புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10கலக்கல் கலாச்சாரம் ! Poll_m10கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10 
14 Posts - 70%
heezulia
கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10கலக்கல் கலாச்சாரம் ! Poll_m10கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10கலக்கல் கலாச்சாரம் ! Poll_m10கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10கலக்கல் கலாச்சாரம் ! Poll_m10கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10கலக்கல் கலாச்சாரம் ! Poll_m10கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10கலக்கல் கலாச்சாரம் ! Poll_m10கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10கலக்கல் கலாச்சாரம் ! Poll_m10கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10கலக்கல் கலாச்சாரம் ! Poll_m10கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10கலக்கல் கலாச்சாரம் ! Poll_m10கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10கலக்கல் கலாச்சாரம் ! Poll_m10கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10கலக்கல் கலாச்சாரம் ! Poll_m10கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10கலக்கல் கலாச்சாரம் ! Poll_m10கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10கலக்கல் கலாச்சாரம் ! Poll_m10கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10கலக்கல் கலாச்சாரம் ! Poll_m10கலக்கல் கலாச்சாரம் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலக்கல் கலாச்சாரம் !


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 1:01 pm

இப்போதெல்லாம் தமிழர் பண்பாடு கலாசாரம் இவை எல்லாம் ரொம்பவும் நீர்த்துக் காணாமல் போய்க் கொண்டிருப்பதாக புலம்புவது வழக்கமாகி விட்டது. ஆனால் அது அப்படி இல்லை என்று தான் தோன்றுகிறது. காலத்திற்கு ஏற்ப சில பழக்க வழக்கங்கள் வேண்டுமானால் மாறி இருக்கலாம்; அதையும் பண்பாட்டுடன் சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. முன்பெல்லாம் பெற்றோர் என்ன சொன்னாலும் திருப்பிக் கேள்விக் கேக்காமல் ஒப்புக் கொள்ளும் மனோபாவம் இருந்தது. இப்போதுள்ள தலை முறைக்கு எதற்கும் காரணம் தெரிய வேண்டும். சிலவற்றுக்கான விளக்கங்கள் பெரியவர்களுக்கே தெரியாததால் இந்தக் குழப்பம்; இந்தத் தலை முறையும் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும்; எல்லா விஷயங்களுக்கும் காரணம் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க கூடாது. பண்டிகைக் கொண்டாட்டங்கள் எல்லாம் மகிழ்ச்சிக்கும் உறவுகளின் அருமைக்கும் பெருமைக்கும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்; கூர்ந்து நோக்கினால் நாம் கொண்டாடும் பண்டிகை போது அந்தந்தக் காலத்தில் கிடைக்கும் காய் கனியையோ பொருட்களையோ தான் அதிகம் பயன் படுத்தி இருப்போம்; உதாரணத்திற்கு பொங்கல் பண்டிகை; புதிய அரிசியையும், அந்தக் காலக் கட்டத்தில் விளைந்திருக்கும் கரும்பையும் கண்டிப்பாக சேர்த்துக் கொள்கிறோம்; சில பண்டிகைகள் போது ஆரோகியமான உணவு முறையை பின்பற்றுகிறோம் ;நவராத்திரியை உதாரணமாக கூறலாம். பூவிற்கும் நெற்றி பொட்டிற்கும் மிகுந்த முக்கியதுவத்தை தமிழ் காலாச்சாரம் அளித்து வருகிறது. இதில் எல்லாம் பெரிய முரண்பாடுகள் வருவதில்லை; சில நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் செயல்படுத்த கட்டாயப் படுத்தும் போதுதான் தர்கங்களும் தேவையில்லாத மனக் கசப்பும் ஏற்படுகிறது.

இது ஒரு விதத்தில் காலத்தின் கட்டாயத்தின் பேரில் ஏற்று கொள்ளத்தான் வேண்டும். முன்பெல்லாம் திருமணத்திற்கு தாலியான மஞ்சள் கயத்திற்கு பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தது; ஆனால் இப்போ தாலிக் கட்டுவதை விட, திருமணம் பதிவு செய்ய படும் சிறு காகிதத்திற்குதான் அதிக மதிப்பு. தாலியை விட பதிவு செய்யப் பட்டிருந்தால் தான் அத் திருமணம் ஏற்றுக் கொள்ள படுகிறது. இதை காலாச்சாரம் தவறி விட்டது என்று எப்படி கூற முடியும்? காலாச்சாரம் என்ற பெயரில் பிள்ளை,பெண்ணின் தாய் விதவையாக இருந்தால் அவர்களுக்கு தங்கள் குழந்தைகளின் திருமணத்தில் கூட முழுமையாக கலந்துக் கொள்ளும் உரிமை வழங்கப் படவில்லை. கலைஞர் சொன்னது போல் அந்த வார்த்தைக்கு கூட ஒரு பொட்டு இல்லை. அதனாலேயே அமங்கலி என்று எழுதி வார்த்தைலாவது பொட்டு இருக்கட்டுமே என்று பயன் படுத்தி வந்தார். இன்று நிலைமை மாறி வரவேற்கத் தகுந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவும் காலாச்சாரத்தை மீறின விஷயம் இல்லை. ஒரு காலத்தில் ப்ரோகிதர்கள், கடல் தாண்டி செல்வது பாரம்பரியத்தை மீறின செயலாக கருதப் பட்டது; ஆனால் இன்றும் அப்படியே செயல் பட்டால் நமது பண்பாடு உலகளவில் தெரியப் படாமலே போயிருக்க வாய்ப்புண்டு. அதே சமுகத்தை சேர்ந்த சிலரால் தமிழர்களின் திறமையும் எல்லோராலும் பேசப்படுகிறது. நாமாக ஏற்படுத்திக் கொண்ட பழக்க வழக்கங்கள் காலத்தினால் மாறும் போது அது கலாச்சாரத்தை மீறினதாகாது.

ஆனால் இப்படியே எல்லா விஷயங்களையும் ஒதுக்கியும் மாற்றியும், காலத்தின் பேரில் பழி போடுவதையும் ஒப்புக் கொள்ள முடியாது. விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற நாம் அதை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக் கொண்டு வருகிறோம். அது முழுவதுமாக காணாமல் போகும் முன் சுதாரித்துக் கொள்வது நல்லது. திருமணம் என்றாலும் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும் சரியானபடி அவர்களை உபசரித்து அனுப்புவதில் கூட நாம் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. நம்மை மதித்து வந்தவர்களை தக்க மரியாதையுடன் கவனித்து, உபசரித்து அனுப்புவது தான் பண்பாடு. அழைபிதழ்களை வேண்டுமானால் தூரம் / நேரமின்மைக் காரணமாக e-mailல் அனுப்புவதை ஏற்றுக் கொள்ளலாம், சில விஷயங்களுக்கு அதற்குண்டான முக்கியத்துவத்தை கொடுத்தால் தான் நன்றாக இருக்கும். என்னதான் நண்பர்கள் பெருகி இருந்தாலும் சுற்றத்தார்களுக்கும் நாம் உரிய பெருமையை அளிக்க வேண்டும். பெரியவர்களை மதிப்பதிலும்,விருந்தோம்பலிலும் நமது கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்க கூடாது. இது நாம் உண்மையிலேயே பெருமை பட வேண்டிய விஷயம். சுகி சிவம் அவர்கள் சொன்னது போல் முன்பு தனியாக இருந்த bathroom இன்று attached ஆகவும், சேர்ந்து இருந்த உறவுகள் deattached ஆக மாறிவிட்டதும் வருத்த பட வேண்டிய ஒன்றாகும் எதற்குமே react பண்ணுகிற அளவிற்கு நாம் act பண்ணுவதில்லை; இன் நிலை மாறினால் நன்றாக இருக்கும். காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை அனுமதித்தாலும் வேர்கள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு இளம் தலை முறையிடம் தான் இருக்கு.

நன்றி தமிழ் ஓவியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக