புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10 
32 Posts - 82%
heezulia
அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10 
5 Posts - 13%
viyasan
அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10 
209 Posts - 41%
heezulia
அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10 
21 Posts - 4%
prajai
அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்திம காலம்(நாவல்)


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 30 Sep 2009 - 9:47

First topic message reminder :

ரெ.கார்த்திகேசு ஓய்வு பெற்ற தொடர்புத் துறை (mass communication) பேராசிரியர். இந்நாவல் தவிர "வானத்து வேலிகள்"; "தேடியிருக்கும் தருணங்கள்"; "காதலினால் அல்ல" என்ற மூன்று நாவல்கள் மற்றும் "புதிய தொடக்கங்கள்"; "மனசுக்குள்"; "இன்னொரு தடவை" என்னும் சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.



அந்திம காலம் - 1

மழைத் தாரைகள் காரின் முன் கண்ணாடியில் வீசி அடித்துக் கொண்டிருந்தன. காரின் கூரையில் விழுந்த மழை நீர் கண்ணாடியில் ஆறாக வழிந்து கொண்டிருந்தது. இடை விடாத பொழிவு. அகலமான கண்ணாடியெங்கும் மழை வரைகின்ற ஓவியங்கள். காரின் வைப்பர் அந்த ஓவியங்களை இடை விடாது அழித்துக் கொண்டிருந்தது.

டடக்...டடக்...டடக்... டடக்.

அழிக்க அழிக்கப் புதிது புதிதாக ஓவியங்கள். அழிவது பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாத மழை. அழிப்பதைப் பற்றி குற்ற உணர்ச்சியும் தயக்கமும் கொஞ்சமும் இல்லாத வைப்பர்.

டடக்... டடக்.. .டடக். அழி... அழி... அழி. வரை... வரை... வரை. டடக்... அழி.. டடக்... வரை... டடக்... அழி... டடக்... வரை.

எது முதல்? எது தொடர்? வரைதல் முதலா, அழிதல் முதலா?

சுந்தரத்தின் கார் அந்த நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்றிருந்தது. அந்தக் கடுமையான மழையில் அவர் காரை ஓட்ட விரும்பவில்லை. பார்வை தெளிவாக இல்லை. இரண்டடிக்கு முன்னால் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. மருத்துவ மனைக்குப் போய்விட்டு வீடு திரும்புகிற வழியில் இப்படித் திடும் என மழை பிடித்துக்கொண்டது.

வேணுமானால் முன் விளக்குகளைப் போட்டுக் கொண்டு நிதானமாக ஓட்டலாம். கண்ணாடி உள்ளே பனி படரும் போது துடைத்து விட்டுக் கொள்ளலாம். இந்த மழைக்குப் பயந்து வேறு யாரும் காரை நிறுத்தி விட்டதாகத் தெரியவில்லை. கார்கள் வழக்கம் போல் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு காரும் அவர் காரைக் கடக்கும் போது சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை சர்ரென்று கிழித்து அவர் காரின் மீது பாதியை ஊற்றிக் குளிப்பாட்டி விட்டுத்தான் செல்லுகிறது.

ஆனால் அவருக்கு அப்படி அவசரம் ஒன்றும் இல்லை. வீடு பக்கத்தில்தான். பத்து நிமிடம் நின்று மழை தணிந்ததும் போகலாம். மற்றவர்களுக்கு அவசரம் இருக்கிறது. அவருக்கு இல்லை. மற்றவர்களுக்கு ஆயிரம் வேலைகள். அவருக்கு அப்படி ஒன்றும் இல்லை. ஓய்வு பெற்று விட்ட மனிதனுக்கு ஏன் அவசரம்? அவசரமாக வேலை செய்து காலத்தை விரைவாக ஓட்டி... அப்புறம் என்ன செய்வது? ஓய்வெடுப்பதைக் கூட வெறுப்பாக்கிவிட்ட வேலை ஓய்வுக் காலத்தில் அவசரம் ஒன்றும் இல்லை.

இங்கே இப்படி இந்தக் காருக்குள் உட்கார்ந்திருப்பது நிம்மதியாகக் கூட இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கிறது. இந்த மழை இத்தனை கொடூரமாகப் பெய்தும் அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை. பட்டாம் பூச்சியாகவிருக்கும் பியூப்பாவை இறுக்கிக் காப்பாற்றும் கூடு போல அவரை இந்தக் கார் பத்திரமாகப் பாதுகாக்கிறது. சுற்றிலும் தண்ணீர் வடூந்து வெள்ளமாகிவிட அவர்மட்டும் நனையாமல் காய்ந்திருக்கிறார். தலைக்கு ஆறு அங்குலத்திற்கு மேலே தண்ணீர். தோளுக்கு இரண்டு அங்குலம் பக்கத்தில் தண்ணீர். காலுக்கு ஓரடி கீழே வெள்ளம். ஆனால் அவர் மேல் ஒரு துளியும் தண்ணீர் இல்லை.

என்ஜின் ஓடிக்கொண்டிருக்கிறது. குளிர் சாதனக் கருவி கீழ் சுருதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணாடியில் ஆவி பரவாமல் இருக்க அது வேண்டியிருந்தது. அதனால் பரவும் குளிருக்கு அவருடைய வெப்பமான மூச்சே மாற்றாக இருக்கிறது. மழையின் "சோ" என்ற ராகமும் கூரையில் அது போடும் தட தட தாளமும் ரசிக்கும்படியாகக்கூட இருந்தன. இது பாதுகாப்பான இடம். இது நிம்மதியான சூழ்நிலை.

அதோ தண்ணீரைக் கிடூத்துக்கொண்டு போகும் லாரியில் அந்த லாரி உதவியாளன் பாதி நனைந்தவாறு போகிறான். லாரியின் தார்ப்பாலின் துணி கிழிந்து கிடக்கிறது. அவனுக்குப் பாதுகாப்பில்லை. மோட்டார் சைக்கிளில் மழைக்கோட்டு அணிந்தவாறு போகிறவனுக்கும் முகம் நனைவதைத் தவிர்க்க முடியவில்லை. அவன் பின்னால் உள்ள பெண் மழைக் கோட்டும் இல்லாமல் முதுகில் மழை வழிய பிளவ்ஸ் உடம்போடு ஒட்டிக்கொள்ள வெட்கப்படக் கூட வசதியில்லாமல் கணவனை -- ஒருவேளை அண்ணனாகக் கூட இருக்கலாம் -- கட்டிக் கொண்டு போகிறாள். இங்கே ஒருவன் சைக்கிளை பஸ் பிரயாணிகள் நிற்கும் நிழல் கூடத்தில் வைத்து விட்டு மழைக்குக் காப்புத் தேடியிருக்கிறான். ஆனால் மழை அவன் காலடியில் வெள்ளமாக ஏறி அவனை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

ஆனால் அவர் பாதுகாப்பாக, நனையாமல், குளிரில்லாமல், சூடாக, நிம்மதியாக, காரின் உள்ளே கர்ப்பப்பைக்குள் குழந்தை போல இருக்கிறார். நான் கடலின் மத்தியில் தீவாக இருக்கிறேன். நான் பாலைவனத்தின் மத்தியில் சோலையாக இருக்கிறேன். பாதுகாப்பாக இருக்கிறேன். அர்ஜுனா! மாதங்களில் நான் மார்கழி. காலங்களில் நான் வசந்தம்.

டடக்...டடக்...வரை... டடக்...டடக்...அழி.. .டடக்...வரை...டடக்...அழி...

எது பாதுகாப்பு? எது நிம்மதி? யார் இந்த உலகில் பாதுகாப்பாக நிம்மதியாக இருக்கிறார்கள்? அதோ மழையில் அவதிப்பட்டு நிற்கும் அந்த சைக்கி்காரன் இன்னும் பத்து நிமிடங்களில் மழை விட்டதும் உடம்பை வழித்து விட்டுக் கொண்டு சைக்கிளில் ஏறி வீடு போய்ச் சேருவான். அடுத்த பத்து நிமிடங்களில் அவன் உடல் காய்ந்து விடும். திடகாத்திரமாக இருக்கிறான். இன்னும் ஐம்பது வருடங்கள் உயிரோடு இருப்பான்.

நான் பாதுகாப்பாக இருக்கிறேன். அடுத்த பத்து நிமிடங்களில் மழை விட்டதும் ஜோராக காரோட்டி வீட்டுக்குப் போய்விடுவேன். ஆனால் என் உடல் அழுக ஆரம்பித்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் முற்றாகச் செத்துப் போய்விடுவேன்.

யாருக்கு இருக்கிறது பாதுகாப்பு? என்னுடைய தற்காலிகச் சுகத்துக்கும், அவனுடைய தற்காலிகத் துன்பத்துக்கும் என்ன பொருள்? ஏ சைக்கிளோட்டியே! இங்கே வா! இந்தக் காரையும் சுகத்தையும் எடுத்துக் கொள். உன் இடத்தில் இருந்து நான் நனைகிறேன். வெள்ளம் என் கணுக்கால்களை நனைத்து முழங்கால் வரைக்கும் வந்தாலும் பரவாயில்லை. உன் மீதியிருக்கும் ஐம்பது வருடங்களை எனக்குக் கொடுப்பாயா? மாற்றிக் கொள்வோமா?



அந்திம காலம்(நாவல்) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 30 Sep 2009 - 10:10

விழுந்து வணங்கி எழுந்தார். ஜானகி திருநீறு பூசி விட்டாள்.

"ரொட்டி டோஸ்ட் பண்ணட்டுமா?" என்று கேட்டாள். உணவு என்றவுடன் வயிறு குமட்டியது.

"வேணாம்! சாப்பிட முடியாது! காப்பி மட்டும் குடு" என்றார். வரவேற்பறைக்கு வந்து சோபாவில் உட்கார்ந்தார். பரமா வந்து அவர் மடிமீது ஏறினான். அவன் வயதுக்கு அவனுக்கு கனம் இல்லை. ஒரு இறகு போல லேசாகத்தான் இருந்தான்.

"பாட்டி செய்ட் யூ ஆர் சிக்!" என்றான் பரமா. டை கட்டிய சட்டையும் அரைக்கால் சிலுவாரும் போட்டிருந்தான்.

"ஆமா பரமா! அதுக்குத்தான் ஆஸ்பத்திரிக்குப் போறோம்!" என்றார் சிரித்துக் கொண்டே.

அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். "ஆர் யூ கோயிங் டு டை?" என்று கேட்டான்.

காப்பியோடு வந்த ஜானகி கத்தினாள்: "வாய மூடு சனியன! சும்மா இரு" என்றாள். பரமா பயந்து அவர் மடிக்குள் முகம் புதைத்தான். அவனை அணைத்துக் கொண்டார்.

"சும்மா இரு ஜானகி! குழந்தயத் திட்டாத! அவனுக்கு என்ன தெரியும்? பொறுமையாத்தான் பதில் சொல்லணும்" என்றார்.

"அப்படி வளத்து வச்சிருக்காங்க ரெண்டு பேரும். இவங்க போட்டி போட்டு சண்ட போட்றதுல குழந்தைக்கு ஒரு பண்பாட்டச் சொல்லித் தரத் தெரியில. பாருங்க பேசிற பேச்ச!"

அவர் பரமாவின் தலையைக் கோதிவிட்டார். "பரமா. தாத்தா சாகப் போகல. ஆஸ்பத்திரிக்குப் போனா டாக்டர் என்ன குடுப்பாங்க?"

"மெடிசன்!"

"அவ்வளவுதான். மெடிசன் குடிச்சா தாத்தா உடம்பு நல்லாயிடும்!" என்றார். பரமா எப்போது வீட்டுக்கு வந்தாலும் அவனிடம் அவர் விடாமல் தமிடூலேயே பேசுவார். அவன் புரிந்து கொள்வான். ஆனால் அவன் வாயில் மட்டும் தமிழ் நுழைவதில்லை.

கொஞ்ச நேரம் பேசாமல் இருந்து பிறகு கேட்டான்: "வென் வில் மம்மி கம் பேக்?"

"அம்மாதான! கொஞ்ச நாள் கடூச்சி வருவாங்க. நீ கொஞ்ச நாள் தாத்தாவோடயே இரு!" என்றார்.

"டேக் மீ டு மங்க்கி கார்டன்!" என்றான்.

"ஓ எஸ்! கண்டிப்பா!" என்றார். அம்மா இல்லாத குறையை குரங்குப் பூங்காவுக்குப் போவதன் மூலம் சரி செய்து விட முடியுமா? அப்படித்தான் குழந்தை மனம் தன்னைத் திருப்திப் படுத்திக் கொள்கிறது. ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றிக் கொள்கிறது. எனக்குத்தான் பற்றிக்கொள்ள ஒன்றுமில்லை. வாழ்க்கையின் விளிம்பில் இருக்கிறேன். பரமா உனக்கு குரங்குப் பூங்கா இருக்கிறது. பொம்மை இருக்கிறது. ஐஸ்கிரீம் இருக்கிறது. எனக்கு?

இந்தக் குறும்புப் பிள்ளையை ஜானகி எப்படி ஒண்டியாகச் சமாளிப்பாள் என்று நினைத்தவுடன் கலக்கம் வந்தது. வீட்டில் அவர்கள் வேலைக்கு உதவியாகக் கூட யாரையும் வைத்துக் கொள்வதில்லை. அதற்கு இத்தனை நாள் தேவையில்லாமல் இருந்தது. இப்போது?

"ஜானகி! பரமாவை வச்சிக்கிட்டு எப்படிச் சமாளிக்கப் போற?" என்று கேட்டார்.

"காலையில அக்காவுக்குப் போன் பண்ணிட்டங்க! இன்னைக்கே புறப்பட்டு வர்ரன்னு சொன்னாங்க!" என்றாள்.

அக்கா! ஆமாம். அவள் ஒருத்தி ஆபத்து அவசரத்துக்கான காப்புத் தெய்வமாக இருப்பது மறந்து விட்டது. ஆனால்...!

"என்ன சொன்ன ஜானகி? என்னப்பத்தியும் சொல்லிட்டியா?"

"இல்ல. பரமாவ ராதா விட்டுட்டுப் போனத மட்டுந்தான் சொன்னேன். ஆனா அவங்க வந்த பிறகு இத மறைக்க முடியாதுங்க! எதுககு மறைக்கணும்? நம்ம உறவாவும் ஆதரவாவும் இருக்கிறவங்ககிட்ட இருந்து எதுக்கு மறைக்கணும். நானும் நீங்களுமே இத உள்ள வச்சி வேகணும்னு சொல்றிங்களா?"

உண்மைதான். இதை உள்ளுக்குள் போட்டு கொதிக்கவைத்துக் கொண்டே இருக்க முடியாது. அக்காவிடம் சொல்லலாம். அழுது ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டாள். அமைதியாகக் கேட்டுக் கொள்வாள். தானும் ஜானகியும் சாய்ந்து கொள்ளத் தக்க உறுதியான தூணாக இருப்பாள்.

அதே போலத்தான் நண்பன் ராமாவிடமும் சொல்லலாம். அவன் ஒருவன்தான் உற்ற நண்பனாக இருக்கிறான். அவனுக்குத் தெரியவேண்டும்.

நினைத்துக் கொண்டிருந்த போது ராமாவின் கார் வௌியில் வந்து நின்றது. அவர்கள் போய் காரில் ஏறினார்கள். "மன்னிக்கணும் ராமா! திடீர்னு கூப்பிட்டு உன்னோட திட்டங்களயெல்லாம் வீணாக்கிட்டேனா?" என்று கேட்டுக்கொண்டே காரில் உட்கார்ந்தார்.

ராமா சிரித்தார். "நம்ம திட்டம் ஒனக்குத் தெரியாததா? காலையில வாக்கிங். அப்பறம் பேப்பர். குளியல். பசியாறிட்டு மறுபடியும் பேப்பர். அப்புறம் மார்க்கெட்டுக்கு போறது! இந்தத் திட்டத்த நீ வீணாக்கினதில எனக்கு ரொம்ப சந்தோஷம் சுந்தரம்!" என்றார். பரமாவைப் பார்த்தார். "ஓ உங்க பேரப்பிள்ள இங்க இருக்கிறாரே! குட் மார்னிங் மிஸ்டர் பரமா!" என்றார்.

"மை தாத்தா இஸ் சிக்!" என்றான் பரமா.

"இந்த சனியன் வாயில நல்ல வார்த்தையே வராது!" என்றாள் ஜானகி.

ராமா அமைதியாகக் காரோட்டினார். ஏன் ஏது என்று ஒன்றும் கேட்கவில்லை.

மௌவுன்ட் மிரியம் மருத்துவ மனைக்குப் போகும்படி சொன்னார். இராமச்சந்திரன் பேசாமல் காரை தஞ்சோங் பூங்கா சாலை வடூயாக ஓட்டினார். சுந்தரத்தின் வீட்டிலிருந்து மௌன்ட் மிரியம் பக்கத்தில்தான் இருந்தது. பத்து நிமிடங்களுக்குள் போய்ச் சேர்ந்து விடலாம்.

சுந்தரம் கேட்டார்: "ஏன் ராமா? எதுக்காக நான் மௌவுன்ட் மிரியம் போறேன்னு கேக்க மாட்டியா?"

ரோட்டில் பதிந்திருந்த கண்களை மீட்காமல் ராமா சொன்னார்: "நீயா சொல்லட்டும்னுதான் காத்திருக்கேன்!"



அந்திம காலம்(நாவல்) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 30 Sep 2009 - 10:10

"நான் சொல்லாமலே இருந்திட்டா?"

"அப்ப அது எனக்குத் தெரியக் கூடாத விஷயம்னு பேசாம இருந்திருவேன்!"

"இதுதான் நட்புக்கு லட்சணமா, ராமா?"

"அப்ப நீ சொல்லாம இருக்கிறதுதான் நட்புக்கு லட்சணமா?"

சுந்தரம் கொஞ்ச நேரம் காருக்கு வௌியே பார்த்தார். பரமாவைத் திரும்பிப் பார்த்தார். அவன் வௌியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். தணிந்த குரலில் சொன்னார். "எனக்குப் புற்று நோய் வந்தாச்சி ராமா! மூளையில் புற்று நோய்! ரொம்ப முத்தின நிலைமை! உடல் பூரா பரவிடுச்சி"

ராமா தன் கனத்த மூக்குக் கண்ணாடிகளூடே சாலையையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒன்றும் சொல்லவில்லை. முகம் இறுகியிருந்தது.

"ஏதாகிலும் சொல்லு ராமா!"

"ஓ கே" என்றார் ராமா.

"என்ன ஓ கே?"

"ஓ கே. அதுக்கு என்ன பண்றது இப்ப? இன்னக்கி நீ! நாளக்கி நானாக இருக்கலாம்!"

"அவ்வளவுதானா?"

முதன் முறையாகத் திரும்பிப் பார்த்தார் ராமா. "எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியில சுந்தரம். ஏதோ வாய்க்கு வந்ததச் சொன்னேன்! இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ள திறமையா வார்த்தகளப் போட்டுப் பேச எனக்குத் தெரியாது!" மீண்டும் சாலையை நோக்கினார்.

அமைதியாகப் போனார்கள். சாலை விளக்குப் பகுதிக்கு வந்து நின்று ஃபெட்டஸ் பார்க் பகுதிக்குள் திரும்பினார்.

குடியிருப்பு வீடுகளிடையே ராமாவின் கார் வளைந்து வளைந்து சென்றது. சந்திர வீதி என்னும் அழகிய பொருளுள்ள ஜாலான் பூலானில் மௌவுன்ட் மிரியம் என்ற அந்த அடக்கமான ஐந்து மாடிக் கட்டடம் இருந்தது. ஆஸ்பத்திரியின் கேட் திறந்தே இருந்தது. ராமா காரை உள்ளே கொண்டு சென்றார்.

"தாத்தா! லுக்! பாட்டி இஸ் கிரையிங்" என்றான் பின் சீட்டிலிருந்த பரமா.


-----



அந்திம காலம்(நாவல்) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 30 Sep 2009 - 10:11

அந்திம காலம் - 7


"ஆண்டவன் என்னும் அன்பில், எல்லா சகோதரர்களும் சகோதரிகளும், அவர்கள் பிரார்த்தனையில் இருக்கும் போதும், கர்த்தரின் சொல்லை அறிவிக்கும் போதும், சாதாரண உடலுழைப்பு வேலை செய்யும் போதும் எல்லாவற்றிலும் எளிமையாக இருக்க வேண்டும். அவர்கள் புகழை நாடக் கூடாது. தற்பெருமை கொள்ளக் கூடாது. தங்கள் நற்செய்கைகளை கடவுளின் நற்செய்கைகளாக நினைத்து அதைப் பற்றிப் பேசாமல் இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் எல்லா நன்மைகளும் உலகாளும் அந்த உயர்ந்த கர்த்தனுக்கே உரியது என நினைந்திருக்க வேண்டும். யாரிடமிருந்து இந்த நன்மைகள் அனைத்தையும் பெருகிறோமோ அவனுக்கே எல்லா நன்றிகளும் உரித்தாக வேண்டும்"

-செயின்ட் பிரான்சிஸ் அசிசி
சேவகர்களின் விதி.

தான் காத்து உட்கார்ந்திருந்த அறையில் மௌன்ட் மிரியம் மருத்துவ மனையின் கையேட்டைப் புரட்டிக் கொண்டிருந்த போது இந்த வரிகள் அவரைக் கவர்ந்தன. பிரான்சிஸ்கன் மிஷனரியின் கீழ் நடத்தப்படும் அந்த மருத்துவ மனையில் கிறிஸ்துவர்களின் சேவை மனப்பான்மை ஒவ்வொரு அம்சத்திலும் இருந்தது.

மௌன்ட் மிரியத்தற்குள் நுழைந்தவுடனேயே கண்ணில் பட்டவர்களையெல்லாம் இவருக்கு என்ன புற்று நோயாக இருக்கும் என்று மனம் ஆராய்ந்து கொண்டிருந்தது. ஆனால் அங்கிருந்த பலரும் சாதாரணமாகத்தான் இருந்தார்கள். சிலர் சிரித்துப் பேசிக் கொண்டும் இருந்தார்கள். உடலளவில் இளைத்திருந்தாலும் உற்சாகமாகக் காணப்பட்டார்கள்.

காலையில் வந்து பதிவு செய்து கொண்டு, மருத்துவ அறிக்கைகளையெல்லாம் சமர்ப்பித்த பின் ஓர் ஓய்வறைக்கு அவரை அனுப்பி அங்கு காத்திருக்கச் சொன்னார்கள். விரைவில் ஒரு சிஸ்டர் வந்து பார்ப்பார் என்று சொல்லிவிட்டுச் சென்றார் ஒரு குமாஸ்தா. ஜானகி, பரமா, ராமா ஆகியோரை வௌியே காத்திருக்கச் சொல்லிவிட்டு அவர் மட்டும் அறைக்குள் சென்று காத்திருந்தார். அங்குள்ள சில நாளிதழ்களையும், இதழிகளையும் புரட்டிக் கொண்டிருந்தார்.

அறை சுத்தமாக இருந்தது. மருத்துவ மனை அறைபோல் இல்லாமல் அலுவலகக் கூட்டம் நடக்கும் அறை போல இருந்தது. அமைதியாக இருந்தது. அவர் மனத்துக்குள் மட்டும் "ஓ" என்று ஒரு பய ஓசை இருந்தது. யாராகிலும் வந்து ஏதாவது சொல்லமாட்டார்களா என்று படபடப்புடன் காத்திருந்தார்.

ஒரு பத்து நிமிடத்தில் கட்டையாக ஒல்லியாக கிறித்துவ கன்னிமார் உடையில் ஓர் அம்மையார் பரந்த சிரிப்புடன் உள்ளே வந்தார். கையில் ஒரு கோப்பு வைத்திருந்தார். "மிஸ்டர் சுந்தரம், என் பெயர் மதர் மேக்டலினா. நீங்கள் என்னை மதர் மேகி என்று கூப்பிடலாம்" என்றார். கையை நீட்டிக் குலுக்கினார்.

கைகுலுக்கினார். "நீங்களும் இந்த மிஸ்டரை விட்டுவிட்டு வெறும் சுந்தரம் என்றே கூப்பிடலாம்" என்றார்.

"நல்லது, நல்லது, சுந்தரம்!" என்று ஒரு முறை பெயரைச் சொல்லிப் பார்த்துக் கொண்டார் மதர் மேகி.

தலையைச் சுற்றிக் கட்டியிருந்த ஸ்கார்ஃப் அழகாக இருந்தது. வெள்ளை வெளேரென்ற தோல் அவரை ஒரு மேற்கத்திய நாட்டினர் என்பதைக் காட்டியது. ஆங்கிலத்தைக் கொஞ்சம் பிரஞ்சு போன்ற ஐரோப்பிய வாடையுடன் பேசினார். அகன்ற நெற்றி. அமைதியான முகம். முப்பது முப்பத்தைந்து வயது இளமைத் தோற்றம் இருந்தாலும் அவருக்கு நாற்பத்தைந்து ஐம்பது வயது இருக்கலாம் என ஊகித்துக் கொண்டார்.

"நான் டாக்டர் அல்ல சுந்தரம். ஓரளவு நர்சிங் பழகியிருக்கிறேன். இங்கு நான் பொது உறவு அதிகாரி போன்ற ஒரு பொறுப்பில் இருக்கிறேன். உங்களுக்கு எங்கள் சிகிச்சை முறை பற்றி கொஞ்சம் அறிமுகப் படுத்துவதுதான் என் வேலை. சிகிச்சையளிக்கும் டாக்ர் பின்னால் உங்களைப் பார்ப்பார்" என்றார்.

"தேங்க் யூ, மதர் மேகி" என்று பலவீனமாகச் சொன்னார் சுந்தரம்.

"உங்கள் விவரங்களை இப்போதுதான் மேலோட்டமாகப் பார்த்தேன். நீங்கள் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் என அறிந்து கொண்டேன்" என்றார்,.

"ஆமாம். இப்போதுதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்"

"மிகவும் மகிழ்ச்சி. என் தகப்பனாரும் ஒரு பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர்தான். இன்னமும் பெல்ஜியத்தில் வேலை பார்த்து வருகிறார். நான் பெல்ஜியம் பிரஜை. இந்த பிரான்சிஸ்கன் மிஷனில் சேர்ந்த பிறகு சேவைக்கு என்னைப் பல நாடுகளுக்கு அனுப்பி விட்டார்கள். போன வருடம்தான் மலேசியாவுக்கு வந்தேன்" என்றார்.

"எங்கள் நாடு பிடித்திருக்கிறதா?" என்று கேட்டார் சுந்தரம். மதர் மேகியின் குரலினிமையில் நோயை மறந்து விட்டு அவருடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும் போல் தோன்றியது.

"அற்புதமான நாடு. இத்தனை இனமக்கள் இவ்வளவு சுமுகமாகப் பழகி வாழ்கிறீர்களே! அதோடு இந்த நாடு எவ்வளவு பசுமையாக இருக்கிறது பாருங்கள். ஆண்டு முழுக்க வெயில் அடிக்கிறது. மழை பெய்கிறது. இதுதான் சுவர்க்கம்" என்றார் மதர் மேகி.

அவருடைய உற்சாகமும் அன்பும் பண்பும் மற்றவர்களிடம் சுலபமாக பூசிக் கொள்ளும் என சுந்தரம் எண்ணிக் கொண்டார். அவருடைய நோய் இப்போதே கொஞ்சம் குணமாகிவிட்டதைப் போல் இருந்தது.

மதர் மேகி கோப்பைத் திறந்தார். "சுந்தரம், உங்கள் நோயைப் பற்றி உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். உங்கள் டாக்டர்கள் சொல்லியிருப்பார்கள்."



அந்திம காலம்(நாவல்) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 30 Sep 2009 - 10:11

பயம் நெஞ்சைத் திடீரென கவ்விக் கொண்டது. தெரிந்த விஷயமாக இருந்தாலும் மரண தண்டனை விதிக்கப் படுவதைக் கேட்கவிருக்கும் கைதி போல மனம் படபடத்தது.

"ஆமாம் சொன்னார்கள். மூளையில் புற்று நோய்க் கட்டி என்று..."

"நீங்கள் படித்தவராக இருப்பதால் நான் அதிகம் உங்களுக்கு தைரியம் சொல்ல வேண்டியிருக்காது"

'சொல்லுங்கள் அம்மா, தைரியம் சொல்லுங்கள்' என மனம் உள்ளுக்குள் கெஞ்சியது.

"முதலில் புற்று நோய் என்றால் அது மரணப் பாதை என யாரும் நினைக்க வேண்டியதில்லை. எத்தனையோ பேர் குணமாகி சாதாரண வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லா நோயையும் போலத்தான் இந்த நோயும். இதைக் குணப் படுத்த எத்தனையோ மருந்துகள் இப்போது உள்ளன."

கேட்க சுகமாக இருந்தது.

"உடலை நாங்கள் குணப்படுத்த எல்லா முயற்சிகளும் செய்வோம். மனத்தளவில் நீங்கள்தான் உறுதியாக இருக்க வேண்டும்"

தாம் உறுதியாக இருக்கிறோமா எனத் தன்னைத் தானே கேட்டுப் பார்த்தார் சுந்தரம். இல்லை. மரண பயம் உலுக்குகிறது. மனம் செத்துச் செத்துப் பிழைக்கிறது.

"நோய் குணமாகும் என்று நம்புங்கள். அந்தச் செயலை இறைவனிடம் ஒப்படையுங்கள். அவனால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும்" என்றார் .

'அவன் என்னைக் கைவிட்டு விட்டான் என்றே தோன்றுகிறது' என மனசுக்குள் சொல்லிக் கொண்டார் சுந்தரம்.

"உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா, சுந்தரம்?" என மதர் மேகி கேட்டது முகத்தில் அறைந்தது போல இருந்தது.

தனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என அவருக்கே சரியாக விளங்கவில்லை. மற்றவர்களைப் பார்த்துப் பார்த்து நம்ப வேண்டும் என்று கட்டாயப் படுத்திக் கொண்டதைத் தவிரத் தாமாகக் கடவுளை நம்புகிற சுய நம்பிக்கை இன்னும் உள்ளத்தில் முற்றாகத் தோன்றவில்லை என்றே தோன்றியது. ஆனால் பழக்க தோஷத்தில் தலை மட்டும் மதர் மேகியின் முன் 'ஆம்' என்று ஆடியது.

"நல்லது. அதுதான் முக்கியம். நம் கையில் ஒன்றுமில்லை. அவன் பார்த்துக் கொள்வான் என விட்டுவிடுவதில் உள்ள நிம்மதி போல் வேறு இன்பம் கிடையாது. உங்கள் மருத்துவ அறிக்கைகளை டாக்டரிடம் கொடுத்துவிட்டேன். அடுத்த வாரம் அவர் உங்களைப் பார்த்து சிகிச்சை பற்றிப் பேசுவார்"

"அடுத்த வாரமா? ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமா?" படபடப்போடு கேட்டார் சுந்தரம்.

"ஆமாம். மன்னித்துக் கொள்ளுங்கள். நிறைய நோயாளிகள் இருக்கிறார்கள். உங்கள் சிகிச்சை ஒரு வாரம் கழித்துத்தான் ஆரம்பிக்கும். இதற்கிடையில் வலி நிவாரணிகள் கொஞ்சம் தருவோம். வலி வரும் போது அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்."

கோப்பிலிருந்து சில கையேடுகளை எடுத்துத் தந்தார். "புற்று நோய் பற்றிய பொதுவான விவரங்களும், ரேடியோதெராப்பி, கிமோதெராப்பி இவை பற்றிய பொதுவான விவரங்களையும் இந்த சிறு புத்தகங்களில் பார்க்கலாம். உடல் சிகிச்சையோடு புற்று நோய் பற்றிய ஒரு பயிற்று நிகழ்ச்சியும் உங்களுக்கு நடத்துவோம். அதற்கு முன் நீங்கள் வீட்டில் இவற்றைப் படித்துப் பார்க்கலாம்"

பல கையேடுகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் சில தமிழிலும் இருந்தன. மார்பகப் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய் பற்றிய படங்கள் சில பயத்தை ஊட்டின. மருந்து செலுத்துகின்ற முறை, பக்க விளைவுகள் பற்றியும் விவரங்கள் இருந்தன.

"டாக்டர் உங்கள் விவரங்களைப் பார்த்துவிட்டு அடுத்த வாரம் இன்னும் சில சோதனைகள் செய்து என்ன சிகிச்சை அளிப்பது என்று முடிவு செய்வார். ஒரு சிகிச்சைத் திட்டத்தை வகுத்து உங்களுக்கு விளக்கிச் சொல்லுவார். அதன்பின்தான் சிகிச்சை ஆரம்பமாகும்" என்றார் மதர் மேகி.

"இங்கு தங்க வேண்டியிருக்குமா மதர்?" என்வறு கேட்டார்.

"பெரும் பாலோர் இங்கு தங்க வேண்டியதில்லை. சிகிச்சை பெற்றுக் கொண்டு வீட்டுக்கே திரும்பிவிடலாம். உங்களுக்குக் குடும்பம் இருக்கிறதா சுந்தரம்?" என்று கேட்டார்.

"இருக்கிறார்கள். மனைவி, இரண்டு பிள்ளைகள், ஒரு பேரப்பிள்ளை. இப்போது கூட மனைவியும் பேரப்பிள்ளையும் வௌியில் இருக்கிறார்கள்!"

"மிக நல்லது. நல்ல அன்பான குடும்பத்தைப் போல வேறு மருந்து உலகத்தில் இல்லை" என்றார் மதர் மேகி.

அந்த நேரத்தில் ஏனோ சுந்தரத்தின் உள்ளத்தில் அந்தக் கேள்வி திடீரென வந்து முளைத்தது. மதர் மேகி இவ்வளவு அன்பாகப் பேசி நெருக்கத்தைக் காட்டியதால்தான் இருக்க வேண்டும்.

"அப்படி இருக்கும் போது நீங்கள் மட்டும் உங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்து விட்டீர்களே!"

மதர் மேகி திகைத்தது போல் இருந்தார். அப்புறம் அவர் முகத்தில் ஒரு புன்னகை படர்ந்தது. "என்னை அதிர்ச்சியடைய வைத்து விட்டீர்கள், சுந்தரம். இதுவரை நான் சந்தித்த எந்த நோயாளியும் என்னை நோக்கி இந்தக் கேள்வியைக் கேட்டதில்லை. தங்கள் துயரத்தில் தங்களைப்பற்றியே சிந்தித்து வருந்திக் கொண்டிருப்பார்களே தவிர, என்னை ஒரு சுமைதாங்கியாக நினைப்பார்களே ஒழிய, என்னைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதில்லை" என்றார்.



அந்திம காலம்(நாவல்) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 30 Sep 2009 - 10:11

"மன்னிக்க வேண்டும். உங்கள் மனத்தைப் புண்படுத்தி விட்டேனோ?"

"இல்லை, இல்லை. என்னை மகிழச் செய்திருக்கிறீர்கள். உங்கள் கேள்விக்கு பதில் சொல்லுகிறேன். என் குடும்பம் அன்பான குடும்பம். இன்னும் அவர்கள் மேல் ஆழமான அன்பு வைத்துள்ளேன். ஆனால் கர்த்தருக்குச் சேவகம் செய்ய வந்ததனால் கர்த்தரின் மந்தைகள் அனைத்தும் என் குடும்பம் ஆகிவிட்டது. ஆகவே என் அன்பு இப்போது உலகத்தவர் அனைவருக்கும். குறிப்பாக வருந்துபவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும். அதற்குப் பிரதியாக நான் சந்திக்கும் அனைவரின் அன்பையும் நான் பெற்றுக் கொள்ளுகிறேன். ஒரு சிறிய குடும்பத்தைப் பிரிந்து ஒரு பெரிய குடும்பத்தில் இணைந்து விட்டேன்"

மதர் மேகியின் பேச்சும் உதட்டில் இருந்த மாறாத சிரிப்பும் கண்களின் கூர்மையும் சுந்தரத்தின் உள்ளத்தைத் தொட்டன. "உங்கள் உள்ம் மிகவும் பண்பட்டதாக இருக்கிறது!" என்றார்.

"நீங்களும் ஒரு நல்ல மனிதர். உங்களை இங்கு சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இனி இங்கு அடிக்கடி சந்திப்போம். உங்கள் நோய் விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்வேன்."

ஒரு மருந்துச் சீட்டுக் கொடுத்தார். "மருந்துக் கௌண்டரில் சென்று இந்த வலி நிவாரணிகளை மட்டும் இன்று வாங்கிக் கொள்ளுங்கள். டாக்டரைப் பார்க்க வேண்டிய அடுத்த அப்பாயின்ட்மென்ட் இந்தக் கார்டில் எழுதியிருக்கிறேன். குட் பை" என்று எழுந்து போய்விட்டார்.


*** *** ***

வீட்டுக்கு விரைவாகத் திரும்பி விட்டதில் ஜானகிக்குப் பெரிய நிம்மதி என்றாலும் சிகிச்சையை ஒரு வாரம் தள்ளிப் போட்டது அவளுக்குப் பொறுக்கவில்லை. காரில் திரும்புகிற போது "என்ன இப்படித் தள்ளிப் போட்டுட்டாங்களே. மனுஷங்களோட வருத்தம் புரியாதவங்களா இருக்கிறாங்க!" என்று கோபித்துக் கொண்டாள்.

சுந்தரத்திற்கு சிகிச்சை தள்ளிப் போனது ஒரு வகையில் நிம்மதியாக இருந்தது. சிகிச்சையின் பயத்தையும் வலிகளையும் ஒத்திப் போடுவதில் ஒரு நிம்மதி இருந்தது. "ஏன் இப்படி அலட்டிக்கிற ஜானகி? அவங்களுக்குத் தெரியாததா! நமக்குத்தான் நோய் முதன் முதல்ல அனுபவிக்கிறதில அது ரொம்ப பயங்கரமாத் தெரியுது. அவங்க ஆயிரக் கணக்கில பாத்தவங்க. எப்ப அவசரப்படணும், எப்ப அலட்டிக்காம இருக்கலான்னு அவங்களுக்குத்தான் தெரியும்" என்றார்.

"அவங்க அவசரப்படாம இருக்கிறதிலியே உன் நோய் அவ்வளவு மோசமில்லன்னு தெரியுதில்ல" என்றார் ராமா. அப்படியும் இருக்கலாம். ஆனால் இது முற்றிப் போன கேஸ். அவசரப்பட்டு ஆகப் போவது ஒன்றுமில்லை என்பதாகவும் இருக்கலாம் என சுந்தரம் மனதுக்குள் நினைத்துக் கொண்டார். ஆனால் அதை வாய் விட்டுச் சொல்லி, மருத்துவ மனைக்குப் போகும் போது இருந்த கடுமை மாறி கலகலப்பாக இருக்கும் சூழ்நிலையைக் கெடுக்க அவர் விரும்பவில்லை. பரமா கூட காரில் ஆடிக் கொண்டே

"ரோ, ரோ, ரோ யுவர் போட், ஜென்ட்லி டவுன் த ஸ்ட்ரீம்,
மெரிலி, மெரிலி, மெரிலி, மெரிலி, லைஃப் இஸ் பட் எ ட்ரீம்..."

என்று நர்சரி ரைம் பாடிக் கொண்டிருந்தான். காரில் இருந்த சுமுகச் சூழ்நிலை அவனையும் உற்சாகப் படுத்தியிருக்க வேண்டும்.

மனிதர்களின் மனநிலைகள் எவ்வளவு சீக்கிரம் மாறிவிடுகின்றன என எண்ணிப் பார்த்தார். இருட்டுகள் எப்போதுமே இருட்டுகளாக இருப்பதில்லை. சாம்பலாக வெளுத்து சுண்ணாம்பாகப் பளிச்சிடுகின்றன. வௌிச்சங்கள் வௌிச்சங்களாகவே இருப்பதில்லை. புகையாக மங்கித் தார் போல கருத்து விடுகின்றன. நிலையானது என ஒன்று இல்லை. மாற்றம்தான் நிலையானது. இந்த ஓடிக்கொண்டே இருக்கும் அருவியில் மகிழ்ச்சியாக மெதுவாக உன் படகைச் செலுத்து. மெரிலி, மெரிலி, மெரிலி....

இன்றிரவு ஒரு கரிய இரவாக இருக்கப் போகிறது என்பதை நினைவு படுத்திக் கொண்டார். சிவமணி வந்திறங்கப் போகிறான். "என் மனைவி எங்கே?" என்று சீறப் போகிறான். அவள் இல்லை என்று அறிந்து வீட்டைக் கலக்கப் போகிறான்.

தலைப் பொட்டில் அவருக்கு வலி தொடங்கியது. வயிற்றில் கொஞ்சம் குமட்டல் இருந்தது.. வீட்டை அடைந்ததும் மாத்திரை போடவேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

காரில் யாரும் பேசவில்லை. ஆனால் பரமா மட்டும் பின் சீட்டிலிருந்து மெல்லிய குரலில் இயந்தரத் தனமாக "மெரிலி, மெரிலி, மெரிலி, மெரிலி" என்று திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருந்தான். சுந்தரத்தின் நெஞ்சில் கொஞ்சமாக இருள் கவிந்தது.


*** **** ****



அந்திம காலம்(நாவல்) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 30 Sep 2009 - 10:11

இருளுக்கு முன் ஒளி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இருள் கவிய வழி இல்லை. சிவமணி என்னும் இருள் இன்றிரவு கவியப் போகிறது என்ற எண்ணத்தோடு மத்தியானம் ஒரு மணி போல் வீடு சேர்ந்து ராமாவின் காரிலிருந்து இறங்கிய போது அவர் வீட்டு வாசலில் அக்கா என்னும் ஒளி பூத்திருந்தது. கார் சத்தம் கேட்டு அன்னம் உள்ளே இருந்து எட்டிப் பார்த்தாள்.

வாய் முழுக்க சிரிப்பாக "எப்ப வந்த அக்கா?" என்று கேட்டுக் கொண்டே இறங்கினார்.

"நான் பதினொரு மணிக்கெல்லாம் வந்திட்டேன் தம்பி. வீடு பூட்டியிருந்திச்சி. பக்கத்து வீட்டு அம்மா சாவி கொண்டாந்து குடுத்தாங்க!" என்றாள் அக்கா.

"அன்ட்டி" என்றவாறு அவளை ஓடிக் கட்டிக் கொண்ட பரமா "தாத்தா இஸ் வெரி சிக்!" என்று அறிவித்தான். ஜானகி "சனியன், சனியன்" எனத் தலையில் அடித்துக் கொண்டே இறங்கினாள்.

சமயலறையிலிருந்து கமகமவென குழம்பு வாசனை வந்தது. அத்தை அடுப்படியில் நின்று சமைத்துக் கொண்டிருந்தாள். "என்ன மாமியும் அத்தையும் வந்தவுடன சமைக்க ஆரம்பிச்சாச்சா?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள் ஜானகி.

அன்னத்தின் முகம் கொஞ்சம் கவலையால் இருண்டது. "என்ன தம்பி ஒடம்புக்கு? ஜானகி ஒண்ணுமே சொல்லலியே!" என்றாள்.

"மெதுவா சொல்றேங்கா. நீதான் வந்திட்டல்ல, இனிமே என் உடம்பு நல்லாயிடும்" என்றார் சுந்தரம். அக்காவைப் பார்த்தது உண்மையிலேயே தெம்பாக இருந்தது.

ராமா அன்னபூரணியிடம் நலம் விசாரித்து காரை எடுத்துக் கொண்டுத் திரும்பத் தயாரானார்.

"அதெல்லாம் ஒண்ணும் முடியாது! கண்டிப்பா நீ சாப்பிட்டுத்தான் போகணும். இன்னைக்கு அத்தையோட சமையல். பிரமாதமா இருக்கும்!" என்று அவரைத் தடுத்து உட்காரப் பண்ணினார் சுந்தரம். ஆனால் தான் சாப்பிட முடியும் எனத் தோன்றவில்லை. மனது உற்சாகமாக இருந்தாலும் வயிறு குமட்டியவாறே இருந்தது.


*** *** ***

சாப்பாடு முடிந்து ராமா காரை எடுத்துக் கொண்டு போய்விட்டார். தனது உதவி எப்போது வேண்டுமானாலும் கூப்பிடும்படி சொல்லிவிட்டுப் போனார்.

ஓய்ந்து உட்கார்ந்த வேளையில் அன்னம் வந்து கேட்டாள்: "என்ன தம்பி உடம்புக்கு? எப்பவும் எங்கியும் சொந்தமா கார ஓட்டிப் போற நீ, உன் நண்பரக் கூப்பிட்டு அவர் கார்ல போற அளவுக்கு உன் உடம்புக்கு என்ன வந்திச்சி? ஆளும் ரொம்ப இளச்சிருக்கியே!"

சுந்தரம் சிரித்தார். "எல்லாருக்கும் போற காலம் ஒண்ணு வருந்தானக்கா! எனக்கு அது கொஞ்சம் சீக்கிரமா வந்திருக்கு அவ்வளவுதான்!" என்றார்.

"என்ன வந்திருக்கு?"

"மூளையில புற்று நோய். ரொம்ப முத்தியிருக்கு!"

அன்னம் அவர் முகத்தை வைத்த கண் வாங்காமல் ஒரு முழு நிமிடம் பார்த்தாள்.

"உண்மையா தம்பி?"

எதிர் பார்த்த எதிரொலிதான். ஒருமுறை சொல்லியவுடன் நம்பக் கூடிய செய்தி அல்ல. முதல் முறை கேட்டது தவறில்லை, பொய்யில்லை, விளையாட்டில்லை என மறுமுறை கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய செய்தி. இரண்டாவது முறையில் "சும்மா பொய் சொன்னேன்" என்ற நிம்மதியான வார்த்தை வராதா என்ற எதிர்பார்ப்பு.

"உண்மைதாங்கா! எல்லா டாக்டர்களும் உறுதிப் படுத்தியாச்சி!"

"சீரியசா!"

"சீரியஸ்தான். சிகிச்சை வெற்றி பெறலன்னா சாவுதான். அதுக்கு முன்னால படவேண்டிய நரக வலியெல்லாம் ஆரம்பிச்சாச்சி!" உணர்ச்சியில்லால் சொன்னார். இதெல்லாம் எனக்குப் பழகிவிட்டது என்ற தொனியுடன்.

"என்ன செய்யிது?" அக்காவின் குரல் தளுதளுக்கத் தொடங்கியிருந்தது.

"தலையில பிளக்கிற மாதிரி வலி. அடிக்கடி மயக்கம். வயித்தில குமட்டல், வாந்தி. வலி. சில சமயத்தில முதுகிலியும் வலி. சோர்வு. சின்ன வேல செஞ்சாலும் உடல் களைப்பு. தூக்கம் பிடிக்கிறதில்ல. சாப்பாடு தங்கிறதில்ல. சாப்பிட ருசியும் இல்ல..." அவர் குரலிலும் தளுதளுப்பு இருந்தது. அக்காவுக்குச் சொல்வது போல தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சுய இரக்கத்தில் ஆழ்ந்து விடுவது அவருக்குத் தெரிந்தது. வயிற்றில வலியும் குமட்டலும் ஆரம்பித்திருந்தன. அடக்கி உட்கார்ந்திருந்ார்.



அந்திம காலம்(நாவல்) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 30 Sep 2009 - 10:12

அன்னம் தலையைக் கைகளில் கவிழ்த்துக் கொண்டு அழத் தொடங்கியிருந்தாள். விசும்பினாள். அவள் தோள்கள் குலுங்கின.

சமயலறைச் சுவருக்குப் பக்தத்திலிருந்து மெல்லிய முனகல் குரல் கேட்டது. "தண்ணிப் பக்கம் போகாத போகாதன்னா யார் கேக்கிறாங்க? ஏன் தண்ணிப் பக்கம் போகணும்? தண்ணில ஏன் எறங்கணும்?" அத்தை அங்கு மறைவாக உட்கார்ந்து தங்கள் உரையாடலைக் கேட்டிருக்கிறாள் எனப் புரிந்து கொண்டார்.

ஜானகி சமயலறை வேலைகளை முடித்து விட்டு அங்கு வந்து உட்கார்ந்தாள். அன்னம் அவளை ஏறிட்டுப் பார்த்தாள். "ஏன் ஜானகி இந்த விஷயத்த எங்கிட்ட முன்னாலிய சொல்லல? எங்கிட்ட இருந்து மறைக்கலான்னு பாத்திங்களா?" என்று கோபமாகக் கேட்டாள்.

"ஐயோ, எனக்கே நேத்து ராத்திரிதான் தெரியும் மாமி. வலிக்குது வலிக்குதுன்னு டாக்டரப் போய் பாத்துப் பாத்திட்டு வந்தாங்க. சாதாரண தலவலி வயித்து வலின்னுதான் நானும் இருந்தேன். ரெண்டு வாரத்துக்கு முன்னதான் ஜெனரல் ஆஸ்பத்திரியில எல்லா டெஸ்டும் பண்ணி நேத்துதான் முடிவு சொன்னாங்க. அப்புறம் ராதா வேற இந்தப் பிள்ளய கூட்டிட்டு ராத்திரி வந்திருந்தாளா? நேத்து இங்க நடந்த கூத்தில எனக்கு தலையே சுத்திப் போச்சி. அப்புறந்தான் காலையில உங்களுக்குப் போன் பண்ணினேன்."

"இதுக்கு மருந்து, சிகிச்சை இருக்கணுமே தம்பி. இப்பதான் மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருக்கே!" என்றாள் அன்னம்.

மதர் மேகியின் முகம் அவர் மனதுக்குள் வந்தது. அவருடைய இனிய சொற்கள் காதில் ஒலித்தன.

"இருக்கு அக்கா. அடுத்த வாரந்தான் மௌன்ட் மிரியம் ஆஸ்பத்திரியில சிகிச்சை ஆரம்பிக்கப் போறாங்க. ரேடியோதெராப்பி, கெமோதெரப்பி கொடுப்பாங்கன்னு நெனைக்கிறேன். அதிலியும் கடுமையான பக்க விளைவுகள் இருக்கு. நெனச்சா பயமாத்தான் இருக்கு!"

"பயந்தா முடியுமா! எல்லாத்தையும் செஞ்சிதான் பாக்கணும். எல்லாம் குணமாயிடும்கிற நம்பிக்கை வேணும். மனசு உற்சாகமா இருக்கணும். கவலப் படக் கூடாது!" அன்னம் பேசுவது மதர் மேகி பேசுவது போல இருந்தது. மதர் அழகிய பிரஞ்சு வாசனை உள்ள ஆங்கிலத்தில் சொன்னார். அன்னம் பாசமான வீட்டுத் தமிழில் சொல்கிறாள். அதுதான் வேறுபாடு.

"பாட்டி கிவ் மீ சொக்கலேட்" என்றவாறு பரமா அங்கு வந்தான்.

"இந்த சந்தர்ப்பத்தில இவன் வேற இங்கு வந்து மாட்டிக்கிட்டான் மாமி!" என்றவாறு அவனை இழுத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டாள் ஜானகி. "நேத்து ராத்திரி அவங்க அம்மா கொண்டாந்து...."

"ஜானகி" என்று அதட்டினார் சுந்தரம். "அந்தக் கதையெல்லாம் பிறகு அக்காகிட்ட தனியா இருக்கும் போது சொல்லு. குழந்தயப் பக்தத்தில வச்சி அவனுக்குக் கலவரத்த உண்டாக்காத!" என்றார்.

ஜானகி அடங்கிப் போனாள். அன்னமும் அமைதியானாள். சமயலறையில் அத்தை விசும்பி அழும் குரல் கேட்டது. சாதாரண புத்தி உள்ளவர்களுக்கே மனதில் இருளை உண்டாக்கும் இந்த நோய்ச் செய்தி அத்தையின் குழம்பிப்போன முதிர்ந்த மனதில் என்னென்ன இருண்ட அதல பாதாளங்களை உண்டாக்குகிறதோ என எண்ணினார்.

இந்த வீட்டில் கருமை படர்ந்திருக்கிறது. இந்த வீட்டினுள் மழை மேகங்கள் சூழ்ந்துள்ளன. இனி இரவில் கடும் புயல் சுழன்று வீசப் போகிறது. தன் மனத்தின் அவலங்களுக்கு ஒரு முடிவு இல்லை என எண்ணினார் சுந்தரம். இது ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் காலம். உறுத்தி வருத்தித்தான் விடும். இதிலிருந்து தப்பிப்பது என்பது இல்லை.

நெஞ்சு குமட்டியது. மெதுவாக எழுந்து குளியலறையை நோக்கிச் சென்றார்.

அந்த வீடு சிவமணியின் வருகையை எதிர் பார்த்துக் காத்திருந்தது.

----



அந்திம காலம்(நாவல்) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 30 Sep 2009 - 10:12


அந்திம காலம் - 8



மாலை 6 மணியளவில் போன் அடித்தது. சுந்தரம் சென்று எடுத்து "ஹலோ" என்றார்.

"வேர் இஸ் தெட் பிச்?" என்றது சிவமணியின் முரட்டுக் குரல்.

அருவருப்போடு கேட்டார்: "யார் சிவமணியா? உன் மனைவியக் கேக்கிறியா?"

"கூப்புடுங்க அவள" என்றான்.

"அவ இப்ப இங்க இல்ல" என்றார்.

"ஓ, போனுக்கு வரமாட்டாளா! நேர்ல வந்து பேசிக்கிறன்னு சொல்லுங்க... மாமா, இப்பத்தான் கோலாலம்பூர்ல இருந்து புறப்பட்றேன். பத்து மணி போல வந்துடுவேன். அவள அங்கயே வெயிட் பண்ணச் சொல்லுங்க!" போனைத் துண்டித்தான்.

மெதுவாகப் போனைக் கீழே வைத்தார். அவன் தனது கைத் தொலைபேசியில் இருந்து பேசுகிறான் என்பதை ஊகித்துக் கொண்டார். அவன் குரலில் மூர்க்கமும் முரட்டுத் தனமும்தான் இருந்தன. தன் மனைவியுடன் சமாதானம் பேச அவன் வரவில்லை. சண்டை போடுவதற்காகவே வருகிறான். வந்தவுடன் தன் மனைவி இங்கு இல்லை எனத் தெரிந்ததும் என்ன மாதிரி ஆர்ப்பாட்டங்கள் பண்ணப் போகிறானோ என அஞ்சினார்.

ஒரு நிமிடம் நண்பர் ராமாவைக் கூப்பிட்டு துணைக்கு இருக்கச் சொல்லலாமா என நினைத்தார். ஆனால் அடுத்த நிமிடம் மனதை மாற்றிக் கொண்டார். ராமாவுக்கு இன்று காலை கொடுத்த தொல்லைகள் போதும். இனியும் அவரைத் தொந்திரவு செய்ய வேண்டாம் என முடிவு செய்தார். மேலும் இது என் குடும்ப விவகாரம். என் சண்டை. நானாகத் தனித்துத்தான் இதை நடத்த வேண்டும். அடுத்தவர் துணையை நாடுவது பெருமையல்ல.

சோர்ந்து டெலிவிஷன் முன் வந்து உட்கார்ந்தார். மத்தியானம் கொஞ்ச நேரம் நிம்மதியாகத் தூங்க முடிந்தது. மாத்திரைகளின் சக்தியாகத்தான் இருக்க வேண்டும். உடல் முழுக்க வலிகள் குறைந்திருந்தன. சோர்வாக இருந்தாலும் நிம்மதியாக இருந்தது.

உட்கார்ந்திருந்த நாற்காலியில் முதுகுக்கு ஒரு தலையணையை முட்டுக் கொடுத்துக் கொண்டார். முதுகுக்கு அந்தச் சுகம் தேவைப் பட்டது. தான் விரைவாகக் கிழமாகிக் கொண்டு வருவதாகத் தோன்றியது.

டெலிவிஷனில் ஏதோ சீன சண்டைப் படம் ஓடிக் கொண்டிருந்தது. பரமா அங்கு உட்கார்ந்து அந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் தன்னை மறந்திருந்தான். "பரமா" என்று கூப்பிட்டார். அவன் டெலிவிஷனில் வைத்த கண் மாறாமல் பின்னோக்கி நடந்து அவரிடம் வந்தான். அவனைத் தூக்கி மடியில் உட்கார வைத்தார். காற்று போல லேசாக இருந்தான்.

அவன் கண்கள் படத்திலேயே இருந்தன. "என்ன பாக்கிற பரமா?" என்று கேட்டார்.

"குங் ஃபூ" என்றான். டெலிவிஷனில் ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டிப் பறக்கும், இடுப்பில் கருப்புத் துண்டு கட்டியிருந்த சீன வீரனின் உதையில் எதிரிகள் சிதறி விழுந்து கொண்டிருந்தார்கள்.

"இந்தப் படம் உனக்கு விளங்குதா கண்ணு?" என்று கேட்டார்.

"ஹீ இஸ் கில்லிங் ஆல் த பேட் பீப்பல்" என்றான் பரமா. ஆமாம். விளங்கிக் கொள்ள அது போதும். இந்த டெலிவிஷன் திரை உலகில் எல்லாப் பாத்திரங்களும் சுலபமாக நல்லவன் கெட்டவன் எனத் தெரிகிறார்கள். கருப்பும் வெள்ளையுமாய் வண்ணம் தீட்டப் பட்டிருக்கிறார்கள். வெள்ளை ஹீரோ கருப்பு வில்லன்களை அடித்து வீழ்த்துவார். இங்கு பண்போ பச்சாதாபமோ தேவையில்லை. வில்லன்கள் எந்த வகையிலும் பரிதாபத்துக்குரியவர்கள் அல்ல. உருவத்தால் கூட அவர்கள் அழகாக இருக்க மாட்டார்கள். ஆனால் ஹீரோ எப்போதுமே அழகாக இருப்பான். இந்த டெலிவிஷன் மொழியைப் புரிந்து கொண்டால் பேச்சு மொழி பற்றி கவலைப்படத் தேவையில்லை.

தாம் சின்ன வயதில் ஆங்கில மொழி கொஞ்சமும் தெரியாத நிலையில் "டார்ஸன்" படங்களும் "கேப்டன் அமெரிக்கா" படங்களும் பார்த்து அனுபவித்ததை நினைத்துக் கொண்டார். அங்கு மொழி புரியாமலேயே கதைகள் தௌிவாக இருக்கும். சண்டைகள் பலமாக இருக்கும். நல்லவனான ஹீரோ எப்போதும் வென்று அப்பாவி மக்களை வில்லன்களிடமிருந்து காப்பாற்றுவான். ஜேன் தொல்லையில் மாட்டிக கொள்ளும் போதெல்லாம் எங்கிருந்தும் வந்து காப்பாற்றி விடுவான். ஜேன் அவனைக் காதல் ஒழுகும் கண்களால் பார்த்து பார்ப்பவர்கள் உள்ளத்தில் பரவசத்தை ஏற்படுத்துவாள்.

வாழ்க்கை இந்தப் படங்களைப் போல் இருந்தால் எத்தனை எளிதாக இருக்கும்! ஜேன் எந்த நாளிலும் வில்லன்களைக் காதலிக்க மாட்டாள். மிருகங்கள் கூட ஹீரோ பக்கத்தில்தான் இருக்கும். ஹீரோவாக இருக்கும் யாரும் வில்லன்களாக மாறமாட்டார்கள்.

ஆனால் வாழ்க்கையில் சிவமணி போன்றவர்கள் ஹீரோவாகக் காட்சி தந்து வில்லன்களாக மாறிவிடுகிறார்கள். ஜேன்களுக்கு முதல் பார்வையில் இவர்கள் ஹீரோக்களா வில்லன்களா என்று சொல்ல முடிவதில்லை.



அந்திம காலம்(நாவல்) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 30 Sep 2009 - 10:12

ஆனால் அந்த வில்லன்களோடு போரிட்டு ராதா போன்ற ஜேன்களைக் காப்பாற்ற நிஜ வாழ்க்கையில் டார்ஸன் போன்ற ஹீரோக்கள் இல்லை. அநேகமாக நிஜ உலகில் ஹீரோக்கள் எங்குமே இல்லை. அப்படி இல்லாததால்தான் டார்ஸன், பேட்மேன், சூப்பர்மேன் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி போன்றோர் போடும் பல்வேறு வேடங்கள் போன்ற கற்பனைகளை ஏற்படுத்தி வைத்துக் கொண்டு மனித குலம் சுகம் கண்டு கொண்டிருக்கிறது. நிஜ உலகில் ஹீரோக்கள் போலீஸ்காரன், வக்கீல், நீதிபதி போன்று சம்பளத்துக்கு வேலை செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிலும் பாதிப் பேர் ஹீரோ வேடத்தில் உள்ள வில்லன்களாகத்தான் இருக்கிறார்கள்.

டெலிவிஷனில் சண்டைகள் ஓய்ந்து சீன ஹீரோவின் காதலி அவனருகில் அணைந்து நின்று அவனைச் சிருங்காரப் பார்வை பார்த்தாள். அவர்கள் இதழ்கள் நெருங்கி வரும் நேரம் தணிக்கையாளரின் கத்தரிப்பில் காட்சி மாறியது.

சண்டை முடிந்து சிருங்காரம் ஆரம்பித்ததும் பரமாவுக்கு படம் பார்க்கும் ஆர்வம் விட்டுப் போய் விட்டது. "தாத்தா, ஐ வான்ட் சொக்கலேட்" என்றான்.

"சொக்கலேட் வேணுன்னா பாட்டியப் போய்க் கேளேன்!" என்றார்.

"ஷீ வில் ஸ்கோல்ட்" என்றான்.

"சரி. பரமா! நான் எடுத்துத் தாரேன். ஆனா அதையே தமிழ்ல கேளு பாப்போம்" என்றார்.

"ஹௌ?"

"தாத்தா! எனக்கு சொக்லேட் வேணும்!"

"தாத்தா! எனக்கு சொக்லேட் வான்ட்"

"இல்ல, சொக்லேட் வேணும்!"

"சொக்லேட் வேணும்" என்றான் மழலையில்.

தட்டிக் கொடுத்தார். எழுந்து அடுப்பங்கரைக்குச் சென்று பிரிட்ஜைத் திறந்து சொக்லட் தேடினார்.

"என்ன தேட்றிங்க?" என்று கேட்டாள் ஜானகி.

"பரமாவுக்கு சொக்லட் வேணுமாம், ஜானகி!" என்றார்.

"ஐயோ குடுக்காதீங்க! சாப்பிட்டு சாப்பிட்டு இருமுறான். வாந்தி கூட எடுக்கிறான்!" என்றாள் ஜானகி.

"ஒரு சின்னத் துண்டு ஜானகி. ஆசையா கேக்கிறான் பாரு!"

ஒரு சிறிய துண்டு உடைத்துக் கொடுத்தாள். "இப்படியே சீனியா குடுத்துப் பழக்கி வச்சிருக்காங்க. பிள்ளைக்கு உடம்பு ரொம்ப கெட்டிருக்குங்க!" என்றாள்.

"அதுக்காக உடனே நிறுத்திட முடியுமா? கொஞ்சம் கொஞ்சமா நிறுத்துவோம்!" என்றார்.

சொக்கலேட்டுடன் பரமாவை நோக்கித் திரும்பிய போது தலை கிர்ரென்று ஒருமுறை சுற்றி நின்றது.


*** *** ***



அந்திம காலம்(நாவல்) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 30 Sep 2009 - 10:13

பத்தரை மணிக்குள் தன் கைத் தொலை பேசியிலிருந்து மூன்று முறை அழைத்து விட்டான். தஞ்சோங் மாலிமில் இருக்கிறேன், தாப்பாவில் இருக்கிறேன், புக்கிட் மேராவில் இருக்கிறேன் என்று சொல்லி ஒவ்வொரு முறையும் ராதாவோடு பேச வேண்டும் என்று அடம் பிடித்தான். "நேராக வா பேசிக் கொள்ளலாம்" என்று சொல்லிச் சமாளித்தார். ஒரு முறை பரமாவை அழைத்துப் பேசினான். பேசிப் போனை வைத்த பரமா "மை பாதர் சேய்ஸ் ஹீ இஸ் கமிங்" என்று மட்டும் சொன்னான். அப்பனைக் காணுகின்ற ஆனந்தம் ஒன்றும் அவன் முகத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.

பதினொரு மணிக்குத்தான் அவனுடைய பாஜேரோ ஜீப் அவருடைய வீட்டின் முன் வந்து நின்றது. ஒரு குட்டி யானை போல இருந்த அந்த ஜீப்பின் இரண்டு விளக்குகளும் தீப்பந்தங்கள் போல் இருந்தன. அந்த விளக்கின் பிரகாசத்தில் சுந்தரத்தின் கண்கள் குறுகிப் போயிருக்க ஒரு ராட்சச நிழல் போல ஜீன்சுடன் கீழே இறங்கினான் சிவமணி. கட்டி வைக்கப் பட்டிருந்த ஜிம்மி அவனைப் பார்த்துக் குரல் வெடிக்கக் குலைத்தது.

ஜீப்பின் விளக்குகளை அணைத்துவிட்டு உள்ளே வந்தான். பெண்கள் அனைவரும் உள்ளே போய்விட்டார்கள். பரமா தூங்கி விட்டிருந்தான்.

"வா சிவமணி" என முகமனுக்காக வரவேற்றார் சுந்தரம்.

"எங்க மாமா என் டியர் வைஃப்? வரச் சொல்லுங்க!" என்றான்.

"உட்காரப்பா! சாப்பிட்டியா, ஏதாகிலும் சாப்பாடு எடுத்து வைக்கச் சொல்லட்டுமா?" என்று கேட்டார். அவனைப் போல மொட்டையாக விவகாரத்தை ஆரம்பிக்கத் தயங்கினார்.

"ஒண்ணும் வேண்டாம். வர்ர வழியில சாப்பிட்டுட்டேன்!" என்றான். "எங்க போயிட்டா ராதா? ஒளிஞ்சிக்கிட்டிருக்காளா? பிரேம் எங்கே?" என்று கேட்டான்.

"பிரேம் தூங்கிட்டான். எழுப்பட்டுமா?" என்றார்.

"வேணாம். அப்புறம். ராதாவ வரச்சொல்லுங்க" என்றான்.

நாற்காலியில் அழுந்த உட்கார்ந்து கொண்டார். "ராதா இங்க இல்லப்பா!" என்றார்.

"எங்க போயிட்டா?" ஆத்திரத்துடன் கேட்டான்.

"எனக்கு விவரமெல்லாம் தெரியாது. கடிதம் எழுதி வச்சிட்டுப் போயிருக்கா. அதுதான் தெரியும்!" கடிதத்தை அவனிடம் நீட்டினார். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. தான் தயங்கித் தயங்கிச் சொல்வதை விடக் கடிதம் தௌிவாகச் சொல்லும். அவள் வார்த்தைகளிலேயே அவனுக்கு உறைக்குமாறு செய்தி போய்ச் சேரட்டும் என்றிருந்தார்.

படித்து முடித்துக் கடித்ததைக் கசக்கி எறிந்தான். "பிளடி பிச், பிளடி பிச்..." என்று கத்தினான். எழுந்து அங்குமிக்கும் நடந்தான். உட்கார்ந்தான். தலையைப் பிடித்துக் கொண்டு குனிந்திருந்தான். அப்புறம் தலையைத் தூக்கி அவரை முறைத்தான். இதற்கிடையே ஜானகியும் அன்னமும் ஒன்றாக வந்து ஹாலில் உட்கார்ந்தார்கள்.

"பாத்திங்களா உங்க மக செஞ்ச வேலய! பாத்திங்களா என்ன தேவடியாத் தனம் பண்ணியிருக்கன்னு! பாத்திங்களா அத்தை! உங்களுக்கெல்லாம் நல்லா இருக்கா இது?" என்று கத்தினான்.

ஜானகி பேசினாள். "எங்கள ஏம்ப்பா சத்தம் போட்ற? எங்களுக்கு இது பத்தி ஒண்ணுமே தெரியாது. உங்க புருஷன் பெஞ்சாதிக்குள்ள உறவக் காப்பாத்திக்க உங்களால முடியில. இதுக்கு வௌியார் நாங்க என்ன பண்ண முடியும்? எங்களுக்கும் கடிதத்தப் பாத்து அதிர்ச்சியாத்தான் இருக்குது!" என்றாள்.

"பொம்பளயா அவ, பொம்பிளயா? பேய். வேசி!" என்றான்.

சுந்தரம் சொன்னார்: "பொறுமையா பேசு சிவா. அக்கம் பக்கத்தில உள்ளவங்க கேட்டா நல்லா இருக்காது. குடும்பத்துக்குத்தான் அவமானம்!" என்றார்.

"எங்க இருக்கு குடும்பம்? அதத்தான் தொலைச்சிட்டுப் போயிட்டாளே!" என்று மீண்டும் கத்தினான்.

"குடும்பம் தொலைஞ்சதுக்கு அவ மட்டுமா காரணம்? நீ நல்லபடி இருந்திருந்தா விஷயம் இவ்வளவு தூரம் போயிருக்குமா?" என்றாள் ஜானகி.

"நான் என்ன பண்ணிட்டேன் இவள? புதிசா ஒரு கம்பெனிய ஆரம்பிச்சி அதில போட இவளக் கொஞ்ச பணம் கடனா கேட்டேன். குடுக்க மாட்டேன்னுட்டா! அதனால கொஞ்சம் சத்தம் போட்டேன். அவ்வளவுதான!" என்றான்.

"இதுக்கு முன்னால ஆரம்பிச்ச கம்பெனி எல்லாம் என்னப்பா ஆச்சி? இதுக்கு முன்னால அவகிட்ட இருந்து வாங்கின கடன் எல்லாம் என்ன ஆச்சி?" என்று ஜானகி கேட்டாள்.

"அத்த, வியாபாரத்தில நட்டம் லாபம்கிறது எல்லாருக்குமே உள்ளதுதான! முதல் கம்பெனி நொடிச்சிப் போச்சின்னுதான் இரண்டாவது கம்பெனி ஆரம்பிச்சேன்!" என்றான்.

பொறுமையாக இருந்த சுந்தரம் கேட்டார்: "அவ காசு குடுக்காதத்துக்காக நீ அவள அடிச்சதா சொல்லியிருக்காளே! அது உண்மையா?"

அவரை முறைத்துப் பார்தான். "ஆத்திரத்தில அப்படி இப்படி தட்டியிருப்பேன். அது ஒரு பெரிசா?"



அந்திம காலம்(நாவல்) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக