புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
37 Posts - 51%
heezulia
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
29 Posts - 40%
mohamed nizamudeen
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
2 Posts - 3%
balki1949
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
1 Post - 1%
mini
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
394 Posts - 59%
heezulia
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
21 Posts - 3%
prajai
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
5 Posts - 1%
mini
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
4 Posts - 1%
Saravananj
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மீனாட்சியின் வெட்கம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 5:57 am



மதுரையை அரசாட்சி செய்யும் அன்னை மீனாட்சி, உலகை எல்லாம் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பிறகு, இறைவன் சிவபெருமான் குடிகொண்டுள்ள கைலாயம் நோக்கி பெரும் படையுடன் சென்றாள்.

முதலில் அஷ்டதிக்கு பாலகர்களையும் வென்று, அதன்பின் சிவன் எதிரே கம்பீரமாக வந்து நிற்கிறார். அப்போது அவரது மூன்று தனங்களில் ஒன்று மறைய... அதன் பின்னரே எதிரே நிற்கும் சிவபெருமான் தான் தனது மணாளன் என்று அறிந்து வெட்கப்படுகிறார். சிவபெருமானும் ஓர் நல்ல நாளில் மதுரை வந்து திருமணம் செய்து கொள்வதாக உறுதியளிக்கிறார்.

இந்த நிகழ்வு சித்திரைத் திருவிழாவில் இடம்பெறுகிறது. திக்விஜயம் செல்லும்போது இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு திசை அதிபர்களையும் வெல்லும் அன்னை மீனாட்சி, சிவனின் காவலரான அதிகார நந்தியையும் வெல்கிறார்.

பின்னர் சுவாமியை எதிர்க்கச் செல்லும்போது, அவர் தனக்கு கணவராகப் போகிறவர் என்பதை அறிந்து வெட்கத்தால் தலை குனிகிறாள். அப்போது அம்பாள் இறைவனைச் சரணடைந் ததன் அடையாளமாக, அவளது சப்பரத்தின் விளக்குகளை அணைத்து விடுகிறார்கள். தொடர்ந்து, மீனாட்சி அம்மனை, சிவபெருமானாகிய சுந்தரேஸ்வரருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் செய்கிறார்கள்.

இதற்கென உள்ள முறைக்காரர்கள் பெண் வீடு சார்பில் அரிசி, பருப்பு, காய்கறி, பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, புடவை... என சீர் பொருட்களை கொண்டு வந்து, தங்கள் வீட்டுப் பெண்ணாக மீனாட்சி அம்மனை பாவித்து திருமணம் செய்து வைக்க சம்மதிக்கின்றனர்.

அப்போது சுவாமி, அம்பாள் இருவரையும் அருகருகே அமர வைத்து தீபாராதனை நடத்தப்படுகிறது. மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது. சித்திரை மாதம் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், அவர்களது இந்த நிச்சயதார்த்த வைபவத்தையும் கண்டு தரிசிப்பது சிறப்பு.



மதுரை மீனாட்சியின் வெட்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 5:58 am

அருள் மழை பொழியும் காளமேகப் பெருமாள்

மதுரை மாவட்டம் திருமோகூரில் பிரசித்திபெற்ற காளமேக பெருமாள் கோவில் அமைந்துள்ளது. காளமேகம் (கருமேகம்) நீரை தனக்குள் வைத்துக்கொண்டு, அதை மக்களுக்கு மழையாக பெய்விப்பதுபோல இத்தலத்தில் மகாவிஷ்ணு, அருள் என்னும் மழையை தருகிறார். அதன் காரணமாக இவர், `காளமேகப்பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார்.

இங்கு அருள்பாலிக்கும் மோகனவல்லி தாயார், தனது சன்னதியை விட்டு வெளியேறுவதில்லை என்பதால், சுவாமியுடன் ஆண்டாள் பிரதானமாக புறப்பாடு ஆகிறாள். வைகாசி பிரம்மோற்சவத்தில் காளமேகப்பெருமாள், ஆண்டாளின் மாலையை
அணிந்தபடி, சேர்த்தியாக காட்சி தருவார். பங்குனி உத்திரம், அதற்கு மறுநாள் நடக்கும் தெப்பத்திருவிழா, மார்கழி 28 ஆகிய நாட்களிலும் சுவாமியுடன், ஆண்டாளை தரிசிக்கலாம்.

வைகாசி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் மற்றும் மாசி மகம் ஆகிய நாட்களில் மோகினி வடிவில் சுவாமி காட்சி தருவார் இத்தலத்து பெருமாள். மாசி மகம் அன்று அருகே உள்ள ஒத்தக்கடை நரசிம்மர் கோவிலுக்கு இந்த பெருமாள் செல்கிறார். அங்கு அவருக்கு மோகினி வடிவில் அலங்காரம் செய்து, சடை பின்னி, எண்ணெய் தடவி தைலக்காப்பு செய்கின்றனர். அன்று நள்ளிரவில் சுவாமி, கருட வாகனத்தில் எழுந்தருளி, கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் வைபவம் நடக்கிறது.



மதுரை மீனாட்சியின் வெட்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 5:58 am

மஞ்சள் மகிமை

எந்தவொரு மங்கல காரியம் என்றாலும் அங்கே மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு. இது ஏன் தெரியுமா?

மங்கலப்பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழ்வது மஞ்சள். மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால் தான் சுமங்கலிப் பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக்கொள்கிறார்கள். புத்தாடை அணியும்போதும் அதில் மஞ்சள் தடவி அணிகிறோம். சுபநிகழ்ச்சி அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம்.

அட்சதை தயாரிக்கும்போது மஞ்சள் சேர்த்துத் தான் தயாரிப்பர். எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம்.

இத்தகைய சிறப்புமிக்க மஞ்சள்கிழங்குச் செடியை பொங்கல் நாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர். அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில் மஞ்சள் கீறுதல் என்னும் சடங்காகச் செய்வர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கினைக் கீறி சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசி வழங்குவார்கள். வீட்டில் உள்ள அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் என்பதே இந்தச் சடங்கின் நோக்கம்.



மதுரை மீனாட்சியின் வெட்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 5:59 am

இலை விபூதி சிறப்பு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பன்னீர் இலையில்தான் விபூதி தருகிறார்கள். சூரபத்மனை வதம் செய்த பின்பு தம்மை சூழ்ந்து நின்ற பரிவாரங்களுக்கு சுப்ரமணியசுவாமியான முருகப்பெருமான் தன் பன்னிரு கைகளால் விபூதி பிரசாதம் வழங்கினாராம். அதனால் இப்படிச் செய்கிறார்கள்.

மேலும், முருகப்பெருமானின் பன்னிரு கைகளின் நிலைதான் பன்னீர் இலைகள் என்றும் சொல்கிறார்கள். இந்த இலை விபூதியின் மகத்துவம் குறித்து ஆதிசங்கரரின் தனது புஜங்க ஸ்தோத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விஸ்வாமித்ர முனிவரும், ஆதி சங்கரரும் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்தபோது இருவரும் காசநோயால் அவதிப்பட்டனர். சுப்ர மணியர் தனது திருக்கரங்களால் அவர்களுக்கு பன்னீர் இலையில் விபூதியை கொடுத்து அருள் புரிந்தார் என்றும், அந்த விபூதியின் சக்தியால் அவர்களது நோய் குணமடைந்தது என்றும் சொல்கிறார்கள்.

திருச்செந்தூர் சுப்பிரமணியரை வணங்கி தீராத நோய் நீங்கப்பெற்ற ஆதிசங்கரர், அதற்கு நன்றிக் கடனாக சுப்ரமணியரைப் போற்றிப் புகழ்ந்து `சுப்ரமணியர் புஜங்கம்' என்ற பாடலைப் பாடினார்.



மதுரை மீனாட்சியின் வெட்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக