புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
4 Posts - 4%
prajai
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
2 Posts - 2%
Rutu
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
1 Post - 1%
Pradepa
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
28 Posts - 3%
sugumaran
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
18 Posts - 2%
prajai
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
5 Posts - 0%
Rutu
அத்திப்பழத்தின் மகிமை Poll_c10அத்திப்பழத்தின் மகிமை Poll_m10அத்திப்பழத்தின் மகிமை Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்திப்பழத்தின் மகிமை


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 02, 2009 3:37 pm

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள்.
இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.



நான் புத்தகத்தில் படித்தது...

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 02, 2009 5:42 pm

அத்தி பழமே எப்படி இருக்குமென்று தெரியலையே..என்ன இது..சொல்லப் பட்டு இருக்கும் விசயங்களை நாம எப்படி பண்ணி பார்கின்றது..எல்லாமே புதிய பழங்கள்,..



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 03, 2009 9:12 am

சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம் (FICUS GLOMERATA)
அத்தி
FICUS GLOMERATA, ROXB; MORACEAE

சுந்தரர் பாடிய தேவாரம் - பாடல் :
மற்றுத் தேவரை நினைந்துனை
மறவேன் நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன்
பெற்றிருந்து பெறாதொழிகின்ற
பேதை யேன்பிழைத் திட்டதை அறியேன்
முற்றும் நீயெனை முனிந்திட
அடியேன் கடவ தென்னுனை நான்மற வேனேல்
உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய்
ஒற்றி யூரெனும் ஊருறைவானே.

சுக்கிர பகவான் வெள்ளிக் கிரகத்துக்கு வணங்கப்படும் மரம் “அத்தி”. நவக்கிரகங்களில் வெள்ளிக்கிரகம். இதற்கு சுக்கிர பகவான் என்றும், சுகீர்த்திதேவி பெண் தெய்வத்துடன், கருட வாகனத்தில், சந்தன நிற ஆடை அணிவித்து, மொச்சை தானியத்துடன், நவரத்தினத்தில் நீலக்கல் அணிவித்து, கிழக்கு திசையில் ரிஷபம், துலாம் ராசியில் அத்தி மரத்தின் அருகில் பூஜை செய்யப்படுவதை நவக்கிரக ஆலயத்தில் காணலாம்.

அத்தி மரம் அனைத்து மதத்தினருக்கும் தெய்வீக மரமாக அமைந்து இருக்கின்றது. திருக்குரானில் அல்லா அத்தி மரத்தின் மீது சத்தியம் செய்து சொல்கிறான். அல்லாவின் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தி பழத்தை சொர்க்கத்தின் பழம் என்றும், இது மூலம், மூட்டு வலிக்கு நல்ல மருந்து என்றும் அறிவித்திருக்கிறார். பைபிளிலும், இஸ்லாமிய நூல்களிலும் ஆதி மனிதர் ஹசரத் ஹவ்வா (ஏவாள்) ஆகியோர் சொர்க்கத்தில் அத்திப் பழத்தைப் பறித்து பழத்தைச் சாப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலோகத்தில் இருந்து பூமிக்கு வந்தவர்கள், தங்களின் உடலை மறைக்க, அத்திமர இலைகளை ஆடையாகப் பயன்படுத்தினார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்து மதத்தில் அத்தி மரத்தைக் கடவுளுடன் சேர்த்து பூஜை செய்யப்படுவதை இன்றும் காண முடிகிறது. வெள்ளிக் கிரகத்தை வணங்க அத்தி மரத்தையும் பயன்படுத்துகின்றனார்கள்.

வேலூர் அருகே உள்ள பொன்னை, விநாயகபுரத்தில் அருள்மிகு ஸ்ரீநவக்கிரக கோட்டை ஆலயம் அமைந்து உள்ளது. இங்கு நவரக்கிரங்களுக்கு, ஒன்பது வகையான கோயில்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. இங்கு வெள்ளி கிரகத்தை வணங்குவதற்காக அத்தி மரமும் வைக்கப்பட்டுள்ளது. எனவே அத்திமரம் தெய்வீக மரம் என்பதிலும், நல்ல பயன் உள்ள மரம் என்பதிலும் சந்தேகம் இல்லை.

அத்தி மரம் பல வகைகளில் உள்ளது. இதில் நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி வகைகளும், ஆங்கிலத்தில் (GULAR FIG. COUNTRY FIG. FICUS GLOMERATA, CLUSTER FIG) ஆகிய வகைகளும் கோவில்களில் அர்ச்சனைக்கு வைக்கப்படும் அத்தி மரமாகும்.

பகவான் தத்தாத்திரேயர் அத்தி மரத்திலே அமர்ந்திருக்கிறார் என குரு சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அசுரர்களின் குருவான சக்கிராச்சாரியாரின் மறுபிறவியே அத்தி மரம் என சதுர்மாஸ்ய மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.

புனிதம் என்றால் மாசு மருவில்லாதது என்பது பொருள். இத்தகைய மகிமையை உடைய அத்தி, புராணக்கதையிலும் இடம் பெற்றிருப்பது நமக்க வியப்பை அளிக்கிறது. அந்த வியப்பு என்ன?

நரசிம்ம அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு, ஹிரண்யகசிப்புவைக் கிழித்தக் கொன்றபின், அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டார் என்றும் ஒரு நம்பிக்ககை நிலவி வருகிறது.

ஒவ்வொரு பொருளைப் பார்த்தவுடன் இது பயன்பட்டால் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை நம் எல்லோர் இடத்திலும் எழும். அதேபோல்தான் குஜராத் மக்களும் அத்தியைப் பார்த்து நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அந்த நம்பிக்கை என்னவென்றால் ஒவ்வொரு அத்தி மரத்தினடியிலும் ஒரு நீரோடை மறைந்து ஓடுகிறது என்ற நம்பிக்கை கொண்டுள்ளார்க்ள. இந்த விபரம் பரோடா கெஜட்டில் உள்ளது.

அத்தி நடுத்தர மரமாகும். இது சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளரும். மரப்பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும். இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். முட்டை வடிவில் சற்று நீளமாக இருக்கும். காய்கள் தண்டிலும், கிளைகளிலும். அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். ரஸகுல்லா அளவில் உருண்டையாக லேசான பச்சை நிறம் கொண்டதாக இருக்கும். காய் பழுத்தபின் கொய்யாப்பழம் போல் லேசான மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். பழுத்ததும் கீழே உதிர்ந்து விழுந்து விடும்.

நல்ல மணத்துடன் இருந்தாலும் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.

அத்தி மரததின் மருத்துவ குணங்கள்

* அத்தி மரத்தின் இலை, பால், பழம், அனைத்தும் மருந்தாகப் பயன் அளிக்கின்றன.

* இலைகளை உலரவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதனைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

* உடலின் எந்தத் துவாரத்தில் இருந்தும் இரத்தம் வெளியேறினால் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் கணமாக்க, இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.

* மரத்தின் பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 03, 2009 9:15 am

* மரப்பட்டையை இடித்து, பசுவின் மோரில் உலர வைத்து, அதைக் குடித்தால் பெண்களுக்கு அடிக்கடி உண்டாகும் பெரும்பாடு, மாதவிலக்கு கட்டுப்படும்.

* அத்திப்பழம், அத்திப்பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிடலாம். இது மூலம், இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, வெள்ளைப் பாடு, வாதநோய்கள், மூட்டுவலி, சர்க்கரை நோய் தொண்டைப் புண், வாய்ப்புண்ணுக்கு நல்ல மருந்தாகும். இது தசைகளை இறுக்கும் குணம் படைத்தவை. பழங்களை இடித்து, அதன் சாற்றைச் சாப்பிடுவதால் சிறுநீரக நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன.

* அத்திக்கள் அத்திமர வேரில் இருந்து எடுக்கப்படுகிறது. இது சர்க்கரை நோய், மூலநோயைக் குணப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

பழங்களைப் பயன்படுத்தும் முறை

மலைவாழ் மக்கள் வறட்சிக் காலத்தில் இந்தப் பழங்களையே உணவாக உண்ணுகின்றனர். பழங்களை உலர்த்தி பவுடராக்கி, பால் மற்றும் சர்க்கரையுடன் கலந்து சாப்பிடலாம். பழங்களை வறுத்து, பவுடராக்கி காலை டிபனாக சாப்பிடலாம். பிஞ்சுக் காய்களைச் சமைத்தும் சாப்பிடலாம்.

கால்நடைகள்

இதன் இலைகளை ஆடு, மாடுகளுக்குத் தீவனமாகத் தரலாம். கால்நடைகளுக்கு வெட்டைநோய் வந்தால் வெங்காயம், சீரகம், தென்னையின் இளம்பாளை ஆகியவற்றுடன் அத்தி மரப்பட்டையைச் சேர்த்து அரைத்து வினிகருடன் (காடி) கலந்து சாப்பிட வைக்கலாம்.

விஞ்ஞான ஆய்வு
விஞ்ஞானிகள் பழங்களை ஆய்வு செய்து பார்த்ததில் கீழகாணும் சத்துக்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

ஈரம் 13.6%
புரத வகைகள் 7.4%
கொழுப்பு 5.6%
மாவுப்பொருள் 49.00%
வர்ணப் பொருள் 8.5%
நார்ப்பொருள் 17.9%
சாம்பல் 6.5%
இதில் சிலிகா 0.24%
பாஸ்பாரிக் அமிலம் 0.91% ஆகியவை அடங்கி உள்ளன.

இலைகளிலும், பழங்களிலும் குளுயாக்கல், தாவரஸ் பீரால்கள், ஹைட்ரோகார்பன்கள், ஸ்பீரால், ப்ரைடெலின் ஆகிய வேதியியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனில் கூறப்படும் அத்தி மரம் சற்று வித்தியாசமாக இருக்கும். இந்தப் பழத்தை உலர வைத்து நாட்டு மருந்து கடைகளில் விற்பார்கள். வடநாட்டில் புதிய பழங்கள் விற்பார்கள். இதை அப்படியே சாப்பிடுவார்கள். இதற்கு “F.G.S” அத்திப்பழம் என்பார்க்ள. அரபு நாட்டில் இந்த வகை மரங்கள்தான் அதிக அளவில் காணப்படுகின்றன. இதுவும் கோவில்களில் காணப்படும் அத்தி மரத்தின் வகையைச் சேர்ந்ததாகும்.

நபி பெருமானாரும் அத்தி மரமும்

ஒரு நாள் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்பு தட்டு நிறைய அன்ஜீர் பழம் வந்தது. அதைப் சாப்பிடும்போது “சொர்க்கத்திலிருந்து பூமிக்கு ஏதாவது ஒரு பழம் வருகின்றது என்றால் அது அத்திப்பழமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அத்திப்பழம் சொர்க்கத்தின் பழம் என்பதில் ச்நதேகம் இல்லை. இதைச் சாப்பிட்டால் மூலநோய், மூட்டு வலிகள் குணமாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக (ஹஜ்ரத் அபு தர்தாரலி) அவர்கள் கூறுகிறார். (ஆதாரம் இப்னே அபுபக்கர் அல் ஜவ்ஸி எழுதிய, அல்திப்புல் நபுவி புத்தகம்).

அன்ஜீர் பழம் (அத்திப்பழம்)

ஹஜ்ரத் ஆதம், ஹஜ்ரத் ஹவ்வா இருவரையும் இறைவன் சொர்க்கத்திலிருந்து நிர்வாணமாகப் பூமிக்கு வெளியேற்றியபோது தங்களின் உடலை மறைக்க, இருவரும் அத்தி மர இலைகளைத்தான் பயன்படுத்தினார்கள் என்று இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் நம்புகின்றனர். “தவ்ராத்” என்ற இறை வேதத்திலும் அத்திப்பழத்தின் பயன் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத் தந்து, கரும் பித்தத்தை வயிர்வை மூலம் வெளியேற்றி, ஈரல், நுரையீரல்லிலுள்ள தடுப்புக்களையும் நீக்குகிறது. அத்திப்பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றப் போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய் துர்நாற்றம் நீங்குவதுடன் தலை மயிர் நீளமாக வளர்கிறது என்றும் இமாம் அலி மூஸாரிஸத் (ரலி) கூறியுள்ளார்கள். அத்திப்பழம் கை மூட்டுகளில் வலி வராமல் தடுக்கின்றது என்ற ஹதீஸை அபு நயீம் அவர்கள் கூறுகிறார்கள்.

யுனானி வைத்தியம்

இறைவனும், இறைதூதர் எம்பொருமானார் (ஸல்) அவர்களும் அருளிய யுனானி மருத்துவர்கள் பல நூற்றாண்டு காலமாகப் பல தீராத வியாதிகளைக் குணமாக்க லேகியமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

பயன்படுத்தும் முறை

* தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

* மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.

* நாள்பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

* போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க, அத்திப்பழங்களைக் காடியில் (வினிகர்) ஒரு வாரம் வரை ஊறவைத்து, அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.

விஞ்ஞான ஆய்வு

இப்பழத்தை மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரைச் சத்து, கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் இருமபுச்சத்து அதிகளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப் பழத்தில் இந்தச் சத்துக்கள் நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகளவில் உள்ளன. வைட்டமின் பி.டி ஆகியவையும் குைற்நத அளவில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்திப்பழத்தைப் பொதுவான உடல் பலவீனத்திலும், ஜுரத்திலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப் பழங்கள் யுனானி நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. இதற்கச் “சீமை அத்திப்பழம்” என்று பெயர். இதுதான் இறைவனும், அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்களும் கூறியுள்ள அத்திப்பழங்கள் ஆகும். அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேவையான அளவிற்கு நம் நாட்டில் இவை “சீமை அத்திப்பழம்” என்ற பெயரில் எளிதில் கிடைக்கின்றது.

காட்டு அத்திப்பழம்

நம் நாட்டில் “காட்டு அத்திப்பழம்” என்ற பெயரிலும், “காற்றாடிப்பழம்” என்ற பெயரிலும் ஒரு வகையான அத்திப்பழம் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. இது வெண்குஷ்டத்தைக் குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தைத தினமம் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். இதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதைத் தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படும் “சபூப் பர்ஸ்” என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.

நபி பெருமானர் (ஸல்) அவர்கள் அடையாளம் காட்டி உள்ள அத்தி மரம் FICUS CARCA, FIG TREE, SEEMAI ATHI, ANJEER என்று அழைக்கப்படுகிறது.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
திருவொற்றியூர், திருக்கானாட்டு முள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் 2வது தலவிருட்சமாக அத்திமரம் வணங்கப்படுகிறது.

இந்து சாஸ்திரப்படி சுக்கிர பகவான் (VENUS) பற்றிய குறிப்புகள்
கிரகப் பெயர் - சுக்கிரபகவான் (வெள்ளி)
அம்மன் - சுகீர்த்திதேவி களத்ரகாரகன் (கணவன், மனைவி ஒற்றுமை) சுகம், வாகனம், சகல ஐஸ்வர்யம்
ராசி - ரிஷபம், துலாம், கிருத்திகை, ரோகிணி, மிருக சீரிஷம், சித்திரை, சுவாதி, விசாகம்.

உலோகம் - வெள்ளி
அதிதேவதை - லஷ்மி
ப்ரீத்தி தேவதை - இந்திரன்
நவக்கிரகத்தில் - கிழக்குமுகம் (வெள்ளிக்கிழமை)
வாகனம் - கருடன்
நிறம் - சந்தனம்
தானியம் - மொச்சை
நவரத்தினம் - வைரம்
விருட்சம் - அத்தி
திக்கு - கிழக்கு
ராசி - ரிஷபம் துலாம்

சங்க இலக்கியம்

சங்க இலக்கியத்தில் ‘அதவம்’ என்றும் கூறப்படும் இச்சிறுமரம், பூத்துக் காய்க்குமாயினும் மலர்கள் வெளிப்படையாகத் தெரியாது. ‘அத்தி பூத்தாற்போல’ என்னும் பழமொழியினாலேயே அத்தி பூக்கும் என்பதாயிற்று.

இருப்பினும், பிற்கால இலக்கியங்கள் கூறும் “பூவாதே காய்க்கும் மரங்களும் உளவே’ என்பதற்கு எடுத்துக்காட்டு “அத்தி, ஆல்” முதலிய மரங்கள் ஆகும் என்பர். உணவாகக் கொள்ளப்படும் அத்திக்காயின் பிஞ்சு, முட்டை வடிவானது. இதற்குள்ளே அத்திப்பூக்கள் நிறைந்திருக்கும். இப்பூக்களைத் தன்னகத்தே கொண்டிருந்தலின் அத்திப்பிஞ்சு - கோளி எனப்படும் தாவரவியல் இதனை ‘ரிசப்டகிள்’ என்று கூறுவர்.
அத்திக்காயின் உள்ள 4 வகையான பூக்கள் உள்ளன. ஆண் பூ, பெண் பூ, மலட்டுப் பூ என்பன. மலட்டுப்பூக்களில் ஆண் மலட்டுப்பூவும், பெண் மலட்டுப் பூவும் ‘ஃபைகஸ் காரிக்கா’ எனும் சிற்றினத்தில் காணப்படுகிறது.

“அதலத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பழற் தூங்க” என் நற்றிணையில் காணலாம்.

அத்திமரம் ஆற்றங்கரையினில் வளரும். இதன் கிளைகள் வெண்ணிறமானவை. இதன் கனி மிக மென்மையானது என்றும் நண்டு மிதித்த இதன் கனி குழையும் என்றும் கூறும் குறுந்தொகை.

“ஆற்றயல் எழுந்து வெண் கோட்தவத்து
எழுகுளிறு மிதித்த ஒரு பழம் போல” என குறுந்தொகை பாடலில் காணலாம். இதன் பேரினத்தில் எறத்தாழ 700 சிற்றினங்கள் உலகில் உள்ளன என்பர். தமிழ் நாட்டில் 27 சிற்றினங்கள் உள்ளன எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றுள் பெருமரங்களும், கொடியும் உள்ளன என்று சிறப்பு.

சுக்கிரன்

மாயவரத்திலிருந்து திருவையாறு செல்லும் பாதையில் 25கி.மீ தொலைவில் உள்ளது கஞ்சனூர். இது சுக்கிரனுக்கு உரிய தலமாகும். சூரியனார் கோவிலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது 64 கலைகளுக்கும் அதிபதி, காதல், சுகபோகம் இவற்றின் அதிபதி. வாகனங்களுக்கும் அதிபதி, ஜனன உறுப்புக்களைக் காப்பவர். சிற்றின்பத்தை நுகர வைப்பவர்.

உடலில் வீரியம் அணிகலன்கள், ஆபரணம் ஆகியவை இவரது அருள் இருந்தால் மட்டுமே சேரும்.

சுக்கிரபகவான் நவக்கிரகங்களுள் 6-ஆம் இடத்தைப் பெறுபவர்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 03, 2009 9:20 am

நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - அத்திமரம்



அத்திப்பழத்தின் மகிமை 13treegod

மரங்களில் திருக்குர் ஆன், பைபிள், வேதங்கள் ஆகிய மூன்றிலும் இடம் பெற்ற ஒரே மரம் அத்தியாகும். இந்த மரம் வெள்ளி கிரகத்துடன் தொடர்பு கொண்டது. வெள்ளிக்கிழமை அன்று வெள்ளி கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் காணப்படுகிறது.





இந்த கிரகத்தின் நல்ல மின்காந்த கதிர்வீச்சுகள் அதிக அளவில் வெளியேறுகிறது. அதனால்தான், வெள்ளி கிரகத்திலிருந்து வெள்ளிக்கிழமை பிறந்தது. இந்த நாள் அன்று முஸ்லீம்கள் விசேஷ தொழுகை நடத்துவார்கள். கிறிஸ்தவர்களுக்கு குட் ஃபிரைடே என்கிற புனித வெள்ளிக்கிழமை விரதம் இருந்து விசேஷ பூஜைகளும் செய்வார்கள்.





இந்தக் கிரகம் மனித உடலில் கழுத்து பாகத்தை மிகவும் பாதிக்கச் செய்கிறது. மலச்சிக்கல், வீக்கம், சிறுநீரகக் கோளாறுகள், குடல்புழுக்கள், வெள்ளி கிரகத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால்தான் உருவாகின்றன.



மனிதனுக்குப் பல வகையான நோய்கள் ஏற்படும் போது கிராம மக்கள் அவற்றில் சிலவற்றை வெள்ளி தோஷம் என்பார்கள். அதாவது வெள்ளி கிரகத்தின் தீய கதிர்வீச்சுளால் ஏற்பட்ட நோய்கள் என்று பொருள் கூறுவர்.





அதற்காக இந்து சமுதாய மக்கள் நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று வெள்ளி கிரக விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகிலுள்ள அத்தி மரத்தையும் தொட்டு வணங்கிவிட்டு வெள்ளி கிரகத் தோஷத்தைக் கழிப்பார்கள். வெள்ளி கிரகத்தைச் சுக்கிர பகவான் என்றும் அழைக்கின்றனர்.





யுனானி மருத்துவர்கள் வெள்ளி கிரக தோஷத்தை நீக்குவதற்காக அத்தி மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். அத்தி மரத்தின் அடியில் அமரச் செய்வார்கள்.





அரை மணிநேரம் அத்தி மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கச் செய்வார்கள். இதனால் வெள்ளி கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் நமது உடலில் சென்று நல்ல உடல் நலனைத் தரும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்று ரெய்கி மருத்துவம் கூறுகிறது.





அத்தி மரம் வெள்ளி கிரகத்தின் நல்ல மின் கதிர்வீச்சுகளைத் தன் உடலில் உறிஞ்சி நிரப்பிக் கொள்கின்றது. அதுதான் அதனுடைய மருத்துவ குணமாக மாறுகிறது என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.





மருத்துவ குணம்;





அத்தி மரத்தின், இலை, பழம், பால் அனைத்தும் மருந்தாகப் பயன்படுகின்றன.





இலை:





அத்தி மரத்தின் இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் கட்டுப்படுகின்றன.





பட்டை:





அத்தி மரப்பட்டையை இரவில் உலர வைத்துக் காலையில் குடிநீராகச் செய்து குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவும் நீராகவும் பயன்படுத்தலாம்.





பழம்:





நபிபெருமானார் (ஸல்)அவர்கள் அத்திப்பழம், அத்திப் பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிட்டால் மூலம், ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு குணம் பெறும் என்று கூறியிருக்கின்றார்கள். மேலும் அத்திப் பழம் சாப்பிடுவதால் சீத பேதி, வெள்ளைப்பாடு, சர்க்கரை நோய், தொண்டைப்புண், வாய்ப்புண், வாத நோய்கள், மூட்டு வலி போன்ற நோய்களும் குணம் பெறுகின்றன.





பழங்களை இடித்து அதன் சாற்றைக் குடித்து வந்தால் சிறுநீரக நோய்கள் கட்டுப்படும். நல்ல மணத்துடன் இருந்தாலும் அத்திப் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள் புழுக்கள் இருக்கும். பொதுவாக, பதப்படுத்தாமல் இதை உண்ண முடியாது.





தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் வளர்ச்சியடைந்து பருமன் ஆகும். இரவில் 5 அத்திப் பழங்களைச் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும். அத்திப் பழம் பதப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் "சீமை அத்திப் பழம்' என்ற பெயரில் கிடைக்கிறது. இதனைக் கொண்டு யுனானி மருத்துவர்கள் பல வகையான மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.





பொதுவாக அத்தி மரம் ரிஷபம், துலாம் ராசி கொண்டவர்களுக்கும், கிருத்திகை, ரோகிணி, சித்திரை, விசாகம் ஆகிய நட்சத்திரம் கொண்டவர்களுக்கும், வெள்ளிக்கிழமை மற்றும் 21 ஏப்ரல் முதல் 20 மே மாதம் வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கும் உகந்த மரமாகும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் விளக்குகிறது.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 03, 2009 10:57 am

அத்திப்பழத்தில் இத்தனை சிறப்புக்கள் இருக்கிறதா! நல்ல தகவல், நன்றி, தாமு



அத்திப்பழத்தின் மகிமை Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 03, 2009 11:12 am

அருமையான தகவல் தாமு , வாழ்த்துக்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 03, 2009 11:23 am

அத்திப்பழம்:

அத்திப்பழத்தின் மகிமை Tbltnsplnews_71793329716

அத்திப்பழத்தின் மகிமை S-02



அத்திப்பழத்தின் மகிமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 03, 2009 12:33 pm

அத்திப்பழத்தின் மகிமை 678642

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 02, 2011 8:23 pm

தங்கத்திற்கு ஒப்பான அத்திப்பழத்திற்குண்டான அத்தனை அருமையான பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள்......



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அத்திப்பழத்தின் மகிமை 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக