புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_m10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10 
6 Posts - 67%
heezulia
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_m10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_m10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_m10மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை?


   
   

Page 2 of 2 Previous  1, 2

valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Tue Mar 06, 2012 9:15 pm

First topic message reminder :

மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Mayiladuthurai
‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்ற பழம் பெரும் பெருமையைப் பெற்றது மயிலாடுதுறை.

மாயூரம், மாயவரம் என்றெல்லாம் அழைக்கப்படும் மயிலாடுதுறை ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க பெரிய நகரம். ‘மாயூரம்’ வேதநாயகம் பிள்ளை, ‘கல்கி’ கிருஷ்ண்மூர்த்தி, டி. ராஜேந்தர், தி.மு.க. பொருளாளர் அன்பழகன், ‘அன்பாலயா’ பிரபாகரன் என்று பல்துறை பிரபலங்கள் வாழ்ந்த ஊர் இது.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் ‘மயிலாடுதுறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதே, ’மயிலாடுதுறையைத் தலைநகர் ஆக்கி புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்’ என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டம் மிகப் பெரியது. எனவே கடைக்கோடி வேதாரணியத்திலிருந்தோ, நாகையிலிருந்தோ மக்கள் மாவட்டத் தலைநகர் தஞ்சைக்கு வர வேண்டும் என்றால் பல மணி நேரங்கள் ஆகும் என்பதும் காரணம். துரதிர்ஷ்டவசமாக எம்.ஜி.ஆர். மறைந்தார். அதன் பிறகும் இதே கோரிக்கை பல முறை எழுப்பப்பட்டது.

1991-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு ஆட்சியைப் பிடித்த போது தஞ்சை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஆனால் நாகப்பட்டினத்துக்கு தான் மாவட்ட தலைநகர் அந்தஸ்த்து கிடைத்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஒழுங்கான இடம் கூட இல்லாத நிலையில் நாகப்பட்டினம் காயிதே மில்லத் மாவட்டம் உருவாக்கப்பட்டு மயிலாடுதுறை அதில் இணைக்கப்பட்டது.

பிறகு வந்த தி.மு.க. அரசின் போது மீண்டும் ஒரு முறை ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. தஞ்சை, நாகை, திருவாரூர் என மூன்று மாவட்டங்களானது.

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி பிறந்த ஊர் என்பதினால் திருவாரூருக்கு மாவட்டத் தலைநகர் அந்தஸ்து கிடைத்தது.

ஆக, இரண்டு பெரிய கட்சிகளுமே மயிலாடுதுறையை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தான் பார்த்து வருகின்றன.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் திமுக கோட்டையாக விளங்கியது மயிலாடுதுறை. பிறகு எம்.பி. ஆகட்டும், எம்.எல்.ஏ. ஆகட்டும் தோழமைக் கட்சிகளுக்கே கிடைக்கின்றன. காங்கிரஸ், பாஜக, தேமுதிக என எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கிடைக்கிறார்கள். இதுவும் மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

பேருந்து நிலையம் வேண்டும் என்ற இருபதாண்டு கோரிக்கையும் இது வரை சீண்டுவாரில்லை. மீட்டர் கேஜ் ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றியும் பல மாதங்கள் ரயில் விடாமல் தாமதம் செய்தார்கள். அப்போது பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்து ‘உடனடியாக ரயில் போக்குவரத்தைத் துவங்குங்கள்’ என்று உத்தரவு பெற்றார். அந்தக் கோபத்தினாலோ என்னவோ, இன்று வரை மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்குச் செல்லும் பகல் நேர ரயில் வண்டியில் ஸ்லீப்பர் கோச் டிக்கெட் தொகை கொடுத்து தான் மக்கள் பயணம் செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை. பழி வாங்குகிறதாம் ரயில்வே!

மாநில அரசிடமும் பலமுறை அனைத்து கோரிக்கைகளையும் வைத்தும் கண்டு கொள்ளவே இல்லை.

இப்போது அதே பாரதிய ஜனதா வழக்கறிஞர் ராஜேந்திரன், “மயிலாடுதுறையை மாவட்டத் தலைநகராக ஆக்க வேண்டும்” என்ற கோரிக்கையை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்காகத் தொடர்ந்துள்ளார். இன்றைக்கு இது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

கண்டிப்பாக நல்லதொரு தீர்ப்பு வரும் என்று நம்புகிறார்கள் மயிலாடுதுறைவாசிகள்.





உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை? - Page 2 Z4f515bfcc79f3

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 06, 2012 10:32 pm

கண்டிப்பாக நல்லதொரு தீர்ப்பு வரும் என்று நம்புவோம் ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 07, 2012 10:43 am

maniajith007 wrote:
valluvanraja wrote:அப்படியா ரொம்ப மகிழ்சி

எனக்கும் மகிழ்ச்சி நம்ம ஊர் காரர் இப்போ தெருக்காரர் ஆகியாச்சு சரி நண்பரே நாளை சந்திப்போம்
🐰

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 07, 2012 11:08 am

maniajith007 wrote:
valluvanraja wrote:அப்படியா ரொம்ப மகிழ்சி

எனக்கும் மகிழ்ச்சி நம்ம ஊர் காரர் இப்போ தெருக்காரர் ஆகியாச்சு சரி நண்பரே நாளை சந்திப்போம்
அண்ணே கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க,
கடன் கிடன் வாங்கி இருக்கப் போறீங்க?




அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 07, 2012 2:16 pm

கொலவெறி wrote:
maniajith007 wrote:
valluvanraja wrote:அப்படியா ரொம்ப மகிழ்சி

எனக்கும் மகிழ்ச்சி நம்ம ஊர் காரர் இப்போ தெருக்காரர் ஆகியாச்சு சரி நண்பரே நாளை சந்திப்போம்
அண்ணே கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க,
கடன் கிடன் வாங்கி இருக்கப் போறீங்க?

அதான் நான் நாளை பேசுவோம்னு எஸ்கேப் ஆயிட்டேன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக