புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
58 Posts - 59%
heezulia
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
24 Posts - 24%
mohamed nizamudeen
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
53 Posts - 58%
heezulia
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
22 Posts - 24%
mohamed nizamudeen
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 9 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ருசி (குறுநாவல்)


   
   

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:19 am

First topic message reminder :

இரும்புக்கட்டிலின் படுக்கை விரிப்பில் தூங்கிக்கிடந்த மூர்த்தி அவசரமாக விழித்துக்கொண்டான். அவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கல்லூரி விடுதியில் யாரும் இல்லை. எல்லாரும் படிப்பு விடுமுறைக்காக அவரவர் ஊருக்குப் போய்விட, மூர்த்தியும் இன்னும் கொஞ்சப்பேரும் விடுதியிலேயே தங்கிவிட்டார்கள்.

அவர்களின் கிராமத்து வீட்டில் மின்சாரம் கிடையாது என்பதாலும், அவ்வளவாக அங்கு படிக்க வசதியில்லாததாலும்(வயல்காட்டு வேலைகள், கொசுக்கடி, நண்பர்கள் தொல்லை) அவன் இங்கேயே தங்கிப்படிப்பது என்று முடிவெடுத்திருந்தான்.

அவன் நெகிழ்ந்துகிடந்த கைலியை அவிழ்த்து மீண்டும் சரியாகக் கட்டிக்கொண்டு, வராண்டாவுக்கு வந்தான். விடுதிக்குக் குறுக்காக கருமையாகக் கிடக்கும் தார்ச்சாலையில், மத்தியான வெயில் பாதரசம் போல் உருகி வழிந்தோடிற்று. வராண்டாவைச் சுற்றி அடர்ந்திருந்த புங்கைமரக் கிளைகளில் சில காகங்கள் தியானம்போல் அமைதியாய் துயில்கொண்டிருந்தன. அதிலொன்று, அலகால் தன் றெக்கையை மெதுவாகக் கோதிவிட்டுக்கொண்டிருந்தது. அங்கிருந்த நுனாமரப் பூக்களுக்கிடையில் தன் சின்னஞ்சிறு வாலை மேலும் கீழுமாய் உயிர்ப்புடன் ஆட்டியபடி, இங்குமங்கும் தாவிக்கொண்டிருந்தது தேன்சிட்டொன்று.

மூர்த்திக்குப் பசியெடுத்தது. அறைக்குத் திரும்பி அலமாரியில் இருந்த அவனது கனமான வெண்ணிற ஹெச்.எம்.டி. கடிகாரத்தை எடுத்து மணிபார்த்தான். ரெண்டாகப் பத்துநிமிடம் இருந்தது.

கல்லூரி மெஸ் மூடிவிட்டபடியால், அங்கிருந்து அரைக்கிலோமீட்டர் தள்ளியிருந்த தனியார் மெஸ்ஸ¤க்குப் போய்த்தான் சாப்பிட்டுவர வேண்டும்... அதுவரை நடக்கவேண்டும் என்பதை நினைத்தாலே மிகவும் அலுப்பாகவும் அசதியாகவும் இருந்தது.

வராண்டாவில் நடந்து சதுரமாய் இருந்த விடுதியிம் ஒரு ஓரத்தில் இருந்த பொதுக்குளியலறைக்குப் போய் முகம்கழுவி வந்து, சிவப்புநிறக் காசித்துண்டை அறையோரமாய் கட்டியிருந்த கம்பிக்கொடியில் இருந்து உருவியெடுத்து, முகத்தைதுடைத்தபடி , கட்டிலில் அமர்ந்தான். அவனது அறைத்தோழன் மனோகரின் கட்டில் எதிரே வெறுமையாகக் கிடந்தது. அதைத்தாண்டி மனோகர் சுவரில் ஒட்டிவைத்திருந்த ரவீணா டாண்டனின் முக்கால் சைஸ் வண்ணப்படம் எங்கேயோ பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தது. அவன் அந்தப்படத்தின் இடைப்பாகத்தில் தன் விழிகளைப் படர்த்தினான். அவனுள் ஒரு உற்சாகம் படர ரம்பித்தது. களைப்பு கொஞ்சம் வடிந்துவிட்டதுபோல் ஆயிற்று.

சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். சட்டைப்பையில் ஏதேனும் சில்லறை இருக்குதா என்று தட்டிப்பார்த்துக்கொண்டான்.

கொஞ்சதூரம் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் தலையில் சுள்ளென்று வெயில் அறைந்தது. சாலையில் மருங்கில் வரிசையாய் கருகியதுபோல் கருவேல மரங்களாய் நின்றபடியால், நிழலில் ஒதுங்கி நடக்க முடியவில்லை. இந்தக் காரைக்குடியே இப்படித்தான். சரளைமண் பூமி. வருஷம்பூரா கோடைபோல்தான் இருக்கும்.

அவன் சாப்பிடப்போகும் அய்யர் மெஸ்ஸில் அவனுக்கு அக்கௌண்ட் இருந்ததால், மாதக்கடைசியில் பணம் கட்டினால் போதும்.

அப்பா கிராமத்தில் விவசாயிதான் என்றபோதும் அவனிடம் அடிக்கடி "நல்லா சாப்ட்டு உடம்பைத் தேத்துடா...இப்பிடியா நோஞ்சாங் கணக்கா இருக்குறது!" என்று அடிக்கடி சொல்வார். அதை இப்போது நினைத்து லேசாகச் சிருத்துக்கொண்டான்...என்ன சாப்பிட்டாலும் உடம்பு தேறமாட்டேங்குதே... என்ன செய்யிறது என்று தனக்குத்தானே முனகிக்கொண்டான்...அவன் நிழலும் அவன் காலடியில் பதுங்கி அவனோடேயே நடந்தது. சற்றுத் தள்ளியிருந்த கொல்லங்காளி கோயில் பேருந்து நிறுத்த நிழற்குடையில் யாரோ ஒரு பெண் உட்கார்ந்திருந்ததுபோல் பட்டது.

உற்சாகம் பீறிட, அவன் நடையில் வேகம் கூடியது. அவன் நிழலும் அவனோடு வேகமாய் நகர, தலை மிகவும் சூடுகண்டது. தலையில் கைவைத்துப்பார்த்தான். கொதித்தது.

அவனுக்கு திடீரென்று அய்யர் மெஸ் புவனேஸ்வரியின் முகம் காட்சியானது. நேற்றிரவு இவன் சாப்பிடும் பெஞ்சுக்கு எதிரில், அவள் வீட்டின் உள்ளிருந்த ஆட்டுக்கல்லில் கையால் மாவரைத்துக்கொண்டே இவனை வைத்தகண் வாங்காமல் பார்த்தாள். நல்ல கொழுகொழுவென்று மதர்ப்பாக இருந்தாள். தன் மகள் பி.காம்., அஞ்சல் வழியில் படிப்பதாக அய்யர் அடிக்கடி பரிமாறிக்கொண்டே சொல்வார். அவர் இவனிடம் மட்டும்தாம் இவ்வளவு வாஞ்சையாகப் பேசுவதுபோல் பட்டது. மாமியும் அப்படித்தான். இவனுக்கென்று மேலும் ஒரு அப்பளம் எடுத்துவந்து சத்தமில்லாமல் இலையில் வைத்துவிட்டு, "நன்னா சாப்டூங்கோ...அப்பத்தானே ஒடம்பு தேறும்?" என்று கேட்டுவிட்டு மூக்குத்தி மின்ன சிருத்துக்கொண்டே சமயல்கட்டுக்குப் போவாள்.

பஸ் ஸ்டாப் நெருங்கிவிட்டிருந்தது. அதுவரை குனிந்துகொண்டே நடந்தவன், பஸ் ஸ்டாப் நிழற்குடையை நோக்கி ஆவலுடன் முகத்தைத் திருப்பினான். அவன் அங்கு கண்ட காட்சி அவனுக்கு மகா வெட்கத்தைக் கொடுத்துவிட்டது. தூரத்தில் வரும்போது அவன் பெண் என்று நினைத்த அந்த உருவம், இப்போது நல்ல பூப்போட்ட கைலியைக் கட்டி ஆணாக மாறிவிட்டிருந்தது! அட ராமா! அவனுக்கு யாரோ முகத்தில் ஓங்கி அறைந்ததுபோலாகிவிட, முகத்தைத் திருப்பிக்கொண்டு கிட்டத்தட்ட ஓடாத குறையாக மெஸ்ஸை நோக்கி நடையைக்கட்டினான். அவனுக்கு புவனேஸ்வரியின் சிரித்தமுகம் இப்போது காட்சியாக, அவள் இவனைப்பார்த்து கிண்டலும் கேலியாகவும் சிரிப்பாதுபோல் பட்டது...

முகத்தில் தாறுமாறாக வழிந்துகொண்டிருந்த வேர்வையை, குனிந்து கைலியின் முனையால் துடைத்துக்கொண்டு நடந்தான். இன்று புவனேஸ்வரியைப் பார்க்க முடியுமா?...பார்க்க முடியும்...பார்த்தாக வேண்டும்... மூளையில் ஒருவித வெப்பம் படர மெஸ்ஸை நோக்கி வேகநடைபோட்டான் மூர்த்தி.


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:13 am

வள்ளி கொண்டுவந்த கொழுக்கட்டையெ குழந்தை போல் ஆவலுடன் கடிச்சுச் சாப்ட்டா நந்து. அவளையே பார்த்துக்கிட்டிருந்த வள்ளியிடம்,"என்னடி..பலத்த யோசனே..? நான் கொழுக்கட்டை சாப்டுற லட்சணம் அவ்வளவு கேவலமாவா இருக்கு?" வாய் நிறைய கொழுக்கட்டையை அதப்பியவாறு கேட்டாள் நந்து.

நந்தக்காவோட தாத்தா பக்கத்து கிராமத்துக்கு கோழி வாங்கப் போயிட்டார்.அவர் வீட்டிலிருந்தால் வள்ளிக்குத் தெம்பாக இருக்கும்.. "பேயாவது, பிசாசாவது..எல்லாம் வெறும் கதைடி வள்ளி! தாத்தா எப்பிடியிருந்தவன் தெர்யுமா! ஊருக்கு ஒரு வைப்பு இருந்துச்சி வள்ளி எனக்கு! நீதான் இப்ப தாத்தாவெக் கட்டிக்கடின்னா கட்டிக்க மாட்டேங்குறே! ம்ஹ¤ம்.. இப்பத்தான் இப்டி வத்திப்போன சீக்குக்கோழியா ஆய்ட்டேன்!..எம்பேத்தி நந்தினிக்குக்கூட என்னாலெ கஞ்சி ஊத்தமுடியலே.." என்று அழுவார் தாத்தா.

தாத்தா எப்பவும் முற்றத்தில் கயிற்றுக்கட்டிலைப்போட்டு படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்து ஏதாவது பழங்கால சினிமாப்பாட்டைப் பாடியபடியே தூங்கிப்போவார். எல்லாம் அவர் காலத்துப் பாட்டுகதான்! அடிக்கடி "பாகவதர் பாட்டு, கலைவாணர் பாட்டுதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும் வள்ளி! அவரும் மதுரமும் நடிச்சாங்கண்டா அப்டியே வச்சகண் வாங்காமெ பாத்துக்கிட்டெ இருப்பேன்!" அப்டீம்பார்.

முன்பெல்லாம் தாத்தா சுத்துப்பட்டு கிராமம் பதினாறுக்கும் பெரிய்ய கோழி யாவாரியாக இருந்தவராம். அவர்தான் இப்பிடி அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பார். வள்ளிக்கு ஆச்சிரியமா இருக்கும். அவர் பேருகூட பலபேருக்கு இப்பவும் தெரியாது. ஊர்லெ எல்லாரும் நந்தக்காவெக்கூட ‘கோழிக்கார்ரு பேத்தி’ அப்டீண்டுதான் கூப்புடுவாக! இப்ப பாவம் தாத்தா! வயசாகி கண்தெரியாமப் போச்சு அவருக்கு! அவர் கோழி யாவாரத்துக்கு வச்சிருந்த சைக்கிள் துருப்பிடிச்சு திண்ணையிலே ஒரு ஓரமாக்கெடக்கு. அதெ எடக்கிப்போட்டாக்கூட அஞ்சுபத்து கெடைக்கும்.. பிடிவாதமா அதெ விக்கக்கூடாதுண்டுட்டார் தாத்தா.அவர் செத்தப் பிறகுதான் அதெ விக்கணுமாம்!

கொழுக்கட்டையை அவசர அவசரமாய் விழுங்கிக்கொண்டிருந்தாள் நந்தினி. அவளுக்குத் திடீரென விக்கலெக்க ஆரம்பித்தது. வள்ளி எழுந்து அவசரமாய் வீட்டுக்குள் ஓடி ஒரு டம்ளரில் தண்ணிகொண்டுவந்து நந்துவின் வாயில் குடிப்பதற்குத் தோதாய் வைத்தாள்.. தண்ணியை குழந்தைபோல் எச்சிவைத்துக் குடித்தாள் நந்தினி. வள்ளிக்கு இப்போது நந்தினி ஒரு சின்னக்குழந்தைபோல் தெரிந்தாள்! நந்துவின் கண்களில் சரஞ்சரமாய் நீர் உகுந்து கன்னங்களில் கோடுகோடாய் வழிந்தது.அவள் வள்ளியின் முகத்தை ஏறிட்டுப்பார்த்தாள்.கண்ணீரின் ஊடே தெரிந்த வள்ளியின் முகத்தில் நந்தினி ஏழெட்டு வருஷம் முன்பு பார்த்திருந்த அவள் அம்மாவின் முகம் மங்கலாய்த் தெரிந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:14 am

பஸ்சின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து இருளில் எதிர்த்திசையில் விரைந்தோடும் மரங்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. அவனுள் விதவிதமான நினைவுச் சுழல்..

எல்லாத் தேர்வும் எப்படியோ காமாசோமாவென்று முடிஞ்சிருச்சு. அடுத்த செமஸ்டர் ஆரம்பிக்க இன்னும் இருபது நாளுக்குமேல் ஆகும். அதுவரை மாமி மெஸ்சில் தங்கி வெட்டியா சாப்பிட்டுக்கிட்டு இருந்தா அப்பா நொந்து போவார். அடுத்து ஒரு வேலையும் இல்லாமே எப்பிடி ரெண்டு மூணு வாரத்துக்கு ஒரு எடத்துலே இருக்குறது..

தட்ஷிணி இந்நேரம் ஊர்போய்ச் சேர்த்திருப்பாள். அவளை நினைக்கையில் அவனுக்கு வயிறு சில்லிட்டு மூளையில் புது ரத்தம் பாய்ந்தது. அவள் அவனுக்கு ஒரு புறாவைப்போல் தெரிந்தாள்.அவள் நடை, அசைவு, அவளது கச்சிதமான அளவான சின்னதுமில்லாத, பெரிதுமில்லாத உடல், முகம், நல்லபாம்பு படம் எடுத்தது போன்றிருந்த அவள் ஜடை, லேசான பூனைமுடி வளர்ந்திருக்கும் கைகள், அழகழகான பிஞ்சு விரல்கள், சற்றே முன்பின்னாக இருந்த அளவான முன்பற்கள், நெளிநெளியாய் வரியோடிய உதடுகள், தேன்போல் வழிந்தோடி அவனை தன்னுள் ஈர்க்கும் மயக்குக் குரல்..அவள் சிரிப்பு..சிணுங்கல்..கோபம்.. தானே சிரித்துக் கொண்டான் மூர்த்தி. பக்கத்துச் சீட்டுக்காரன் அவனை ஒரு மாதிரியாகத் திரும்பிப்பார்க்க, "ஹலோ சார்..டைம் என்ன இப்போ?" என்று அவனிடம் பேசி சமாளித்தான்.

அவனை ஏற இறங்கப் பார்த்த பக்கத்து சீட்காரன், தன் மணிக்கட்டைப் பார்த்து, "டைம் ஒம்பதரை.." என்றான். ரெண்டு நாளைக்கு முன்பு தேர்வு முடிந்தும் இப்போதுதான் ஊருக்குப் போகிறான் மூர்த்தி. புதுக்குடிக்கு-நந்தினி வீட்டுக்குப் போகாமல் ஊருக்குப்போக மனசில்லை! முந்தாநாள் அவள் வீட்டில் அவளோடுதான் தங்கியிருந்தான் மூர்த்தி.

"காக்கா கத்தும்போதே நெனைச்சேன் நீங்க வருவீங்கன்னு." என்று அவன் மடியில் படுத்து அவனுக்கு ஒரு சின்னஞ்சிறு புளியம்பிஞ்சை ஊட்டிவிட்டாள். அப்புறம் தனக்குத்தானே சிரித்துக்கொண்ட நந்தினி, "கொஞ்ச நேரத்துக்கு முந்திதான் நீங்க வெள்ளைக்குதிரையிலே ராசாமாதிரி வர்றாப்லெ கனவுகண்டேன்! அதே மாதிரி வந்துட்டீங்க!" என்றாள். மெலிதான இசைபோலிருந்தது அவள் குரல். அக்குரலில் மெலிதான ஆண்குரல் ஊடோடியது. அது அவள் குரலுக்கு ஒரு தனிக்கவர்ச்சியைக் கொடுத்தது!

இந்த ஸ்டடி லீவ்லெ என்னென்னெல்லாம் நடந்துபோச்சு! எவ்ளோ அனுபவம்! எவ்ளோ அலைச்சல்! எவ்ளோ வலி! எவ்ளோ இன்பம்! பஸ்சின் இரைச்சல் அவன் காதுகளில் ஒரு வாத்திய இசையென இறங்கி வெட்டவெளியில் வழிந்தோடியது. ஜன்னல்வழி விஸ்ஸெனப் புகுந்து அவன் காதுமடல்களில் ரகசியமாய் சங்கீதம் பாடியது சூடான மென்காற்று. அவன் முடிக்கற்றை காற்றின் பாடலுக்கேற்ப முன்னந்தலையில் எழுந்தாடி மகிழ்ந்தது.. நந்தினியோடு நேற்றுமுழுக்க இப்படித்தான் இருந்தான் மூர்த்தி.. இந்தக் காற்றுபோல் மென்மையானவள்தான் நந்தினி. கிராமத்துக் காற்று அவள். அவள் அவன் மடியில் படுத்து அவன் முடிக்கற்றையை எப்போதும் கோதிக் கொண்டேயிருந்தாள் ராத்திரிபூரா..அவள் அவன் கண்ணுக்கு ஒரு சின்னஞ்சிறு புளியம்பூ மாதிரி தெரிந்தாள்! அதனால்தான் அவன் விடியவிடிய தேன்சிட்டாய் மாறி மீண்டும் மீண்டும் அவளிடம் தேனெடுத்தான். இது போதும், இந்த லீவு முழுக்க இதைவச்சே - இந்த நினைப்பிலேயே ஓட்டிடலாம்!

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:14 am

மூர்த்தி தலைமுடியைக் கோதிக்கொண்டான்..அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஊர் எப்படா வரும் என்றிருந்தது. இன்னும் பத்திருபது நாளைக்கு அவனுக்கு ஆற்றிலும் வயல்வெளியிலும்தான் வாசம். கிராமத்தில் மாமரங்களும், கொய்யாமரங்களும் சூழ்ந்த தோப்புகளில் நண்பர்களோடு சுற்றித் திரியவேண்டியதுதான்.. ச்சே! பேசாமெ மெஸ்ஸிலேயே தங்கியிருந்திருக்கலாம். என்னமாய் அழுது அடம்பிடிக்கிறா மாமி குழந்தைபோல! நான் ஊருக்குப் போவது அவளுக்கு சுத்தமாப் பிடிக்கலை! ஏன் இப்படி இருக்குறா மாமி! அவள் என்னிடம் என்னதான் எதிர்பார்க்குறா?

"ஊர்லெபோய் என்னடாம்பீ பண்ணப்போறே! பேசாமே இங்கேயிருந்து அடுத்த செமஸ்டர் பாடங்களைப் படிக்கலாமோன்னோ! முன்கூட்டியே படிச்சிட்டா நோக்குத்தானேடாம்பீ நல்லது?"

இப்படி நேரடியாகவே அவள் விருப்பத்தைச் சொல்லிவிட்டாள் மாமி. புவனாவும் அதை அமோதித்தாள். அவன் விடாப்பிடியாக மறுத்துவிட்டான்,

"இல்லெ மாமி, நா ஊருக்குப் போகலைன்னா அப்பா என்னெ இங்கெ தேடிக்கிட்டு வந்துருவாரு மாமி. ஹாஸ்டல்லே போயி தேடுவாரு.மனோகர் இங்கெ நா மெஸ்ஸ¤லெ தங்கியிருக்குறதைச் சொல்லிடுவான்.நேரா இங்கெ வந்துருவார்அப்றம் அவ்வளவுதான்! திருப்பி என்னெ ஹாஸ்டலுக்கே அனுப்பிடுவார்.அடுத்த செமெஸ்டரும் அங்கெதான் தங்கணும்னு அடம்பிடிச்சார்னா அப்றம் நா ஒண்ணும் பண்ணமுடியாது!"

பழ்¢யை அப்பாமேல் போட்டுவிட்டு தப்பித்துக்கொண்டான்..அவன் அப்படிச்சொன்னபிறகுதான் மாமி அவனை விட்டாள்! ஆனாலும், அவன் கிளம்பும்போது அவள் முகம் களையிழந்து கூம்பிப்போனதை அவனால் நன்கு உணரமுடிந்தது. பஸ் நிலையம் வந்தபிறகும் அவன் மாமி மெஸ்ஸ¤க்கு திரும்பிவிடலாமா என்று யோசித்தான். கொஞ்சதூரம் திரும்பி நடந்தும்விட்டான். ஆனால் அந்தத்திட்டம் சரியெனத் தோணலை!

திட்டம்....'திட்டம்' என்றதும்தான் நினைப்பு வருது, நந்தினிக்கு வேலைகொடுத்து அவளை அங்கேயே தங்கவைத்துக் கொள்ள மாமி சம்மதித்ததே எனக்காகத்தானே! அப்பத்தான் அடுத்த செமெஸ்டருக்கும் நான் மெஸ்ஸில் வந்து தங்குவேன் என்றுதானே தீர்மானித்திருந்தாள் மாமி! அது அவள் பேச்சிலும் நடவடிக்கையிலும் நல்லாத் தெரியுதே, "உனக்காகத்தாண்டாம்பீ நந்தினியே மெஸ்சுலெ வேலைகுடுத்து இங்கேயே தங்கிக்கவும் வச்சிருக்கேன்! அய்யருக்கு இதெல்லாம் பிடிக்கலே தெரியுமோ? புவனாவுக்கும் பிடிக்கலேடா, நந்தினி இங்கே தங்குறது! அதெ விடு, நன்னா ஞாவகம் வச்சுக்கோ! நீ சத்தியம் பண்ணிருக்கே! அடுத்து ரெண்டுவருஷத்துக்கு இங்கேதான் தங்குவேன்னு ஏங்கையிலெ அடிச்சு சத்யம் பண்ணிருக்கே! அதுக்காகத்தான் நீ சொன்னதெல்லாம் சரிசரின்னு பூம்பூம்மாடாட்டம் செஞ்சுண்டிருக்கேன்.." சொல்லி முடிக்கையில் மாமியின் குரல் தழுதழுத்தது.

அதை நினைக்கையில் இப்போதும் ஆச்சர்யம் தாளவில்லை. இப்படியொரு உறவும் பந்தமும் படிக்கிற காலத்தில் எனக்குக்கிட்டும்னு யாருக்குத் தெரியும்? நேற்றிரவுகூட நந்தினி மெஸ் மாடியில் உள்ள கீற்றுக்குடிலில்தான் தங்கியிருந்தாள். ஆனால் மூர்த்தியால் அங்கு போகமுடியலை. மாமி ராத்திரி பத்துமணி வரைக்கும் அவளிடம் வேலைவாங்கிட்டு, நந்தினிகூடவே மொட்டை மாடிக் குடிலுக்குப்போய் அவளிடம் பேசியிருந்துட்டுத்தான் வந்தாள். அப்படி நேரத்தில் நந்தினியுடன் அவனால் பேசக்கூட முடியாமல் போனது.

நந்தினியிடம் மாமி என்னென்ன பேசிக்கொண்டிருந்தாளோ தெரியாது. இன்று காலையில் மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டிருந்தப்போ நந்தினிதான் இட்லி வைத்தாள். அப்போ முகத்தைக்கூட சரியாப் பார்க்கலை. எதும் பேசவும் இல்லை!

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:14 am

ஒருவேளை, மாமிக்கு அரசல்புரசலாக நந்தினிக்கும் எனக்கும் உள்ள உறவு தெரிஞ்சிருக்குமோ! காலையில் மாமி அவனை ஒரு மாதிரியான புன்னகையுடன் பார்த்ததிலிருந்துதான் அவனுக்கு அப்படியொரு யூகம் கிளம்பிடுச்சு! நேத்து ராத்திரி நந்தினியோட பேசுனப்போ அவ வாயைக்கிளறி எல்லா விவரமும் தெரிந்து கொண்டாளோ மாமி. மாமிதான் பேச்சில் கில்லாடியாயிற்றே! பாவம் நந்தினி! மாமியிடம் என்னத்தை உளறிக்கொட்டினாளோ!

"நான் மூர்த்திக்கு தூரத்துச் சொந்தம் என்று மட்டும் சொல்லிடு நந்தினி. மாமி எனக்காகத்தான் உன்னையெ வேலைக்குச் சேர்க்குது. அங்கே வந்து வேறெதையும் உளறிக்கிட்டிருக்காதே!" என்று எச்சரித்துதான் டவுன்பஸ்ஸில் கூட்டிவந்தான். அவளை மெஸ்ஸில் வேலைக்குச் சேர்த்துவிட்டுப்போக வள்ளியின் அப்பாவும் வந்திருந்தார். அவர் அவனிடம் "ரொம்ப நன்றி தம்பீ! மாமியப் பாத்தா நல்லமாதிரிதான் தெரியுது! நந்தினி அதுபாட்டுக்கு அதுவயித்தக் கழுவுனா போதும்.அவ தாத்தா அவர்பாட்டுக்கு நாலு கோழிய வாங்கி, வித்துப் பொழச்சிருவாரு." என்று சொல்லிவிட்டு லேசாய் கண் கலங்கினார்.

"ஏதோ என்னாலெமுடிஞ்ச ஹெல்·ப்.. பண்ணினேன்.. நீங்க அப்பப்ப வந்து நந்தினியெப் பாத்துட்டுப் போங்க!" என்று அவரை அனுப்பிவைத்தான். அவர் பஸ் ஏறுமுன் "நந்தினிக்கு நீங்கதான் தம்பீ தெய்வம்! நீங்கதான் ரயில்லேர்ந்து காப்பாத்துனீங்க! இப்ப அவ பட்டினியாலெ சாகாமெ இருக்கவும் உதவி பண்ணியிருக்கீங்க! எல்லாம் விதிப்படி நடக்கும் தம்பீ!" என்று சொல்லி அவனை இருகைகூப்பி கும்பிட்டார்.

"சும்மாருங்க சார்! எங்கையிலே என்ன இருக்கு சொல்லுங்க! எல்லாம் தன்னாலெ நடக்குது! நா ஒரு கருவி, அவ்வளவுதான்!" என்றான் மூர்த்தி. எனக்கு இப்படியெல்லாம்கூட பேசவருமா! சாயந்தரம் அவன் ஊருக்குக் கிளம்பும்போது மெஸ்சில் பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்த நந்தினி கண்ணைக் கசக்கிக்கொண்டாள். மாமி மனசேயில்லாமல் "சரி! நல்லவிதமாப் போயிட்டு சமத்தா வந்துடு! இந்த மாமியெ மறந்துறாதே! அப்புறம் மாமியெ நீ பாக்கமுடியாது! ஆமா!" என்றாள்.

மீண்டும்மீண்டும் ஏன் இப்படி மிரட்டுகிறாள் மாமி! நான் அடுத்த செமஸ்டர் மெஸ்ஸ¤க்குப் போனால் என்னென்ன விபரீதமெல்லாம் நடக்குமோ தெரியாது! மெஸ்ஸ¤க்குப் போகாவிட்டாலும் ஏதாவது விபரீதம் நடந்திருமோ!

நந்தினி அவனிடம் மெஸ்ஸில் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு விஷயத்தைக் குறிப்பாகவும் சுருக்கமாகவும் சொல்லிவிட்டாள். அதாவது அவள் அவன் முகத்தை மட்டும் பாத்துக்கிட்டிருந்தா போதுமாம்! அவள் அவனை வேறெந்த வகையிலும் தொந்தரவுசெய்யமாட்டாளாம் "எனக்கு நீங்க எம்பூட்டு செஞ்சிருக்கீங்க! நான் உங்களுக்கு தொந்தரவு செய்யலாமா! உங்களுக்கு எது பிடிச்சுருக்கோ அதைச் செய்ங்க! நல்லவிதமா ஊருக்குப் போயிட்டு வாங்க! இப்பத்தான் எனக்கு உயிர் வாழணும்னு ஆசையாயிருக்கு! என்னெப்பத்தி இனி நீங்க கவலைப்படவேணாம்! நா இனி சாகவே மாட்டேன்!"

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:14 am

அப்போது மாமி வந்துவிட்டாள். அவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்டிருப்பாளோ! மாமி இருக்கும்போது நந்தினியிடம் அவன் அதிகம் பேச விரும்பவில்லை! அப்போது மாமி அதிரடியாய் ஒரு செய்தியைச் சொன்னாள், "மூர்த்திப் பையா! இந்த மாமிக்கு எல்லாம் தெரியும் கண்ணூ! நீ நந்தினி, நந்தினின்னு பொலம்புனப்பவே நா எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டேன்! பத்தாக்கொறைக்கு ராத்திரி நந்தினியும் எல்லாத்தையும் உளறிட்டா! ஆனா, எனக்கு அதைப்பத்தியெல்லாம் கவலையில்லே! இந்த மாமி எல்லார்மாதிரியும் கிடையாது! ரொம்ப வித்யாசமானவடாம்பீ! புரியறதோ?"

உண்மையில் ஒண்ணும் புரியவில்லை மூர்த்திக்கு! அவன் தேமே என்று முழிப்பதை ரசிப்புடனும் புன்முறுவலுடனும் பார்த்த மாமி, அவன் அருகில்வந்து கிசுகிசுப்பான குரலில். "ஆதாயம் இல்லாமே ஆத்தக்கட்டி எறைக்க மாட்டா எவளும். உனக்கு நந்தினி தினமும் வேணும்! எனக்கு நீ வேணும்! இப்பப் புரியறதாடாம்பீ!"

"என்ன சொல்றீங்க மாமீ?" அவன் திணறினான்.

"ஒண்ணும் தப்பா நெனச்சிக்காதேடாம்பீ! நீ எப்ப வேணாலும் நந்தினிகூடப் பேசலாம், வைக்கலாம்.. அதே மாதிரி ஏங்கூடயும் இருக்கணும்!" மூர்த்தி அதிர்ந்து சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டான்

"எதையும் தப்பா எடுத்துக்காதேடா மண்டூ! தினந்தினம் நான் உன்னைப் பாத்துகிட்டு, பேசிக்கிட்டு இருக்கணும்! இல்லாட்டி எனக்கு மண்டைக்கொழப்பம் வந்துடும், சொல்லவேண்டியதெ சொல்லிப்பிட்டேன்! அப்றம், நீதாண்டாம்பீ பாத்துக்கணும்!"

அதற்குமேல் அங்கு நில்லாமல் வீட்டுக்குள் ஓடிவிட்டாள் மாமி.

பஸ் வேகமாய் விரைந்தோடி ஏதோவொரு ஊருக்குள் நுழைந்திருந்தது. அது என்ன ஊரா இருக்கும்? ஜன்னல்வழி வெளியில் பார்த்தான். அங்கு ஒரு மின்விளக்குக்குக் கீழ் "மாயாபுரி" என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:19 am

"எம்புட்டுக் கஷ்டப்பட்டுப் படிச்சு பரிச்சை எழுதுச்சோ பிள்ளெ! அதான் ஒம்பதுமணிவரைக்கும் தூங்குது! நைட்டு பத்தரைக்கு மேலேதான் வந்துச்சு!"

வாசலில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தாள் அம்மா. யாரா இருக்கும்? போர்வையை விலக்கிவிட்டு வாசல்பக்கம் பார்த்தான் மூர்த்தி. வெயிலில் மின்னிப் பளபளத்தன ரெண்டு கொலுசுப்பாதங்கள்! யாராயிருக்கும்? பாயைவிட்டெழுந்து கண்ணைத்துடைத்தபடி வெளியே வந்தான். வாசலில் ஜோதி நின்றுகொண்டிருந்தாள். மெல்லிய ரோஸ்நிறச் சேலையில் பஞ்சுமிட்டாய்போல் புசுபுசுவென்றிருந்தாள் ஜோதி.

ஜோதி கிருஸ்தவப் பெண். அவனுக்கு சின்னவயசில் c.a.t. cat, r.a.t. rat என்று இங்லீஷ் சொல்லிக்கொடுத்தவள். அப்போதிலிருந்து அவள் அப்படியேதான் இருக்கிறாள் அகண்ட கருகருப்பான மையிட்ட கண்கள், ஒளிரும் முகம், கருணைததும்பும் பார்வை.

"என்ன மூர்த்தி..செமெஸ்டர் எக்ஸாம் முடிஞ்சிருச்சா?"

"ம்ம்..முடிஞ்சிருச்சுங்க.." என்றபடி வாசலில் இருந்த பித்தளைக் குடத்தில் நீரள்ளி முகம் கழுவினான். அம்மா குப்பைமேட்டுப்பக்கம் போய் ஏதோ குப்பையைக் கொட்டிக்கொண்டிருந்தாள்.

"ரொம்ப வளந்துட்டே மூர்த்தி இப்ப. நான் உன்னைப் பார்த்து ரொம்பநாள் ஆச்சா, நீ இன்னும் சின்னப் பையனாத்தான் இருப்பேன்னு நினைச்சிட்டேன்!" சொல்லிவிட்டு கலகலவெனச் சிரித்தாள் ஜோதி, "அய்ய்..மீசையெல்லாம்கூட மொளைச்சிருக்கு!"

"ஏய்..ஜோதி..அவன் ரொம்பக் கூச்சப்படுவாம்மா, அவனைக் கிண்டல் பண்ணாதே!" என்றபடி குப்பைக்கூடையுடன் வந்தாள் அம்மா.

அவனுக்கு சுரீர் என்றது. நான் கூச்சப்படுவேனா! அப்படின்னா காலேஜில் இத்தனைநாள் அடித்த லூட்டிக்கு என்ன பேர்!

இந்த ஜோதியிடம் பேசுவதும் நேருக்குநேர் அவள் கண்களைப் பார்ப்பதும் கஷ்டம்தான்! ஜோதியின் பளீரெனத் துலங்கும் அழகு அவனை திக்குமுக்காட வைப்பது உண்மைதான்.அவள் அவன் மூணாங்கிளாஸ் படிக்கும்போது " w.o.m.a.n - woman சொல்லுபாக்கலாம்...” என்றபொழுதே அவள் முகத்தைப்பார்த்து வெட்கி நெளிந்தான் அவன்!அது இப்பவும் தொடர்றதுதான் ஆச்சர்யம்!

அவளது அகண்ட விழிகளை மீண்டும் பார்க்கணும்போல் தோணிற்று. "இப்போ என்ன பண்ணிட்டிருக்கீங்க?" என்று அவள் கண்களை நேராய்ப் பார்த்துக் கேட்டான். அவன் அப்படி தைரியமாக தன்னைப் பார்த்தது ஜோதிக்குள் கிளர்வை உண்டுபண்ணியிருக்கணும், அவள் தன் கண்ணகல அவனைப்பார்த்துப் புன்னகைத்து, "எம்.எஸ்ஸி மாத்ஸ் முடிச்சிட்டு தஞ்சாவூர்லெ ஒரு ஸ்கூல்லெ டீச்சரா இருக்கேன் மூர்த்தி.. இப்ப கரஸ்லே எம்.·பில் பண்ணிட்டிருக்கேன்.. நீ பி.இ.செகண்ட் இயர்தானே?" என்று கேட்டாள்.

"ஆமா.."

“என்ன ப்ராஞ்ச்?”

“மெக்கானிக்கல் இன்ஜினியரிங்..”

“ஆப்பர்சுனிட்டீஸ் இருக்கா?”

“இருக்கோ, இல்லையோ..எனக்கு பிடிச்ச ப்ராஞ்ச் அதான்!”

“ஏன், எலக்ட்ரானிக்ஸ் பிடிக்காதா?”

“ம்ஹ¤ம்! அதுலே சர்க்யூட்டா வரும்! அது நமக்கு சரிப்படாது!”

அவர்கள் பேசுவதை குப்பைக் கூடையை கையில் வைத்தபடி கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அம்மா: அவள் முகத்தில் விவரிக்க இயலாத பரவசம். தன் மகன் என்னல்லாம் பேசுறான், அட, இந்த ஜோதியெக் கண்டாலே முன்னெல்லாம் ஓடிஓடி ஒளியிறவன், இப்ப எப்டி நேருக்குநேர் கூச்சப்படாமெப் பேசுறான்!

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:20 am

அம்மாவுக்கு முன் ஜோதியிடம் அவன் அதிகம் பேச விரும்பவில்லை. அவளிடம் பேசுவதைத் தவிர்த்தால் தேவலாம்னு தோணியது. எழுந்ததும் ஜோதி முகத்தில் முழிச்சது உற்சாகமாய் இருந்தது, நெஞ்சாங்குழியில் ஏதோ பொங்கிப் பொங்கி வழிஞ்சமாதிரி..

அம்மாவுடன் வீட்டுக்குள் நுழைந்து சாணம் மெழுகிய தரையில் வெகு இயல்பாய் உட்கார்ந்துகொண்டாள். ஒரு தேவதைபோல் அந்த சின்னக் கூரை வீட்டை நிறைத்து நிரம்பினாள் ஜோதி. அவளது வெளியே துருத்திய கொலுசுப் பாதங்களில் நிலை குத்தி நின்றது மூர்த்தியின் பார்வை. அவனையும் அவன் பார்வையையும் எடைபோட்டபடி அடுப்பங்கரையிலிருந்த அம்மாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் ஜோதி. ஜோதி என்றால் ஜோதிதான் அவள்! அழகின் ஜோதி..அழஹ்ஹ்ஹ்கு ஜோதி..!

அதற்குமேல் அங்கு நிற்க முடியவில்லை .வீட்டுக்குள் நுழைந்து ஜோதியைக்கடந்து உள்ளேபோய், துண்டு, சோப்பை எடுத்துக்கொண்டு, ஜோதியை அருகாமையில் பார்த்து "வரட்டுங்களா! ஆத்துக்குப் போறேன்" என்று அவசரமாய் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

"ஏம்ப்பா ஆத்துக்குப் போறே! பயணக் களைப்பு அலுப்பா இருக்கும்..வெந்நி வச்சுத் தாறேன், இங்கேயே குளிச்சிட்டு சாப்புடு..நேரம் ஆச்சு.." என்றாள் அம்மா அடுப்படியில் அடுப்புப்பற்ற வைத்தபடி.

"இல்லம்மா..ஆத்துலெயே குளிச்சுட்டு வந்திர்றேன்.."

"சரி..ஆத்துலெ பாத்து கவனமாக் குளிக்கணும்,சுழல் இல்லாத எடமாப் பாத்து!"

வாசலோரம் கிடந்த செருப்பை மாட்டிக்கொண்டு வேலியோர வேப்பமரத்தில் குச்சி ஒடித்து பல் விளக்கியபடி, வயல் பரப்பில் இறங்கி புற்கள் அடர்ந்த வரப்பு வழி ஆற்றுக்கு நடந்தான் மூர்த்தி. ஆற்றங்கரையில் நின்ற தேக்கு மரங்களும் வாகை மரங்களும் அவனை ‘வா வா..’ என்றழைப்பது போலிருந்தது. செருப்புப்போட்டு நடந்ததால் பாதங்களுக்கு அருகம்புற்களின் குளுமை எட்டவில்லை. செருப்பை அங்கேயே வரப்போரம் ஒரு பூண்டுச்செடிக்குள் விட்டுவிட்டு வெற்றுக் கால்களுடன் நடந்தான்.ஆஹா...என்ன குளுமை... வரப்பில் படர்ந்திருந்த புல்பூண்டுகளின் இதமும், குளுமையும் அவனுள் ஜில்லெனப் பாய்ந்து அவனை நிறைத்தன. சுள்ளென போதையாய் தலையில் ஏறிற்று வெயில்..அது அவன் உடலுக்கு உணக்கையாய் இருந்தது. அடடா..இப்படி ஏகாந்தமாய் வயல்காட்டில் நடந்து எத்தனை நாளாச்சு! நெல் அறுவடை முடிந்து அடுத்த உழவுக்குத் தயாராய்க் கிடந்தது வயல்காடு. காட்டுப்பூண்டுச் செடிகளும் களைச்செடிகளும் நெல் கொருக்குகளும் வயல்வெளியை நிறைத்திருந்தன. சற்றுத் தள்ளி யாரோ ஒருவன் நாலைந்து மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்.

மூர்த்தியின் வீடு கிராமத்தை விட்டொதுங்கி ஆற்றங்கரைக்கும் மெயின் தார்ச்சாலைக்கும் இடையில் தோப்புவீடாக இருந்தது. வீட்டருகே சற்று இடைவெளி விட்டு அடர்ந்த மாந்தோப்புகளும் தென்னந்தோப்புகளும்... ஒவ்வொரு தோப்பிலும் ஒன்றிரண்டு கூரைவீடுகள். எல்லாரும் அவர்களுக்கு சொந்தம்தான் எனினும் எந்த வீட்டிலும் அவனையொத்த பையன்களோ பெண்களோ இல்லை. அவன் தன்னந்தனியே ஓடியாடித் திரிவான் கையில் பாடப் புத்தகத்தோடு... படிப்பைவிட்டால் அவனுக்கு செய்ய ஒன்றுமில்லாமல்போனது... அவ்வப்போது அவன் பள்ளித்தோழர்கள் அவனுடன் விளையாட வீட்டுக்கு வருவார்கள்.அவ்வப்போது இந்த ஜோதியும் வருவாள்..

மூர்த்தி சிறுவயசில் விளையாடுவது அவன் தம்பியுடன்தான். தம்பி ராஜாவுக்கு படிப்பு மண்டையில் ஏறாமல் ஆறாம் வகுப்பை பாதியில் முடித்துக்கொண்டு அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பித்துவிட்டான். இந்நேரம் அப்பாவோடு சேர்ந்து எங்காவது வயலில் உழுதுகொண்டிருப்பான் ராஜா.

அப்பா விடிகாலையிலேயே எழுந்து வயக்காட்டுக்கு போய்விடுவார். விவசாயம்தான் அவருக்கு மூச்சு..எப்பப்பார்த்தாலும் ஏதாவது வேலையிருந்துகொண்டேயிருக்கும் வயக்காட்டில். நெல்லு,கரும்பு, நிலக்கடலை, உளுந்து, துவரை, எள்ளு.. இப்படி எப்பப்பார்த்தாலும் அப்பாவுக்கு ஏதாவது வெள்ளாமைதான்!

நீர்பாய்ச்சி, உழுது, வரப்புவெட்டி, களைபறித்து.. சிரித்துக்கொண்டான் மூர்த்தி! அவனுக்கு எம்.ஜி.ஆர் பாட்டு ஞாபகத்துக்கு வந்தது: ‘மணப்பாறெ மாடிகட்டி மாயவரம் ஏறுபூட்டி..’

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:20 am

“ச்சை! என்ன வேலை இது! இதெல்லாம் எனக்கு சரிப்பட்டுவராது! என்னை மரியாதையா கடைசிவரைக்கும் படிக்க வச்சுருங்க,சொல்லிட்டேன்!” என்று ஒரேயடியாக அப்பாவிடம் சொல்லிவிட்டான் மூர்த்தி, ஏழாங்கிளாஸ் படிக்கும்போதே! அவன் வகுப்பில் எப்போதும் முதல் மார்க்தான்! அதனால் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எப்பாடுபட்டாவது அவனை கடைசிவரை படிக்க வைத்துவிடுவது என்று வைராக்யம் ஏற்பட்டுவிட்டது. அவனிடம் அவர்கள் வேறெந்த வேலையும் சொல்வதில்லை! சொன்னாலும் அவன் செய்வதில்லை, செய்யவும் தெரியாது!

அவனுக்கு படிப்பில் ஆர்வம் வரக் காரணம் இந்த ஜோதிதானோ..! ஜோதியின் கைராசிதான் அவனுக்கு அவனையறியாமல் படிப்பில் ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்திடுச்சோ!

ஜோதி அவனுக்கு இங்லீஷ் மட்டுமில்லாமல் கணக்கும் தமிழும்கூட சொல்லிக் கொடுத்திருக்கிறாள். ஜோதியின் வீடு ஊருக்குள் இருந்தாலும் சனி ஞாயிறு ஸ்கூல் லீவில் அவர்களது வயல்காட்டைப் பார்க்கவும் மூர்த்தி வீட்டு மாமரத்தில் வைக்கோல் பிரியில் ஊஞ்சல்கட்டி ஆடவும் அடிக்கடி அங்கு வருவாள். அப்போதெல்லாம் அவளே வலிய வந்து அம்மாவிடம், “மூர்த்திக்கு ஏதாவது சொல்லிக்குடுக்கணும்னா சொல்லுங்க ஆண்ட்டி..எனக்கும் போரடிக்குது..” என்பாள். அவ்வளவுதான்... மூர்த்தி அவளிடம் மாட்டிக்கொள்வான்!

ஜோதியின் அந்த அகண்டு மலர்ந்த பெரிய கண்கள்.. அவை அவனுள் எப்போதும் கிளர்ச்சியை உண்டுபண்ணியதை அவன் நன்கு உணர்ந்தான். அவள் அவனுக்கு பாடம் சொல்லித் தரும்போது அவனைப் பார்த்து அவ்வப்போது சிரித்துக் கொள்வாள். அவனுக்கு அவள் எப்படா விடுவாள் என்றிருக்கும். பாடம் முடிந்ததும் விட்டால் போதும் என்று ஓடிப்போய் அவள் கண்களில் சிக்காமல் எங்காவது ஒளிந்துகொள்வான். அதெல்லாம் நெனைச்சா இப்போ சிரிப்புத்தான் வருது!

அவள் காலேஜுக்கு போன பின் ஊரிலேயே இல்லை. “எங்கோ ஹாஸ்டலில் தங்கிப் படிக்குதாம் நம்ம ஜோதி..” என்று அம்மாதான் அடிக்கடி யாரிடமாவது சொல்லிக் கொண்டிருப்பாள்.

சின்னவயசில் பார்த்த அதே ஜோதிதான் இவள்! அப்படியே மாறாமல் அல்லவா இருக்கிறாள்... புத்தம்புதுசாய்..பளபளப்பாய்... தூய்மையாய்!

படித்துறையில் அமர்ந்து வெகுநேரமாய் ஆற்றோட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.படித்துறையை ஒட்டி பன ¢நீங்கிய நாணல் புற்கள் வெண்பச்சை நிறத்தில் வெயிலில் மின்னிக் கொண்டிருந்தன. அவன் முதுகிலும் தலையிலும் ஏறுவெயில் கிர்ரென ஏறிக்கொண்டிருந்தது. எதிர்க்கரை தூங்குமூஞ்சி மரத்தில் நாலைந்து காகங்கள் அவனை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தன. இக்கரையிலிருந்த தேக்குமரத்திலிருது அக்கரை நோக்கி பாடியபடி வெகு லகுவாய்ப் பறந்துபோனது குயிலொன்று. அட... குயிலுக்கும் இந்தக் காக்கைகளுக்கும் என்ன வித்தியாசம்! ரெண்டும் கருப்புதானே! ஆனால்.. சற்றுமுன் பாடிச்சென்ற அந்தக் குயிலின் குரல்... அதுவுமில்லாமல் குயில்கள் காக்கைகளைப் போல் கண்ட இடத்திலும் திரிவதில்லை! எங்காவது அடர்ந்த தோப்புகளில் ஏகாந்தமாய் வாழ்கின்றன. அவனுக்கு இப்போது சட்டென தட்ஷிணி ஞாபகத்துக்கு வந்தாள்... குயில்..தட்ஷிணி..அட, அழகுங்கிறது காக்கைக்கும் குயிலுக்கும் உள்ள வித்யாசம்தானோ!

அப்ப இந்த ஜோதி யார்? அவள் என்ன பறவை? அவள் எந்த இனம்? ஒருவேளை அன்னப்பட்ஷியோ அவள்? அன்னப்பட்ஷிகளை இப்போது எங்கே பார்ப்பது!

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:21 am

அவனுள் சட்டென ஒரு சிறுநகை இழையோடியது: மாமியை எந்தப் பறவையோடு ஒப்பிடுவது: அவள் மயிலோ! ஆம்..மயில்தான் அவள்... மேகத்தைக்கண்டால் தோகைவிரித்து அகவியாடும் கோலமயில் அவள்! நந்தினி? அவள் காட்டில் திரியும் மணிப்புறா! சின்னஞ்சிறு அலகும் சாம்பல் புள்ளிகளும் சிற்றுடலும்கொண்ட மணிப்புறா.. அப்பாடா..! பெருமூச்சு விட்டுக்கொண்டான் மூர்த்தி. இந்த நதியைப் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படியெல்லாம் கற்பனை ஊறுது!

நதிப்பரப்பில் சின்னஞ்சிறு அலைகள் ஒன்றோடொன்று மோதியுருண்டு ஒன்றுகலந்து நதியோடு நதியாய்க் கலந்து மறைந்தன. எல்லாம் நதிதான்.. ஜோதியின் அழகைப்போல! காற்றிலாடும் அவள் முடியைப்போல! கலகலத்துச் சிதறும் அவள் சிரிப்பைப்போல! சக்திபொங்கும் அவளது துள்ளல் நடையைப்போல!

வாழ்க்கை ஒரு நதி... சலசலத்தோடும் நதி... சக்தியோடு நுரைத்து அலையடித்து நகரும் நதி..அதில் நானொரு சின்ன அலை! தட்ஷிணி, மாமி, நந்தினி, ஜோதி..எல்லாம்... எல்லாமும் அலைகள்! எனக்கருகில் கிளம்பி என்னோடு கலந்து விளையாடி நதிக்குள் மறையப்போகும் அலைகள்... ஆஹா! எப்படியெல்லாம் எனக்குள் கவிதை ஊற்றெடுக்குது!

சட்டையையும் கைலியையும் கழட்டி படியோர நாணல் புதரில் வைத்துவிட்டு இடுப்பில் துண்டோடு நின்று மீண்டும் நதியைப் பார்த்தான்... எண்ணற்ற சிற்றலைகள் வெயிலுக்கு மின்னி பொன்னாய் உருகிப் பளபளத்தோடின.

அவனுக்கு இந்த நதி ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசிலிருந்து, நீந்தக் கற்றதிலிருந்து இந்த நதியோடு உறவாடி வந்திருக்கிறான். அதில் மூழ்கிப் பாய்ந்து முங்கிக்குளித்து நீந்திப்புரண்டு..

ஏறுவெயில் உக்கிரமாய் அவன் பின்னந்தலையில் அடித்தது. சூடேறித் தகதகவெனக் கொதித்தது தலை..அடிவயிற்றில் தீக்கொழுந்தொன்று முளைவிட்டு கண்களுக்குப் பரவி...பயங்கரமாய் எரிந்தது கண்! வயிற்றில் இப்படி திடீரென அனல்மூட்டியது யார்! ஆஹ்! நந்தினி...ரெண்டுநாளைக்குமுன் அவளுள் எப்படியெல்லாம் முங்கி நீந்தினேன்! எல்லாத்துக்கும் ஈடுகொடுத்தாளே அவளும்..எப்படியெல்லாம் சுழன்று சுழன்று என்னுள் பாய்ந்து வளப்படுத்தினாள்! ச்சே..! ஏன் அவளை விட்டுவிட்டு இங்கு வந்தேன்!

கைகளை முன்னால் நீட்டி சர்ர்ரென நதியுள் பாய்ந்தான் மூர்த்தி..நதி அவனை தன்னுள் அமிழ்த்திக்கொண்டது... மேலெழும்பி... மூழ்கி... மீண்டும் மூழ்கி தலையிலும் கண்களிலும் பற்றியெரியும் தீயை அணைக்க முயன்றான்... நதியோ அவனை தன்னுள் இழுத்து தன்போக்கில் தள்ளிச் சுழட்ட முனைந்தது!

நதியின் சுழலை எதிர்த்து நீந்தி முன்னேற முயன்றான் மூர்த்தி. என்னவொரு சக்தி இந்த நதிக்கு! கரையிலிருந்து பார்க்கையில் என்ன மென்மையாய் எவ்வளவு அமைதியாய் தென்பட்டது! இப்ப எப்படியெல்லாம் சுழட்டியடிக்குது!

நீந்தநீந்த கொஞ்சங்கொஞ்சமாய் தணிந்து கொண்டுவந்தது சூடு! கண்களில் பகபகத்த தீ தன் உக்கிரத்தைக் குறைத்திருந்தது. இந்த நதிக்குளியல்தான் எப்பேர்ப்பட்ட அனுபவம்!

நதி எப்போதும் குளுமைதான்! ஆனால்..இதில் நீந்தத்தெரியாவிட்டால் என்ன ஆகும்! அப்படியே இழுத்துச் சுருட்டி தன்னுள் மூழ்கடித்து கொன்றல்லவாவிடும் இது!

மீண்டும் மீண்டும் கைகால்களை ஆட்டி உதைத்து முழுபலத்தையும் திரட்டி நதியோட்டத்தின் எதிர்த்திசையில் ஒரு மீனென நீந்திக்கொண்டிருந்தான் மூர்த்தி. அதீத சக்தியுடன் தன்போக்கில் அவனை இழுத்துப்போக விடாப்பிடியாய் முனைந்துகொண்டிருந்தது நதி.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:21 am

இன்னும் அழுதுகொண்டிருந்தாள் தட்ஷிணி.

"சத்யாவையே நெனச்சு இப்டி சாப்டாமெக் கொள்ளாமெ ரெண்டுநாளா அழுதுட்டிருந்தா உடம்பு என்னத்துக்கும்மா ஆகும்?" என்று கேட்டார் அவள் அப்பா. அவர் முகத்திலும் சோகக்களை.

"தட்ஷி தட்ஷின்னு உயிரா இருப்பா பாவம், அவளுக்கு என்ன வந்துச்சோ தெரியலை.காலம் கலிகாலம்! யாரு நல்லவ, யாரு கெட்டவன்னே தெரியலை" அடுப்படியிலிருந்து புலம்பிக் கொண்டிருந்தாள் அம்மா.

"சீ, நாயே! நம்ம சத்யா தங்கமான பொண்ணுடி! அவ எந்த வெவகாரத்துலயும் சிக்காதவ! அவளைப்போய் சந்தேகப்படாதே!", என்றார் அப்பா, மீசையைக் கவலையுடன் மேலேற்றித் திருகியபடி.

அவரது கடா மீசையும் முகபாவமும் வெளியாட்களுக்கு பயத்தை உண்டுபண்ணினாலும் தட்ஷிணி அப்பாவுக்கு ஒருபோதும் பயந்ததில்லை.அவள் அவருக்கு எப்போதும் செல்லம்தான்.ஆனால் சத்யாவுக்கு?

முந்தா நாள் ராத்திரி சத்யா பாத்ரூமைப் பூட்டிக்கொண்டு தன் உடம்பு முழுக்க பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திக்கொண்டு செத்துப் போனாள்! பாத்ரூம் கதவை உடைத்து கரியாகிப்போன சத்யாவை கூட்டத்தோடு கூட்டமாய் தட்ஷிணியும் பார்த்தாள்...அய்யோ! சத்யாவா அவள்! ஒண்ணாங் கிளாஸ்லேர்ந்து என்கூடப் படித்த சத்யாவா அது! ம்ஹ¤ம்! அது வேறு ஏதோ பொருள்! அது வெறும் கரிக்கட்டை!

சத்யாவின் இந்த முடிவுக்கு யார் காரணம்? ஊரே அவளைப்பற்றி தாறுமாறாகப் பேசியது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு யூகம்! ஆனால் தட்ஷிக்குத்தான் உண்மை தெரியும்! அந்த உண்மையின் கனம்தான் இப்போது அவளை அலைக்களித்து ஆட்டிவைக்குது. எப்படியிருந்தாலும் சத்யா இப்படியொரு முடிவை எடுத்திருக்க வேண்டியதில்லை! சின்ன வயதிலிருந்தே அவள் அசடுதான்! தட்ஷிக்கு இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைத்தபோது சத்யாவுக்கு அரசு பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.ஸி கெமிஸ்ட்ரிதான் கிடைச்சது! அவளுக்கு படிப்பில் ஒன்றும் அவ்வளவு லயிப்பில்லை! விதியே என்றுதான் படித்தாள். ஆனால் பேச்சில் திறமைசாலி!

பக்கத்துத் தெருவில்தான் சத்யாவின் வீடு. தட்ஷிணி மேல் அவளுக்கு அளவு கடந்த ப்ரியம்! அவளுக்கு தட்ஷி என்று செல்லப்பேரிட்டவளும் அவதான்! தட்ஷிணி ஹாஸ்டலைவிட்டு ஊருக்கு வந்துவிட்டாள் போதும்! சாயந்தரம் வீட்டுக்கு வந்தால், ராத்திரி எட்டுமணிக்குத்தான் வீடுதிரும்புவாள்! அப்படித்தான் அவள் நான்குநாள் முன்பு காலேஜிலிருந்து வந்த அன்றும் நடந்தது...

"தட்ஷி எப்டிடி இருக்கே? எக்ஸாம்லாம் எப்டிடி எழுதினே? எப்படி வந்தே?", மூச்சுவிடாமல் கேட்டபடி அன்று வீட்டுக்குள் புயல் மாதிரி நுழைந்தாள் சத்யா.

வீட்டு வாசலில் பைப்பில் குடிதண்ணி பிடித்துக்கொண்டிருந்த தட்ஷிணிக்கு அவளைப் பார்த்ததும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. அம்மாவிடம் சொல்லிவிட்டு இருவரும் மொட்டைமாடிக்குப் போனார்கள்.

மாடிப்படி ஏறும்போது, "எப்படி வந்தேன்னு கேட்டேன்லெ?", என்று மீண்டும் கேட்டாள் சத்யா.

தட்ஷிணி, "மத்யானம்தாண்டி வந்தேன்", என்றாள்.

செல்லமாய் அவள் முதுகில் ஒரு குத்துவிட்ட சத்யா, "ஏ நாயே! வீட்டுக்கு வந்திருக்கலாமில்லே! எவ்ளோ இருக்கு பேசுறதுக்கு?", என்று கடிந்துகொண்டாள்.

"ஏண்டீ ஓம் மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு! கலகலப்பாவே இல்லையே நீ!"

"அதெல்லாம் ஒண்ணுமில்லேடி! எப்பவும்போலதான் இருக்கேன்"

"இல்லையே, ஓம் மூஞ்சியப்பாத்தா அப்டித் தெரியலையே"

"எனக்கும் ஓங்கூடப் பேசுறதுக்கு நெறைய இருக்குடீ"

"ஹய்யா! லவ்வா! முன்னாடி எவனோ சொன்னியே! மூர்த்தியோ என்னமோ! அவந்தானே?"

"ச்சீய்ய்! சும்மா கத்தாதே! அம்மா ஏதும் வந்துறப்போறாங்க"

"வந்தா என்னடி இப்போ! சும்மா சினிமாக்கதை பேசிட்டிருக்கோம்ணு சொல்லி சமாளிச்சிட வேண்டியதுதான்!"

"அய்யய்யோ! வேண்டாம்ப்பா! எங்கப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சா அவ்ளோதான்! அப்றம் நான் சாகவேண்டியதுதான்!"

"ச்சீ! சாவப்பத்தி ஏண்டி பேசுறே! லவ்வப்பத்திப் பேசுடீன்னா..."

"சரி. ஓங்கதை என்னாச்சு? அதெச்சொல்லுடி மொதல்லே"

"சரி சொல்றேன்.அதுக்கு முன்னாடி ஒனக்கு ஒரு ஷாக் தரப்போறேன்!"

"என்ன ஷாக்? சும்மா பொறுமையெச் சோதிக்காமச் சொல்லு!"

Sponsored content

PostSponsored content



Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக