புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Poll_c10பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Poll_m10பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Poll_c10பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Poll_m10பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Poll_c10பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Poll_m10பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Poll_c10பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Poll_m10பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Poll_c10பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Poll_m10பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Poll_c10பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Poll_m10பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியினை வணங்குவோம் வாருங்கள் !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 4:00 pm

First topic message reminder :


1882 டிசம்பர் திங்கள் 11 ஆம் தேதி, பூமியிலே ஒரு சூரிய்ன் பிறந்தது. அதனுடைய வெப்பத்தில் தான் இன்றைய தமிழகம் இன்னும் குளிர்காய்கிறது.நூற்றாண்டினை கடந்தும் இன்றும் நுனி மழுங்காத அந்த வீர வாளின் பிறந்ததினம் நாளை.

பாரதத்தை பா ரதத்தால் உய்வித்த புரட்சி கவியினை வணங்குவோம் வாருங்கள்.

இங்கே உங்களுக்கு பிடித்த பாரதியார் பாடலை பதிவு செய்தோ, முதல் வரியினை கூறியோ வணங்குவது வரவேற்க்க படுகிறது.


நின்னைச் சரணடைந்தேன்-கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன்

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று
நின்னைச் சரணடைந்தேன்

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம்
நின்னைச் சரணடைந்தேன்

துன்ப மினியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட
நின்னைச் சரணடைந்தேன்

நல்லதுதீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன்


இதில் சென்று உங்களுக்கு பிடித்தமான பாடலையும் தேடுங்கள்.
http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/index.asp



பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Thank-you015

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 10, 2011 4:33 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உதயசுதா wrote:அந்த மகாகவிக்கு நாம் என்ன செய்தாலும் அவர் செய்த செயல்களுக்கு ஈடு இல்லை. அப்படிப்பட்ட பாரதிக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்.
எனக்கு அவர் பாடிய வரிகளில் மிகவும் பிடித்த ஒரு பாடல்
அச்சமில்லை, அச்சமில்லை,
அச்சம் என்பதில்லையே
உச்சி மீது வான்
இடிந்து விழுமேனும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லையே.

அதோடு
காணி நிலம் வேண்டும் பராசக்தி என்ற பாடலும்
நன்றி அக்கா



அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
பாடலுக்கு நன்றி பெருமாள்.பாடல் வரிகள் எனக்கு நினைவில் இல்லை அதனால் தான் கடைசி வரிய எழுதினேன்.இப்போது உங்கள் பதிலை பார்த்த பின் நினைவுபடுத்தி கொண்டேன்



பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Uபாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Dபாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Aபாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Yபாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Aபாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Sபாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Uபாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Dபாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Hபாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 10, 2011 4:33 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 4:35 pm

http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/index.ஏ‌எஸ்‌பி

இந்த லிங்கில் அவரது பாடல்கள் எல்லாம் இருக்கின்றன. தேவைபடுவோர் பயன்படுத்தி கொள்க !

ஜாகீதா அக்கா , நன்றி கூறிய உதய சுதா அக்கா இருவருக்கும் நன்றி !



பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 10, 2011 4:36 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:நன்றி
நானும் வணங்குகிறேன் நன்றி
உங்களுக்கு பிடித்தமான நன்றி பாரதியாருடைய விருப்ப பாடல்
நீங்கள் மேற்சொன்ன அந்த பாடல்தான்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

துச்சமாக வெண்ணிநம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

நச்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 10, 2011 4:41 pm

இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்,
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுத் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே.


இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம், இந்தப்பாடலைத்தான் என் தமிழாசிரியர் யாப்பில் சீர் பிரித்து அலகிடுதல் சொல்லிக் கொடுத்தார். இது 1968 ம் வருடம்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 10, 2011 4:42 pm

ஓடி விளையாடு பாப்பா,- நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா,- ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வன்னப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா.
கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்
கிரக்கப் படவேணும் பாப்பா.
பாலைப் பொழிந்துதரும், பாப்பா,- அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி, பாப்பா.
வண்டி யிழுக்கும்நல்ல குதிரை,- நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு,- −வை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.
காலை யெழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.
பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வ நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உழிழ்ந்துவிடு பாப்பா.
துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா,- தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,- நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் −னியதடி பாப்பா,- நீ
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.
சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே,- அதைத்
தொழுது படித்திடடி பாப்பா,
செல்வம் நிறைந்தஹிந் துஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.
வடக்கில் −மயமலை பாப்பா - தெற்கில்
வாழுங் குமரி முனை பாப்பா,
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - −தன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.
வேத முடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - −தைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.
சாதிகள் −ல்லையடி பாப்பா;- குலத்
தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்;- தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;- இது
வாழும் முறைமையடி பாப்பா.



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 1357389பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 59010615பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Images3ijfபாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 Images4px
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Dec 10, 2011 4:43 pm

நினைவூட்டியதற்க்கு நன்றிகள் அண்ணா நன்றி
நானும் வணங்குகிறேன் :வணக்கம்:
எனக்கு பிடித்தது அவர்பாடல்களில் ,

நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கேட புழுதியில் எரிவதுண்டோ
சொல்லடி சிவ சக்த்தி


அன்பு மலர்



பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 599303
பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பாரதியினை வணங்குவோம் வாருங்கள் ! - Page 2 102564

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 4:58 pm

1. செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

2.
வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய்
வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல
காதல் புரியும் அரம்பையர்போல்-இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

3.
காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

4.
முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே-அவை
யாவும் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

5.
நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு. (செந்தமிழ்)

6.
கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு. (செந்தமிழ்)

7.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி
யாரம் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

8.
சிங்களம் புட்பகம் சாவக-மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்தமிழ்)

9.
விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர்
பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு. (செந்தமிழ்)

10.
சீன மிசிரம் யவனரகம்-இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

அண்ணா மிக்க நன்றி.. புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 10, 2011 6:07 pm

நண்பர்கள் பதிந்துள்ள அனைத்து பாடல்களும் எனக்கு பிடித்தவை, கீழுள்ள பாடலும் பிடிதது......

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?

அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு
நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)

சாத்திரங்க ளொன்றும் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியே
கோத்திரமொன் யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச்
சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால்
ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன்
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு)

எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்


பாரதி என்றொரு பாட்டன் எனக்கிந்த
பாரதம் ஈந்தது நன்று






காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 10, 2011 8:49 pm

நினைவூட்டியதற்க்கு நன்றி பெருமாள் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக