புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்... நுகர்வோர் சட்டத்தின் பார்வையில் அம்பானியும் அய்யாசாமியும் சரிசமம் தான்
Page 1 of 1 •
கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்... நுகர்வோர் சட்டத்தின் பார்வையில் அம்பானியும் அய்யாசாமியும் சரிசமம் தான்
#706352- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்...
செல்போன் சரியில்லை என்று வழக்கு தொடுத்தார்... அம்பானியைக் கைது செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம்
2. நுகர்வோர் சட்டத்தின் பார்வையில் அம்பானியும் அய்யாசாமியும் சரிசமம்தான்
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா ஒரு பேட்டியில் கூறியிருப்பார், ‘இங்குள்ள நல்லவர்களைக் கெட்டவர்கள் அழித்து விடுவார்கள். கெட்டவர்களைக் கடவுள் அழித்து விடுவார். கெட்டது தெரிந்த நல்லவர்களால்தான் நல்லபடியாக வாழ முடியும்...’ என்று.
இதையேதான் பெரியவர்கள், ‘களவும் கற்று மற’ என்று சொல்லியிருக்கிறார்கள். களவு கற்கச் சொன்னது களவாடுவதற்காக அல்ல, களவாணிகளிடமிருந்து தப்பிக்க. அவர்கள் சொல்லியிருப்பது தகவல் தெரிந்துகொள்வது, அதையொட்டி விழிப்புணர்வுவை வளர்த்துக்கொள்வது.
நுகர்வோருக்கும் இது பொருந்தும். தங்களுக்குரிய உரிமைகள் என்னவென்று தெரிந்து கொண்டால்தான் தாங்கள் ஏமாற்றப்படும்போது, தட்டிக் கேட்க முடியும், அதிலிருந்து மீள முடியும்.
நுகர்வோர் உரிமைகள் குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இன்றைய நிலையில் நுகர்வோர் விழிப்புணர்வு நம்மிடையே எந்த அளவில் உள்ளது?
‘சட்டங்களின் அடிப்படைத் தத்துவங்களைச் சமுதாயத்தில் எல்லோரும் புரிந்து கொண்டிருப்பதாகத்தான் சட்டம் சொல்கிறது. ஆனால், நம்மில் எத்தனை பேர் சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வோடு இருக்கிறோம் என்ற கேள்வி, எப்போதும் கசப்பான பதில்களைத்தான் தந்திருக்கிறது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல’ - இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? மாநில நுகர்வோர் கமிஷனின் நீதிபதியா இருந்த எஸ்.ஏ.காதர். ஆம், நமது நுகர்வோர் விழிப்புணர்வு அந்த அளவுக்குப் பலஹீனமாகவே இருந்து வந்துள்ளது. இப்போதுதான் மெல்ல மெல்ல அது குறித்த அக்கறை வளர்ந்து வருகிறது.
மேற்கத்திய நாடுகளில் நுகர்வோர் விழிப்புணர்வு அதிகம். எனவேதான் அங்கு வாங்கும் பொருளிலோ அல்லது சேவையிலோ குறைகள் இருப்பது அபூர்வம். அதுவும் கூட கவனக்குறைவாகத்தான் இருக்குமே தவிர, நம்மூரில் உள்ளதுபோல் ஏமாற்றுத்தனம் இருக்காது. இதற்குக் காரணம், அங்குள்ள மக்களிடம் உள்ள விழிப்புணர்வும் நுகர்வோர் அமைப்புகள் அங்கு வலுவாக அமைந்திருப்பதும்தான்.
தமிழகத்தில் 1910ம் ஆண்டில்தான் முதல் நுகர்வோர் கூட்டு இயக்கம் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு 1986 வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அமைப்புகள் அமைந்தன. ஆனால், அவை கூட நகரங்களையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந்நிலையில் 1991ம் ஆண்டு ஃபெட்காட் என்கிற நுகர்வோர் கூட்டமைப்பு (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் 18 நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பாக இருந்த ஃபெட்காட்டில் இன்று சுமார் 370க்கும் மேற்பட்ட நுகர்வோர் குழுக்கள் இணைந்துள்ளன. இன்று இந்த அமைப்புதான் தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய தன்னார்வ நுகர்வோர் அமைப்பாகத் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு இதழ்களையும் பிரசுரங்களையும் வெளியிட்டு, நுகர்வோருக்கு பல்வேறு வகைகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது இந்த அமைப்பு.
நம்மாலும் ஒரு நுகர்வோர் குழுவை ஆரம்பிக்க முடியும். சேவை, வர்த்தக அநீதிகளுக்கு எதிராகப் போராட முடியும். இதற்கு ஏழு பேர் இருந்தால் போதும். கூடவே, கொஞ்சம் தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் வேண்டும்.
கில்லாடி ஏமாற்று நிறுவனங்களையும் கிறுகிறுக்க வைக்கும் சேவைக் குறைபாடுகளையும் தட்டிக் கேட்க முடியும். நமது பிரச்சினை என்றல்ல, நமது நண்பரின் பிரச்சினைக்காகவும் களம் இறங்கி நாமே குரல் கொடுக்க முடியும், வாதாட முடியும்.
குழுவை எப்படி ஆரம்பிப்பது? எப்படி வாதாடுவது? அதன் நடைமுறைகளை வரும் இதழ்களில் பார்க்கலாம்.
அதற்கு முன், தான் வாங்கிய செல்போன் பழுதடைந்து, அதனை சரிசெய்து தராத செல்போன் கம்பெனிகள் மீது வழக்குத் தொடர்ந்து, நஷ்ட ஈடு வாங்கிய இருவரின் அனுபவங்களை இந்த வாரம் பார்க்கலாம்.
இன்றைக்கு செல்போனின் உபயோகம் பேசுவது, கேட்பது, எஸ்.எம்.எஸ். என்பவற்றைக் கடந்து இணையம், காமிரா, கேம்ஸ், 2ஜி, 3ஜி என்று பயன்பாட்டின் பன்முகத்தன்மைகளுடன் ஒரு நெடும்பாதையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. போன் வாங்குகிறவர்களும் தங்களுக்குத் தேவையான அம்சங்கள் கொண்ட போனைத் தேடிப் பிடித்து வாங்குகிறார்கள். இதனால், ஒவ்வொரு செல்போன் கம்பெனியும் தங்கள் செல்போனில் புதிது புதிதாக அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
எல்லாம் சரிதான். ஆனால், நாம் ஒரு போனை ஏதோ நமக்குப் பிடித்த அல்லது அத்தியாவசியமான ஓர் அம்சத்துக்காகத் தேர்ந்தெடுத்து வாங்குகிறோம். ஆனால், அந்த அம்சம் சரியாக வேலை செய்யவில்லை என்றால்?
பாண்டியனுக்கும் அதுதான் நடந்தது. சென்னையைச் சேர்ந்த பாண்டியன், சென்னையில் ஒரு நோக்கியா ஷோரூமில் எண். 81 மாடல் நோக்கியா செல்போனை 14,200 ரூபாக்கு வாங்கினார். ஆனால், அதில் அவருக்குப் பிடித்த அம்சமான கேம்ஸ் வேலை செய்யவில்லை. பின்னர், நோக்கியா சர்வீஸ் சென்டரில் போய்க் கொடுத்தபோது, சில நாட்கள் கழித்து சரிசெய்து கொடுத்தனர். ஆனால், சில நாட்களில் மீண்டும் டிஸ்ப்ளே வேலை செய்யவில்லை. மீண்டும் இது குறித்து நோக்கியா டீலரிடம் கூற, அவர் நேரடி சேவை மையத்தை அணுகச் சொன்னார். அவர்களிடம் செல்போனைக் கொடுத்தபோது மூன்று மாதங்கள் கடந்தும் சரி செய்யாமலே திருப்பிக் கொடுத்தனர். அதுமட்டுமின்றி, சர்வீஸ் கட்டணம் என்று 2,500 ரூபா பெற்றுக் கொண்டனர். இதுகுறித்து, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்காடி வென்றிருக்கிறார் பாண்டியன்.
வழக்கில் வாதாடிய பாண்டியனின் வழக்கறிஞர் திலகேஷ்வரன் கூறும்போது, "சேவைக்குறைபாடு மற்றும் அலட்சியம் ஆகியவற்றின்கீழ் புகாரளிக்கப்பட்டது. அதனால், அவர் செல்போன் வாங்கியதற்கான ஆதாரங்கள், சர்வீஸ் கட்டணம் வாங்கியதற்கான ரசீதுகள் உட்பட அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. நாங்கள் அளித்த மனுவில் பழுதான நோக்கியா செல்போனை மாற்றி, புதிய செல்போன் கொடுக்கவும் மன உளைச்சலுக்காக 35 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கவும் நுகர்வோர் நீதிமன்ற வழக்கு செலவுக்காக 7,000 ரூபாய் வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தோம். மனுவை விசாரித்த நீதிபதி பூதநாதன், உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், ‘பழுதான நோக்கியா செல்போனை விற்பனை செய்ததற்காக நோக்கியா நிறுவனம் பாதிக்கப்பட்ட பாண்டியனுக்கு பழுதான செல்போனை மாற்றிக் கொண்டு, அதே மாடல் புதிய செல்போனை வழங்க வேண்டும் அல்லது செல்போனுக்கான தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும்.
மேலும் இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். 2 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவாக கொடுக்க வேண்டும். 6 வாரங்களுக்குள் இந்தத் தொகைகளை கொடுக்காவிட்டால், இத்தொகைகளுக்கு 9 சதவிகிதம் வட்டியுடன் சேர்த்துகொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்’ என்றார்.
இதேபோல சென்னையைச் சேர்ந்த டெலிபோன் ஹார்டுவேர் சப்ளையரான ஸுல்ஃபிகர்,கடந்த 2003ம் ஆண்டில் சென்னையில் உள்ள ரிலையன்ஸ் கடையில் 21 ஆயிரம் ரூபாய் கொடுத்து செல்போன் ஒன்று வாங்கினார். வாங்கிய 24வது நாளிலேயே அந்த செல்போன், பிரச்சினை செய்ய ஆரம்பித்துள்ளது.
வாங்கிய கடையிலேயே இது பற்றி வாய் மொழியாக பல முறை புகார் கூறியுள்ளார். ஆனால், கடை ஊழியர்கள் இதோ, அதோ என இழுத்தடித்துள்ளனர். அதன் பின்னர் எழுத்துப்பூர்வமாக அந்தக் கடையில் ஒரு புகாரைத் தந்து விட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், ரிலையன்ஸ் மண்டல மற்றும் தலைமை அலுவலகத்துக்கும் புகார்களை அனுப்பியுள்ளார்.
ஆனால், யார் காதிலோ ஊதிய சங்காக ஒருவரும் இவரின் புகாரைக் கண்டுகொள்ளவில்லை. எனவே, 2004ம் ஆண்டில் சென்னையில் உள்ள நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் ஏ.பழனியப்பன் என்ற வழக்கறிஞர் உதவியுடன், செல்போன் வாங்கியதற்கான ரசீது முதல், ரிலையன்ஸ் தலைவர் அம்பானிக்கு எழுதிய கடிதம் வரை அத்தனை நகல்களையும் இணைத்து புகார் செய்தார்.
2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வந்த இந்த வழக்கில், தனது பொருளை விற்ற நிறுவனம் முறையாக பழுதுபார்க்காமல் நுகர்வோரை அலைக்கழித்ததாகக் கூறி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டது. அத்துடன், செல்போனுக்கான 21 ஆயிரம் ரூபாயையும் மனுதாரருக்கு திருப்பிக் கொடுக்குமாறு ஆணையிட்டது. இந்தத் தீர்ப்பை ரிலையன்ஸ் உட்பட யாரும் கண்டுகொள்ளவே இல்லை.
பதினெட்டு மாதங்கள் பொறுத்திருந்த ஸுல்ஃபிகர், கடந்த ஜூலை மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்ற ஆணை நிறைவேற்று மனு ஒன்றை நுகர்வோர் மன்றத்தில் தாக்கல் செய்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
இதைத்தொடர்ந்து 2010 ஏப்ரல் முதல் வாரத்தில் மும்பை போலீசாருக்கு நீதிமன்ற ஆணை சென்று சேர்ந்ததை அடுத்து, இது பற்றி முகேஷ் அம்பானியின் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க, உடனடியாக சென்னையில் உள்ள ரிலையன்ஸ் அதிகாரிகள் ஸுல்ஃபிகரைத் தேடி வந்து 71 ஆயிரம் ரூபாய்க்கான ‘டிடி’யை கையில் திணித்து விட்டு, மனுவை வாபஸ் பெறுமாறு கேட்டுள்ளனர்.
ஒரு சாமானியன் தனக்கு நீதி கிடைக்காத நிலையில், அம்பானியையே எதிர்த்துப் போராடி வெல்ல முடியும்போது, நம்ம ஊர் அய்யாசாமிகளை எதிர்த்துப் போராடி நியாயம் பெறுவது சிரமமா என்ன?
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
செல்போன் சரியில்லை என்று வழக்கு தொடுத்தார்... அம்பானியைக் கைது செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம்
2. நுகர்வோர் சட்டத்தின் பார்வையில் அம்பானியும் அய்யாசாமியும் சரிசமம்தான்
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா ஒரு பேட்டியில் கூறியிருப்பார், ‘இங்குள்ள நல்லவர்களைக் கெட்டவர்கள் அழித்து விடுவார்கள். கெட்டவர்களைக் கடவுள் அழித்து விடுவார். கெட்டது தெரிந்த நல்லவர்களால்தான் நல்லபடியாக வாழ முடியும்...’ என்று.
இதையேதான் பெரியவர்கள், ‘களவும் கற்று மற’ என்று சொல்லியிருக்கிறார்கள். களவு கற்கச் சொன்னது களவாடுவதற்காக அல்ல, களவாணிகளிடமிருந்து தப்பிக்க. அவர்கள் சொல்லியிருப்பது தகவல் தெரிந்துகொள்வது, அதையொட்டி விழிப்புணர்வுவை வளர்த்துக்கொள்வது.
நுகர்வோருக்கும் இது பொருந்தும். தங்களுக்குரிய உரிமைகள் என்னவென்று தெரிந்து கொண்டால்தான் தாங்கள் ஏமாற்றப்படும்போது, தட்டிக் கேட்க முடியும், அதிலிருந்து மீள முடியும்.
நுகர்வோர் உரிமைகள் குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இன்றைய நிலையில் நுகர்வோர் விழிப்புணர்வு நம்மிடையே எந்த அளவில் உள்ளது?
‘சட்டங்களின் அடிப்படைத் தத்துவங்களைச் சமுதாயத்தில் எல்லோரும் புரிந்து கொண்டிருப்பதாகத்தான் சட்டம் சொல்கிறது. ஆனால், நம்மில் எத்தனை பேர் சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வோடு இருக்கிறோம் என்ற கேள்வி, எப்போதும் கசப்பான பதில்களைத்தான் தந்திருக்கிறது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல’ - இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? மாநில நுகர்வோர் கமிஷனின் நீதிபதியா இருந்த எஸ்.ஏ.காதர். ஆம், நமது நுகர்வோர் விழிப்புணர்வு அந்த அளவுக்குப் பலஹீனமாகவே இருந்து வந்துள்ளது. இப்போதுதான் மெல்ல மெல்ல அது குறித்த அக்கறை வளர்ந்து வருகிறது.
மேற்கத்திய நாடுகளில் நுகர்வோர் விழிப்புணர்வு அதிகம். எனவேதான் அங்கு வாங்கும் பொருளிலோ அல்லது சேவையிலோ குறைகள் இருப்பது அபூர்வம். அதுவும் கூட கவனக்குறைவாகத்தான் இருக்குமே தவிர, நம்மூரில் உள்ளதுபோல் ஏமாற்றுத்தனம் இருக்காது. இதற்குக் காரணம், அங்குள்ள மக்களிடம் உள்ள விழிப்புணர்வும் நுகர்வோர் அமைப்புகள் அங்கு வலுவாக அமைந்திருப்பதும்தான்.
தமிழகத்தில் 1910ம் ஆண்டில்தான் முதல் நுகர்வோர் கூட்டு இயக்கம் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு 1986 வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அமைப்புகள் அமைந்தன. ஆனால், அவை கூட நகரங்களையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந்நிலையில் 1991ம் ஆண்டு ஃபெட்காட் என்கிற நுகர்வோர் கூட்டமைப்பு (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் 18 நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பாக இருந்த ஃபெட்காட்டில் இன்று சுமார் 370க்கும் மேற்பட்ட நுகர்வோர் குழுக்கள் இணைந்துள்ளன. இன்று இந்த அமைப்புதான் தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய தன்னார்வ நுகர்வோர் அமைப்பாகத் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு இதழ்களையும் பிரசுரங்களையும் வெளியிட்டு, நுகர்வோருக்கு பல்வேறு வகைகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது இந்த அமைப்பு.
நம்மாலும் ஒரு நுகர்வோர் குழுவை ஆரம்பிக்க முடியும். சேவை, வர்த்தக அநீதிகளுக்கு எதிராகப் போராட முடியும். இதற்கு ஏழு பேர் இருந்தால் போதும். கூடவே, கொஞ்சம் தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் வேண்டும்.
கில்லாடி ஏமாற்று நிறுவனங்களையும் கிறுகிறுக்க வைக்கும் சேவைக் குறைபாடுகளையும் தட்டிக் கேட்க முடியும். நமது பிரச்சினை என்றல்ல, நமது நண்பரின் பிரச்சினைக்காகவும் களம் இறங்கி நாமே குரல் கொடுக்க முடியும், வாதாட முடியும்.
குழுவை எப்படி ஆரம்பிப்பது? எப்படி வாதாடுவது? அதன் நடைமுறைகளை வரும் இதழ்களில் பார்க்கலாம்.
அதற்கு முன், தான் வாங்கிய செல்போன் பழுதடைந்து, அதனை சரிசெய்து தராத செல்போன் கம்பெனிகள் மீது வழக்குத் தொடர்ந்து, நஷ்ட ஈடு வாங்கிய இருவரின் அனுபவங்களை இந்த வாரம் பார்க்கலாம்.
இன்றைக்கு செல்போனின் உபயோகம் பேசுவது, கேட்பது, எஸ்.எம்.எஸ். என்பவற்றைக் கடந்து இணையம், காமிரா, கேம்ஸ், 2ஜி, 3ஜி என்று பயன்பாட்டின் பன்முகத்தன்மைகளுடன் ஒரு நெடும்பாதையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. போன் வாங்குகிறவர்களும் தங்களுக்குத் தேவையான அம்சங்கள் கொண்ட போனைத் தேடிப் பிடித்து வாங்குகிறார்கள். இதனால், ஒவ்வொரு செல்போன் கம்பெனியும் தங்கள் செல்போனில் புதிது புதிதாக அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
எல்லாம் சரிதான். ஆனால், நாம் ஒரு போனை ஏதோ நமக்குப் பிடித்த அல்லது அத்தியாவசியமான ஓர் அம்சத்துக்காகத் தேர்ந்தெடுத்து வாங்குகிறோம். ஆனால், அந்த அம்சம் சரியாக வேலை செய்யவில்லை என்றால்?
பாண்டியனுக்கும் அதுதான் நடந்தது. சென்னையைச் சேர்ந்த பாண்டியன், சென்னையில் ஒரு நோக்கியா ஷோரூமில் எண். 81 மாடல் நோக்கியா செல்போனை 14,200 ரூபாக்கு வாங்கினார். ஆனால், அதில் அவருக்குப் பிடித்த அம்சமான கேம்ஸ் வேலை செய்யவில்லை. பின்னர், நோக்கியா சர்வீஸ் சென்டரில் போய்க் கொடுத்தபோது, சில நாட்கள் கழித்து சரிசெய்து கொடுத்தனர். ஆனால், சில நாட்களில் மீண்டும் டிஸ்ப்ளே வேலை செய்யவில்லை. மீண்டும் இது குறித்து நோக்கியா டீலரிடம் கூற, அவர் நேரடி சேவை மையத்தை அணுகச் சொன்னார். அவர்களிடம் செல்போனைக் கொடுத்தபோது மூன்று மாதங்கள் கடந்தும் சரி செய்யாமலே திருப்பிக் கொடுத்தனர். அதுமட்டுமின்றி, சர்வீஸ் கட்டணம் என்று 2,500 ரூபா பெற்றுக் கொண்டனர். இதுகுறித்து, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்காடி வென்றிருக்கிறார் பாண்டியன்.
வழக்கில் வாதாடிய பாண்டியனின் வழக்கறிஞர் திலகேஷ்வரன் கூறும்போது, "சேவைக்குறைபாடு மற்றும் அலட்சியம் ஆகியவற்றின்கீழ் புகாரளிக்கப்பட்டது. அதனால், அவர் செல்போன் வாங்கியதற்கான ஆதாரங்கள், சர்வீஸ் கட்டணம் வாங்கியதற்கான ரசீதுகள் உட்பட அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. நாங்கள் அளித்த மனுவில் பழுதான நோக்கியா செல்போனை மாற்றி, புதிய செல்போன் கொடுக்கவும் மன உளைச்சலுக்காக 35 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கவும் நுகர்வோர் நீதிமன்ற வழக்கு செலவுக்காக 7,000 ரூபாய் வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தோம். மனுவை விசாரித்த நீதிபதி பூதநாதன், உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், ‘பழுதான நோக்கியா செல்போனை விற்பனை செய்ததற்காக நோக்கியா நிறுவனம் பாதிக்கப்பட்ட பாண்டியனுக்கு பழுதான செல்போனை மாற்றிக் கொண்டு, அதே மாடல் புதிய செல்போனை வழங்க வேண்டும் அல்லது செல்போனுக்கான தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும்.
மேலும் இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். 2 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவாக கொடுக்க வேண்டும். 6 வாரங்களுக்குள் இந்தத் தொகைகளை கொடுக்காவிட்டால், இத்தொகைகளுக்கு 9 சதவிகிதம் வட்டியுடன் சேர்த்துகொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்’ என்றார்.
இதேபோல சென்னையைச் சேர்ந்த டெலிபோன் ஹார்டுவேர் சப்ளையரான ஸுல்ஃபிகர்,கடந்த 2003ம் ஆண்டில் சென்னையில் உள்ள ரிலையன்ஸ் கடையில் 21 ஆயிரம் ரூபாய் கொடுத்து செல்போன் ஒன்று வாங்கினார். வாங்கிய 24வது நாளிலேயே அந்த செல்போன், பிரச்சினை செய்ய ஆரம்பித்துள்ளது.
வாங்கிய கடையிலேயே இது பற்றி வாய் மொழியாக பல முறை புகார் கூறியுள்ளார். ஆனால், கடை ஊழியர்கள் இதோ, அதோ என இழுத்தடித்துள்ளனர். அதன் பின்னர் எழுத்துப்பூர்வமாக அந்தக் கடையில் ஒரு புகாரைத் தந்து விட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், ரிலையன்ஸ் மண்டல மற்றும் தலைமை அலுவலகத்துக்கும் புகார்களை அனுப்பியுள்ளார்.
ஆனால், யார் காதிலோ ஊதிய சங்காக ஒருவரும் இவரின் புகாரைக் கண்டுகொள்ளவில்லை. எனவே, 2004ம் ஆண்டில் சென்னையில் உள்ள நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் ஏ.பழனியப்பன் என்ற வழக்கறிஞர் உதவியுடன், செல்போன் வாங்கியதற்கான ரசீது முதல், ரிலையன்ஸ் தலைவர் அம்பானிக்கு எழுதிய கடிதம் வரை அத்தனை நகல்களையும் இணைத்து புகார் செய்தார்.
2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வந்த இந்த வழக்கில், தனது பொருளை விற்ற நிறுவனம் முறையாக பழுதுபார்க்காமல் நுகர்வோரை அலைக்கழித்ததாகக் கூறி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டது. அத்துடன், செல்போனுக்கான 21 ஆயிரம் ரூபாயையும் மனுதாரருக்கு திருப்பிக் கொடுக்குமாறு ஆணையிட்டது. இந்தத் தீர்ப்பை ரிலையன்ஸ் உட்பட யாரும் கண்டுகொள்ளவே இல்லை.
பதினெட்டு மாதங்கள் பொறுத்திருந்த ஸுல்ஃபிகர், கடந்த ஜூலை மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்ற ஆணை நிறைவேற்று மனு ஒன்றை நுகர்வோர் மன்றத்தில் தாக்கல் செய்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
இதைத்தொடர்ந்து 2010 ஏப்ரல் முதல் வாரத்தில் மும்பை போலீசாருக்கு நீதிமன்ற ஆணை சென்று சேர்ந்ததை அடுத்து, இது பற்றி முகேஷ் அம்பானியின் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க, உடனடியாக சென்னையில் உள்ள ரிலையன்ஸ் அதிகாரிகள் ஸுல்ஃபிகரைத் தேடி வந்து 71 ஆயிரம் ரூபாய்க்கான ‘டிடி’யை கையில் திணித்து விட்டு, மனுவை வாபஸ் பெறுமாறு கேட்டுள்ளனர்.
ஒரு சாமானியன் தனக்கு நீதி கிடைக்காத நிலையில், அம்பானியையே எதிர்த்துப் போராடி வெல்ல முடியும்போது, நம்ம ஊர் அய்யாசாமிகளை எதிர்த்துப் போராடி நியாயம் பெறுவது சிரமமா என்ன?
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
Re: கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்... நுகர்வோர் சட்டத்தின் பார்வையில் அம்பானியும் அய்யாசாமியும் சரிசமம் தான்
#706453இதேபோல சென்னையைச் சேர்ந்த டெலிபோன் ஹார்டுவேர் சப்ளையரான ஸுல்ஃபிகர்,கடந்த 2003ம் ஆண்டில் சென்னையில் உள்ள ரிலையன்ஸ் கடையில் 21 ஆயிரம் ரூபாய் கொடுத்து செல்போன் ஒன்று வாங்கினார். வாங்கிய 24வது நாளிலேயே அந்த செல்போன், பிரச்சினை செய்ய ஆரம்பித்துள்ளது.
வாங்கிய கடையிலேயே இது பற்றி வாய் மொழியாக பல முறை புகார் கூறியுள்ளார். ஆனால், கடை ஊழியர்கள் இதோ, அதோ என இழுத்தடித்துள்ளனர். அதன் பின்னர் எழுத்துப்பூர்வமாக அந்தக் கடையில் ஒரு புகாரைத் தந்து விட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், ரிலையன்ஸ் மண்டல மற்றும் தலைமை அலுவலகத்துக்கும் புகார்களை அனுப்பியுள்ளார்.
இது அடிக்கடி நடக்கும் விடயம்.கடை ஊழியர்கள் எப்போதுமே செல்போன் பழுதை பற்றி கவலைபடுவதே இல்லை.விற்பனை வரிகளையும் நம் மீது திணித்து தரமில்லாத பொருட்கலயும் நுகர்வோரின் தலையில் கட்டிவிட்டு லாபத்தில் பங்கிட்டுக்கொள்ளும் இவ்ர்களை என்னென்று சொல்வது?
வாங்கிய கடையிலேயே இது பற்றி வாய் மொழியாக பல முறை புகார் கூறியுள்ளார். ஆனால், கடை ஊழியர்கள் இதோ, அதோ என இழுத்தடித்துள்ளனர். அதன் பின்னர் எழுத்துப்பூர்வமாக அந்தக் கடையில் ஒரு புகாரைத் தந்து விட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், ரிலையன்ஸ் மண்டல மற்றும் தலைமை அலுவலகத்துக்கும் புகார்களை அனுப்பியுள்ளார்.
இது அடிக்கடி நடக்கும் விடயம்.கடை ஊழியர்கள் எப்போதுமே செல்போன் பழுதை பற்றி கவலைபடுவதே இல்லை.விற்பனை வரிகளையும் நம் மீது திணித்து தரமில்லாத பொருட்கலயும் நுகர்வோரின் தலையில் கட்டிவிட்டு லாபத்தில் பங்கிட்டுக்கொள்ளும் இவ்ர்களை என்னென்று சொல்வது?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்... நுகர்வோர் சட்டத்தின் பார்வையில் அம்பானியும் அய்யாசாமியும் சரிசமம் தான்
#706463- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல பதிவு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்... நுகர்வோர் சட்டத்தின் பார்வையில் அம்பானியும் அய்யாசாமியும் சரிசமம் தான் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்... நுகர்வோர் சட்டத்தின் பார்வையில் அம்பானியும் அய்யாசாமியும் சரிசமம் தான் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்... நுகர்வோர் சட்டத்தின் பார்வையில் அம்பானியும் அய்யாசாமியும் சரிசமம் தான் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்... நுகர்வோர் சட்டத்தின் பார்வையில் அம்பானியும் அய்யாசாமியும் சரிசமம் தான் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
Re: கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்... நுகர்வோர் சட்டத்தின் பார்வையில் அம்பானியும் அய்யாசாமியும் சரிசமம் தான்
#706466- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
Re: கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்... நுகர்வோர் சட்டத்தின் பார்வையில் அம்பானியும் அய்யாசாமியும் சரிசமம் தான்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|