புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
79 Posts - 44%
ayyasamy ram
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
6 Posts - 3%
prajai
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
6 Posts - 3%
Jenila
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
jairam
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
122 Posts - 53%
ayyasamy ram
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
10 Posts - 4%
prajai
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
8 Posts - 3%
Jenila
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
4 Posts - 2%
Rutu
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
jairam
கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 7 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் எனும் காவியம்


   
   

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 12:05 am

First topic message reminder :

- சத்தி சக்திதாசன்



கவிஞர் கண்ணதாசனைப் பற்றி இலக்கிய ரீதியில் ஆராயக்கூடிய அளவிற்கு பாண்டித்தியம் பெற்றவனல்ல நான். சாதரண பாடல்களின் கருத்தால் கவரப்பட்ட ஓர் சராசரி ரசிகன்தான் நான். கண்ணதாசனின் பாடல்கள்களில் சொந்த அனுபவங்களின் வாயிலாக எழுந்தவையே மிகவும் பிரபல்யம் வாய்ந்தவையாக அமைந்தன. சாதாரண மக்களின் அன்றாட அனுபங்களைத் தொட்டு இந்தப் பாடல்கள் அமைந்ததின் காரணமே இவைகளின் வெற்றிக்குக் காரணம். எட்டாவது வகுப்பு மட்டுமே படித்த முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் பிறந்தது வணிகத்திலே புகழ் பெற்ற செட்டி நாட்டைச் சேர்ந்த சிறுகூடல்பட்டி எனும் கிராமமேயாகும். தான் சிறுவயதினிலேயே சுவீகாரம் கொடுக்கப் பட்டதை மனதில் வைத்து எழுதப்பட்ட " ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம் " என்ற பாடல் இந்த கவிதைத் தலைவனின் அனுபவ கவிக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும் .

வாழ்வினிலே எடுப்பார் கைபிள்ளை போன்று எல்லோரையும் நம்பி தன் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை தானே தனது சுயசரிதையில் மிகவும் அழகான எளிய தமிழில் எடுத்துரைத்து இருந்தார் கவிஞர். அவரது வாழ்க்கைப் பாதை பல முட்புதர்கள் நிறைந்த கடுமையான ஒன்றாக அமைந்தது. அவர் தானாகவே ஏற்படுத்திக் கொண்ட இடர்கள் ஏராளம் , அதை அவரே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை பகிரங்கமாக மக்களுடன் பகிர்ந்து , தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்யும் மனப்பக்குவததை தன்னுடைய வாழ்வின் இறுதிப் பாகத்தில் அடைந்திருந்தார். இக்கசந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதனால் ஒரு சிலருக்காவது நன்மை கிடைக்குமானால் அதுவே தமக்கு திருப்தி அளிக்கும் என்னும் கருத்தைக் கொண்டிருந்தார்.

கண்ணதாசனுக்கு இருந்த தமிழாற்றல் தமிழன்னையால் அவருக்கு அளிக்கப்பட்ட ஓர் உன்னத வரப்பிரசாதம். அதை அவர் பலவழிகளில் உபயோகித்தார்.அரசியல் எனும் அந்த அழமறியா சமுத்திரத்திலே அவர் மூழ்கும்போது தமிழையே அவர் கரைசேர்க்கும் தோணியாக பாவித்தார். தமிழ்நாட்டின் மூத்த தலைவர்கள் அனைவருமே இவரின் புகழ் மாலைக்கும் பின் ஒருபோது வசை மாலைக்கும் இலக்காகியிருக்கின்றார்கள். இதை அழகாக கலைஞர் கருணாநிதி அவர்கள் குறிப்பிடுகையில் " கண்ணதாசன் என்னை உயர தூக்கி வைத்து புகழ்பாடிய காலங்களும் உண்டு பின் மேலிருந்து என்னைத் தொப்பென்று கீழே போட்ட காலங்களும் உண்டு. ஆனால் கீழே விழுந்தபோது அவனது தமிழின் அழகு எனக்கு மெத்தையாக இருந்தது " என்ற பொருள் பட கூறியுள்ளார்.

பலர் இவரை அரசியலில் ஓர் பகடைக்காயாக பயன் படுத்தியுள்ளார்கள்.

ஆரம்பகாலங்களில் பத்திரிக்கைகளில் எழுத்தாளராக வாழ்க்கையை ஆரம்பித்தவர் , பின்பு கவிதைகளிலும் , பாடல்களிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். அவருக்கு முதன்முதலில் பாடல் எழுதும் சந்தர்ப்பங்கள் அந்நாளில் திமுகவின் கோட்டையாக விளங்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் மூலமே கிடைத்தது . பின்பு படங்களுக்கு வசனம் எழுதும் சந்தர்ப்பமும் கிடைத்தது . தானே சொந்தமாக படங்களையும் தயாரித்துள்ளார். அவர் தயாரித்த படங்களில் வானம்பாடி , மாலையிட்டமங்கை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

தென்றல் எனும் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்தவர், பின்பு அந்தப் பத்திரிக்கையை வாங்கி தானே நடத்தியுள்ளார். இப்படி பல துறைகளிலும் இறங்கிய அவருக்கு அழியாப்புகழை அளித்தது அவரது பாடல்கள்தான். தமிழ்பேசும் சமூகம் வாழும் எந்த மூலைமுடுக்குகளிலும் இவரது பாடல்கள் முனுமுணுக்கப்படாத இடமே கிடையாது.


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:41 am

அப்போது கூட முடிவில் தான் ஐக்கியமாகப் போவது ஆண்டவனோடு என்று முடிவு கட்டி விட்டார் பாருங்கள். ஆசைகளின் மத்தியில், போகத்தை விளக்கிக் கொண்டே அதை ஆன்மீகத்தில் முடிக்கும் திறன் கொண்டிருந்தவர் தான் கவியரசர்.

அது மட்டுமா? எல்லோரும்தான் சாகப் போகிறோம்; அதில் இப்படி வாழ்ந்த நான் பெரியவனா, இல்லை இதையெல்லாம் வெறுத்துப் பொய் என்று சொன்ன அந்தத் தத்துவ சன்மார்க்க வாதிகள் பெரியவரா? என்றொரு கேள்வியைக் கேட்டு ஒரு ஆழ்ந்த வாதத்திற்கே தலைப்பிட்டு விடுகிறார்.

காமுகனும் மாண்டான், கடவுள் நெறி பேசும்
மாமுனியும் மாண்டான், மாற்றத்திலே யார் பெரியார்?


இப்படியெல்லாம் மது, மங்கை என்று வாழ்ந்த ஒருவர் தனது வாழ்வின் மாற்றங்களிலெல்லாம் ஒரு புது அர்த்ததைக் கண்டு அதன் மூலம் தனது வெறுக்கத்தக்க பாகத்தைக் கூட வெளிப்படையாக எமக்குக் காட்டி, தமிழ் எனும் பூக்கொண்டு ஆராதித்தவர் தான் கவிஞர்.

இப்படி இன்பக் கடலில் நீந்திக் களித்தவர், களைத்து விட்டார் போங்கள்! சலித்துக் கொள்கிறார். பிறக்கிறது ஞானம். உதிக்கிறது கவிதை.

காதலெனும் போதையுற்று
மாதர்சுக வாதைபட்டுக்
காமரசம் கொண்டதடி மஞ்சம் - இன்று
ஞானரசம் தேடுதடி நெஞ்சம்!

மேனி பட்ட பாடும் - பல
ராணி பட்ட பாடும் - என்னை
ஞானி எனச் செய்ததடி இன்று - எமன்
நாளை வந்த போதும் அது நன்று!

ஆடும் வரை ஆடி உடல்
ஆடுகின்ற காலம் வந்து
தேடுதடி தேவன் அவன் வீட்டை - அவன்
தேடவில்லை இன்னும் எந்தன் ஏட்டை!


நண்பர்களே இந்த இதழில் பலவற்றையும் கலந்து கவிஞரின் அனுபவத்தின் சேர்க்கை வந்த பாதையை ஓரளவிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளேன் என்று நம்புகிறேன். தன்னுடைய வாழ்வின் இருண்ட பக்கங்களையும் எமக்குத் துணிச்சலோடு வெளிச்சம் போட்டுக்காட்டி, தன்னால் மற்றவர் பயனடைய வேண்டும் என்னும் எண்ணம் கொண்ட அந்த இணையற்ற கவிதை நாயகனுக்குத் தலைசாய்த்து விடை பெறுகிறேன்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:43 am

என்னுள்ளத்தின் தமிழ் விளக்குக்கு
எண்ணெய் வார்த்த தமிழ்க்கவியே
என்றும் என் தமிழ்வானில் ஒளிரும்
ஏற்றமிகு தமிழ் முழு நிலவே - தமிழ்
ஏழை என் கவியுலகில் தொடர்ந்து
எண்ண மழையாவாய் கண்ணதாசனே!


அப்படிக் கவியரசர் கண்ணதாசன் என்ன சாதித்து விட்டார், அத்தகைய பெரும் இலக்கியக் காவியம் எதைப் படைத்து விட்டார் என்ற எண்ணம் கொண்ட பலரைச் சந்தித்திருக்கிறேன். கண்ணதாசன் படைத்த படைப்புகளை விட உயர்ந்தது இந்த உலகில் ஒன்றுமில்லை என்பதினாலேயோ அன்றி அவரை விஞ்சிய தமிழ்ப்புலமை, கவித்துவம் கொண்டவர்கள் எவரும் இருந்ததில்லை என்பதனாலேயோ அவர் போற்றப்படவில்லை.

அவரைப்போல சாதாரண ரசிகர்களைச் சென்றடைந்தவர்கள் மிகவும் சொற்பம் என்னும் வரிசையிலேயே அவரின் புகழ் ஒளிருகின்றது. ஒருவன் காவியமானான் என்பதற்கு அவன் அற்புதங்கள் புரிந்திருக்க வேண்டியதில்லை, அற்ப மனிதர்களின் மனத்தைச் சென்றடைந்தால் போதுமானது.

தனது இளமைக் காலங்களிலே பல மேடைகளிலே நாத்திக வாதத்தை முன் வைத்து முழங்கியவர் கவியரசர் கண்ணதாசன். இறை நம்பிக்கையை எள்ளி நகையாடிக் கவிகள் படைத்தவர் கண்ணதாசன். அதனால் தான் அவர் ஆன்மீகத்தை உணர்ந்து கட்டுரைகள் படைக்கும் போது அது மக்களின் உணர்வுகளை மீட்டி விடக்கூடிய வல்லமை கொண்டவைகளாக இருந்தன.

ஆன்மீக விளக்கங்களைப் பள்ளிப் பாடப் புத்தகங்களிலே படிப்பது மட்டுமே தமது கடமை என்றொரு எண்ணம் கொண்ட இளம் தலைமுறையை ஆன்மிகத்தில் சுவாரஸ்யம் கொள்ளச் செய்தது அர்த்தமுள்ள இந்து மதத்தின் கட்டுரைகள். சொல்லப்பட்ட விதம் அப்படி! அக்கட்டுரைகளின் வடிவமும் யதார்த்தமும் முக்கிய காரணிகளாக அமைந்தன என்பது துல்லியமாகத் தெரிகிறது. நண்பர்களே! இதோ, அர்த்தமுள்ள இந்து மதத்தில், நான் ரசித்த சில வரிகளைக் கீழே தருகிறேன்:

கண்ணனை நீ கடவுளாகக் கருத வேண்டாம்.
கடவுள் அவதாரம் எடுப்பார் என்றே நம்ப வேண்டாம்.
பரந்தாமன், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள்
வைக்கப்பட்டவன் என்றே எண்ணிப்பார்.
கீதையைத் தேவநீதியாக நீ ஏற்றுக் கொள்ளவில்லையானல், மனித நீதியாக
உன் கண் முன்னால் தெரியும்.
ரத்த பாசத்தால் உன் உள்ளம் துடிக்கிறதா? சொந்தச் சகோதரர்களை
எதிர்த்துப் போராட வேண்டி வருகிறதா? அப்போது உனக்கு என்ன
செய்வதென்று தோன்றவில்லையா?

- கீதையைப் படி

இதை ஒரு மத அடிப்படையில் பார்க்காமல் மனிதத்துவ அடிப்படையில் பாருங்கள். கீதைக்குப் பதிலாக பைபிளையோ அன்றிக் குரானையோ எடுத்துக் கொள்ளலாம். இந்த வாக்கியங்களின் அடிப்படை 'எதை நம்புகிறோம் என்பதல்ல, நம்பிக்கைதான் வாழ்க்கையின் ஆதாரம்' என்பதே. பெரிய விஷயம்தான். ஆனால் புரியும்படி சுருங்கச் சொல்லிவிட்டாரே. இது தான் கண்ணதாசன்.

தன் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி ஆன்மீக உணர்வுகளை விளக்கத் தலைப்பட்டார் கவியரசர். அதனால் தான் அவர் அனைத்து ரசிகர்களின் இதயத்தின் அடித்தளத்தைத் தொட்டார்.

என்னையே ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். உற்ற நண்பன், சொந்தச் சகோதரன் போன்ற உறவுடையவன் எனும் ஒருவனால் வஞ்சிக்கப்பட்டேன். வாழ்க்கையில் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டி வந்தது. ஓரிரவு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கும்போது, கவியரசரின் பாடல்கள் அடங்கிய ஒலிநாடா ஒன்றை எடுத்துப் போட்டு விட்டு படுக்கையில் விழுந்தேன். முதலாவது பாடல்:

உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா
கர்ணா வருவதை எதிர் கொள்ளடா!


ஐந்தாவது பாடல்,

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது மீதி


இந்த முதலாவது பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தவன், ஐந்தாவது பாடல் முடியுமுன்னரே தூங்கி விட்டேன். அந்த நேரம், இந்த வருந்திய உள்ளத்திற்கு அன்னையின் தாலாட்டுப் போன்று ஒரு இதமளித்தன கவியரசரின் பாடல்கள்.

இதுதான் கவியரசரின் தனித்தன்மை. அவரைப் புரிந்து கொள்வதற்கு புலமை தேவையில்லை, அவருடன் கலப்பதற்கு அளப்பரிய கல்வி தேவையில்லை. ஒரு மனிதனாக இருந்தால் போதும். இதுவே கண்ணதாசன் காவியமாவதற்குக் காரணமாகிறது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:44 am

‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’என்று கேட்டான் பாரதி. ஆமாம், தனக்கு இருக்கும் சுடர்மிகு அறிவைக் கொண்டு, சமுதாயத்தை மாற்ற முடியாத அளவுக்கு அறிவற்றவர் மத்தியில் என்னைப் படைத்து விட்டாயே! என சக்தி மாதாவைக் கோபித்துக் கொண்டான் எமது பாரதி.

எமது கவியரசர் கண்ணதாசனோ தன்னால் படிக்க முடியவில்லையே எனும் வேதனையால் மாண்டார். அதை ஒரு கவிதையின் மூலம் எவ்வாறு கூறுகிறார் என்று பார்ப்போம்.

பட்டப்படிப்பு படிக்கத்தான் நினைத்திருந்தேன்
கொட்டும் மொழி மழையிற் குளிக்கத்தான் நினைத்திருந்தேன்
ஆனால் எட்டாம் வகுப்பை எட்டத்தான் என் பெற்றோர்
இட்டார்;பின் ஏழ்மையிலே என்னை உலகில் விட்டார்
கல்வியிலான் வாழ்வு கரைகாணாத் தோணியெனக்
கலங்கினேன்; கற்றோரைக் கண்டு கரையில் நின்றேன்.


அறிவின் மிகுதியால் கவலைப்பட்டார் பாரதி, கல்வியின்மையால் வேதனைப்பட்டார் கவியரசர். தன்னுடைய வாழ்க்கையில் தான் எட்டாம் வகுப்பு மட்டும் படித்திருந்தாலும், பல புத்தகங்களை வாசித்துத் தானாகவே தனது திறமையை வளர்த்துக் கொண்டவர் கவியரசர் கண்ணதாசன்.

காதல் எனும் கடலிலே, தமிழால் தோணிகட்டி கரைகண்டவர் எமது கண்ணதாசன். அதனால் தான் எம்மைப் பார்த்துக் கேட்டார், "காதலில்லாத வாலிபமா?" என்று. கவியரசர் ஆண்களின் காதல் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட அதே அளவிற்குப் பெண்களின் மன ஏக்கங்களையும் புரிந்து கொண்டு அழகாக வார்த்தைகளில் வடித்துள்ளார்.

கண்திறந்து நானிருந்தேன்
கட்டழகர் குடி புகுந்தார்
கண்திறந்தால் போய்விடுவார்
கண்மூடிக் காத்திருப்பேன்


"கைராசி" எனும் படத்தில் வரும் பாடலின் ஒரு பகுதியிது. பெண்ணானவள் இப்படித் தன் கண்ணுக்குள் விழுந்த கள்வனைக் காக்கின்றாளாம், அந்தக் கள்வன் என்ன சொல்கிறான்?

தொட்டுத் தொட்டுச் சென்றன கைகள்
சுட்டு சுட்டுக் கொண்டன கண்கள்
கிட்டக் கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டிச் சென்றது வண்டு


அவனைக் கண்டவுடன் அவள் தன்னைத் தந்து விட்டாளா? இல்லை, அவளைக் கண்டவுடன் அவன் தன்னை இழந்து விட்டானா? எதுவாயினும் அவர்கள் காதல் வயப்பட்டது உண்மை. எப்படி எளிமையாகச் சொல்கிறார் கவியரசர்!

சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை.


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:44 am

அப்படியான ஒரு சூழலில் தன்னை இழந்து விட்டவள், தன் உள்ளத்தினுள்ளே தன்னுடைய 'அவனுடன்' ஒரு சம்பாஷணை நடத்துகிறாள். எப்படி? தான் காதல் வயப்பட்டதுக்குக் காரணம் கூறி, அதனை ஒரு அலசு அலசுகிறாள். எங்கே பார்ப்போம்?

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்றுமுதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்!
நூலிலை மீதொரு மேகலையாட
மாலைக்கனிகள் ஆசையில் ஆட
ஏலப்பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கோ ஓட
காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்
கண்கள் இரண்டில் நிம்மதி ஏது?


'சாந்தி' எனும் படத்தில் இடம் பெற்ற பாடலின் ஒரு பகுதியைப் பார்த்தோம். கவியரசர் காதலெனும் கருவெடுத்து எம் கனவுகளோடு விளையாடுகிறார். இவ்வாறு ஒரு இனிய பெண்ணின் மென்மையான உணர்வுகளோடு எம்மை இணைத்து வழிநடத்திச் செல்வது கவிஞர் கண்ணதாசன் ஒருவரால் மட்டுமே முடியும்.

இதோ மற்றுமொரு இனிமையான காதல் சந்தத்தினால் கவிஞர் எமைக் கட்டுவதைப் பார்ப்போம். இந்தப் பாடல் 'தேன்நிலவு' எனும் படத்தில் இடம்பெற்றது. அதில் ஒரு அழகான பகுதி, பார்வையோடு பார்வை பேச யாராவது தூது விடுவார்களா? காதலில் திளைத்துத் தன்னை மறந்த காதலன் என்ன கூறுகிறான்? இப்படி வருகிறது கவிஞர் கண்ணதாசனின் எண்ணக் கருவறையிலிருந்து,

மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே - மலை
மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
பக்கமாக வந்தபின்னும் வெட்கமாகுமா? - இங்கே
பார்வையோடு பார்வை பேசத் தூது வேண்டுமா?


இந்த வாரம் கவிஞர் கண்ணதாசனின் காதல் மழையினில் தோய்ந்தோம். காதல் என்பது ஒரு நுட்பமான உணர்ச்சி. அது பருத்திப் பஞ்செடுத்து அணுவும் பிசகாமல் பின்னி எடுக்கும் புடவை போல! கன்னியும், காளையும் மனதால் கலந்து பின்னி எடுக்கும் ஒரு புனித உணர்வு. அந்த உணர்வை அதன் புனிதம் சிறிதளவும் குறையாமல், அதேநேரம் மனதின் மயக்கநிலையை, அந்தக்காதல் கணத்தை சற்றும் பிறட்டாமல் தமிழால் தாரைவார்த்துத் தரும் கண்ணதாசன் காவியமே!

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:45 am

நண்பர்களே! வாராவாரம் நான் இந்தப் பகுதியில் செய்ய முயல்வது , ‘கவிஞரின் திறமை’ எனும் அவரின் ‘ஒரு முகத்தை’க் காட்டும் கண்ணாடியாக விளங்குவதேயன்றி வேறொன்றல்ல. நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையில், பலரின் முன்னால் பல முகங்களில் காட்சியளிக்கிறோம். அதே போல கவிஞரும் வாழ்வில் பல முகங்களைக் கொண்டவர். அவரின் அனைத்து அம்சங்களையும் தொட்டுக்காட்டுவதற்குரிய ஆழ்ந்த அறிவாற்றல் கொண்டவனல்ல நான். அதே சமயம் அவரின் குணாதிசயங்களை அலசுவது என் நோக்கமும் அல்ல.

கவிஞரே தனது நிலையற்ற கொள்கைகளை, காலத்துக்குக் காலம் தனது மனதில் மாற்றமுறும் தனது நிலைப்பாடுகளைத் தெள்ளத்தெளிவாக ஏற்றுக்கொண்டவர். அவரது அந்தப் பக்கத்தைப் பார்ப்பதற்கு நான் தகுதியுடையவனல்ல.

அரசியல் எனும் ஆழமறியாச் சமுத்திரத்தில் காலை விட்டு, அதனால் தனக்குக் கிடைத்த அனுபவங்களால் உந்தப்பட்டு பல படைப்புகளை நமக்களித்தவர் கவிஞர். கவிஞரெனும் அந்த மகாசமுத்திரத்தில் ‘அல்லன’ , ‘நல்லன’ இரண்டுமே உள்ளது. அவற்றில் நான் அள்ளுவது 'நல்லன' மட்டுமே.

அதே தொனியில் இன்று நான் பார்க்க விளைவது அவரது அற்புதமான பாடலொன்று. அந்தப் பாடலின் வார்த்தையலங்காரம், அதன் எளிமையான நடை! சோகமெனும் உணர்வை ‘வார்த்தை நடை’ எனும் ஊஞ்சலிலே ஆட்டி, அழகாக நமக்கு விருந்தாக்குகிறார் கவிஞர்.

எமது தமிழிலக்கியத்திலே கேள்வி - பதில் என்பது மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு மனதிலும் ஒவ்வொரு நிகழ்வையும் பற்றிக் கேள்வி எழுவது இயற்கை. பதில்கள், மனதின் பல இன்னல்களுக்கு விடையாகவும் அமைவதுண்டு அல்லது நமது இன்னலை மேலும் அதிகரிப்பதாகவும் அமைவதுண்டு.

அத்தகைய ஒரு கலாச்சாரப் பின்னணியில் ஒரு ஆணும், பெண்ணும் கேள்வி பதில் அடிப்படையில் சோகத்தைப் பகிர்ந்து கொள்வதாக உருவகப்படுத்திக் கவிஞர் கண்ணதாசன் அமைத்திருக்கும் பாடல், அவரது திறமையை கொடிகட்டிப் பறக்க விடுகிறது.

அந்தப் பாடலைப் பார்ப்போமா!

கண்ணிலே நீர் எதற்கு?
காலமெல்லாம் அழுவதற்கு

நெஞ்சிலே நினைவெதெற்கு?
வஞ்சகரை மறப்பதற்கு

இன்பமெனும் மொழி எதற்கு?
செல்வத்தில் மிதப்பதற்கு

துன்பமெனும் சொல்லெதெற்கு?
உள்ளமென்ப துள்ளவர்க்கு

கையிலே வளைவெதெற்கு?
காதலியை அணைப்பதற்கு

காலிலே நடையெதெற்கு?
காதலித்துப் பிரிவதற்கு

பாசமென்ற சொல்லெதெற்கு?
பார்த்திருந்து துடிப்பதற்கு

ஆசை கொண்ட வாழ்வெதெற்கு?
அன்றாடம் சாவதற்கு

பூவிலே தேனெதெற்கு?
வண்டு வந்து சுவைப்பதற்கு

வண்டுக்குச் சிறகெதெற்கு?
உண்ட பின்பு பறப்பதற்கு


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:45 am

துயருக்கு ஆறுதல் சொல்வதற்காகச் சில சமயங்களில், ‘அந்தத் துயரத்தை நெஞ்சில் கொண்டவர் எதிர்பார்க்கும் சோகமான விளக்கத்தை அளிப்பதுவே சிறந்த மார்க்கம்' என்றொரு கருத்து உண்டு. இங்கே கவிஞர் அந்த உத்தியைத்தான் பயன்படுத்தி இருக்கிறார்.

தன்னை விட்டு விலகிச் சென்ற தன் தலைவனை இழந்து தவிக்கும் பெண்ணுக்கு அவளுக்கு நடந்தவைகளையே அவளது கேள்விகளுக்கு விடையாக்குவதன் மூலம் ஒருவகையான ஆறுதலை, அவள் நெஞ்சில் தடவுவது போன்ற ஒரு உளவியல் வைத்தியத்தை இங்கே கடைப்பிடிக்கிறார் கவிஞர்.

கேட்கப்படும் கேள்விகளுக்குக் கிடைக்கும் பதில்கள், அந்தத் தலைவனின் கொடூரமான செய்கையைச் சுட்டிக் காட்டுபவையாகச் சுள்ளென்று தெறிப்பவையாக அமைந்துள்ளது, கவிஞர் கண்ணதாசனின் கற்பனை வளத்தின் செறிவை எடுத்துக் காட்டுகிறது; இளம் யுவதிகளின் வாழ்க்கையில் காதலால் ஏற்படும் மனவேதனைகளைச் சித்தரிக்கிறது.

இதுவே நான் கண்ட கவிஞர் கண்ணதாசன், இவரே நான் ரசித்த கண்ணதாசன், இத்தகைய இன்பமான நினைவுகளை , அவரது ஆற்றலின் செறிவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதிலே ‘அவர் ஒரு காவியம்’ என்பதை நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:46 am

அவளது மனம் முழுவதும் வேதனையின் நிழல். விடும் மூச்சு அவ்வளவும் வெப்பத்தின் கருவறை. என்ன செய்வாள் பேதைப்பெண்? காமன் விட்ட காதல் பாணத்தினல் அடியுண்டு, காதல் நோயால் பீடிக்கப்பட்டு விட்டாளே? உணவை எடுத்துக் கொண்டு உண்பதற்கு உட்கார்ந்தால், அப்படி ஒரு பசியின்மை! சோற்றுக் கவளம் வாயில் போய் ஒரு சுமையாக உருண்டு கொண்டிருக்கின்றதேயன்றி அவளால் உண்ண முடியவில்லை.

தாங்க முடியாது ஓடிச் சென்று படுக்கையில் விழுகிறாள். புரண்டு, புரண்டு படுக்கத் தான் முடிகிறதே ஒழிய அவளால் விழிகளை மூடித் தூங்க முடியவில்லையே! நெஞ்சினில் அவள் காதல் தலைவனின் சிரித்த முகம் ஊஞ்சலாடி, அவளது உள்ளத்தை அறுத்துக் கொண்டிருக்கிறது.

கொஞ்ச நேரம் விழிகளை மூடி நினைவுகளிலிருந்து தப்பலாம் என்று முயற்சித்தால், கனவுகளாய் வந்து அவள் கண்களைத் தழுவிக் கொள்கிறான் அவள் தலைவன். அதுவும் எப்படியான கனவு? கலர் கலரான கனவு, அழகிய பூங்காவிலே அவளை அணைத்துக் காதல் மழையில் தலைவன் தோய்க்கும் கனவு.

தாங்காதம்மா என்றவாறு எழுந்து, தோட்டத்திற்குள் வருகிறாள். தென்றல் அடிக்கிறது, அந்தத் தென்றல் எனும் தேரிலேறி அசைந்து வரும் வாசம் அவளை ஒரு பக்கம் இழுக்கிறது. தன்னையறியாமல் அவள் காலகள் இழுத்த பக்கம் சென்றவள், அந்த மலரைக் கண்டதும் ஸ்தம்பித்து நின்று விட்டாள்.

ஏன் என்கிறீர்களா?

அவளுடைய காதல் தலைவனுடன் சேர்ந்திருக்கும் வேளையிலே, அந்த மலர் அவளது கூந்தலைத் தழுவி சுகந்தத்தை அள்ளி வீசும் வேளையிலே, தனது மனதைப் பறிகொடுத்து அவள் தலைவன் அந்தக் கூந்தலின் அழகை வர்ணிப்பது போல அவளை வர்ணிக்கும் எத்தனை மாலைப் பொழுதுகளைக் கடந்து விட்டாள்.

அப்போது தான் அவளுக்கு அந்த எண்ணம் உதிக்கிறது. சந்தர்ப்பவசத்தால் தன்னைப் பிரிந்த அந்தத் தலைவன் இந்த மலரின் சுகந்தத்தை இன்னமும் ரசித்துக் கொண்டிருப்பான் தானே! அந்த மலரைப் பார்க்கும் போது தன் ஞாபகம் அவன் நெஞ்சையும் வாட்டும் தானே!

எங்கே, இந்த மலரையே தூது விடுவோமா?

சந்தர்ப்பம் அறிந்ததும், காட்சி துலங்கியதும் கவிஞரின் கற்பனைத் தேரின் தமிழ் வார்த்தைகளெனும் குதிரைகள் தட்டி விடப்படுகின்றன. பிறக்கின்றது ஒரு அருமையான பாடல்,

மலரே மலரே தெரியாதோ?
மனதின் நிலைமை புரியாதோ? - எனை
நீயறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னைக் காண வந்தால்
நிலையைச் சொல்வாயோ? - என்
கதையைச் சொல்வாயோ?


எங்கே ஒரு சமயம் தனது காதலன், தன்னை எண்ணி அந்த மலரைப் பார்க்கச் செல்வானோ? தனது எண்ணத்தை அவனது மனதிலிருந்து நீங்க விடாது இந்த மலர் காப்பாற்றக் கூடுமோ? அந்த இளம் நெஞ்சு வெம்பி ஏங்குவதை இத்தனை அழகாக எடுத்தியம்ப இத்தகைய காவியக் கவிஞனினால் தான் முடியும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:47 am

மனதின் வேதனையை மறக்க, காதல் நினைவுகள் கொடுக்கும் கனமான உணர்வுகளின் வலியை மறக்க என்ன செய்யலாம் என்று எண்ணியவள், தன் தோழியுடன் நாடகக் கொட்டகைக்குச் செல்கிறாள். நாடகத்தைப் பார்க்க முடிந்ததா? கவலையை மறக்க முடிந்ததா? அங்கே கூட அவளின் நினைவுகளை நிறைத்தது தலைவனின் காதல் நினைவுகள் கொடுத்த இதய சோகமே!

காட்சிகள் மாறும் நாடகம் போல
காலமும் மாறாதோ? காலமும் மாறாதோ?
காலங்களாலே வாழ்க்கை செல்லும்
பாதையும் மாறாதோ? பாதையும் மாறாதோ? - யார்
மாறிய போதும் பாவையெந்தன்
இதயம் மாறாது - என்
நிலையும் மாறாது.


இப்படித் தன் காதல் நினைவுகளில் இருந்து பல வழிகளில் தப்பிக்க முனைந்தவளுக்குக் கிடைத்தது தோல்வி தான். ஆனால் அவள் அதைத் தோல்வியாகக் கருதுவாளா? காதலையே இலக்கணமாக்கிய தமிழர் வழி வந்த பெண்ணல்லவா? அப்படியே தன் தலைவனின் நினைவுகளில் லயித்து விட்டாள். எந்த எண்ணங்களில் இருந்து கொஞ்சம் ஓய்வு பெறத் துடித்தாளோ? அந்த எண்ணங்களுக்கே தன் நெஞ்சைத் தாரை வார்த்து விட்டாள்.

அதை எப்படி எமது கவியரசர் கண்னதாசன் தனது வார்த்தையலங்காரங்களினால் ஜோடிக்கிறார் என்று பார்ப்போமே!

கண்களில் தோன்றும் காட்சியில் ஒன்றாய்க்
கலந்தே நின்றாரே, கலந்தே நின்றாரே,
நினைவுகள் தோறும் நெஞ்சில் என்றும்
நிறைந்தே நின்றாரே, நிறைந்தே நின்றாரே - இனி
அவருடன் வாழ்வில் ஒன்று சேரும்
திருநாள் வாராதோ? - என்
மணநாள் வாராதோ?


நண்பர்களே இந்தப் பாடலினுள் நுழைத்து உங்களை எந்த வழியால் அழைத்துச் செல்ல இந்தக் காவியக் கவிஞர் எண்ணினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவரது அர்த்தமுள்ள திரைகானங்கள் எனும் கானகத்தின் வழி நுழைந்து நான் சென்ற வழி உங்களை அழைத்து வந்துள்ளேன்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:47 am

எத்தனையோ எழுதினார். எதை எதையோ எழுதினார். எண்ணங்களாய் எழுதினார். அத்தனையும் மனதினில் ஆழப்பதியக்கூடிய பொக்கிஷங்களே! ஆமாம் நான் இங்கே குறிப்பிடுவது கண்ணதாசனின் ஒப்பற்ற படைப்புக்களைத்தான்.

சோகங்களாய் சுமந்தவை, கனவுகளாய்க் கலைந்தவை, இன்பங்களாய் நீந்தியவை; அந்த உணர்ச்சிப் பிரதிபலிப்புக்கள் அனைத்தும் அவர் திரைகானங்களில் எதிரொலித்தன.

கவிஞர் கண்ணதாசனின் மனதினிலே நீங்காத வேட்கை ஒன்றிருந்தது. அதை அவருடைய கட்டுரைகள் பலவற்றில் ஆங்காங்கே காணலாம். தமிழ் மொழியின் பொக்கிஷங்களில் ஒன்றான, சுருங்கக் கூறி பெரு அறிவு புகட்டும் அந்த அற்புதப் படைப்பான திருக்குறளுக்குத் தான் விளக்கவுரை எழுதவில்லையே என்பதுதான் அது.

ஆனால் அது கனவாகவே இருந்து விடவில்லை. தன்னுடைய சொந்த இதழான கண்ணதாசனில் தொடராக, காமத்துப்பாலுக்குத் தான் ஆசைப்பட்டபடியே விளக்கவுரை எழுதியிருந்தார். அதைப் பின்பு அவரது மகன் ‘காந்தி கண்ணதாசன்’ ஒரு புத்தகமாகக் கூட வெளியிட்டிருந்தார்.

இந்த வாரம் அந்தக் காமத்துப்பாலின் விளக்கங்கள் சிலவற்றைப் பார்க்க விழைகின்றேன். அதில் உள்ள சிறப்பம்சம் அதன் எளிமையான உரைநடையே ! இந்த விளக்க உரையின் முன்னுரையில் சிறிய கதை ஒன்றைப் புகுத்தி இருந்தார் நமது கவிக்கோமகன். அந்தச் சம்பவக் கதையை இந்த இதழில் கூறி, சில குறள்களையும் அதற்குக் கவிஞர் கொடுத்த விளக்கத்தையும் அடுத்த இதழில் பார்க்க விழைகின்றேன்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:48 am

இதோ அந்தச் சம்பவக் கதை,

இது நடந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு!

“தென்றல் இளங்காற்று சில்லென்று வீசிவரும் பச்சை மலைச்சாரல்.

அந்தப் பச்சைமலை முகட்டுக்குப் பாவாடை போர்த்தியது போல் மேகக் கூட்டங்கள்.

மலையடிவாரத்தில் ஓர் அழகான சிற்றூர்.

ஒழுங்காக அமைக்கப்பட்ட சாலைகள்.

ஓடு வேய்ந்த வீடுகள்.

அற்புதமான கற்கட்டுக்களோடு அமைந்த அழகான குளங்கள்.

வானோங்கி நிற்கும் தென்னை மரங்கள்.

பறிப்போர் இல்லாமல் பழங்களை பூமியில் உதிர்க்கும் மாமரங்கள்.

நகரின் மூலையில் ஒரு சிவன் கோவில். மற்றொரு மூலையில் சமணர் கோயில்.

இன்னுமொரு பகுதியில் பெளத்தப் பள்ளி.

தெள்ளு தமிழை மண்ணிலே எழுதிப் பழகும் சிறார்கள் பள்ளி.

ஏடெழுதித் தமிழ் படிக்கும் குருகுலம்.

சாலைகளில் உப்பு வண்டிகள், அரிசி வண்டிகள்.

ஒரு சிறிய நாளங்காடி, ஓர் அல்லங்காடி.

அந்தச் சிற்றூரிலே கட்டழகு படைத்த காளை ஒருவன்.

கார் குழலை பூமியிலே அலைமோத விட்ட கன்னி ஒருத்தி.

இல்லத்தை விட்டு வெளிவந்ததில்லை, அந்த இளங்கன்னி.

அவளது இன்முகத்தை ஒருபோதும் பார்த்ததில்லை அந்த இளங்காளை.

ஊருக்கு வெளியே உள்ள சாலையில் ஒரு கிணறு.

அந்தக் கிணற்றின் தண்ணீர், அருந்த அருந்தத் தாகம் எடுக்கும் ஒரு அற்புத நீர்.

அதில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வரலாம் என்று மண் குடத்தை இடையில் ஏந்தி, மலர்த்தோட்டம் நடைபோடுவது போல் நடந்து வந்தாள் அந்த நங்கை.

போர்க்களத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தான், அந்த வாலிபன்.

அவள் குனிந்த தலை நிமிராமல் நின்ற கோலத்திலேயே நின்றாள்.

அவன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.”

காமத்துப்பாலின் விளக்கத்தைச் சுவையோடு வடிக்க, ஒரு காதல் கதையை இனிமைத் தமிழில் அழகுற நிகழ்த்தி விட்டார். மனத்திரையிலே காட்சியை அசை போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்த பகுதியில் கவிஞரின் குறள் விளக்கத்துடன் சந்திக்கிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக