புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
11 Posts - 38%
heezulia
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
6 Posts - 21%
i6appar
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
3 Posts - 10%
mohamed nizamudeen
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
1 Post - 3%
Jenila
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
88 Posts - 36%
i6appar
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
2 Posts - 1%
prajai
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரிதல்- கதை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 11, 2011 6:18 pm

புரிதல்
- திருவாரூர் பாபு

பில்டரில் இருந்து டிகாக்ஷனை ஊற்றிய குமுதா, வாசலில் ஆட்டோ சப்தத்தை உணர்ந்து ஜன்னல் வழியே பார்த்தாள். ப்ரியா இறங்கிக் கொண்டிருந்தாள். கையில் சூட்கேஸ். கடந்த இரண்டு நாட்களாக அவள் அலைபேசியில் பேசியதன் சாரம் உள்ளுக்குள் உறைக்க, வசந்தன் எங்கே இருக்கிறான் என்று கவனித்தாள். பாத்ரூமில் இருப்பது புரிந்தது.

"வாம்மா'' என்றவள், ப்ரியாவின் கையிலிருந்து சூட்கேஸை வாங்கி கட்டிலுக்கு அடியில் தள்ளினாள்.

"எதுவா இருந்தாலும் உங்க அண்ணன் ஆபீஸுக்குப் போன பின்னாடி பேசிக்கலாம்''

ப்ரியா வேகமாக அவர்களின் பெட்ரூமிற்குள் நுழைந்து கட்டிலில் படுத்தாள்.

தலையை துவட்டியபடி வெளியே வந்த வசந்தன், தங்கையை கட்டிலில் உணர்ந்து கேள்விக்குறியாக மனைவியைப் பார்க்க, "பிரகாஷ் டூர் போயிருக்காராம். ரெண்டு நாள் இங்க தங்கி ரெஸ்ட் எடுத்திட்டுப் போகலாம்னு வந்திருக்கா''

"ப்ரியா ரெஸ்ட் எடுக்கட்டும். அவளுக்குப் பிடிச்ச வத்தக்குழம்பும், சுட்ட அப்பளமும் செஞ்சு கொடு. சாயங்காலம் ஆபீஸ்லேந்து வந்து உடனே வெளிய போகலாம். சந்தோஷ் ஸ்கூலுக்குப் போயிட்டானா?''

"போயிட்டாங்க. இப்பதான் ஆட்டோ வந்துச்சு''

மனதுக்குள் ப்ரியா வந்திருப்பதன் காரணம் புரிந்தும், அதை எப்படி கணவனுக்குத் தெரியாமல் சமாளிக்கப் போகிறோம் என்கிற பரிதவிப்பில், குமுதா அவசரம் அவசரமாக கணவனை அலுவலகம் அனுப்புவதில் பிஸியானாள்.

அவன் ஆபீசுக்குப் புறப்பட்டுப்போனதும்...

குமுதா கீரை ஆய்ந்தபடி ப்ரியாவை பார்த்து சிரித்தாள்.

"வீட்டுக்காரர் டூர் போயிருக்காரு. ரெஸ்ட் எடுக்க வந்திருக்கேன்னு உங்கண்ணனை சமாளிச்சு ஆபீஸுக்கு அனுப்பி வச்சிருக்கேன்''

ப்ரியா கடுகடுத்தாள்.

"பிடிக்கல அண்ணி... காதலிக்கிறதுக்கு முந்தி பேசினது ஒண்ணு. இப்ப நடந்துக்கறது வேற. வெறுப்பா இருக்கு''

`என்ன நடந்துக்கறது பிடிக்கல?''

ப்ரியா படபடத்தாள்.

"அறுபதாயிரம் சம்பளம்னு சொன்னாரு. ஆனா கையில ஐம்பதாயிரம்தான் வருது. கல்யாணமான உடனே பெங்களூருக்கு டிரான்ஸ்பர் வாங்கிடறேன்னு சொன்னாரு. இப்ப ரெண்டு வருஷம் ஆகுங்கிறாரு. காலைல நான் எழுந்திருக்க லேட்டாயிடுது. மதியம் சாப்பாடு கட்டித் தரலேன்னா திட்டறாரு. இப்படி எல்லாத்துலேயும் பிடிக்கல அண்ணி''

குமுதா ப்ரியாவை வியப்பாகப் பார்த்தாள்.

"இதுக்காகத்தான் பெட்டிய தூக்கிட்டு அண்ணன் வீட்டுக்கு வந்திட்டியா''

"ம்''

"இப்ப நீ என்கிட்ட சொன்ன எல்லாத்தையும் ரெண்டு பேரும் தனியா உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணியிருக்கீங்களா?''

"டிஸ்கஸ் பண்ண என்ன இருக்கு அண்ணி? என் எதிர்பார்ப்புக்கு சரியா இல்லாத ஒண்ணை கட்டாயப்படுத்தி நான் ஏன் அவர்கிட்டயிருந்து வாங்கிக்கணும்?''

குமுதாவுக்கு இப்போது தெளிவாகப் புரிந்தது.

ஈகோ ப்ராப்ளம் கணவன் மனைவிக்குள் வரவே கூடாத ஒன்று.

"என்னைப் பொறுத்தவரைக்கும் என் வீட்டுக்காரர் உனக்கு அண்ணன் மட்டும் இல்ல ப்ரியா, அப்பாவும் கூட. எங்க பாதுகாப்புல இந்த வீட்டுல இருந்து தான் காலேஜ் படிச்ச, காதலிச்ச, கல்யாணம் பண்ணிக்கிட்ட. உங்கண்ணனுக்கு உன் கல்யாணத்துல விருப்பமே இல்ல. ஆனா அம்மா அப்பா இல்லாத தங்கச்சி ஆசைய நிறைவேத்தணுங்கறதால சம்மதிச்சாரு. நான் உங்கிட்ட பர்சனலா ஒரு கேள்வி கேட்கிறேன்.

உங்களுக்குள்ள தாம்பத்யம் எப்படி?''

"அண்ணி''

"அதுதான் செக்ஸ்''

"அதுக்கென்ன அண்ணி குறைச்சல். தினம் தினம் தான் நடக்குதே''

குமுதா சிரித்தாள்.

"கல்யாணமாகி ரெண்டு வருஷம் எங்களுக்குள்ளே அது நடக்கவே

இல்ல ப்ரியா''

"அண்ணி''

"தப்பு எம்மேலே இல்ல. பிரச்சினை உங்கண்ணன்கிட்டேதான். கல்யாணமாகி ரெண்டாவது நாளே எனக்கு தெரிஞ்சிட்டுது. ஆனாலும் அத நான் காட்டிக்கவே இல்ல. உங்கண்ணனுக்கு குற்ற உணர்ச்சி ஜாஸ்தியாயிட்டுது. உனக்கு ஞாபகம் இருக்கா, கல்யாணமான ரெண்டாவது மாசம் உங்கண்ணன் ஒரு வாரம் வீட்டுக்கு வரவே இல்ல. நாமெல்லாம் எப்படி துடிச்சோம்! ஊர்லயிருந்து எங்கம்மா அப்பா வந்து, எவ்வளவு பிரச்சினை ஆச்சு. அப்ப உங்கண்ணன் என்ன சொன்னாரு, ஆபீஸ் வேலை பெங்களூர் போயிட்டேன்னு. ஆனா உண்மையில என்னை பார்க்க கூச்சப்பட்டுக்கிட்டு தலைமறைவாயிட்டாரு.''

ப்ரியா அதிர்ச்சி விலகாமல் அண்ணியையே பார்த்தபடி இருந்தாள்.

"நான்தான் அவர சரி பண்ணினேன். செக்ஸாலாஜிஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போனேன். அது சம்பந்தமான புத்தகங்களை வாங்கி கொடுத்து படிக்கச் சொன்னேன். தன்னம்பிக்கை கொடுத்தேன். ஆறு மாசத்துல ஜம்முன்னு ஆயிட்டாரு. ஒன்றரை வருஷத்துல சந்தோஷ் பிறந்தான். இப்ப எங்களுக்கு என்ன குறைச்சல்? உங்கண்ணன் பிரகாஷ் அளவுக்குக்கூட சம்பாதிக்கல. ஆனாலும் சந்தோஷத்துக்கு குறைச்சலே இல்ல, ப்ரியா! காரணம் அது நாம அமைச்சுக்கறது.

திருமண வாழ்க்கைல ஒரு பொண்ணு எதிர்பார்க்கற முக்கிய விஷயத்துலயே ஏமாற்றத்த சந்திச்சு நான் அதுலிருந்து மீண்டு சந்தோஷமா இருக்கேன். ஒண்ணுமே இல்லாத ஒரு விஷயத்துக்காக பொட்டிய தூக்கிட்டு அண்ணன் வீட்டுக்கு வந்திருக்க. கொஞ்சம் யோசிச்சுப் பாரேன்''

ப்ரியா கண்களில் மளுக்கென்று நீர் தளும்பியது.

"அண்ணி நீங்க சொன்னது''

"ஏன் நம்பிக்கை வரலியா? நூறு சதவிகித உண்மை. ஒரு பொண்ணுக்கு அப்பா அம்மா மாப்பிள்ள பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம். ஆனா வாழ்க்கைய நல்லபடியா அமைச்சுக்கறது அவங்கவங்க கையிலதான் இருக்கு ப்ரியா. இப்ப நீ பிரச்சினையோட வந்திருக்கேன்னு தெரிஞ்சா உங்கண்ணன் மனசு நொறுங்கிடுவாரு''

குமுதாவின் அலைபேசி ஒலித்தது.

"உங்கண்ணன் தான்'' என்றபடி எடுத்தாள்.

"ப்ரியா எழுந்திரிச்சிட்டாளா?''

"எழுந்திரிச்சிட்டா. பக்கத்துலதான் இருக்கா''

அலைபேசியை அவளிடம் நீட்டினாள்.

"சொல்லுண்ணா?''

"எப்படிடா இருக்க?''

"பைன் அண்ணா?''

"நாலு மணிக்கே ஆபீஸ்லேர்ந்து வந்திடறேன். தியேட்டர்ல டிக்கெட் ரிசர்வ் பண்ணியிருக்கேன். படம் பார்த்துட்டு அப்படியே வெளிய டின்னர் முடிச்சிட்டு வந்திடலாம். நல்லா ரெஸ்ட் எடு''

"சரிண்ணா''

அலைபேசியை அண்ணியிடம் நீட்டினாள்.

ப்ரியா குமுதாவை ஆழமாக ஊடுருவிப் பார்த்தாள்.

"எப்ப வீட்டுக்கு கிளம்பற? உங்கண்ணன்கிட்ட உன் வீட்டுக்காரர் வெளிïரு போயிருக்கார்ன்னு சொல்லிட்டேன். என்ன பண்ணலாம்?ராத்திரி படம் பார்த்துட்டு டின்னர் முடிச்சிட்டுன்னா ரொம்ப நாழியாயிடுமே பரவாயில்லையா?''

"அண்ணி''

"இல்ல... தினம்தினம் தான் நடக்குதுன்னு சொன்னியே, லேட்டானா பிரச்சினை இல்லையா?''

ப்ரியா அண்ணியின் தோளில் சாய்ந்து கொண்டாள் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

இரவு

"என்ன பிரகாஷ் டூர் போயிருக்கறதா சொன்னா... ஹோட்டல்லயிருந்து அப்படியே வீட்டுக்குப் போறேன்னு ஒத்தக் கால்ல நின்னா, ஊர்லயிருந்து திரும்பிட்டானாமா? குமுதா கணவனை உற்றுப் பார்த்தாள்.

வசந்தன் சிரித்தான்,

"அவ பெட்டியோட இறங்கறத பார்த்திட்டுதான் பாத்ரூமுக்குள்ளயே போனேன்''

"சாரிங்க... அவன் கன்வின்ஸ் பண்றதுக்காக ஒரு பெரிய பொய்ய சொல்லிட்டேன். ஒண்ணுமே இல்லாதத பெரிய பிரச்சினையா நினைச்சுகிட்டு கிளம்பி வந்திட்டா. எப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் இருக்குதுன்னு ரீல் விட்டேன். கிளம்பிட்டா''

"தேங்க்ஸ் குமுதா''

"எதுக்குங்க?''

"அம்மா ஸ்தானத்துல இருந்து ப்ரியாவுக்கு நல்லபடியா அட்வைஸ் பண்ணி புருஷன்கிட்ட அனுப்பி வச்சதுக்கு''

***

தினத்தந்தி ஞாயிறு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புரிதல்- கதை  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக