புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_c10தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_m10தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_c10 
30 Posts - 50%
heezulia
தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_c10தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_m10தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_c10தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_m10தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_c10தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_m10தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_c10 
72 Posts - 57%
heezulia
தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_c10தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_m10தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_c10தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_m10தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_c10தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_m10தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 6:03 am

தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Vai-samy%20copy

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டியில் கோவில் கொண்டிருக்கும் வைத்தியலிங்க சுவாமி கோவிலுக்கு ஒரு சிறப்பு உண்டு. சிவாலயமாக வழிபடப்படும் இந்த கோவிலின் மூலவர் அறையில் சிவலிங்கத்துக்கு பதிலாக சாமி உருவச் சிலை அமைந்துள்ளது.

சிவாலயங்களில் பின்பற்றப்படும் வழிபாட்டு முறைகளே இங்கும் பின்பற்றப்படுகின்றன. இது தவிர, ஆவணி மற்றும் பங்குனி மாதங்களில் பத்து நாள் விழா நடைபெறுகின்றன. இரண்டு மாதங்களிலும் 10-வது திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. மார்கழி மாதம் ஆருத்திரா தரிசனம் தினத்தன்று சிறப்பு பூஜையுடன் சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். இது தவிர, சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று மூன்று தினங்களுக்கு கொடை விழாவும் நடத்தப்படுகின்றன.

ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதி மட்டுமல்லாமல் சிவகாசி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருத்தங்கல், சிதம்பரம், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களை கொண்டுள்ள வைத்தியலிங்க சுவாமி கோவிலின் பூர்வீகத்தை ஆராய்ந்தால் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள கூழையன் குண்டு என்கிற `கல்லால்' என்ற இடம் தான் வைத்தியலிங்க சுவாமியின் பூர்வீக தலம்.

திருச்செந்தூர் வட்டம் மானாடு பகுதியில் இருந்து சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் குடியேறிய கற்பக சித்தர் என்பவரே வைத்தியலிங்க சுவாமி மூல விக்கிரகத்தை ஆலடிப்பட்டிக்கு கொண்டு வந்து ஆலயம் அமைத்தார் என்பது இக்கோவில் வரலாறு. கல்லால் என்ற ஊரில் இருந்து ஆலடிப்பட்டிக்கு இந்த வைத்தியலிங்க சுவாமி வந்த கதை வித்தியாசமானது.

அந்த காலத்தில், கல்லால் பகுதியில் தங்கப் புதையல் (கிடாரம்) எடுக்கும் முயற்சியில் 60 வீட்டுக்காரர்கள் ஈடுபட்டனர். அதற்காக ஒரு ஜோதிடரை நாடியபோது, திருச்செந்தூர் கோவில் மாசி திருவிழாவுக்கு தேவதைகள் செல்லும் சமயத்தில் புதையல் எடுக்கலாம் என்றும், அதற்காக நிறைமாத கர்ப்பிணிப் பெண், ஆடு, பன்றி ஆகியோரை பலி கொடுக்க வேண்டும் என்றும் ஜோதிடர் தெரிவித்தார்.

அதன்படியே, புதையலை எடுத்த 60 வீட்டுக்காரர்களும் புதையலை 61 பங்கு வைத்து ஜோதிடருக்கு ஒரு பங்கு அளித்தனர். ஆனால், ஜோதிடர் அந்த புதையலை வாங்காமல் பூமியிலேயே புதைத்து விட்டார். இந்த தகவலை அறிந்த தேவதைகள், திருச்செந்தூரில் இருந்து திரும்பி வந்ததும் 60 வீட்டுக்காரர்களையும் தீயிட்டு அழித்தன. ஜோதிடர் மட்டும் தப்பித்தார். அந்த ஜோதிடரின் மகன் தான் கற்பக சித்தர்.

அவருடைய கனவில் வைத்தியலிங்க சுவாமி தோன்றி, தான் இருக்கும் இடத்தை காண்பித்துள்ளார். அதன்படியே, கல்லால் பகுதியில் புதைந்திருந்த வைத்தியலிங்க சுவாமியின் விக்கிரகத்தை கற்பக சித்தர் எடுத்து அபிஷேகம் செய்து பூஜித்து வந்தார். தங்கப் புதையலை மறுத்த ஜோதிடரின் மகனுக்கு புதையலாக வந்தவரே, வைத்தியலிங்க சுவாமி.

காலப்போக்கில் பஞ்சம் ஏற்பட்டதால், ஓலைப் பெட்டியில் வைத்தியலிங்க சுவாமியை வைத்துக் கொண்டு ஊர் ஊராக கற்பக சித்தர் சுற்றி வந்தார். ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் என்ற இடத்துக்கு வந்தபோது சுவாமிக்கு அபிஷேகம் செய்ய தண்ணீர் தேவைப்பட்டது. எனவே, கையில் இருந்த வேலால் தரையில் குத்தினார். அந்த இடத்தில் நீருற்று பெருகியது. தற்போதும், அந்த இடம் `எச்சி நா ஊற்று` மலை என்றே அழைக்கப்படுகிறது.

சிவலார் குளத்திலேயே சில காலம் தங்கியிருந்த கற்பக சித்தர், பின்னர் ஆலடிப்பட்டிக்கு வந்து ஊருக்கு வட பகுதியில் உள்ள தெப்பக்குளம் அருகே வன்னி மரத்தின் அடியில் சுவாமி சிலையை வைத்து பூஜை செய்தார். அதன் பிறகு, தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தில் பத்திரகாளி அம்மன் கோவிலும், அபிஷேக கிணறும், ஆலமரமும் சேர்ந்திருப்பதை பார்த்து... ஓலைப்பெட்டியில் வைத்திருந்த வைத்தியலிங்க சுவாமியை அங்கேயே பிரதிஷ்டை செய்தார்.

இதைத் தொடர்ந்து, அந்த பகுதிக்கு ஆலடிப்பெட்டி என்ற பெயர் உருவானது. காலப்போக்கில் ஆலடிப்பட்டி என அழைக்கப்படுகிறது. கோவிலின் தல விருட்சமாக வன்னிமரம் உள்ளது. கற்பக சித்தர் வந்தடைந்த தெப்பக் குளத்தையும் அதன் அருகே வன்னி மரத்தையும் இன்றும் காணலாம். இந்த கோவிலில் கற்பக சித்தருக்கும் சிலை எழுப்பப்பட்டு தினந்தோறும் பூஜைகள் நடைபெறுகின்றன. கற்பக சித்தருக்கு நேர்த்திக்கடன் செய்தால் தலை சம்பந்தமான நோய்கள் குணமடையும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கை.




தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 6:04 am

ராமர் வழிபட்ட விநாயகர்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் தொண்டியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது உப்பூர் சத்திரம் எனும் கிராமம்.

கடற்கரை அருகே அமைந்துள்ள இந்த கிராமம் முற்காலத்தில் வடமொழியில் `லவணபுரம்' என வழங்கப்பட்டது. லவனம் என்ற வடசொல்லிற்கு தமிழில் `உப்பு' என்று பொருள். இதிலிருந்து உப்பூர் என பெயர் வந்தது.

இங்கு சூரியன் தவம் புரிந்து, சித்தி பெற்று பாவ விமோசனம் பெற்றதால் சூரியபுரி, தவசித்திபுரி, பாவ விமோசனபுரம் ஆகிய பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. வன்னி, மந்தாரம் ஆகிய மரங்கள் வளர்ந்திருந்ததால் `வன்னிமந்தார வனம்' எனவும் அழைக்கப்பட்டது.

ஆஞ்சநேயர் மூலம் சீதையின் இருப்பிடத்தை அறிந்த ஸ்ரீராமர் தனது பத்தினியை மீட்க வானர சேனைகளுடன் புறப்பட்டபோது இங்குள்ள வெயிலுகந்த விநாயகரை வணங்கி தனக்கு வெற்றி கிட்ட நல்லாசி வழங்குமாறு வேண்டினார்.

இக்கோவிலை கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி ஆவார். ஆரம்ப காலங்களில் மரத்தடியில் இருந்த இங்குள்ள விநாயகர், எப்பொழுதும் தன் மேல் வெயில்படும்படியாக கோவிலை அமைக்க வேண்டும் என்று கூறியதால், இங்குள்ள விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரிய வெளிச்சம் படுமாறு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் படுகிறது.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க வெயிலுகந்த விநாயகரை வழிபடுவது சிறப்பு.



தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 6:05 am

தம்பதியர் ஒற்றுமையை பலப்படுத்தும் விநாயகர்

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோவில் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீசுவரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு உச்சிஷ்ட கணபதியாக விநாயகர் அருள்பாலிக்கிறார். 2 ஏக்கர் பரப்பளவில் ஆலயம் அமைந்துள்ளது.

பொதுவாக தனியாக எழுந்தருளி அருள்பாலிக்கும் விநாயகர் இங்கு அம்பாளுடன் எழுந்தருளுயுள்ளார். ஸ்ரீ நீலா வாணி என்பது இங்குள்ள அம்பாளின் பெயர். தம்பதி சமேதராக காட்சி தரும் இந்த விநாயகரை வழிபட்டு வந்தால் பக்தர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்கிறார்கள்.

குழந்தை பாக்கியம் தள்ளிக் கொண்டே போகிறது என்று ஏங்கும் தம்பதிகள், இங்கு வந்து வணங்கினால், வீட்டில் மழலை தவழும் யோகம் விரைவில் கூடி வரும் என்பதும் ஐதீகம்.

மேலும், செல்வம் பெருகுவதற்கு கொழுக்கட்டையும், குழந்தை வரத்திற்கு சர்க்கரை பொங்கலையும், நோய்கள் தீர வேண்டும் என்றால் கரும்புச்சாற்றையும் இங்கு நைவேத்தியம் செய்வதை காண முடிகிறது.



தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 6:05 am

சிலை திருட வந்த டச்சுக்காரர்கள்

திருச்செந்தூரில் கோவில் கொண்டுள்ள முருமுகப் பெருமானின் விக்கிரகம் தங்கத்தால் ஆனது என்பதைக் கேள்விப்பட்ட டச்சுக்காரர்கள் அதை நள்ளிரவில் திருடி மரக்கலம் மூலம் கடத்திச் செல்ல முயன்றனர். மரக்கலம் சிறிது தூரம் கடலில் சென்றதும் சூறாவளிக் காற்று பலமாக விசியதுடன் கடலும் கொந்தளித்தது.

மரக்கலத்தில் இருந்த முருகப்பெருமானின் விக்கிரகத்தால்தான் இப்படி நிகழ்கிறது என்பதை உணர்ந்த அவர்கள், அந்த விக்கிரகத்தை நடுக்கடலில் வீசி விட்டு சென்றுவிட்டனர். அக்காலத்தில் தென்பாண்டிய நாட்டை மதுரை நாயக்க மன்னர்களின் பிரதிநிதியாக ஆண்டு வந்த வடமலையப்பன் பிள்ளை என்பவர் திருச்செந்தூர் முருகனின் தீவிர பக்தர்.

இவர் விக்கிரகம் காணாமல் போன செய்தி கேட்டு துடித்துப் போனார். அன்றிரவு அவரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், கடலில் தான் இருக்கும் இடத்தை அடையாளம் காண்பித்தார். வடமலையப்பன் கடலுக்குச் சென்று அந்த விக்கிரகத்தை மீட்டு வந்தார்.

இந்த சம்பவக் காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டு வைக்கப்பட்டுள்ளதை திருச்செந்தூர் கோவிலுக்கு இப்போது சென்றாலும் பார்க்கலாம்.



தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 6:06 am

செவ்வாய்தோஷத்தால் திருமணம் தள்ளி போகிறதா?

ஒருவரது ஜாதகத்தில் 7-ம் இடத்தில் களஸ்தர தானத்தில் செவ்வாய் இருந்தால் அவருக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பு இருக்கும். இதனால் திருமணம் போன்ற நல்ல காரியங்கள் தடை ஏற்படும்.

இந்த தோஷத்தை நீக்க எளிய முறையில் பரிகாரம் உள்ளது. அரசமரம், வேம்பு சேர்ந்திருக்கும் இடங்களில் விநாயகரும் இருக்க வேண்டும். இந்த இடத்திற்கு செவ்வாய்க் கிழமை அன்று காலையில் சென்று செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முதலில் விநாயகருக்கு பால், நாட்டு சர்க்கரை வைத்து வணங்கி 9 முறை வலம் வரவேண்டும். 48 நாட்கள் இவ்வாறு செய்தால் செவ்வாய்தோஷம் நீங்கி திருமணம் கைகூடும்.



தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 6:06 am

தாலி காணிக்கை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொல்லங்குடியை அடுத்த அரியாக்குறிச்சியில் அமைந்துள்ளது வெட்டுடையார்காளி அம்மன் கோவில்.

பொதுவாக காளி அம்மன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கிதான் இருப்பாள். ஆனால் இந்த கோவில் மேற்கு நோக்கி வெட்டுடையார் காளியம்மன் 8 கரங்களுடன் அருள் பாலிக்கிறார். அதாவது, அய்யனார் கிழக்கு நோக்கி இருக்க எதிரே சற்று தெற்கு பக்கத்தில் மேற்கு நோக்கிய நிலையில் காளியம்மன் உள்ளார்.

பெண்கள் தங்கள் கணவர் நலம்பெற வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். பலர் தங்கள் கணவர் குணம் அடைந்ததும் தங்களுடைய தாலியை காணிக்கையாக செலுத்துகிறேன் என்று வேண்டுகிறார்கள். அதன்படி குணம் அடைந்த பின் தாலியை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இப்படி ஆண்டுதோறும் தங்க தாலிகள் பல இங்கு காணிக்கையாக வருகின்றன.



தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியலிங்க சுவாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக