புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10 
68 Posts - 53%
heezulia
குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10 
3 Posts - 2%
Guna.D
குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10 
1 Post - 1%
Shivanya
குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10 
15 Posts - 3%
prajai
குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10 
9 Posts - 2%
jairam
குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10 
4 Posts - 1%
Jenila
குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10 
4 Posts - 1%
Rutu
குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருதி ஆட்டம்(25-27) - வேல ராமமூர்த்தி


   
   
kumarv
kumarv
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 17/04/2017

Postkumarv Wed May 17, 2017 12:03 pm

வேல ராமமூர்த்தி தமிழ் ஹிந்து நாளிதழில் தொடராக எழுதிய " குருதி ஆட்டம் " நாவல் 27 வார தொடரில்( 25 - 27 )தொடர்

25
வைக்கோல் பிரி!

இளவட்டங்களும் குமரிகளைப் போல் உறக்கமில்லாமல் அலைந் தார்கள். இரவு முழுக்க குமரி களின் தூக்கத்தைக் கெடுத்தது… ‘கோலப் பொடி’. இளவட்டங்களுக்கு ‘வைக்கோல் பிரி’.
பெருங்குடி இருளப்பசாமிக்கு வகை வகையான நேர்த்திக்கடன்கள் உண்டு.
சாதாரண தலைவலி, காய்ச்சலுக்கு ‘ஒத்தப் பொங்கல்’. கனத்த நோவுக்கு ‘ரெட்டைப் பொங்கல்’. வெட்டுக் குத்துக் கேஸு விடுதலைக்கு ‘ஒத்தக் கிடாய்’. கொலைக் கேஸு விடுதலைக்கு ‘ரெட் டைக் கிடாய்’.
இது போக, செதறு தேங்காய் நேர்த்திக் கடன் ஒரு வகை. அவனவன் வேண்டுதலுக்கு ஏத்த மாதிரி, ஒரு மூடை தேங்காய், ரெண்டு மூடை தேங் காய் என செதறு தேங்காய்த் தூள் பறக்கும்.
இளவட்டங்கள், ஆலமரத்தைச் சுத்தி நின்னு, வசம் பார்த்து அடிக்கிற அடியில் தேங்காய்த் தண்ணீர் மரத்தையே குளிப் பாட்டும். செதறுகாயை உடைக்கிறது ஒரு சந்தோஷம்; சிதறுகிற காய்களைப் பாய்ந்து ஓடி பொறுக்குறது அதை விட சந்தோஷம்.
மரத்திலே அடிபட்டும் உடைபடாமல் பறக்கிற முழுத் தேங்காயைத் தாவிப் பிடிக்கிறவன், வேடிக்கை பார்க்கும் குமரிப் பொண்ணுக கண்ணுலே இறங்கு வான். திருவிழாவோடு காதல் முளைக்கும். அதுக்கு பேரு ‘செதறுகாய்க் காதல்’.
‘லோட்டா’ செதறுகாய் பொறுக் கிறதிலே கில்லாடி. திருவிழா திரு விழாவுக்கு ரெண்டு மூட்டை காய் சேர்த்துருவான். மரத்தில் அடிபட்டு பறக்கிற காயைத் தாவிப் பிடிப்பான். உடைபடாமல் உருண்டு ஓடுகிற காயை விரட்டிப் பிடிப்பான்.
தெறிச்சு வர்ற காயி, ‘லோட்டா’வின் மண்டையைப் பிளந்ததெல்லாம்கூட உண்டு. செதறுகாய் பொறுக்கிறதிலே எம்புட்டு சாகசம் காட்டியும் ‘லோட் டா’வுக்கு எந்தக் குமரியின் காதலும் லபிக்கலே. அவன் ராசி அப்பிடி. அதுக்காக அவன் கவலைப்பட்டதும் இல்லை. இதெல்லாம், பதினேழு வருஷத்துக்கு முன்னாடி, ‘லோட்டா’ விடலையா இருந்தபோது.
பதினேழு வருஷம் கழிச்சு நடக்கிற இந்த திருவிழாவுக்கு, அரண்மனைக்கு வேண்டப்பட்ட பெரிய ஆளாயிட்டான் ‘லோட்டா’. தேங்காய் பொறுக்க முடி யாது. ஆனாலும் கை ஊறி திரியிறான்.
மற்ற எல்லா ஊர் சாமிகளுக்கும் பொங்கல், கிடாய் வெட்டு, செதறு தேங்காய் நேர்த்திக்கடன் எல்லாம் உண்டுதான். ஆனால், எந்தச் சாமிகளுக்கும் இல்லாத ஒரு நேர்த்திக் கடன் இந்த இருளப்பசாமிக்கு உண்டு. அது ‘வைக்கோல் பிரி’நேர்த்திக்கடன்.
இருளப்பசாமிக்கு திருவிழா சாட்டி, பந்தல் கால் ஊன்றி, காப்புக் கட்டியதில் இருந்து ஊர் இளவட்டங்கள், பத்து நாட்கள் கடுமையான விரதம் இருப் பார்கள்.
பத்தாம் நாள், உச்சத் திருவிழா. இறங்குபொழுதில், நாலு ஜதை கொட்டு மேளத்தோடு நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி தூக்கி வருவார்கள். முன்னே, வைக்கோல் பிரி ஆட்டம் போகும்.
விரதம் காத்த இளவட்டங்கள், கண் பார்க்கக் கூட சிறு இடைவெளி இல்லாமல், உள்ளங்கால் முதல் உச்சந் தலை வரை வைக்கோல் பிரி சுற்றி, கையில் வாளோடு ஆடிப் போவார்கள்.
வாளுக்கு வாள், ஆக்ரோஷமான வெட்டு விழும். வெட்டுகிறவனுக்கும் கண் தெரியாது. வெட்டு வாங்கு கிறவனுக்கும் கண் தெரியாது. எந்தப் பிரிக்குள் எவன் இருக்கிறான் என தெரியாமலே, ஒருவரை ஒருவர் வெட்டுவார்கள். விரதக் குறைபாடு உடையவன் வெட்டுப்படுவான்.
‘வைக்கோல் பிரி’ ஆட்டத்திலே வெட்டுப்பட்டு செத்தால், கொலைக் கேஸு கிடையாது. ‘சாமி காரியத் திலே குளிர்ந்துட்டான்’ என ஊர் கூடி அடக்கம் பண்ணும். திருவிழாச் சாக்கில் முன் பகையைத் தீர்த்துக் கொள்ள நினைப்பவனை ‘சாமி பார்த்துக்கொள்ளும்’ என்பார்கள். போன திருவிழாவிலே நல்லாண்டியின் தம்பி வெட்டுப்பட்டு செத்தான். வெட்டுனவன் பிரி ஆட்டக் கூட்டத்துக்குள்ளே கலந்துட் டான். இன்னாருன்னு தெரியலே.
கையில் எடுத்து ஆடி வரும் வாள், அந்தந்த வீட்டுக்கு ‘சாமி வாள்’. சாமி வாளை வேறு எந்தக் காரியத்துக்கும் கையில் எடுக்கக் கூடாது.
நேர்த்திக்கடன் வைத்திருக்கும் இளவட்டங்கள், விடிய விடிய தூக்கமில்லாமல், களத்து மேட்டில் பிரியைத் திரித்துக் கொண்டிருந்தார்கள். உடம்பெல்லாம் ‘சுணை’ புடுங்குது. அரிப்பான அரிப்பு! ஆனாலும் எவனும் சொரியலே. இப்பவே சொரிஞ்சா… நாளை என்னாகிறது? உடம்பெல்லாம் வைக்கோல் பிரி சுத்தி போகணுமே. ஆடுவானா..? சொரிவானா? சுணைக்கு உடம்பை பழக்கணுமில்லே?
குடிசையின் கிழக்கு ஓரம் பாய் விரிப்பில் செவ்வந்தி படுத்திருந்தாள். அரியநாச்சி அமர்ந்து விழித்துக் கொண்டிருந்தாள். புதிதாக வேயப்பட்ட குடிசையில் தனித்துப் படுத்திருந்த துரைசிங்கம், கண் மூடி உறங்காமலிருந்தான்.
கோயில் பூஜைக்கு தவசியாண்டி புறப்பட்டுப் போகும்முன் புதிய குடிசையில் கூடி, நாளைய காரியத்தை மூவரும் திட்டமிட்டார்கள். தாம் பேசிக் கொள்வது செவ்வந்திக்குத் தெரிய வேண்டாம் என அரியநாச்சி சொல்லி இருந்தாள். தவசியாண்டி போன பின், துரைசிங்கத்திடம் அரியநாச்சி மலாய் மொழியில்தான் பேசினாள். எந்தப் பேச்சிலும் ஒட்டாத செவ்வந்தி, எப்போதும் போல் வனஜீவனாக தன் போக்கில் இருந்தாள்.
ஊருக்குள் நுழைந்ததும் ஒரு காரியம் முடியப் போகிற சந்தோஷத்தில் அரியநாச்சி இருந்தாலும் நெஞ்சோரம் ஏதோ ஒரு குத்தல் இருந்தது. ஊராரில் இன்னாரென எவரையும் அறியாதவன் துரைசிங்கம். பெருந் திருவிழா கூட்டத் துக்குள் நடக்கப் போகிற காரியம்.
முதல் குறி பிசகினால், எல்லாம் தலை கீழாகும். கோயிலுக்குப் பூசாரியாக தவசியாண்டியே போயிருப்பதுதான் தெம்பு தந்தது.
விடிய வெகு நேரமில்லை. ஆனாலும் தூக்கம் வரவில்லை. தோல் உரித்த சோத்துக் கற்றாலைப் பதத்தில் படுத்திருக்கும் செவ்வந்தியின் மேனி நெடுக கண் ஓட்டினாள். ஆப்ப நாட்டில் இப்படி ஒரு அழகா!
விடிய விடிய, பெருநாழி முத லாளியை உடையப்பன் தூங்கவிடலே.
விடிந்தால் திருவிழா. ஊர் சனமெல்லாம் பத்து நாளாக, கடு விரதம் காக்குது. உடையப்பன் அரண் மனையிலே எல்லாம் நேர்மாறு. அதிலும் பெருநாழி முதலாளியை விருந்தாளி யாய் கண்டதும் பாட்டில், படுக்கை எல்லாம் தலைகீழாய் புரளுது. ‘கூழு’ ஒருத்தன்தான் கூடவே இருந்து ரெண்டு பேரையும் சமாளிக்கிறான். உடையப்பன் உளறல் தாங்கலே.
“முதலாளி… நம்ம காலை சுத்துன பாம்பை, நாளை அடிச்சுக் கொல் றோம். அந்த சந்தோஷத்தை கொண் டாடிட்டுத்தான் நீங்க ஊருக்குப் போறீங்க...”
உடையப்பன் தூக்கி வீசிய பாட்டில் சுவரில் மோதிச் சிதறியது.






26
கூடி வந்த இரை!

ஊர் சனம் கிழக்குப் பொழுதை விடிய விடவில்லை. இருளப்பசாமி கோயிலை நோக்கி, சன்னம் சன்னமாகக் கிளம்பி போய்க் கொண்டிருந்தது.
போகிற வழியில் முளைக்கொட்டுத் திண்ணை. நாலு கல்தூணில் நிற்கும் ஓட்டுக் கொட்டகை. மையத்தில் மூன்று அடுக்குக் கும்பம். கும்பத்தைச் சுற்றி, ஊர் குமரிகள் வளர்த்த முளைப்பாரிகள். நாராயணத் தேவர் வீட்டு சனிமூலை இருட்டில் வளர்ந்த இந்த வருஷ முளைப்பாரி, வஞ்சகம் இல்லாத வளர்த்தி. குமரிகளின் இடுப்புக்கு மேல் உயர வளர்த்தி. தலையில் தூக்கி வைத்து ஊர் சுற்றி வருபவளின் கழுத்து வலித்துப் போகும்.
முளைக்கொட்டுத் திண்ணையைக் கடந்து போகும் சனம், கும்பத்து முளைப் பாரிகளைக் கண்டதும் கைகூப்பி வணங்கி, “ஊரைப் பிடிச்ச பீடை விலகணும் தாயீ…” என கன்னத்தில் போட்டுக்கொண்டு கண்மாய் பாதையில் நடந்தது.
கரை இறக்கத்தில் கோயில். 17 வருஷத்துக்குப் பிந்தி பிறந்த விடலை களும் சிறுவர்களும் இருளப்பசாமி கோயிலை இத்தனை அலங்காரத்தோடு பார்த்தது இல்லை.
புது டவுசர், சட்டை போட்டிருக்கும் உற்சாகத்தில் சிறுவர்கள், வீட்டுக்கும் கோயிலுக்கும் கால் ஓயாமல் ஓடித் திரிந்தார்கள்.
வெட்டுக் கிடாய்களின் கொம்புகளில் பூ சுற்றி, இளவட்டங்கள் கோயிலுக்கு அழைத்துக் கொண்டுபோனார்கள். பாலாட்டம் புல்லையும் பச்சை செடி கொடிகளையும் தின்று கொழுப்பேறி வளர்ந்த கிடாய்கள், வெட்டுப்படப் போவது தெரியாமல் போருக்குப் போகிற தோரணையில், கொம்புத் தலை தூக்கி யுத்தக் கள நடை போட்டுப் போயின.
பட்டுப் பாவாடை தாவணியில் மினுங்கும் குமரிகளை முன்னே நடக்கவிட்டுக் கண்ணழகு பார்த்தபடி, பெரிய பொம்பளைகள் நடந்தார்கள்.
நல்லாண்டி வீட்டுக்கு வெள்ளை யம்மா கிழவி வந்திருக்கும் செய்தி, நேற்று இரவே ஊருக்குள் கசிந்து இருந்தது. அரண்மனைக்கு மட்டும் சேதி எட்டலே. பெருங்குடி பெருசுகளின் நினைவில் மட்டும் கிழவி இருந்தாள். இளந்தாரிகளுக்குக் கிழவியை இன்னாருன்னே தெரியலே.
ஊருக்கு கடைசி வீடாய் நல்லாண்டி குடும்பம் கோயிலுக்குக் கிளம்பியது. பொங்கல், பூஜை சாமான்களை தலைச் சுமையாகச் சுமந்து போகிற சாக்கில், வெள்ளையம்மா கிழவியை ஊடே விட்டு, மறைத்துக்கொண்டு நடந்து போனார்கள்.
கோயில் வாசலில் நின்ற கணக்குப் பிள்ளை ரத்னாபிஷேகம், வெள்ளை யம்மா கிழவியை எதிர்கொண்டு ஓட வந்து, “வாங்க தாயீ வாங்க... வாங்க…” தலைக்கு மேல் கும்பிட்டபடி அழைத்துப் போனார்.
இருளப்பசாமியை கோயில் பூசாரி தவசியாண்டி அலங்காரப்படுத்தி இருந்தான். சாமியின் இடுப்பைச் சுற்றி சிவப்பு வண்ணச் சிற்றாடையும் இடது தோளை வளைத்து, குறுக்கு வசமாய் பச்சை வண்ணச் சிற்றாடையும் உடுத்திவிட்டிருந்தான். சாமியையும் சிம்ம வாகனத்தையும் சந்தனம், குங்குமத் திலகங்களால் நிறைத்திருந்தான். கழுத்தில் இருந்து கால் மறைத்து மலர் மாலைகள். உச்சிக் கொண்டையில் பூச் சுற்று.
ரத்னாபிஷேகம் பிள்ளை அழைத்துப் போய் சாமிக்கு முன் நிறுத்திய வெள்ளையம்மா கிழவி, கோயில் பூசாரியாய் தவசியாண்டியைக் கண்டதும் அதிர்ச்சியுற்றாள். ‘இவன் இன்னமுமா… உயிரோடு இருக்கிறான்?’ என்கிற நினைவோட்டத்தில் சாமியைப் பார்த்தாள்.
வெள்ளையம்மாவைக் கண்ட தவசியாண்டி நொடி நேரம் துணுக்குற்று, தீபாராதனை தட்டை தன் முகத்துக்கு நேராக உயர்த்தி, “வாங்க தாயீ…” என்றான்.
தவசியாண்டியை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்த வெள்ளையம்மா, கற்பூர நெருப்பைக் கை குவித்து வணங்கி கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
இருவரின் முகக் குறிப்புகளைக் கண்ணளந்த ரத்னாபிஷேகம் பிள்ளை, கூட்டத்தை விலக்கி பாதை நோக்கி ஓடினார்.
கூட்டம் முணுமுணுத்தது, “அரண்மனை வர்றாரு...” உடையப்பனும் பெருநாழி முதலாளியும் அரண்மனை ஆட்கள் புடை சூழ வந்து கொண்டிருந்தார்கள். திரும்பி, பாதையில் கண் ஓட்டிய வெள்ளையம்மா உடையப்பனைக் கண்ட தும் மெல்ல நகர்ந்து, ஆல மரத்துப் பக்கம் ஒதுங்கி மறைந்தாள்.
இருளப்பனுக்கு அருகில் நின்ற தவசியாண்டி, கை நிறையக் கற்பூரத்தை அள்ளிப் போட்டு, ஆராதனைத் தட்டில் பெரு நெருப்பை எரியவிட்டான்.
ஒரே வெட்டில் கிடாய்த் தலையை உருட்டும் காவல்க்காரத் திருமால் தேவரின் கை அரிவாள் ரத்தப் பசியோடு மினுங்கியது.
கோயில் புறப்பாட்டுக்கு ஆயத்த மாகிக் கொண்டிருந்த செவ்வந்தியின் பின்னால் நின்று, கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அரியநாச்சி. நேற்று குடிசைக்கு வந்ததில் இருந்து ஒரு வார்த்தைகூட பேசாதவள் செவ்வந்தி. ஆனாலும், அரியநாச்சியின் நினைவோரம் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருந்தாள்.
தன்னை அரியநாச்சி பார்த்துக் கொண்டிருப்பதை பிடரி கண்ணால் பார்த்துவிட்ட செவ்வந்தி, நெருங்கி வந்தாள். “கோயிலுக்குப் போகலாமா?” என்றாள்.
பதிலேதும் சொல்லாதவள், எதிர் குடிசையை பார்த்தாள். திரிக்கப்பட்ட ‘வைக்கோல் பிரி’யை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தான் துரைசிங்கம்.
“துரைசிங்கம்… கிளம்பலாமா?” இங்கிருந்தே கேட்டாள் அரியநாச்சி.
“ம்…” தலையை ஆட்டினான் துரைசிங்கம்.
கூட்டு வண்டிக்குள் அரியநாச்சியும் செவ்வந்தியும் ஏறி அமர்ந்தார்கள். கதவு இல்லாத குடிசைகளைக் காட்டில் விட்டுவிட்டு வண்டியைக் கிளப்பினான் துரைசிங்கம்.
வைக்கோல் பிரிக்குள் மறைந்திருக் கும் ஆயுதங்கள், வண்டி ஓட்டத்தில் நழுவி விழுந்து விடாமல் கை அணைத்தபடி பெருங்குடி நோக்கி ஓட்டிப் போனான்.
விவரம் தெரிந்த நாளில் இருந்து வெளி உலகம் கண் டிராத செவ்வந்தி, உற்சாக மாக அமர்ந்து வந்தாள்.
வெறிச்சோடிக் கிடந்த ஊருக்குள் கஜேந்திரனின் கார் நுழைந்தது.
பாட்டியை ரயிலேற்றிவிட்டதில் இருந்து தனிமையில் தவித்தவன், ‘லண்டன் பயணத்துக்கு முன் ஊரைத் தான் பார்த்து வருவோமே’ என்கிற திடீர் முடிவில் கிளம்பி வந்துவிட்டான்.
‘கணக்குப்பிள்ளை வீடு இதுதான்’ எனக் கை காட்ட, யாரையும் காணோம். பொத்தாம் பொதுவாக ஓரிடத்தில் காரை நிறுத்தி இறங்கியவன், கண் களை அலையவிட்டான். தெரு வெங்கும் தோரணங்களும் வாசல் கோலங்களுமாக திருவிழாக் களைகட்டி இருந்தது ஊர்.
‘நல்ல ஊராக இருக்கிறதே!’ நடந்தான். எதிரே ஒரு கூட்டு வண்டி வந்து கொண்டிருந்தது. கைகாட்டி நிறுத்தினான். வண்டி ஓட்டி வந்த ஊமையன் துரைசிங்கத்திடம், “இங்கே… கணக்குப்பிள்ளை வீடு எது?” என்றான்.
வண்டித் திரை நீக்கி கஜேந்திரனை அரியநாச்சி பார்த்தாள். திரைக்குள் இருந்த செவ்வந்தியை கஜேந்திரன் பார்த்தான்.
தன் இரை இவன்தான் என அறியாத துரைசிங்கம், காளைகளை விலக்கி கண்மாய் பாதையில் செலுத்தினான்.
27
இறுதி ஆட்டம்!

இருளப்பசாமியின் கர்ப்பகிரஹ மூட்டப் புகையில் அருளேற்றிக் கொண்டிருந்தான் தவசியாண்டி.
இருளப்பனுக்கு கோபம் கொம்பேறி போயிருந்தது. எத்தனை பலி கொண்டாலும் அடங்காத கோபம். மூடி இருந்த கண்கள் திறந்து செங்கங்காய் தகித்தன. ஓங்கிய கை அரிவாளில் முளைத்த மூன்றாம் கண், எட்டுத் திக்கும் இரை தேடிச் சுழன்றது. வெட்டுக் கிடாய்களின் ரத்தத்தோடு வேறு ரத்தத்தையும் குடம் குடமாய் குடிக்க, நாக்கு முழம் நீண்டது.
எதிரே நிற்கும் எவர் கண்ணுக் கும் புலப்படாமல், தவசியாண்டி யின் காதோரம் பேசினார் இருளப்பசாமி.
“பசிக்குதுடா தவசி. பதினேழு வருஷப் பசி..!”
“காவு தர்றேன்… காவு தர்றேன். இருளப்பன் மனம் குளிர காவு... தர்றேன்” தவசியாண்டியின் கண் ஓடிய திசையில் அரண்மனை உடையப்பன் வந்து கொண்டிருந் தான்.
கோயில் சனம் முழுக்கவும் விலகி வழிவிட்டு நின்றது. தனக்காக விரிந்த பாதையில் பெருநாழி முதலாளியை முன் தள்ளி நடந்தான் உடையப்பன்.
ஆல மரத்தோரம் மறைந்து நின்ற வெள்ளையம்மா கிழவி, உடையப்பனின் பிடறியில் கண் பதித்திருந்தாள்.
உடையப்பனுடன் வந்த பரி வாரங்கள், புடை சூழ நின்றார்கள்.
குலசாமியை சேவிக்க கரம் குவித்ததும் உடையப்பனுக்கு வியர்த்தது. உள்ளே இருளப்பன் நிற்க வேண்டிய இடத்தில் தவசியாண்டி நின்றான். குருதி சொட்ட சொட்ட நீளும் நாக்கோடு நின்றான்.
கண்களில் பூச்சி பறக்க, சனக் கூட்டத்தைப் பார்த்தான் உடையப்பன்.
“அய்யா… இருளப்பா..!” ஆயிரக்கணக்காய் உயர்ந்து குவிந்த கரகோஷங்களின் கண் களுக்குக் குலசாமியே தெரிந்தான். “அய்யா… இருளப்பா..!” உடையப்பனின் கண்களுக்கு தவசியாண்டியே தெரிந்தான். இடது கைவாக்கில் நின்ற பெருநாழி முதலாளியின் தோளை ஆதரவாக தொட்டு நிலைகொண்டான்.
கண்மாய் பாதையில் கூட்டு வண்டி வந்து கொண்டிருந்தது. செண்பகத் தோப்பில் இருந்து வாயில் நுரை தள்ள துரைசிங்கம் ஓட்டி வந்த காளைகள், சீராய் நடை போட்டு வந்தன. வண்டிக்குள் இருக்கும் அரியநாச்சி. முன் திரைச் சீலையை கை அகலத்துக்கு விலக்கி, திருவிழாச் சனத்தை நோட்டமிட்டாள்.
வைக்கோல் பிரிக்குள் ஒளிந் திருக்கும் ஆயுத உருப்படிகள், அலுங்காமல் வந்தன.
காட்டுப் பூ செவ்வந்தியின் கண்ணில் படும் தெரு, வீடு, வாசல், முளைக் கொட்டுத் திண்ணை, முளைப்பாரி எல்லாம் அருங்காட்சியாக விரிந்தன.
திசை சொல்ல ஆள் இல்லாத ஊருக்குள் காரை நிறுத்திவிட்டு, திருவிழா இரைச்சலை குறி வைத்து கண்மாய் பாதையில் நடந்து வந்தான் கஜேந்திரன்.
புற்றுக்குள் இருந்து தலை நீட்டும் செந்நாகம் போல், ஆலமர மறைப்பில் இருந்து கூர்ந்து கொண்டிருந்த வெள்ளையம்மா கிழவியின் கண்ணில் கூட்டு வண்டி பட்டது. அடிவயிறு பிசைந்தது.
‘இது, ரணசிங்கம் ஓட்டித் திரிந்த கூட்டு வண்டி. வண்டியை ஓட்டி வர்றவன், தாடி முடி வெச்ச சின்ன வயசு ரணசிங்கம் மாதிரி தெரியிறான். வண்டிக்குள்ளே யாரு?’ புலப்படாமல் கழுத்து நீட்டி கண்காணித்தாள். வந்த வண்டி கூட்டத்துக்குள் நுழையாமல், மேற்கே கூடி கோயிலுக்குப் பின்புறம் போய் நின்றது. ‘நல்ல அறிகுறியாகத் தெரியலே. ஏதோ பெருசா விபரீதம் நடக்கப் போவுது.’ நிலைகொள்ளாமல் திரும்பியவளின் கண் எதிரே பேரன் கஜேந்திரன் நடந்து வந்துகொண்டிருந்தான். கிழவிக்கு மூச்சு இரைத்தது. ‘இவன் ஏன் இங்கே வந்தான்?’ தடுமாறி நடந்தாள்.
உக்கிர பூஜையைத் தொடங்கி இருந்தான் தவசியாண்டி.
சனம், பரவசத்தில் கத்தியது.
“அய்யா… இருளப்பா! சாமி… அய்யா!”
ரெட்டைக் கல் தூணில் தொங் கும் நேர்த்திக்கடன் வெண்கல மணிகளை, சிறுவர்கள் போட்டி போட்டு ஆட்டி பேரோசை எழுப்பினார்கள்.
இளவட்டங்கள் ‘வைக்கோல் பிரி’ ஆட்டத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.
கொம்புப் பூ சுற்றிய வெட்டுக் கிடாய்கள், வளர்ந்த திமிர் அடங்காமல் சிலுப்பிக் கொண்டு நின்றன. காவல்க்காரத் திருமால் தேவரின் கை அரிவாள், கிடாய்களுக்கு நேர்முகம் திருப்பி வெள்ளிப் பளபளப்பில் மினுங் கியது.
தலைக் கிறுகிறுப்பைச் சமாளித்து கண் திறந்த உடையப் பன், கர்ப்பகிரஹத்துக்குள் பார்த்தான். இருளாண்டி நின்றார். தவசியாண்டியைக் காணோம்.
ஆலமரத்தைச் சுற்றி, நேர்த்திக் கடன் செதறு தேங்காய்கள் குவிந்தியிருந்தன. உடைத்துச் சிதறடிக்க, அவரவர் குவியலுக்கு முன் இளவட்டங் கள் நின்றார்கள்.
பொங்கலிட்டு இறக்கிய பானைகளின் கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த மாவிலைகளும் மஞ்சள் கிழங்குச் செடிகளும் அனலில் வாடிப் போயிருந்தன.
ஐஸ் வண்டிக்காரனை சிறுவர் கள் மொய்த்தார்கள்.
இறங்காமல் கூட்டு வண்டிக் குள்ளேயே அமர்ந்திருந்தாள் அரியநாச்சி.
வைக்கோல் பிரிக்குள் நுழைந் திருந்தான் துரைசிங்கம்.
வண்டியை விட்டு இறங்கி தனியே நின்றாள் செவ்வந்தி. தனியே வந்து கொண்டிருந்த கஜேந்திரன், தனியே நின்ற செவ்வந்தியைப் பார்த்தான். அரை பாதி பார்த்த செவ்வந்தி, மலங்க விழித்தாள். இமைகள் படபடக்க மறுபடியும் பார்த்தாள். கஜேந்திரன் பார்த்துக்கொண்டே வந்தான்.
“அடேய்… கஜேந்திரா!” ஓட்டமும் நடையுமாக பதறி வந்தாள் வெள்ளையம்மா கிழவி.
“நீ ஏண்டா… இங்கே வந்தே?”
“ஏன் பாட்டி? நான் வரக் கூடாதா? நீதானே சொல்லுவே நம்ம ஊரு… நம்ம ஊருன்னு?”
கஜேந்திரனின் இரண்டு தோள் களையும் பிடித்து திருப்பினாள். “வேண்டாம்… நீ அப்படியே திரும்பி போயிரு. இங்கே என்னமோ நடக்கப் போகுது!” தள்ளினாள்.
கோயிலுக்குப் பின்புறம் நின்ற கூட்டு வண்டித் திரை விலகியது. அரியநாச்சி இறங்கினாள். வைக்கோல் பிரிக்குள் நின்ற துரைசிங்கத்துக்கு கூட்டத்துப் பக்கம் விரல் நீட்டி ஆள் காட்டினாள்.
தவசியாண்டியின் கோடாங்கிச் சத்தம் கிளம்பியது.
‘டுண்… டுண்… டுண்ண்… டுண்… டுண்… டுண்ண்…’ கோயில் மணிச் சத்தம் கணகணத்தது.
‘வைக்கோல் பிரி’ ஆட்டம் தொடங்கியது. ஆலமரத்துப் பட்சிகள் கூச்சலிட்டுப் பறந்தன. ‘பிரி’ ஆட்ட இளவட்டங்களுக்குள் துரைசிங்கம் கலந்தான்.
செதறுகாய்கள் நொறுங்கிச் சிதறின.
“அய்யா… இருளப்பா! சாமி… அய்யா!” சனம் கத்தியது.
வைக்கோல் பிரி ஆயுதங்கள் மோதின. கிடாய்கள் வெட்டுப் பட்டன.
வரிசையாய் வெட்டுப்பட்டுச் சரிந்த கிடாய்த் தலைகளுக்குள் உடையப்பன் தலை கிடந்தது. வைக்கோல் பிரி சுற்றிய ஒருவன் சுழற்றி எறிந்த வளரி, ஊரைப் பார்த்து ஓடிக் கொண்டிருந்த பெரு நாழி முதலாளியின் கழுத்தைக் குறி வைத்துப் போனது.

=======================


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக