புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி! Poll_c10சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி! Poll_m10சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி! Poll_c10 
31 Posts - 79%
heezulia
சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி! Poll_c10சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி! Poll_m10சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி! Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி! Poll_c10சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி! Poll_m10சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி! Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி! Poll_c10சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி! Poll_m10சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி! Poll_c10சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி! Poll_m10சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 19 Feb 2012 - 10:20



சென்னை, பிப். 18: சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி உறுதியில்லை என்பது தெரிந்தும் மதிமுகவை "தோற்கடிக்க' வேண்டும் என்பதற்காகவே திமுக போட்டியிட முடிவு செய்திருப்பதாக கருதப்படுகிறது.

கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடாத மதிமுக, இந்த இடைத்தேர்தல் மூலம் "அரசியல் வாழ்வு' பெற்று விடக் கூடாது என்பதில் திமுக தலைமை தீவிரமாக இருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தமிழக அரசியல் களத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி மட்டும்தான் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர ஆளும் அதிமுக ஒரு மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் பணியை தொடங்கி விட்டது என்றே கூறலாம். அதனால் தேர்தல் களமும் சூடுபிடிக்கத் தொடங்கியது.

2011 சட்டப் பேரவைத் தேர்தலில் இருந்த கூட்டணி நிலையில் மாற்றம், தேமுதிகவுடனான உறவில் விரிசல், தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி தீர்க்க முடியாத மின்வெட்டுப் பிரச்னை போன்றவற்றால் இந்த இடைத்தேர்தலில் எவ்வித பின்னடைவும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அதிமுக தலைமை தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது. அது சட்டப் பேரவையிலும் எதிரொலித்தது.

கடந்த திமுக ஆட்சியின்போது திருமங்கலம் இடைத்தேர்தலில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை கருத்தில் கொண்டு அதன் பின்பு நடைபெற்ற சில இடைத்தேர்தல்களில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து வந்தது. இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோகம், பண பலம் போன்றவற்றால் தேர்தல் ஜனநாயகம் இல்லை என அக்கட்சித் தலைமையால் காரணம் கூறப்பட்டது.

அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு கடந்த அக்டோபரில் நடைபெற்ற திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட்டு தோல்வி அடைந்தது. எனவே, திருச்சி மேற்கு இடைத்தேர்தல் அனுபவத்தை கொண்டு சங்கரன்கோவில் இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருதியதாக கூறப்படுகிறது. அந்த கருத்து கட்சித் தலைமையை எட்டும் வகையில் பல மட்டங்களிலும் கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த சட்டப் பேரவைத் தேர்தலை மதிமுக புறக்கணித்ததால் அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியானது. அடுத்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. இது கட்சியின் பொதுச்செயலர் வைகோவையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தியது.

எனவே, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு அரசியல் களத்தில் தமது இருப்பை உணர்த்துவது என மதிமுக முடிவு செய்தது. அதற்காக, அதிமுகவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தீவிரமான தேர்தல் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியை உள்ளடக்கிய சங்கரன்கோவில் தொகுதியில் மதிமுகவுக்கு கணிசமான வாக்கு வாங்கி உண்டு.

கடந்த 1996 சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட், ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மதிமுக சுமார் 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. அடுத்து 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு சுமார் 21 ஆயிரம் வாக்குகளை பெற்றது.

இப்போதைய இடைத்தேர்தலில் இரண்டாவது இடத்தையாவது பெற்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில் மதிமுக தலைமை தீவிரமாக உள்ளது. அவ்வாறு நிரூபித்தால்தான் 2014 மக்களவைத் தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், கணிசமான தொகுதிகளைப் பெறவும் தளம் கிடைக்கும் என கருதுவதாகத் தெரிகிறது.

திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலினை ஏற்க மறுத்து அக்கட்சியிலிருந்து வெளியேறிய வைகோ, அதன் பின்பு திமுகவுடன் கூட்டணியும் வைத்துக் கொண்டார்.

எனினும், இரு தரப்புக்கும் இடையிலான "கசப்பு' மறைந்து விட்டதாக கருத இடமில்லை. எனவே, மதிமுகவின் அரசியல் வளர்ச்சியை திமுக ஒருபோதும் ஏற்காது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

இந்த சூழ்நிலையில், சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் திமுக போட்டியிடாவிட்டால் அது மதிமுகவுக்கு சாதகமாக அமையும். மதிமுக இரண்டாவது இடத்தைப் பெற்றுவிட்டால் அதன் "அரசியல் வாழ்வு' அடுத்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு நிலைப் பெற்று விடும். அது திமுகவுக்கு நல்லதல்ல என்பதோடு, அதற்கு திமுகவே வழிவகுத்து விடக் கூடாது என்பதில் அக்கட்சித் தலைமை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக இரண்டாவது இடத்தைப் பெற்று, அரசியல் களத்தில் பிரதான எதிர்க்கட்சி தான்தான் என்பதை நிரூபித்தது.

அதேபோல், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வெற்றி உறுதியில்லை என்றாலும் இரண்டாவது இடத்தைப் பெற்று மதிமுகவை ஓரங்கட்ட வேண்டும் என்பதில் திமுக தலைமை உறுதியாக இருப்பதன் வெளிப்பாடே போட்டி முடிவு என்பது அக்கட்சியினரின் கருத்து.

தினமணி



சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 19 Feb 2012 - 12:57

அண்ணா ,யார் வந்தாலும் நமக்கு ஒரு பைசா உபயோகம் இருக்க போவதில்லை
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun 19 Feb 2012 - 13:37

இரா.பகவதி wrote:அண்ணா ,யார் வந்தாலும் நமக்கு ஒரு பைசா உபயோகம் இருக்க போவதில்லை
மிகவும் நன்றாகச் சொன்னீர்கள் பகவதி avargale மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 19 Feb 2012 - 13:43

நன்றி அய்யா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக