புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_m10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10 
91 Posts - 61%
heezulia
'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_m10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_m10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_m10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_m10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10 
1 Post - 1%
viyasan
'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_m10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10 
1 Post - 1%
eraeravi
'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_m10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_m10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10 
283 Posts - 45%
heezulia
'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_m10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_m10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_m10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_m10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10 
19 Posts - 3%
prajai
'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_m10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_m10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_m10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_m10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10 
7 Posts - 1%
mruthun
'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_m10'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.


   
   

Page 1 of 2 1, 2  Next

greatmaba
greatmaba
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 01/03/2010
http://www.tamilanveethi.blogspot.com

Postgreatmaba Wed Dec 07, 2011 10:43 am

இன்று தெருவுக்குத் தெரு டீ கடை இருக்கிறதோ இல்லையே அம்மா ஜெயலலிதா புண்ணியத்தில் மூலைக்கு மூலை டாஸ்மாக் இருக்கிறது. ஒயின்ஷாப்புகளை அரசுடமையாக்கி தமிழர்களை குடிக்கு அடிமையாக்கிய பெருமை ஜெயாவையே சாரும்.



முந்தைக்கும் முந்தைய ஜெயா ஆட்சியில் திமுகாவினர் சிண்டிக்கேட் அமைத்து ஒயின்ஷாப்புகளை நடத்தி வந்தனர். அதிகம் பணம் புழங்கும் இந்த போதை தொழிலில் திமுகவினரின் ஆதிக்கத்தை நினைத்து பொறுமிய ஜெயலலிதா அவர்களின் கொட்டத்தை அடக்க என்ன செய்யாலாம் என்று யோசித்ததன் விளைவுதான், அதை அரசே ஏற்று நடத்துவது.

உலகில் எங்கேயாவது இந்த அநியாயத்தை கேள்விபட்டிருக்கிறீர்களா....? அரசாங்கமே போதை பொருள் விற்பதை!


இந்த அநியாயம் வேறு எங்கும் நடக்கவில்லை. 'கல்தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி' என்று நாம் வாய்கிழிய பேசுகிறோமே அந்த செந்தமிழ் நாட்டில்தான் இந்த அவலம். 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்றாரே கனியன் பூங்குன்றனார். அவர் பிறந்த திரு நாட்டில்தான் இந்த அவலம்.

காங்கோ உகாண்டா போன்ற ஆப்ரிக்க நாடுகளில்தான் மக்களை சிந்திக்க விட வேண்டாம் என்றும் அரசும், தீவிரவாத குழுக்களும் போட்டி போட்டுக் கொண்டு போதை பொருட்களை விற்பனை செய்யும். விற்பனை என்றால் இப்படி ரோட்டுக்கு ரோடு அல்ல...மறைமுகமாக கள்ள மார்கெட்டில் விற்பனை செய்வார்கள். அனால் இங்கே.....?

ஒயின்ஷப்புகளை நடத்துவதில் திமுகவினர் ஆதிக்கம்.


அன்றைய அதிமுக ஆட்சியில் திமுகவினரின் கையில்தான் பெரும்பான்மையான ஒயின்ஷாப்பும் பார்களும் இருந்தன. திமுக ஆட்சி போன பின்னரும் அவர்கள் கை இறங்குவதாக இல்லை. அதனால் ஜெயலலிதா திமுகவினரின் ஆதிக்கத்தை ஒழிக்க 'தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் - 1937 ' ஒரு திருத்தம் செய்து ஏல முறையை கொண்டுவந்தார். இதில் அதிகம் வருவையுள்ள கடைகள் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு குலுக்கள் முறையில் பிரித்தளிக்கப்பட்டன.

ஆனால் இந்தத் தொழிலில் (?) பழம் தின்று கொட்டை போட்டவர்கள் அவ்வளவு எளிதில் விட்டுத்தருவார்களா? ஏலம் எடுக்க யாரும் வராமல் பார்த்துக் கொண்டனர். அப்படியே எடுத்தாலும் அதை தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு கடைகளை பிரித்துக் கொண்டனர். இது ஜெயலலிதாவை இன்னும் வெறுப்பேற்றியது. இயல்பாகவே கண்மூடித்தனமான பிடிவாதம் கொண்ட ஜெயலலிதா அப்போதுதான் அந்த விபரீத முடிவை எடுத்தார். அதாவது அரசாங்கமே ஒயின்ஷாப்புகளை ஏற்று நடத்துவது. அதுவரை யாருக்கும் அப்படிபட்ட யோசனை தோன்றி இருக்காது. கேள்வியும் பட்டு இருக்கமாட்டார்கள். முடிவெடுத்தப் பின் துணிந்து செயலில் இறங்கினார் ஜெயலலிதா. மீண்டும் மது விலக்கு சட்டத்தில் திருத்தம் செய்து அக்டோபர் மாதம் 2003ம் வருடம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) மூலமாக டாஸ்மாக்கை தொடங்கினார்.

இந்த ஈன காரியத்தை ஜெயலலிதா செய்யாமல் கருணாநிதி செய்திருந்தால், என்ன நடந்திருக்கும் தெரியுமா....?


ஊடகங்கள் ஒன்று திரண்டு இருக்கும். பேசியும் எழுதியும் கருணாநிதியை கிழித்தெடுத்திருப்பார்கள். மடங்கள் வரிந்து கட்டிக் கொண்டு வந்திருக்கும். எதிர்ப்புகள் சுனாமியாய் எழுந்து அந்த திட்டத்தை அடியோடு ஒழித்துவிட்டுதான் உக்கார்ந்திருப்பார்கள்.


இன்று தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊர் என்று திரும்பிய பக்கமேல்லாம் ஒயின் ஷாப்புகளை ஆரம்பித்து, வருடத்திற்கு 12ஆயிரம் கோடி ரூபாய் கல்லா கட்டுகிறது தமிழ அரசு.


குடிக்க பயம் இல்லை.


இப்படி பிறந்ததுதான் 'டாஸ்மாக்'. அன்று தனியாரிடம் இருந்தபோது என்ன நிலையில் இருந்ததோ அதே நிலையில்தான் இருக்கிறது டாஸ்மாக். முன்பு இருந்த கெடுபிடிகள், கூடுதல் விலையில் சரக்கு விற்பனை என்று எல்லா அவலங்களும் இன்றும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. பார் நடத்துவர்களின் அராஜக போக்குகளுக்கு கொஞ்சமும் குறைந்து விடவில்லை.

தமிழன் ஈயோடு ஈயாய் உட்கார்ந்து சரக்கு அடித்துவருகிறான்.

அரசாங்கமே ஊத்தித் தருவதால் மக்களுக்கு குடிக்க பயம் இல்லாமல் போச்சு. முன்பெல்லாம் குடிக்க போகும்போது பயந்து பயந்து பம்மிக்கொண்டு குடிப்பார்கள். ஆனால் இன்றைய நிலை...? அதை நான் சொல்ல மாட்டேன். அது உங்களுக்கே தெரியும்.


தனியார் துறையிடம் ஒயின்ஷப்புகள் இருந்தபோது... குடிமகன்கள் போலீசை கண்டால் கொஞ்சம் அடங்கி போவார்கள். அரசே ஒயின்ஷாப்புகளை ஏற்று நடத்திவுடன் குடிமகன்களை கண்டால் போலீஸ் அடங்கி போனது.


கண்டுகொள்ளாத கருணநிதி



தமிழக அரசியலில் ஒரு விஷயம் எப்போதும் கடைபிடிக்கப்படும். ஒரு ஆட்சி கொண்டுவந்த திட்டத்தை, அடுத்து வரும் ஆட்சி அமுல்படுத்தாது. அந்தத் திட்டதை ரத்து செய்துவிடும். அப்படிதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஜெயலலிதா கொண்டுவந்த டாஸ்மாகை கருணாநிதி கலைத்து விடுவாறென்று. ஆனால் நடந்தது வேறு....!

முதலில் எதிர்த்த கருணாநிதி, பின்னர் அதிலிருந்து கொட்டிய வருமானத்தைப் பார்த்து அப்படியே டாஸ்மாக்கிற்கு ஷாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்துவிட்டார். 'தொறடா டாஸ்மாக்கை' என்று தெருவுக்குத் தெரு திறந்து அரசு கஜானாவை நிறப்பத் தொடங்கினார். அப்போதுதானே தான் அறிவித்திருக்கும் இலவச திட்டங்களுக்கு பணம் சேர்க்க முடியும்.



தமிழ்நாட்டு மக்களைப் பற்றி கவனம் கொள்ளாமல், தனது ஆட்சி அதிகாரத்தை இந்த டாஸ்மாக்கை கொண்டு பலப்படுத்தவே கருணாநிதி முயன்றார். இவரது ஆட்சி காலத்தில் ஒரு நல்ல விஷயம் நடந்தது. அது நாள் வரையில் இரவு 11 மணி வரை திறந்திருந்த கடைகள் இரவு 10 மணிவரைதான் என்று மாற்றம் செய்யப்பட்டது.


இன்று எல்லா மட்டத்திலும் குடிகாரர்கள் இருக்கிறார்கள். குடிப்பது தவறில்லை என்பதை இன்றைய தலைமுறையினருக்கு அரசாங்கமே குழப்பமில்லாமல் தெளிவாகவே (?) சொல்லாமல் சொல்லிவருகிறது.





பல கேள்விகள் ?


இது ஒரு நல்ல திட்டம் என்றால் ஏன் பிற மாநிலங்கள் இதை தங்களது மாநிலத்தில் அமுல் படுத்தவில்லை?
பாண்டிச்சேரி என்றாலே நமக்கு தண்ணி பற்றிதான் ஞாபகம் வரும். அந்த அளவிற்கு சரக்கு அங்கு சகஜம். அந்த மாநிலத்தில் ஏன் அரசாங்கமே ஒயின்ஷப்புகளை ஏற்று நடத்தவில்லை....?
அயல் நாட்டு மது விறபனை செய்யலாம் என்றால். தமிழர்களின் பாரம்பரியமான கள்ளுக்கு தடை ஏன்?

நாம் போராடுவோம்!


பாமக நிறுவனர் இராமதாஸ் மட்டுமே அவ்வப்போது டாஸ்மாக்கிற்கு எதிராக குரல்கொடுத்து வருகிறார். பிற தமிழக தலைவர்களும் குரல் கொடுக்கவேண்டும், போராடவேண்டும், தமிழன் தலை நிமிர்ந்து நடக்க டாஸ்மாக்கை அழிதொழிக்கும் போராட்டத்தில் இறங்குவோம்.


"தமிழ் நாட்டில் படிக்காதவனை விட... குடிக்காதவனே இல்லை" என்ற பெருமையை தமிழ் நாட்டிற்கு பெற்று தந்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா. அதை துடைத்து, இந்த அவலத்தை தமிழனிடமிருந்து போக்க நாம் போராடுவோம். டாஸ்மாக்கை அழித்து தமிழக மக்களை காப்பற்றுவோம்.


-தோழன் மபா
தமிழன் வீதி



*************
[img][/img]

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 07, 2011 10:47 am

முதலில் jayalalithava குறை சொல்றத விடுங்க. என்ன விலை ஏற்றினாலும் குடிச்சே தீருவேன் என்று அலையும் குடிமகன்களை திருந்த சொல்லுங்க.எவனுமே குடிக்க வரலை என்றால் அப்புறம் எதுக்கு இவங்க கடை நடத்த போறாங்க




'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  U'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  D'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  A'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Y'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  A'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  S'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  U'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  D'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  H'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  A
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 07, 2011 10:55 am

நல்ல கட்டுரை ...விருப்ப பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 07, 2011 10:59 am

நன்றி நன்றி



நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Wed Dec 07, 2011 11:00 am

தமிழர்களை முதல் தர "குடி" மக்களாக மாற்றியபெருமை ஜெயலலிதா மற்றும் கருணாவையே சேரும் என்ன கொடுமை சார் இது



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 07, 2011 11:01 am

நண்பரே!ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை (சரியோ தெரியாது?)

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 07, 2011 11:04 am

நேரு wrote:தமிழர்களை முதல் தர "குடி" மக்களாக மாற்றியபெருமை ஜெயலலிதா மற்றும் கருணாவையே சேரும் என்ன கொடுமை சார் இது
இல்லையென்றால் இன்றிய மக்களுக்கு குடிக்கவே தெரியாதோ ஒன்னும் புரியல



avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Dec 07, 2011 11:08 am

ஏன்தான் இப்படி குடித்து கெட்டுப் போகிறார்களோ?
இந்த கேடு கெட்ட குடிகாரன்களை, கல்லால் அடிக்க வேண்டும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 07, 2011 11:16 am

கட்டுரையாளரின் நோக்கம் புரிகிறது .

பல்லாயிரம் கோடி ரூபாய் படிப்பறிவே இல்லாத அரசியல் ரவுடிகளிடம் போவதை தடுக்க தான் அரசாங்கமே மதுவிற்பனை பிரிவை தொடங்கியது.

பொதுமக்கள் எந்த இலவசமும் வேண்டாம் , நானாகள் அனைவரும் ஒழுங்காக வரி காட்டுகிறோம் என்று சொல்லுங்கள் அதன் பிறகு இந்த டாஸ்மாக் தேவையில்லை என்று போராடலாம்.

தினமும் பார்க்கும் இலவச தொலைக்காட்சியிலும் , இலவச அரிசியிலும் ..... இன்னும் அனைத்து இலவசங்களிலும் இந்த சாராய காசு தான் கலந்து இருக்கிறது.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 07, 2011 11:17 am

ராஜா wrote:கட்டுரையாளரின் நோக்கம் புரிகிறது .

பல்லாயிரம் கோடி ரூபாய் படிப்பறிவே இல்லாத அரசியல் ரவுடிகளிடம் போவதை தடுக்க தான் அரசாங்கமே மதுவிற்பனை பிரிவை தொடங்கியது.

பொதுமக்கள் எந்த இலவசமும் வேண்டாம் , நானாகள் அனைவரும் ஒழுங்காக வரி காட்டுகிறோம் என்று சொல்லுங்கள் அதன் பிறகு இந்த டாஸ்மாக் தேவையில்லை என்று போராடலாம்.

தினமும் பார்க்கும் இலவச தொலைக்காட்சியிலும் , இலவச அரிசியிலும் ..... இன்னும் அனைத்து இலவசங்களிலும் இந்த சாராய காசு தான் கலந்து இருக்கிறது.


அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  U'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  D'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  A'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  Y'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  A'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  S'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  U'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  D'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  H'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.  A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக