புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_m10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_m10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_m10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_m10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_m10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_m10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_m10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_m10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_m10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_m10 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தாண்டு ராசிபலன் - 2012


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 1:18 pm

First topic message reminder :

மேஷம்

அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

குரு பெயர்ச்சிக்குப் பிறகு குதூகலம்!

சவால் விடுவதையும் அதை சமாளிப்பதையும் கைவந்த கலையாகக் கொண்ட மேஷ ராசி நேயர்களே!

தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் வாழ்க்கை நடத்துபவர்கள் நீங்கள் தான். தாமாகவே உதவி செய்யவும் முன் வருவீர்கள். தடம் மாறி செல்பவர்களைக் கண்டால் தட்டிக் கேட்கவும் தயங்கமாட்டீர்கள். இப்படிப்பட்ட உங்களுக்கு இந்த புத்தாண்டு 2012-ன் கிரக நிலைகள் சாதகமாக இருக்கின்றனவா? என்பதைப் பற்றி பார்ப்போம்.

வருடத் தொடக்கத்தில் ஜென்ம குரு, விரயாதிபதி குரு ஜென்மத்தில் சஞ்சரிக்கும் போது ஆண்டின் தொடக்கமே ஆதாயத்தைக் காட்டிலும், விரயம் அதிகரிக்குமா என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் இல்லத்தில் குதூகலம் பிறக்கும்.

1.1.2012 முதல் 16.5.2012 வரை

இக்காலத்தில் உங்கள் கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சியோடு வந்து உதவி செய்வர். வீட்டுத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ராசிநாதன் செவ்வாய் வருடத் தொடக்கத்தில் வக்ரம் ஆகவில்லை என்றாலும், ஜனவரி 22-ம் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். ஏப்ரல் 11-ம் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். அதுவரை ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பாசமாக பழகிய சகோதரர்கள் பக்குவமில்லாமல் பேசலாம். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

தொழில் வளர்ச்சியைப் பொறுத்த வரை எதிர்பார்த்ததைக் காட்டிலும் சிறப்பாகவே இருக்கும். தொழில் ஸ்தானத்தில் இருக்கும் கிரகம் மற்றும் அதன் அதிபதியைப் பொறுத்து தான் லாபத்தை நிர்ணயிக்க முடியும். அந்த அடிப்படையில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் என்றே சொல்ல வேண்டும். குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவதால் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பூர்வீக சொத்துக்களை விற்பதா? வைத்துக் கொள்ளுவதா? என்ற சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்து, நாமே சொத்தை வைத்துக் கொள்ளுவோம் என்ற முடிவு எடுப்பீர்கள்.

17.5.2012 முதல் 31.12.2012 வரை

இக்காலத்தில் ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கப்போகிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதி தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் விரயத்திற்கு ஏற்ற தனவரவு வந்து கொண்டே இருக்கும். எனவே, வீடு வாங்க வேண்டுமென்றால் வீடு வாங்குவீர்கள். காதிற்கு தோடு வாங்க வேண்டுமென்று சொன்னால் தோடு வாங்குவீர்கள். இந்தக்காலத்தில் குருவை கும்பிட்டு மகிழ்வதோடு வியாழக்கிழமை விரதமும் இருப்பது நல்லது.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சனி, செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்துச் செய்ய வேண்டிய காலமாகும். உத்தியோகம் மற்றும் தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். வி.ஆர்.எஸ் வாங்கிக் கொண்டவர்கள். ஏன் வேலையை விட்டு விலகினோம் என்று கவலைப்படுவார்கள். வெளிநாட்டுக்குச் சென்றவர்கள் அங்கு மற்றொரு மாற்றம் காண்பர்.

ஆயினும், அக்டோபர் மாதத்தில் குரு வக்ரம் பெறப் போகிறார். இதன் விளைவாக ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் சில நடைபெறலாம். இழப்புகளை ஈடுகட்டும் வாய்ப்பு கிடைக்கும்.

வருடக் கடைசியில் ராகு, கேதுக் களின் பெயர்ச்சி ஏற்படுகிறது. ஜென்ம ராசியில் கேதுவும், ஏழில் ராகுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். எனவே, ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஏமாற்றிய கூட்டாளிகள் இணைந்து வந்து செயல்படுவார்கள். பயணங்கள் அதிகரிக்கும். பணத் தேவைகள் கூடும்.

குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால் எதிர்ப்புகள் அகலும். இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோக முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரிஷப குருவின் பார்வையால் பாதிக்கு மேல் கடன்சுமை குறையும். பழைய பங்குதாரர்கள் விலகி, புதியவர்கள் இணைவார்கள்.

சாதனை நிகழ்த்த சமயோசித புத்தி தேவைப்படும் காலம்!

புத்தாண்டு 2012-ல் செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி இந்த ஐந்து கிரகங்களும் இடைஇடையே வக்ரம் பெறுகிறார்கள். இக்காலங்கள் பொற்காலங்களாக மாற வேண்டுமானால், சமயோசித புத்தியோடு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.

* செவ்வாயின் வக்ர காலத்தில் உடல் நலத்தில் கவனம் செலுத்தினால் தான் உற்சாகத்தோடு இயங்கலாம்.

* புதனின் வக்ர காலத்தில் உடன் பிறப்புகளை அனுசரித்து செல்வது நல்லது.

* சுக்ரனின் வக்ர காலத்தில் தன வரவில் தடை ஏற்பட்டு அகலும். பற்றாக் குறையைச் சமாளிக்க சிக்கனத்தைக் கடைபிடியுங்கள்.

* குருவின் வக்ரகாலத்தில் குடும்பப் பெரியவர்களின் குணம் அறிந்து செயல்படுவது நல்லது.

* சனியின் வக்ர காலத்தில் சஞ்சலங்கள் அதிகரிக்கலாம். தொழில் பங்குதாரர்களிடம் மட்டும் அல்லாமல், தொகை கொடுக்கல் வாங்கல்களிலும் விழிப்புணர்ச்சி கூடினால், விரயங்களைத் தவிர்க்கலாம்.

புத்தாண்டில் வளம் பெற முத்தான வழிபாடு!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால், செவ்வாய்க்கிழமை அன்று விரதங்களையும், வழிபாடுகளையும் மேற்கொண்டால், வியக்கும் வாழ்க்கை அமையும்.

முருகப்பெருமான் சந்நிதியில்,
`பன்னிரு கையோனே!
பக்தர்களைக் காப்பவனே!
என்னுடைய கனவுகளை
இனிதே நனவாக்கு!' என்று சொல்லுங்கள். உங்கள் கனவு நனவாகும்.



 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 1:30 pm

கும்பம்

(அவிட்டம் 3, 4-ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் பாதங்கள் வரை)

பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)

லட்சியங்கள் நிறைவேறும்

கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் கும்ப ராசி நேயர்களே!

மற்றவர்கள் அறிமுகம் செய்யாமலேயே, நெருங்கிப் பழகும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. உழைப்பை மூலதனமாக்கி முன்னேற்றம் காண்பீர்கள். பயணங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

உங்களுக்கு இந்த புத்தாண்டு அஷ்டமத்துச் சனி விலகும் ஆண்டாக இருப்பதால், அடுத்தடுத்து நல்ல நிகழ்ச்சிகள் கிடைக்குமா? நாளைய பொழுதை நல்ல பொழுதாக்க எதை வழிபட வேண்டும்? என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கத்திலேயே சகாய ஸ்தானாதிபதி செவ்வாய் உங்கள் ராசியை பார்க்கிறார். அந்தச் செவ்வாயை தனலாபாதிபதி குரு பார்க்கிறார். எனவே, பணப்புழக்கம் அதிகரிக்கும். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்ளுவீர்கள். இனத்தார் பகை மாறும். இனி விலகிய சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். விருப்ப ஓய்வில் வந்தவர்கள் தொழில் தொடங்குவர். வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயரை வழிபட்டால் வளர்ச்சி கூடும்.

1.1.2012 முதல் 16.5.2012 வரை

இக்காலம் உங்களுக்கு இனிய காலம்தான். எளிதில் எந்த காரியத்தையும் சாதித்துக் கொள்ளுவீர்கள். சகோதர பாசம் கூடும். தாய் வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும்.

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே, கல்யாண கனவுகள் நனவாகும். கடன் சுமை அதிகரிக்கின்றதே என்ற கவலை அகலும். முல்லைப் பூ மாலை சூட்டி குரு வழிபாட்டையும் மேற்கொண்டால், எல்லையில்லாத நற்பலன்கள் கிடைக்கும்.

பூர்வீக சொத்துகளை விற்றுவிட்டு, புதிய சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அந்நிய தேச யோகம் எதிர்பார்த்தபடி அமையும். வாகனங்களை மாற்றுவது நல்லது.

17.5.2012 முதல் 31.12.2012 வரை

இக்காலம் உங்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்படும் நேரமாகும். குரு அர்த்தாஷ்டமக் குருவாக மாறுகிறார். சனி அஷ்டமத்துச் சனியாக மாறுகிறார். இது போன்ற ஆதிக்க காலங்களில் நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருப்பதால் எந்த முடிவெடுத்தாலும், குடும்ப உறுப்பினர்களை கலந்தாலோசித்து எடுப்பதே நல்லது. தொழில் கூட்டாளிகளை மாற்ற நேரிடும். இடமாற்றம், வீடு மாற்றம், இலாகா மாற்றம் போன்றவைகள் திடீரென வந்து சேரும்.

சுய ஜாதகத்தின் வலிமையைப் பொறுத்து முடிவெடுப்பது நல்லது. சனியும், செவ்வாயும் இணையும் நேரமிது. குருவின் பார்வை அதன் கடுமையைக் குறைத்தாலும் கூட, அஷ்டமத்தில் சனியும், செவ்வாயும் சேருவது அவ்வளவு நல்லதல்ல. மணியான யோசனையைச் சொல்லும் நீங்களே, மற்றவர்களிடம் யோசனை கேட்கும் சூழ்நிலை உருவாகலாம்.

குறிப்பாக, ஜுன் 23 முதல் ஆகஸ்ட் 13 வரை அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும். கடுமையாகப் பேசினால் காரியம் கெட்டுவிடும். வரவு, செலவுகளில் கவனம் தேவை. வாய்ப்புகள் விலகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வாங்கிய சொத்துகளை விற்க நேரிடலாம். இது போன்ற முரண்பாடான கிரகங்கள் இணையும் நேரத்தில் சிறப்பு வழிபாடுகளை செய்வது தான் நல்லது. சர்ப்ப சாந்தி செய்தால் ஏற்ற இறக்கமில்லாத வாழ்க்கை அமையும்.

குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால் இழப்புகளை ஈடுகட்ட புதிய நண்பர்கள் வந்திணைவர். ஒப்பந்தங்கள் அதிகரிப்பதாலும், யோசித்து கையெழுத்து இடுவது நல்லது. வருடக் கடைசியில் ராகு-கேதுக்களின் பெயர்ச்சியும் ஏற்படுகிறது. கேது சகாய ஸ்தானத்திலும், ராகு 9-ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார்கள். புதன், சுக்ரன், சனி, ராகு இணையும் இந்த நேரம் பொன்னான நேரமாகும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பதவிகள் வந்து சேரும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வும், உத்தியோக உயர்வும் கிடைக்கும்.

சாதனை நிகழ்த்த சமயோசித புத்தி தேவைப்படும் காலம்!

சில கிரகங்கள் வக்ர காலத்தில் நன்மைகளைச் செய்யும். சில கிரகங்கள் வழிபட்டால்தான் வக்ர காலத்தில் நன்மையை கொடுக்கும். மனிதர்களின் உடல் பலமிழந்த காலத்தில் நாம் மருத்துவமனைக்கு செல்வதைப் போல கிரகங்கள் பலமிழந்த காலத்தில் நாம் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

* செவ்வாயின் வக்ர காலத்தில் சகோதர பாசம் குறையும்.

* புதனின் வக்ர காலத்தில் பிள்ளைகளால் சிக்கல்கள் ஏற்பட்டு மறையும்.

* குருவின் வக்ர காலத்தில் பணப் பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது.

* சுக்ரனின் வக்ர காலத்தில் பெற்றோர்களின் ஒத்துழைப்பு குறையலாம்.

* சனியின் வக்ர காலத்தில் வருமானம் திருப்தி தரும் என்றாலும், உடல்நிலையில் தொல்லைகள் உருவாகலாம்.

புத்தாண்டில் வளம் பெற முத்தான வழிபாடு!

உங்கள் ராசிநாதன் சனி என்பதால், சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனியை வழிபடுவதோடு, அனுமனையும் வழிபட்டு வாருங்கள். அனுமன் சந்நிதியில் நின்று

`வாலில் பலத்தை வைத்ததோர், அனுமனே!
நாளும் பொழுதும் நலம் பெறச்செய்திடு!'

என்று சொல்லுங்கள். நலமும், வளமும் வந்து சேரும்.



 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 1:31 pm

மீனம்

பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

சவால்களைச் சமாளிக்க நேரிடும்!

எவரிடமும் எளிதாக நெருங்கிப் பழகும் இயல்பைப் பெற்ற மீன ராசி நேயர்களே!

உதவி செய்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்கள் நீங்கள். தாய் பாசம் மிக்கவர்களாக விளங்குவீர்கள். சமூகத்தில் நிறைய நல்ல காரியங்கள் செய்து விட்டு ஓசைப்படாமலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நீங்கள். நீங்கள் யாருடன் சேர்ந்தாலும் அவர்கள் நன்மை அடைவார்கள்.

இப்படிப்பட்ட உங்களுக்கு இந்த புத்தாண்டு பொருளாதார விருத்தியை தருமா? புது முயற்சிகளில் வெற்றியைக் கொடுக்குமா? அஷ்டமத்துச் சனி அதிக கவலையை உருவாக்குமா? என்பதைப் பற்றி எல்லாம் பார்ப்போம்.

பொதுவாக, ஆண்டின் தொடக்கத்தில் ஆறில் செவ்வாய், அஷ்டமத்தில் சனி. எனவே, யோசித்தும், இறைவனை பூஜித்தும் செயல்களைச் செய்தால்தான் வெற்றி கிடைக்கும். சுற்றி இருப்பவர்களையும் அனுசரித்துச் செல்வதுநல்லது.

1.1.2012 முதல் 16.5.2012 வரை

இக்காலம் உங்களுக்கு எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய காலமாகும். தொழில் பங்குதாரர்கள் விலகலாம். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு வைத்தியச் செலவுகள் வருகின்றதே என்று நினைத்து கவலைப்படலாம். ஆனால், எந்தப் பிரச்சினை வந்தாலும் வந்த மறு நிமிடமே நல்ல முடிவுக்கு வந்து விடும். காரணம் சனியைக் குரு பார்ப்பது தான். தூர தேசப் பயணங்கள் அமைய வாய்ப்பு உண்டு.

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6, 8, 1 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே, எதிரிகள் விலகுவர். அதிக நாட்களாக நடைபெறாதிருந்த ஒரு காரியம் அடுத்த மாதமே நடைபெறலாம். உத்தியோகத்தில் மாற்றம் உறுதியாகாமல் இருக்க குரு வழிபாடு உங்களுக்கு கை கொடுக்கும். அதே நேரத்தில் தனாதிபதி செவ்வாய் வக்ர இயக்கம் பெறுவதால் தனவரவில் பற்றாக்குறையும் ஏற்படலாம், குடும்பச் சுமை கூடும். உடன்பிறப்புகள் வழியே செய்த ஒப்பந்தங்களில் மாற்றம் ஏற்படலாம்.

இது போன்ற கிரகங்களின் வக்ர இயக்கம் வரும் போதெல்லாம் அதற்குரிய தெய்வத்தை விடாது வழிபாடு செய்ய வேண்டும். பொதுவாக உங்கள் ராசியைப் பொறுத்தவரை முருகப் பெருமான் வழிபாட்டையும், சனி பகவான் வழிபாட்டினையும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் துயரங் களிலிருந்து விடுபடலாம்.

17.5.2012 முதல் 31.12.2012 வரை

இக்காலம் வெற்றிகள் ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கும் காலம். அதே நேரம் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே பணத் தேவைகள் பூர்த்தியாகும். தொகை கைக்கு வந்தவுடன் வீண் விரயமாகாமல் சுப விரயமாக மாறும்.

குழந்தைகளின் கல்வி நலன் கருதியும், பெற்றோரின் மணி விழா நடத்தவும் செலவிடுவீர்கள். அதே நேரம் பெண் குழந்தைகளின் பூப்புனித நீராட்டு விழா போன்றவையும் நடக்கலாம். நகை வாங்குவது முதல் நல்ல வீடு வாங்குவது வரை சுப பலன்களை கிரக சஞ்சாரங்கள் வழங்கும். இருப்பினும் அஷ்டமத்துச் சனி ஆதிக்கம் முடியும் வரை எதையும் யோசித்து ஏற்றுக் கொள்ளுவதே உத்தமம்.

குருவின் பார்வை பலத்தால் திருமண வாய்ப்புகள் கைகூடி வந்தாலும், சனியின் ஆதிக்கம் இருப்பதால் யோசித்து, பொருத்தம் பார்த்து செய்வதே நல்லது. விலை உயர்ந்த பொருட்களை விற்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். இக்காலத்தில் செவ்வாய், சனி சேர்க்கையும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 7-ல் இரண்டும் இணைவது அவ்வளவு நல்லதல்ல. எனவே உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவதோடு, அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ளுவதும் நல்லது. வாகனங்களில் செல்லும் போது, கூடுதல் கவனம் தேவை. பதவியில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும்.

`கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. எனவே, வரவைக்காட்டிலும், செலவு கூடலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். மாற்று கருத்துடையோரின் எண்ணிக்கை கூடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

சாதனை நிகழ்த்த சமயோசித புத்தி தேவைப்படும் காலம்!

கிரகங்கள் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் நாம் எதைச் செய்தாலும், `தொட்டதெல்லாம் வெற்றி பெறும்'. கிரகங்கள் பலமிழந்திருக்கும் போது, நாம் அதற்கு உரிய தெய்வங்களைத் தேடிச் சென்று அதன் பாதாரவிந்தங்களை பணிந்து வணங்கி, வழிபட வேண்டும். அப்போதுதான் இல்லம் தேடி இனிய தகவல்கள் வந்து சேரும்.

* செவ்வாயின் வக்ர காலத்தில் பணப்பற்றாக்குறை ஏற்படும்.

* புதனின் வக்ர காலத்தில் ஆரோக்கியத்திலும், தொழிலிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

* சுக்ரனின் வக்ர காலத்தில் வாய்ப்புகள் வாயில் கதவைத் தட்டும்.

* சனியின் வக்ர காலத்தில் வரவும்-செலவும் சமமாகும்.

புத்தாண்டில் வளம் பெற முத்தான வழிபாடு!

உங்கள் ராசிநாதன் குரு என்பதால், குரு தட்சணாமூர்த்தியையும், கல்விக்கு அதிபதியான சரஸ்வதியையும் வழிபட வேண்டியது அவசியமாகும். சரஸ்வதி தேவி சந்நிதியில் நின்று,

`நிலையாய் செல்வமும், நிம்மதியும் பெற,
கலைமகளே நீயும் கனிவுடன் அருள்வாய்!' என்று சொல்லுங்கள்.

நிம்மதியும், நிலைத்த புகழும் கிடைக்கும்.



 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 30, 2011 1:43 pm

என்னுடைய ராசிக்கு பலன்கள் பரவாயில்லை  புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 755837



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 30, 2011 1:54 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Fri Dec 30, 2011 2:29 pm

எதிர்ப்பு



 புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 168113 அன்புடன் லக்ஷ்மண்  புத்தாண்டு ராசிபலன் - 2012 - Page 2 168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 05, 2012 8:15 pm

நன்றி சிவாபுன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jan 06, 2012 10:26 am

சிவா அங்கிள் ஜோசியம் கீட பாப்பாரா, சொல்லவே இல்ல.


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக