புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10 
81 Posts - 64%
heezulia
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_m10தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா? [30Vote ]

  • தைப்பொங்கல்

    620%
  • சித்திரைப் பிறப்பு

    2480%

You are not connected. Please login or register

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jan 04, 2012 5:25 am

First topic message reminder :

ஆங்கிலப் புத்தாண்டு ஓடிமறையுமுன் இப்படியொரு கேள்வியைப் போட்டதிற்கு மன்னிக்கவும். ஆண்டின் முதலாம் நாள் தைப்பொங்கல் என்பதால் புத்தாண்டென்பதா? சோதிடக் கணிப்பின் படி கோள்களின் சுற்றுத் தொடங்கும் நாள் சித்திரைப் பிறப்பு என்பதால் புத்தாண்டென்பதா? இது பற்றி எனக்குப் போதிய அறிவில்லை. அதனால், இதற்கான பதிலையும் விளக்கமளிக்கும் பணியையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.




உங்கள் யாழ்பாவாணன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 04, 2012 8:20 pm

[quote="yarlpavanan"]ஆங்கிலப் புத்தாண்டு ஓடிமறையுமுன் இப்படியொரு கேள்வியைப் போட்டதிற்கு மன்னிக்கவும். ஆண்டின் முதலாம் நாள் தைப்பொங்கல் என்பதால் புத்தாண்டென்பதா? சோதிடக் கணிப்பின் படி கோள்களின் சுற்றுத் தொடங்கும் நாள் சித்திரைப் பிறப்பு என்பதால் புத்தாண்டென்பதா? இது பற்றி எனக்குப் போதிய அறிவில்லை. அதனால், இதற்கான பதிலையும் விளக்கமளிக்கும் பணியையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.






yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jan 04, 2012 8:29 pm

[quote="Dr.சுந்தரராஜ் தயாளன்"]
yarlpavanan wrote:ஆங்கிலப் புத்தாண்டு ஓடிமறையுமுன் இப்படியொரு கேள்வியைப் போட்டதிற்கு மன்னிக்கவும். ஆண்டின் முதலாம் நாள் தைப்பொங்கல் என்பதால் புத்தாண்டென்பதா? சோதிடக் கணிப்பின் படி கோள்களின் சுற்றுத் தொடங்கும் நாள் சித்திரைப் பிறப்பு என்பதால் புத்தாண்டென்பதா? இது பற்றி எனக்குப் போதிய அறிவில்லை. அதனால், இதற்கான பதிலையும் விளக்கமளிக்கும் பணியையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.





தாங்கள் பதிவு செய்த இணைப்புகள், மேலும் அறிவூட்டவும் வழிகாட்டவும் உதவுகிறது.
மிக்க நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Jan 05, 2012 1:18 am

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி !தட்சிணாயனம் --அதாவது சூரியனை விட்டு விலகி செல்லுகிற பூமி தை மாதத்தில் உத்திராயணம் திரும்பி சூரியனை நோக்கி செல்லிகிறது !இந்த திருப்பத்தை ஒட்டியே ஆண்டு கணக்கை ஆதி இந்துக்களான தமிழர்கள் அமைத்தார்கள் !அதுவே யூதர்களின் ஆண்டு கணக்காக மோசே முலம் கொடுக்க பட்டது !அதை சரியாக நிதானிக்காமல் கிறிஸ்தவர்கள் ஜனவரியை புத்தாண்டு ஆக்கினார்கள் !தை புத்தாண்டே சரியான புத்தாண்டு என்பது எனது கருத்து !தமிழ் இலக்கியங்களில் புலமையுடைய கலைஞர் தை புத்தாண்டு பற்றி முக்கிய படுத்தினார் !ஆனால் விஞ்ஞான விளக்கம் கொடுக்க வில்லை !சித்திரை என்பது எந்த வகையிலும் சரியல்ல !!

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Thu Jan 05, 2012 4:57 am

சித்திரை- புத்தாண்டு தான் என இலக்கியங்கள் கூறுகின்றன!

பெரியண்ணன் சந்திரசேகரன்-நன்றி

Click Here Enlargeசித்திரைத் திங்களோடு தொடங்குகிறது புத்தாண்டு. சித்திரை மாதத்தில் சித்திரை மீனோடு மதியம் (முழுநிலா) சேரும் நாளும் சித்திராபூரணை என்று கொண்டாடப் படுகிறது. சித்திரா பூரணையைப் பெரு முறையில் தமிழர் கொண்டாடியதைச் சிலப்பதிகாரத்திலே பூம்புகார் நகரம் இந்திரவிழவூரெடுத்த காதையில் காண் கிறோம். "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென வெற்றிவேல் மன்னர்க்கு உற்றதை ஒழிக்கென" (சிலப்பதிகாரம்:5:64-65) என்கிறது; "சித்திரை மாதத்துச் சித்திரை மீன் மதியத்தைச் சேர்ந்தது என்று வெற்றிவேல் மன்னனுக்கு நேர்ந்த இடுக்கணை ஒழிப்பதற்கென" என்று ஊரார் விழாவெடுத்தைச் சொல்கிறது சிலம்பு. அங்கே ஊரின் முதுகுடிப் பெண்டிர் "பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென" (சிலம்பு: 5: 72-73) என்று பசியும் நோயும் பகையும் நீங்கி மழையும் வளமும் சுரக்க வாழ்த்துவதையும் காண்கிறோம்.

மேலும் சிறப்பாக வாழ்த்த ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்திலே ஓரம்போகி என்னும் புலவர் பாடியுள்ள வாழ்த்துகளைக் கேட்போம்; ஐங்குறுநூற்றின் மருதத் திணையிலே அவர் பாடியுள்ள முதற்பத்துப் பாடல்களின் ஒவ்வொரு பாடலின் முதலிரண்டு அடிகளில் சொல்லியுள்ள வாழ்த்துகள் இந்த மங்கலப் பொழுதிலே மிகவும் பொருந்தும். தலைவி இவ்வாறு வாழ்த்துவதாகத் தோழி சொல்வன அவை.

ஆதன் அவினி என்னும் சேரமன்னனை முதலில் வாழ்த்திப் பிறகு பொதுவாழ்த்தாக வாழ்த்துமாறு உள்ளன. அவற்றை இறைவன் என்னும் தலைவனுக்குப் பொருந்துவ தாகவோ குடும்பத்தலைவர்க்குப் பொருந்துவ தாகவோ கொள்ளலாம்.

"வாழி ஆதன்! வாழி அவினி!
நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!"
(ஐங்குறுநூறு:மருதம்:1:1-2)
[பொலி = மிகு; சிற = பெருகு, கொழி]

வாழி ஆதன்! வாழி அவினி! விருந்தோம் பலுக்கு நெல் மிகவும் பெருகுக! விருந் தோம்பலுக்குப் பொன் பெரிதும் கொழிக்க!

சிறக்க என்ற சொல் இங்கே அந்தச் சொல்லின் அடிப்படைப் பொருளிலே வழங்குவதைக் கவனிக்கவும்.

சிறத்தல் என்றால் மிகுதல் என்பதுதான் பொருள். இக்காலத்திலே நாம் அதை மறந்து தகுதி முதலியவற்றால் உயர்தல் என்பதை மட்டுமே அதன்பொருளாகக் கொண்டு அடிப்படைப் பொருளை மறந்து திகைப் பதைக் காண்கிறோம். எனவே இங்கே பொன் சிறக்க என்றால் பொன் பெருகுக என்னும் எளிய கருத்தே பொருளாகும். அதுபோல் பல என்னும் சொல்லும் தன் அடிப்படைப் பொருளிலே வரும்பாடல்களில் வழங்குவதைக் காண்போம்.

ஆதன் என்றும் அவினி என்றும் இந்த இரண்டு சிறிய அழகிய பெயர்கள் இன்றும் நம் குழந்தைகளுக்குச் சூட்டப் பொருந்து வதைப் பெற்றோர் கருத்திற் கொள்க!
"வாழி ஆதன்! வாழி அவினி!
விளைக வயலே! அருக இரவலர்!"
(ஐங்குறுநூறு:மருதம்:2:1-2)
[அருகு = குறை]

வாழி ஆதன்! வாழி அவினி! வயல்கள் செழுமையாக விளைக! இல்லையென்று இரப்போர் தொகை குறைக!
"வாழி ஆதன்! வாழி அவினி!
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!"
(ஐங்குறுநூறு:மருதம்:3:1-2)

வாழி ஆதன்! வாழி அவினி! பால் மிகவும் பசுக்களில் ஊறுக! எருதுகள் மிகவும் பெருகுக!

இங்கே பல என்னும் சொல் பால் பல என்று வழங்குவதைக் கேட்டுத் திகைக் கலாம்; பல என்றால் ஒன்றிரண்டு என்று எண்ணக்கூடிய பொருள்களுக்குக் தானே, பால் எண்ணுவதன்றே என்று. அந்தத் திகைப்புக்காரணம் மேலே சிறக்க என்பதற் குச் சொல்லியதுபோல் அடிப்படைப் பொருளான மிகுதி என்பதை நாம் மறந்ததே.

"வாழி ஆதன்! வாழி அவினி!
பகைவர் புல்ஆர்க! பார்ப்பார் ஓதுக!
(ஐங்குறுநூறு:மருதம்:4:1-2)

வாழி ஆதன்! வாழி அவினி! பகைவர் புல்லைத் தின்க! உயர்ந்தோர் பழப்பெருஞ் சொற்கள் பொதிந்த நூல்களை மறவாமல் ஓதுக!

பகைவர் என்பதை நாட்டின் பகைவர் மட்டுமன்றி நன்னெறியில் செல்லும் குடும்பத்தின் பகைவர்க்கும் ஆகும். நம்முடைய பழைய நூல்களை அவற்றின் ஓதுதலை அழியாமல் காப்போமாக என்றும் நாமும் உருதி பூணவேண்டும்!.

"வாழி ஆதன்! வாழி அவினி!
வேந்துபகை தணிக! யாண்டுபல நந்துக!
(ஐங்குறுநூறு:மருதம்:5:1 2)
[நந்து = வளர், செழி]

வாழி ஆதன்! வாழி அவினி! வேந்தன் பகை நீங்குக! அவனும் பல்லாண்டுகள் வாழ்நாளாகச் செழிக்க!
"வாழி ஆதன்! வாழி அவினி!
பசிஇல் லாகுக! பிணி சேண் நீங்குக!
(ஐங்குறுநூறு:மருதம்:6:1-2)
[பிணி = நோய்; சேண் = தொலைவு]

வாழி ஆதன்! வாழி அவினி! பசி என்பது இல்லாமல் ஆகுக! நோய்கள் தூரத்திலே ஓடுக!
"வாழி ஆதன்! வாழி அவினி!
அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
(ஐங்குறுநூறு:மருதம்:7:1-2)
[நனி = மிக]

வாழி ஆதன்! வாழி அவினி! அறம் மிகவும் பெருகுக! அறம் அல்லாதது அழிக!
"வாழி ஆதன்! வாழி அவினி!
அரசுமுறை செய்க! களவுஇல் லாகுக!
(ஐங்குறுநூறு:மருதம்:8:1-2)
[முறை = நீதி]

வாழி ஆதன்! வாழி அவினி! அரசு நடுநிலை என்னும் நீதி ஆற்றுக! களவு இல்லாமல் ஆகுக!
"வாழி ஆதன்! வாழி அவினி!
நன்றுபெரிது சிறக்க! தீதுஇல் லாகுக!
(ஐங்குறுநூறு:மருதம்:9:1-2)

நல்லது பெரிதும் செழிக்க! தீயது இல்லாமல் ஆகுக!
"வாழி ஆதன்! வாழி அவினி!
மாரி வாய்க்க! வளம்நனி சிறக்க!
(ஐங்குறுநூறு:மருதம்:10:1-2)
[மாரி = மழை; வாய் = நிகழ்]

வாழி ஆதன்! வாழி அவினி! மழை தப்பாது நிகழ்க! வளம் மிகவும் பெருகுக!

என்று தலைவி விரும்பி வாழ்த்தியதாக ஓரம்போகி பாடுகிறான்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jan 05, 2012 12:17 pm

kirubanandan R P wrote:தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி !தட்சிணாயனம் --அதாவது சூரியனை விட்டு விலகி செல்லுகிற பூமி தை மாதத்தில் உத்திராயணம் திரும்பி சூரியனை நோக்கி செல்லிகிறது !இந்த திருப்பத்தை ஒட்டியே ஆண்டு கணக்கை ஆதி இந்துக்களான தமிழர்கள் அமைத்தார்கள் !அதுவே யூதர்களின் ஆண்டு கணக்காக மோசே முலம் கொடுக்க பட்டது !அதை சரியாக நிதானிக்காமல் கிறிஸ்தவர்கள் ஜனவரியை புத்தாண்டு ஆக்கினார்கள் !தை புத்தாண்டே சரியான புத்தாண்டு என்பது எனது கருத்து !தமிழ் இலக்கியங்களில் புலமையுடைய கலைஞர் தை புத்தாண்டு பற்றி முக்கிய படுத்தினார் !ஆனால் விஞ்ஞான விளக்கம் கொடுக்க வில்லை !சித்திரை என்பது எந்த வகையிலும் சரியல்ல !!


இலக்கியங்களில் தைப்பொங்கல் மட்டுமல்ல பல விழாக்கள் பற்றிய குறிப்பு இருக்கிறது. தையில் அறுவடை செய்து முடிவுக்கு வருகிறார்கள். இது தொடக்கமல்ல. விவசாய அடிப்படையில் பார்த்தால் விதை விதைக்கும் காலம் தான் தொடக்க காலம். தாட்சாயனம் தொடங்குவது வருடத்தின் தொடக்கமாகாது. புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் நம்மிடையே ஒரு சில நூறாண்டுகளுக்கு முன் எழுந்த பழக்கம். இலக்கியங்களில் குறிப்பிடப்படும் சித்திரை திருவிழா சித்திரை பௌர்ணமி விழாவை குறிக்கிறது. தெலுங்கு வருடப் பிறப்பு உகாதி, மலையாள வருடப் பிறப்பு விஷு ஆகியவை அவர்கள் ஆண்டின் முதல் நாளில் தான் கொண்டாடப்படுகிறது. தாட்சாயனம் சரி என்றால் அனைத்து இந்துக்களும் (தெலுங்கு, மலையாளி ) இதை கொண்டாட வேண்டும்.

தமிழ் ஆண்டின் முதல் மாதம் சித்திரை அதன் முதல் தினம் தான் சரி.





சதாசிவம்
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 05, 2012 12:19 pm

சதாசிவம் wrote:இலக்கியங்களில் தைப்பொங்கல் மட்டுமல்ல பல விழாக்கள் பற்றிய குறிப்பு இருக்கிறது. தையில் அறுவடை செய்து முடிவுக்கு வருகிறார்கள். இது தொடக்கமல்ல. விவசாய அடிப்படையில் பார்த்தால் விதை விதைக்கும் காலம் தான் தொடக்க காலம். தாட்சாயனம் தொடங்குவது வருடத்தின் தொடக்கமாகாது. புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் நம்மிடையே ஒரு சில நூறாண்டுகளுக்கு முன் எழுந்த பழக்கம். இலக்கியங்களில் குறிப்பிடப்படும் சித்திரை திருவிழா சித்திரை பௌர்ணமி விழாவை குறிக்கிறது. தெலுங்கு வருடப் பிறப்பு உகாதி, மலையாள வருடப் பிறப்பு விஷு ஆகியவை அவர்கள் ஆண்டின் முதல் நாளில் தான் கொண்டாடப்படுகிறது. தாட்சாயனம் சரி என்றால் அனைத்து இந்துக்களும் (தெலுங்கு, மலையாளி ) இதை கொண்டாட வேண்டும்.

தமிழ் ஆண்டின் முதல் மாதம் சித்திரை அதன் முதல் தினம் தான் சரி.
இதை நானும் ஆமோதிக்கிறேன் நன்றி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jan 05, 2012 12:24 pm

எங்களுடைய ஆஃபிஸ்யில் எப்போது விடுமுறை தருகிறார்களோ அப்போதுதான் எங்களுக்கு புத்தாண்டு சிரி



yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Jan 06, 2012 6:48 pm

அறிஞர்களின் கருத்துக்களுக்கு நன்றி.
சித்திரைப் பிறப்புத் தான்
தமிழரின் புத்தாண்டு என்பது
இந்தியாவில் நிகழ்ந்த ஆரியப் புரட்சிக்கு
முன்னையதா? பின்னையதா?
பின்னையது என்பதால் தானே
இன்று வரை பின்பற்றுகிறோம்...
தைப்பொங்கல் தான்
தமிழரின் புத்தாண்டு என்பது
சில ஆண்டுகளுக்கு முன்
முழங்கினாலும் கூட
தொன்மையிலிருந்து கொண்டாடியதற்கு
சான்றுகள் போதாமைக்கு
கடற்கோளும் காரணமாயிற்று...
எப்படி இருப்பினும்
வள்ளுவர் ஆண்டு என
பத்திரிகையில் குறிப்பிடுகிறார்களே
அது
தமிழரின் ஆண்டு இல்லையா?
சித்திரைப் பிறப்பையோ
தைப்பொங்கலையோ
தமிழரின் புத்தாண்டு என்பதற்கு
இந்தியாவில் நிகழ்ந்த
ஆரியப் புரட்சிக்கு முன்
அல்லது
குமரிக்கண்டம்
கடற்கோள் காவுகொள்ள முன்
இருந்த நூல்களின் சான்று
தேவையாமே!
ஏனெனில்
ஆரியப் புரட்சிக்குப் பின்
தமிழர் பண்பாடு சிதைக்கப்பட்டதால்
தைப்பொங்கலிற்குப் பதிலாக
சித்திரைப் பிறப்பை
தமிழரின் புத்தாண்டு என
பின்பற்றியிருக்கலாம் என்பதை
சான்றுகளின்றி ஏற்க முடியாதே!
முடிவற்ற ஐயங்களாக நீளும்
இந்தச் சிக்கலுக்கு
அறிஞர்களின் கருத்துகள்
முற்றுப்புள்ளி வைக்குமா?



உங்கள் யாழ்பாவாணன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2012 6:54 pm

சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு.

http://www.eegarai.net/t17306-topic



தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Jan 06, 2012 7:04 pm

சிவா wrote:சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு.

http://www.eegarai.net/t17306-topic

நானும் ஏற்கிறேன்
கருத்துக் கணிப்பும் துணை நிற்க
தாங்கள் சுட்டும்
ஈகரைப் பதிவும் சான்று கூறுகிறதே!
அப்படியாயின்
நம்மாளுகள் சிலர்
ஏன் தான்
தைப்பொங்கலென முரண்டுபிடிக்கிறார்களோ
எனக்குத் தெரியவில்லையே!




உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக