புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:05 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_m10அந்திம காலம்(நாவல்) - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்திம காலம்(நாவல்)


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:17 am

First topic message reminder :

ரெ.கார்த்திகேசு ஓய்வு பெற்ற தொடர்புத் துறை (mass communication) பேராசிரியர். இந்நாவல் தவிர "வானத்து வேலிகள்"; "தேடியிருக்கும் தருணங்கள்"; "காதலினால் அல்ல" என்ற மூன்று நாவல்கள் மற்றும் "புதிய தொடக்கங்கள்"; "மனசுக்குள்"; "இன்னொரு தடவை" என்னும் சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.



அந்திம காலம் - 1

மழைத் தாரைகள் காரின் முன் கண்ணாடியில் வீசி அடித்துக் கொண்டிருந்தன. காரின் கூரையில் விழுந்த மழை நீர் கண்ணாடியில் ஆறாக வழிந்து கொண்டிருந்தது. இடை விடாத பொழிவு. அகலமான கண்ணாடியெங்கும் மழை வரைகின்ற ஓவியங்கள். காரின் வைப்பர் அந்த ஓவியங்களை இடை விடாது அழித்துக் கொண்டிருந்தது.

டடக்...டடக்...டடக்... டடக்.

அழிக்க அழிக்கப் புதிது புதிதாக ஓவியங்கள். அழிவது பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாத மழை. அழிப்பதைப் பற்றி குற்ற உணர்ச்சியும் தயக்கமும் கொஞ்சமும் இல்லாத வைப்பர்.

டடக்... டடக்.. .டடக். அழி... அழி... அழி. வரை... வரை... வரை. டடக்... அழி.. டடக்... வரை... டடக்... அழி... டடக்... வரை.

எது முதல்? எது தொடர்? வரைதல் முதலா, அழிதல் முதலா?

சுந்தரத்தின் கார் அந்த நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்றிருந்தது. அந்தக் கடுமையான மழையில் அவர் காரை ஓட்ட விரும்பவில்லை. பார்வை தெளிவாக இல்லை. இரண்டடிக்கு முன்னால் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. மருத்துவ மனைக்குப் போய்விட்டு வீடு திரும்புகிற வழியில் இப்படித் திடும் என மழை பிடித்துக்கொண்டது.

வேணுமானால் முன் விளக்குகளைப் போட்டுக் கொண்டு நிதானமாக ஓட்டலாம். கண்ணாடி உள்ளே பனி படரும் போது துடைத்து விட்டுக் கொள்ளலாம். இந்த மழைக்குப் பயந்து வேறு யாரும் காரை நிறுத்தி விட்டதாகத் தெரியவில்லை. கார்கள் வழக்கம் போல் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு காரும் அவர் காரைக் கடக்கும் போது சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை சர்ரென்று கிழித்து அவர் காரின் மீது பாதியை ஊற்றிக் குளிப்பாட்டி விட்டுத்தான் செல்லுகிறது.

ஆனால் அவருக்கு அப்படி அவசரம் ஒன்றும் இல்லை. வீடு பக்கத்தில்தான். பத்து நிமிடம் நின்று மழை தணிந்ததும் போகலாம். மற்றவர்களுக்கு அவசரம் இருக்கிறது. அவருக்கு இல்லை. மற்றவர்களுக்கு ஆயிரம் வேலைகள். அவருக்கு அப்படி ஒன்றும் இல்லை. ஓய்வு பெற்று விட்ட மனிதனுக்கு ஏன் அவசரம்? அவசரமாக வேலை செய்து காலத்தை விரைவாக ஓட்டி... அப்புறம் என்ன செய்வது? ஓய்வெடுப்பதைக் கூட வெறுப்பாக்கிவிட்ட வேலை ஓய்வுக் காலத்தில் அவசரம் ஒன்றும் இல்லை.

இங்கே இப்படி இந்தக் காருக்குள் உட்கார்ந்திருப்பது நிம்மதியாகக் கூட இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கிறது. இந்த மழை இத்தனை கொடூரமாகப் பெய்தும் அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை. பட்டாம் பூச்சியாகவிருக்கும் பியூப்பாவை இறுக்கிக் காப்பாற்றும் கூடு போல அவரை இந்தக் கார் பத்திரமாகப் பாதுகாக்கிறது. சுற்றிலும் தண்ணீர் வடூந்து வெள்ளமாகிவிட அவர்மட்டும் நனையாமல் காய்ந்திருக்கிறார். தலைக்கு ஆறு அங்குலத்திற்கு மேலே தண்ணீர். தோளுக்கு இரண்டு அங்குலம் பக்கத்தில் தண்ணீர். காலுக்கு ஓரடி கீழே வெள்ளம். ஆனால் அவர் மேல் ஒரு துளியும் தண்ணீர் இல்லை.

என்ஜின் ஓடிக்கொண்டிருக்கிறது. குளிர் சாதனக் கருவி கீழ் சுருதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணாடியில் ஆவி பரவாமல் இருக்க அது வேண்டியிருந்தது. அதனால் பரவும் குளிருக்கு அவருடைய வெப்பமான மூச்சே மாற்றாக இருக்கிறது. மழையின் "சோ" என்ற ராகமும் கூரையில் அது போடும் தட தட தாளமும் ரசிக்கும்படியாகக்கூட இருந்தன. இது பாதுகாப்பான இடம். இது நிம்மதியான சூழ்நிலை.

அதோ தண்ணீரைக் கிடூத்துக்கொண்டு போகும் லாரியில் அந்த லாரி உதவியாளன் பாதி நனைந்தவாறு போகிறான். லாரியின் தார்ப்பாலின் துணி கிழிந்து கிடக்கிறது. அவனுக்குப் பாதுகாப்பில்லை. மோட்டார் சைக்கிளில் மழைக்கோட்டு அணிந்தவாறு போகிறவனுக்கும் முகம் நனைவதைத் தவிர்க்க முடியவில்லை. அவன் பின்னால் உள்ள பெண் மழைக் கோட்டும் இல்லாமல் முதுகில் மழை வழிய பிளவ்ஸ் உடம்போடு ஒட்டிக்கொள்ள வெட்கப்படக் கூட வசதியில்லாமல் கணவனை -- ஒருவேளை அண்ணனாகக் கூட இருக்கலாம் -- கட்டிக் கொண்டு போகிறாள். இங்கே ஒருவன் சைக்கிளை பஸ் பிரயாணிகள் நிற்கும் நிழல் கூடத்தில் வைத்து விட்டு மழைக்குக் காப்புத் தேடியிருக்கிறான். ஆனால் மழை அவன் காலடியில் வெள்ளமாக ஏறி அவனை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

ஆனால் அவர் பாதுகாப்பாக, நனையாமல், குளிரில்லாமல், சூடாக, நிம்மதியாக, காரின் உள்ளே கர்ப்பப்பைக்குள் குழந்தை போல இருக்கிறார். நான் கடலின் மத்தியில் தீவாக இருக்கிறேன். நான் பாலைவனத்தின் மத்தியில் சோலையாக இருக்கிறேன். பாதுகாப்பாக இருக்கிறேன். அர்ஜுனா! மாதங்களில் நான் மார்கழி. காலங்களில் நான் வசந்தம்.

டடக்...டடக்...வரை... டடக்...டடக்...அழி.. .டடக்...வரை...டடக்...அழி...

எது பாதுகாப்பு? எது நிம்மதி? யார் இந்த உலகில் பாதுகாப்பாக நிம்மதியாக இருக்கிறார்கள்? அதோ மழையில் அவதிப்பட்டு நிற்கும் அந்த சைக்கி்காரன் இன்னும் பத்து நிமிடங்களில் மழை விட்டதும் உடம்பை வழித்து விட்டுக் கொண்டு சைக்கிளில் ஏறி வீடு போய்ச் சேருவான். அடுத்த பத்து நிமிடங்களில் அவன் உடல் காய்ந்து விடும். திடகாத்திரமாக இருக்கிறான். இன்னும் ஐம்பது வருடங்கள் உயிரோடு இருப்பான்.

நான் பாதுகாப்பாக இருக்கிறேன். அடுத்த பத்து நிமிடங்களில் மழை விட்டதும் ஜோராக காரோட்டி வீட்டுக்குப் போய்விடுவேன். ஆனால் என் உடல் அழுக ஆரம்பித்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் முற்றாகச் செத்துப் போய்விடுவேன்.

யாருக்கு இருக்கிறது பாதுகாப்பு? என்னுடைய தற்காலிகச் சுகத்துக்கும், அவனுடைய தற்காலிகத் துன்பத்துக்கும் என்ன பொருள்? ஏ சைக்கிளோட்டியே! இங்கே வா! இந்தக் காரையும் சுகத்தையும் எடுத்துக் கொள். உன் இடத்தில் இருந்து நான் நனைகிறேன். வெள்ளம் என் கணுக்கால்களை நனைத்து முழங்கால் வரைக்கும் வந்தாலும் பரவாயில்லை. உன் மீதியிருக்கும் ஐம்பது வருடங்களை எனக்குக் கொடுப்பாயா? மாற்றிக் கொள்வோமா?



அந்திம காலம்(நாவல்) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:33 am

என் மனம் அழுக்குகள் நிறைந்தது போலும்; ஆணவம் நிறைந்தது போலும்; அதனால்தான் தெய்வ நம்பிக்கை என்பது எந்த நாளும் என் உள்ளத்தில் நிலைக்க மாட்டேனென்கிறது என நினைத்துக் கொண்டார். அவரறிய எத்தனை பேர் தீவிர நாத்திகவாதம் பேசியிருந்து மதிய வயதில் மகா பக்தர்களாக மாறியிருக்கிறார்கள்! எத்தனை பேர் வாழ்க்கையைக் குடியென்றும் கூத்தியென்றும் மூர்க்கமான வெறியோடு அனுபவித்து விட்டு பின்னர் ஏதாவது ஒரு சாமியாரிடம் சரணடைந்து எல்லாம் துறந்து கைகட்டிச் சேவகம் செய்து காலம் கழிக்கிறார்கள்!

அவர் அறிவு தெரிந்த நாளிலிருந்து ஒருகாலும் விதண்டாவாதமாக நாத்திகம் பேசியது இல்லை. வாழ்க்கை இன்பங்களை அத்தனை மூர்க்கமான வெறியோடு அணுகியதும் இல்லை. அவர் வாழ்நாள் முழுவதும் மிதமானவராக அமைதியானவராக இணக்கமானவராக இருந்திருக்கிறார். அவருடைய நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் அவருடைய மனசுக்குள்ளேயே நடந்த மௌனப் போராட்டங்கள்தாம். ஜானகியிடம் கூட அவர் அதிகம் வாதம் பண்ணியதில்லை. அவள் கோயிலுக்கும் சடங்குகளுக்கும் வலியுறுத்திக் கூப்பிடும் நேரங்களில் முனுமுனுத்துக் கொண்டாவது போய் வந்திருக்கிறார்.

ஆனால் அவர் மனது பொய்களைத் தீவிரமாக மறுத்திருக்கிறது. தன் அறிவு நம்ப மறுத்த எதையும் அவர் மனசு நம்புவதாக நடித்ததில்லை. "தன்னஞ்சறிவது பொய்யற்க" என்று வாழ்ந்திருக்கிறார். அறிவு முதிராத பிள்ளை வயதில் செய்திருக்கும் குற்றங்கள் அல்லாமல் வயது வளர்ந்து அறிவில் தௌிவு வந்த பிறகு அவர் முடிந்த அளவு நேராகத்தான் வாழ்ந்திருக்கிறார். பல வெறிகள் மனத்தில் கொப்புளித்துக் கொப்புளித்து வந்திருந்தாலும் தனது பலவீனமான வேளைகளில் எல்லாம் அவர் சாய்ந்து விடாமல் இருந்திருக்கிறார்.

இளவயதில் ஆத்திசூடி படித்த நாட்களிலிருந்து அறமாக இருக்க வேண்டும் எனவும் சினம் ஆறுதல் வேண்டும் என்றும் இயல்வது ஈயவேண்டும் என்றும் எண்ணெழுத்து போற்ற வேண்டும் என்றும் ஊக்கம் கைவிடக் கூடாது என்றும் மனத்தில் எழுதி வைத்துக் கொண்டார். பின்னர் நன்னூலும் திருக்குறளும் படித்துப் பாடமும் செய்து கொண்டார். முயற்சியை நம்பினார். உறவு சுற்றம் என்பனவற்றுக்கு வரை முறைகள் வைத்துக் கொண்டார்.

பின்னர் திரு வி.க., மு.வ., கி.ஆ.பெ., அப்துற்றஹீம், தமிழ்வாணன் போன்றவர்களும் அவருக்கு வாழ்க்கையைப் பல்வேறு நிலைகளில் உணர்த்திக் குழப்பியும் தௌிவு படுத்தியும் விட்டார்கள். அறிவார்ந்த உரைகள் அவருக்குப் பிடித்தன. ஆனால் தெய்வ பயம் எந்த நாளும் அவருக்கு ஏற்படவில்லை. பக்தி இலக்கியங்களில் உள்ள உருக்க உணர்வும் அன்பும் மொடூயழகும் பிடித்தன. ஆனால் புராணங்கள் வேடிக்கைக் கதைகளாகவே தோன்றின. அவற்றின் மீது நம்பிக்கையையும் ஈடுபாட்டையும் பக்தியையும் ஒரு நாளும் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

அதுதான் பிழையோ? தான் பயந்து மரியாதை செலுத்தியிருக்க வேண்டுமோ? அறிவுக்கு முக்கியத்தும் கொடுத்து இந்த உலகை உண்மையில் ஆட்சி செலுத்தும் சக்தி மிக்க தெய்வங்களை மதிக்காமல் செருக்கினால் அவர்களை அவமதித்து விட்டேனோ? கடவுளர்களின் மேல் அசையாத நம்பிக்கை வைத்து தபசு செய்யும் முனிவர்களுக்கு அருள அவர்கள் தபசைக் கலைக்க வரும் செருக்குமிக்க அரக்கர்களைத் தெய்வம் தண்டிக்குமாமே! "ஹாஹ்ஹா" என்று சிரித்துக் கொண்டு கையில் கதை தூக்கி வரும் அசுரர்களை, தலையைச் சுற்றி ஒளிவளையம் உள்ள சட்டை அணியாமல் நிறைய நகைகள் போட்டுக் கொண்டு இடுப்புக்குக் கீழ் சேலையணிந்த பெண்முகம் கொண்ட கடவுளர்கள் தோன்றித் தண்டிப்பதை சினிமாவில் பார்த்திருக்கிறோமே! அது உண்மைதானோ? என் ஆணவத்தால் நான் அசுரன் ஆகி எந்த முனிவனின் தவத்தையாவது கலைத்திருப்பேனோ? போன பிறப்பில்...?

வலி தணிந்து உடல் சுகப்பட்ட இடைவேளையில் இந்த நினைப்புக்களினால் அவருக்குச் சிரிப்பும் வந்தது. பயத்தில்தான் என்னென்ன எண்ணங்களெல்லாம் வருகின்றன! ஆனால் நம்பக் கூடாது என்பதில் அவர் முரட்டுத் தனம் கொண்டவர் அல்ல. ஏ தெய்வங்களே! நான் உங்களுக்கு எதிரானவன் அல்ல. நான் அசுரன் அல்ல. முனிவர்கள் தவம் செய்வதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. எந்த முனிவனின் தவத்தையும் நான் கலைக்க மாட்டேன். அப்படி ஒருவரைக் கண்டால் சில கணங்கள் வியப்போடு வேடிக்கை பார்த்துவிட்டு மரியாதையாக ஓசையில்லாமல் ஊறு செய்யாமல் அப்பால் போய்விடுவேன். ஓ தெய்வங்களே! என் மனம் திறந்திருக்கிறது. நீங்கள் வரலாம். என்னை நம்பிக்கைப் படுத்தலாம். ஓ தெய்வங்களே! நீங்கள் ஆட்கொள்ளுவதற்கு ஒரு ஆத்மா தேவையானால் நான் தயாராக இருக்கிறேன்.

தலைக்குள் இன்னொரு எரிமலையின் ஆரம்ப உறுமல் கேட்டது. அதை மனம் நிதானிப்பதற்கள் அது வெடித்தது. தலையில் மட்டுமல்ல, வயிற்றில், முதுகுத் தண்டில் ஒரு அரிவாள் வெட்டு விழுந்தது. இரண்டாகப் பிளந்தது. "அம்மா" என்று அவர் வாய்விட்டுக் கத்தியபடி படுக்கையில் எழுந்து உட்கார்ந்து தலையைப் பிடித்துக் கொண்டு இரண்டாக மடிந்து விழுந்த அந்த நேரத்தில் தற்செயலாகக் கதவைத் திறந்து உள்ளே வந்த ஜானகி "என்னங்க, என்ன ஆச்சு?" என்று பதறி அவர் தோள்களை அணைத்தாள்.

எரிமலைக் குழம்பு வழிந்து தணிந்தவுடன் அவர் தலைநிமிர்ந்து ஜானகியின் தோள்களில் சாய்ந்தார். முகம் வேர்த்திருந்தது. உடம்புச் சூடு ஏறியிருந்தது. கண்கள் செருகியிருந்தன. "ஏங்க, என்ன செய்யுதுங்க, ஏன் இப்பிடி இருக்கிங்க...?" என்று ஜானகி கலவரத்துடன் அடுக்கடுக்காகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.



அந்திம காலம்(நாவல்) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:33 am

மூச்சிளைக்கப் பேசினார். "வலி ரொம்ப கடுமையா போச்சி ஜானகி!" என்றார்.

"எங்கிட்ட நீங்க சொல்லவே இல்லைய... அன்னைக்கு டாக்டர் கொடுத்த மருந்து இன்னும் கொஞ்சம் இருக்க... சாப்படிறிங்களா?"

சரி என்றார். ஜானகி அவரைத் தலையணையில் சாய்த்துவிட்டுப் போய் சுடுநீரும் மாத்திரையும் கொண்டு வந்தாள். அவற்றை விழுங்கிச் சுடுநீரை உறிஞ்சியவுடன் வலி தணிந்தது போல் இருந்தது.

"எப்ப இருந்து இப்படி அவதிப் பட்றிங்க? என்ன கூப்பிட்டிருக்கக் கூடாது?" என்று ஜானகி கோபமாகப் பேசினாள்.

இனி இவளிடம் மறைத்து வைக்க முடியாது. இன்றிரவு பட்டென்று உயிர் போய்விட்டால் நான் பொய் பேசி துரோகம் செய்தவனாகி விடுவேன். என்னோடு வாழ்க்கையை முப்பதாண்டுகளுக்கு மேலாகப் பகிர்ந்து கொண்டவளிடம் நல்ல முறையில் சொல்லி விடை பெற்றுக்கொள்ளாமல் நான் போய்விட முடியாது.

மகள் துயரம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதை எண்ணி என் துயர் மறைத்து ஜானகியிடம் பொய்க்காரனாகத் தான் போய்ச் சேர்ந்தால் ஆத்மா சாந்தியடையாது. ஆத்மா சாந்தியடைவது என்றால் என்ன என்று சரியாக விளங்கவில்லை. ஆனால் அப்படியென்று ஒரு நிலை இருக்குமானால் அதைத் தவிர்க்க வேண்டும். என் செய்தி எத்தனை அதிர்ச்சியை அவளுக்குக் கொடுத்தாலும் சரி. அதைச் சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன். அதைத் தெரிந்து கொள்ள அவள் கடமைப் பட்டிருக்கிறாள்.

"ஜானகி. டாக்டர் இன்னும் முடிவு சொல்லலன்னு அப்ப உங்கிட்ட மறைச்சிப் பேசினேன். ஆனா டாக்டர் முடிவு சொல்லிட்டார்!"

ஜானகி திகைத்திருந்தாள். முகம் இன்னும் கலவரம் அடைந்தது. படுக்கையின் ஓரத்தில் உட்கார்ந்தாள். சுந்தரமும் தலையணையில் சாய்ந்தவாறு படுக்கையில் உட்கார்ந்துதான் இருந்தார். வரப் போவது கெட்ட செய்தி என்பதை ஜானகியால் ஊகிக்க முடிந்தது. அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தவாறு கேட்டாள்: "என்ன சொன்னார் டாக்டர்?"

பெண்ணே! உன் உலகம் சரியப் போகிறது. உன்னைத் தயார் படுத்திக்கொள். இது உன்னை வீழ்த்தும் செய்தி. ஆனால் வீழ்ந்து விடாதே. விழப் போகுபவன் நான். என் பக்கத்தில் இருந்து என்னைத் தாங்கிக்கொள்ள வலுப் பெற்றவளாக இரு.

"லேப் பரிசோதனை முடிவுகள் எல்லாம் வந்திருச்சி ஜானகி! எனக்கு வந்திருக்கிறது மூளைப் புற்று நோய். ரொம்ப முத்திப் போன நிலமை. உடம்பெல்லாம் பரவி இருக்கு. இப்படியே விட்டா மரணம் ரொம்ப சீக்கிரம் வந்திரும்னு சொல்றாரு!"

இதோ. எல்லாம் சொல்லிவிட்டேன். கொட்டிக் கவிழ்த்து விட்டேன். என் மனத்தைத் தற்காலிகமாகத் துடைத்து சுத்தப்படுத்திவிட்டேன். விளைவுகள் உன்னைப் பொறுத்தவை. அழப் போகிறாயா விழப் போகிறாயா, எழப் போகிறாயா, என்று பார்க்கிறேன். நோய்க்கு நான் பலி. நீ வேடிக்கை பார்க்கலாம். ஆனால் இந்தச் செய்திக்கு நீ பலி. நான் வேடிக்கை பார்க்கிறேன்.

ஜானகியின் மருண்ட விழிகளில் இருந்து ஓரிரு துளிகள் உருவாகி வடூந்தன. "நெஜந்தானாங்க நீங்க சொல்றது?"

தனக்கு சாதகமல்லாதவற்றை மனம் நம்பாது. ஒருவேளை தவறாக இருக்கலாமோ என மறு உறுதி தேடும். என் காதுகளில் கேட்டது பிரமையாக இருக்கலாம். மறுமுறை அதே மாதிரி கேட்டால்தான் உறுதி. மறுமுறை வேறு மாதிரி கேட்டு முதல் முறை கேட்டது தவறாகிப் போகலாம் என்ற நப்பாசை மனத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கும்.

"நெஜந்தான் ஜானகி. இவ்வளவு கடுமையான விஷயத்த உறுதிப்படுத்திக்காமயா சொல்லுவேன்?"

"ஒரு வேளை அந்தப் பரிசோதனை தவறா இருந்தா?"

"இல்ல ஜானகி. அதெல்லாம் வீண் சந்தேகங்கள். இப்ப பாத்தியே, அந்த வலியில நான் துடிச்சத, அத விடவா உறுதி வேணும்?"

முகத்தைப் பொத்திக் கொண்டு விம்மினாள். சுந்தரம் அவளை அழவிட்டார். திடீரென்று சுந்தரத்தின் நீட்டியிருந்த கால்களில் ஜானகி முகத்தைப் புதைத்துக் கொண்டாள். விம்மியவாறிருந்தாள். அவர் தலை முடியைக் கோதிவிட்டார். அதைத் தவிர வேறு என்ன செய்வதென்று தோன்றவில்லை.

பல மௌனமான கணங்கள் கடூந்ததும் சுந்தரம் சொன்னார்: "அழுது என்ன பண்றது ஜானகி? தைரியமா இரு! தனியா உன் கால்ல நிக்க பழகிக்க... என்னைக்காவது ஒரு நாள் போகிற உயிர்தானே. போகட்டும். இதுக்காக அழுது, அழுது வாழ்க்கய நரகமாக்கிக்க முடியாது."



அந்திம காலம்(நாவல்) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:34 am

திடீரென எழுந்து உட்கார்ந்தாள் ஜானகி. "ஏன் இப்படி சாவு, சாவுன்னு பேசிறிங்க? நோய் வந்தா எல்லாருமே செத்துத்தான் போயிர்ராங்களா? எத்தனையோ சிகிச்சைகள் இல்லையா? டாக்டர் சிகிச்சை பத்தி ஒண்ணும் சொல்லலியா?" என்று கேட்டாள்.

"சொன்னார். மௌன்ட் மிரியம் புற்று நோய் ஆஸபத்திரியில போய் ரேடியோதெராப்பி சிகிச்சை ஆரம்பிக்கச் சொன்னார். ஆனா அந்த சிகிச்சை இந்த நோயைவிடக் கொடுமையானது ஜானகி. எனக்கு அதில ஆசையில்ல. அதோட இந்த நோய் ரொம்ப விரைவாப் பரவி முத்தியிருக்கு. சிகிச்சை பலனளிக்குமா அப்படிங்கிறது நிச்சயமில்ல..."

"என்ன நிச்சயமில்ல? நாம் கண்டிப்பா போகத்தான் வேணும். உங்களுக்கு என்ன அப்படி வயசாகிப் போச்சி இப்படி விட்டுக் குடுத்திட்றதுக்கு? நாளைக் காலையிலேயே போவோம் வாங்க! உடனடியா சிகிச்சைய ஆரம்பிச்சிடுவோம். நான் இருக்கேன் உங்க பக்கத்தில. உங்களுக்கு வேண்டியது எல்லாம் நான் செய்றேன். உங்களுக்கு எல்லாம் நல்லாயிடும். கவலப் படாதீங்க. இனிமே சாவப் பத்தி பேசாதீங்க. நான் சாவித்திரி மாதிரி. யமன் கிட்ட இருந்து உங்கள மீட்டுக் கொண்டாறேன்! நான் நம்புற தெய்வம் என்னக் கைவிடாது பாருங்க." அவரின் தோள்களைக் குலுக்கிக் குலுக்கிப் பேசினாள். அவர் மனசுக்குள் நம்பிக்கை நீர் சுரந்தது. வயிறு அடங்கிப்போய் சாந்தமாக இருந்தது.

என் அன்பு மனைவியே! எந்தத் தெய்வம் நீ நம்புகிற தெய்வம்? என்னைத் தண்டிக்கிற அதே தெய்வமா? இப்போதுதான் புராணங்களின் மேல் நம்பிக்கையில்லாதவன் நான் என்பதை மனசுக்குள் நினைத்துப் பார்த்தேன். உடனே புராணக் கதையைச் சொல்லி என் மனத்தில் நம்பிக்கையை விதைத்து விட்டாயே! எனக்கு இது பாடமா? எல்லாம் தெரிந்தவன் என்று நினைத்துக் கொள்ளாதே என்ற அறிவுரையா?

நான் மரண பயத்தில் சோர்ந்துவிட்ட நிலையிலும் நீ இத்தனை நம்பிக்கையுடன் இருக்கிறாயே, இதுதான் நம்புகிறவனுக்கும் நம்பாதவனுக்கும் இடையில் உள்ள வித்தியாசமா? இதுதான் உண்மையா? அல்லது மரண வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட இருக்கும் என் உயிர் ஏதாவது கையில் கிடைக்கும் ஒரு நம்பிக்கையை பற்றிக்கொண்டு கரை ஏற ஏங்குகிறதா? ஏதாக இருந்தாலும் இது ஆறுதலாக இருந்தது.

"சரி ஜானகி. ரேடியோதெராப்பிக்கு நான் தயார். ஆனா ராதா இருக்கும் போது எப்படி? அவ திரும்ப போகட்டும். ஓரிரண்டு நாள் பாத்திருந்து செய்யலாம்" என்றார்.

"அவ இருந்தா என்ன, இல்லாட்டா என்னங்க! அவ இன்னிக்கி வருவா, நாளக்கிப் போவா! எப்படியாச்சும் தொலையட்டும். அவ வசதியப் பாத்து நாம் காத்திருக்க வேணாம். நாளக்கிக் காலையிலேயே போவோம்!"

எப்படி எடுத்தெறிந்து பேசிவிட்டாள்! இத்தனை நேரம் பெண்ணின் கதை கேட்டு உருகி உருகி வழிந்து கணவனைக் கூட மறந்து தாயாக இருந்த நீ, இப்போது மனைவியாக அவதாரம் எடுத்து கணவனுக்காக பெண்ணின் துயரத்தை இப்படி உதறித் தள்ளிவிட்டாயே. ஏ பெண்ணே, நீ ஒரு நாளில், ஒரு மணியில் எத்தனை அவதாரங்கள் எடுப்பாய்?

"அப்படியில்ல ஜானகி. அவ இப்ப இருக்கிற நெலையில இந்த விஷயத்தச் சொல்லி அவள இன்னும் கலவரப் படுத்தாத. அவளுக்கோ மருமகனுக்கோ ஏன் நம் பையனுக்குக் கூட இந்த விஷயம் தெரிய வேண்டாம்!"

"ஏங்க?"

"எல்லாரும் என்ன 'ஐயோ பாவம்னு' பரிதாபப்பட்டு பேசிறதையும் பாக்கிறதையும் என்னால சகிச்சிக்க முடியாது. என்னோட நோய் என்னோட இருக்கட்டும். நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கட்டும். மத்தவங்க பரிதாபத்துக்கு என்ன ஆளாக்கிடாத! நோயோட கொடுமய விட மத்தவங்க காட்டிற அனுதாபம் எனக்கு இன்னும் கொடுமையானதா இருக்கும்!"

"சரிங்க. இது நமக்குள்ளேயே இருக்கட்டும்!" என்று ஜானகி ஒத்துக் கொண்டாள்.

நிமிர்ந்து வாழ்ந்து பழகியவர். மற்றவர்களுக்கு உதாரணமாக இருந்து வாழ்ந்தவர். ஒரு இடைநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக ஆயிரம் மாணவர்களையும் ஐம்பது அறுபது ஆசிரியர்களையும் கண்டிப்பாக ஆண்டு அவர்களுடைய வியப்பையும் மரியாதையையும் பெற்றவர். பள்ளியின் அணிவகுப்புக்களில் முதல் மரியாதை பெற்றவர். பள்ளியின் காலை மாணவர் ஆசிரியர் அசெம்பிளியில் அவர் குரல் ஒலிபெருக்கியில் ஒலிக்கும்போது கூட்டத்தின் மௌனத்தை ஆண்டவர். மாபெரும் சபைகளில் மாலைகள் பெற்றவர். ஆகவே மற்றவர் முன் கூனிக் குறுகி நிற்க முடியாது. இவன் உள்ளே சொத்தையாகப் போய்விட்டான் என்று மற்றவர்கள் ரகசியமாக தன் முதுகுப்பக்கம் பேசுவதை அனுமதிக்க முடியாது. வாழும் வரை நிமிர்ந்திருக்க வேண்டும். உள்ளே கரையான்கள் அரித்துக் கொண்டிருந்தாலும் மேலே உரமான மரமாக இருக்க வேண்டும்.

அவர் யோசித்துக்கொண்டே இருந்தார். ஜானகி அவர் மார்பில் சாய்ந்து கிடந்தாள். அவள் கை அவர் நெஞ்சின் மேல் கிடந்தது. அவருடைய கை அவள் தலையை வருடிக் கொண்டிருந்தது. கணங்கள் மௌனமாக நகர்ந்து கொண்டிருந்தன.



அந்திம காலம்(நாவல்) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:34 am

ஆனால் எத்தனை காலங்கள் இந்த ரகசியத்தைக் காப்பாற்ற முடியும்? எத்தனை நாள் இந்த நோயுடன் தலை நிமிர்ந்து நடக்க முடியும்? உடல் இளைக்க ஆரம்பித்த பின் அதை மற்றவர் கண்களிலிருந்து மறைப்பது எப்படி? நெஞ்சுக் கூடு வௌியே தெரிவதையும் முகத் தசைகள் வற்றிப் போவதையும் மறைப்பது எப்படி? ரேடியோதெராப்பி ஆரம்பித்தால் தலை மயிர் உதிர்வதை மறைப்பதெப்படி? தொப்பி போட்டுக் கொள்ளலாமா? அப்புறம் தப்பி போட்ட காரணத்தை எப்படி விளக்குவது?

ஏன் மறைக்க வேண்டும்? எல்லாம் ஒரு அகந்தைதானோ? மற்றவர்கள் பரிதாபப்படும் நிலையில் ஒருவன் ஆகிவிட்டால் மற்றவனுக்குக் குறைந்தவனாக ஆகிவிடுவானோ? பரிதாபப்படுபவன் உயர்ந்தவன்; பரிதாபத்துக்கு உட்பட்டவன் தாழ்ந்தவன். அப்படி ஆகிவிடுவதை மனம் எண்ணி வெட்கிக்கிறதோ? ஏன் வெட்க வேண்டும்? என்னைப்பற்றி மற்றவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பது பற்றி நான் கவலைப்படுவது ஏன்? இது உயிர் வாழ்வு பற்றிய பிரச்சினை அல்லவா? உயிர் பிழைப்பதுதான் பெரிது. இந்தச் சாவை முடிந்த அளவு வெல்லுவதுதான் பெரிது! அந்தப் போராட்டத்தை மற்றவர்கள் பார்த்துப் பரிதாபப்படுகிறார்களா, இச்சுக் கொட்டுகிறார்களா அல்லது உள்ளுக்குள் நையாண்டி செய்கிறார்களா என்பது பற்றி எனக்கேன் கவலை?

ஆனால் எந்த அளவுக்கு? எவ்வளவு காலம் இந்தப் போராட்டம் நடக்க முடியும்? உடல் தளர்ந்து தோல் வற்றி திரைகள் தோன்றி கால்கள் நடக்கும் சக்தி இழந்து சுவாசகோசம் தன்னிச்சையாக மூச்சிழுக்கும் சக்தியில்லாமல் குழாய்கள் பொருத்தி காற்றும் திரவமும் செலுத்தப்பட்டு, தொண்டைக் குழி வற்றி இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லுகின்ற சக்தியும் இல்லாமல் போகும் வரையிலா?

அந்தக் காட்சி அவரைத் துன்பப்படுத்தியது. அந்த நிலை வந்துவிட்டால் அந்தப் படுக்கையில் கிடக்கும் உடல் இந்த சுந்தரமாக இருக்காது. அது ஒரு ஆளுமை இல்லாத, பெயரிட்டிழைக்கத் தகுதியில்லாத காய்ந்த கட்டையாக இருக்கும். அப்படித்தான் ஆகக்கூபாது.

"ஜானகி" என்று மெதுவாகக் கூப்பிட்டார்.

"ஏங்க! மறுபடி வலியா?"

"அதில்ல ஜானகி. தலையில இப்ப வலியில்ல! ஆனா நெஞ்சில ஒரு வலி வந்திருக்கு!"

"நெஞ்சிலியுமா?" நெஞ்சை நீவிவிட்டாள்.

"அதில்ல ஜானகி. நெஞ்சில வலியில்ல. நெனப்பில வலியிருக்கு!"

"அப்படின்னா?"

பொறுத்திருந்து தைரியம் கூட்டிச் சொன்னார்: "நீ சொல்ற வைத்தியமெல்லாம் நான் பண்ணிக்கிறேன் ஜானகி. அது எவ்வளவு வேதனையாயிருந்தாலும் பரவால்ல. ஆனா அதெல்லாம் பலிக்காம நான் படுத்துட்டேன்னு வை. அப்போ என்னோட உயிர செயற்கையா பிடிச்சி வைக்க வேணாம் ஜானகி. பலவிதமான குழாய்களப் பொருத்தி என்ன வதைக்க வேணாம். என்ன அமைதியாச் சாகவிட்டிரு..."

கையைத் தூக்கி வாயைப் பொத்தினாள். "ஏன் இப்படி சாவப் பத்தியே பேசிறிங்க? வேணான்னு சொன்னேன்ல..." என்றாள்.

"நான் சாவுக்காக பயந்து இப்படி உளறல ஜானகி. முழு நினைவோட தைரியத்தோடதான் சொல்றேன். இப்ப சொல்லலேன்னா பின்னால பேசக்கூட முடியாத நெலையில எப்படிச் சொல்றது? அதுக்காகத்தான்"

அவள் பதில் சொல்லவில்லை. மெதுவாக விம்மிக் கொண்டிருந்தாள். பிறகு மௌனம்தான் தொடர்ந்தது.

அந்த இருளில் ஒரு விமானம் எங்கோ உயரே பறக்கும் சத்தம் கேட்டது. அவருடைய நாய் குரைத்தது. மோட்டார் சைக்கிள் ஒன்றின் ஒலி தூரத்தில் தொடங்கி பெரிதாகி அருகில் வந்து குறைந்து தேய்ந்து மறைந்தது. யாரோ காரை ஸ்டார்ட் செய்து ஓட்டிச் சென்றார்கள். மிகப் பக்கத்தில், அடுத்த வீடா..? அவர் விழித்தவாறு இந்த ஓசைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். மணி என்ன இருக்கும்? நாலா? நாலரையா?

கண்கள் செருகியது நினைவிருந்தது. ஆனால் தூக்கம் வந்த நேரம் தெரியவில்லை. தூக்கம் வந்து கௌவிக்கொள்ளுகின்ற வேளை யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்தால் அது தூக்கமில்லை.

*** *** ***



அந்திம காலம்(நாவல்) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:34 am

ஐந்தரை மணிக்கு விழித்துக்கொண்டார். அந்தக் குறைந்த நேரமாவது உடல் துன்பப் படுத்தாமல் தூங்க விட்டதே என்று மகிழ்ச்சியடைந்தார்.

ஜானகி இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்பாமல் மெதுவாகக் கட்டிலை விட்டு இறங்கினார். குளியலறை போய் வந்தார். அறைக் கதவைத் திறந்து வௌியே வந்தார்.

வீட்டுக்கு வௌியே சென்று வெள்ளி முளைக்கின்ற விடிகாலை வேளையை அனுபவிக்க வேண்டும் என நினைத்தார். கதவைத் திறந்து இருளில் வௌியே வந்தார்.

ஜிம்மி படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்து வந்து முன்னங்கால்களை நீட்டிச் சோம்பல் முறித்துவிட்டு அவருடைய காலை முகர்ந்து பார்த்து உரசி நின்றது. அதன் தலையைச் சொறிந்து குலுக்கி விட்டார். அது தலையைச் சிலிர்த்துக் கொண்டு அவர் கையை நக்கியது.

குளிர்ந்த காற்று, பனி தோய்ந்த காலைக்காற்று முகத்திலும் நெஞ்சிலும் வீசியது. மழை இல்லை. ஆனால் காற்றில் குளிர் இருந்தது. இருள் இன்னும் விலகவில்லை. தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வாசலுக்கு முன்னால் இருந்த வேப்ப மரத்தின் இலைகள் நேற்றைய மழையின் ஈரத்தில் சிலுசிலுத்துக் கொண்டிருந்தன. அதன் பக்கத்தில் நிறைமாத கர்ப்பிணியாக குலை தள்ளியிருந்த செவ்விளனி மரத்தில் ஓலைகள் சிலிர்த்துக் கொண்டிருந்தன.

காற்றை ஆழப் பருகினார். உடல் இலேசாக இருந்தது. நலமாக இருந்தது. தனக்கு எல்லாம் நன்றாக ஆகிவிடும் என்று தோன்றியது. நேற்றிரவின் பயங்களும் அழுகையும் ஜானகியுடனான உரையாடலும் தேவையில்லாதவை போன்று தோன்றின. அவை பொய் என்றும் இந்தக் கணந்தான் நிஜம் என்றும் தோன்றியது. இந்தக் கணத்தில் உண்மை இருக்கிறது. இந்தக் காற்றில் ஜீவன் இருக்கிறது. மேலே சில நட்சத்திரங்களுடன் தௌிந்த வானம். கீழே உறுதியான பூமி. அதிலே நேராக நிற்கின்ற என் கால்கள். இந்த உண்மைகள் நெஞ்சுக்கு இதமாக இருந்தன. நம்பிக்கை ஊட்டின. தனக்காகக் காத்திருக்கும் சாவை எண்ணிச் சிரித்தார். என்றோ படித்த பாரதியார் பாடல் நினைவுக்கு வந்தது.

"காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கின்றேன்"

அப்போதுதான் ராதாவின் கார் நேற்று நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் இல்லை என்பதை கவனித்தார். எங்கே போயிற்று? எப்படி... என்ன... திருடன் யாராவது ராத்திரியில்... இல்லையே, ஜிம்மி விட்டிருக்காதே!

உள்ளே வந்தார். ஹால் மேஜையில் அந்தக் கடிதம் கிடந்தது. ஆங்கிலத்தில் "அப்பாவுக்கும், அம்மாவுக்கும்" என்று அந்த உறையில் எழுதப் பட்டிருந்தது. ராதாவின் கையெழுத்து. நாற்காலியில் உட்கார்ந்து உறைக்குள்ளிருந்து கடிதத்தை எடுத்தார். கார் சாவி ஒன்று உறைக்குள் இருந்து விழுந்தது. கண்ணாடியைப் போட்டுக் கொண்டு படித்தார்.

ஒரு பக்கக் கடிதம்தான். ஆனால் படிக்கப் படிக்கக் கையில் பாறையாகக் கனத்தது. படித்து மெதுவாக மடித்து வைத்தார். அது காற்றில் படபடக்காமல் இருக்கக் கார் சாவியை அதன் மேல் பாரமாக வைத்தார்.

இப்படியா செய்து விட்டாள்? என் மகளா? என் வளர்ப்பில் வளர்ந்த மகளா? எங்கு தவறு செய்தேன்? நான் நட்டு நீர்வார்த்து நேராக்கி வளர்த்த மரம் இப்படி இளவயதிலேயே கோணலாகப் போனதெப்படி?

அவர் நெஞ்சு வலித்தது. தலை வலித்தது. முதுகிலும் வலி ஆரம்பித்திருந்தது. நாற்காலியில் சாய்ந்து கண்ணை மூடினார்.

------



அந்திம காலம்(நாவல்) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:35 am


அந்திம காலம் - 4


சுந்தரத்தின் வாழ்க்கை அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நேரானதாகத்தான் இருந்திருக்கிறது.. இளமையில் அவருடைய குறும்புகள் பெற்றோரினால் அடக்கப் பட்டிருந்தது உண்மைதான். ஆனால் இடைநிலைப் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்த நாளிலேயே ஒழுக்கமும் நேர்மையும் அவரிடம் படிந்து விட்டன. அதிகம் பேசாத அடக்கமான புத்திசாலியான பிள்ளை என்ற பெயர் எடுத்திருந்தார். தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் படித்த நீதிகளும் சமயநூல்களும் அவ்வப்போது அவரை நேர்படுத்தக் கைகொடுத்தன.

அவர் தந்தை ஓரளவு கண்டிப்பானவர்தான். ஆனால் அன்பானவர். அவருக்குக் கோபம் விரைந்து வந்தாலும் அதே வகத்தில் தணிந்து விடும். அப்பா ஒரு காலத்தில் வீட்டில் ஒரு பிரம்பு வைத்திருந்தார். அந்தப் பிரம்பை எடுத்து ஆட்டியிருக்கிறாரே தவிர அடித்ததாத சுந்தரத்துக்கு ஞாபகமில்லை. ஆனால் பிரம்பைக் கையில் எடுக்கும் அளவுக்குப் போய்விட்டால் தான் செய்த குற்றத்தை எண்ணி சுந்தரத்தின் மனம் தானே சுருங்கித் தண்டனை விதித்துக் கொள்ளும். ஒன்று ஒரு வேளை சாப்பிடமாட்டார். அல்லது அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டு மணிக் கணக்கில் தனிமையில் இருப்பார்.

அவருடைய தாய் அவரைப் பெற்ற ஐந்தாறு ஆண்டுகளில் அடுத்த பிள்ளைப் பேற்றின் போது பெரியம்மை நோய் கண்டு அந்தப் பிள்ளையையும் இழந்து தானும் இறந்து போனார். தன் தாயைப் பற்றிய நினைவுகள் ஒரு கனவு போலக் கூட அவருக்கு இருக்கவில்லை. தாய் என்பவள் எப்படிப் பட்டவள் என்பது பற்றித் தன் நண்பர்களின் தாயர்களைப் பார்த்துத்தான் அவர் கணித்து வைத்திருந்தார். அந்தத் தாயன்புக்கு அவர் சில முறை ஏங்கியதுண்டு. ஆனால் தந்தையின் அன்பால் அது ஓரளவு சரியாகியது.

தாய் இறந்த பின் அவர் குடும்பத்தில் அவரும் அவருடைய அக்காள் அன்னபூரணியும் அவருடைய தந்தை ஆகிய மூவருடன் கொஞ்சம் மனநோய் பிடித்தவளான அப்பாவின் விதவைச் சகோதரி ஒருத்தியும் இருந்தாள். அந்த அத்தையின் கணவர் இளவயதிலேயே ஆற்றில் மூழ்கி இறந்து விட்டாராம். அந்தச் சம்பவத்தின் போது அவர் அலறியதையும் முழுகியும் அந்த அத்தை அருகில் இருந்து பார்த்தாளாம். அத்தைக்கு நீச்சல் தெரியாது. ஆனாலும் தன் கணவனின் மரணத்துக்குத் தான்தான் பொறுப்பு என்ற குற்ற உணர்ச்சி ஆழப் பதிந்து விட்டது. அதிலிருந்து கிணற்றிலிருந்து கடல் வரை தண்ணீரைக் கண்டால் அவள் நடுநடுங்கிப் போவாள். பெரிய அண்டாவில், தொட்டியில் தண்ணீர் பிடித்து வைத்தாலும் பயம்தான்.

அத்தை அதிகமாகப் பேசி சுந்தரம் பார்த்ததில்லை. திடீர் திடீர் என்று "தண்ணிப்பக்கம் போவியா, போவியா?" என அன்ன பூரணியையும் சுந்தரத்தையும் முதுகில் அடிப்பாள். அது வலிக்காது. விளையாட்டு அடிதான். அதைப் பார்த்து இருவரும் சிரிக்கக் கற்றுக் கொண்டார்கள். ஆனால் அத்தை வீட்டு வேலைகள் அத்தனையையும் பொறுப்பாகச் செய்வாள். நன்றாக ஆக்கிப் போடுவாள். ஆனால் சாப்பாடு எப்படி இருக்கிறது என்று கூடக் கேட்க மாட்டாள். சாப்பிடு என்று சொல்லவும் மாட்டாள். சுந்தரத்திற்கு அவள் ஓர் இயந்திரம் போலவே தென்பட்டாள். சொன்னதையெல்லாம் செய்வாள்.

சாப்பாடு துணி உட்பட எதையும் வாங்கித் தா என்று யாரிடமும் அவள் கேட்டதில்லை. வாங்கிக் கொடுத்தால் பிரித்தும் பார்க்கமாட்டாள். சுந்தரத்தின் இளவயதில் அத்தை என்று ஒரு ஜீவன் வீட்டில் இருப்பதை அவர் கவனித்தது கூட இல்லை. வீட்டில் கதவு இருப்பது போல ஒரு ஜடமாக இருந்தாள். ஆனால் அவர்களைக் காப்பாற்றினாள்.

பிற்காலத்தில் அத்தையைப்பற்ற நினைக்கும் போதெல்லாம் அவள் எல்லாம் அறிந்த ஒரு ஞானியாகத்தான் இருக்க வேண்டும் என்று சுந்தரம் நினைத்துக் கொள்வார். தன்னுடைய இன்ப, துன்ப உணர்ச்சி நரம்புகளை முற்றாக வெட்டி எறிந்து விட்ட ஞானி. கடமையை மட்டும் செய்து பலனை எதிர்பார்க்காத கர்ம ஞானி. அந்தச் சலனமில்லாத உள்ளத்தோடு அவள் உடலும் உரமாக இருந்தது. ஒரு நாளும் அத்தை உடல் நலமில்லாமல் படுக்கையில் சாய்ந்து சுந்தரம் பார்த்தில்லை.

அக்காள் அன்னபூரணி அவரை விட நான்கு வயது மூத்தவள். அப்பா அவர்கள் இருவரையுமே தமிழும் ஆங்கிலமும் படிக்க வைத்தார். அக்கா அந்தக் கால மூன்றாம் பாரம் படித்ததோடு ஆசிரியர் பயிற்சிக்குப் போய்விட்டாள். சுந்தரம் தமிழ்ப் பள்ளி முடித்து ஆங்கில இடைநிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

அக்கா ஆசிரியப் பயிற்சி முடிந்து வேலைக்குப் போன முதலாண்டில் அப்பா ஒருநாள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படுக்கையில் விழுந்தார். ஸ்ட்ரோக் என்றார்கள். ஒரு பக்கம் சுத்தமாக விளங்கவில்லை. வாய் பேச முடியவில்லை. மருத்துவ மனைப் படுக்கையில் இருந்தவாறு இரண்டு பிள்ளைகளையும் ஏக்கமாகப் பார்க்க மட்டும்தான் முடிந்தது. ஒரு கை கொஞ்சம் தூக்க முடிந்தது. அந்த ஒரு கை அசைவிலும் கண்களின் உருட்டலிலும் தலையின் அசைவிலும் அவர் காட்டுகின்ற சமிக்ஞைகளில்தான் அவருக்கு வேண்டியது என்னவென்று ஊகித்துத் தண்ணீர் தந்து, வியர்வை துடைத்து, முதுகையும் நெஞ்சையும் நீவிவிட வேண்டும்.



அந்திம காலம்(நாவல்) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:36 am

அத்தை சமைத்த கஞ்சிச் சாப்பாட்டை பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் அப்பாவுக்கு வாயில் ஊட்டிவிடும் வேலை சுந்தரத்துக்குத்தான். அக்கா தூரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்தாள். பள்ளிக் கூடம் விட்டு வீட்டிற்குப் போய் சாப்பிட்டு விட்டு மாலை நாலு மணிக்குத்தான் ஆஸ்பத்திரிக்கு வர முடியும். அவள் வந்த பிறகுதான் சுந்தரம் வீட்டுக்குப் போவார்.

இப்படி தவணை வைத்துக்கொண்டு, அப்புறம் இரவு சாப்பாடு எடுத்துக் கொண்டு போய் அவரும் அக்காவுமாய் அவருக்கு ஊட்டி அவரைச் சுத்தப்படுத்திவிட்டு வீட்டுக்கு வருவார்கள்.

ஒருநாள் சுந்தரமும் அன்னபூரணியும் எல்லாம் முடிந்து வீட்டுக்குத் திரும்பப் புறப்பட்ட வேளையில் அன்னத்தின் கையை அவர் பிடித்துக் கொண்டார். தலை கண் சமிக்ஞையில் சுந்தரத்தின் கையைக் கொண்டு வரச் சொன்னார். அவர் கையைக் கொண்டு போனதும் இருவரின் கைகளையும் தன் ஒரு கைக்குள் பிடித்துக் கொண்டு அழுத்தினார். அன்னபூரணியை இரக்கமாகப் பார்த்தார். "இவனை உன்னிடம் ஒப்படைக்கிறேன்" என்று அவர் கண்கள் சொல்லியதை அன்னம் புரிந்து கொண்டாள். கொஞ்ச நேரம் அழுது பின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.

மறுநாள் சுந்தரம் கஞ்சி எடுத்துச் சென்றபோது படுக்கை காலியாக இருந்தது. நர்ஸ் சவக் கிடங்கைக் காட்டினாள்.

வீட்டுக்கு ஓடிவந்து அக்காவுக்குக் காத்திருந்து அவள் வந்தவுடன் தூரத்து உறவினர்களுக்குப் போன் செய்து மற்றவர்கள் சொல்லச் சொல்ல ஈமக் கடன்களை செய்து முடித்தார் சுந்தரம்.

அத்தை ஒரு சொட்டுக் கண்ணீரும் விடவில்லை. வீட்டுக்கு வந்த உறவினர்கள் நண்பர்கள் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் யார் யார் என்ன வேலைகள் ஏவினாலும் செய்தாள். அன்றிரவு எல்லாம் ஓய்ந்திருந்த நேரத்தில் அவள் தனக்குள் ஏதோ முனகுவது கேட்டது. சுந்தரம் பக்கத்தில் போய் நின்று கேட்டார். "தண்ணிக்கிட்ட போகாதேன்னா யார் கேக்கிறாங்க? ஏன் போகணும் தண்ணிக்கிட்ட? தண்ணி முளுங்கிடுன்னு தெரியாது? இப்ப முளுங்கிடிச்சே! இன்னும் யார முளுங்கப் போவுதோ? சொன்னா கேப்பாங்களா? தண்ணிலதான் போய் நிப்பாங்க!"

சுந்தரம் பக்கத்தில் போய் "அத்தை" என்று கூப்பிட்டுப் பார்த்தார். அவள் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. "தண்ணி தண்ணி" என்றே முனகிக் கொண்டிருந்தாள்.

அப்பா என்ற ஆதாரம் போய்விட்ட பயமும் துயரமும் மனத்தைக் கவ்விக் கொண்டிருந்தாலும் தன்னைச் சுற்றி இருந்தவர்கள் நல்லவர்களாக இருந்தது சுந்தரத்துக்குப் பெரிய பலமாக இருந்தது. அப்பாவும் அவர்களை அப்படி ஒன்றும் நிராதரவாக விட்டுவிட்டுப் போய்விடவில்லை. அவர்கள் இருந்த வீடு சின்ன வீடாக இருந்தாலும் சொந்த வீடு. பேங்கிலும் ஒரு இரண்டாயிரம் வெள்ளி வைத்திருந்தார். அக்காவுக்குச் சில நகைகள் செய்து போட்டிருந்தார்.

அப்பாவின் நண்பர் ஒருவர் இராம கிருஷ்ணன் என்பவர் மட்டும்தான் அவர்கள் குடும்பத்துக்கு அணுக்கமானவராக இருந்தார். அடிக்கடி வீட்டுக்கு வந்து அப்பாவோடு பேசிக்கொண்டிருப்பார். சுந்தரமும் அன்னமும் அவரை மாமா என்று கூப்பிடப் பழகிக்கொண்டார்கள். அவர் ஒரு வழக்கறிஞரைப் பார்த்துப் பேசி வீட்டை அவர்கள் இரண்டு பேரிலும் எழுதவும் பொருளகத்தில் உள்ள கணக்கை அக்கா பேரில் மாற்றிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். அதே நண்பர் அக்காவுக்கு இன்னொரு பெரிய நன்மையையும் செய்ய முன் வந்தார்.

"அன்னம். இது இப்ப ஆம்பிள இல்லாத வீடா போச்சி. இது நல்லதில்ல. எனக்குத் தெரிஞ்ச தங்கமான பையன் இருக்கான். நான் சொல்லி ஏற்பாடு பண்ணுறேன். சீக்கிரத்தில கல்யாணத்த பண்ணிக்கம்மா" என்றார்.

அக்கா வெட்கத்தோடு மறுத்துவிட்டாள். "தம்பி படிப்பு முடிஞ்சி ஒரு வேலைக்குப் போகட்டும் மாமா. பிறகு பாப்போம்" என்றாள். அன்று தட்டிக் கடூத்தவள்தான். அதற்கப்புறம் கல்யாணத்தையே அக்கா நினைத்துப் பார்க்கவில்லை. அப்படியே உறைந்து போனாள். அவளிடம் வந்து பேசியவர்கள் எல்லாம் அடங்கிப் போனார்கள்.

சுந்தரம் சீனியர் கேம்பிரிட்ஜ் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தன் வகுப்பு நண்பன் வீட்டுக்கு ஒன்றாக இருந்து படிக்கப் போன காலத்தில்தான் அந்த நண்பனின் தங்கை ஜானகியை அங்கு சந்தித்தார். அந்த நண்பன் நாராயணனின் தந்தை போத்தல் கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். அவர் வீட்டில் மூட்டை மூட்டையாக போத்தல்களும் டின்களும் அடுக்கிக் கிடக்கும். சாக்கின் மணமும் சணலில் மணமும் வீட்டின் முகப்பிலிருந்து சமயலறை வரையில் எந்த நாளும் இருக்கும்.

நாராயணனின் அப்பா வீட்டில் இருந்தால் ஒரு நிமிஷம் கூட சட்டையோடு இருக்க மாட்டார். அவருக்கு இந்த ஊரில் ஒரு மனைவி, தமிழ்நாட்டில் ஒரு மனைவி. வருடத்தில் மூன்று நான்கு மாதங்கள் ஊரில்தான் இருப்பார். வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் ஒன்று போத்தல்களையும் டின்களையும் எண்ணிக் கொண்டிருப்பார். அல்லது பணத்தை எண்ணிக்கொண்டிருப்பார்.



அந்திம காலம்(நாவல்) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:36 am

சுந்தரத்தைப் பார்த்தால் உற்சாகமாகப் பேசுவார். அவனை ஒரு பெரிய மனிதனாகவே நடத்துவார். நாராயணன் மேல் அவருக்குச் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. "சுந்தரம். இந்தப் பயபுள்ளைக்கி படிப்பே ஏறமாட்டெங்குது. கணக்கு சுத்தமா வரமாட்டேங்குது. என்னோட மூத்தவ புள்ளங்க, எங்க ஊர்ல, கணக்கில கெட்டின்னா அப்படிக் கெட்டி. ஏன் தெரியுமா? அங்க படிப்ப சொல்லிக்குடுக்கிற விதம் அப்படி. வாத்தியாருங்க தோல உரிச்சிப்பிடுவாங்க.... இங்கதான் வாத்தியாருமாருக பிள்ளைகளுக்குப் பயப்பட்றாங்கள! அப்புறம் புள்ளங்க எப்படி படிக்கும்? சுந்தரம்! நீ எப்படியாவது இவனுக்குக் கணக்குச் சொல்லிக் குடுத்து பரிட்சையில பாஸ் பண்ண வை!" என்பார்.

நாராயணன் சுந்தரத்திடம் கணக்குக் கற்றுக் கொண்டானோ என்னவோ, ஆனால் சுந்தரம் அவன் தங்கை ஜானகியிடம் காதலை நன்றாகக் கற்றுக் கொண்டார். கொஞ்ச காலமே பள்ளிக்கூடம் போய் "பொம்பிள பிள்ளைக்கு படிப்பு எதுக்கு?" என்று தகப்பனால் நிறுத்தப்பட்டு வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட அவளிடம் கட்டுப்பாடான குடும்பங்களில் வளர்க்கப்பட்ட பெண்களுக்கே உரிய வெகுளித்தனம், பாமரத்தன்மை இருந்தது. அதோடு சின்னச் சின்ன கிண்டல்கள், சடையை வீசியும் தாவணியை விரல்களில் சுருட்டியும் கால் விரல்களால் மண்ணைக் கிளறியும் தருகின்ற கவர்ச்சி, ஒளிந்து ஒளிந்து கண்களால் மட்டும் காதல் செய்தி அனுப்பும் சாமர்த்தியம், "நம்ப வீட்டில எல்லாம் சாப்பிடுவாங்களா?" என்று மறைமுகமாகப் பேசி மூக்கு முட்டச் சாப்பாடு போடும் அன்பு, சாப்பாடு போடும் சாக்கில் அம்மாவுக்குத் தெரியாமல், பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அண்ணனுக்குக் கூடத் தெரியாமல் அவன் கையைப் பிடித்துக் கிள்ளுகிற குறும்பு எல்லாமாக அவனுக்குப் பலவிதமான பாடங்கள் நடத்தும் காதல் பள்ளிக் கூடமாக அவள் இருந்தாள்.

நாராயணன் சீனியர் கேம்பிரிட்ஜ் பரிட்சையில் தோற்றுப் போனான். சுந்தரம் நல்ல முறையில் தேர்ச்சி அடைந்தார். ஆசிரியர் வேலைக்கு மனுப் போட்டார். அவருக்கு இங்கிலாந்தில் உள்ள கெர்க்பி நகரில் ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ள இடம் கிடைத்தது.

அக்காவிடம் விடைபெற்ற போது அவள் அவரை அணைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினாள். "பத்திரம் தம்பி! பத்திரம்! வெள்ளக்காரங்க ஊர். ஒழுக்கத்த பாதுகாத்துக்க. சாப்பாடு ஜாக்கரதை! அடிக்கடி லெட்டர் போடு" என்று அனுப்பி வைத்தாள். அத்தையிடம் சொல்லிக்கொண்ட போது "தண்ணிப் பக்கம் போகாத!" என்று மட்டும் சொன்னாள். தண்ணிப் பக்கம் போகாமல் இங்கிலாந்துக்கு எப்படிப் போவது என்று அவன் அத்தையிடம் விவாதம் செய்ய விரும்பவில்லை.

நாராயணனிடம் சொல்லிக் கொள்வது போல அவர்கள் யாரும் வீட்டில் இல்லாத நேரமாகப் போய் ஜானகியிடம் சொன்னார். முந்தானையைக் கண்களில் திணித்துக் கொண்டு "என்ன மறந்துடுவிங்க! யாராச்சும் வெள்ளக்காரியக் கட்டிக்கிட்டு வந்துடுவிங்க!" என்று உண்மையில் அழுதாள்.

"அழுவாத ஜானகி. என்ன பைத்தியமா இருக்கிற? ரெண்டு வருஷத்தில உன்னோட சுந்தரமாவே வந்து உன்னையே கட்டிக்கிறேன்!" என்று அவளை அணைத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்த நேரத்தில் எங்ககேயோ வௌியே போயிருந்த நாராயணன் திடீரென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். "என்ன நடக்குது இங்கே?" என்று அவன் போட்ட சத்தத்தில் ஜானகியும் சுந்தரமும் திடுக்கிட்டு நின்றனர்.

"சுந்தரம் இது நல்லா இருக்கா ஒனக்கு? எங்க அப்பாரு பாத்திருந்தார்னா என்ன நடந்திருக்கும் இந்நேரம்? உங்க ரெண்டு பேரையும் வெட்டிப் போட்டிருப்பாரு!" என்று கர்ஜித்தான்.

அந்த நேரத்தில் சுந்தரத்தின் மனத்தில் குற்ற உணர்வு அதிகமாக இருந்தது. செய்யக் கூடாத தவற்றைச் செய்து விட்டோம், தனக்கும் குடும்பத்திற்கும் மாறாத அவமானத்தை வாங்கித் தந்துவிட்டோம் என்ற உணர்ச்சியே ஓங்கியிருந்தது. நாராயணன் முன்னால் தலை குனிந்து நின்றார். வீட்டுக்குப் போய் அறைக்குள் தன்னைப் பூட்டிக்கொண்டு நாள் கணக்கில் வௌியே வராமல் தனக்குத் தானே தண்டனை விதித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

நாராயணன் அவரைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வௌியே போனான். ஒதுப்புறமான இடத்தில் வைத்து கேட்டான்.

"உங்களுக்குள்ள தகாத மொறையில ஏதாச்சிம் நடந்திச்சா?"

இல்லை என தலையாட்டினார்.

"தோ பாரு சுந்தரம், இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும். நீ படிக்க வௌிநாட்டுக்குப் போற சந்தர்ப்பத்தில நமக்குள்ள அனாவசியமா சண்டை வேணாம். இதோட விட்டுடு. அப்பா ஊர்ல ஜானகிக்கு மாப்பிள்ள பாத்து வச்சிருக்காரு. அதனால அவள மறந்திட்டு வேலயப் பாரு. சொல்லிட்டேன் ஆமாம். எங்கப்பா முரட்டு ஆசாமி. அவருக்கு இந்த விஷயம் போனா கத்திய தூக்கிக்குவாரு, பாத்துக்க!"

அவன் உள்ளே சென்று சுந்தரத்தின் முகத்தில் அறைவது போலக் கதவை தடால் என்று சாத்தினான்.

வீட்டுக்குத் திரும்பும்போது மனம் அவமானத்திலும் குற்ற உணர்ச்சியிலும் கூனிக் குறுகியிருந்தாலும் வீட்டுக்கு வந்த பின் கோபத்தில் சிலிர்த்து எழுந்தது. அவரை அது வரை யாரும் இப்படி இக்கட்டான சந்தர்ப்பத்தில் பிடித்துக் கொண்டு அவமானப் படுத்தியதில்லை. என்ன செய்துவிட்டேன் என்று என் முகத்தில் அறைந்தால் போல் கதவைச் சாத்தினான் நாராயணன்? என்ன குற்றத்துக்காக அவன் அப்பன் கத்தியைத் தூக்க வேண்டும்? நான் அவர்களுக்குத் தகுதியில்லாத மாப்பிள்ளையா? எந்த வகையில் குறைந்து விட்டேன்? ஒரு இளம் பெண்ணிடம் அன்பு செலுத்துவது - அது காதலேயானாலும் சரிதான் - எந்த விதத்தில் குற்றம்? எந்த நீதி நூலிலே இது குற்றம் என்று சொல்லியிுக்கிறது?



அந்திம காலம்(நாவல்) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:36 am

மனத்தைத் தௌிவு படுத்திக் கொண்டார். தன்னை இப்படி அவமானப் படுத்தியவர்களிடம் புறமுதுகிட்டு ஓடிவிடக் கூடாது என்ற வைராக்கியம் மனத்தில் எழுந்தது. ஆனால் இருந்து போராட சந்தர்ப்பங்கள் சரியாக இல்லை. அக்காவின் உதவி பெற்றுத்தான் இதை நடத்தியாக வேண்டும் என்று முடிவு செய்தார்.

மறுநாள் பயணத்திற்குப் பெட்டிகளையெல்லாம் அடுக்கிக் கொண்டிருந்த போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அக்காவிடம் சொன்னார்:

"அக்கா உங்கிட்ட ஒரு முக்கிய விஷயம் சொல்லணும்!"

அன்னம் அவர் முகத்தை ஆவலுடன் பார்த்தாள்.

"இந்த நாராயணனுக்கு ஒரு தங்கச்சி இருக்கு தெரியுமா அக்கா, ஜானகின்னு பேரு...." நடந்ததையெல்லாம் தயங்கித் தயங்கிச் சொன்னார்.

"அக்கா எனக்கு இப்ப கல்யாணத்துக்கு அவசரமில்ல. ஆனா அவளக் கட்டிக்கிறேன்னு வாக்கு குடுத்திட்டேன். இப்ப அவள என்னமோ ஊரு மாப்பிள்ளைக்கு கட்டி வைக்கப் போறாங்களாம். அதுக்குள்ள..."

அன்னம் பெருச்சு விட்டாள். "தம்பி! நம்ப வீட்ல பெரியவங்க இல்ல. நான் அந்த இராம கிருஷ்ணன் மாமாவ வரச்சொல்லி அவங்ககிட்ட பேசிப் பாக்கிறேன். நீ இப்ப அதப் பத்தி யோசிச்சி மனசக் குழப்பிக்காம போயிட்டு வா!" என்று அவனை அனுப்பி வைத்தாள்.

கெர்க்பியில் அவர் போய்ச் சேர்ந்ததிலிருந்து அக்காவிடமிருந்து கடிதங்களில் பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருந்தன.

முதல் கடிதத்தில்: "நானும் இராம கிருஷ்ணன் மாமாவும் போய்ப் பேசினோம். எடுத்தெறிந்து பேசி விரட்டாத குறையாக அனுப்பிவிட்டார்கள். ஜானகியின் அப்பாவை விட உன் நண்பன் நாராயணன்தான் மிகவும் குதிக்கிறான். கொஞ்சம் நாள் கோபம் ஆறவிட்டு மீண்டும் போய் பேசிப் பார்க்கிறோம்!"

அடுத்த கடிதத்தில்: "ஜானகி எப்படியோ என்னைத் தேடி ரகசியமாக வீட்டுக்கு வந்துவிட்டாள். வேற மாப்பிள்ளைக்குக் கட்டி வைத்தால் செத்துப் போவேன் என்று சொல்லிப் போயிருக்கிறாள்!"

"போனவாரம் மீண்டும் போய்ப் பேசினோம். பழைய கதைதான். ஜானகியும் உன்னை விரும்புகிறாள் என்று எடுத்துச் சொன்னேன். அதன் பலனாக அவளுக்குத்தான் உதை விழுந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை!"

"தம்பி, நேற்று ஜானகி தன் துணிகளைத் தூக்கி அள்ளிக்கொண்டு நம் வீட்டுக்கு வந்து விட்டாள். அவள் அப்பா ஊரில் மாப்பிள்ளை ஏற்பாடு செய்து விட்டாராம். இவள் மறுத்ததும் அடித்திருக்கிறார். ஆகவே ஓடிவந்து விட்டாள். நான் போலிசில் சென்று இந்த விஷயத்தைப் புகார் செய்திருக்கிறேன்."

"ஜானகியின் அம்மாவும் அண்ணனும் வந்து ஜானகியை மீண்டும் அழைத்துக் கொண்டு போனார்கள். அவள் அழுதுகொண்டே போயிருக்கிறாள்"

"தம்பி! நேற்று ஜானகியோடு அவள் அம்மாவும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். ஜானகியின் அப்பா ஊருக்குப் போயிருக்கிறார். தான் கல்யாண ஏற்பாடு செய்யப் போவதாகவும் அதன்பின் ஜானகியை ஊருக்கு அழைத்து வரும்படியும் அவள் அம்மாவுக்கு உத்தரவு போட்டுப் போயிருக்கிறார். அவள் அம்மாவுக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை. அவருக்கு உன்னைத்தான் பிடித்திருக்கிறது. நாராயணன் எப்படியானாலும் ஜானகியை ஊருக்கு அனுப்பியே தீருவேன் என என்னிடம் சவால் விட்டுப் போயிருக்கிறான். அவனுடைய அப்பனுடைய முரட்டுப் புத்திதான் அவனுக்கு இருக்கிறது. நடப்பது நடக்கட்டும். ஜானகியை ஊருக்கு அனுப்ப வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன்."

அதன் பின்னர் அக்கா ஒரு தந்தி அனுப்பியிருந்தாள். "ஜானகியின் தந்தை இந்தியாவில் மாரடைப்பால் இறந்து போனார். கல்யாணம் ரத்தாகிவிட்டது."

ஜானகியின் தந்தை அவர்களுக்கென்று ஒரு காசும் விட்டுப் போகவில்லை. இருந்த வீடும் வாடகை வீடு. நாராயணனுக்கு அவர் வியாபாரத்தில் கொஞ்சமும் நாட்டமில்லை. அவன் ஏதோ சில்லறை வேலைகள் பார்த்து வீட்டை மறந்து திரிய ஆரம்பித்துவிட்டான். இருந்த சரக்குகளை வந்த விலைக்கு விற்று அவர்கள் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த போது சுந்தரம் பயிற்சி முடிந்து திரும்பினார்.

சுந்தரத்துக்குப் பினாங்கிலேயே ஒரு பள்ளியில் வேலை கொடுத்திருந்தார்கள். வேலையை ஏற்றுக்கொண்டு ஜானகியைப் போய்த் தைரியமாகப் பார்த்து வந்தார். நாராயணன் உடைந்து போயிருந்தான். அவர்கள் குடும்பம் பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது.

அன்னம் இராம கிருஷ்ணன் மாமாவையும் அழைத்துக் கொண்டு முறையாகப் போய் பெண் கேட்டு நாள் குறித்துத் திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தாள். இராம கிருஷ்ணன் மாமா தன் மனைவியோடு வந்திருந்து எல்லா உதவிகளையும் செய்தார். தங்களுக்கு உறவுகள் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாமல் இருந்தும், இராம கிருஷ்ணன் மாமா போன்றவர்கள் நட்பையே உறவாக ஆக்கிக் கொண்டு இப்படி உதவி செய்வதை எண்ணிப் பார்த்துச் சுந்தரம் மகிழ்ந்தார். நல்லவர்கள் பிற நல்லவர்களைக் கவருவது இயற்கைதான் போலும். அப்பா நல்லவராக இருந்துதான் இராம கிருஷ்ணன் போன்று ஆதாயம் கருதாத அன்பு மனம் கொண்டவர்களை நண்பர்களாகப் பெற்றிருக்கின்றார். தானும் அக்காவும் நல்லவர்களாக இருப்பதினால்தான் அந்த நல்ல நண்பர்களைத் தங்க வைத்துக் கொண்டிருக்க முடிகிறது. தான் தொடர்ந்து நல்லவராக இருந்த வர இவை நல்ல காரணங்கள் என்று சுந்தரம் முடிவு செய்து கொண்டார்.

ஜானகியைப் பெண் பார்த்து வந்த அன்றைக்கே சுந்தரம் தன் மனத்தில் உறுத்திக் கொண்டிருந்த அந்த விஷயத்தை மாமாவிடம் சொல்லி அன்றிரவே அந்த விஷயம் குடும்பச் சபையில் அலசப் பட்டது.



அந்திம காலம்(நாவல்) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 8:36 am

மாமாதான் ஆரம்பித்து வைத்தார்.

"ஏன் அன்னம். தம்பிக்குத்தான் எல்லாம் பேசி முடிச்சாச்சி. ரெண்டு பேரும் வேலையும் செய்றிங்க. இப்ப உன் கல்யாணத்தப் பத்தி யோசிக்க வேணாமா?" என்று கேட்டார்.

அன்னம் வெட்கப்பட்டாள். தலை குனிந்து பேசினாள். "இப்ப ஏன் மாமா இந்தப் பேச்சு? தம்பி கல்யாண வேல தலைக்கு மேல கிடக்குது" என்று தட்டிக் கடூத்தாள்.

"வேல என்னம்மா பெரிய வேல! நான் இதுவரைக்கும் நூறு கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன். இது பெரிய வேல இல்ல. ஆனா உன் முடிவச் சொல்லு. அந்தப் பையன், நான் ரெண்டு வருஷம் முன்ன சொன்னேனே அதே பையன், இன்னும் கல்யாணம் ஆகாமத்தான் இருக்கான். ஒன்னப் பாத்திருக்கான். அவனுக்குப் புடிச்சிருக்கு. தங்கமான புள்ள. சரின்னு சொல்லு. தம்பி கல்யாணத்தோட ஒரே பந்தல்ல முடிச்சிருவோம்."

மௌனமாக இருந்தாள். சுந்தரம் பேசினார். "அக்கா! நீ இப்படி இருக்கும்போது நான் மட்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கே அது அவ்வளவு மகிழ்ச்சியா இல்லக்கா. மாமா சொல்றது போல நீயும் கல்யாணம் பண்ணிக்கிட்டின்னா அதுவே ரெட்ட மகிழ்ச்சியா இருக்கும்! சரின்னு சொல்லுக்கா..." என்றாள்.

அன்னம் யோசித்தாள். "மாமா. கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு எனக்கு ஒண்ணும் வைராக்கியம் இல்ல. ஆனா இந்த மாதிரி திடீர்னு பண்ணிக்க வேணாம் மாமா. தம்பிக்கு தாய் போல நான் முன்ன நின்னு செஞ்சி வைக்கணும்னு நெனச்சிக்கிட்டு இருக்கிற போது நானும் மாலை போட்டுக்கிட்டு மணவறையில உக்காந்துட்டா எனக்கே திருப்தியா இருக்காது! இந்தக் காரியம் நல்ல படியா முடியட்டும். அப்புறம் எப்ப கல்யாணம் தேவைன்னு தோணுதோ அப்ப நானே மாமாகிட்டயும், தம்பி கிட்டயும் சொல்றேன்!"

அவர்கள் இருவரையும் முறியடித்துவிட்டு வீராங்கனையாக வேறு வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள் அன்னம்.

கல்யாணம் அடக்கமாக ஆனால் எல்லார் மனத்திலும் மகிழ்ச்சி பொங்க நடந்தது. ஜானகி மகிழ்ச்சியிலும் காதலிலும் பூரித்திருந்தாள். ஆனால் சுந்தரத்திற்கு எல்லவற்றையும் விட ஒரு வெற்றியுணர்ச்சியே அதிகம் இருந்தது. காரணங்கள் இல்லாமல் தன்னை அவமானப்படுத்திய நாராயணனையும் அவன் தந்தையையும் ஒரு மானப் போரில் வெற்றி கொண்ட மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. ஆனால் தான் களத்தில் இல்லாமல் இங்கிலாந்தில் உட்கார்ந்து கொண்டு நடத்திய அந்தப் போரில் தேரையும் ஓட்டி வில் வளைத்து அம்பும் விட்டவளாய் இருந்த அக்காவின் மீது அவருக்கு நன்றி உணர்ச்சியும் பக்தியும் கூட வளர்ந்திருந்தன.

திருமணத்தின் போது வீடு கலகலவென்றிருந்தது. பல காலம் மங்கல நிகழ்ச்சிகள் நடை பெற்றிராத அந்த வீட்டில் எல்லாரும் ஓர் ஈடுபாட்டுடன் ஓடியாடினார்கள். திருமணத்திற்கென்று சேமித்து வைத்திருந்தவளைப் போல அக்கா எந்தச் செலவென்றாலும் ஏன் என்று கேட்காமல் தன் கைப்பையிலிருந்து காசு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

கல்யாணத்தின் போது பின்னாலிருந்து மட்டும் வேலை செய்து கொண்டு கூட்டத்திலிருந்து ஒளிந்து கொண்டிருந்த அத்தையைத் தாலி கட்டும் நேரத்தில் முன்னால் இழுத்துக்கொண்டு வந்தாள் அக்கா. தம்பதிகள் அக்காவின் காலில் விழுந்து எழுந்தவுடன் அத்தையின் காலிலும் விழப் பண்ணினாள். அத்தை கால்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். ஆனால் அவர்கள் தலையைத் தொட்டாள். அவள் எந்த நேரத்திலும் "தண்ணிக்கிட்டப் போகாதே!" என்று சொல்லப் போகிறாள் என்று சுந்தரம் எதிர்பார்த்த நேரத்தில் படபடப்போடு உள்ளே ஓடிவிட்டாள்.

அத்தை அவர்கள் முதலிரவு அறையை அலங்கரித்து வைத்திருந்த விதம் அதிசயமானதாக இருந்தது. மல்லிகைப் பூவும் ரோஜா இதழுமாக கம கமவென்று கமழ்ந்திருந்தது. வர்ணத் தாள்கள் கட்டிலின் மேல் சரஞ்சரமாகப் பின்னிக் கட்டப் பட்டிருந்தன.

தனக்குள் சுருட்டிக்கொண்டு முடங்கிப்போய் கிடக்கும் அத்தைக்கு இத்தனை கலையுணர்ச்சி இருக்க முடியுமா? அவள் மனம் வளமாகத்தான் இருக்கிறது. கற்பனைத் திறனுடன் இருக்கிறது. ஆனால் வௌியில் முடங்கிவிட்டதைப் போன்ற தோற்றத்தை மட்டும் காட்டிக் கொள்கிறாளோ? அப்படிக் காட்டிக்கொண்டால்தான் உலகம் தன்னைச் சும்மா விடும் என்றும் அந்தத் தனிமையில் பாதுகாப்பு இருக்கும் என்றும் எண்ணுகிறாளோ!

அன்றிரவு அவருக்குப் படபடப்பு மிக்க இரவாக இருந்தது. அது பெண்ணின்பம் பருகுகின்ற இரவு. இதற்கு முன் அவருக்கு அந்த அனுபவம் இருந்ததில்லை. புத்தகத்திலும் படத்திலும் பார்த்ததுதான். அவரின் நண்பர்கள் அவரைப் பலமுறை அந்த இன்பத்தை வாடகைக்குப் பருக அழைத்திருக்கிறார்கள். ஆனால் அவருக்கு ஆசையிருந்தாலும் தைரியம் இருந்ததில்லை. இதனால் அவர் கேலிக்குள்ளாகியிருக்கிறார். நண்பர்கள் அடுத்த நாளில் அனுபவங்களை மிகைப்படுத்தியும் சுவைப் படுத்தியும் சொல்லி அவர் மனத்தை அலைக்கடூத்து இரவுகளில் படுக்கையில் புரளச் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் பின்னர் ரகசியமாக டாக்டரை நாடி ஊசி போட்டுக்கொண்டு வெட்கத்துடன் தலை குனிந்திருக்கும் நிலை வந்த போது அவர் தனக்குள் மகிழ்ந்திருக்கிறார்.

அந்த ஆபத்துக்களை யெல்லாம் தாண்டி இன்று அந்த அனுபவம் சட்டபூர்வமாக பெரியோர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு தான் விரும்பிய பெண்ணுடன் நிகழ்வதாக இருந்தும் மனத்தில் ஒரு பயமும் குற்ற உணர்ச்சியும் கூட இருந்தது. பால் உறவு என்பதே ஏதோ ஒரு குற்றம் போல மனத்தில் பதிந்திருந்து. ஏன் என்று விளங்கவில்லை. எல்லோருக்கும் இயற்கை விதித்து வைத்திருக்கிறது என்று தெரிந்தும் சமுதாயம் அது செய்யத் தகாத ஒன்று போலவே மறைத்தும் ஒதுக்கியும் வைத்திருப்பதுதான் காரணமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

ஜானகி அறைக்குள் நுழைந்த போது கண்ணைப் பறிக்கும் பச்சைப் பட்டுப் புடவை கட்டி மோகமூட்டும் தேவதையாக இருந்தாள். இதற்கு முன் என்றுமில்லாத வெட்கம் அவளிடம் வந்து குடி கொண்டிருந்தது. படுக்கையின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டுத் தலையைக் குனிந்து கொண்டு அவர் தொடு முன் தோளைக் குறுக்கிக் கொண்டு... அவளுக்கும் குற்ற உணர்ச்சிதான் போலும். சமுதாயம் இந்த உறவை சடங்கு பூர்வமாக அனுமதித்திருக்கிறது என்ற உண்மை இன்னும் மனத்தில் உறுதியாக உட்காரவில்லை.



அந்திம காலம்(நாவல்) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக