என்று கேட்டால் எனக்கு தெரிந்த பதில் ஆசிரியர்கள் பொதுநல மனப்பான்மையோடு மாணவர்களை அனுகவேன்டும், ஏழைமாணவர்களை கண்டெடுத்து அவர்களை வளர்த்து தங்களால் ஆன உதவிகளை செய்யவேண்டும். இப்படி எல்லா ஆசிரியர்களும் செய்ய ஆரம்பித்தால் எந்த கல்வி முறையானாலும் சரி நல்ல சமுதாயம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது.
சூப்பருங்க உங்க பதில் அசுரன்.


நாளும் தெரிஞ்ச வாத்தியாருன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க. வாழ்த்துகள்.


கண்டிப்பா பாலா சார், உங்களிடம், ஆதிராவிடம் படிக்கும் மாணவர்கள் பாக்கியம் செய்தவர்கள் தான்.


நல்ல ஆராய்ச்சி செய்து அழகிய விளக்கத்தை தந்ததற்கு மீண்டும் நன்றி.


முடிவா சொல்றீங்க - வீட்டில உங்க ஆட்சி தான்னு? ரொம்ப தைரியம் தான் உங்களுக்கு.


ஏழைக் குழந்தைகளுக்கு அவர்களின் கல்விப் பசி தீர்க்க கட்டணம் இன்றி சொல்ல்லித் தருவது பாராட்டப் பட வேண்டிய ஒன்று. சமூகத்தின் பால் கொண்ட அக்கறை வெளிப் படுகிறது.


நாங்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது இங்கிருக்கும் நண்பர்களிடம் இருந்து.


மற்றொரு சமயம் சொல்கிறேன் என்ற உங்கள் வீர பிரதாப கதைகளை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறேன் - மாற்றங்களும் வருவதை எதிர்நோக்குவது போன்றே. நன்றி அசுரன்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 26, 2012 4:01 pm

கொலவெறி wrote:கொலவெறிக் கேள்விகள் - 26 மார்ச் 2012

பதில் சொல்ல பம்மும் நண்பர்: ராரா
கேள்வி என் மூன்று:


தாங்கள் தற்பொழுது திரைத் துறையில் சாதிக்க எண்ணி முழு முயற்சியில் இருக்கிறீர்கள். இருக்கீங்கல்ல? இதற்கு முன்னர் பத்திரிகையில் துணை ஆசிரியராக பனி புரிந்துள்ளீர்கள். அங்கு என்ன சாதித்தீர்கள் இல்லை சாதிக்க நினைத்தீர்கள்? அந்த துறையில் ஈடுபாடு இல்லாமல் கலைத் துறைக்கு பாய்ந்தீர்களா? இல்லை படித்து முடித்தவுடன் வேலை கிடைத்தது என்று நுழைந்து பின்னர் கலை மீதுள்ள காதலால் துறை மாறி விட்டீர்களா? கலைத் துறையை ரசித்தாலும் அத்துறையில் உள்ளோருக்கு பரவலாக பெண் தர யோசிக்கும் காலமிது. இவ்வாறிருக்க எப்படி இப்பிரச்சினைகளை சமாளித்தீர்கள்? நிலையான வருமானம் என்பது தனக்கென பெயரை உருவாக்கிய பின்னர் தான். உங்கள் லட்சியத்தில் ஒளி எப்போது தெரிகிறது? அதுவரை எப்படி சமாளிப்பீர்கள்? தங்களின் பதில் இத்துறையில் குதிக்க என்னும் ஒவ்வொருவருக்கும் நல்ல பயன் தரும்.



பம்மிக்கொண்டே பதில்பெறும் நபர் : இனியவன்


நண்பரே...கேள்விகள் என்றாலே எனக்கு எப்போதும் தெனாலிப் பயமயம்தான்...தெறித்து ஓடி தேசம் கடந்துவிடுவேன்...காரணம் தேர்ந்த மதிநுட்பம்-தெளிந்த நோக்கு இரண்டும் எனக்கு அவ்வளவாகப் பிடிபடவில்லை என்பதே...இருந்தும் நட்புக்கு நான் எப்போதும் நெற்றித் தரை தொட நிலம்படிந்து வணங்குவேன்...
எனவேதான் இனிய நண்பர் இனியவனின் கேள்விக்கும் இதோ என் பதில் :

திரைத் துறையின் கதவுகள் தெறித்துத் திறக்காதா நமக்கு என்ற வேட்கையுடன்
தட்டினேன்...சில வேளைகளில் முட்டினேன்...எப்படியோ திறந்து, தன் தோரண வாயில் வரைத் தூக்கி வந்துவிட்டது என்னை ...இன்னும் கொஞ்ச தூரம்தான் அந்த எல்லைக்கோட்டைத் தொட...எப்படியும் தொட்டு விடுவேன் எல்லோரின் ஆசி-ஆதரவுடன் என்பது நிச்சயம்...

கல்லூரிக் காலத்திலேயே திரைத்துறைதான் எனக்கு என்று தீர்க்கமாய்த் தீர்மானித்தேன்...திசை மாறுதல் என்பது தினையின் முனையளவும் கிடையாது என்பதும் திண்ணம்...

சரி...முடிவெடுத்துவிட்டாய்...மூலஸ்தானம் திறக்க வேண்டுமே?...
இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டு என்பதற்காய் நான் தெரிந்தெடுத்த திறவுகோல் வாயில்தான் பத்திரிகைத் துறை...
இரண்டு மூன்று ஆண்டுகள் மொழி பெயர்ப்பில் நிறைய பேரின் முதுகு சொரிந்தேன் மனமில்லாமலே...திடீரென ஒரு நாள் இயக்குனர் திரு.சக்தி சிதம்பரம் அவர்களின் மூலம் என் திரைவாழ்வின் அகரம் ஆரம்பித்தது...
அதன்பிறகு எனக்கு அண்ணனாகவும் (தனிவாழ்வில்) ஆகிவிட்ட திரயுலகம் தந்த இயக்குனர் திரு.ரமணா அவர்களிடமும் தொழிலும் துரிதமும் பயின்றேன்...இப்போது தனி ஆவர்த்தனம் செய்யும் முயற்சியில்...

அப்புறம் என்ன கேட்டீர்கள் ?...ஆங்...பொண்ணு எப்படிக் கொடுத்தங்கன்னா?...அட எங்க பாஸூ...பொண்ணு கேட்டுப் போனேன்?...எங்கள் இரு குடும்பமும் ஏறத்தாழ 28 ஆண்டு கால நட்புறவில் இருந்ததால் எனக்கும் வாழ்க்கைப் பிச்சை இட்டவள் என் மனைவி...எனவே அந்தக் கண்டத்தை நான் எளிதாகக் கடந்துவிட்டேன்...
எல்லோரும் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்னைகளை நான் கடக்க எனக்குத் துடுப்பாகவும் என்னைச் சுமக்கும் படகாகவும் இருப்பவள் என் அன்புக்காதல்மனைவியே...

என் வாழ்வில் மிகப் பிரகாசமான ஒளிவெள்ளம் பாயப் போகிறது என்பது எனக்கிருக்கும் நம்பிக்கை...ஆனால் என் மனைவிக்கிருப்பது பேரன்புப் பெருநம்பிக்கை...பிரச்சினைகளைத் தாண்டி வந்தால்தான் பிரபலம் ஆகமுடியும்...எனவே தாண்டுகிறேன்...தாண்டுவேன்...போதைக்கும் புகைக்கும் அடிமையாகாமல் ஆழமாகவும் அகலமாகவும் உழைக்க வேண்டும் ஓர் உழவனைப்போல...அதை நான் செய்கிறேன்-செய்வேன் என்பது என் நம்பிக்கை-யதார்த்தம்...
அப்புறம் என்னங்க?...வெற்றி எங்க போயிடும்...கொஞ்ச நாள்ல பாருங்க...ஒரு வெண்சூரிய அதிகாலையில் நம் வீட்டுக் கதவு தட்டும் சத்தம் கேட்கும்...திறந்து பார்த்தால் ...நம் வீட்டு வாசலில் நம் விலாசம் தேடி வந்து நிற்கும் வெற்றி...அப்புறம் அதை நமதுக் குடும்ப உறுப்பினராக்கி குடும்ப அட்டையிலும் பெயர் சேர்க்கலாம்...

அதற்கு ஒரே வழிதான்...உழைப்பு...உழைப்பு...உழைப்பு...அதை நான் என் மனைவியின் தோள்கொடுக்கும் சக்தியோடும் துணையோடும் தினம் தினம் செய்கிறேன்...
ஒரு நாள்...உங்கள் அனைவரையும் அழைத்து என் குடும்பத்து புதிய உறுப்பினரை இனிப்பு விருந்துடன் சந்திக்க வைப்பேன் சத்தியம்...

(இந்தப் பதிலில் திமிர் கொஞ்சம் தூக்கலோ என்று தோன்றுகிறது எனக்கு(ம்)... என்ன செய்வது?...அதுவும் இல்லையென்றால் செத்துப் போயிடலாம் மனிதன் என்பது என் கருத்து)



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 26, 2012 4:09 pm

என் வாழ்வில் மிகப் பிரகாசமான ஒளிவெள்ளம் பாயப் போகிறது என்பது எனக்கிருக்கும் நம்பிக்கை...ஆனால் என் மனைவிக்கிருப்பது பேரன்புப் பெருநம்பிக்கை...பிரச்சினைகளைத் தாண்டி வந்தால்தான் பிரபலம் ஆகமுடியும்...எனவே தாண்டுகிறேன்...தாண்டுவேன்...போதைக்கும் புகைக்கும் அடிமையாகாமல் ஆழமாகவும் அகலமாகவும் உழைக்க வேண்டும் ஓர் உழவனைப்போல...அதை நான் செய்கிறேன்-செய்வேன் என்பது என் நம்பிக்கை-யதார்த்தம்...
அப்புறம் என்னங்க?...வெற்றி எங்க போயிடும்...கொஞ்ச நாள்ல பாருங்க...ஒரு வெண்சூரிய அதிகாலையில் நம் வீட்டுக் கதவு தட்டும் சத்தம் கேட்கும்...திறந்து பார்த்தால் ...நம் வீட்டு வாசலில் நம் விலாசம் தேடி வந்து நிற்கும் வெற்றி...அப்புறம் அதை நமதுக் குடும்ப உறுப்பினராக்கி குடும்ப அட்டையிலும் பெயர் சேர்க்கலாம்...

உங்க பதில் ரொம்ப அருமை ... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கண்டிப்பா ஜெயிப்பிங்க ... அருமையிருக்கு
ஆனா எங்களையெல்லாம் மறந்துருவிங்க ... சோகம்
எங்களை மறப்பதற்காகவாவது நீங்கள் சீக்கிரம் ஜெயிக்க வேண்டும் ...... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 7 of 29 Previous  1 ... 6, 7, 8 ... 18 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக