புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாசி மாத மகிமைகள்! Poll_c10மாசி மாத மகிமைகள்! Poll_m10மாசி மாத மகிமைகள்! Poll_c10 
15 Posts - 56%
ayyasamy ram
மாசி மாத மகிமைகள்! Poll_c10மாசி மாத மகிமைகள்! Poll_m10மாசி மாத மகிமைகள்! Poll_c10 
11 Posts - 41%
mini
மாசி மாத மகிமைகள்! Poll_c10மாசி மாத மகிமைகள்! Poll_m10மாசி மாத மகிமைகள்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாசி மாத மகிமைகள்! Poll_c10மாசி மாத மகிமைகள்! Poll_m10மாசி மாத மகிமைகள்! Poll_c10 
368 Posts - 59%
heezulia
மாசி மாத மகிமைகள்! Poll_c10மாசி மாத மகிமைகள்! Poll_m10மாசி மாத மகிமைகள்! Poll_c10 
213 Posts - 34%
mohamed nizamudeen
மாசி மாத மகிமைகள்! Poll_c10மாசி மாத மகிமைகள்! Poll_m10மாசி மாத மகிமைகள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
மாசி மாத மகிமைகள்! Poll_c10மாசி மாத மகிமைகள்! Poll_m10மாசி மாத மகிமைகள்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மாசி மாத மகிமைகள்! Poll_c10மாசி மாத மகிமைகள்! Poll_m10மாசி மாத மகிமைகள்! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
மாசி மாத மகிமைகள்! Poll_c10மாசி மாத மகிமைகள்! Poll_m10மாசி மாத மகிமைகள்! Poll_c10 
4 Posts - 1%
mini
மாசி மாத மகிமைகள்! Poll_c10மாசி மாத மகிமைகள்! Poll_m10மாசி மாத மகிமைகள்! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மாசி மாத மகிமைகள்! Poll_c10மாசி மாத மகிமைகள்! Poll_m10மாசி மாத மகிமைகள்! Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மாசி மாத மகிமைகள்! Poll_c10மாசி மாத மகிமைகள்! Poll_m10மாசி மாத மகிமைகள்! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
மாசி மாத மகிமைகள்! Poll_c10மாசி மாத மகிமைகள்! Poll_m10மாசி மாத மகிமைகள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாசி மாத மகிமைகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 15, 2012 9:16 am

மாசி மாத மகிமைகள்! Masimonth


ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவை. இந்த சிறப்புகளெல்லாம் அந்த மாதங்களில் அமையும் திருவிழாக்களையும் வழிபாடுகளையும் கொண்டே அமைகின்றன. அவ்வகையில் மாசி மாதத்தின் சிறப்பு நிகழ்வுகள் சிலவற்றை இங்கு காண்போம்.

ஷட்திலா ஏகாதசி- 18-2-2012

மாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியையே ஷட்திலா ஏகாதசி என்பர். திருமாலை வழிபடுவதுதான் இந்த நாளின் முக்கியமான நோக்கம். இந்த நாளில் விரதம் மேற்கொள்வோர் எள்ளை ஐந்து விதமாகப் பயன்படுத்துவார்கள்.

✷ எள்ளை அரைத்து உடலில் பூசிக்கொண்டு நீராடுவது.

✷ எள் தானம் செய்வது.

✷ எள்ளால் ஹோமம் செய்வது.

✷ எள்ளுடன் நீரும் சேர்த்து தானம் செய்வது.

✷ எள் அன்னம் உண்பது.

பல தர்மங்கள் செய்த பெண் ணொருத்தி இறந்தபின் சொர்க்கம் சென்றாள். சொர்க்கத்தின் எல்லா வசதிகளும் அவளுக்குக் கிடைத் தாலும் உணவு மட்டும் கிடைக்க வில்லை. ஏனெனில் பூவுலகில் இருக் கும்போது அவள் அன்னதானம் செய்யவில்லை. பின்னர் ஒரு துறவி யின் ஆலோசனைப்படி, தேவலோகப் பெண்ணொருத்தியின் ஷட்திலா ஏகாதசி விரதப் பலனை இவள் பெற்றாள். அதன்பின் அவளுக்கு உணவு கிடைத்தது. எனவே, இந்த விரதத்தைக் கடைப்பிடிப்போருக்கு பசி என்னும் வேதனையே உண்டாகாது.



மாசி மாத மகிமைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 15, 2012 9:16 am



மயானக் கொள்ளை- 21-2-2012

மாசி மாத அமாவாசை நாளில், அனைத்து அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறும். இவ்விழாவின் அடிப்படை- சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான்.

அப்போது பிரம்மாவுக்கும் ஈசனைப்போல ஐந்து தலைகள் இருந்தன. எனவே, சிவனை நாம் ஏன் வணங்க வேண்டும் என்று ஆணவம் கொண்டார் பிரம்மா. அவரது ஆணவத்தை அழிக்க, பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்துவிட்டார் சிவபெருமான். அதன் காரணமாக சிவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டதுடன், கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவபெருமானின் கரத்தில் வந்து அமர்ந்தது. அதை அவர் கீழே போட்டாலும் மீண்டும் அவர் கரத்துக்கே வந்தது. இவ்வாறு 99 முறை நடந்த நிலையில், "அதைக் கீழே போடாமல் சிறிது நேரம் கையிலேயே வைத்திருங்கள்' என்று பார்வதி தேவி சிவனிடம் கூறினாள். அவர் அவ்வாறே செய்ய, பிரம்மாவின் தலை கபாலமாக மாறி அவர் கரத்திலேயே ஒட்டிக் கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால், உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை.

இந்த நிலையில், பிரம்மாவின் தலை கொய்யப்பட்ட வேதனையில் இருந்த சரஸ்வதி தேவி, அது கபாலமாக மாறி சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுமாறு உபாயம் கூறிய பார்வதிமீது சினம் கொண்டு, "கொடிய உருவத்துடன் பூவுலகில் திரிக!' என சாபமிட்டாள். அதன்படி பார்வதி தேவி பூவுலகில் பல தலங்களில் அலைந்து, முடிவில் மலையனூர் வந்தாள். அங்கே அங்காள பரமேஸ்வரியாகக் கோவில் கொண்டாள்.

அப்போது ஈஸ்வரனும் மலையனூர் வர, அங்காள பரமேஸ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள். எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட, அங்கு வந்த மகாலட்சுமி பரமேஸ்வரிக்கு ஒரு உபாயம் கூறினாள். அதன்படி பரமேஸ்வரி இரண்டு கவளம் உணவை கபாலத்தில் இட்டாள். அதை கபாலம் உண்டுவிட்டது. மூன்றாவது கவளத்தைக் கைதவறியதுபோல கீழே போட்டாள். உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது.

அப்போது அங்காள பரமேஸ்வரி விஸ்வ ரூபமெடுத்து, பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கரத்தை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள். ஈசனைப் பற்றிய பிரம்மஹத்தி தோஷமும் அகன்றது.

இந்த சம்பவத்தின் அடிப்படையில்தான் மயானக் கொள்ளை எனும் விழா கொண்டா டப்படுகிறது. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் இவ்விழா விமரிசை யாக நடக்கும். சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் இவ்விழா பிரம் மாண்டமாக நடக்கிறது.



மாசி மாத மகிமைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 15, 2012 9:17 am



காரைக்கால் அம்மையார்

வைணவத்துக்கு ஆண்டாள்போல, சைவ சமயத்துக்கு காரைக்கால் அம்மையார் திகழ் கிறார். கணவனால் புறக்கணிக்கப்பட்ட புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையார், "இறைவா! இனி எனக்கிந்த மேனியழகு வேண்டாம்; பேய் உருவம் கொடு!' என்று வேண்டிப் பெற்றவர். ஆடல் வல்லானின் அற்புதங்களை நெஞ்சில் நிறுத்தி, "திருவந்தாதி' என்னும் அரிய நூலை அருளினார். 101 பாடல்கள் கொண்ட இந்த நூலில், பத்து பாடல்களுக்கு ஒருமுறை தாம் பெற்ற இறையனுபவத்தைக் கூறியுள்ளார். இரட்டை மணிமாலை என்னும் நூலும் காரைக்கால் அம்மையார் இயற்றியதே.

அம்மையாருக்காக சிவபெருமான் நடனம் ஆடியருளினார். அது ஊர்த்துவ நடனம் எனப்படும். அப்போது இசைக்கப்பட்ட சச்சரி, கொக்கரை, தககை, தகுணச்சம், துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, தமருகம், குடமுழா, மொந்தை எனப்படும் 12 இசைக்கருவிகளைப் பற்றி தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

திருவாலங்காட்டில்- நடராஜர் சந்நிதியின் பின்புறம் ஒரு சுவர் தடுக்கப்பட்டிருக்கும்.

அதனுள் காரைக்கால் அம்மையார் இருப்பதாக ஐதீகம். இதைத்தான் ஆலங்காட்டு ரகசியம் என்பார்கள். அம்மையார் இறைவனுடன் ஒன்றியது மாசி மாதத்தில்தான்.



மாசி மாத மகிமைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 15, 2012 9:17 am



வித்தியாசமான வேண்டுதல்!


மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில், 20 கிலோமீட்டர் தொலை விலுள்ளது வளயகுளம் என்னும் தலம். இங்குள்ள ஆலயத்தில் ஈசன் சுயம்பு லிங்கமாக அருள்புரிகிறார். பொதுவாக பக்தர்கள் வேண்டிக்கொள்ளும்போது, காணிக்கையாகப் பணமோ பொருளோ தருவதாக வேண்டிக் கொள்வர். ஆனால் இங்கு மாசி மாத மகா சிவராத்திரியன்று நாடகம் நடத்துவதாக வேண்டிக் கொள்கின்றனர். பக்தர்கள் பதிவு செய்துகொள்ளும் வரிசைப்படி, சிவராத்திரி இரவு தொடங்கி 20 இரவுகள் நாடகம் நடத்துவர். எப்போதும் முதல் நாள் நாடகம் "வீர அபிமன்யூ'தான்!

குழந்தைப் பேறில்லாதோர், நோயால் அவதிப்படுவோர், இன்னும் இதுபோன்ற நீண்ட நாள் பிரச்சினையுள்ளோர் இங்கு வந்து வேண்டிக்கொண்டு, வேண்டுதல் நிறைவேறியதும் அடுத்த ஆண்டு நாடகம் நடத்துகின்றனர். வேண்டுதல் நிச்சயம் நிறைவேறுகிறது என்பது இங்கு வரும் பக்தர்களின் அனுபவம்.



மாசி மாத மகிமைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 15, 2012 9:19 am



குபேரன் பேறு பெற்ற தலம்!


திருநள்ளாறிலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில், 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தண்டிகை என்னும் தலம். இங்கு சௌந்தரநாயகி உடனுறை சனத் குமாரேஸ்வர் அருள்புரிகிறார்.

ஒருசமயம் வடதிசை அதிபதியான குபேரன் தர்மம் தவறியதால் சாபம் பெற்றான். சப்தரிஷிகளின் ஆலோசனைப்படி திருத் தண்டிகை வந்து வழிபட்டு சாப விமோசனமும் இழந்த செல்வங்களையும் பெற்றான். தான் வரம் பெற்ற நாளில் இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கும் இழந்த செல்வத்தை அடையும் வரம் அருள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினான்; இறைவனும் அவ்வாறே அருளினார். குபேரன் பேறு பெற்ற நாள் மாசி மாதப் பௌர்ணமி.


சொர்க்கவாசல் கடக்கும் தாயார்!


பொதுவாக வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சொர்க்கவாசலைக் கடந்து வரும் வைபவம் வைணவத் தலங்களில் நடைபெறும். இதிலிருந்து மாறுபட்டு, தாயார் சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்ச்சி மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில், திருச்சி அருகேயுள்ள உறையூரில் மட்டுமே நடைபெறும். வைகுண்ட ஏகாதசியன்று இங்கு சொர்க்கவாசல் திறப்பதில்லை. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். மாசி மாத தேய்பிறை ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, தாயார் மட்டுமே வாசலைக் கடந்துவருவார். இங்கே பகவானுக்குரிய எல்லா வழிபாடுகளும் இந்த கமலவல்லித் தாயாருக்கு நடக்கிறது. மாசியில் சொர்க்க வாசல் திறக்கப்படுவதை (18-2-2012) இங்கு கண்டு மகிழலாம்.

நக்கீரன்



மாசி மாத மகிமைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Feb 15, 2012 10:41 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மாசி மாத மகிமைகள்! Scaled.php?server=706&filename=purple11
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Wed Feb 15, 2012 11:50 am

நல்ல ஆன்மீக பதிவுகள்...
நன்றி... அருமையிருக்கு



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக