புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10 
91 Posts - 61%
heezulia
"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10 
6 Posts - 4%
eraeravi
"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10 
1 Post - 1%
viyasan
"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10 
283 Posts - 45%
heezulia
"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10 
19 Posts - 3%
prajai
"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கவிதை" என்பது வடமொழியா?


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Feb 11, 2012 2:51 pm

"கவி" என்றால் 'குரங்கு' என்று
சிலர்
வடமொழியைச் சான்றுக்கு இழுக்கிறார்களே!
'கவி' உடன் 'தை' ஐச் சேர்த்தால்
'குரங்கு'+'தை' = 'குரங்கைத்தை' என்பதா
கவிதை என்றும் கேட்கிறார்களே!
கவிதை என்பது
குரங்கைத்தையும் இல்லை
வடமொழியும் இல்லை
தூய தமிழ் தான் என்பதை
அலசிப் பார்க்கத் தவறியதே
என் தவறு என
நான் நினைக்கின்றேன்!
'கவி' என்ற சொல்
வடமொழியில் இல்லையாமே...
'கபி' என்று தானாம் இருக்கே!
'கபி' இற்குப் பொருள்
வடமொழியில்
'குரங்கு' தானாம் - அதுவும்
நம்ம தமிழ் தானாம் - அதனை
('கபி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததும்
வடமொழியாம்!
அடடே!
நானொரு முட்டாளுங்க...
கவிதை பற்றிச் சொல்லாமலே
இத்தனை வரிகளை நீட்டிப்போட்டேனே...!
இன்னும் நீட்டினால்
நீங்கள்
என்னைச் சாகடிச்சிடுவியளே...
அதுதானுங்க
'கவி' என்பதும் 'தை' என்பதும்
என் தாய்த் தமிழென்றே
தொடருகிறேன் பாரும்...!
தமிழில் 'கவி' என்றால்
கவிந்தபடி - கவிழ்ந்தபடி
நடப்பதென்று பொருளாம்...
அப்படி
நடப்பது குரங்காம்...
அதற்காக
'கவி' என்றால் 'குரங்கு' ஆகுமோ?
தமிழில் 'தை' என்றால்
தைத்தல் - பிணைத்தல் என்று தான்
நான் நினைக்கிறேன்!
தமிழில் 'கவிதை' என்றால்
"கருத்தொடு பல அணிகளும்
கவிந்திருப்பது" என்று தான்
தமிழறிஞர்கள் கூறுகிறார்களே!
'கவி' என்றால் 'கவிஞன்' என்று
வடமொழியில் சொல்கிறார்களே...
அதுகூட
('கவி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததாம்!
'கவிதை' இற்குப் பதிலாக
'பா' என்றழைப்பதில்
தவறேதும் உண்டோ?
தமிழில் 'பா' என்பதும்
கருத்து, உணர்வு, நன்னெறி ஆகியவற்றை
பாவுதல் என்று பொருளாம்!
இதற்கு மேலே இன்னும் நீட்டினால்
எனக்கே
தலை வெடிக்கும் போல இருக்கே...
முடிவாகக் 'கவிதை' என்பது
தமிழென்றே முடிக்கிறேன்!
---------------------------------------------------------------------------------------------
சான்று: பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.





உங்கள் யாழ்பாவாணன்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Feb 11, 2012 7:48 pm

நல்ல தகவல்,

ஆனால் கபி என்ற வடசொல்லுக்கு சூரியன் என்ற அர்த்தமும் உண்டு.
19 ஆம் நூறாண்டில் வாழ்ந்த பெரியவர்கள் (உண்மையில் சிறியவர்கள்) தமிழில் உள்ள பல சொல்லுக்கு வடமொழி அர்த்தம் கற்பித்தனர்.
கதலி என்றால் தமிழில் வாழை, இதுவும் வடமொழி சொல் என்றும் கூறுகின்றனர்.

தமிழ் என்றும் தமிழ் தான்.



சதாசிவம்
"கவிதை" என்பது வடமொழியா?  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Feb 11, 2012 8:11 pm

தமிழ்மீது பற்று இருக்கலாம். ஆனால் உண்மைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு பெருமை கொள்ளல் ஆகாது,

கவிதா என்னும் சமஸ்கிருத சொல்லே தமிழில் கவிதை என்று வழங்கப்பட்டது.

தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் கூட கையாண்டிரப்படாத சொல்லே கவிதை.

தமிழில் செய்யுள் பா விருத்தம் நூல் என்ற பெயர்களே பண்டு வழங்கப்பட்டது,

சரி நமக்கேன் வம்பு. ஆமாம் என்று சொல்லிப்போனால் முடிந்தது.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
bavanvijayaraja
bavanvijayaraja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 02/10/2011

Postbavanvijayaraja Sat Feb 11, 2012 9:17 pm

. கவிதை தமிழ்ச்சொல் தான். கவிதையிலிருந்து தான் கவிதா சென்றது. மீண்டும் தமிழுக்கு கவிதையாகி வந்துவிட்டது.
கதையிலிருந்து கதா போனது போல
ஊருக்கு அம்மா போயிட்டு வந்தா நம்ம அம்மா தானே.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 11, 2012 9:19 pm

கபாலி wrote:தமிழ்மீது பற்று இருக்கலாம். ஆனால் உண்மைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு பெருமை கொள்ளல் ஆகாது,

கவிதா என்னும் சமஸ்கிருத சொல்லே தமிழில் கவிதை என்று வழங்கப்பட்டது.

தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் கூட கையாண்டிரப்படாத சொல்லே கவிதை.

தமிழில் செய்யுள் பா விருத்தம் நூல் என்ற பெயர்களே பண்டு வழங்கப்பட்டது,

சரி நமக்கேன் வம்பு. ஆமாம் என்று சொல்லிப்போனால் முடிந்தது.

நல்ல கருத்துக்களை பகிா்வதில் தவறேதும் இல்லை.

மற்றவா்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக உண்மைகளை மறைக்கவும், மறுக்கவும் கூடாது கபாலி அவா்களே.

நீங்கள் சொன்ன கருத் து சாியென்றால், அதற்கான ஆதாரம் தாங்கள் காட்டிய வண்ணம் சாியென்றால் தயங்காமல் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்.

உண்மைகளை பிறா் அறிய சொல்வதில் தயக்கமோ, பயமோ படத் தேவையில்லை. அதே சமயம் சொல்லும் விதமும் மிக முக்கியம். அப்பொதுதான் அது போய் சேர வேண்டியவா்களை சாியாக சென்றடையும்.

நன்றி அன்பு மலர்



"கவிதை" என்பது வடமொழியா?  154550"கவிதை" என்பது வடமொழியா?  154550"கவிதை" என்பது வடமொழியா?  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "கவிதை" என்பது வடமொழியா?  154550"கவிதை" என்பது வடமொழியா?  154550"கவிதை" என்பது வடமொழியா?  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 9:25 pm

எனக்கு கவிதை என்பது தமிழாக தான் தோன்றுகிறது வட சொல்லாக தெரிய வில்லை புன்னகை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"கவிதை" என்பது வடமொழியா?  Ila
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Feb 11, 2012 9:26 pm

அப்படி இல்லை சார்லஸ். நாம் எத்தனை ஆதாரம் வைத்தாலும் நம்மை தமிழுக்கு எதிரி என்று சொல்லி ஒதுக்கிவிடுவார்கள்.

நான்சொன்னது முற்றிலும் சரியானது, அத்தோடு என் பங்கு முடிந்தது,



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Feb 11, 2012 10:51 pm

கபாலி wrote:அப்படி இல்லை சார்லஸ். நாம் எத்தனை ஆதாரம் வைத்தாலும் நம்மை தமிழுக்கு எதிரி என்று சொல்லி ஒதுக்கிவிடுவார்கள்.

நான்சொன்னது முற்றிலும் சரியானது, அத்தோடு என் பங்கு முடிந்தது,

நீங்கள் ஆதாரம் வைத்துள்ளீர்களா ?வைத்திருந்தால் பகிரவும் , ,உங்கள் ஆதாரங்களை பார்த்து நீங்கள் சொல்வது உண்மயா என்று தெரிந்துகொள்கிறோம்

எந்த விளக்கமும் இல்லாமல் நான் சொல்வதுதான் சரி என்றால் எப்படி ?விளக்கம் சொல்ல விரும்பவில்லை என்றால் உங்கள் கருத்தை சொல்லாமலே இருந்திருக்கலாமே ,



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Feb 12, 2012 8:42 am

கீழே கொடுக்கப்பட்ட பாடலில் கவி என்ற சொல் வருகிறது. இது ஔவையாரால் எழுதப்பட்ட சங்க கால நூல்களுள் ஒன்று.

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி - மூதுரை

கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதியில் "கல்லும் சொல்லாதோ கவி " என்ற வரிகள் வருகிறது.

கவி என்பது வடமொழிச் சொல் என்பதற்கு ஆதாரம் இருந்தால் தெரிவியுங்கள். தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

சமஸ்க்ரிதம் தென் இந்தியாவில் 6, 7 ஆம் நூறாண்டுக்கு பிறகு தான் வளர்ந்ததாக கூறப்படுகிறது.





சதாசிவம்
"கவிதை" என்பது வடமொழியா?  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Feb 12, 2012 1:00 pm

ஔவையார் பல காலத்தில் வாழ்ந்த பல பெண்கவிகளைக் குறிக்கும் பெயர். சங்ககால ஔவையார் அதியமான் காலத்திய ஔவையார் வேறு. மூதுரை ஆத்திச்சூடி போன்றவை எழுதிய ஔவையார் வேறு.

நீங்கள் குறிப்பிட்ட பாடல் பிற்கால ஔவையார் பாடிய பாடல். கம்பரும் சங்க காலத்திற்கு பிற்பட்ட கவிஞர் தான்.

வட இந்திய மொழிக் கலப்பு தொல்காப்பியத்தின் காலத்திலேயே இருந்தது என்பதற்கு அதில் அவர் நால் வகை வருணங்களாக அந்தணர் அரசர் வணிகர் வேளார் ( உழவர்) எனப் பாகுபாடு தந்திருப்பதையும் அந்த வருணப்பாகுபாடு வடமொழியில் இருந்தே வந்தது எனவும் உணரலாம்.

என்ப நூலோர்... என்ப புலவர் என்று தொல்காப்பிய குறிப்பிடுவதில் அவருக்கும் முன்பு பல நூல்கள் தமிழில் உண்டு என்பதும் அகத்தியம் என்னும் இலக்கண நூலின் எளிமையே தொல்காப்பியம் என்பதும் உரையாசிரியர்கள் கூறி இருக்கிறார்கள்.

நமக்கு கிடைக்கும் தொன்மையான தமிழ் இலக்கண்ம் தொல்காப்பியம். அதில் பாவகைகள் குறிப்பிடும் தொல்காப்பியர் எங்குமே கவிதை என்று குறிக்கவில்லை. மாறாக பாவினங்களைத்தான் கூறி இருக்கிறார்.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக