புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கீதை துளிகள்  - Page 4 Poll_c10கீதை துளிகள்  - Page 4 Poll_m10கீதை துளிகள்  - Page 4 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கீதை துளிகள்  - Page 4 Poll_c10கீதை துளிகள்  - Page 4 Poll_m10கீதை துளிகள்  - Page 4 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
கீதை துளிகள்  - Page 4 Poll_c10கீதை துளிகள்  - Page 4 Poll_m10கீதை துளிகள்  - Page 4 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கீதை துளிகள்  - Page 4 Poll_c10கீதை துளிகள்  - Page 4 Poll_m10கீதை துளிகள்  - Page 4 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கீதை துளிகள்  - Page 4 Poll_c10கீதை துளிகள்  - Page 4 Poll_m10கீதை துளிகள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கீதை துளிகள்  - Page 4 Poll_c10கீதை துளிகள்  - Page 4 Poll_m10கீதை துளிகள்  - Page 4 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கீதை துளிகள்  - Page 4 Poll_c10கீதை துளிகள்  - Page 4 Poll_m10கீதை துளிகள்  - Page 4 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
கீதை துளிகள்  - Page 4 Poll_c10கீதை துளிகள்  - Page 4 Poll_m10கீதை துளிகள்  - Page 4 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கீதை துளிகள்  - Page 4 Poll_c10கீதை துளிகள்  - Page 4 Poll_m10கீதை துளிகள்  - Page 4 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கீதை துளிகள்  - Page 4 Poll_c10கீதை துளிகள்  - Page 4 Poll_m10கீதை துளிகள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதை துளிகள்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Mar 07, 2012 11:40 pm

First topic message reminder :

கீதை 4:38 உயிரோட்டமான--நித்தமும் வளர்கிற அறிவிற்கு ஈடுஇணையானதும் அதைப்போல தூய்மையானதும் இந்த உலகில் ஏதுமில்லை! அது எல்லா யோகங்களின் முற்றிய பலனால் விளைவது!! யார் ஆன்மீக பயிற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளுகிராறோ அவர் தனக்குள்ளாகவே இந்த அறிவை ஏற்ற காலத்தில் துய்க்க தொட்ங்குவார்!!!

கீதை 4:39 இந்த உயிரோட்டமான அறிவில் லயித்த பக்தன் தனது புலண்களை அடக்குவதில் வெற்றி பெற்று ஞானம் சித்திக்கபெறுகிறான்! ஞானம் சித்திக்க பெற்று உண்ணதமான தெய்வீக சமாதானம் நிறம்பியவனாய் மாறுகிறான்!!!

கீதை 4:40 அவபக்தியுள்ளவர்களும் அறியாமையில் உழல்வோரும் கடவுளால் அந்தந்த காலத்திற்கு வெளிப்படுத்திய வெளிப்படுத்த போகும் வேதங்களில் சந்தேகம் கொள்ளுவதால் இந்த இறைஉணர்வை அடையமாட்டார்கள்!! அவர்கள் தங்கள் ஆன்மீகநிலையிலிருந்து மேலும் வீழ்சியடைந்து இம்மையிலும் மறுமையிலும் ஆனந்தத்தை இழப்பது திண்ணம்!!!

கீதை 4:41 யார் இந்த ஆன்மீக பயிற்சியிலும் பலனில் பற்று வைக்காத கர்மயோகத்திலும் அப்பியாசிக்கிராறோ அவரது சந்தேகங்கள் உயிரோட்டமான அறிவால் அழிக்கபடும்!! செயலின் விளைவுகளால் பாதிக்க படாத மன நிலையை எட்டி தன்னில்தானே நிலைத்திருப்பார்!!!

கீதை 4:42 ஆகவே அறியாமையினால் உனது மனதில் எழும் சந்தேகங்களை முற்றறிவால் துடைத்தெறிவாயாக!!! யோகங்களால் உன்னை பலப்படித்திக்கொண்டவனாய் போரிடுவாயாக!!!




கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Jun 06, 2012 8:04 pm

ஆத்தும விடுதலை !!

கீதை 2:54 அர்ச்சுணன் கேட்கிறான் : கிருஷ்ணா ! உன்னதமான ஞானமய கோஷத்தை எய்தியவன் அறிகுறிகள் எப்படி இருக்கும் ? அவன் பேச்சும் பாணியும் எப்படி இருக்கும் ? அவன் இருப்பும் அசைவும் எப்படி இருக்கும் ?

கீதை 2:55 உன்னதமான கடவுளின் தூதர் கூறினார் : பார்த்தா ! மனதை மயக்கும் மாயைகளினால் எழும் புலனின்பம் தொடர்பான எல்லா இச்சைகளையும் கைவிடுகிற பயிற்சியால் மனம் தூய்மையடைந்து கொண்டே இருக்கிறவன் தன் ஆத்துமாவில் பூரணமெய்தி தன்னில்தானே திருப்தியடைவான் ! அவனே உன்னதமான ஞானமய கோஷத்தை எய்தியவன் !!

கீதை 2:56 உலகில் மூவகை கோஷங்களின் முரண்பாடுகளால் விளைகின்ற துயரங்களின் மத்தியிலும் பாதிப்படையாத மன நிலையும் ; மகிழ்ச்சியில் துள்ளாத மன நிலையும் ; எதன் மீதும் பற்று ,பயம் ,கோபம் அற்ற மன நிலையும் எய்தியவனே நிலைத்த மனதை அடைந்த மகரிஷி எனப்படுவான் !!

கீதை 2:57 இந்த லவ்கீக உலகில் நன்மையோ தீமையோ எது நேரினும் பாதிப்படையாதவன் எவனோ ; வெற்றியில் பெருமைபாராட்டாதவனும் தோல்வியில் வெம்பி வெதும்பாதவனும் எவனோ அவனே பூரண ஞானத்தில் நிலைத்தவனாவான் !!

கீதை 2:58 ஆமை தன் அவயங்களை ஓட்டுக்குள் இழுத்து கொள்வதுபோல புலன்களை ஈர்க்கும் புற உலகினின்று புலன்களை விடுவித்து கொள்ளும் பக்குவத்தை எய்தியவன் எவனோ ; அவனே பூரண ஞானத்தை எய்தியவன் !!

கீதை 2:59 புலன் இச்சை புலன்களின் இயல்பாய் இருந்தாலும் ; உடலில் இலங்கும் ஆத்துமா புலனின்ப மயக்கத்திலிருந்து தன்னை விடுவிக்கும் இடையறாத பயிற்சியால் ஆத்துமபூரணம் என்ற தனது உன்னத நிலையை உணர்ந்து விழிப்படையும் ! ஆத்தும பூரணம் என்ற உன்னத சுவையை உணரஉணர கீழான புலனின்ப சுவையிலிருந்து விடுதலை அடையும் !!

http://godsprophetcenter.com/index_5.html



கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jun 08, 2012 6:52 pm

கீதை 2:60 அர்ச்சுனா ! புலன்கள் வலிமையும் சக்தியும் மிக்கவை ! தன்னை உணர்கிற பக்குவத்துடன் புலன்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளவரைக்கூட புலன்கள் மேற்கொண்டு தங்கள் பின்னே இழுத்து செல்கின்றன !!

கீதை 2:61 யார் தன் புலன்களின் ஆதிக்கத்தை ஒடுக்கி ; அவைகளை முழுக்கட்டுப்பாட்டில் அமிழ்த்தி ; உள்ளுணர்வை கடவுளின் மீதே நிலைக்க செய்கிறானோ ; அவனே நிலைத்த அறிவுடையோன் எனப்படுவான் !!

கீதை 2:62 புலன்களை ஈர்க்கும் புறஉலக பொருட்களின் மீது ஆர்வம் கொள்வதால் ஒருவன் அவைகளின் மீது ஈடுபாட்டை உடையவனாகிறான் ! அந்த ஈடுபாட்டால் இச்சை வளர்கிறது ; அந்த இச்சை மூர்க்கத்தை உண்டாக்குகிறது !!

கீதை 2:63 அந்த மூர்க்கம் மனக்குழப்பத்தை உண்டாக்கி புத்தி பேதலிப்பில் போய் முடியும் ! புத்தி பேதலிப்பால் ஒருவன் அறிவுத்திறன் குறைந்து மழுங்கி மீண்டும் உலகமாயை என்னும் குட்டைக்குள் விழுந்து சகதியில் உழல்வான் !!

கீதை 2:64 ஆனால் யார் எல்லா வகை புலனிச்சைகளிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு ; விருப்புவெறுப்புகளை கடந்து ;ஆத்தும விடுதலைக்காக புலன்களை நெறிப்படுத்துகிறானோ அவனே உன்னதமான கடவுளின் கிருபைக்கு முழுப்பாத்திரனாவான் !!

கீதை 2:65 அவ்வாறு ஆத்துமதிருப்தியடைந்தவனை உலகியலின் மூவகை இயல்புகளால் உண்டாகும் துன்பங்கள் தொடர்ந்து பீடிக்க இயலாது ! ஆத்தும திருப்தியால் ஒருவன் விரைவில் பூரனஞானம் சித்திக்க பெறுவான் !!

கீதை 2:66 யார் உன்னதமான கடவுளோடு தன்னை தொடர்புபடுத்தி கொள்ளாதவனோ அவன் ஒருபோதும் உன்னதமான ஞானத்தையோ அல்லது நிலைத்த மனதையோ அடைவதில்லை ! இவைகளில்லாமல் ஒருவனுக்கு சாந்தி உண்டாவதில்லை ! சாந்தியில்லாமல் எந்த சந்தோசமும் நிலைப்பதில்லை !!

கீதை 2:67 வலிய காற்றில் படகானாது இழுத்து செல்லப்படுவது போல அலைபாய்கிற புலன்களில் ஒன்றிலாவது ஒருவனின் மனம் ஒத்திசைந்தால் போதும் அவனது அறிவுத்திறனை அது சிதறடித்து விடும் !!

கீதை 2:68 ஆகவே வலிமை உள்ளோனே ! யார் புலன்களை அவற்றின் நுகர்வுப்பொருட்களின் ஈர்ப்பினின்று விடுவித்து கொள்ள வல்லவனோ அவனே நிலைத்த மனதுடையவன் !!

கீதை 2:69 அத்தகைய சுய கட்டுப்பாடு உள்ளவன் தூங்காமல் தூங்கி விழித்திருக்கும் மெய்ஞானியாவான் ! அவன் உலகமே விழித்து பரபரப்பாய் இயங்கும் போதும் ஓய்ந்திருப்பவனைப்போலவும் ; உலகம் ஓய்ந்திருக்கும் போதும் விழித்திருப்பவனைப்போலவும் இருப்பான் !!

கீதை 2:70 ஆறுகள் எவ்வளவு தண்ணீரையும் கொண்டு வந்து சமுத்திரத்தில் கொட்டினாலும் அதனை கரைத்து சமுத்திரம் சமுத்திரமாகவே இருப்பது போல ; எவ்வளவு வந்து நிறைந்தாலும் நிறையாததைப்போலவே இருப்பதைப்போல மனதுள் வந்து மயக்கும் வண்ணவண்ண இச்சைகளால் --விதவித மாயைகளால் பாதிப்படையாமல் தன்னில்தானே நிலைத்திருப்பவன் எவனோ அவனே சாந்தி எய்துவான் ! யார் இச்சைகளை பூர்த்தி செய்ய விளைகிறானோ அவன் சாந்தி எய்துவதில்லை !!

கீதை 2:71 எல்லா வகையான புலனின்ப நாட்டங்களை வென்றவனும் ; ஆசைத்தளைகளை அறுத்து சுதந்திரத்தில் திளைப்பவனும் ; உடமைகளைக்குரித்த தற்பெருமையை அறவே விட்டவனும் ; தான் என்ற ஆணவத்தை துறந்தவனும் எவனோ அவனே தெய்வீக சமாதாணத்தை எட்டியவன் !!

கீதை 2:72 இதுவே ஆன்மீக வாழ்வு மற்றும் தெய்வீகத்தன்மை பெறுவதற்கான பாதையாகும் ! இந்நிலையை அடைந்தவன் ஒருபோதும் தடுமாறுவதில்லை ! தன் வாழ்வின் கடைசி மணித்துளியில் கூட ஒருவன் இந்நிலையை அடைந்தால் அவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது திண்ணம் !!

http://godsprophetcenter.com/index_5.html

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jul 15, 2012 11:48 am

தன்னை உணரும் ஆத்துமாவுக்கு மனமே சிறந்த நண்பனும் பகைஞனும் ஆகும் !!

கீதை 6:1 இறைதூதர் கிரிஸ்ணர் கூறினார் : பலன் விளைவில் பற்றற்றவனும் ; தன் மீது சுமரும் செயலுக்காக செயலை செய்கிறவனும் எவனோ அவனே மெய்யான யோகியும் வாழ்வை வேள்வியாக்கும் மெய்யான துறவியும் ஆவான் ! அப்படியில்லாமல் வேள்விக்கு தீ மூட்டுபவனும் செயலை தட்டிகழித்து சும்மா இருப்பவனும் ஒருபோதும் யோகியும் துறவியும் ஆகான் !!

கீதை 6:2 யோகங்களில் நிலைப்பவனும் தன்னை உண்ணதமானவரில் நிலைபெற செய்கிறவனும் மட்டுமே துறவில் நிலைத்தவனாவான் ! பாண்டுவின் மகனே ! புலன் இச்சைகளை திருப்திபடுத்த விளைவதை துறக்காதவன் ஒரு போதும் யோகத்தில் நிலைப்பதில்லை !!

கீதை 6:3 அஸ்ட்டாங்கம் எனப்படும் யோகத்தில் பயிற்சி செய்யும் புதியவர்களுக்கு ஜட செயல்பாடுகளை (சரியை &கிரியை) செய்வது ஒன்றே வழி முறையாகும் ! ஆனால் அதுவே யோக சாதனைகளில் முன்னேற்றமடைந்தவருக்கோ சரியை மற்றும் கிரியைகளை கடந்து விடுவதுவே வழிமுறையாகிறது !!

கீதை 6:4 லவ்கீக வாழ்வுக்கான அனைத்து இச்சைகளை துறந்தவரும் , புலன் இச்சைகளை திருப்தி செய்ய முயற்சிக்காதவரும் , பலன் விளைவுகளில் பற்றுகொண்டு பாடுபடாதவரும் யாரோ ; அவரே யோகத்தில் சாதனை செய்கிறவராவார் !!

கீதை 6:5 தனது மனத்தின் உதவி கொண்டு யோக சாதகன் தன்னைதானே விடுதலை ஆக்கிகொள்ளவேண்டுமே ஒழிய தன்னைதானே தரம்தாழ்த்திகொள்ளக்கூடாது ! தன்னை உணர்ந்து சீர்திருந்தும் ஆத்துமாவுக்கு அந்த மனமே சிறந்த நண்பனும் பகைஞனும் ஆகும் !!

கீதை 6:6 எவ்வாறெனில் யார் மனதை அடக்கி ஆள்பவனோ அவனுக்கு அந்த மனமே நண்பர்களுக்கெல்லாம் சிறந்த நண்பனாகும் ! மாறாக மனதிற்கு அடங்கியவனுக்கோ அந்த மனமே எதிரிகளை விட கேடு செய்வதாகும் !!

கீதை 6:7 யார் மனதை அடக்கி ஆள்பவனோ அவன் ஆத்துமசமநிலையை அடைகிறபடியால் அவனது ஆத்துமா (ஜீவாத்துமா) பரமாத்துமாவுடன் ஒத்திசைவை அடையும் ! அத்தகைய மனிதன் இன்பத்தையும் துன்பத்தையும் ; குளிரையும் வெப்பத்தையும் ; புகழையும் இழிவையும் ஒன்று போலவே கருதி இருமைகளை கடந்துவிடுவான் !!

கீதை 6:8 ஒரு மனிதன் முற்றறிவிலும் ; தன்னை உணர்வதிலும் முன்னேறி ஆத்துமதிருப்தி அடையும்போது அவன் பரிபூரணத்தை எட்டியவனாகவும் யோகியாகவும் பரிணாமம் அடைகிறான் ! அவன் சுய கட்டுப்பாட்டிலும் ஞானத்திலும் நிலைபெறுகிறான் ! அவன் சகலவற்றையும் --- பொன்னையும் மண்ணையும் ; கல்லையும் மாணிக்கத்தையும் ஒன்று போலவே பாவித்து இருமைகளை கடந்துவிடுவான் !!

கீதை 6:9 ஒரு மனிதன் அன்பால் நிறைந்த நலவிரும்பிகளையும் ; கீழ்படிதலுள்ள சீடர்களையும் ; தன்போக்கில் போபவர்களையும் ; நடுவில் நிற்பவர்களையும் ; சுற்றத்தாரையும் ; நண்பர்களையும் எதிரிகளையும் இறையச்சம் உள்ள சண்மார்க்கத்தினரையும் இறையச்சம் அற்ற துண்மார்க்கத்தினரையும் மனசமனிலையோடு பாவிப்பானானால் அவன் பரிபூரணத்தில் மென்மேலும் முன்னேறுகிறான் !!

கீதை 6:10 ஞானமார்க்கத்தான் என்பவன் உடலாலும் மனதாலும் உயிராலும் உண்ணதமான கடவுளோடு உறவில் திளைக்க வேண்டும் ! அவன் தனித்திருந்து விளித்திருந்து தனது மனதை அடக்கி ஆளவேண்டும் ! இச்சைகளிலிருந்தும் உடைமைகளை குறித்த பெறுமைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டே இருக்கவேண்டும் !!

http://godsprophetcenter.com/index_5.html

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக