புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
62 Posts - 39%
heezulia
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
10 Posts - 6%
prajai
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
4 Posts - 3%
mruthun
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
21 Posts - 5%
prajai
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
7 Posts - 2%
mruthun
மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_m10மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை!


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Dec 26, 2011 2:18 pm

நம் அண்டை நாடான சீனாவில், மரண தண்டனைகளுக்கு பஞ்சம் இல்லை. மரண தண்டனை என்றால், நம் நாட்டை போல் தூக்கிலிடும் வழக்கம் எல்லாம் இங்கு இல்லை. விஷ ஊசி போடுவது அல்லது தலையின் பின் பக்கத்தில் துப்பாக்கியால் சுடுவது ஆகிய இரண்டு முறைகளில் மரண தண்டனை இங்கு நிறைவேற்றப் படுகிறது.
மனித உரிமை ஆர்வலர்களும், சர்வதேச நாடுகளும், காட்டுக் கத்தலாக கத்தியும், அதை சற்றும் பொருட்படுத்தாமல், மரண தண்டனையை சர்வ சாதாரணமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது சீனா. கடந்த, 2005ல் மட்டும், 10 ஆயிரம் பேருக்கு இங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நடவடிக்கைகள், வெளி உலகத்துக்கு அதிகம் தெரியாமல் ரகசியமாக நடக்கும். இதையும் மீறி, ஒரு சில தண்டனைகள் பற்றிய விஷயங்கள், வெளி உலகத்துக்கு கசிந்து கொண்டு தான் இருக்கின்றன.


Uploaded with ImageShack.us



Uploaded with ImageShack.us


Uploaded with ImageShack.us

போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நான்கு பெண்களுக்கு, 2003ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது, அந்த நான்கு பெண்களின் கடைசி நிமிடங்கள் ஒவ்வொன்றும் கேமராவில் பதிவு செய்யப்பட்டன. அந்த புகைப்படங்கள், ஒன்பது ஆண்டுகளுக்கு பின், தற்போது, ஹாங்காங்கை சேர்ந்த ஒரு, "டிவி' சேனலில் வெளியாகி, சர்வதேச அளவில் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
மா ஷிங்குய், லி ஜூகுவா, டாய் டொங்குய், ஹி ஜியுலிங் என்ற நான்கு பெண்களுக்கும், போதை மருந்து கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள், வுகான் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
தண்டனை நிறைவேறுவதற்கு முதல் நாள் இரவே, இவர்களின் கடைசி நிமிடங்களை பதிவு செய்வதற்கு கேமராமேன்கள் வந்து விட்டனர். முதல் நாள் இரவு, 9:00 மணிக்கு துவங்கி, தண்டனை நிறைவேற்றப்படும் அடுத்த நாள் காலை, 7:21 வரை, அவர்களின் ஒவ்வொரு நிகழ்வும் பதிவு செய்யப்பட்டன. இந்த ஒவ்வொரு நிகழ்விலுமே, நான்கு பெண்களுமே, சாவைக் கண்டும் சற்றும் கலங்காமல், புன்னகையுடனேயே காணப்பட்டனர்.
முதல் நாள் இரவில் நான்கு பேருமே, தனித் தனி அறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்டிருந்தது. அந்த இரவுப் பொழுதில், தண்டனை நிறைவேற்றப்படும் போது அணிய வேண்டிய உடையை, தானே தேர்வு செய்து அணிந்து கொண்டார், டொங்குய். இதன்பின், இரவு உணவு சாப்பிட்டார். இது, அவரின் கடைசி உணவு என்பதால், அங்கு இருந்த பெண் அதிகாரியே, அவருக்கு <உணவை ஊட்டி விட்டார். சிரித்த முகத்துடன், அதை மகிழ்ச்சியாக சாப்பிட்டார், டொங்குய்.
இரவு, 10:15 மணிக்கு மற்றொரு அறையில், லி ஜூகுவாவின் கடைசி ஆசை, எழுத்துக்களாக பதிவு செய்யப்பட்டன. தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் புன்னகையுடன் அமர்ந்தபடி, தன் கடைசி ஆசைகளை அவர் கூற, அதை சிறை அதிகாரி, கனத்த இதயத்துடன் பதிவு செய்து கொண்டார். தண்டனை பெற்றவர்களில், மிக இளையவரான, 25 வயது ஜியுலிங்கின் அறையிலும் இதே காட்சி காணப்பட்டது. சிறிய ஸ்டூலில் சிரித்தபடி அமர்ந்திருந்த ஜியுலிங்கிற்கு, பெண் அதிகாரி, கடைசி உணவை ஊட்டி விட்டார்.
அதிகாலை 4:00 மணிக்கு, நான்கு பேரும், ஒரே அறைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பெண் காவல் அதிகாரிகளும், சக கைதிகளும் அமர்ந்திருக்க, தண்டனை நிறைவேற்றப்படும் இடத்துக்கு செல்வதற்கான ஷூவை, ஜியுலிங்கிற்கும், மற்றவர்களுக்கும், பெண்களுக்கு அதிகாரிகள் அணிவித்து விட்டனர். அப்போது, மிகவும் கலகலப்பாக காணப்பட்ட ஜியுலிங், காவல் அதிகாரிகளுடனும், சக கைதிகளுடன், ஜோக் அடித்தபடி இருந்தார்.
பொழுது புலர்ந்தது. அந்த நான்கு பெண்களுக்கு மட்டும், "அடுத்த நாள் பொழுது புலர்வதை காண்பதற்கு, நாம் உயிருடன் இருக்கப் போவது இல்லை...' என்ற உண்மை உள்ளுக்குள் உறைத்தது.
அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், சுறுசுறுப்பாக குளித்து முடித்து, புன்னகையை உதட்டில் உறையவிட்ட படியே, கடைசி பயணத்துக்கு தயாராயினர். காலை, 7:00 மணிக்கு நான்கு பேரும், மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுடன், அன்று தண்டனை நிறைவேற்றப்படவிருந்த மேலும், 20 கைதிகள் காத்திருந்தனர். அனைவரும் வரிசையாக நடத்தி, அழைத்துச் செல்லப்பட்டனர்.
மற்ற மூன்று பேரும், சிரித்த முகத்துடன் அமைதியாக நடந்து சென்று கொண்டிருக்க, வயதில் இளையவரான ஜியுலிங் முகத்தில் மட்டும், புன்னகை மறைந்து, கலவர ரேகைகள் சூழ்ந்தன. நடந்து செல்லும் போதே, அவரது மனதில் மரண பீதி ஏற்பட்டது.
வயிற்றுக்குள் இனம் புரியாத, ஏதோ ஒரு பிரளயம் ஏற்பட, கண்களை முட்டிக் கொண்டு கண்ணீர் எட்டிப் பார்க்க, அழுகையை கட்டுப்படுத்த முயன்று, முடியாமல் தோற்றுப் போய், அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்ச்சிகளும், வாய் வழியாகவும், கண்கள் வழியாகவும், அழுகையாகவும், கண்ணீராகவும் வெடித்துச் சிதறின. மரணத்தை தழுவ மனமில்லாமல் வாய் விட்டு உரக்க அழுதார்.
குற்றவாளிகள் அனைவரும், வரிசையாக நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு பின், தண்டனையை நிறைவேற்றுவதற்காக துப்பாக்கிகளுடன் போலீசார் தயாராக இருந்தனர்.
காலை, 7:21 மணிக்கு துப்பாக்கிகளில் இருந்து குண்டுகள் வரிசையாக வெடிக்கத் துவங்கின. துப்பாக்கியில் இருந்து வெளியாகும் ஒவ்வொரு சப்தத்தின் முடிவிலும், ஒரு குற்றவாளி அலறித் துடித்தபடி மண்ணில் சாய்ந்தார். ஜியுலிங்கின் முறை வந்தது. கண்களை இறுக மூடி, கடைசி நொடிக்காக காத்திருந்தார். அவரது முகத்தில் அப்போது ஏற்பட்ட உணர்ச்சியை, எந்த வார்த்தையாலும் வர்ணிக்க முடியவில்லை.
சீன போலீசாரின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட, குண்டு எனும் உலோகப் பிசாசு, ஜியுலிங்கின் தலையின் பின்புறத்தில் பாய்ந்து, முன்புறம் வழியாக வெளியில் வந்தது. சில நொடிகளுக்கு முன் உயிருடன் இருந்த ஜியுலிங்கின் உடல், உயிரற்ற உடலாக மண்ணில் சாய்ந்தது. மனித நேயத்தையும், மனித உரிமை ஆர்வலர்களின் கூக்குரலையும், மவுனமாக்கி விட்டு, அந்த இடமே மயான அமைதியில் மூழ்கிப் போனது.
***


dinamalar



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! 154550 மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! 154550 மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை! 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக