புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_m10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_m10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10 
77 Posts - 36%
i6appar
குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_m10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_m10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_m10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_m10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_m10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_m10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_m10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10 
2 Posts - 1%
prajai
குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_m10குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 08, 2012 1:47 pm

பளிச்சென்ற உடை, முகமெல்லாம் புன்னகை, தோளில் தொங்கும் அழகான பைக்குள் புத்தம்புது கரன்சி நோட்டுகள், கருணைக்கும்- வழிகாட்டுதலுக்கும் தன்னை உதாரணமாக காட்டிக்கொள்ளும் பேச்சு.. இப்படியாய் காணப்படுகிறார், ஐம்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அந்த பெண்!

குறைந்த வருமானத்தில் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கும் நடுத்தர வருவாய் கொண்ட குடும்பத்தினர் குடியிருக்கும் தெரு ஒன்றில் அந்த பளிச் பெண், தனது காரை ஓட்டிக்கொண்டு வந்து போனார். தெருவில் குடியிருக்கும் பெண்கள் மீது அவள் பார்வை பதிந்தது. அங்குள்ள பெண்களில் பெரும்பாலானவர்கள் ஒன்றிரண்டு குழந்தைகளை பெற்றவர்கள். கணவரின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். கணவரை வேலைக்கும், குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பிவிட்டு டெலிவிஷனை பார்த்தே பொழுதை போக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களை `ஆழ்ந்து' கவனித்த பளிச் பெண், `தனது வேலைக்கு' அந்த ஏரியா சரிப்பட்டு வரும் என்று முடிவு செய்தாள்.

இரண்டு வாரங்களில் அந்த தெருவிற்கு அருகில் உள்ள தனி வீட்டிற்கு தன் காரில் வந்து இறங்கினாள். சவுகரியம் நிறைந்த அந்த வீட்டிற்கு உரிமையாளர், தலைசுற்றும் அளவிற்கு வாடகை சொன்னபோதும் பளிச் பெண், சம்மதம் தெரிவித்து அட்வான்சை அள்ளிக் கொடுத்துவிட்டு குடியேறினாள்.

பத்தே நாட்களில் அந்தப் பகுதி பெண்களிடம் அறிமுகமாகிக்கொண்டாள். சமூக ஆய்வு மேற்கொள்கிறவள்போல் வீடுகளுக்கு சென்று பெண்களின் வாழ்க்கை முறை, குடும்ப சூழல் எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு தன்னால் முடிந்த உதவிகளையும், ஆலோசனைகளையும் தருவதாக சொன்னாள். அந்த பெண்களும் சந்தோஷப்பட்டு, அவள் வீடு தேடிச் சென்றனர்.

அதில் அழகாக தோன்றிய பெண்கள் ஐந்து பேரை, அந்த பளிச் பெண் தேர்வு செய்துகொண்டாள். மற்ற பெண்களை மெல்ல ஒதுக்கி தன் வீட்டு பக்கமே வராத அளவிற்கு பார்த்துக்கொண்டாள். ஐந்து பெண்களுக்கும் அவ்வப்போது பண உதவி செய்தல், அழகில் ஆலோசனை கொடுத்து மேலும் அவர்களை அழகு படுத்துதல், அவர்களுக்கு பொருத்தமான சுடிதார்களை வாங்கிக்கொடுத்து அணிய வைத்து அழகு பார்த்தல் என்று அவள் உதவி தொடர்ந்தது. வழக்கமாக பஸ்களில் இடி பட்டு, மிதிபட்டு, பிதுங்கி பயணம் செய்யும் அவர்களை தனது காரில் அழைத்துச் சென்றாள். நகரில் உள்ள பிரபலமான மால்களுக்கு அழைத்துப்போய் நவீன கவர்ச்சி உலகத்தை அவர்களுக்கு காட்டினாள்.

அவள் எதிர்பார்த்த மாற்றம் அதற்குள் அந்த ஐந்து பெண்களிடமும் ஏற்பட்டிருந்தது. தங்களை ரட்சிக்க வந்தவள் என்றும், தங்களுக்கு கணவர்கள் காட்டாத இன்னொரு அற்புத உலகைகாட்டும் ஆச்சரிய பெண் என்றும் அவளை நம்பி தங்கள் கணவர், குடும்பம், பிரச்சினைகள், ஏக்கங்கள் எல்லாவற்றையும் அவளிடம் கொட்டினார்கள்.

அதில் நான்கு பெண்கள், `குடும்பத்திற்கு தேவையான அளவு கணவர் பணம் சம்பாதிப்பதில்லை. குடிப்பழக்கம் இருக்கிறது. தங்களை மதிப்பதில்லை. உடல்ரீதியாக திருப்தி படுத்துவதில்லை...' என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை சொன்னார்கள். அதை அப்படியே உள்வாங்கிக்கொண்ட அந்த பளிச் பெண், `என் வாழ்க்கை ஒரு காலத்தில் உங்களைவிட மோசமாக இருந்தது. என் கணவர் உங்கள் கணவர் மாதிரிதான் நடந்துகொண்டார். வாங்குகிற சம்பளத்தைகூட என்னிடம் தருவதில்லை. அடிக்கவும் செய்தார். அதன் பின்பு அவரை கண்காணிக்கத் தொடங்கினேன். அவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்தேன். அதன் பிறகு என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரை விரட்டிவிட்டேன். நீங்களும் பாருங்களேன், உங்கள் கணவருக்கும் அப்படிப்பட்ட தொடர்புகள் இருக்கும். நாமதான் யோக்கியமாக இருக்கணுமாம். ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்வார்களாம். நாமும் அவர்கள் மாதிரி நடந்துகொண்டால் என்ன?' என்று அவள் கேட்டபோது, அந்த ஐந்து பெண்களும் லேசாக அதிர்ந்தார்கள்.

`ஆண்கள் எப்போதும் வெளியே போவார்கள். அவர்கள் ரகசிய தொடர்பு வைத்திருந்தால் வெளியே தெரியாது. நாம் அப்படி நடந்துகொண்டால் வெளியே தெரிந்துவிடும் என்ற பயம் எல்லா பெண்களுக்கும் வரும். உங்களுக்கும் வருமே. அந்த பயமே ஏற்படாத அளவிற்கு உங்களுக்கு என்னால் உதவ முடியும்' என்று அர்த்தத்தோடு சிரித்துவிட்டு, அவர்களை அனுப்பிவிட்டாள்.

மறுநாள் அவளைத் தேடி ஐந்தில், இரண்டு பெண்கள் மட்டுமே சென்றனர். அடுத்த சில வாரங்களில் அந்த இரு பெண்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. நடை, உடை, பேச்சு எல்லாம் மாறி இருந்தது. இரண்டு, மூன்று மணிநேரம் வீட்டில் இருந்து காணாமல் போனார்கள். தெருவில் உள்ள மற்ற பெண்களிடம் இருந்து தங்கள் தொடர்பை முற்றிலும் முறித்துக்கொண்டார்கள்.

துப்பறியத் தொடங்கினார்கள், பளிச் பெண்ணிடம் இருந்து ஒதுங்கிய மூன்று பெண்களும்! அவர்கள் நினைத்தது சரிதான்! சரியான தருணத்திற்கு காத்திருந்து, மறுநாள் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்கள். போலீசார் சாதாரண உடையில் அந்த பளிச் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தபோது, அந்த இரண்டு பெண்கள் உள்பட நான்கு பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது அந்த நான்கு பேருமே குடும்ப பெண்கள் என்பதும், அந்த பளிச் பெண்ணால் மூளைச்சலவை செய்யப்பட்டு, பண ஆசைகாட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது.

குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..! அடிக்கடி ஏரியாவை மாற்றும் இப்படிப்பட்ட ஒருசில பளிச் பெண்கள் உங்கள் ஏரியாவிற்கும் வரலாம்..! உங்களுக்கும் வலைவீசலாம்!

தினதந்தி



குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 08, 2012 1:53 pm

பளிச் பளிச் புது மாடல் வியாபாரம் இது சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 08, 2012 2:28 pm

அடக்கடவுளே ...... நாகரீக மோகம் ......

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 08, 2012 2:31 pm

குடும்ப பெண்கள் தங்களை பற்றின கணவர் பத்தின ரகசியங்களை யாரிடமும் சொல்லாமல் இருப்பதே நல்லது. இல்லையெனில் எளிதாக இது மாதிரி வலையில் விழுந்துவிட வேண்டியதுதான்



குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Uகுடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Dகுடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Aகுடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Yகுடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Aகுடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Sகுடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Uகுடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Dகுடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  Hகுடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  A
nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Postnerunchi Sun Jan 08, 2012 2:46 pm

உண்மையிலேயே அவர்கள் குடும்பபெண்கள் அல்ல -
சந்தர்ப்பவாதிகள் - தன் குடும்பத்தை உண்மையில் நேசிக்கும் யாரும் சந்தர்ப்பவாதிகள் ஆக மாட்டார்கள் - வழி தவற மாட்டார்கள் - இது போன்ற பெண்களும் ஆண்களும் அவர்கள் குடும்பத்திரிக்கு மட்டுமல்ல - சமூகத்திற்கே கேடுதான்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 08, 2012 5:21 pm

குடும்ப பெண்களின் பலவீனத்தை பயன்படுத்தி மூளை சலவை செய்யும் இப்படிப்பட்ட கேடுகெட்ட பெண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
குடும்ப பெண்களும் கட்டுப்பாடின்றி திாியாமல், தனி மனித ஒழுக்கத்தை பேண வேண்டும். எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல; இப்படித்தான் வாழ வேண்டும் என்ற மனப்பான்மை தேவை. மனக்கட்டுப்பாடு தேவை.



குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  154550குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  154550குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  154550குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  154550குடும்ப பெண்களே கவனமாக இருந்துக்குங்க..!  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக