புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ருசி (குறுநாவல்) - Page 12 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 12 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 12 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
பெண்ருசி (குறுநாவல்) - Page 12 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 12 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 12 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ருசி (குறுநாவல்) - Page 12 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 12 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 12 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
பெண்ருசி (குறுநாவல்) - Page 12 Poll_c10பெண்ருசி (குறுநாவல்) - Page 12 Poll_m10பெண்ருசி (குறுநாவல்) - Page 12 Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ருசி (குறுநாவல்)


   
   

Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:19 am

First topic message reminder :

இரும்புக்கட்டிலின் படுக்கை விரிப்பில் தூங்கிக்கிடந்த மூர்த்தி அவசரமாக விழித்துக்கொண்டான். அவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கல்லூரி விடுதியில் யாரும் இல்லை. எல்லாரும் படிப்பு விடுமுறைக்காக அவரவர் ஊருக்குப் போய்விட, மூர்த்தியும் இன்னும் கொஞ்சப்பேரும் விடுதியிலேயே தங்கிவிட்டார்கள்.

அவர்களின் கிராமத்து வீட்டில் மின்சாரம் கிடையாது என்பதாலும், அவ்வளவாக அங்கு படிக்க வசதியில்லாததாலும்(வயல்காட்டு வேலைகள், கொசுக்கடி, நண்பர்கள் தொல்லை) அவன் இங்கேயே தங்கிப்படிப்பது என்று முடிவெடுத்திருந்தான்.

அவன் நெகிழ்ந்துகிடந்த கைலியை அவிழ்த்து மீண்டும் சரியாகக் கட்டிக்கொண்டு, வராண்டாவுக்கு வந்தான். விடுதிக்குக் குறுக்காக கருமையாகக் கிடக்கும் தார்ச்சாலையில், மத்தியான வெயில் பாதரசம் போல் உருகி வழிந்தோடிற்று. வராண்டாவைச் சுற்றி அடர்ந்திருந்த புங்கைமரக் கிளைகளில் சில காகங்கள் தியானம்போல் அமைதியாய் துயில்கொண்டிருந்தன. அதிலொன்று, அலகால் தன் றெக்கையை மெதுவாகக் கோதிவிட்டுக்கொண்டிருந்தது. அங்கிருந்த நுனாமரப் பூக்களுக்கிடையில் தன் சின்னஞ்சிறு வாலை மேலும் கீழுமாய் உயிர்ப்புடன் ஆட்டியபடி, இங்குமங்கும் தாவிக்கொண்டிருந்தது தேன்சிட்டொன்று.

மூர்த்திக்குப் பசியெடுத்தது. அறைக்குத் திரும்பி அலமாரியில் இருந்த அவனது கனமான வெண்ணிற ஹெச்.எம்.டி. கடிகாரத்தை எடுத்து மணிபார்த்தான். ரெண்டாகப் பத்துநிமிடம் இருந்தது.

கல்லூரி மெஸ் மூடிவிட்டபடியால், அங்கிருந்து அரைக்கிலோமீட்டர் தள்ளியிருந்த தனியார் மெஸ்ஸ¤க்குப் போய்த்தான் சாப்பிட்டுவர வேண்டும்... அதுவரை நடக்கவேண்டும் என்பதை நினைத்தாலே மிகவும் அலுப்பாகவும் அசதியாகவும் இருந்தது.

வராண்டாவில் நடந்து சதுரமாய் இருந்த விடுதியிம் ஒரு ஓரத்தில் இருந்த பொதுக்குளியலறைக்குப் போய் முகம்கழுவி வந்து, சிவப்புநிறக் காசித்துண்டை அறையோரமாய் கட்டியிருந்த கம்பிக்கொடியில் இருந்து உருவியெடுத்து, முகத்தைதுடைத்தபடி , கட்டிலில் அமர்ந்தான். அவனது அறைத்தோழன் மனோகரின் கட்டில் எதிரே வெறுமையாகக் கிடந்தது. அதைத்தாண்டி மனோகர் சுவரில் ஒட்டிவைத்திருந்த ரவீணா டாண்டனின் முக்கால் சைஸ் வண்ணப்படம் எங்கேயோ பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தது. அவன் அந்தப்படத்தின் இடைப்பாகத்தில் தன் விழிகளைப் படர்த்தினான். அவனுள் ஒரு உற்சாகம் படர ரம்பித்தது. களைப்பு கொஞ்சம் வடிந்துவிட்டதுபோல் ஆயிற்று.

சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். சட்டைப்பையில் ஏதேனும் சில்லறை இருக்குதா என்று தட்டிப்பார்த்துக்கொண்டான்.

கொஞ்சதூரம் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் தலையில் சுள்ளென்று வெயில் அறைந்தது. சாலையில் மருங்கில் வரிசையாய் கருகியதுபோல் கருவேல மரங்களாய் நின்றபடியால், நிழலில் ஒதுங்கி நடக்க முடியவில்லை. இந்தக் காரைக்குடியே இப்படித்தான். சரளைமண் பூமி. வருஷம்பூரா கோடைபோல்தான் இருக்கும்.

அவன் சாப்பிடப்போகும் அய்யர் மெஸ்ஸில் அவனுக்கு அக்கௌண்ட் இருந்ததால், மாதக்கடைசியில் பணம் கட்டினால் போதும்.

அப்பா கிராமத்தில் விவசாயிதான் என்றபோதும் அவனிடம் அடிக்கடி "நல்லா சாப்ட்டு உடம்பைத் தேத்துடா...இப்பிடியா நோஞ்சாங் கணக்கா இருக்குறது!" என்று அடிக்கடி சொல்வார். அதை இப்போது நினைத்து லேசாகச் சிருத்துக்கொண்டான்...என்ன சாப்பிட்டாலும் உடம்பு தேறமாட்டேங்குதே... என்ன செய்யிறது என்று தனக்குத்தானே முனகிக்கொண்டான்...அவன் நிழலும் அவன் காலடியில் பதுங்கி அவனோடேயே நடந்தது. சற்றுத் தள்ளியிருந்த கொல்லங்காளி கோயில் பேருந்து நிறுத்த நிழற்குடையில் யாரோ ஒரு பெண் உட்கார்ந்திருந்ததுபோல் பட்டது.

உற்சாகம் பீறிட, அவன் நடையில் வேகம் கூடியது. அவன் நிழலும் அவனோடு வேகமாய் நகர, தலை மிகவும் சூடுகண்டது. தலையில் கைவைத்துப்பார்த்தான். கொதித்தது.

அவனுக்கு திடீரென்று அய்யர் மெஸ் புவனேஸ்வரியின் முகம் காட்சியானது. நேற்றிரவு இவன் சாப்பிடும் பெஞ்சுக்கு எதிரில், அவள் வீட்டின் உள்ளிருந்த ஆட்டுக்கல்லில் கையால் மாவரைத்துக்கொண்டே இவனை வைத்தகண் வாங்காமல் பார்த்தாள். நல்ல கொழுகொழுவென்று மதர்ப்பாக இருந்தாள். தன் மகள் பி.காம்., அஞ்சல் வழியில் படிப்பதாக அய்யர் அடிக்கடி பரிமாறிக்கொண்டே சொல்வார். அவர் இவனிடம் மட்டும்தாம் இவ்வளவு வாஞ்சையாகப் பேசுவதுபோல் பட்டது. மாமியும் அப்படித்தான். இவனுக்கென்று மேலும் ஒரு அப்பளம் எடுத்துவந்து சத்தமில்லாமல் இலையில் வைத்துவிட்டு, "நன்னா சாப்டூங்கோ...அப்பத்தானே ஒடம்பு தேறும்?" என்று கேட்டுவிட்டு மூக்குத்தி மின்ன சிருத்துக்கொண்டே சமயல்கட்டுக்குப் போவாள்.

பஸ் ஸ்டாப் நெருங்கிவிட்டிருந்தது. அதுவரை குனிந்துகொண்டே நடந்தவன், பஸ் ஸ்டாப் நிழற்குடையை நோக்கி ஆவலுடன் முகத்தைத் திருப்பினான். அவன் அங்கு கண்ட காட்சி அவனுக்கு மகா வெட்கத்தைக் கொடுத்துவிட்டது. தூரத்தில் வரும்போது அவன் பெண் என்று நினைத்த அந்த உருவம், இப்போது நல்ல பூப்போட்ட கைலியைக் கட்டி ஆணாக மாறிவிட்டிருந்தது! அட ராமா! அவனுக்கு யாரோ முகத்தில் ஓங்கி அறைந்ததுபோலாகிவிட, முகத்தைத் திருப்பிக்கொண்டு கிட்டத்தட்ட ஓடாத குறையாக மெஸ்ஸை நோக்கி நடையைக்கட்டினான். அவனுக்கு புவனேஸ்வரியின் சிரித்தமுகம் இப்போது காட்சியாக, அவள் இவனைப்பார்த்து கிண்டலும் கேலியாகவும் சிரிப்பாதுபோல் பட்டது...

முகத்தில் தாறுமாறாக வழிந்துகொண்டிருந்த வேர்வையை, குனிந்து கைலியின் முனையால் துடைத்துக்கொண்டு நடந்தான். இன்று புவனேஸ்வரியைப் பார்க்க முடியுமா?...பார்க்க முடியும்...பார்த்தாக வேண்டும்... மூளையில் ஒருவித வெப்பம் படர மெஸ்ஸை நோக்கி வேகநடைபோட்டான் மூர்த்தி.


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:31 am

“வேலெ தேடலே! என்னைத்தான் தேடிட்டே கெடக்கு அது!”

“என்னது, அதா? அதுன்னா ஆடா, மாடா?”

“மாடுதான் அது! நல்ல வலுவான காளைமாடு!”

“அப்ப உனக்குக் கெடைச்சவன் செமத்தியான கட்டென்னு சொல்லு!”

“ச்சீப்போ!”

“நீ ரொம்ப வெக்கப்படுறதெப் பாத்தா ரொம்ப நெருங்கிட்டீங்க போலருக்கு!”

“இல்லே! ரொம்ப நெருங்கிட்டா அப்றம் ‘சப்’னு ஆயிடும்டீ! தொட்டும் தொடாமே கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயிண்டெய்ன் பண்ணாத்தான் சொக்கிக் கெடக்கலாம்!”

“நல்ல தத்துவம்டீ! இந்த விசயத்துலே இனி நீதான் எனக்குக் குரு”

“சரி, வச்சுக்க! காசா, பணமா!”

“தட்சணை வேணுமின்னா வாங்கிக்கோ! எனக்கு ஒரு ஐடியா குடு!”

“ஐடியா? மூர்த்திகூட ஒட்டி உசாவிக்கிட்டு கூடவே அலையிறதெ விட்டுடு”

“அது முடியாது! வேறெதாவது ஐடியா?”

“அப்ப எதுக்கு என்னையெக் குரு, அது இதுங்கிறே!”

“நான் குருவை மிஞ்சின சிஷ்யை!”

“எப்டியோ போ! நாளைக்கி ஓம் மூர்த்தியெ க்ளாஸ்லே பாத்து அப்பிடியே ஒட்டிக்க!”

“சரி குருவே! இப்பத்தான் நீ நல்ல குரு!” போதைக்கு ஆட்பட்டதுபோல் மாறிற்று தட்ஷிணியின் முகம்.

“ம்ஹ¤ம்! அவ்ளோதான் நீ இனி! ஏங்கூட பேசமாட்டே! அப்டியே படுத்துக்கெட! நான் குளிக்கப்போறேன்” டவல், சோப்பை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்துகொண்டு பாத்ரூமுக்குப் போனாள் வனஜா.

கொஞ்சநேரம் அப்படியே அசையாமல் கிடந்துவிட்டு, மெதுவாக எழுந்து இரும்பு மேஜையில் டிக்டிக்கென்றுகொண்டிருந்த டைம்பீஸைப் பார்த்தாள். மணி எட்டாகியிருந்தது. இந்நேரம் மூர்த்தி ஹாஸ்டலுக்கு வந்திருப்பான். மெஸ்ஸ¤க்குப் போய் சாப்பிட உட்கார்ந்திருப்பான்.

அப்போதுதான் அவளுக்கு சட்டென்று ஞாபகத்தில் உதித்தது, எக்ஸாம் லீவிலேயே ஹாஸ்டலைவிட்டுப் போய், கோட்டையூருக்குப் போயிட்டானே மூர்த்தி. இப்ப எங்கே வந்திருப்பான்? கோட்டையூருக்கா? ஹாஸ்டலுக்கா?

கட்டிலைவிட்டெழுந்துபோய் ஜன்னல்வழி மெஸ் பக்கமாய் இருட்டில் பார்த்தாள். எவர்சில்வர் தட்டுகளை டம்ளரால் தட்டி தாளம் போட்டபடி குதூகலமாய் அரட்டை அடித்துக்கொண்டு மெஸ்ஸ¤க்கு நடந்துகொண்டிருந்தார்கள் பெண்கள். ஹாஸ்டலே நிறைந்து அங்கங்கே காச்மூச்சென்று விதவிதாமாய் சத்தம் கேட்டபடியிருந்தது. லீவில் ஒவ்வொருத்தியும் வனஜா மாதிரி ஒவ்வொருத்தனை பிடிச்சிருப்பாள்களோ!

மூர்த்தி பற்றிய நினைப்பு மீண்டும் வந்தது. பலமுறை சொல்லியும் மூர்த்தி ஏன் கோட்டையூரைவிட்டு ஹாஸ்டலுக்கு வர மறுக்கிறான்? மண்டைக்குள் கேள்விக்குறியுடன் தட்டையும் டம்ளரையும் எடுத்துக்கொண்டு அவசரமாக மெஸ்ஸ¤க்குக் கிளம்பினாள் தட்ஷிணி. அவள் வயிறு கபகபவென்று எரிந்துகொண்டிருந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:32 am

மதிய இடைவேளை. மூர்த்தியும் தட்ஷிணியும் வகுப்பறை டெஸ்க்கில் அருகருகே நெருக்கமாய் அமர்ந்திருந்தார்கள். ஹாஸ்டலுக்கும் வீடுகளுக்கும் கடைகளுக்கும் எல்லாரும் சாப்பிடப் போயிருந்தார்கள்.

தட்ஷிணி ஹாஸ்டலுக்கு சாப்பிடப் போகவில்லை. மூர்த்தியும் அய்யர் மெஸ்ஸ¤க்கு போகாமல் அவளுடன் ஒட்டிக் கொண்டிருந்தான்.

தட்ஷிணியின் கண்களில் பசியின் கிறக்கம். அதுகூட அவள் முகத்துக்கு ஒரு சோபையைத் தந்தது. அவளது நெருக்கம் குளுமை கலந்த அபூர்வ வாசத்தை அவனுக்கு தந்துகொண்டிருந்தது. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மூர்த்தி.

"ஏண்டா அப்பிடிப் பாக்குறே?"அவன் கண்களை கூராகப் பார்த்துக் கேட்டாள்.

"இல்லே! ஓம் மூக்கு நுனிலே ஏதோ மாயம் இருக்குடி! அதெ எப்பிடி எக்ஸ்ப்ளைன் பண்றதுன்னுதான் தெரியலே!"

"ச்சீ! வேலையெப் பாரு! மூக்கு காதுன்னுக்கிட்டு! ஆனாலும் நீ ரொம்ப மோசண்டா! சரியான ஜொள்ளுப் பார்ட்டிடா நீ!"

"ஆமாடி! நான் ஜொள்ளுப்பார்ட்டிதான்! ஆனா என்னோட எல்லா ஜொள்ளும் ஒனக்குத்தான்!"

"ச்சீப்போ! வாயத் தொறந்தா இதானா பேச்சு?"

"அமெரிக்கப் பொருளாதாரம் பத்திப் பேசுவோம், வர்றியா?"

"அறுக்காதே!"

"உன் அழகான சின்ன அச்சு மூஞ்சி எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சுடி!"


"மூஞ்சி மட்டும்தானா?"

"நோநோ! எல்லாம்தான்! இந்தப் பச்சைக்கலர் சுடிதார்லே பாக்க ரொம்ப களையாருக்கே!"

"ரொம்ப ஐஸ் வக்காதே! இப்ப என்னவேணும் சொல்லு, அதெத் தந்திர்றேன்!"

"நீதான் வேணும்! அப்பிடியே மொத்தமா!"

"ச்சீப்போ!" அவள் முகம் சிவந்தாள். கண்கள் பளபளத்து அவளது வரியோடிய சின்ன உதடுகள் துவண்டு நீர் கோர்த்து மின்னின.

"ஏங்கிட்டெ என்னெல்லாம் பிடிச்சிருக்கு உனக்கு?" முணுமுணுப்பாய்க் கேட்டாள்.

"எல்லாமே! அப்பிடியே மொத்தமா! ஒன்னோட கோபம், நீ திட்டுறது, நீ எரிஞ்சு விழறது எல்லாமே ரொம்பப் பிடிச்சிருக்கு!"

"ஏதாவது ஒரு கொறைகூட இல்லையா எங்கிட்டே?"

"எதும் நல்லால்லேன்னா நல்லால்லேன்னு சொல்லிருவேன்! அதான் இப்ப எதைச் சொல்றதுன்னு தேடிட்டிருக்கேன்!"

"ஏய், நிறுத்து நிறுத்து! ஒரேயடியா வசனம் பொழியாதே!"

"பொழியத் தோணுது பொழியிறேன்! நீயும் என்னெப்பத்தி பொழிஞ்சுக்கோ!"

"ச்சீப்போ! உன்னைக் கண்டாலே எரியுது! நீயொரு ஜொள்ளுப் பார்ட்டி! சேலையெக் கண்டுட்டாப் போதும், பின்னாடியே ஓடிருவே! வேறென்ன? அப்பிடித்தானே நந்தினிகூட ஓடுனே?"

"ஏய்! கப்சா விடுறது அய்யாவுக்கு கைவந்த கலை! நம்ம கதையிலே நந்தினின்னு ஒரு காரெக்டரே கெடையாது! சும்மா ஒன்னையே கலாய்க்கிறதுக்காக அய்யா சுத்திவிட்ட கதை அது!"

"அப்போ என்னைப் பத்தி இப்போ சொன்னியே அதெல்லாமும் பொய்தானோ?"

"கொழப்பிக்காதேடி குட்டீ! இங்கெ பாருடீ, நான் பேசுறதெல்லாம் சீரியஸா எடுத்துட்டு மூக்கெ வெடைச்சுக்காதே! அழகா செலைக்குச் செஞ்சு வச்ச மாதிரி ஷார்ப்பா இருக்குற மூக்கு அப்றம் சொதப்பலாயிடும்!"

"ச்சீப்போடா! ரொம்பத்தான் பசப்பிக்கிட்டுத் திரியாதே! பின்னாடி யூஸ் பண்ண கொஞ்சம் பசை மிச்சம் வச்சுக்கோ! இன்னம் எவ்ளோ காலம் இருக்கு!"

"ஆமால்லே! இன்னும் ரெண்டு வருஷம் இருக்குல்லே?"

"ரெண்டு வருஷமா? அப்றம்?"

"அப்றம் அய்யா அப்டியே தஞ்சாவூரு போயிருவாருல்லே! அம்மா நீங்க இப்பிடியே உங்க ஊரு மதுரைக்குப் போயிடுங்க!" வாசல் பக்கமாய் கையைக் காட்டினான் மூர்த்தி.

"ச்சீ! இனி ஓம் மூஞ்சிலேயே முழிக்க மாட்டேன்! இப்பவே போய்த் தொலை!" என்றவள், சட்டென டெஸ்க்கைவிட்டு எழுந்தாள். ஆனால் மூர்த்தி அவள் இடக்கையைப் பிடித்து இழுத்துவிட "விட்டுத்தொலைடா!" என்றபடி மீண்டும் அவனருகே உட்கார்ந்து கொண்டாள். அப்போது அவள் சுடிதாருக்குக் கீழே தெரிந்த பளிச்சென்ற கணுக்காலைப்பார்த்த மூர்த்தி "அய்! கொலுசு புதுசாடி! அழகான மணிக்கொலுசு! அய்யோ! இப்பவே அதுக்கு..."

"அதுக்கு? ம்ம்! சொல்லு! ஏன் நிறுத்திட்டே?"

"ஒரு முத்தம்..."

"குடுப்பேகுடுப்பே! பல்லெ ஒடச்சுருவேன் ஒடச்சு! ஜாக்ரதை! இதெல்லாம் இத்தோட நிறுத்திக்க! எப்பப்பாத்தாலும் ஒனக்கு இதே பேச்சுத்தான்! ஊர்லெ உலகத்துலே பாரு! இப்பிடியா இருக்கான்! அவனவன் எவ்ளோ சீரியஸா படிக்கிறாங்கெ! நீ என்னடான்னா..."

"அம்மா அட்வைஸ் அம்புஜம்! இனிமே நான் உங்க அட்வைஸ்படியே நடந்துக்கிறேம்மா!"

தட்ஷிணிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. கோபம் கலந்த புன்முறுவலுடன் அவன் கண்களின் ஆழத்தில் எதையோ துளாவினாள்.

"ஏங்கண்ணுக்குள்ளே அப்டி என்னத்தே தேடுறே? ம்ம்? ஒண்ணு தெரிஞ்சுக்கோ! நான் எப்பவும் இதே மாதிரிதாண்டி இருப்பேன்! என்னெ உங்கப்பாவாலேகூட மாத்த முடியாது!"

"ஏண்டா சும்மா சும்மா எங்கப்பாவையே இழுக்கிறே! நாவேறே பாயந்துபோய் கெடக்குறேன்..."

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:32 am

"ஏன் பயந்துபோய்க் கெடக்குறே! சத்யா மாதிரி ஒன்னையே ஆகவிட்டுருவேனா நான்!"

"ஆமா! இவரு பெரிய பிஸ்தா! அப்பிடியே தூக்கிட்டுப்போயி என்னெயெ கட்டிப்பாரு!"

"தூக்கிட்டுப்போயித்தான் கட்டிக்கணுமா! இப்பவே கட்டிக்கவா! வா!" அவள் வலக்கை விரல்களைப் பிடித்திழுத்தான், "என்னடி ஐஸ் மாதிரி ஜில்னு இருக்கு விரல்லாம்? எங்கெயாவது ஐஸ்க்ரீம் சாப்ட்டியோ?"

"சும்மா போடா நாயே! ஐஸ்க்ரீம் எங்கே சாப்டுறது! ஒருநாளாவது எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் குடுத்துருக்கியா நீ! வாயாலேயே கொழுக்கட்டை சுட்டு எல்லாருக்கும் சப்ளை பண்ணி நீயும் தின்னுடுவே! அப்டி ஆளு நீ! சரியான இவண்டா நீயி!"

"எவண்டி? இப்ப எனக்குத் தெரிஞ்சாகணும்! சரியான இவன்னியே எவன்? மரியாதையாச் சொல்லிடு, இல்லே..."

"என்னடா பண்ணுவே?"

அப்போது ஹாஸ்டலுக்கு சாப்பிடப்போயிருந்த வனஜா வகுப்புக்குள் நுழைந்து, "ரெண்டுபேரும் சாப்டவே போகலையா?" என்று கண்ணகலக் கேட்டாள்.

"இல்லே வனஜ்! நீ சாப்ட்டா நாங்க சாப்டது மாதிரிதான்!" என்றான் மூர்த்தி.

அவர்களுக்குத் தொந்தரவு தர விரும்பாமல் வகுப்பறையின் முற்பகுதியிலேயே உட்கார்ந்துகொண்டாள் வனஜா.

"சரிடா! என்ன பண்ணுவேன்னு சொல்லு!"என்று மீண்டும் கேட்டாள் தட்ஸ்.

"சொல்லவெல்லாம் மாட்டேன்! செஞ்சுதான் காட்டுவேன்!"

"அதான் செய்யிங்கிறேன்!"

சட்டென தட்ஷிணியின் இடக்கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் மூர்த்தி. அவசரமாய் அவனைத் தடுக்க முயன்று தோற்றாள் தட்ஷிணி. அதற்குள் மூர்த்தியின் முத்தம் அவள் கன்னத்துள் ஆழப்பதிந்து தண்டுவடத்தில் ஜில்லிப்பாயிறங்கி அவள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தது. மார்புப் பகுதி படபடத்தது. கொஞ்சநேரம் அவள் மௌனத்தில் உறைந்தாள்.

அவளைக் கேள்விக்குறியுடன் பார்த்தபடி ஏதும் பேசாமலிருந்தான் மூர்த்தி.

நடப்பதை திரும்பாமலே உணர்ந்துகொண்டாள் வனஜா. அவளுக்கு முதுகுத்தண்டில் ஜில்லிட்டது. இந்த மூர்த்தி ரொம்ப ஓவராப் போறானோ! இவன் நல்லவனா, கெட்டவனா? தட்ஷிணியிடமிருந்து எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு அப்படியே அவளெ நட்டாத்துலெ விட்டுட்டு ஓடிட்டா? தலையைப் பலமாகக் குலுக்கிக்கொண்டாள் வனஜா. அவள் காதுகள் மூர்த்தியும் தட்ஷிணியும் பேசுவதைக் கூராக கேட்க ஆரம்பித்தன.

"ஏண்டி ஏதும் பேச மாட்டேங்கிறே?" மெலிதாய்க் கேட்டான் மூர்த்தி போதையுற்ற குரலில்.

"பேசுறாப்லேயா காரியம் பண்ணிருக்கே! பொறுக்கி!"

"ஆஹா! நீ பொறுக்கிங்கிறது எனக்கு விருது கெடைச்சாப்லே சந்தோஷமா இருக்குடீ! எங்கே, திருப்பித் திட்டு!"

"பொறுக்கி நாயே! பண்ணி! கழுதே!"

"நாயி நன்றியுள்ளது தெரியுமா?"

"ஆமா! நாயி நன்றியுள்ளதுதான்! அதுக்கு இப்ப நீ என்ன பண்ணப்போறே?" தட்ஷிணியின் விரல்கள் அவன் முத்தம் கொடுத்த இடக்கன்னத்தை தடவிக்கொண்டிருந்தன. அவள் அவன் செய்கையை எப்படியோ ஆமோதித்துவிட்டாள் என்பதை உணர்ந்துகொண்டான் மூர்த்தி.

"ஓங்கிட்ட வாலாட்டணும்!"

"எங்க ஆட்டு பாக்கலாம்!"

அதைக்கேட்டு முன்னால் உட்கார்ந்திருந்த வனஜா சிரிப்பில் வெடித்தாள். தொடர்ந்து நிறுத்தாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.

வனஜாவைப் பார்த்து தட்ஷிணியும் சிரிக்க ஆரம்பித்தாள். தட்ஷிணியின் சிரிப்பு மூர்த்தியையும் தொற்றிக்கொண்டது.

மூவரும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தபடி வகுப்பறைக்குள் நுழைந்தான் எழிலன். மூர்த்திக்கு அவன் ஓராண்டு சீனியர். கதை, கவிதை, ஓவியம் எல்லாவற்றிலும் கில்லாடி. அவனை மூர்த்தி அண்ணன் என்றுதான் கூப்பிடுவான்.

"வாங்கண்ணே!" டெஸ்க்கிலிருந்து எழுந்து நின்றான் மூர்த்தி.

"என்ன மூர்த்தி! சிரிப்பெல்லாம் பலமாருக்கு?ஆமா...இப்ப கவிதையெல்லாம் எழுதுறியா?"

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:32 am

"அதுக்கெல்லாம் பர்ஸ்ட் இயரோட முழுக்குப் போட்டாச்சுண்ணே!"

"ஏன் அப்பிடி? ம்ம்? நான் இப்ப ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை தொடங்கிருக்கேன்! அதுக்கு ஓங் கவிதை ஒண்ணு அவசியம் வேணும்!" உள்ளடங்கிய குரலில் சொன்னான் எழிலன். ஒனக்கு நல்லா வருது! எழுதிப்பாரு, வரும்! சரியா?"

"சரிண்ணே! ட்ரை பண்றேன்!"

"நாளைக்கே வேணும்! நீ தர்றே! ஒனக்கு ஒருபக்கம் ஏற்கனெவே ஒதுக்கி வச்சுட்டேன். எங்கே போயிட்டே இப்ப? ஹாஸ்டல்லே ஒன்னைப் பாக்கவே முடியலே?"

"கோட்டையூர் அய்யர் மெஸ்ஸ¤க்குப் போயிட்டேண்ணே!"

"ஆமா! அங்கெகூட புவனான்னு ஒரு சூப்பர்குட்டி இருப்பாளே?"

மூர்த்திக்குச் சட்டென என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் தடுமாறினான். முகத்தைப் பார்த்து அதைப் புரிந்துகொண்ட எழிலன், "அட!நான் சொல்றது ரெண்டு வருஷம் முந்தி! இப்ப இருக்காளோ, கல்யாணம் ஆகிப் போயிட்டாளோ!"

"ஆமாண்ணே! கல்யாணம் ஆகி மெட்ராஸ் போயிட்டா! மெஸ் மாமி அவளைப் பத்தி சொல்லிருக்காங்க!"

"அட! அந்த மாமியே கலக்கலாயிருப்பாளேப்பா, சின்னப் பொன்னாட்டம் அலங்கரிச்சிக்கிட்டே திரிவாளே? இப்ப எப்படியிருக்கா?"

மூர்த்திக்குத்திக்கென்றிருந்தது, "அப்படித் தெரியலேண்ணே! நல்லவங்க மாதிரிதான் தெரியுது! நல்லாக் கவனிச்சிக்கிறாங்க!"

"நல்லவங்கதான்! ப்யூட்டி கான்ஸியஸ்னெஸ் அந்தம்மாவுக்கு கொஞ்சம் அதிகம், அவ்வளவுதான்! அதெத்தான் சொன்னேன்!"

"நீங்க எப்பண்ணே மெஸ்ஸ¤க்கு வந்தீங்க?"

"அப்பப்ப வருவேன்! அங்க வீட்டுச் சாப்பாடுமாதிரி நல்லாருக்குமா, ஹாஸ்டல் சாப்பாடு அலுத்துப்போனா முன்னாடியெல்லாம் அங்கதான் போறது! சினிமா பர்ஸ்ட் ஷோ காரைக்குடிக்குப் போயிட்டுவந்தாலும் மாமிமெஸ்லெதான் டி·பன் சாப்டுவோம்! இட்லி பூவாட்டம் இருக்கும்!"

"அதாண்ணே! ரெண்டு வருஷமா ஹாஸ்டல் சாப்பாடு எனக்கு அலுத்துப்போய்த்தான் அங்கேயே போயிட்டேன்!"

"எங்கே தங்கிக்கிறே?"

"அவங்களே சைடுலே ரூம்கட்டி வாடகைக்கு விட்டுருக்காங்கண்ணே!"

"சரி! எங்கேயாவது நல்லாரு! ஏம்மா தட்ஷிணி! நீயும் ஒரு கவிதை எழுதிக் குடேன்!" சட்டென தட்ஷிணியைப் பார்த்துக் கேட்டான் எழிலன்.

"அய்யய்யோ! கவிதையெல்லாம் நமக்கு வராது ஸார்! வேண்ணா வனஜாகிட்டே கேட்டுப்பாருங்க."

"வனஜா! நீ ஒரு கதையோ, கவிதையோ எழுதிக்குடேன்! சும்மா ட்ரை பண்ணுங்க! வரும்! மூர்த்தியோட ·ப்ரெண்ட்ஸா இருந்துக்கிட்டு எழுத வராதுன்னா எப்பிடி?" சொல்லிவிட்டுப் போய்விட்டான் எழிலன். பெயருக்கேற்றது மாதிரி சிவப்பாய் உயரமாய் பட்டையான மீசையுடன் கம்பீரமாயிருந்தான் எழில்.

எழிலன் போவதையே பார்த்தபடியிருந்தாள் தட்ஷிணி அவன் அறையைவிட்டுப் போனதும் மூர்த்தியை பிலுபிலுவெனப் பிடித்துக்கொண்டாள். "என்ன ஸார்! இப்ப நீங்க எதுக்காக கோட்டையூர் மாமி மெஸ்ஸ¤க்குப் போயிருக்கீங்கங்கிறது எனக்கு நல்லாத் தெரிஞ்சு போச்சு!" என்றாள் கடுகடுத்த குரலில்.

"எதுக்கு? அய்யர் மெஸ்லெ வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்! நல்ல மெஸ்ஸாப் பாத்து தங்குறது தப்பா?" என்று கேட்டான் மூர்த்தி.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:33 am

"அய்யர் மெஸ்லே தங்குறதொண்ணும் தப்பில்லே, மாமி மெஸ்லே தங்குறதுதான் தப்பு! அதானே பாத்தேன், சோழியன் குடுமி சும்மாவா ஆடும்!"

"இப்ப என்ன சொல்ல வர்றே நீ?"

"அந்த மெஸ்லே இனி நீ தங்கக்கூடாது! பேசாமெ ஹாஸ்டலுக்கே வந்துரு!"

அப்போது தட்ஷிணியின் முகத்தைப் பார்த்தான் மூர்த்தி. அவளிடமிருந்து வெளிப்பட்ட சீரியஸான கோபப் பார்வை அவனை ஒரு கணம் துணுக்குறச் செய்தது. ஒரு நிமிஷம் அவன் ஏதும் பேசவில்லை.

"என்ன! சொல்றது புரியுதா? நா வேணுமா, இல்லே வேறே யாரும் வேணுமான்னு முடிவு பண்ணிக்க!"

மீண்டும் தட்ஷிணியை ஏறிட்ட மூர்த்தி, அவள் குரலில் தென்பட்ட உறுதியைப் பார்த்து உண்மையில் கலங்கிவிட்டான்.

"இங்கபாரு தட்ஸ்! சும்மா எதுக்கெடுத்தாலும் சந்தேகப் படாதே! எனக்கு நீ எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் எனக்கு சுதந்திரம்!"

"என்னடா சுதந்திரம்! இங்கே என்னையே கவுத்துட்டு, மாமிமெஸ், புவனான்னு போவே! நான் எதும் சொல்லக்கூடாதா?"

"ஆமா! மொதல்லே ஏம்மேலே அசைக்கமுடியாத நம்பிக்கை வைக்கணும் நீ! அப்பறம்தான் லவ்வுகிவ்வெல்லாம்!"

சற்று யோசித்த தட்ஷிணி, மெதுவான குரலில் "சரி! எப்டியோ போ! என்னவேணா பண்ணிக்க!" என்றாள் தலையைக் குனிந்தபடி.

"ம்ஹம்! ஓம்மேலெ எனக்கு நம்பிக்கையில்லே! அப்பிடி இப்பிடி திடீர்னு மாறிட்டே? ஒன்னோட சந்தேகப் புத்தி எங்கடி போச்சு இப்ப?"

"சத்யாவோட சாவெ நேராப் பாத்ததுலே எல்லாம் கருகிப்போச்சு!"

மூர்த்திக்கு மனசில் மத்தாப்பு வெடித்தது. எழிலன் சொன்னபடி இன்றிரவு ஒரு கவிதையெழுதிக் கொடுத்துவிட வேண்டியதுதான் என்று முடிவுசெய்துகொண்டான்.

"அப்ப நீயும் ஒரு கவிதையெழுதிட்டு வா நாளைக்கு! அதான் வாழ்க்கையோட நிலையாமையைப் புரிஞ்சிக்கிட்டியே!"

"மொதல்லே நீ எழுது! அப்பறம் நானும் வனஜாவும் எழுதுறோம்!" என்றாள் தட்ஷிணி. அவள் குரலில் விவரிக்க இயலாத உற்சாகம் கரைபுரண்டோடியதை மூர்த்தியால் உணர்ந்து கொள்ளமுடிந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:34 am

ராவோடு ராவாக கவிதை எழுதிவிட்டு காலையில் ஏழுமணிக்கெல்லாம் குளித்துக் கிளம்பி ஹாஸ்டலுக்குப் போய் எழிலனின் 22-ஆம் எண் அறைக்கு முன் நின்றான் மூர்த்தி. மூடியிருந்த அறைக்கதவில் காவிநிற பெயிண்டால் ‘எழில் அகம்’ என்று எழுதிவைத்திருந்தார் எழிலன்.

உண்மையிலேயே அண்ணன் வித்யாசமானவர்தான் என்று நிணைத்துக் கொண்டான் மூர்த்தி. அரவம் கேட்டு கதவைத்திறந்த எழிலன், "வா மூர்த்தி" என்று உள்ளடங்கிய குரலில் சொல்லிவிட்டு, "கவிதை கொண்டாந்துருக்கியா?" என்று கேட்டான்.

"அதெக் குடுக்கத்தாண்ணே வந்தேன்" என்றான் மூர்த்தி ஆர்வம் பொங்க. பின் கையிலிருந்த நோட்டிலிருந்து ராத்திரி முழுக்கk கண்விழித்து எழுதிய கவிதைகளை எடுத்து நீட்டினான்.

மூர்த்தியின் கவிதைகளை மெளனமாகப் படித்துப்பார்த்த எழிலன்,

"எங்கேயோ போயிட்டே மூர்த்தி! பின்னிருக்கே பின்னி! அதுக்குள்ளே கெழவனாட்டம் எழுத எங்கடா கத்துக்கிட்டே?" என்று பாராட்டினான்: "ஆமா...நான் சொன்னதுமாதிரியே ஒடனே ஒண்ணுக்கு நாலா எழுதிக் கொண்டாந்துட்டியே! ஏற்கெனவே எழுதிவச்சிருந்தியோ?"

"இல்லண்ணே. ராத்திரி மாமி மெஸ்ஸோட மொட்டைமாடிலே போய் எழுதுனேன்."

"அங்கே லைட்டா போட்டு வச்சுருக்கா மாமீ?"

"ஒரு கீத்துக்குடில் இருக்குண்ணே! அதிலே ஒரு வேலைக்காரப் பொண்ணுகூட தங்கிருக்கா."


"அவகூட பேசிக்கிட்டே எழுதுனியாக்கும்!"

"இல்லண்ணே! அவ ஊருக்குப் போயிட்டா! அதான்..."

"ஒருத்தி விடாம எல்லாரையும் பதம்பாக்குறே போலருக்கு?"

"சேச்சே!அப்பிடியெல்லாம் இல்லேண்ணே"

"ஏய்! ஓம் மூஞ்சியே எல்லாத்தையும் சொல்லிதுடா! நீ சரியான கலைஞன்தாண்டா!"

மூர்த்தி வெட்கத்துடன் முறுவலித்து, "எல்லாம் நீங்க சொன்னதெல்லாம் படிச்சதுதாண்ணே! நீங்கதானே நான் பர்ஸ்ட் இயர் படிக்கிறப்பவே கணையாழி, அன்னம்விடு தூதெல்லாம் குடுத்து படிக்கச்சொன்னீங்க?"

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:34 am

"ரொம்ப பேச விரும்பலே மூர்த்தி! ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன்: நீ பெரிய எழுத்தாளனா கலைஞனா கவிஞனா வருவே! இப்போதைக்கு அதெமட்டும் சொல்லிக்கிறேன்!"

"ரொம்ப தாங்க்ஸ்ண்ணே!" என்றான் மூர்த்தி.

"ஒன்னோட குண்டலினி கொஞ்சங் கொஞ்சமா மேலேறி இப்ப மூணாவது சக்கரத்துலே இருக்கு!"

"அதெப்பிடிண்ணே சொல்றீங்க?"

"ஓம் முகத்தைப் பாத்தே தெரிஞ்சிக்கிட்டேன்! பொம்பளைங்கெல்லாம் இப்ப ஓங்கிட்டே ஈ மாதிரி வந்து ஒட்டிக்க பாப்பாளுங்க!"

"என்னண்ணே என்னென்னமோ சொல்றீங்க!"

"நாஞ்சொல்றது இப்ப ஒனக்கு புரியுமான்னு தெரியலே! ஒன்னோட சக்தியெ எல்லாம் இனி நீ கீழ்நோக்கி செலுத்த ஆரம்பிச்சா அப்புறம் ஒனக்கு அழிவு நிச்சயம்!"

"அய்யோ! ரொம்பப் பயமாருக்குண்ணே! ஒங்ககிட்டே சொல்றதுக்கென்ன! நீங்க சொல்றதெல்லாம் சரிதாண்ணே! சில விஷயங்கள்லாம் என்னெ மீறி நடக்குதுண்ணே!"

"எல்லாத்தையும் அதோட போக்குலேயே விட்டுரு! எதுக்கும் ரொம்ப அலட்டிக்காதே! நடக்குறது நடந்தே தீரும்! எல்லாம் பூர்வ வாசனை!"

"என்னண்ணே நீங்களே இப்டிச் சொன்னா..."

"வேறெப்பிடிச் சொல்றது! உள்ளதை உள்ளபடிதானே சொல்லமுடியும்! நாமெல்லாம் யுகக்கணக்குலே பொய்யா வாழ்ந்தே பழகிட்டோம்! ஆனா ஆதி இயற்கை மட்டும் அப்பிடியே மாறாமெ அழகா இருக்கு! தட்ஷிணி மாதிரி!"

சட்டெனத் திடுக்கிட்டான் மூர்த்தி. இப்ப எதுக்கு அண்ணன் தட்ஷிணியை இழுக்குறார்?

"ஆமா மூர்த்தி! தட்ஷிணி ரொம்ப நல்ல பொண்ணுடா! தன்னியல்பிலேயே இருக்குது அது! அதுனாலேதான் அதெ உன்னாலே லவ் பண்ண முடியுது! அதோட அழகே அதான்! இது எனக்கு எப்பிடித் தெரியும்கிறியா? அதான் சொன்னேனே, மொகத்தைப் பாத்தாலே எல்லாத்தையும் புட்டுப்புட்டு வச்சிருவேன் நான்! அடிமனசுலே இருக்குறது அழகா கண்ணாடிமாதிரி தெரிஞ்சுபோயிடும் எனக்கு!"

"ஆச்சர்யமா இருக்குண்ணே! இதெல்லாம் எப்பிடி..."

"அதெல்லாம் இப்பக் கேக்காதே! அது ரகஸ்யம்! எல்லாத்தையும் இப்பவே சொல்லமுடியாது! சொன்னாலும் புரியாது!"

"இல்லண்ணே, சும்மா தெரிஞ்சிக்கலாம்லே?"

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:34 am

"தானே தெரிஞ்சிப்பே! எல்லாம் தன்னாலே நடக்கும்! சரி! கெளம்பு! ஒன்னோட ‘யாத்திரை’ங்கிற கவிதை இந்த கையெழுத்து இதழோட மொதப் பக்கத்துலேயே வந்துரும்! அப்றம் எல்லாக் கவிதையும் அடுத்தடுத்து வரும்! அப்பப்ப இந்தப் பக்கம் வந்து பாத்துக்க!"

"சரி வர்ரேண்ணே!”அறையைவிட்டு வெளியேறினான் மூர்த்தி. ஹாஸ்டல் வராண்டாவில் கலகலவென்று வீசிய காலைக்காற்று அவன் நெற்றியையும் தலைமுடியையும் குளிர்வித்தது.

புங்கை மரங்கள் சூழ்ந்த வராண்டா வழியே ஹாஸ்டலின் மறுகோடிக்கு நடந்தான். அவன் போன செமஸ்டர் தங்கியிருந்த அறை திறந்திருந்தது. உள்ளே எட்டிப்பார்த்தான். மனோகர் அப்போதுதான் குளித்துவிட்டு வந்து இடுப்பில் ஈரத்துண்டுடன் தலை சீவிக் கொண்டிருந்தான்.

"ஹாய்! மானோகர்! என்னடா பண்ணிட்டிருக்கே?"

"வாடா மாப்ளே! என்ன திரும்பவும் ஹாஸ்டலுக்கே வரப்போறியா? வந்தா சொல்லிருமாப்ளே. இந்த செமஸ்டரும் இந்த ரூம்லேயே தங்கிக்கலாம். உன்னோட எடம் யாருக்கும் அலாட் ஆகலேப்பா!"

"இல்ல மனோகர். எனக்கு ஹாஸ்டலே ஒத்து வராது!"

"அப்ப ஒண்ணு செய்யி! இந்த செமஸ்டர் உனக்கு ஹாஸ்டல் வேணான்னு நம்ம வார்டன்கிட்டே போய் எழுதிக்குடுத்துரு! இன்னம் நீ வருவே வருவேன்னு சொல்லிட்டே இருக்குறேன் நான்!"

"சரி"

"உண்மையாவா சொல்றே மாப்ளே? உண்மையிலேயே ஒனக்கு ஹாஸ்டல் வேணாமா? அப்றம் ஸ்காலர்ஷிப்..."

"அடச்சே! அதையே பேசிட்டிருக்காமெ விட்டுத்தொலைடா! எனக்கு ஹாஸ்டல் வேணாம், வேணாம், வேணாம்! நான் சுதந்தரமா வாழணும்! போதுமா?"

"ஏண்டா இப்பிடிக் கத்துறே?சரி விட்டுரு"

"அப்ப நா வர்ரேண்டா!' சொல்லிவிட்டு பெண்கள் விடுதி நோக்கி வேகமாய் நடந்தான் மூர்த்தி.எட்டுமணிவாக்கில் அவனுக்காக விடுதி வாசலில் காத்திருப்பதாக நேற்றே சொல்லியிருந்தாள் தட்ஷிணி.

வானம் திடீரென இருண்டுகொண்டு வந்தது. அண்ணாந்து பார்த்தான். சூரியன் கருமேகங்களுள் மறைந்திருந்தான். மழைவருவதுபோல் குளிர்க்காற்று வீசியது.

மூர்த்திக்கு உள்ளே குளிர்ந்தது. நிச்சலனமாய் அமைதியில் உறைந்திருந்தது அவன் மனம். அவனுள் பல்வேறு கவிதைவரிகள் பெருக்கெடுத்து ஓடின! இனி அவனுக்கு எதுவும் தேவையில்லை, கவிதையையும் தட்ஷிணியையும் தவிர!

எழிலன் பிரசுரத்திற்கு தேர்வுசெய்த ‘யாத்திரை’ கவிதையின் வரிகள் அவனுள் மீண்டும் அச்சுப்பிசகாமல் ஓடின:

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 3:37 am

என் பயணம் தொடர்கிறது
நதிமூலம் தேடி...
நான் யார்?
நீ யார்?
நாமெல்லாம் யார்?
பதில் கிட்டும்வரை
நில்லாது தொடருமென்
நெடும்பயணம்...
காட்டிலும் மேட்டிலும்
கல்லிலும் முள்ளிலுமாய்
இருளிலும் ஒளியிலும்
என்னுடன்
வழித்துணையாய் வர
ஆவலெனில் சொல்:
மேற்செல்வோம் கைகோர்த்து.
இன்றேல்,
இக்கணமே பிரிந்துவிடு,
காலைப் பிடித்தென்னைக்
கவிழ்த்துவிடாமல்.

- இந்தக் கவிதையை கட்டாயம் தட்ஷிணியிடம் காண்பிக்கவேண்டும். அநேகமாய் இதையும் இதன் அர்த்தத்தையும் அவள் புரிந்துகொள்வாள்! நிச்சயம் புரிந்துகொள்வாள்! அண்ணன் சொன்னதுபோல் அவள் ‘ரொம்ப நல்ல பொண்ணு’ தான்! பூர்வ வாசனைப்படி என்னோடு சேர்ந்து பயணிக்க பூமிக்கு வந்தவள் அவள்!

அந்தக் கவிதையோடு சேர்ந்து தட்ஷிணியின் பிம்பமும் கலந்து மூர்த்திக்குள் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டேயிருந்தது.கொல்லங்காளிகோயில் தாண்டி, பஸ் நிறுத்தம் தாண்டி பெண்கள் விடுதிநோக்கி கிளைத்தோடும் கரிய தார்ச்சாலையில் நடக்க ஆரம்பித்தான்.

சூழ்கொண்டிருந்த வானம் இப்போது லேசாய் இளகி பூந்தூறலாகி அவன்மீது பொழிய ஆரம்பித்தது.

முற்றும்


பெண்ருசி (குறுநாவல்) - Page 12 Natcha10

நட்சத்ரன்


Sponsored content

PostSponsored content



Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக