புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
89 Posts - 38%
heezulia
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
340 Posts - 48%
heezulia
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
24 Posts - 3%
prajai
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
3 Posts - 0%
Barushree
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_m10இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 21, 2012 10:42 pm

“இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள்”

1. இரட்சிப்பு:

இது கிறிஸ்துவில் தேவனுடைய கிருபையின் கிரியையைக் (செயலை) குறிப்பிடுகிறது. இதன் மூலம்:


அ) நாம் பாவத்தின் தண்டனை, சக்தி, வருங்கால பிரசன்னம் “இவைகளிலிருந்து” இரட்சிக்கப்படுகிறோம்.

ஆ) தேவனுடைய ‌“நோக்கத்துக்காக” இரட்சிக்கப்பட்டு, அவருடைய குடும்பத்தில் வைக்கப்படுகிறோம்; அதில் நாம் அவருடைய குமாரனின் சாயலை வெளிப்படுத்துகிறோம்.


கிறிஸ்து நமது பாவங்களுக்காக சிலுவையில் மரித்தபோது, அவர் நமது இரட்சகரானார். அவர் நமது இடத்தில் மரித்து, நமது பாவத்துக்கான கிரயத்தை (தண்டனையை) செலுத்தித் தீர்த்தார்.


நாம் விசுவாசத்தின் மூலம் அவரை நமது இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்போது, நாம் அவருடைய உயிர்த்தெழுந்த ஜீவனின் வல்லமையையும், பெற்றுக் கொள்ளுகிறோம். இந்தப் புதிய ஜீவன் நமக்குள் பாய்ந்து செல்லும்போது அது நமது ஆவி, ஆத்துமா, சரீரம் இவைகளுக்குக் குணமாகுதலைக் கொண்டு வருகிறது.

“இரட்சிக்கப்படுவது” என்றால் மன்னிக்கப்படுவது, குணமாக்கப்படுவது, விடுவிக்கப்படுவது, பூரணராக்கப்படுவது, சீரமைக்கப்படுவது என்று அர்த்தமாகும்.

நாம் பாதுகாப்பாகவும், நிச்சயமுள்ளவர்களாகவும், விடுவிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். தேவன் நம்மைத் தமது அன்புக்குரிய, இராஜரீக குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் இருக்கும்படி அழைத்திருக்கிறார்; நாம் அழைக்கப்பட்டபடி ஆகும்படி விடுவிக்கப்பட்டிருக்கிறோம்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 21, 2012 11:13 pm

2. மறுபடியும் பிறத்தல்:

“பிறப்பித்தல்” என்றால் உயிரை உருவாக்குதல் என்று அர்த்தம் ஆகும். மேலே நாம் கண்டுள்ளபடி மறுபடியும் பிறத்தல் என்றால், மரணத்துக்குப் பின்னர் ஜீவன் உயிர்ப்பிக்கப்படுதலாகும்.

நாம் நமது பாவங்களில் “மரித்தவர்களாக” இருந்தோம். எனவே, மறுபடியுமாக தேவனுடைய குடும்பத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டுமானால், “ஆவிக்குரிய ஜீவனின்” புதிய வரவை (மறுபடியும் பிறத்தல்) நாம் பெற்றிருக்க வேண்டும்.

உலகத்தில் நாம் ஒரு குடும்பத்துக்குள் பிறப்பதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது. இது இயற்கையான ஜீவனின் வரவினாலேயே முடியும். இது உடல்ரீதியான இனப்பெருக்கத்தின் மூலமாக நடைபெறுகிறது. ஒரு புதிய குழந்தையை உருவாக்குவதற்கு தேவையான ஜீவனை உயிரணுக்கள் கொண்டு வருகின்றன.

தேவனுடைய குடும்பத்தில் “பிறப்பதற்கும்” இதுவ‌ே உண்மையாய் இருக்கிறது. ஆவிக்குரிய ஜீவனின் வித்து வரவாக விதைக்கப்பட வேண்டும். அந்த தெய்வீக வித்து, “ஜீவ வித்து” இயேசுவானவர் என்னும் நபராக இருக்கிறார்.

நாம் கிறிஸ்துவை நம்முடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளும்போது, அவரே நம்மை தேவனுடைய குடும்பத்தில் பிறக்கும்படிச் செய்யும் ஜீவனாக இருக்கிறார்.

எனவே, ஒவ்வொரு கிறிஸ்தவனும் இரண்டு பிறப்பைப் பெற்றிருக்கிறான்; இயற்கையான பிறப்பு மற்றும் ஆவிக்குரிய பிறப்பு. இதுவே “மறுபடியும் பிறப்பதாகும்”.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Feb 22, 2012 7:46 am

3. பாவநிவர்த்தி

தவறானவைகளைச் சரி செய்வதின் மூலம் வரும் ஒப்பந்தத்தையும் சமாதானத்தையும் பற்றி இது குறிப்பிடுகிறது.

பாவம் தேவனுக்கு விரோதமான தவறாகும். எனவே, அது தேவனிடமிருந்து நம்மைப் பிரிக்கிறது (அந்நியராக்குகிறது). நாம் மறுபடியுமாக அவரோடு உறவுக்குள் கொண்டு வரப்படுவது அல்லது “ஒப்புரவாக்கப்படுவது” அவசியமாக இருக்கிறது.

பாவத்தின் விளைவுகளை ஒன்றுமில்லாததாக்குவதற்க்கான ஒரே வழி “நீதிமானாக்கப்படுவதுதான்” (ஒரு பாவியை நீதிமானாக எண்ணுதல்). சிலர் நினைப்பதுபோல நீதிமானாக்கப்படுதல் என்பது பாவத்தைக் காணாமல் விடுவதும் அல்ல, மீறுதலைக் காணாமல் புறக்கணிப்பதும் அல்ல. ஒரு பரிசுத்த, நீதியான தேவனால் பாவத்தைக் காணாமல் விட்டுவிட முடியாது.

பாவத்திற்கான தண்டனை ‌ச‌ெலுத்தப்பட்டால் மட்டுமே அது இரத்து செய்யப்பட முடியும். மூடப்படவோ அல்லது ஒதுக்கப்படவோ முடியும். பாவத்திற்கான தண்டனை ‌ச‌ெலுத்தப்பட்டால் மட்டுமே நீதி திருப்திப்படுத்திட முடியும். பாவம் சுத்திகரிக்கப்பட முடியும். தவற்றுக்கான தண்டனை முழுமையாகச் செலுத்தப்பட்ட பிறகு உறவு மறுபடியுமாகச் சீரமைக்கப்படும்.

பாவத்திற்கான தண்டனை மரணமே. இயேசுவானவர் தமது கிருபையினாலும் இரக்கத்தினாலும், சிலுவையில் நமது பாவங்களுக்காக மரித்தபோது, அவர் நமக்குரிய தண்டனையைச் செலுத்தித் தீர்த்தார். இந்த வகையில், அவருடைய இரத்தம் நமது பாவங்களை மூடியது. நமது பாவங்களை இரத்து செய்தது என்று நாம் கூற முடியும். (“இரத்து செய்வது” என்பது எந்தப் பின் விளைவும் இல்லாமல் செய்வதாகும்!).

எனவே, பாவநிவர்த்தி - கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக - தேவனுடைய கிரியையாக இருக்கிறது; இதன் மூலம் நமது உறவு சரி செய்யப்பட்டது. நாம் தேவனோடு மறுபடியும் ஒன்றானோம்.


தொடரும்...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 22, 2012 7:57 am

பாவ நிவர்த்தி பெற்ற ஒருவர் மீண்டும் தவறு செய்தால் என்ன செய்வது திரு சார்லஸ் அவர்களே?
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Feb 22, 2012 8:28 am

4. நீதி

இது தேவனுடைய பரிசுத்த பண்பைக் குறிப்பிடுகிறது. அவர் சிந்தனையிலும், வார்த்தையிலும், செயலிலும் - மனோபாவத்திலும் கிரியைகளிலும் - எப்போதுமே சரியானவராக இருக்கிறார். அனைத்து வழிகளிலும் அனைத்துக் காரியங்களிலும் அவர் சரியானவராகவும், நல்லவராகவும், உண்மையுள்ளவராகவும் இருக்கிறார்.

இதுவே நியாயப்பிரமாணத்தின் “நீதியான” தகுதி நிலையாக இருக்கிறது. நீதியில்லாத எதுவும் தீமையானதாகவும், தவறானதாகவும் - சுருக்கமாக, பாவமானதாக - இருக்கிறது. இதன் காரணமாக, பாவமுள்ள மனிதனால் ஒருபோதும் பரிசுத்த தேவனுக்கு முன்பாக நிற்க முடியாது. நீதியும் அநீதியும் எப்போதும் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கின்றன. உறவுக்கான எந்த அடிப்படையும் இல்லை.

இதன் காரணமாக, நமது பாவங்களுக்காக “நிவர்த்தி” செய்யும்படி தேவன் தமது ஒரேபேறான குமாரனை அனுப்பினார். நாம் நமது இருதயத்தில் கிறிஸ்துவை நம்மடைய இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்போது, நமது பாவங்கள் மூடப்படுகின்றன. இரத்து செய்யப்படுகின்றன. தேவன் இனிமேலும் நம்மை நமது பாவங்களில் பார்ப்பதில்லை, தமது குமாரனின் நீதியில் அவர் நம்மைப் பார்க்கிறார். அவர் நம்மில் இருப்பது மட்டுமின்றி, நாம் அவரில் இருக்கிறோம்.

இது “குறித்துரைக்கப்பட்ட” நீதி (Imputed Righteousness) என்று அழைக்கப்படுகிறது. “குறித்துரைக்கப்படுதல்” என்பது சட்டரீதியான ஒரு சொல்லாகும். அதாவது, நமது கணக்கில் மற்றொருவரால் வரவு வைக்கப்பட்டிருப்பதை இது குறிக்கும்.

அவருடையது இப்போது நமக்கு சொந்தமாக இருக்கிறது. அவருடைய பதவியும் உடைமையும் இப்போது நமது பதவியாகவும் உடமையாகவும் ஆகிறது. அது ஒரு கூட்டுக் கணக்காகும். இயேசுவானவரின் நீதி நம்முடைய நீதியாயிருக்கிறது. பிதாவானவரின் வலது பாரிசத்திலுள்ள இயேசுவானவரின் இடம் நம்முடைய இடமாகிவிட்டிருக்கிறது (வாசிக்கவும்: எபேசியர்: 1:20-22; 2:4,5).

நமது சட்டரீதியான நிலையாகிய “குறித்துரைக்கப்பட்ட” நீதி மட்டுமல்லாமல், “பங்களிக்கப்படும்” (imparted) நீதியும் இருக்கிறது. “பங்களிப்பது” என்றால் ஒன்றை உள்ளே வைப்பதாகும். நாம் கிறிஸ்தவர்களானபோது நமது வாழ்க்கையின் “உள்ளே” ஒன்று “வைக்கப்பட்டிருக்கிறது” .

நாம் சட்டரீதியாக “கிறிஸ்துவுக்குள்” இருப்பது மட்டுமின்றி, கிறிஸ்துவும் “நமக்குள்” தனிப்பட்டதும், செயல்பூர்வமானதுமான நிலையில் இருக்கிறார்.

நாம் இயேசுவானவரை ஏற்றுக் கொள்வதில் அவருடைய பரிசுத்த நீதியான இயல்புகளை ஏற்றுக் கொள்கிறோம். நாம் ஒரு புதிய இயல்பைப் பெற்றிருக்கிறோம் - அது உள்ளான வல்லமையின் புதிய ஆதாரமாக இருக்கிறது - இதன் மூலம் நாம் ஒரு “நீதியான” வாழ்க்கை வாழத் துவங்குகிறோம்.

சிலுவையில் இயேசுவானவரோடு கூட நமது “பழைய இயல்பு” மரித்துப் போய்விட்டது; அது நமது புதிய இயல்பை வெளிப்படுத்துவதற்கான உரிமையையும் சுயாதீனத்தையும் நமக்குக் கொடுக்கிறது. (ரோமர்: 6 ம் அதிகாரத்தை வாசிக்கவும்).


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Feb 22, 2012 9:27 am

மகா பிரபு wrote:பாவ நிவர்த்தி பெற்ற ஒருவர் மீண்டும் தவறு செய்தால் என்ன செய்வது திரு சார்லஸ் அவர்களே?


இது ஒரு நல்ல கேள்வி.

இதற்காக தங்களை மனதாரப் பாராட்டுகிறேன். இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 154550


பதில் இதுதான்:


இதற்கு வேதாகமத்தில் பல உதாரணங்கள் உண்டு. வ‌ேதத்தில் உள்ள பல பரிசுத்தவான்கள் தங்கள் வாழ்வில் இப்படி பாவத்தில் தவறி விழுந்ததையும், மீண்டும் தங்களை புதுப்பித்துக் கொண்டு தேவனுக்கு முன்பாக ஒரு பரிசுத்த வாழ்வை வாழ்ந்ததையும், வேதம் ஒன்றையும் மறைக்காமல் நமக்கு அவைகளை திருஷ்டாந்தமாக வைத்துள்ளது.

பரிசுத்தவான்கள் மட்டுமல்ல. பொதுவாகவ‌ே மனிதன் பலவீனமானவன். தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு பகுதியில் இடறி விழுந்து விடுவது மனித இயல்பாகவே இருப்பதை நாம் காண முடியும்.

மனிதர்களில் இரண்டு வகை உண்டு: அறியாமல் தவறு செய்பவர்களும் உண்டு; அறிந்து தவறு செய்பவர்களும் உண்டு.

இரண்டுக்கும் பரிகாரமுண்டு. வேதம் சொல்கிறது:

ஏசாயா: 1:16 - “உங்களைக் கழுவி சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றி விட்டு, தீமை செய்தலை விட்டு ஓயுங்கள்;” என்று வேதம் கூறுகிறது.

தவறி விழுந்தது பாவமல்ல; அதில் நிலைத்திருப்பதுதான் பாவம்.

கிறிஸ்தவ வாழ்வில் பாவ நிவர்த்தி பெற்ற ஒருவர் மீண்டும் பாவம் செய்தால், அதிலிருந்து விடுதலை பெற, தன் பாவத்தை உணர்ந்து, அதை ஒத்துக் கொண்டு, தேவனிடம் தன் பாவத்தை அறிக்கையிட்டு, இரக்கத்திற்காக கெஞ்சி மன்றாடி, தேவனிடம் ஒப்புரவாகி, மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொண்டு பரிசுத்த வாழ்வு வாழ தன்னை அர்ப்பணிக்க வ‌ேண்டும்.

“...இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1யோவான்: 1:7,9) என்று வேதம் கூறுகிறது.

தெரிந்து செய்தாலும். தெரியாமல் செய்தாலும் பரிகாரம் ஒன்ற‌ே. அது இதுதான். ஆண்டவர் இய‌ேசுவிடம் அறிக்கை செய்து பாவமன்னிப்பு பெறுவது ஒன்ற‌ே வழி.

இதற்கு சிறந்த ஓர் உதாரணம்: தாவீது - தன் வாழ்வில் பாவம் செய்தான். அதை தீர்க்கதரிசி நாத்தான்வேல் சுட்டிக் காண்பித்தவுடன், தன்னை சபை நடுவே, தன் பாவத்தை அறிக்கையிட்டு தேவனிடம் ஒப்புரவாகி மனந்திரும்பினான். பாவம் மன்னிக்கப்பட்டது. சங்கீதம்: 51 அதிகாரம் முழுவதும் தன் பாவத்திற்காக தேவனிடம் கெஞ்சி மன்றாடியதை வாசிக்கலாம்.

யாராயிருந்தாலும், எப்படிப்பட்ட பாவம் செய்திருந்தாலும் தேவனிடம் பாவ மன்னிப்பு உண்டு. (அதேவேளையில், பூமியில் அதற்குரிய தண்ட‌னையும் உண்டு. இதைப்பற்றி பிறிதொரு சமயம் தனி திரியில் விளக்கமாக பதிலளிக்கிறேன் நண்பரே)

இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 154550 இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 154550 இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 154550 இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 678642 இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 678642 இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 678642 இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 154550 இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 154550 இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 154550






சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Feb 22, 2012 9:29 am

லைக் செய்யப்பட்டது மகா அவா்களே



இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 154550இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 154550இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 154550இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 154550இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 22, 2012 9:38 am

சார்லஸ் mc wrote:லைக் செய்யப்பட்டது மகா அவா்களே
நல்ல விளக்கத்திற்கு நன்றி திரு சார்லஸ் . சூப்பருங்க

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Feb 22, 2012 11:14 pm

5. நீதிமானாக்கப்படுதல்


நீதிமானாக்கப்படுவது” என்ற‌ால் நியாயப்பிரமாணத்துக்கு முன்னால் சரியாக்கப்பட்டு, அதன் மூலம் குற்றம் அல்லது ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாகும்.

“ஆக்கினைத்தீர்ப்பளிப்பது” என்றால், ஒருவரை நியாயப்பிரமாணத்துக்கு முன்னால், குற்றமுள்ளவராக நியாயந்தீர்ப்பதாகும்.

“பாவம்” என்பது தேவனுடைய பிரமானத்தை மீறுவதாகும். எனவே, அனைத்துப் பாவிகளும் தேவனுக்கு முன்பாகக் குற்றவாளிகளாக இருக்கிறார்கள். நமது பாவத்திற்க்கான தண்டனை மரணமே. பாவத்திற்கான தண்டனை செலுத்தப்படாமல், நியாயப்பிரமாணத்தின் எதிர்பார்ப்புகள் திருப்திபடுத்தப்பட முடியாது. “நீதியானது” பாவமே நடக்காதது போல அதைக் காணாமல் விட முடியாது.

தேவனுடைய மீட்பின் திட்டத்தில் இரக்கமும் நீதியும் ஒரேயொரு வகையில் மட்டுமே ஒன்றோடொன்று கைகோர்த்துக் கொள்ள முடியும். அது இப்படித்தான்: நீதிபதி (தேவன்) தண்டனையை அறிவிப்பது மட்டுமின்றி, தாமே அதற்கான தண்டனையைச் (கிறிஸ்துவின் மரணம்) செலுத்தியும் தீர்க்கிறார்! இப்போது குற்றம் செய்தவன் “நீதிமானாக்கப்படுகிறான்”. நியாயப்பிரமானத்துக்கு முன்னால் சரியானவனாக எண்ணப்படுகிறான்.

தனது நீதிபதி நீதியுள்ளவராக இருப்பதோடு (அது அவர் நியாயப்பிரமாணத்தின் தண்டனையைச் செலுத்தும்படி செய்தது) மட்டுமின்றி, முழுவதும் இரக்கம் நிறைந்தவராகவும் (பாவியின் மீது அவருடைய நீதி விதிக்கும்படி செய்த தண்டனையை அவரே செலுத்தித் தீர்த்திருக்கிறபடியால்) இருக்கிறபடியால் பாவியால் இப்போது விடுவிக்கப்பட்டவனாகச் செல்ல முடியும்.

சிலுவையில் கிறிஸ்துவின் மரணத்தில் இதையேதான் தேவன் நமக்காகச் செய்தார். பாவம் நியாயந்தீர்க்கப்பட்டது. தண்டனை செலுத்தப்பட்டது. நாம் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டோம்!

இவ்வாறு நாம் நீதிமானாக்கப்பட்டோம்.

இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 154550 இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 154550 இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் 154550


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 23, 2012 12:05 am

மகாபிரபுவின் கேள்விக்கு சார்லஸ் அவர்களின் பதில் நன்று!



இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக