புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
5 Posts - 63%
heezulia
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_m10புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்..


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jan 12, 2012 5:38 pm

புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்..

தமிழினத்தின் இதயம் இலங்கை’_ இப்படி ஒரு தலைப்பில் புத்தகம் எழுதி​யவர் காங்​கிரஸ் எம்.பி. என்ற ஆச்சர்யமே அந்தக் கூட்டத்துக்கு நம்மைப் போக வைத்தது. ஆனால், அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்களே வழக்கம் போல முரண்பட்ட கருத்துக்​களைச் சொல்லி முட்டிக் கொண்டது ஆச்சர்யமாக இல்லை.

காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுதர்சன நாச்சியப்பன்தான் இப்படி ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதன் வெளியீட்டு விழா கடந்த 6-ம் தேதி சென்னையில் நடந்தது. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் எடுத்த எடுப்பிலேயே, ''இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு சொல்லும் இந்தப் புத்தகம் ஒரு நல்ல ஆய்வு நூல். ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி எடுக்கும்'' என்றார்.

புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Resize_20120110191837
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சன் டி.வி. வீரபாண்டியன், ''வரும் தேர்தலில் காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும் கூட்டணி சேர வேண்டும்'' என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ரங்கராஜன், ''காங்கிரஸ் _ மார்க்சிஸ்ட் சண்டை எப்போதும் போல தொடர்ந்து நடக்கும். கொள்கை ரீதியான இந்த மோதல் தொடர்வது நல்லதுதான். இங்கே வந்திருப்பதால் மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி வரும் என்று அர்த்தம் அல்ல. அது வரப்போவதும் இல்லை'' என்று விளக்கம் கொடுத்து விட்டுப் பேச ஆரம்​பித்தார். ''ஈழத் தமிழர்கள் பிரச்னைக்குத் தீர்வு, ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் நடக்க வேண்டும். இரண்டு நாடுகள் உருவானால் அது இந்தியாவுக்கு நல்லதல்ல'' என்றார்.

அடுத்துப் பேசிய முன்னாள் அமைச்சர் திருநாவுக்க​ரசர் பேச்சுதான் அந்தக் கூட்டத்தின் ஹாட் டாபிக் ஆனது. ''காங்கிரஸ் வருத்தப்படக்கூடாது, மத்திய அரசு வருத்தப்படக்கூடாது, ஈழத் தமிழர்கள் வருத்தப்படக்கூடாது என்று கத்தி மேல் நிற்பது போல இந்தப் புத்தகத்தை சுதர்சன நாச்சியப்பன் எழுதி இருக்கிறார். புத்தகங்களை வேகமாகப் படித்து முடிப்பவன் நான். ஆனால், இந்தப் புத்தகத்தை படிப்பதற்கு மூன்று நாட்கள் ஆகிவிட்டது. படிக்கும் போதே தூக்கம் வந்துவிட்டது'' என்று எக்குத்தப்பாகத் தொடங்கியவர் திடீரென திசைமாறி, ''எந்த ஓர் இனமும் நசுக்கப்படும் போது, போராடத்தான் செய்வார்கள். விடுதலைப்புலிகள் மட்டும் இல்லை என்றால் 30 ஆண்டு காலத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள் என்பது உண்மை. என்ன காரண காரியம் இருந்தாலும் ராஜீவ் காந்தியை அவர்கள் கொன்றது தவறு. அந்தத் தவறு இப்போது வேறு ஒரு தவறில் போய் முடிந்தது. ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக 10 லட்சம் தமிழர்களைச் சுட்டுக் கொல்ல ராஜபக்சேவுக்கு அதிகாரம் கொடுக்க முடியாது. சுதர்சன நாச்சியப்பன் அடுத்து எழுதப்போகும், 'ஈழத் தீவிற்கோர் பாலம் அமைப்போம்’ என்ற புத்தகத்தில் பிரபாகரன் செய்த நல்லது, கெட்டதுகளையும் எழுத வேண்டும்'' என்று திருநாவுக்கரசு சொன்ன போது காங்கிரஸ்காரர்கள் தரப்பில் மெல்ல சலசலப்பு தொடங்கியது.

''தமிழகம் 'தானே’ புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் புயல் நிவாரணக் குழு இந்நேரம் தமிழகம் வந்திருக்க வேண்டும். மாநில அரசு கேட்ட பிறகுதான் குழுவை மத்திய அரசு அனுப்பி வைக்குமா? தேசியப் பேரிடர் நிவாரண நிதி இருக்கிறது. அதில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை முதலிலேயே ஒதுக்கியிருக்க வேண்டும்'' என்று மத்திய அரசையும் அட்டாக் செய்து பேச்சை முடித்தார் திருநாவுக்கரசர்.

அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேச்சு இருந்தது. ''ஈழத் தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்ததைப் போன்று வேறு யாரும் உதவிகள் செய்தது இல்லை. யாழ்ப்பாணத்தில் முன்பு ஈழத் தமிழர்கள் மீன்பிடிக்க முடியாத நிலை இருந்தது. இப்போது அவர்களும் மீன் பிடித் தொழிலில் இறங்கி இருக்கிறார்கள். யாழ்ப்​பாணப் பகுதிக்குப் போய் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதால், அது ஈழத் தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்​துகிறது. அவர்கள்​தான் நமது மீனவர்களைத் தாக்குகிறார்கள். சிங்கள மீனவர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவது இல்லை. இது, விவாத மேடை அல்ல. ஈழத் தமிழர்களுக்காக மட்டுமல்ல தமிழக நலனுக்காகவும் காங்கிரஸ் யாருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்கும். 'என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு’ என்ற திருக்குறளை இங்கே சொல்ல விரும்புகிறேன். இந்த குறள் யாருக்கு வேண்டுமானாலும் போகட்டும்'' என்றபடி அமர்ந்தார் ஞானதேசிகன். இந்தக் குறள் திருநாவுக்கரசருக்காகத்தான் சொல்லப்பட்டது என்பது யாரும் சொல்லாமலே விளங்கியது.

நிறைவாகப் பேசிய சுதர்சன நாச்சியப்பன், ''வடகிழக்குப் பகுதி மட்டுமே ஈழம் என்று சொல்லி வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த இலங்கையே, ஈழத் தீவுதான். வடகிழக்குப் பகுதியில் தன்னாட்சி அதிகாரத்தை ராஜீவ் காந்தி பெற்றுத் தந்தார். அந்த எல்லைக் கோட்டை வைத்துக் கொண்டு அடுத்து நகர்வுக்குச் சென்றிருக்க முடியும். ஆனால் அந்த வாய்ப்பை புலிகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை'' என்று முடித்தார்

'அ.தி.மு.க-வுக்கு நகர திருநாவுக்கரசர் முடிவு செய்து விட்டார். அதற்காகத் தான் இப்படிப் பேசுகிறார்’ என்று காங்கிரஸ்காரர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்!

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 12:15 am

காமெடி காங்கிரஸ் கட்சி.... எப்பவும் ஒரே காமெடிதான் புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 13, 2012 1:17 am

கட்சினா இப்படி தான் ஒரு ஆளூ இன்னொரு ஆள சிரி குறை சொல்லிட்டே இருக்கணும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 1:18 am

இளமாறன் wrote:கட்சினா இப்படி தான் ஒரு ஆளூ இன்னொரு ஆள சிரி குறை சொல்லிட்டே இருக்கணும்
ஆனா இவங்க வேற ஆளுங்க, எப்பவும் மத்தியில ஜால்ரா அடிச்சிட்டு இருப்பாங்க புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 13, 2012 1:41 am

அசுரன் wrote:
இளமாறன் wrote:கட்சினா இப்படி தான் ஒரு ஆளூ இன்னொரு ஆள சிரி குறை சொல்லிட்டே இருக்கணும்
ஆனா இவங்க வேற ஆளுங்க, எப்பவும் மத்தியில ஜால்ரா அடிச்சிட்டு இருப்பாங்க புன்னகை

இதுக்கும் ஒரு தனி திறமை வேண்டுமே சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 2:00 am

இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:கட்சினா இப்படி தான் ஒரு ஆளூ இன்னொரு ஆள சிரி குறை சொல்லிட்டே இருக்கணும்
ஆனா இவங்க வேற ஆளுங்க, எப்பவும் மத்தியில ஜால்ரா அடிச்சிட்டு இருப்பாங்க புன்னகை

இதுக்கும் ஒரு தனி திறமை வேண்டுமே சிரி
அது சரி... தி.மு.க.இவங்களை விரட்டப்போகுதாமே? ??

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 13, 2012 10:36 am

சிரி சிரி இந்த சிரிப்பான உத்து பாருங்க யார் முகம் மாதிரி தெரியுது ... காங்கிரஸ் கட்சி இருக்குற வரைக்கும் எங்களுக்கு வடிவேலு தேவை இல்லை ...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக