புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஓவியக் கலைக்கூடம் Poll_c10ஓவியக் கலைக்கூடம் Poll_m10ஓவியக் கலைக்கூடம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவியக் கலைக்கூடம்


   
   
பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Postபேனாமுனைபாரதி Sat 25 Feb 2012 - 18:22

திரிபுராந்தகர் ஓவியம்: பெரிய கோயிலின் பதினொன்றாவது ஓவியப்பகுதியில் வடக்கு நோக்கிய சுவரில் சிவன் திரிபுராந்தகராக, முப்புரம் எரித்த புராணக்காட்சி தீட்டப்பட்டுள்ளது. சிவன், பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாகவும், வேதங்களைக் குதிரைகளாகவும், பிரம்மாவைச் சாரதியாகவும், மேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், திருமாலை அம்பாகவும் கொண்டு திரிபுர அசுரர்களை அழிக்கத் தமது எட்டுக் கைகளிலும் ஆயுதங்கள் ஏந்திக் கோபாவேசத்துடன் போர்க்களம் வருகிறார். சிங்கத்தின் மீது காளியும், மூஞ்சுறு மீது விநாயகரும், மயில் மீது முருகனும் அமர்ந்து உடன் விரைந்து செல்கின்றனர். கோபத்திலும், பயத்திலும் திகைத்து நிற்கும் அசுரர்களும், அவர்களைத் தழுவியவாறு அழுதுபுலம்பும் அவர்களின் மனைவியரும் காட்டப்பட்டுள்ளனர்.
கண்ணப்பர் ஓவியம்: சித்திரக்கூடத்தின் முதல் பகுதியில், கிழக்கு நோக்கிய சுவரில், வேடன் கண்ணப்பர் ஒரு கண்ணில் ரத்தம் வடியும் தோற்றத்துடன் காட்சி தருகிறார். தன் காலால், சிவபெருமானின் ரத்தம் வடியும் கண்ணை அடையாளம் வைத்து அம்பி னால் தனது மற்றொரு கண்ணையும் தோண்டி எடுப்பது போல ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. மேற்கு நோக்கிய சுவரில் பாற்கடலைக் கடையும் காட்சி இடம்பெற்றுள்ளது. லட்சுமியுடன் வெளிவந்த ஐராவதம் என்ற யானை, உச்சிரவஸ் என்ற குதிரை, காமதேனு என்ற பசு, கற்பக விருட்ஷம் என்ற மரம் முதலானவை காணப்படுகின்றன. அவற்றில் ஏழாவது பகுதியில் மேற்கு நோக்கிய சுவரில், சுந்தரமூர்த்தி நாயனாரைச் சிவன் ஆட்கொண்ட வரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. சுந்தரரின் திருமணத்தின் போது, சிவன் வயோதிகராகக் கையில் அடிமைச் சாசன ஓலையுடன் தோன்றுவது, திருவெண்ணெய்நல்லூருக்கு அழைத்துச் சென்று கோயிலுக்குள் மறைவது, சுந்தரர் வெள்ளை யானையிலும், சேரமான் வெள்ளைக்குதிரையிலும் கடல்தாண்டிக் கயிலாயம் செல்வது, கயிலாயத்தில் சுந்தரரும் சேரமானும் அமர்ந்து, தேவமங்கையரின் ஆடலை ரசிப்பது ஆகிய நிகழ்ச்சிகள் வண்ண ஓவியங்களாக அமைந்துள்ளன.
நுண்ணிய சிற்ப வேலைபாடுகள்: தெற்கு, வடக்கு வாயிற்படிகளின் இருவெளிப்புறங்களிலும் போர்க்கள யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மிக நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. போர் வெறியுடன் கோபாவேசத்தில் பிதுங்கிய விழிகளும், சுழன்று மேல் நோக்கி வளைந்த வாலும், இறுகிய தசைகளுடன் கூடிய கால்களும் உடைய யானை, குதிரை வீரன் ஒருவனை வளைத்துப் பிடித்துத் தூக்கிக் கொல்வது ஒரு புறம் காட்டப்பட்டுள்ளது. அதே யானை, அவ்வீரன் இறந்து போனதும் கோபம் அடங்கி சகஜ நிலைக்கு வந்ததைக் காட்டும் சிற்பம், மறுபுறம் வடக்கு படிச்சுவரில் மிக அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. 16ம் நூற்றாண்டில், சின்னமல்லா என்ற மல்லப்ப நாயக்கர், ஆறுமுகர் சன்னதி முன்புறத்தில் ஒரு மண்டபம் கட்டியுள்ளார்.
இந்த மண்டபத்தையும் முருகன் கோயிலையும் இணைக்கும் படிக்கட்டுகளை இரண்டாம் சரபோஜி மன்னர் 1908ல் கட்டியுள்ளார். மண்டபத்தின் தென்புறச் சுவரில் அமைந்துள்ள மாடத்தில் கூப்பிய கரங்களுடன் மல்லப்பநாயக்கர் சிலை காணப்படுகிறது. மண்டபத்தின் தெற்கு, வடக்கு, மேற்கு உட் புறச்சுவர்களில் தஞ்சை மராட்டிய அரசர்கள் மற்றும் அரசியரின் ஓவியங்கள் பெயர், ஆண்டு முதலிய குறிப்புக்களோடு தீட்டப்பட்டு உள்ளன. வாளேந்திப் போர் செய்து< வீரமரணம் அடைந்த தஞ்சை அரசி கஜான் பாய் சாயிபாவின் ஓவியமும் இங்கு உள்ளது.
நாயக்கர் கால ஓவியங்கள்: கருவறையை அடுத்துள்ள திருச்சுற்றின் இருபுற சுவர்களிலும் சோழர் கால ஓவியங்கள் உள்ளன. இதில் சிலவற்றின் மீது தஞ்சை நாயக்கர் கால ஓவியங்கள் தீட்டப் பட்டுள்ளன. லேசான சுண்ணாம்புக் கலவை பூச்சின் மீது மூலிகைச்சாறு வண்ணங்கள் கொண்டு நாயக்கர் கால ஓவியங்கள் அமைந்துள்ளன. மூன்றாவது ஓவியப் பகுதியில் வடக்கு நோக்கிய சுவரில் பராசர முனிவர் தவம் செய்யும் காட்சியும், அதே பகுதியின் தெற்கு நோக்கிய சுவரில் துர்க்கையும் திருமாலும், தஞ்சன், தாரகன், தாண்டகன் ஆகிய அசுர அரசர்களை வதம் செய்யும் காட்சியும் நாயக்கர் கால ஓவியங் களாக உள்ளன. இந்த ஓவியங்களை நாயக்கர் கால ஓவியர் அப்பல பெத்ரல ராமையா என்ற புகழ் பெற்ற ஓவியர் வரைந்துள்ளார்.
மராட்டியர் நுழைவு வாசல்: தஞ்சை பெரியகோயிலில் சிவகங்கைக் கோட்டை எனப்படும் இக்கோட்டை செவ்வப்ப நாயக்கர் காலத்தில் ஒரு சதுர கி.மீ., பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. அகழியை ஒட்டி தாழ்வாக ஒன்றும், இடைவெளிவிட்டு உட்புறமாகச் சற்று உயரமாக ஒன்றும் செம்பாறங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. கோயிலின் கிழக்கில் செங்கல், சுண்ணாம்புச் சாந்து கொண்டு 1803ல் மராட்டியர் நுழைவுவாயிலை தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி அமைத்துள்ளார். வாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன.
கலைநயம் மிக்க முருகன் சன்னதி: தஞ்சை நாயக்கர் மன்னர்களான செவ்வப்பநாயக்கராலும், அவர் மகன் அச்சுதப்ப நாயக்கராலும் 16ம் நூற்றாண்டில் பெரியகோயிலின் வடமேற்கில் முருகப்பெருமானுக்கு விஜயநகரப்பாணியில் ஒரு சன்னதி கட்டப்பட்டுள்ளது. 45 அடி சதுர அடித்தளத்தின் மீது 55 அடி உயர விமானம் அமைக்கப்பட்டுள்ளது. சன்னதியின் இருபக்கங்களிலும் கண்ணாடி போல் பளபளக்கும் கருங்கல்லால் ஆன துவார பாலகர்கள் நமது கருத்தைக் கவர்கின்றனர்.
கருவறையில் உள்ள மயிலின் மேல் அமர்ந்த ஆறுமுகர் சிற்பம், திருவாசியுடன் சேர்ந்து ஒரே கல்லினால் ஆனதாகும். இம்முழுச் சிற்பத்தையும் மயிலின் கால்கள் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆறுமுகனின் இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோரின் நின்ற நிலைக் கற்சிற்பங்கள் உள்ளன. இந்த சன்னதி அழகிய இரு குதிரைகளால் இழுத்து செல்லப்படும் தேர் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதியில் அபிஷேகத்திற்காக கல்லாலேயே செதுக்கப்பட்ட தொட்டி, பாறையைக் குடைந்து பெரிய குடுவையைப் போல் உள்ளது.
பிரகாரத்தின் தெற்மேற்கில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மன்னர் இரண்டாம் சரபோஜியால் கட்டப்பட்டது. இம்மன்னர் இக்கோயிலின் வடக்கு மற்றும் மேற்கு வெளிப்புறச் சுவர்களின் அடிப்பாகத்தில் தான் செய்த திருப்பணிகளை மராத்தியில் பொறித்து வைத்தார். பெரிய கோயில் விமானத்தின் பின்புறம் கருவூரார் மண்டபம் அமைந்துள்ளது. பதினெண் சித்தர் களுள் ஒருவரான கருவூர் சித்தர், தான் பாடிய திருவிசைப்பாவில் தஞ்சை பெரியகோயில் இறைவனைப் 11 பாடல்களில் புகழ்ந்து பாடியுள்ளார்.
பிரம்மாண்ட மகா மண்டபம்: கோயிலின் முக மண்டபத்திற்கு செல்ல ராஜராஜனால் தெற்கு, வடக்கு ஆகிய திசைகளிலும் இரண்டாம் சரபோஜி மன்னரால் கிழக்கிலும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேற் விதானத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கல் வளையம் உள்ளது. மகா மண்டப வாசலின் பக்கங்களில் வடக்கில் துர்க்கை, தெற்கில் விநாயகர் சன்னதிகள் உள்ளன. பொதுவாக சன்னதிக்கு செல்லும் வழிகளில் விநாயகர், முருகன் அமைப்பதே மரபு. ஆனால் இங்கு துர்க்கையை அமைத்திருப்பது மாறுப்பட்டதாகும். துர்க்கைக்கு எதிரில் பைரவர், சனீஸ்வரர் உள்ளனர். துர்க்கை, விநாயகர் சிலைகளுக்கு இருபுறங்களிலும் ஒரே கல்லினால் ஆன பிரம்மாண்டமான துவாரபாலகர் சிலைகள் 16.5 அடி உயரம். 7.5 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
மகா மண்டபத்தின் உட்புறம் இருபகுதிகளாக பிரிக்கப்பட்டு, மேற்கு பகுதி சோழர் கால அமைப்போடும், கிழக்கு பகுதி பாண்டியர் கால அமைப்போடும் இருக்கின்றன. இந்த மண்டபம் கட்டப்பட்ட போது இரண்டு அடுக்குத்தளமாக இருந்தது. பின்னாளில் சிதைந்து போனமையால் பின்னர் ஒரே தள மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் உள்ளே செப்பு சிலைகள், பாதுகாக்கப்படுகின்றன. மண்டபத்தின் தென்மேற்கில் தியாகராஜர் சன்னதி இருக்கிறது.





ஓவியக் கலைக்கூடம் Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat 25 Feb 2012 - 18:32

அண்ணா பகிர்வுக்கு நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக