புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனிப் பெயர்ச்சி பலன்கள்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நிகழும் கர வருடம் மார்கழி மாதம் 5-ம் தேதி புதன் கிழமை (21.12.2011) கிருஷ்ண பட்சம் ஏகாதசி திதி சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில்; சுகர்மம் நாமயோகம், பாலவம் நாமகரணம், சித்தயோகத்தில் சூரிய உதயநேரம் போக உதயாதி நாழிகை 2.17க்கு நேரத்திரம், ஜீவனும் நிறைந்த, பஞ்சபட்சியில் காகம் நடை பயிலும் நேரத்தில் புதன் ஓரையில் சரியாக காலை மணி 6.55க்கு சனி பகவான் கன்னி ராசியிலிருந்து தன் உச்ச வீடான துலாம் ராசிக்குள் நுழைகிறார். சனிபகவான் ஏறக்குறைய 16.12.2014 வரை துலாம் ராசியிலேயே அமர்ந்து தன் ஆதிக்கத்தை செலுத்துவார்.
கன்னி ராசியில் அமர்ந்து பலரையும் கலங்கடித்து கதற வைத்த சனிபகவான் அழகு, ஆடம்பரம், கலை, காவியம் ஆகியவற்றிற்கு சொந்தக்காரரான சுக்ரனின் வீட்டில் அமர்வதால் மக்களிடையே எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். ஆடம்பரத்திற்கும், வசதி, வாய்ப்புகளும் மக்கள் அடிமையாவார்கள். சுற்றுலாத்துறை மேம்பாடடையும். நவீன டிசைன்களில் ஆபரணங்கள் வெளியாகும். ஜவுளித் துறையில் புதுமைப் பிறக்கும். துணிமணிகள் விலை குறையும். விளையாட்டு வீரர்கள், சினிமா, சின்னத்திரைக் கலைஞர்கள் அரசால் சில சலுகைகள் அடைவார்கள். வளர்ந்த நாடுகளுக்கு ஈடு இணையாக இந்தியாவில் நவீன வாகனத் தயாரிப்பு தொழிற் கூடங்கள் அமையும். வாகன உற்பத்தி அதிகரிக்கும். கிராமங்கள் அசுர வளர்ச்சியடையும். மறுமணம் புரிவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வேலையாட்களின் தினக்கூலியும், மாத சம்பளமும் உயரும். பணியாட்களின் பற்றாக்குறையாலும் வேலை நிறுத்தத்தாலும் பல புகழ்பெற்ற தொழிற்கூடங்கள் பாதிப்படையும். விமானம், கப்பல் மற்றும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகும். சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டேப் போகும். பிரபலங்கள் வாகன விபத்துக்குள்ளாவர். நீதிபதிகள் கை ஓங்கும். வழக்கறிஞர்களின் வருமானம் அதிகரிக்கும். ஊழல்வாதிகள் பெரிய பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்படுவர். ஜனநாயகம் தழைக்கும். வி, ஸி, றி, ஜி, க்ஷி ஆகிய எழுத்துக்களில் பெயருடையவர்கள் பிரபலமாவார்கள்.
26.3.2012 முதல் 11.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியில் கன்னி ராசியில் வந்தமர்வதால் அக்காலக்கட்டத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் பாதிப்படைவார்கள். அரசாங்கத்திற்கும் தனியார் பள்ளி நிர்வாகிக்களுக்கும் பனிப்போர் அதிகரிக்கும். தேர்வு முறையில் குளறுபடிகள், வினாத் தாள்கள் முன்னரே வெளியாகுதல் போன்ற நிலை ஏற்படும். இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உச்சம் பெற்று அமர்வதால் சி.ஏ., கேட்டரிங், ஷிப்பிங், சிவில் மெக்கானிக்கல், டிசைனிங், விஷ்வல் கம்யூனிக்கேஷன், சுற்றுலா, சட்டம் சம்பந்தப்பட்ட கல்விப் பிரிவுகளில் சேர்ந்துப் பயிலும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும். வணிகவியல், ஐ.ஏ.எஸ் துறைப் பாடங்கள் மாற்றியமைக்கப்படும். கம்ப்பியூட்டர் துறை மேலும் வளரும். ஆனால் 2014 தொடக்கத்திலிருந்து சரிவை சந்திக்கும்.
இந்தியாவின் கடக ராசிக்கு நான்காம் வீட்டில் சனி அமர்வதால் உலக நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு தொழில் தொடங்க இந்தியாவில் முதலீடு செய்யும். ஆனால் சீனா உள்ளிட்ட நாடுகளின் ராஜ தந்திரத்தால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கும். நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க அதிநவீன ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்யும். மேலும் நவீன செயற்கை கோள்களை இந்தியா ஏவும். மத்திய அரசு தடுமாறும். அரசியலில் காழ்ப்புணர்ச்சியும், பழிவாங்கும் போக்கும் அதிகரிக்கும். தலைவர்களின் உயிருக்கு ஆபத்து உண்டாகும். சுவிஸ் உள்ளிட்ட மேலை நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் ஒருபகுதி வெளியாகும்.
பசு, குதிரை மற்றும் யானைகளின் எண்ணிக்கை குறையும். ஆடுகள் மேலும் அழியும். வன விலங்குகள் பாதுகாப்பின்றி அலையும். கிரேணட், மார்பல், டையில்ஸ் விலை குறையும். மணல், சிமெண்ட், கம்பி, செங்கல் விலை உயரும். நாட்டில் புகழ் பெற்ற வீடு கட்டுமானப் பணி நிறுவனங்கள் வீழ்ச்சியடையும். இரும்புச் சுரங்கங்கள், நிலக்கரி சுரங்கங்கள், எஃகு தொழிற்சாலைகள் பாதிப்படையும். மின்சாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். மின், பேருந்து, ரயில், வானுர்திக் கட்டணங்கள் உயரும். தங்கம் விலை குறைந்து 2012 மத்தியிலிருந்து உயரும். மின் பற்றாக்குறை 2012 பிற்பகுதியில் சரியாகும். பெட்ரோல் திரவ நிலையிலுள்ள தங்கமாகும். சமையல் எரிவாயு விலை உயரும்.
நிகழும் கர வருடம் மார்கழி மாதம் 5-ம் தேதி புதன் கிழமை (21.12.2011) கிருஷ்ண பட்சம் ஏகாதசி திதி சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில்; சுகர்மம் நாமயோகம், பாலவம் நாமகரணம், சித்தயோகத்தில் சூரிய உதயநேரம் போக உதயாதி நாழிகை 2.17க்கு நேரத்திரம், ஜீவனும் நிறைந்த, பஞ்சபட்சியில் காகம் நடை பயிலும் நேரத்தில் புதன் ஓரையில் சரியாக காலை மணி 6.55க்கு சனி பகவான் கன்னி ராசியிலிருந்து தன் உச்ச வீடான துலாம் ராசிக்குள் நுழைகிறார். சனிபகவான் ஏறக்குறைய 16.12.2014 வரை துலாம் ராசியிலேயே அமர்ந்து தன் ஆதிக்கத்தை செலுத்துவார்.
கன்னி ராசியில் அமர்ந்து பலரையும் கலங்கடித்து கதற வைத்த சனிபகவான் அழகு, ஆடம்பரம், கலை, காவியம் ஆகியவற்றிற்கு சொந்தக்காரரான சுக்ரனின் வீட்டில் அமர்வதால் மக்களிடையே எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். ஆடம்பரத்திற்கும், வசதி, வாய்ப்புகளும் மக்கள் அடிமையாவார்கள். சுற்றுலாத்துறை மேம்பாடடையும். நவீன டிசைன்களில் ஆபரணங்கள் வெளியாகும். ஜவுளித் துறையில் புதுமைப் பிறக்கும். துணிமணிகள் விலை குறையும். விளையாட்டு வீரர்கள், சினிமா, சின்னத்திரைக் கலைஞர்கள் அரசால் சில சலுகைகள் அடைவார்கள். வளர்ந்த நாடுகளுக்கு ஈடு இணையாக இந்தியாவில் நவீன வாகனத் தயாரிப்பு தொழிற் கூடங்கள் அமையும். வாகன உற்பத்தி அதிகரிக்கும். கிராமங்கள் அசுர வளர்ச்சியடையும். மறுமணம் புரிவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வேலையாட்களின் தினக்கூலியும், மாத சம்பளமும் உயரும். பணியாட்களின் பற்றாக்குறையாலும் வேலை நிறுத்தத்தாலும் பல புகழ்பெற்ற தொழிற்கூடங்கள் பாதிப்படையும். விமானம், கப்பல் மற்றும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகும். சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டேப் போகும். பிரபலங்கள் வாகன விபத்துக்குள்ளாவர். நீதிபதிகள் கை ஓங்கும். வழக்கறிஞர்களின் வருமானம் அதிகரிக்கும். ஊழல்வாதிகள் பெரிய பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்படுவர். ஜனநாயகம் தழைக்கும். வி, ஸி, றி, ஜி, க்ஷி ஆகிய எழுத்துக்களில் பெயருடையவர்கள் பிரபலமாவார்கள்.
26.3.2012 முதல் 11.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியில் கன்னி ராசியில் வந்தமர்வதால் அக்காலக்கட்டத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் பாதிப்படைவார்கள். அரசாங்கத்திற்கும் தனியார் பள்ளி நிர்வாகிக்களுக்கும் பனிப்போர் அதிகரிக்கும். தேர்வு முறையில் குளறுபடிகள், வினாத் தாள்கள் முன்னரே வெளியாகுதல் போன்ற நிலை ஏற்படும். இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உச்சம் பெற்று அமர்வதால் சி.ஏ., கேட்டரிங், ஷிப்பிங், சிவில் மெக்கானிக்கல், டிசைனிங், விஷ்வல் கம்யூனிக்கேஷன், சுற்றுலா, சட்டம் சம்பந்தப்பட்ட கல்விப் பிரிவுகளில் சேர்ந்துப் பயிலும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும். வணிகவியல், ஐ.ஏ.எஸ் துறைப் பாடங்கள் மாற்றியமைக்கப்படும். கம்ப்பியூட்டர் துறை மேலும் வளரும். ஆனால் 2014 தொடக்கத்திலிருந்து சரிவை சந்திக்கும்.
இந்தியாவின் கடக ராசிக்கு நான்காம் வீட்டில் சனி அமர்வதால் உலக நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு தொழில் தொடங்க இந்தியாவில் முதலீடு செய்யும். ஆனால் சீனா உள்ளிட்ட நாடுகளின் ராஜ தந்திரத்தால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கும். நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க அதிநவீன ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்யும். மேலும் நவீன செயற்கை கோள்களை இந்தியா ஏவும். மத்திய அரசு தடுமாறும். அரசியலில் காழ்ப்புணர்ச்சியும், பழிவாங்கும் போக்கும் அதிகரிக்கும். தலைவர்களின் உயிருக்கு ஆபத்து உண்டாகும். சுவிஸ் உள்ளிட்ட மேலை நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் ஒருபகுதி வெளியாகும்.
பசு, குதிரை மற்றும் யானைகளின் எண்ணிக்கை குறையும். ஆடுகள் மேலும் அழியும். வன விலங்குகள் பாதுகாப்பின்றி அலையும். கிரேணட், மார்பல், டையில்ஸ் விலை குறையும். மணல், சிமெண்ட், கம்பி, செங்கல் விலை உயரும். நாட்டில் புகழ் பெற்ற வீடு கட்டுமானப் பணி நிறுவனங்கள் வீழ்ச்சியடையும். இரும்புச் சுரங்கங்கள், நிலக்கரி சுரங்கங்கள், எஃகு தொழிற்சாலைகள் பாதிப்படையும். மின்சாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். மின், பேருந்து, ரயில், வானுர்திக் கட்டணங்கள் உயரும். தங்கம் விலை குறைந்து 2012 மத்தியிலிருந்து உயரும். மின் பற்றாக்குறை 2012 பிற்பகுதியில் சரியாகும். பெட்ரோல் திரவ நிலையிலுள்ள தங்கமாகும். சமையல் எரிவாயு விலை உயரும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தனுசு
உங்கள் ராசிக்கு 2, 3-ஆம் இடங்களுக்குரிய சனி 11-ஆமிடம் மாறியிருக்கிறார். விசேடமான நன்மைகள் உண்டாகும் நேரமிது. 2-ஆம் வீட்டோன் 11-ல் உலவுவதால் பொருளாதாரச் செழிப்பு உண்டாகும். பல வழிகளில் வருமானம் கிடைக்கும். குடும்ப நலம் சிறக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். 3-ஆம் வீட்டோன் 11-ல் இருப்பதால் இளைய சகோதர, சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். தகவல் தொடர்பு, கொடுக்கல்-வாங்கல், கலைத்துறை, சட்டத்துறை, கல்வித்துறை ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். கறுப்பு, கருநீலநிறப்பொருட்கள், எண்ணெய் வகையறாக்கள், இரும்பு, எஃகு பொருட்கள், பழைய பொருட்கள், பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பொருட்கள், கரி, ஆகாய மார்க்கம், காற்று சம்பந்தப்பட்ட இனங்கள் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும். சமுதாய நலப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். உயர்பதவி, பட்டங்கள் தேடிவரும். பொதுஜனத் தொடர்பு வலுக்கும். சனி சர ராசியில், சுக்கிரனின் வீட்டில், தன் உச்ச ராசியில் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் அதிகம் பயன் கிடைக்கும். அழகுப் பொருட்கள் சேரும். புதிய துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புக் கூடிவரும். பல வழிகளில் ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். சகோதரர் வெளிநாடு செல்வார். தாய் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். அடிவயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை பொருளாதார நிலை உயரும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் அதிகம் பயன்பெறுவார்கள். இயந்திரங்கள் லாபம் தரும். இஞ்சினீயர்களது எண்ணம் நிறைவேறும். மந்திர சித்தி சிலருக்கு உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறும் மக்களால் பாக்கியமும் உண்டாகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும் என்பதால் சிக்கனத்தைக் கையாள்வது நல்லது. சிலருக்கு இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். 16-5-2012 முதல் 4-8-2012 வரை சகோதர நலனில் கவனம் தேவைப்படும். தொழிலில் முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் முளைக்கும். மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். அதன்பிறகு பொருளாதார நிலை உயரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். உடன்பிறந்தவர்களின் நலம் சீராகும்.
11-10-2012 முதல் 4-11-2013 வரை வெளிநாட்டுத் தொடர்பால் அதிகம் நலம் உண்டாகும் நேரமிது. வேற்று மத, மொழி, இனக்காரர்கள் உங்களுக்குப் பெரிதும் உதவுவார்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். புதையல் போன்ற பெரும் தனம் கிடைக்கும். குறுக்கு வழிகளிலும் ஆதாயம் பெறுவீர்கள். ராகுவும் சனியும் 23-12-2012 முதல் லாப ஸ்தானத்தில் உலவும் நிலை அமைவதால் வீடு மாற்றம், தொழில் மாற்றம் ஆகியவை உண்டாகும். பல வழிகளிலும் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் கைகூடும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். போக்குவரத்து, ஏற்றுமதி,இறக்குமதி, தோல், எலக்ட் ரானிக்ஸ், கம்ப்யூட்டர், கொரியர், தகவல் தொடர்பு, நவீன விஞ்ஞானக் கருவிகள், கறுப்பு, கருநீலநிறப்பொருட்களால் ஆதாயம் பெருகும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். மக்களாலும் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். காது, கால் சம்பந்தப்பட்ட உபாதைகள் சிலருக்கு ஏற்படும்.
5-11-2013 முதல் 1-11-2014 வரை. செல்வாக்கும் மதிப்பும் உயரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் இப்போது கிடைக்கும். மாணவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். தாய் நலம் சீராகும். சுகானுபவம் கூடும். உடல் நலம் திருப்தி தரும். நல்லவர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வாய்ப்புக்கூடிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். திருமணம் ஆகாதவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிட்டும். வாழ்வில் முன்னேற்றம், காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். விவசாயிகளும் தொழிலாளர்களும் உத்தியோகஸ்தர்களும் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும்.
மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் சுபிட்சம் கூடும். வாழ்க்கைத்தரம் நிச்சயமாக உயரும்.
உங்கள் ராசிக்கு 2, 3-ஆம் இடங்களுக்குரிய சனி 11-ஆமிடம் மாறியிருக்கிறார். விசேடமான நன்மைகள் உண்டாகும் நேரமிது. 2-ஆம் வீட்டோன் 11-ல் உலவுவதால் பொருளாதாரச் செழிப்பு உண்டாகும். பல வழிகளில் வருமானம் கிடைக்கும். குடும்ப நலம் சிறக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். 3-ஆம் வீட்டோன் 11-ல் இருப்பதால் இளைய சகோதர, சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். தகவல் தொடர்பு, கொடுக்கல்-வாங்கல், கலைத்துறை, சட்டத்துறை, கல்வித்துறை ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். கறுப்பு, கருநீலநிறப்பொருட்கள், எண்ணெய் வகையறாக்கள், இரும்பு, எஃகு பொருட்கள், பழைய பொருட்கள், பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பொருட்கள், கரி, ஆகாய மார்க்கம், காற்று சம்பந்தப்பட்ட இனங்கள் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும். சமுதாய நலப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். உயர்பதவி, பட்டங்கள் தேடிவரும். பொதுஜனத் தொடர்பு வலுக்கும். சனி சர ராசியில், சுக்கிரனின் வீட்டில், தன் உச்ச ராசியில் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் அதிகம் பயன் கிடைக்கும். அழகுப் பொருட்கள் சேரும். புதிய துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புக் கூடிவரும். பல வழிகளில் ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். சகோதரர் வெளிநாடு செல்வார். தாய் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். அடிவயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை பொருளாதார நிலை உயரும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் அதிகம் பயன்பெறுவார்கள். இயந்திரங்கள் லாபம் தரும். இஞ்சினீயர்களது எண்ணம் நிறைவேறும். மந்திர சித்தி சிலருக்கு உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறும் மக்களால் பாக்கியமும் உண்டாகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும் என்பதால் சிக்கனத்தைக் கையாள்வது நல்லது. சிலருக்கு இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். 16-5-2012 முதல் 4-8-2012 வரை சகோதர நலனில் கவனம் தேவைப்படும். தொழிலில் முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் முளைக்கும். மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். அதன்பிறகு பொருளாதார நிலை உயரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். உடன்பிறந்தவர்களின் நலம் சீராகும்.
11-10-2012 முதல் 4-11-2013 வரை வெளிநாட்டுத் தொடர்பால் அதிகம் நலம் உண்டாகும் நேரமிது. வேற்று மத, மொழி, இனக்காரர்கள் உங்களுக்குப் பெரிதும் உதவுவார்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். புதையல் போன்ற பெரும் தனம் கிடைக்கும். குறுக்கு வழிகளிலும் ஆதாயம் பெறுவீர்கள். ராகுவும் சனியும் 23-12-2012 முதல் லாப ஸ்தானத்தில் உலவும் நிலை அமைவதால் வீடு மாற்றம், தொழில் மாற்றம் ஆகியவை உண்டாகும். பல வழிகளிலும் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் கைகூடும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். போக்குவரத்து, ஏற்றுமதி,இறக்குமதி, தோல், எலக்ட் ரானிக்ஸ், கம்ப்யூட்டர், கொரியர், தகவல் தொடர்பு, நவீன விஞ்ஞானக் கருவிகள், கறுப்பு, கருநீலநிறப்பொருட்களால் ஆதாயம் பெருகும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். மக்களாலும் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். காது, கால் சம்பந்தப்பட்ட உபாதைகள் சிலருக்கு ஏற்படும்.
5-11-2013 முதல் 1-11-2014 வரை. செல்வாக்கும் மதிப்பும் உயரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் இப்போது கிடைக்கும். மாணவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். தாய் நலம் சீராகும். சுகானுபவம் கூடும். உடல் நலம் திருப்தி தரும். நல்லவர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வாய்ப்புக்கூடிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். திருமணம் ஆகாதவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிட்டும். வாழ்வில் முன்னேற்றம், காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். விவசாயிகளும் தொழிலாளர்களும் உத்தியோகஸ்தர்களும் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும்.
மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் சுபிட்சம் கூடும். வாழ்க்கைத்தரம் நிச்சயமாக உயரும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மகரம்
உங்கள் ஜன்ம ராசிக்கும் 2-ஆமிடத்துக்கும் உரிய சனி 10-ஆமிடம் வந்திருக்கிறார். சனி தன் உச்ச ராசியில் இருப்பதால் நலமே உண்டாகும். எடுத்த காரியங்கள் நிறைவேறும். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். புதிய முயற்சிகள் கைகூடும். செல்வ நிலையில் விசேடமான வளர்ச்சி காணலாம். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடமுண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பதவிச் சிறப்பு உண்டாகும். தலைமை தாங்கும் தகுதியைப் பெறுவீர்கள். உடல்நலம் சீராகும். மன பலம் கூடும். பொது நலப்பணிகளில் ஈடுபட்டு நற்பெயர் பெறுவீர்கள். பூமியால் லாபம் உண்டாகும். புதிய சொத்துக்களும் சேரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் நிச்சயம் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் நலனில் கவனம் தேவை. பெற்றோருக்கும் மக்களுக்குமிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக்கொடுத்துப் பழகுவது அவசியமாகும். தொழில் ரீதியாகச் சிலர் இடமாற்றம் பெறுவார்கள். சனி சுக்கிரனின் வீட்டில், சர ராசியில், தன் உச்ச ராசியில் இருப்பதால் சட்டம், கலை, வாக்கு, பொருள் கொடுக்கல்-வாங்கல், சுரங்கம், இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், பழைய பொருட்கள், கலைப்பொருட்கள் போன்றவற்றால் வருமானம் கூடப் பெறலாம். வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். அதனால் ஆதாயமும்கிடைக்கும்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை புதிய பொருட்களும் சொத்துக்களும் சேரும். மாணவர்களது நிலை உயரும். இயந்திரங்கள் லாபம் தரும். மூத்த சகோதர, சகோதரிகளால் சிறுசிறு பிரச்னைகள் சூழும். குறுக்கு வழிகளில் ஈடுபடலாகாது. 17-5-2012 முதல் மக்கள் நலம் சீராகும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். சகோதர நலம் சீராகும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறச் சந்தர்ப்பம் உருவாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். மக்கள் நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபடுவீர்கள். மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் ஆக வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு மந்திர சித்தி ஏற்படும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
11-10-2012 முதல் 4-11-2013 வரை பயணம் செய்வதில் நாட்டம் கூடும். பயணத்தால் அனுகூலமும் பெறுவீர்கள். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நேரத்தில் பெரிதும் உதவி புரிவார்கள். போக்குவரத்துச் சாதனங்களால் லாபம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களைச் சேர்ந்தவர்கள் அதிக ஆதாயம் பெறுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளால் வருமானம் கிடைத்துவரும். வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். தோல் பொருட்கள் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்கள் புகழ் பெறுவார்கள். புதிய கண்டுபிடிப்புக்களின் மூலம் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண்பீர்கள். அரசு விருதும் பாராட்டுகளும் கிடைக்கும். மாறுபட்ட கருத்துக்களை வெளியிடுவீர்கள். நவீன விஞ்ஞானத்துறைகளில் ஈடுபாடு உண்டாகும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். தொழில் ரீதியாக ஒரு மாற்றம் ஏற்படும்.
5-11-2013 முதல் 1-11-2014 வரை உடன்பிறந்தவர்கள் உதவி புரிய முன்வருவார்கள். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். வெளிநாட்டு வேலை சிலருக்கு இந்த நேரத்தில் கிடைக்கும். மக்களால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் மற்றும் நவீன விஞ்ஞானத்துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். ரேடியோ, வீடியோ, டி.வி., பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்புக் கூடும். மாணவர்களது நிலை உயரும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். நல்லவர்களது தொடர்பால் நலம் பல பெறுவீர்கள். 19-6-2014 முதல் செல்வ வளம் மேலும் கூடும். கணவன் மனைவி உறவு நிலை சிறக்கும். கூட்டாகத் தொழில் செய்பவர்கள் லாபம் கூடப் பெறுவார்கள். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். தெய்வப் பணிகள் நிறைவேறும். புனித நதிகளில் நீராடும் பாக்கியம் கிட்டும். பெரியவர்கள், தனவந்தர்கள், சித்தர்கள் ஆகியோரது ஆசிகளைப் பெறுவீர்கள். த்யானம், யோகா ஆகியவற்றில் ஈடுபடுவீர்கள். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலம் ஓரளவுக்குச் சிறப்பானதாக அமையும்.
உங்கள் ஜன்ம ராசிக்கும் 2-ஆமிடத்துக்கும் உரிய சனி 10-ஆமிடம் வந்திருக்கிறார். சனி தன் உச்ச ராசியில் இருப்பதால் நலமே உண்டாகும். எடுத்த காரியங்கள் நிறைவேறும். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். புதிய முயற்சிகள் கைகூடும். செல்வ நிலையில் விசேடமான வளர்ச்சி காணலாம். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடமுண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பதவிச் சிறப்பு உண்டாகும். தலைமை தாங்கும் தகுதியைப் பெறுவீர்கள். உடல்நலம் சீராகும். மன பலம் கூடும். பொது நலப்பணிகளில் ஈடுபட்டு நற்பெயர் பெறுவீர்கள். பூமியால் லாபம் உண்டாகும். புதிய சொத்துக்களும் சேரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் நிச்சயம் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் நலனில் கவனம் தேவை. பெற்றோருக்கும் மக்களுக்குமிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக்கொடுத்துப் பழகுவது அவசியமாகும். தொழில் ரீதியாகச் சிலர் இடமாற்றம் பெறுவார்கள். சனி சுக்கிரனின் வீட்டில், சர ராசியில், தன் உச்ச ராசியில் இருப்பதால் சட்டம், கலை, வாக்கு, பொருள் கொடுக்கல்-வாங்கல், சுரங்கம், இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், பழைய பொருட்கள், கலைப்பொருட்கள் போன்றவற்றால் வருமானம் கூடப் பெறலாம். வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். அதனால் ஆதாயமும்கிடைக்கும்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை புதிய பொருட்களும் சொத்துக்களும் சேரும். மாணவர்களது நிலை உயரும். இயந்திரங்கள் லாபம் தரும். மூத்த சகோதர, சகோதரிகளால் சிறுசிறு பிரச்னைகள் சூழும். குறுக்கு வழிகளில் ஈடுபடலாகாது. 17-5-2012 முதல் மக்கள் நலம் சீராகும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். சகோதர நலம் சீராகும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறச் சந்தர்ப்பம் உருவாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். மக்கள் நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபடுவீர்கள். மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் ஆக வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு மந்திர சித்தி ஏற்படும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
11-10-2012 முதல் 4-11-2013 வரை பயணம் செய்வதில் நாட்டம் கூடும். பயணத்தால் அனுகூலமும் பெறுவீர்கள். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நேரத்தில் பெரிதும் உதவி புரிவார்கள். போக்குவரத்துச் சாதனங்களால் லாபம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களைச் சேர்ந்தவர்கள் அதிக ஆதாயம் பெறுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளால் வருமானம் கிடைத்துவரும். வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். தோல் பொருட்கள் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்கள் புகழ் பெறுவார்கள். புதிய கண்டுபிடிப்புக்களின் மூலம் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண்பீர்கள். அரசு விருதும் பாராட்டுகளும் கிடைக்கும். மாறுபட்ட கருத்துக்களை வெளியிடுவீர்கள். நவீன விஞ்ஞானத்துறைகளில் ஈடுபாடு உண்டாகும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். தொழில் ரீதியாக ஒரு மாற்றம் ஏற்படும்.
5-11-2013 முதல் 1-11-2014 வரை உடன்பிறந்தவர்கள் உதவி புரிய முன்வருவார்கள். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். வெளிநாட்டு வேலை சிலருக்கு இந்த நேரத்தில் கிடைக்கும். மக்களால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் மற்றும் நவீன விஞ்ஞானத்துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். ரேடியோ, வீடியோ, டி.வி., பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்புக் கூடும். மாணவர்களது நிலை உயரும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். நல்லவர்களது தொடர்பால் நலம் பல பெறுவீர்கள். 19-6-2014 முதல் செல்வ வளம் மேலும் கூடும். கணவன் மனைவி உறவு நிலை சிறக்கும். கூட்டாகத் தொழில் செய்பவர்கள் லாபம் கூடப் பெறுவார்கள். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். தெய்வப் பணிகள் நிறைவேறும். புனித நதிகளில் நீராடும் பாக்கியம் கிட்டும். பெரியவர்கள், தனவந்தர்கள், சித்தர்கள் ஆகியோரது ஆசிகளைப் பெறுவீர்கள். த்யானம், யோகா ஆகியவற்றில் ஈடுபடுவீர்கள். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலம் ஓரளவுக்குச் சிறப்பானதாக அமையும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கும்பம்:
உங்கள் ராசிக்கு அதிபதியும், விரயாதிபதியுமான சனி 9-ல் உலவுகிறார். அஷ்டமச் சனி விலகியதால் இதுவரையிலும் அனுபவித்து வந்த துன்பங்களும் துயரங்களும் இனி விலகும். மன அமைதிக்குறைவும் நீங்கும். தெளிவான பாதை புலப்படும். தெய்வ காரியங்களிலும் தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். மன பலமும் கூடும். 12-ஆம் வீட்டோன் 9-ல் இருப்பதால் தந்தையால் செலவுகள் ஏற்படும். தந்தையை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிவரலாம். சுபச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தாரால் சில குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். தாய் நலனில் கவனம் தேவைப்படும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படக் காரணம் உண்டு; எச்சரிக்கை தேவை.
வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகள் அகலுவார்கள். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். செய்து வரும் தொழிலில் முழு ஈடுபாடு கொண்டு வளர்ச்சி காண்பீர்கள். பண நடமாட்டம் அதிகரிக்கும். கடன் தொல்லை குறையும். தெய்வ காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சொத்துக்கள் சேரும். 16-5-2012 முதல் குடும்பத்தில் சலசலப்புக்கள் உண்டாகும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. வீண்வம்பு கூடாது. மக்கள் நலனில் கவனம் தேவை. தொழில் ரீதியாகச் சில மாற்றங்கள் உண்டாகும். என்றாலும் திருப்திகரமாக அமையாது. 4-8-2012 முதல் நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
11-10-2012 முதல் 4-11-2013 வரை அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் லாபம் தரும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் நிறைவேறும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். போக்குவரத்துத் துறை லாபம் தரும். செய்தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதனால் ஏற்றமும் உண்டாகும். வீடு மாற்றமும் சிலருக்கு இந்த நேரத்தில் அமையும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். 23-12-2012 முதல் தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். தந்தை நலம் பாதிக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் குடும்பத்தாரால் பிரச்னைகள் சூழும். 31-5-2013 முதல் சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழிபிறக்கும். தந்தை நலம் சீராகும். மதிப்புக்குக் குறைவிராது. மகப்பேறும் மக்களால் பாக்கியமும் உண்டாகும்.
5-11-2013 முதல் 1-11-2014 வரை குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பேச்சாற்றல் வெளிப்படும். செல்வ வளம் பெருகும். பல வழிகளில் வருமானம் வந்து சேரும். தன, லாபம் பெருகும். அரசியல், நிர்வாகம், ஆன்மிகம், சட்டம், மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். உயர் பதவிகளும் பட்டங்களும் வந்து சேரும். 19-6-2014 முதல் சோதனைகள் அதிகரிக்கும். எதிலும் யோசித்து ஈடுபடவும். பொருளாதார சிக்கல் உருவாகும். கடன் தொல்லை உண்டாகும். குடும்பத்தாராலும், பிற மொழி, மதக்காரர்களாலும் பிரச்னைகள் சூழும். வீண் வம்பு வேண்டாம். உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பயணத்தால் அனுகூலமிராது. எதிலும் வேகத்தைக் குறைத்துக் கொள்ளவும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலம் சுமாரானது.
உங்கள் ராசிக்கு அதிபதியும், விரயாதிபதியுமான சனி 9-ல் உலவுகிறார். அஷ்டமச் சனி விலகியதால் இதுவரையிலும் அனுபவித்து வந்த துன்பங்களும் துயரங்களும் இனி விலகும். மன அமைதிக்குறைவும் நீங்கும். தெளிவான பாதை புலப்படும். தெய்வ காரியங்களிலும் தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். மன பலமும் கூடும். 12-ஆம் வீட்டோன் 9-ல் இருப்பதால் தந்தையால் செலவுகள் ஏற்படும். தந்தையை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிவரலாம். சுபச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தாரால் சில குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். தாய் நலனில் கவனம் தேவைப்படும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படக் காரணம் உண்டு; எச்சரிக்கை தேவை.
வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகள் அகலுவார்கள். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். செய்து வரும் தொழிலில் முழு ஈடுபாடு கொண்டு வளர்ச்சி காண்பீர்கள். பண நடமாட்டம் அதிகரிக்கும். கடன் தொல்லை குறையும். தெய்வ காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சொத்துக்கள் சேரும். 16-5-2012 முதல் குடும்பத்தில் சலசலப்புக்கள் உண்டாகும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. வீண்வம்பு கூடாது. மக்கள் நலனில் கவனம் தேவை. தொழில் ரீதியாகச் சில மாற்றங்கள் உண்டாகும். என்றாலும் திருப்திகரமாக அமையாது. 4-8-2012 முதல் நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
11-10-2012 முதல் 4-11-2013 வரை அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் லாபம் தரும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் நிறைவேறும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். போக்குவரத்துத் துறை லாபம் தரும். செய்தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதனால் ஏற்றமும் உண்டாகும். வீடு மாற்றமும் சிலருக்கு இந்த நேரத்தில் அமையும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். 23-12-2012 முதல் தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். தந்தை நலம் பாதிக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் குடும்பத்தாரால் பிரச்னைகள் சூழும். 31-5-2013 முதல் சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழிபிறக்கும். தந்தை நலம் சீராகும். மதிப்புக்குக் குறைவிராது. மகப்பேறும் மக்களால் பாக்கியமும் உண்டாகும்.
5-11-2013 முதல் 1-11-2014 வரை குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பேச்சாற்றல் வெளிப்படும். செல்வ வளம் பெருகும். பல வழிகளில் வருமானம் வந்து சேரும். தன, லாபம் பெருகும். அரசியல், நிர்வாகம், ஆன்மிகம், சட்டம், மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். உயர் பதவிகளும் பட்டங்களும் வந்து சேரும். 19-6-2014 முதல் சோதனைகள் அதிகரிக்கும். எதிலும் யோசித்து ஈடுபடவும். பொருளாதார சிக்கல் உருவாகும். கடன் தொல்லை உண்டாகும். குடும்பத்தாராலும், பிற மொழி, மதக்காரர்களாலும் பிரச்னைகள் சூழும். வீண் வம்பு வேண்டாம். உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பயணத்தால் அனுகூலமிராது. எதிலும் வேகத்தைக் குறைத்துக் கொள்ளவும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலம் சுமாரானது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மீனம்:
உங்கள் ராசிக்கு 11, 12-ஆம் இடங்களுக்கு அதிபதியான சனி 8-ஆமிடத்தில் உலவுகிறார். அஷ்டம சனியின் காலமிது. சிறப்பாகாது. எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். குறுக்கு வழிகளில் ஈடுபடலாகாது. நேரான பாதையில் செல்வதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் மீளலாம். வீண் வம்பு, வழக்கு; சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். தண்டச் செலவுகள் ஏற்படும். செய்யாத குற்றத்துக்கு நீங்கள் தண்டனையைப் பெற நேரலாம். கெட்டவர்களின் தொடர்பை அறவே விட்டு விலகுவது அவசியமாகும். தொழிலில் முன்னேற்றம் காண்பது அரிது. விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை உண்டாகும். பொருள் களவு போகும். எடுத்த காரியத்தை முடிக்க அரும்பாடுபட வேண்டிவரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றம் பாதிக்கும். சொத்துக்களை இழக்க வேண்டிவரலாம். பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். உடன்பிறந்தவர்களின் நலம் பாதிக்கும். தந்தையால் அதிகம் அனுகூலமிராது. அரசு தண்டனை பெறவோ, அரசு அபராதம் கட்டவோ வேண்டிவரும்.
பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. மக்களால் மன அமைதி குறையும். செய்தொழில் எதுவானாலும் அதில் அதிகம் கவனம் செலுத்தி, அயராது பாடுபடுவது அவசியமாகும். உங்களுடைய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கலாகாது. அகப்பட்டவனுக்கு அஷ்டம சனி என்பார்கள். இதனால் எதிலும் எச்சரிக்கை தேவை. ஜனன கால ஜாதகப்படி தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. இறைவழிபாட்டிலும், கிரக வழிபாட்டிலும் முழு நம்பிக்கையுடன் ஈடுபடவும். அதன்மூலம் சங்கடங்களைக் குறைத்துக்கொள்ள முடியும். ஹனுமன் சாலீசா படியுங்கள்; கேளுங்கள். சனிக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுங்கள். கோளறு பதிகம் சொல்லுங்கள்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழும். பேச்சால் ஜீவனம் செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கடன் உபத்திரவம் குறையும். தந்தையால் ஓரளவு நலம் உண்டாகும். செய்து வரும் தொழிலில் முழு ஈடுபாடு இருந்தால் வளர்ச்சி காணமுடியும். 17-5-2012 முதல் பொருளாதாரப் பிரச்னை உண்டாகும். பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். செய்தொழில் எதுவானாலும் அதில் முழுக்கவனம் தேவை. விரும்பத்தகாத இடமாற்றமோ, நிலைமாற்றமோ உண்டாகும். தேவைகளைச் சமாளிக்கக் கடன்பட நேரலாம். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். பொறாமைக்காரர்களாலும் போட்டியாளர்களாலும் தொல்லைகள் பெருகும். யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. யாருக்கும் ஜாமீன் கொடுக்கவேண்டாம். உங்கள் கடமைகளை நீங்களே ஆற்றி வருவது அவசியமாகும்.
11-10-2012 முதல் 4-11-2012 வரை தொலைதூரத் தொடர்பு ஓரளவு நலம் தரும். பெற்றோரால் அளவோடு அனுகூலம் உண்டாகும். புதியவர்கள் உதவி புரிய முன்வருவார்கள். 23-12-2012 முதல் பயணத்தால் சங்கடத்துக்கு ஆளாக நேரலாம்; எச்சரிக்கை தேவை. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும்போது விழிப்புடன் இருப்பது நல்லது. ஆகாயம், காற்று சம்பந்தப்பட்ட இனங்களால் சங்கடங்கள் உண்டாகும். உடல்நலம் பாதிக்கும். தோல், பல், கண், வாய், குடல் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். ஃபுட் பாய்ஸன் ஆகலாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம் தேவை. எதிலும் வேகம் கூடாது.
5-11-2013 முதல் 1-11-2014 வரை பிரச்னைகள் சற்று குறையும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். பண நடமாட்டம் சற்று அதிகரிக்கும். ஆன்மிக ஈடுபாடு மன அமைதியைத் தரும். நிலம், மனை, வீடு, வாகனங்கள் சேரும். சொத்துக்களால் அளவோடு ஆதாயமும் கிடைத்துவரும். 19-6-2014 முதல் எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். மக்கள் நலம் சீராகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். தெய்வ தரிசனம், சாது தரிசனம் ஆகியவை கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் எதையும் சமாளிப்பீர்கள். தெய்வானுகூலம் உண்டாகும்.
மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலம் சோதனையானது. இறைவழிபாட்டின் மூலமும் கிரக வழிபாட்டின் மூலமும் மட்டுமே அமைதி பெறமுடியும். ஜாதக பலம் உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம். தர்ம நியாயப்படி நடப்பவர்களைச் சனி எப்போதும் தண்டிக்கமாட்டார் என்பதால் நேர்வழியில் ஈடுபடுங்கள். பெரியோர்களது அறிவுரைகளைக் கேட்டு அதன்படி செயல்படுங்கள். நல்லதே நடக்கும்.
உங்கள் ராசிக்கு 11, 12-ஆம் இடங்களுக்கு அதிபதியான சனி 8-ஆமிடத்தில் உலவுகிறார். அஷ்டம சனியின் காலமிது. சிறப்பாகாது. எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். குறுக்கு வழிகளில் ஈடுபடலாகாது. நேரான பாதையில் செல்வதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் மீளலாம். வீண் வம்பு, வழக்கு; சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். தண்டச் செலவுகள் ஏற்படும். செய்யாத குற்றத்துக்கு நீங்கள் தண்டனையைப் பெற நேரலாம். கெட்டவர்களின் தொடர்பை அறவே விட்டு விலகுவது அவசியமாகும். தொழிலில் முன்னேற்றம் காண்பது அரிது. விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை உண்டாகும். பொருள் களவு போகும். எடுத்த காரியத்தை முடிக்க அரும்பாடுபட வேண்டிவரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றம் பாதிக்கும். சொத்துக்களை இழக்க வேண்டிவரலாம். பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். உடன்பிறந்தவர்களின் நலம் பாதிக்கும். தந்தையால் அதிகம் அனுகூலமிராது. அரசு தண்டனை பெறவோ, அரசு அபராதம் கட்டவோ வேண்டிவரும்.
பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. மக்களால் மன அமைதி குறையும். செய்தொழில் எதுவானாலும் அதில் அதிகம் கவனம் செலுத்தி, அயராது பாடுபடுவது அவசியமாகும். உங்களுடைய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கலாகாது. அகப்பட்டவனுக்கு அஷ்டம சனி என்பார்கள். இதனால் எதிலும் எச்சரிக்கை தேவை. ஜனன கால ஜாதகப்படி தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. இறைவழிபாட்டிலும், கிரக வழிபாட்டிலும் முழு நம்பிக்கையுடன் ஈடுபடவும். அதன்மூலம் சங்கடங்களைக் குறைத்துக்கொள்ள முடியும். ஹனுமன் சாலீசா படியுங்கள்; கேளுங்கள். சனிக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுங்கள். கோளறு பதிகம் சொல்லுங்கள்.
15-11-2011 முதல் 10-10-2012 வரை எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழும். பேச்சால் ஜீவனம் செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கடன் உபத்திரவம் குறையும். தந்தையால் ஓரளவு நலம் உண்டாகும். செய்து வரும் தொழிலில் முழு ஈடுபாடு இருந்தால் வளர்ச்சி காணமுடியும். 17-5-2012 முதல் பொருளாதாரப் பிரச்னை உண்டாகும். பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். செய்தொழில் எதுவானாலும் அதில் முழுக்கவனம் தேவை. விரும்பத்தகாத இடமாற்றமோ, நிலைமாற்றமோ உண்டாகும். தேவைகளைச் சமாளிக்கக் கடன்பட நேரலாம். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். பொறாமைக்காரர்களாலும் போட்டியாளர்களாலும் தொல்லைகள் பெருகும். யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. யாருக்கும் ஜாமீன் கொடுக்கவேண்டாம். உங்கள் கடமைகளை நீங்களே ஆற்றி வருவது அவசியமாகும்.
11-10-2012 முதல் 4-11-2012 வரை தொலைதூரத் தொடர்பு ஓரளவு நலம் தரும். பெற்றோரால் அளவோடு அனுகூலம் உண்டாகும். புதியவர்கள் உதவி புரிய முன்வருவார்கள். 23-12-2012 முதல் பயணத்தால் சங்கடத்துக்கு ஆளாக நேரலாம்; எச்சரிக்கை தேவை. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும்போது விழிப்புடன் இருப்பது நல்லது. ஆகாயம், காற்று சம்பந்தப்பட்ட இனங்களால் சங்கடங்கள் உண்டாகும். உடல்நலம் பாதிக்கும். தோல், பல், கண், வாய், குடல் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். ஃபுட் பாய்ஸன் ஆகலாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம் தேவை. எதிலும் வேகம் கூடாது.
5-11-2013 முதல் 1-11-2014 வரை பிரச்னைகள் சற்று குறையும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். பண நடமாட்டம் சற்று அதிகரிக்கும். ஆன்மிக ஈடுபாடு மன அமைதியைத் தரும். நிலம், மனை, வீடு, வாகனங்கள் சேரும். சொத்துக்களால் அளவோடு ஆதாயமும் கிடைத்துவரும். 19-6-2014 முதல் எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். மக்கள் நலம் சீராகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். தெய்வ தரிசனம், சாது தரிசனம் ஆகியவை கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் எதையும் சமாளிப்பீர்கள். தெய்வானுகூலம் உண்டாகும்.
மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலம் சோதனையானது. இறைவழிபாட்டின் மூலமும் கிரக வழிபாட்டின் மூலமும் மட்டுமே அமைதி பெறமுடியும். ஜாதக பலம் உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம். தர்ம நியாயப்படி நடப்பவர்களைச் சனி எப்போதும் தண்டிக்கமாட்டார் என்பதால் நேர்வழியில் ஈடுபடுங்கள். பெரியோர்களது அறிவுரைகளைக் கேட்டு அதன்படி செயல்படுங்கள். நல்லதே நடக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலம் சோதனையானது. இறைவழிபாட்டின் மூலமும் கிரக வழிபாட்டின் மூலமும் மட்டுமே அமைதி பெறமுடியும். ஜாதக பலம் உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம். தர்ம நியாயப்படி நடப்பவர்களைச் சனி எப்போதும் தண்டிக்கமாட்டார் என்பதால் நேர்வழியில் ஈடுபடுங்கள். பெரியோர்களது அறிவுரைகளைக் கேட்டு அதன்படி செயல்படுங்கள். நல்லதே நடக்கும்.
எனக்கு
எனக்கு
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
.
மொத்தத்தில் இந்தச் சனிப் பெயர்ச்சிக்காலத்தில் தொழில் ரீதியாக முன்னேற்றம் காண்பீர்கள்
எண்ணத்த தொழில் ரீதியிலான முன்னேற்றம் அடைந்து எண்ணத்த செய்ய
பதிவிற்கு நன்றி அம்மா !
மகர ராசிக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி நன்றாகவே உள்ளது அக்கா!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
என்ன கொடுமை இது ? மீன ராசிக்கு இவ்வளவு பிரச்சனையா .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வை.பாலாஜி wrote:என்ன கொடுமை இது ? மீன ராசிக்கு இவ்வளவு பிரச்சனையா .
என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|