புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:48 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 10:39 am

» கருத்துப்படம் 05/09/2024
by mohamed nizamudeen Today at 9:04 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:26 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Today at 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Today at 4:19 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:23 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 04, 2024 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Sep 04, 2024 6:41 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
36 Posts - 50%
ayyasamy ram
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
5 Posts - 7%
Karthikakulanthaivel
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
3 Posts - 4%
manikavi
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
47 Posts - 48%
ayyasamy ram
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
34 Posts - 35%
mohamed nizamudeen
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
6 Posts - 6%
Karthikakulanthaivel
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
2 Posts - 2%
manikavi
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
2 Posts - 2%
Guna.D
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
1 Post - 1%
prajai
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
1 Post - 1%
Renukakumar
நீயா நானா? Poll_c10நீயா நானா? Poll_m10நீயா நானா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயா நானா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 13, 2012 8:19 am



˜நூதப்பன் ஒரு சாதாரண விவசாயி. அவனது தாயார் மரகதத்திற்கும் அவன் மனைவி வசந்திக்கும் எப்போதும் ஏதாவது சண்டை இருந்துக் கொண்டே இருக்கும். மாமியாருக்கு மருமகளை அடக்கி ஆள வேண்டுமென்ற ஆசை. மருமகளுக்கோ மாமியாருக்கு அடங்கிப் போகக் கூடாது என்ற எண்ணம். இதனால், இருவருக்கும் எதிலும் போட்டா போட்டிதான்.

ஒருமுறை வேதப்பன் நோய்வாய்ப்பட்டு, ஒருவாரத்திற்குப் பின் குணமடைந்தான்.

""நீங்கள் குணமடைந்தால் நான் உடனே திருப்பதிக்கு வருவதாக வேண்டிக் கொண்டேன். நாம் நாளையே போகலாம்,'' என்றாள் வசந்தி.

அங்கேயே சற்று தூரத்தில் உட்கார்ந்து இருந்த மரகதமும், ""வேதா! நான் இவளுக்கு முன்னாலேயே திருப்பதிக்கு வருவதாக வேண்டிக் கொண்டு விட்டேன். இன்று சாயந்திரமே கிளம்பு,'' என்றாள்.

வேதப்பனோ வைத்தியத்திற்காகப் பணத்தை செலவு செய்து விட்டுக் கையில் பணமே இல்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தான். தன் தாயாரும், மனைவியும் திருப்பதிக்கு வருவதாக வேண்டிக் கொண்டதைக் கேட்டதும், அவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ஆனாலும் அதனைக் அடக்கிக் கொண்டு தன் நண்பன் ஒருவனிடம் கடன் வாங்கி திருப்பதிக்கு அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

அங்கு எந்த விக்கிரகத்தின் முன் எந்த உண்டியல் இருந்தாலும் அதில் காசுகளை மாமியாரும், மருமகளும் போட்டி போட்டுக் கொண்டு வேதப்பனிடம் இருந்து வாங்கிப் போட்டார்கள். சுவாமி தரிசனம் செய்தபின் மலையிலிருந்து கீழே இறங்கித் தம் ஊர் வந்து சேர்ந்தனர்.

""சரி, சட்டென்று சமையலைச் செய்யுங்கள்; ஒரே பசி, வயிற்றைக் கிள்ளுகிறது,'' என்றான் வேதப்பன்.

""கேட்டாயா? சீக்கிரமாய் சமையலைச் செய்,'' என்று உத்தரவு போட்டாள் மரகதம்.

நானும், அதைத் தான் சொல்கிறேன். நீங்கள் சீக்கிரம் சமையலைச் செய்யுங்கள். என்னால் எதுவும் முடியாது,'' என்றாள் மருமகள்.

இந்தப் போட்டியில் யாருமே சமையல் செய்யவில்லை. அரை மணி நேரம் சென்று வந்த வேதப்பன் சமையலே ஆகாதது கண்டு தன் மனைவியிடம், ""நீ வயதில் சிறியவள். என் அம்மாவுடன் ஏன் போட்டி? சமையலை நீ செய்திருக்கலாமே... ஏன் இப்படி சண்டித்தனம் செய்கிறாய்?'' என்று கோபித்துக் கொண்டான்.

தன் தாயிடமும், ""நீதான் வயதில் பெரியவள். மருமகளை அனுசரித்துக் கொண்டு போகக் கூடாதா? என்னை இருவருமாகச் சேர்ந்து நிம்மதியுடன் இருக்க விடுவதில்லையே,'' எனக் கூறி வீட்டை விட்டு வெளியே போய் விட்டான்.

தன் மாமியார் முன், தன்னைக் கோபித்துத் கொண்டதைக் வசந்தி அவமானமாகக் கருதி, மூட்டைகட்டிக் கொண்டு, தன் தாயாரின் வீட்டிற்குக் கிளம்பி விட்டாள்.

மரகதமும் தன் மகன் தன்னைக் கோபித்துக் கொண்டதற்காக வருத்தப்பட்டுத் தன் இளைய மகனின் ஊருக்குக் கிளம்பி விட்டாள்.

வசந்தியின் தாயாரும், மரகதத்தின் இளையமகனும், ஒரே ஊரில்தான் இருந்தனர்.

இருவரும் வண்டி பேசப்போன போது ஒரே ஒரு குதிரை வண்டிதான் அங்கு இருந்தது. வண்டிக்காரன் இருவரையும் வண்டியில் உட்காரச் சொல்லி வண்டியை ஓட்டலானான்.

கொஞ்ச தூரம் போனதும் வண்டிக்காரன் மரகதத்திடம், ""அம்மா! முன்பாரம் போதவில்லை. கொஞ்சம் முன்னால் நகர்ந்து உட்காருங்கள்,'' என்றான்.

""நான் நகரமுடியாது. இருந்த இடத்தில்தான் இருப்பேன். நீ முன்னால் நகர்ந்து போ,'' என்றாள் மருமகளிடம்.

""முடியாது. நீங்கள் தான் நகரவேண்டும். ஏனென்றால், நீங்கள்தான் குண்டாக இருக்கிறீர்கள்; நான் ஒல்லி. நீங்கள் முன்னால் நகர்ந்தாலே முன் பாரம் சரியாக இருக்கும்,'' என்றாள் வசந்தி.

இப்படியே இருவரும் தகராறு செய்து கொண்டே பின்னால் நகர்ந்தனர். அதனால் வண்டி தூக்கப்பட்டுக் கவிழ்ந்து விழுந்தது. இருவரும் அருகே இருந்த தண்ணீர்க் குட்டை ஒன்றில் தூக்கி எறியப்பட்டனர்.

எப்படியோ அக்குட்டையிலிருந்து எழுந்து வந்து, அருகே இருந்த ஒரு மரத்தின் கீழே முக்கி முனகிக் கொண்டு உட்கார்ந்தனர். கால் மணி நேரம் சென்றது. மரகதம் வண்டிக்காரனை கூப்பிட்டு, தன் மகனின் முகவரியைக் கூறி அவனை அழைத்து வரச் சொன்னாள்.

சற்று நேரத்தில், வேதப்பனும் வந்தான். அவனைக் கண்டதுமே மரகதம், ""பார்த்தாயா வேதா என் நிலைமையை! எல்லாம் இவளால் வந்தது. எதற்கும் எடுத்தாலும் என்னுடன் போட்டி. வண்டியிலும் போட்டி போட்டு, அதையே கவிழ்ந்து விட்டாள்,'' என்றாள்.

""வண்டிக்காரன் முன்பாரம் போதவில்லை என்று இவரைத் தான் முன்னால் நகர்ந்து வரச் சொன்னான். பேசாமல் அப்படிச் செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிராதே. என்னோடு போட்டி, போட்டு என்னை நகரச் சொல்லி இவர் பின்னுக்கு வந்ததால்தான் வண்டி கவிழ்ந்தது,'' என்றாள் வசந்தி.

""சரி சரி, ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்ட வேண்டாம். நடந்தது நடந்து விட்டது. எழுந்து வாருங்கள்,'' என்றான்.

""ஐயோ! என் இடுப்பு போய் விட்டதே. எப்படி எழுந்திருப்பது?'' என்றாள் மரகதம்.

""அப்படி என்ன இடுப்பு முறிந்து விட்டது? எழுந்திருங்கள். என்னால்தான் எழுந்திருக்க முடியாது. கால் சுளுக்கிக் கொண்டு விட்டது,'' என்றாள் வசந்தி.

""சுளுக்குப் பிடிப்பதில் கூடப் போட்டியா? உம். எழுந்திருந்து நடந்து வாருங்கள்,'' என்றான் வேதப்பன்.

""சரி, ஒரு வண்டியைக் கொண்டு வா. நம் வீட்டிற்கு போகலாம்,'' என்றாள் மரகதம்.

""நம் வீட்டிற்கா? அங்கே என்ன இருக்கிறது?'' என்றான்.

""ஏன்? என் நகை நட்டு பட்டுப் புடவை எல்லாம் பீரோவில் இருக்கிறதே, இதோ பீரோ சாவி,'' என்றாள் மரகதம்.

""மாமியாரும், மருமகளும் கிளம்பும் அவசரத்தில் வீட்டு வாசல் கதவைக் கூட மூடாமல் வந்து விட்டீர்கள். அதனால் திருடர்கள் வீட்டிற்குள் புகுந்து பெட்டி, பீரோ எல்லாவற்றையும் உடைத்துப் பணம் காசு, நகை, பாத்திரம் எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள்,'' என்றான்.

""ஏய் வசந்தி! வாசல் கதவை ஏன் நீ சாத்தவில்லை?'' என்று கேட்டாள் மரகதம்.

""நானும் அதைத்தான் கேட்கிறேன். வரும் போது நீங்கள் ஏன் சாத்திக் கொண்டு வரவில்லை?'' என்றாள் வசந்தி.

""போதும் போட்டா போட்டி! முட்டாள் தனமாக நடந்தீர்கள். அதனால் எல்லாமே போய் விட்டது. இனிமேலாவது போட்டி போடாமல் இருங்கள்,'' என்றான்.

""நீ சொல்வது சரிதான். என் முட்டாள் தனத்தால்தான் எல்லாம் போய் விட்டது,'' என்றாள் மரகதம்.

கண்ணீர் வடித்தவாறே வசந்தி, ""இல்லை இல்லை. என் முட்டாள்தனத்தால்தான் எல்லாம் போயிற்று. நான் கதவைச் சாத்திப் பூட்டிக் கொண்டு வந்திருந்தால் எதுவும் போயிருக்காதே,'' என்றாள்.

""போதும். இந்த போட்டா போட்டியால் என்ன நடந்தது பார்த்தீர்களா? நாம் சேர்த்து வைத்த பணம், பாத்திரம் எல்லாம் போயிற்று,'' என்றான்.

மாமியாரும் மருமகளும், ""இனி மேல் போட்டி போட மாட்டோம். இப்பதான் எங்களுக்கு புத்தி வந்தது. வீட்டிற்குப் போய் புதிதாக எல்லாம் வாங்குவோம். இனிமேலா வது எதற்கும் போட்டி போடாமலும், வீண் செலவு செய்யாமலும் புத்திசாலித்தனத் தோடு இருந்து வருவோம். போனது போகட்டும்,'' என்றனர்.

""பேஷ். புத்தி வந்ததா! இனி போட்டி போட மாட்டீர்களே? ரொம்ப சரி. நம் வீட்டில் திருடர்கள் புகவும் இல்லை; எதுவும் போய் விடவும் இல்லை. உங்களுக்கு புத்தி புகட்டவே இப்படி ஒரு பொய் சொன்னேன். அது நல்ல பலனைக் கொடுத்தது,'' என்றான் சிரித்தவாறே.

சிறுவர் மலர்



நீயா நானா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 13, 2012 8:44 am

ஹா ஹா. எதிலும் போட்டியாக இருந்தால் இப்படித்தான் ஆகும். நல்ல விழிப்புணர்வு கதை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 13, 2012 11:27 am

மாமியார் மருமகள் சண்டை எத்தனை வருடங்கள் ஆனாலும் நிக்காது போலிருக்கு..!
பகிர்ர்வுக்கு நன்றி அண்ணா..!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக