புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்திய பட்ஜெட் 2012-13 அம்சங்கள்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தனிநபர் வருவாயும், வரி விலக்கும்
* ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய் வரையில் வருமான வரி இல்லை. 2 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரை இருந்தால் 10 சதவீதமும், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில், 20 சதவீதமும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு மூலம் வரிசெலுத்தும் ஒவ்வொரு குடிமகனும், ஆண்டுக்கு தங்களது வருமானத்தில், 2 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
* ராஜிவ்காந்தி பெயரில் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இதன்படி, 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள ஒருவர், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி அவற்றை மூன்று ஆண்டுகளுக்கு விற்பனை செய்யாமல் வைத்திருந்தால் அதற்கு 50 சதவீத வரிவிலக்கு அளிக்கப்படும்.
* ஆண்டொன்றுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ள ஒருவர் வங்கியில் சேமிப்பு கணக்கில் போட்டு வைத்திருக்கும் பணத்திற்கு வட்டியாக 10 ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
* ரத்தச் சோதனை உள்ளிட்ட நோய் கண்டறியும் சோதனைகளை மேற்கொண்டால் அதற்கான செலவு தொகையில், 5 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்கப்படும்.
* வெளிநாட்டில் சொத்துக்கள் வைத்திருந்தால், அதுபற்றி வருமான வரி கணக்குகளில் தகவல் தெரிவித்தே ஆக வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த சொத்து வாங்கியதில் இருந்து 16 ஆண்டுகள் வரை, அந்த சொத்துக்களைப் பற்றி விசாரணை நடத்துவதற்கு வருமான வரித்துறையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
* இரண்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நகை வாங்கினால், அவற்றுக்கு உடனடியாக அங்கேயே வரி செலுத்தியாக வேண்டும்.
அடிப்படை கட்டமைப்பு
* அடிப்படை கட்டமைப்பு துறை முதலீட்டில் தகுதி பெற்ற, தனியார் முதலீட்டாளர்களுக்கு அனுமதி.
* அடிப்படை கட்டமைப்பு துறையில் முதலீட்டை ஊக்குவிக்க, வரி விலக்கு கொண்ட கடன் பத்திர வெளியீட்டின் வரம்பு 30 ஆயிரம் கோடியிலிருந்து 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
* சென்ற நிதியாண்டில் 7,300 கி.மீ வரை தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. வரும் 2012-13ம் நிதியாண்டில் புதிதாக, 8,800 கி.மீ தூரத்திற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும்.
* துறைமுகங்கள், கப்பல் கட்டுமானம், அணை, சாலை, பாலம் ஆகிய கட்டமைப்புகளை உருவாக்கி, நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு கடன் மீதான வட்டி கட்டணத்திற்கு விதிக்கப்படும் வரி 20 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக, மூன்று ஆண்டுகளுக்கு குறைக்கப்பட்டு உள்ளது.
* ஊரக கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள
20 ஆயிரம் கோடியில் 5,000 கோடி ரூபாய் வேளாண் பொருட்கள் சேமிப்பு கிடங்குகள் கட்டுவதற்கு பயன்படுத்தப் படும்.
* கட்டமைப்பு திட்டங்களுக்கு கடன் கொடுக்கும் ஐ.ஐ.எப்.சி.எல்., நிறுவனம், தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு, டெண்டர் புள்ளியில் போட்டியிடும் போதே கடன் ஒப்புதல் வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
* பெரிய அளவிலான வேளாண் சந்தைகள், நீர் பாசன திட்டங்கள் ஆகியவற்றில், தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், லாப பற்றாக்குறை நிதி அளிக்கப் படும்.
நிபுணர் கருத்து
வளர்ச்சிக்கான பட்ஜெட்: ஜி.ஆர்.கே ரெட்டி, தலைவர் மார்க் குழுமம்: வரும் 2012-13ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், அடிப்படை கட்டமைப்பு மற்றும் மின்சார துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம், வட்டி செலவினம் அதிகரிப்பு, தொழில் துறையில் தேக்க நிலை சாதகமற்ற சந்தை நிலவரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு தொலை நோக்கு பார்வையுடன், வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது. குறிப்பாக, அடிப்படை கட்டமைப்பு துறையில், நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், வரியற்ற கட்டமைப்பு கடன் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மின்சார சாதனங்கள் இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சேவை வரி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
பங்குச்சந்தை
* பங்கு பரிவர்த்தனை வரி 0.1 சதவீதமாக குறைப்பு
* சிறு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ராஜீவ்காந்தி பங்கு சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மூன்றாண்டு காலவயைறை கொண்ட இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான முதலீட்டிற்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
* பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வாயிலாக நடப்பு நிதியாண்டில் 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 14 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.
* வரும் 2012-13ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வாயிலாக 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும்.
* 10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட புதிய பங்கு வெளியீடுகளில் 10 சதவீதம் மின்னணு முறையில் மேற்கொள்ளப்படும்
* 10 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள சில்லறை முதலீட்டாளர்கள், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி, மூன்றாண்டுகளுக்கு விற்பனை செய்யாமல் வைத்திருந்தால், 50 சதவீத வரி விலக்கு
* துணிகர முதலீட்டு நிதியங்கள் (வென்சர் கேப்பிட்டல் பண்டு) பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும்
* நிறுவனங்கள் அவற்றின் அயல்நாட்டு சொத்துக்கள் குறித்த விவரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்
நிபுணர் கருத்து: பங்கு பரிவர்த்தனை வரி குறைக்கப்பட்டுள்ளதால், பங்குச் சந்தையில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், வரும் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தை நிலவரம் நன்கு இல்லாமல் போனால், இந்த அளவிற்கு நிதியை திரட்டுவது கடினம்.
வேளாண் துறை
* நடப்பு நிதியாண்டில், வேளாண் துறை வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* பட்ஜெட் ஒதுக்கீட்டில் வேளாண் துறை திட்டங்களுக்கான நிதி 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
* வேளாண் துறைக்கான கடன் ஒரு லட்சம் கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டு 4.75 லட்சம் கோடியிலிருந்து 5.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* கரும்பு நடவு மற்றும் அறுவடை இயந்திரங்களுக்கும் அவற்றின் உதிரிபாகங்களுக்கும் சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* வேளாண் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு 18 சதவீதம் உயர்ந்து 17 ஆயிரத்து 123 கோடியில் இருந்து 20 ஆயிரத்து 208 கோடி ரூபாயாக அதிகரிக்கப் பட்டு உள்ளது.
* சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு பிராந்திய ஊரக வங்கிகள் குறுகிய கால கடன்களை வழங்குவதற்காக, தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு)க்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
* குறுகிய கால பயிர் கடனுக்கான ஆண்டு வட்டி ஏழு சதவீதமாகவே தொடரும். கடனை குறித்த காலத்தில் திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டியில் பயிர் கடன் வழங்கப்படும். (மூன்று சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்)
* அறுவடைக்கு பிறகு விவசாயிகள் சந்திக்க நேரும் இழப்பை தடுக்கும் நோக்கில், கிடங்குகளில் உணவு தானியங்களை வைப்பதற்காக நான்கு சதவீத வட்டியில் அறுவடைக்கு பின்பு கடன் வழங்கப்படும்.
* ஏ.டி.எம் மையங்களில் பயன்படுத்தும் வகையில் கிசான் கடன் அட்டை திட்டம் மேம்படுத்தப்படும்.
* அதிக மகசூல் மற்றும் தட்பவெப்ப மாறுதலை தாங்கும் விதை வகைகளை உருவாக்குவதற்கான ஆய்விற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
* வேளாண் துறைக்கான பாசன வசதியை அதிகரிக்கும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 13 சதவீதம் உயர்த்தப்பட்டு, 14 ஆயிரத்து 242 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* உணவு பதப்படுத்தல் துறையை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசுகளுடன் இணைந்து தேசிய செயல் திட்டம் உருவாக்கப்படும்.
நிபுணர் கருத்து: நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் வேளாண் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தி அதிகரித்து பணவீக்கம் குறைய வாய்ப்பு உருவாகும்.
மின்சாரம்
* மின் நிறுவனங்கள், அன்னிய வர்த்தக கடன் வாயிலாக நிதி திரட்டிக் கொள்ள அனுமதிக்கப்படும்.
* மின் துறை நிறுவனங்களின், வரியில்லா கடன் பத்திர வெளியீட்டு வரம்பு ஐந்தாயிரம் கோடி ரூபாயில் இருந்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும்
* நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, 2014ம் ஆண்டு மார்ச் இறுதி வரை, நிலக்கரி இறக்குமதிக்கு சுங்கவரியில் இருந்தும் முழு விலக்கும், 1 சதவீத எதிர் விதிப்பு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
* இயற்கை எரிவாயு, திரவ எரிவாயு, யுரேனியம், யுரேனியம் டையாக்சைடு ஆகியவற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
* மின்நிறுவனங்களின் கடன் சுமையை குறைக்கும் விதமாக, மூன்றாண்டுகளுக்கு அன்னிய வர்த்தக கடனுக்கான வட்டியின் மீத விதிக்கப் படும் வரி, 20 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.
* மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு முடிவடைய உள்ள வரி விலக்கு சலுகை காலம், மேலும் ஓராண்டிற்கு, அதாவது வரும் 2013ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்படும்.
* மின் நிறுவனங்கள் கையகப்படுத்தும் புதிய சொத்துக்களுக்கு முதலாண்டு கூடுதலாக 20 சதவீத தேய்மானம் அனுமதிக்கப்படும்.
* மார்ச் 31, 2013க்குள் முடிக்கப்படும் மின் திட்டங்களுக்கு, லாபத்தின் மீதான வரி, 10 ஆண்டுகளுக்கு 100 சதவீத விலக்கு வழங்கப்படும்.
* வரும் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17) நாட்டின் மின் உற்பத்தி திறன் 80 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும்.
* மார்ச் 31, 2015க்குள் முடிக்கப்படும் திட்டங்களுக்கான நிலக்கரி விற்பனை ஒப்பந்தங்களை இப்போதே முடித்துக்கொள்ள கோல் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தப் பட்டு உள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்
* இந்நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்குதற்காக, 5,000 கோடி ரூபாய் முதலீட்டில், "சிட்பி' நிறுவனத்துடன் இணைந்து, துணிகர முதலீட்டு நிதியம் ஏற்படுத்தப்படும். இது, "இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் வென்சர் பண்ட்' என்ற பெயரில் செயல்படும்.
* இத்துறை ஊக்குவிக்கும் வகையில், ஒரு சில சாதனங்கள், உதிரி பாகங்கள் மற்றும் மூலப் பொருட்களின் இறக்குமதிக்கான அடிப்படை சுங்க வரியை, 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எதிர்மறை வரி, 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* இதயத்தில் பொருத்தக் கூடிய வால்வுகள், ஸ்டெண்டுகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இறக்குமதிக்கு சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.
* பொதுத் துறை மற்றும் அரசு நிறுவனங்கள் அவற்றின் மொத்த கொள்முதலில், 20 சதவீத பொருட்களை குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடம் வாங்க வேண்டும். இதில், எஸ்.சி.மற்றும் எஸ்.டி. பிரிவினரிடமிருந்து, 4 சதவீத பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்.
* சிறு நிறுவனங்களின் கணக்கு தணிக்கைக்கான விற்றுமுதல் வரம்பு, 60 லட்சம் ரூபாயிலிருந்து, 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கி-பாதுகாப்பு-விமானம்
* பட்ஜெட்டில் நாட்டின் பாதுகாப்பு துறைக்கு 1 லட்சத்து 93 ஆயிரத்து 407 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* இந்திய விமான நிறுவனங்கள் ஓராண்டிற்கு அன்னிய வர்த்தக கடன் மூலம் 100 கோடி டாலர் (5,000 கோடி ரூபாய்) திரட்ட அனுமதி
* விமான உதிரிபாகங்கள், டயர்கள் மற்றும் சோதனை சாதனங்கள் இறக்குமதிக்கு முழு வரி விலக்கு
* நலிவுற்ற ஏர்இந்தியா நிறுவனத்திற்கு 4,000 கோடி ரூபாய் நிதியுதவி
* இந்திய விமான நிறுவனங்களில், அன்னிய விமான நிறுவனங்கள் 49 சதவீத பங்கு முதலீடு மேற்கொள்ள அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்
* வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள், கொண்டு வரும் பொருட்களுக்கான சுங்க வரி விலக்கு வரம்பு 25 ஆயிரத்தில் இருந்து 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* வங்கி சேமிப்பு கணக்கில் 10ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டி வருவாய்க்கு வரி விலக்கு
* பொதுத்துறை வங்கிகள்,கிராமப்புற வங்கிகளின் மூலதன இருப்பை உயர்த்திக் கொள்ள, 15 ஆயிரத்து 888 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்
* மருத்துவ காப்பீட்டின் கீழ், 5,000 ரூபாய் வரையிலான பரிசோதனை தொகைக்கு வரி விலக்கு
* ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய் வரையில் வருமான வரி இல்லை. 2 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரை இருந்தால் 10 சதவீதமும், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில், 20 சதவீதமும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு மூலம் வரிசெலுத்தும் ஒவ்வொரு குடிமகனும், ஆண்டுக்கு தங்களது வருமானத்தில், 2 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
* ராஜிவ்காந்தி பெயரில் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இதன்படி, 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள ஒருவர், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி அவற்றை மூன்று ஆண்டுகளுக்கு விற்பனை செய்யாமல் வைத்திருந்தால் அதற்கு 50 சதவீத வரிவிலக்கு அளிக்கப்படும்.
* ஆண்டொன்றுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ள ஒருவர் வங்கியில் சேமிப்பு கணக்கில் போட்டு வைத்திருக்கும் பணத்திற்கு வட்டியாக 10 ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
* ரத்தச் சோதனை உள்ளிட்ட நோய் கண்டறியும் சோதனைகளை மேற்கொண்டால் அதற்கான செலவு தொகையில், 5 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்கப்படும்.
* வெளிநாட்டில் சொத்துக்கள் வைத்திருந்தால், அதுபற்றி வருமான வரி கணக்குகளில் தகவல் தெரிவித்தே ஆக வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த சொத்து வாங்கியதில் இருந்து 16 ஆண்டுகள் வரை, அந்த சொத்துக்களைப் பற்றி விசாரணை நடத்துவதற்கு வருமான வரித்துறையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
* இரண்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நகை வாங்கினால், அவற்றுக்கு உடனடியாக அங்கேயே வரி செலுத்தியாக வேண்டும்.
அடிப்படை கட்டமைப்பு
* அடிப்படை கட்டமைப்பு துறை முதலீட்டில் தகுதி பெற்ற, தனியார் முதலீட்டாளர்களுக்கு அனுமதி.
* அடிப்படை கட்டமைப்பு துறையில் முதலீட்டை ஊக்குவிக்க, வரி விலக்கு கொண்ட கடன் பத்திர வெளியீட்டின் வரம்பு 30 ஆயிரம் கோடியிலிருந்து 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
* சென்ற நிதியாண்டில் 7,300 கி.மீ வரை தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. வரும் 2012-13ம் நிதியாண்டில் புதிதாக, 8,800 கி.மீ தூரத்திற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும்.
* துறைமுகங்கள், கப்பல் கட்டுமானம், அணை, சாலை, பாலம் ஆகிய கட்டமைப்புகளை உருவாக்கி, நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு கடன் மீதான வட்டி கட்டணத்திற்கு விதிக்கப்படும் வரி 20 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக, மூன்று ஆண்டுகளுக்கு குறைக்கப்பட்டு உள்ளது.
* ஊரக கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள
20 ஆயிரம் கோடியில் 5,000 கோடி ரூபாய் வேளாண் பொருட்கள் சேமிப்பு கிடங்குகள் கட்டுவதற்கு பயன்படுத்தப் படும்.
* கட்டமைப்பு திட்டங்களுக்கு கடன் கொடுக்கும் ஐ.ஐ.எப்.சி.எல்., நிறுவனம், தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு, டெண்டர் புள்ளியில் போட்டியிடும் போதே கடன் ஒப்புதல் வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
* பெரிய அளவிலான வேளாண் சந்தைகள், நீர் பாசன திட்டங்கள் ஆகியவற்றில், தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், லாப பற்றாக்குறை நிதி அளிக்கப் படும்.
நிபுணர் கருத்து
வளர்ச்சிக்கான பட்ஜெட்: ஜி.ஆர்.கே ரெட்டி, தலைவர் மார்க் குழுமம்: வரும் 2012-13ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், அடிப்படை கட்டமைப்பு மற்றும் மின்சார துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம், வட்டி செலவினம் அதிகரிப்பு, தொழில் துறையில் தேக்க நிலை சாதகமற்ற சந்தை நிலவரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு தொலை நோக்கு பார்வையுடன், வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது. குறிப்பாக, அடிப்படை கட்டமைப்பு துறையில், நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், வரியற்ற கட்டமைப்பு கடன் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மின்சார சாதனங்கள் இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சேவை வரி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
பங்குச்சந்தை
* பங்கு பரிவர்த்தனை வரி 0.1 சதவீதமாக குறைப்பு
* சிறு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ராஜீவ்காந்தி பங்கு சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மூன்றாண்டு காலவயைறை கொண்ட இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான முதலீட்டிற்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
* பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வாயிலாக நடப்பு நிதியாண்டில் 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 14 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.
* வரும் 2012-13ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வாயிலாக 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும்.
* 10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட புதிய பங்கு வெளியீடுகளில் 10 சதவீதம் மின்னணு முறையில் மேற்கொள்ளப்படும்
* 10 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள சில்லறை முதலீட்டாளர்கள், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி, மூன்றாண்டுகளுக்கு விற்பனை செய்யாமல் வைத்திருந்தால், 50 சதவீத வரி விலக்கு
* துணிகர முதலீட்டு நிதியங்கள் (வென்சர் கேப்பிட்டல் பண்டு) பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும்
* நிறுவனங்கள் அவற்றின் அயல்நாட்டு சொத்துக்கள் குறித்த விவரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்
நிபுணர் கருத்து: பங்கு பரிவர்த்தனை வரி குறைக்கப்பட்டுள்ளதால், பங்குச் சந்தையில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், வரும் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தை நிலவரம் நன்கு இல்லாமல் போனால், இந்த அளவிற்கு நிதியை திரட்டுவது கடினம்.
வேளாண் துறை
* நடப்பு நிதியாண்டில், வேளாண் துறை வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* பட்ஜெட் ஒதுக்கீட்டில் வேளாண் துறை திட்டங்களுக்கான நிதி 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
* வேளாண் துறைக்கான கடன் ஒரு லட்சம் கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டு 4.75 லட்சம் கோடியிலிருந்து 5.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* கரும்பு நடவு மற்றும் அறுவடை இயந்திரங்களுக்கும் அவற்றின் உதிரிபாகங்களுக்கும் சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* வேளாண் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு 18 சதவீதம் உயர்ந்து 17 ஆயிரத்து 123 கோடியில் இருந்து 20 ஆயிரத்து 208 கோடி ரூபாயாக அதிகரிக்கப் பட்டு உள்ளது.
* சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு பிராந்திய ஊரக வங்கிகள் குறுகிய கால கடன்களை வழங்குவதற்காக, தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு)க்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
* குறுகிய கால பயிர் கடனுக்கான ஆண்டு வட்டி ஏழு சதவீதமாகவே தொடரும். கடனை குறித்த காலத்தில் திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டியில் பயிர் கடன் வழங்கப்படும். (மூன்று சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்)
* அறுவடைக்கு பிறகு விவசாயிகள் சந்திக்க நேரும் இழப்பை தடுக்கும் நோக்கில், கிடங்குகளில் உணவு தானியங்களை வைப்பதற்காக நான்கு சதவீத வட்டியில் அறுவடைக்கு பின்பு கடன் வழங்கப்படும்.
* ஏ.டி.எம் மையங்களில் பயன்படுத்தும் வகையில் கிசான் கடன் அட்டை திட்டம் மேம்படுத்தப்படும்.
* அதிக மகசூல் மற்றும் தட்பவெப்ப மாறுதலை தாங்கும் விதை வகைகளை உருவாக்குவதற்கான ஆய்விற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
* வேளாண் துறைக்கான பாசன வசதியை அதிகரிக்கும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 13 சதவீதம் உயர்த்தப்பட்டு, 14 ஆயிரத்து 242 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* உணவு பதப்படுத்தல் துறையை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசுகளுடன் இணைந்து தேசிய செயல் திட்டம் உருவாக்கப்படும்.
நிபுணர் கருத்து: நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் வேளாண் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தி அதிகரித்து பணவீக்கம் குறைய வாய்ப்பு உருவாகும்.
மின்சாரம்
* மின் நிறுவனங்கள், அன்னிய வர்த்தக கடன் வாயிலாக நிதி திரட்டிக் கொள்ள அனுமதிக்கப்படும்.
* மின் துறை நிறுவனங்களின், வரியில்லா கடன் பத்திர வெளியீட்டு வரம்பு ஐந்தாயிரம் கோடி ரூபாயில் இருந்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும்
* நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, 2014ம் ஆண்டு மார்ச் இறுதி வரை, நிலக்கரி இறக்குமதிக்கு சுங்கவரியில் இருந்தும் முழு விலக்கும், 1 சதவீத எதிர் விதிப்பு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
* இயற்கை எரிவாயு, திரவ எரிவாயு, யுரேனியம், யுரேனியம் டையாக்சைடு ஆகியவற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
* மின்நிறுவனங்களின் கடன் சுமையை குறைக்கும் விதமாக, மூன்றாண்டுகளுக்கு அன்னிய வர்த்தக கடனுக்கான வட்டியின் மீத விதிக்கப் படும் வரி, 20 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.
* மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு முடிவடைய உள்ள வரி விலக்கு சலுகை காலம், மேலும் ஓராண்டிற்கு, அதாவது வரும் 2013ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்படும்.
* மின் நிறுவனங்கள் கையகப்படுத்தும் புதிய சொத்துக்களுக்கு முதலாண்டு கூடுதலாக 20 சதவீத தேய்மானம் அனுமதிக்கப்படும்.
* மார்ச் 31, 2013க்குள் முடிக்கப்படும் மின் திட்டங்களுக்கு, லாபத்தின் மீதான வரி, 10 ஆண்டுகளுக்கு 100 சதவீத விலக்கு வழங்கப்படும்.
* வரும் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17) நாட்டின் மின் உற்பத்தி திறன் 80 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும்.
* மார்ச் 31, 2015க்குள் முடிக்கப்படும் திட்டங்களுக்கான நிலக்கரி விற்பனை ஒப்பந்தங்களை இப்போதே முடித்துக்கொள்ள கோல் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தப் பட்டு உள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்
* இந்நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்குதற்காக, 5,000 கோடி ரூபாய் முதலீட்டில், "சிட்பி' நிறுவனத்துடன் இணைந்து, துணிகர முதலீட்டு நிதியம் ஏற்படுத்தப்படும். இது, "இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் வென்சர் பண்ட்' என்ற பெயரில் செயல்படும்.
* இத்துறை ஊக்குவிக்கும் வகையில், ஒரு சில சாதனங்கள், உதிரி பாகங்கள் மற்றும் மூலப் பொருட்களின் இறக்குமதிக்கான அடிப்படை சுங்க வரியை, 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எதிர்மறை வரி, 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* இதயத்தில் பொருத்தக் கூடிய வால்வுகள், ஸ்டெண்டுகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இறக்குமதிக்கு சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.
* பொதுத் துறை மற்றும் அரசு நிறுவனங்கள் அவற்றின் மொத்த கொள்முதலில், 20 சதவீத பொருட்களை குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடம் வாங்க வேண்டும். இதில், எஸ்.சி.மற்றும் எஸ்.டி. பிரிவினரிடமிருந்து, 4 சதவீத பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்.
* சிறு நிறுவனங்களின் கணக்கு தணிக்கைக்கான விற்றுமுதல் வரம்பு, 60 லட்சம் ரூபாயிலிருந்து, 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கி-பாதுகாப்பு-விமானம்
* பட்ஜெட்டில் நாட்டின் பாதுகாப்பு துறைக்கு 1 லட்சத்து 93 ஆயிரத்து 407 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* இந்திய விமான நிறுவனங்கள் ஓராண்டிற்கு அன்னிய வர்த்தக கடன் மூலம் 100 கோடி டாலர் (5,000 கோடி ரூபாய்) திரட்ட அனுமதி
* விமான உதிரிபாகங்கள், டயர்கள் மற்றும் சோதனை சாதனங்கள் இறக்குமதிக்கு முழு வரி விலக்கு
* நலிவுற்ற ஏர்இந்தியா நிறுவனத்திற்கு 4,000 கோடி ரூபாய் நிதியுதவி
* இந்திய விமான நிறுவனங்களில், அன்னிய விமான நிறுவனங்கள் 49 சதவீத பங்கு முதலீடு மேற்கொள்ள அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்
* வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள், கொண்டு வரும் பொருட்களுக்கான சுங்க வரி விலக்கு வரம்பு 25 ஆயிரத்தில் இருந்து 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* வங்கி சேமிப்பு கணக்கில் 10ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டி வருவாய்க்கு வரி விலக்கு
* பொதுத்துறை வங்கிகள்,கிராமப்புற வங்கிகளின் மூலதன இருப்பை உயர்த்திக் கொள்ள, 15 ஆயிரத்து 888 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்
* மருத்துவ காப்பீட்டின் கீழ், 5,000 ரூபாய் வரையிலான பரிசோதனை தொகைக்கு வரி விலக்கு
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
எப்படி பட்ஜெட் போட்டாலும் பெட்ரோல் விலையோ குறைய போவதே இல்லை...அப்பறம் எதுக்கு பட்ஜெட்டைப் பார்த்துக்கிட்டு...பல்ஸை ஏத்திக்கிட்டு
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இந்த பட்ஜெட் அம்சமாவே இல்லையே?
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பெட்ரோல் விலை எப்படி குறையும் ..அடுத்து ஈரான் போர் இருக்கிறதே அதனால் தான் இன்னும் விலை ஏறிக்கொண்டு இருக்கிறதுஅதிபொண்ணு wrote:எப்படி பட்ஜெட் போட்டாலும் பெட்ரோல் விலையோ குறைய போவதே இல்லை...அப்பறம் எதுக்கு பட்ஜெட்டைப் பார்த்துக்கிட்டு...பல்ஸை ஏத்திக்கிட்டு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|