புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிணங்களை வைத்து பிரசாரம் செய்யாதவர் பெரியார்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பிணங்களை வைத்து பிரசாரம் செய்யாதவர் பெரியார்!
இந்த விழாவின் வெற்றி கண்டு மகிழச்சியடைகிறேன். தந்தை பெரியாருக்கு நல்லதொரு காரை அன்பளிப்பாகத் தர நாம் கூடியுள்ளோம்.
ஐயா அவர்களுக்கு ஒரு நாளாவது பேசா விட்டால் உடல்நிலை குறைந்து விடும் என்ற நிலையிலுள்ளது. ஆனால் அக்காலத்தில் கோடிக்கணக்கான மக்கள், கோயில், குளம், தலைவிதி போன்றவற்றை நம்பித் திரிந்தனர். ஒற்றைப் பார்ப்பான் வந்தால் ஒதுங்குவதும், எண்ணெய் வருகிறதா, எனப் பார்ப்பதும், பல்லியின் குரலுக்குப் பயந்தும் இருந்தனர். அந்நாளில் முதன் முதலாக ஒலித்த குரல் பெரியார் குரல்தான்.
நம்முடைய பருவத்தில் பார்க்காவிட்டாலும், நாம் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இன்றைக்குக் கூட்டமென்றால் மக்கள் திரளாகக் கூடுகின்றார்கள். பலமாகக் கை தட்டுகிறார்கள். ஆனால் பயங்கர வைதீகம் தலை விரித்தாடிய நாளில், ஆண்டவனைப் பற்றிப் பேசினால் அம்மை வரும், காலரா வரும், என்று பயமுறுத்திய நாடகளில் கடவுளைப் பற்றி அடிமுதல் நுனிவரை பேச ஆரம்பித்தது பெரியார்தான். முடங்கிக் கிடந்த இனத்தின் வளர்ச்சிக்கு முதற் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்தான்.
தந்தை பெரியார் போட்ட பாதையில் இன்று பலபேர் கார் விடுகிறார்கள். கல்லும் முள்ளும் நிறைந்த அந்த நாளில், எந்த வழியாய்ப் பாதை வெட்டுவது என்பது கூட அறியாதிருந்த நேரத்தில், செருப்பு வீச்சு, சாணியடி, பன்றி விரட்டு , பாம்பு விடுதல் போன்ற வைதீக வெறியாட்டங்களுக்கு நடுவில், சாதியின் பல்லைப்பிடுங்கப் படாதபாடு பட்டவர் ஐயா அவர்கள்தான், நேற்று மதுரையில் பேசிய நேரு சாதி ஒழிப்பைப் பற்றி பேசியிருக்கிறார். வடநாட்டில் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசாமல் தமிழகத்தில் அவர் பேசியதற்குக் காரணம் தந்தை பெரியாரின் உழைப்புதான்.
இன்றைக்கு அரசியல் பேசுவது மிகச் சாதாரணம்; சுலபமானது. காதல் கதை பேசி அரசியல்வாதியாகி விடலாம். கடுமையான அரசியல் தொண்டைவிட அலங்காரப் பேச்சால் சுலப வியாபாரம் நடக்கிறது. ஆனால் அன்று ஐயா எடுத்துக் கொண்ட பணி பயங்கரமானது. காங்கிரஸ் கண்ட ஆதிக்க சக்தியினையும் அதனால் பெற்ற அனுபவங்களையும் கொண்டு வெளியேறினார். காங்கிரசிற்குள்ளேயும் பேத உணர்ச்சி வளர்ந்துகொண்டே வந்தது. ஆச்சாரியார் - காமராசர் போர் நடக்க ஆரம்பித்தது. ஆரம்ப முதலே பெரியார் காமராசரை ஆதரிக்கத் தயங்கவில்லை. காங்கிரசிலேயும் ‘பெரியார் வெளியே இருக்கிறார்; இங்கு ஏதாவது நடந்தால் பெரியார் மடியில் விழலாம்’ என்ற துணிச்சல்தான் ஆச்சாரியாரை எதிர்க்கும் துணிவு பிறந்தது.
அக்கிரகாரத்தில் நடக்கக்கூட முடியாமலிருந்த நிலையை அடித்துத் தகர்த்தவர் பெரியார், தண்ணீர்ப் பந்தல்களில் பிற்பட்ட மக்களுக்கு மூங்கில் குழாய் மூலந்தான் தண்ணீர் ஊற்றுவார்கள். அது இன்று மாறியது ஐயாவால்தான். ஓட்டல்களில் வேலை பார்ப்பவனைச் சாமி என்று அழைத்தனர் அப்போது, ‘ஆண்டவனும் சாமி இவனும் சாமியா? எனக் கேட்டு, இன்று அதிகாரம் செய்யுமளவுக்கு உணர்ச்சியூட்டியவர் பெரியார். பெரியார் முன்பு பேசிய பேச்சுத்தான் சமுதாய சீர்திருத்தம் பற்றி பேச மற்றவர்களுக்குத் துணிச்சலைத் தந்தது, ஐயா அவர்கள் அரசியலைப் பற்றி ஒரு வரையறை வகுத்தார். சட்டசபை செல்வது பொறுக்கினத்தனம் எனக் கூறி, அங்கு நுழையாமல் துணிந்து நல்ல கருத்துகளைச் சொல்பவர் ஐயா ஒருவர்தான்.
தி.மு.க. பிறந்த நேரத்தில், “எங்களுக்கென்று யாரும் தலைவர் கிடையாது. தலைவர் நாற்காலி காலியாகி இருக்கிறது. ஐயாவின் கொள்கைதான் எங்கள் கொள்கையும்,” என்று பேசி முழங்கினர். நான் கட்சிக்கு சென்ற நேரத்தில்கூட தி.மு.க.வில் கடவுள் எதிர்ப்பு கோஷம், பார்ப்பன எதிர்ப்புணர்ச்சி காணப்பட்டன.
“சீரங்கநாதனையும் தில்லை நடராசனையும், பீரங்கி வைத்துப் பிளப்பதுதான் எந்நாளோ? பெண் கேட்டு சேய் கேட்டுப் பித்தான சாமிகளை மண்போட்டு மூடுவதும் எக்காலம்” என்று பாடியவர்கள், திருச்சியில் கூடித் தேர்தலில் நிற்பது என்று முடிவு செய்தவுடன் முழு நாத்திகத் தன்மையிழந்து, ‘பார்ப்பனீயம் போனால் போதும்; ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றே முழங்கும் எங்கள் கழகம்’ என முழங்கத் தொடங்கினர். ஆனால் ஐயா அவர்கள் என்றும் தன் பாதையை மாற்றிக் கொள்ளவே இல்லை.
மக்களைப் பார்த்து நீங்கள் முட்டாள்கள் எனக் கூறும் துணிச்சல் படைத்தவர் ஐயா ஒருவர்தான். ஐக்கோர்ட் பற்றிய வழக்கில் நீதிமன்றத்தில் பேசும்போது ‘இந்த நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை’ எனத் துணிந்து கூறியவர் பெரியார் ஒருவர்தான். அவர் கட்டுப்பாடு பற்றி ஒரு மணி நேரம் பேசுவதில்லை; கண்ணியம் பற்றி ஒரு மணி நேரம் முழங்குவதில்லை; ஆனால் கட்சியில் கட்டுப்பாடு குலைந்தால் அந்தக் கிளை அப்போதே கலைக்கப்படும். அத்தகைய இராணுவத் தலைவருக்குரிய தகுதி ஐயா ஒருவரிடந்தான் உண்டு.
வீரம், குருதி, என்றெல்லாம் அவர் ஒரு நாள் கூடப் பேசியதில்லை, அவர் ஒரு செயல் வீரர். வணங்குவதற்குரிய தேசியக் கொடி என்றனர் காங்கிரசார்! அது வெறும் துணி என்றார் ஐயா. சட்டம் என மிரட்டினார்கள்; அது வெறும் காகிதம் என்றார்!
சட்ட எரிப்புப் போரில் 9 மாத காலம் சிறை சென்றிருந்தார்; பல திராவிடர் கழக வீரர்கள் சிறை சென்றனர். 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையில் பல்வேறு தண்டனைகள் பெற்றனர். போர்க்களம் சென்ற திராவிடர் ‘மாண்டாயா?’ என அழுவதைப் பார்க்கிறோம். திராவிடர் கழக வீரர்களில் 15 பேர் மரணமடைந்தனர்.
அந்தப் பிணங்களைக் காட்டி ஐயா அவர்கள் தன் பிரசாரத்தைச் செய்யவில்லை. சொந்தப் பிணங்களைப் பற்றியே ஐயா அவர்கள் பிரமாதப்படுத்தவில்லை. சில கட்சியினர் சாலைப்பிணங்களைச் சபையில் தூக்கிவைத்துக் கொண்டு ஒப்பாரி வைப்பார்கள். உண்மையில் யார் வீரர்? எது படை? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
எதிர்த்தவர் பகுதிகளில் நின்றவன் நான். இன்று என் நிலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஐயாவை ஆம்பூரில் தான் முதன்முறையாகப் பார்த்தேன். எனக்கு அவர் இன்னும் 80 ஆண்டு வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை தோழர் சம்பத் அவர்கள் 60 நாட்கள் சுற்றுப் பயணம் மேற் கொண்டார். திரும்பிவரும்போது 8 பவுண்ட் எடை குறைந்து வந்தார். ஆனால் ஐயாவின் உடல் எவ்வளவு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் தளராத தன்மை படைத்தது. பக்கத்து நாட்டுக்காரன் அவருடைய போட்டோவைப் பார்த்தால் கூட மதிக்கக்கூடிய கம்பீரம் வாய்ந்த தலைவர் ஐயா அவர்கள்.
பெரியாரிடம் உத்தமமான தொண்டர்கள்தாம் இருக்க முடியும். காலணாக்கூட சம்பாதிக்க முடியாது. கட்டுப்பாடு மீற முடியாது; இருந்தாலும் எண்ணற்ற தொண்டர்கள் இருக்கின்றனர் என்றால் அது ஐயாவின் தன்னலமற்ற பணியையே குறிக்கிறது.
(பெரியார் அவர்களுக்கு 8.10.61 அன்று சிதம்பரத்தில் கார் பரிசளித்த நிகழ்வில் நிகழ்த்திய உரை)
- ஆர்.பி. சங்கரன்
(சம்பத் கண்ணதாசன் பார்வையில் பெரியார்)
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY
இந்த விழாவின் வெற்றி கண்டு மகிழச்சியடைகிறேன். தந்தை பெரியாருக்கு நல்லதொரு காரை அன்பளிப்பாகத் தர நாம் கூடியுள்ளோம்.
ஐயா அவர்களுக்கு ஒரு நாளாவது பேசா விட்டால் உடல்நிலை குறைந்து விடும் என்ற நிலையிலுள்ளது. ஆனால் அக்காலத்தில் கோடிக்கணக்கான மக்கள், கோயில், குளம், தலைவிதி போன்றவற்றை நம்பித் திரிந்தனர். ஒற்றைப் பார்ப்பான் வந்தால் ஒதுங்குவதும், எண்ணெய் வருகிறதா, எனப் பார்ப்பதும், பல்லியின் குரலுக்குப் பயந்தும் இருந்தனர். அந்நாளில் முதன் முதலாக ஒலித்த குரல் பெரியார் குரல்தான்.
நம்முடைய பருவத்தில் பார்க்காவிட்டாலும், நாம் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இன்றைக்குக் கூட்டமென்றால் மக்கள் திரளாகக் கூடுகின்றார்கள். பலமாகக் கை தட்டுகிறார்கள். ஆனால் பயங்கர வைதீகம் தலை விரித்தாடிய நாளில், ஆண்டவனைப் பற்றிப் பேசினால் அம்மை வரும், காலரா வரும், என்று பயமுறுத்திய நாடகளில் கடவுளைப் பற்றி அடிமுதல் நுனிவரை பேச ஆரம்பித்தது பெரியார்தான். முடங்கிக் கிடந்த இனத்தின் வளர்ச்சிக்கு முதற் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்தான்.
தந்தை பெரியார் போட்ட பாதையில் இன்று பலபேர் கார் விடுகிறார்கள். கல்லும் முள்ளும் நிறைந்த அந்த நாளில், எந்த வழியாய்ப் பாதை வெட்டுவது என்பது கூட அறியாதிருந்த நேரத்தில், செருப்பு வீச்சு, சாணியடி, பன்றி விரட்டு , பாம்பு விடுதல் போன்ற வைதீக வெறியாட்டங்களுக்கு நடுவில், சாதியின் பல்லைப்பிடுங்கப் படாதபாடு பட்டவர் ஐயா அவர்கள்தான், நேற்று மதுரையில் பேசிய நேரு சாதி ஒழிப்பைப் பற்றி பேசியிருக்கிறார். வடநாட்டில் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசாமல் தமிழகத்தில் அவர் பேசியதற்குக் காரணம் தந்தை பெரியாரின் உழைப்புதான்.
இன்றைக்கு அரசியல் பேசுவது மிகச் சாதாரணம்; சுலபமானது. காதல் கதை பேசி அரசியல்வாதியாகி விடலாம். கடுமையான அரசியல் தொண்டைவிட அலங்காரப் பேச்சால் சுலப வியாபாரம் நடக்கிறது. ஆனால் அன்று ஐயா எடுத்துக் கொண்ட பணி பயங்கரமானது. காங்கிரஸ் கண்ட ஆதிக்க சக்தியினையும் அதனால் பெற்ற அனுபவங்களையும் கொண்டு வெளியேறினார். காங்கிரசிற்குள்ளேயும் பேத உணர்ச்சி வளர்ந்துகொண்டே வந்தது. ஆச்சாரியார் - காமராசர் போர் நடக்க ஆரம்பித்தது. ஆரம்ப முதலே பெரியார் காமராசரை ஆதரிக்கத் தயங்கவில்லை. காங்கிரசிலேயும் ‘பெரியார் வெளியே இருக்கிறார்; இங்கு ஏதாவது நடந்தால் பெரியார் மடியில் விழலாம்’ என்ற துணிச்சல்தான் ஆச்சாரியாரை எதிர்க்கும் துணிவு பிறந்தது.
அக்கிரகாரத்தில் நடக்கக்கூட முடியாமலிருந்த நிலையை அடித்துத் தகர்த்தவர் பெரியார், தண்ணீர்ப் பந்தல்களில் பிற்பட்ட மக்களுக்கு மூங்கில் குழாய் மூலந்தான் தண்ணீர் ஊற்றுவார்கள். அது இன்று மாறியது ஐயாவால்தான். ஓட்டல்களில் வேலை பார்ப்பவனைச் சாமி என்று அழைத்தனர் அப்போது, ‘ஆண்டவனும் சாமி இவனும் சாமியா? எனக் கேட்டு, இன்று அதிகாரம் செய்யுமளவுக்கு உணர்ச்சியூட்டியவர் பெரியார். பெரியார் முன்பு பேசிய பேச்சுத்தான் சமுதாய சீர்திருத்தம் பற்றி பேச மற்றவர்களுக்குத் துணிச்சலைத் தந்தது, ஐயா அவர்கள் அரசியலைப் பற்றி ஒரு வரையறை வகுத்தார். சட்டசபை செல்வது பொறுக்கினத்தனம் எனக் கூறி, அங்கு நுழையாமல் துணிந்து நல்ல கருத்துகளைச் சொல்பவர் ஐயா ஒருவர்தான்.
தி.மு.க. பிறந்த நேரத்தில், “எங்களுக்கென்று யாரும் தலைவர் கிடையாது. தலைவர் நாற்காலி காலியாகி இருக்கிறது. ஐயாவின் கொள்கைதான் எங்கள் கொள்கையும்,” என்று பேசி முழங்கினர். நான் கட்சிக்கு சென்ற நேரத்தில்கூட தி.மு.க.வில் கடவுள் எதிர்ப்பு கோஷம், பார்ப்பன எதிர்ப்புணர்ச்சி காணப்பட்டன.
“சீரங்கநாதனையும் தில்லை நடராசனையும், பீரங்கி வைத்துப் பிளப்பதுதான் எந்நாளோ? பெண் கேட்டு சேய் கேட்டுப் பித்தான சாமிகளை மண்போட்டு மூடுவதும் எக்காலம்” என்று பாடியவர்கள், திருச்சியில் கூடித் தேர்தலில் நிற்பது என்று முடிவு செய்தவுடன் முழு நாத்திகத் தன்மையிழந்து, ‘பார்ப்பனீயம் போனால் போதும்; ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றே முழங்கும் எங்கள் கழகம்’ என முழங்கத் தொடங்கினர். ஆனால் ஐயா அவர்கள் என்றும் தன் பாதையை மாற்றிக் கொள்ளவே இல்லை.
மக்களைப் பார்த்து நீங்கள் முட்டாள்கள் எனக் கூறும் துணிச்சல் படைத்தவர் ஐயா ஒருவர்தான். ஐக்கோர்ட் பற்றிய வழக்கில் நீதிமன்றத்தில் பேசும்போது ‘இந்த நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை’ எனத் துணிந்து கூறியவர் பெரியார் ஒருவர்தான். அவர் கட்டுப்பாடு பற்றி ஒரு மணி நேரம் பேசுவதில்லை; கண்ணியம் பற்றி ஒரு மணி நேரம் முழங்குவதில்லை; ஆனால் கட்சியில் கட்டுப்பாடு குலைந்தால் அந்தக் கிளை அப்போதே கலைக்கப்படும். அத்தகைய இராணுவத் தலைவருக்குரிய தகுதி ஐயா ஒருவரிடந்தான் உண்டு.
வீரம், குருதி, என்றெல்லாம் அவர் ஒரு நாள் கூடப் பேசியதில்லை, அவர் ஒரு செயல் வீரர். வணங்குவதற்குரிய தேசியக் கொடி என்றனர் காங்கிரசார்! அது வெறும் துணி என்றார் ஐயா. சட்டம் என மிரட்டினார்கள்; அது வெறும் காகிதம் என்றார்!
சட்ட எரிப்புப் போரில் 9 மாத காலம் சிறை சென்றிருந்தார்; பல திராவிடர் கழக வீரர்கள் சிறை சென்றனர். 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையில் பல்வேறு தண்டனைகள் பெற்றனர். போர்க்களம் சென்ற திராவிடர் ‘மாண்டாயா?’ என அழுவதைப் பார்க்கிறோம். திராவிடர் கழக வீரர்களில் 15 பேர் மரணமடைந்தனர்.
அந்தப் பிணங்களைக் காட்டி ஐயா அவர்கள் தன் பிரசாரத்தைச் செய்யவில்லை. சொந்தப் பிணங்களைப் பற்றியே ஐயா அவர்கள் பிரமாதப்படுத்தவில்லை. சில கட்சியினர் சாலைப்பிணங்களைச் சபையில் தூக்கிவைத்துக் கொண்டு ஒப்பாரி வைப்பார்கள். உண்மையில் யார் வீரர்? எது படை? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
எதிர்த்தவர் பகுதிகளில் நின்றவன் நான். இன்று என் நிலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஐயாவை ஆம்பூரில் தான் முதன்முறையாகப் பார்த்தேன். எனக்கு அவர் இன்னும் 80 ஆண்டு வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை தோழர் சம்பத் அவர்கள் 60 நாட்கள் சுற்றுப் பயணம் மேற் கொண்டார். திரும்பிவரும்போது 8 பவுண்ட் எடை குறைந்து வந்தார். ஆனால் ஐயாவின் உடல் எவ்வளவு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் தளராத தன்மை படைத்தது. பக்கத்து நாட்டுக்காரன் அவருடைய போட்டோவைப் பார்த்தால் கூட மதிக்கக்கூடிய கம்பீரம் வாய்ந்த தலைவர் ஐயா அவர்கள்.
பெரியாரிடம் உத்தமமான தொண்டர்கள்தாம் இருக்க முடியும். காலணாக்கூட சம்பாதிக்க முடியாது. கட்டுப்பாடு மீற முடியாது; இருந்தாலும் எண்ணற்ற தொண்டர்கள் இருக்கின்றனர் என்றால் அது ஐயாவின் தன்னலமற்ற பணியையே குறிக்கிறது.
(பெரியார் அவர்களுக்கு 8.10.61 அன்று சிதம்பரத்தில் கார் பரிசளித்த நிகழ்வில் நிகழ்த்திய உரை)
- ஆர்.பி. சங்கரன்
(சம்பத் கண்ணதாசன் பார்வையில் பெரியார்)
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY
- zazgopiபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 03/01/2012
சீனா, இந்தியா மீது போர் தொடுத்த நேரம், இவர் நான் கோயிலுக்குள் என் மக்களை அழைத்துக் கொண்டு செல்வேன் எனப் போராடினாராம்.
உண்மையிலேயே இவர் சுய நினைவுடன்தான் வாழ்ந்தாரா?
இவரைப் பற்றிய கட்டுரைகளைப் படித்தாலே எனக்குக் கோபம் வருகிறது.
உண்மையிலேயே இவர் சுய நினைவுடன்தான் வாழ்ந்தாரா?
இவரைப் பற்றிய கட்டுரைகளைப் படித்தாலே எனக்குக் கோபம் வருகிறது.
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
கோவில் கூடாது என்று சொல்லவில்லை கோவில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிட கூடாது என்று நினைதவர் பெரியார கோவில் நுழைவு போராட்டம் நடதியதும் தப்பு என்று சொல்லலாமா ?பெரியார் மட்டும் இல்லையென்றால் தமிழ் சமூகம் இன்னும் மதம் ஜாதி என்கிற புதை மணலில் சிக்கியிருக்கும் ........................
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஜாதி மதம் என்று இந்தியாவின் பிற மாநிலத்தை ஒப்பிடும் பொது தமிழ்நாடு எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. அதற்கு காரணம் பெரியார் தான்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்ப நாம பப்புக்குள்ளையும், டாஸ்மாக்கிற்குள்ளையும் தான் நுழைவதற்கு தயாரா இருக்கிறோம். அவரோ ஒரு சமூகமே சீர்படzazgopi wrote:சீனா, இந்தியா மீது போர் தொடுத்த நேரம், இவர் நான் கோயிலுக்குள் என் மக்களை அழைத்துக் கொண்டு செல்வேன் எனப் போராடினாராம்.
உண்மையிலேயே இவர் சுய நினைவுடன்தான் வாழ்ந்தாரா?
இவரைப் பற்றிய கட்டுரைகளைப் படித்தாலே எனக்குக் கோபம் வருகிறது.
கோவில் நுழைவு போராட்டம் செய்தார். குறை இல்லாத மனிதனே இல்லை.
அவரிடம் இருந்த நிறைகள் சமூகத்திற்கு நன்மை பயத்ததை மட்டும் பாருங்களேன்.
உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் படிக்காதீர்கள்.
- Sponsored content
Similar topics
» நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!
» 150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லாரி - அதிர்ச்சியில் மெக்ஸிகோ பொதுமக்கள்
» 1000 அநாதை பிணங்களை நல்லடக்கம் செய்த தோழர்! காணொளி இணைப்பு
» சௌதி அரேபியாவில் பிணங்களை அடக்கம் செய்வது பாதிப்பு-- வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையால்
» மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.
» 150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லாரி - அதிர்ச்சியில் மெக்ஸிகோ பொதுமக்கள்
» 1000 அநாதை பிணங்களை நல்லடக்கம் செய்த தோழர்! காணொளி இணைப்பு
» சௌதி அரேபியாவில் பிணங்களை அடக்கம் செய்வது பாதிப்பு-- வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையால்
» மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|