புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10 
49 Posts - 60%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10 
44 Posts - 60%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10


   
   

Page 17 of 27 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 22 ... 27  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..




குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 22, 2011 10:03 am

வை.பாலாஜி wrote:இலக்கம்: 5


ராம்சரண்  வளரும் தொழிலதிபர். அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்துயிருந்தது . காரணம் பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிகொண்டுயிருந்தனர் யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டுமிரட்டினார்களா , தொழில் முறை எதிர்கள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம்   பதில் இல்லை .வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம் .காவல் துறை சென்ற சற்று நேரத்திற்குள் அவர் மனதில் உதித்தது அந்த சந்தேகம் , தொலைபேசியை நோக்கி நடந்தார், அப்பொழுது ---

 
 


தொலைபேசியை எடுத்து எண்ணை அழுத்தினார்.


நீங்கள் டயல் செய்த எண் தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளதுஎன்று கணினியின் குரல் கேட்டது.


உடனே அவர் பரபரப்பானார். எந்த சூழ்நிலையிலும் தன்னுடன் இருக்கும் தன் உதவியாளர் பெருமாள் இப்போது இல்லாதது ஏன் என சிந்திக்க தொடங்கினார். அதுவும் அவருடைய எண் அணைத்துவைக்க காரணம் என்ன?


தன்னைபற்றியும், தன் நிதிநிலைமை பற்றியும் முழுமையாக அறிந்தவர் பெருமாள். தனக்கு துன்பம் நேரும்போதெல்லாம் உடனிருந்து தீர்த்துவைத்து ஆறுதல் சொன்னவர். இந்த நேரத்தில் இல்லாமல் போனதால் ராம்சரனுக்கு சந்தேகம் வலுத்தது. அதோடு மதியம் தனிப்பட்ட வேலை இருக்கிறது விடுப்பு வேண்டும் மாலை வருகிறேன் என்று சொல்லி, உடனடியாக கிளம்பி சென்றதும் அவருக்கு நினைவில் வந்தது.


எப்பவுமே அலைபேசியை அணைத்து வைக்காதவர் இப்போது மட்டும் அனைத்து வைக்க காரணம் என்ன? என குழப்பத்தின் உச்சிக்கே சென்றார். மீண்டும் ஒருமுறை டயல் செய்து பார்த்தார், மீண்டும் அதே கணினியின் குரல் தான். கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகம் பெருமாள் மேல் திரும்பியது.


ராம்சரனின் மனைவி சங்கீதா கண்ணீரால் முகம் கழுவி கொண்டு இருந்தார். கிளப் பெண்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி கொண்டே இருந்தனர்.


ராம்சரண் பள்ளியில் சென்று விசாரித்துவிட்டு வருவதாக கூறி வீட்டைவிட்டு கிளம்பினார். காரை எடுக்கும்படி ஓட்டுனரிடம் கூறினார் . ஆனால் அவர்கள் சென்ற இடம் பெருமாளின் வீடு. அங்கு அவர் எதிர்பார்த்தது போல வீடு பூட்டி இருந்தது. சரி பெருமாள் தான் கடத்திட்டான் என்று உறுதி செய்துகொண்டார் ராம்சரண். அங்கிருந்து பள்ளியில் சென்று விசாரிக்க கிளம்பினார். வழியில் ஒரே ட்ராபிக். என்ன என்று விசாரித்த போது அங்கு ஏதோ போராட்டம் நடப்பதாக அங்கே இருந்தவர்கள் கூறினார்கள். ஓட்டுனரை காரில் இருக்க சொல்லிவிட்டு, இறங்கி வேகமாக பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தார் ராம்சரண்.


அந்த போராட்ட கும்பலுக்குள் ஒதுங்கி கொண்டு முன்னேறி சென்றார் ராம்சரண். அங்கே


“அனுமதிக்காதே!! அனுமதிக்காதே!!!”


“அமெரிக்காவை அனுமதிக்காதே!!!!!”


“அணுகுண்டை சோதிக்க தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காதே!!!!!”



என்று பலத்த ஒலி காதை பிளந்தது. திடீரென ஒருகை ராம்சரனை பிடித்து இழுத்தது. திரும்பி பார்த்தால் அங்கே நின்றது அவரின் உதவியாளர் பெருமாள். என்னா இங்கே நிற்கிறாய் என விசாரித்தார் ராம்சரண். தான் இந்த போராட்டத்திற்கு வந்ததாகவும், தன மொபைல் கூட்டத்தில் தொலைந்துவிட்டதாகவும் கூறினார் பெருமாள்.


அப்போதுதான் விஷயம் புரிந்தது ராம்சரனுக்கு. பெருமாளிடம் குழந்தை காணமால் போனதை கூறினார்.


இருவரும் பள்ளிக்கு வேகமாக ஓடினார்கள். அங்கே விசாரித்தபோது யாரோ ஒரு பெண் வந்து அழைத்து சென்றதாக கூறினார்கள்.


உடனே வேகமாக வீட்டிற்கு வந்தார்கள் அங்கே அவர்மனைவி சங்கீதா குழைந்தை எங்கே என விசாரிக்க, எதுவும் பேசாமல் இருவரும் வீட்டிற்குள் சென்றனர்.,CCTV யை ஆன் செய்தார் பெருமாள். அதில் பதிவான வீடியோவை ரீவைண்ட் செய்து பார்த்தார்கள். அதில் சங்கீதாவுடன் இருந்த கிளப் பெண் ஒருத்தி அடிக்கடி தனியாக சென்று அலைபேசியில் பேசியதை பார்த்தார்கள். அவருடைய முகபாவனைகள் இருவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.


உடனே அவர்கள் அந்த பெண்ணை அழைத்து விசாரித்த போது  முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினாள் அந்த பெண். உடனே போலீசிடம் பிடித்து கொடுத்துடுவேன் என மிரட்டினார் பெருமாள். பயந்து கொண்டே அந்த பெண் “தான்தான் குழந்தையை கடத்தியதாகவும், தற்போது தன தம்பி வசம் குழந்தை இருப்பதாகவும், கிளப்பில் அதிக பந்தாவுடன் சங்கீதா நடந்து கொள்வதால் அவரை துயரில் ஆழ்த்தவே இப்படி செய்ததாக கூறி தன்னை மன்னித்துவிடும்படி” கதறி அழுதாள் அந்த பெண்.


உடனடியாக குழந்தை மீட்கப்பட்டது. அந்த பெண்ணை மன்னித்துவிட்டார் ராம்சரண். இக்கட்டான சூழ்நிலையில் உதவிய பெருமாளை தவறாக எண்ணியதை நினைத்து தலை குனிந்தார்  ராம்சரண்.


குறிப்பு: இக்கதையில் வரும் சம்பவங்களும், பாத்திரங்களும் கற்பனையே. இவை யாருடனும் ஒத்து போனால் அது தற்செயலானது.........!!!!




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 22, 2011 12:28 pm

வாழ்த்துக்கள் தமிழ் முகில் , கதை சிறப்பாக உள்ளது . இருவரையும் கைது செய்தது வரை கதை மிக நேர்த்தியாக உள்ளது .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி










http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 22, 2011 12:39 pm

வாழ்த்துக்கள் மகா பிரபு . கதை எழுதி கலக்குறீங்க .. நேரம் கிடைக்கும் போது
தொடர்ந்து எழுதுங்கள் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 22, 2011 1:07 pm

வை.பாலாஜி wrote:வாழ்த்துக்கள் மகா பிரபு . கதை எழுதி கலக்குறீங்க .. நேரம் கிடைக்கும் போது
தொடர்ந்து எழுதுங்கள் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி அண்ணா. நிச்சயமாக முயல்கிறேன்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 22, 2011 1:37 pm

மகா பிரபு wrote:
வை.பாலாஜி wrote:வாழ்த்துக்கள் மகா பிரபு . கதை எழுதி கலக்குறீங்க .. நேரம் கிடைக்கும் போது
தொடர்ந்து எழுதுங்கள் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி அண்ணா. நிச்சயமாக முயல்கிறேன்.

நன்றி மகாபிரபு அன்பு மலர் அன்பு மலர்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 22, 2011 5:49 pm

வை.பாலாஜி wrote:இலக்கம்: 5

ராம்சரண் வளரும் தொழிலதிபர். அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்துயிருந்தது . காரணம் பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிகொண்டுயிருந்தனர் யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டுமிரட்டினார்களா , தொழில் முறை எதிர்கள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை .வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம் .காவல் துறை சென்ற சற்று நேரத்திற்குள் அவர் மனதில் உதித்தது அந்த சந்தேகம் , தொலைபேசியை நோக்கி நடந்தார், அப்பொழுது ---

சந்தேகத்தோடு தொலைபேசியின் அருகில் சென்ற இன்ஸ்பெக்டர் ரஞ்சன் , அவர் எதிர்பார்த்த படி ஏதும் சிக்காததால் எரிச்சலோடு வெளியேறினர். ஒருவாரம் ஆனபின்னும் எந்த தகவலும் கிடைக்காததால் மிகவும் குழப்பமான நிலையே இருந்தது. இன்னும் இரு நாளைக்குள் அந்த குழந்தை பற்றிய தகவலை கொடுக்கவில்லை என்றால் எப்படியும் நம்முடைய சர்வீசில் ஒரு கரும்புள்ளி விழுகும் என்று கவலையோடு சென்றார். நேரம் சரியாய் எட்டு மணி இருக்கும். நடுத்தரமான அந்த பேக்கரியில் இரு இளைஞர்கள் பேசிகொண்டிருந்தார்கள்.

டேய் , ரிப்போர்ட் பார்த்தாயா? யுனிசெப் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்கள். கடந்த ஆறு மாதத்திற்குள் 100 குழந்தைகளை காணவில்லை. இதில் ராம் சரண் போன்ற தொழிலதிபர் மட்டுமல்ல , சுமை தூக்கும் தொழிலாளியின் மகனை கூட காணவில்லை. என்றான். இந்த போலீஸ் கார பயலுக என்ன செய்யிரன்கனே தெரியல என்றார்கள். அதை கேட்ட ரஞ்சன் அவர்கள் இருவரையும் அழைத்தான். அந்த இருவரும் MSW படிக்கும் மாணவர்கள் என்பதும் , நேற்று யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி பேசினார்கள் என்பது பற்றியும் அறிந்துகொண்டான். பின் அவர்களை அனுப்பிவைத்துவிட்டு தன்னிடைய தனிப்படைக்கு சில கட்டளைகளை பிறப்பித்தார்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் தனி படையினர் ,அவருக்கு அவருக்கு தகவல் மேல் தகவலை அளித்துகொண்டிருந்தார்கள். இந்த தகவல்களை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு முடிவிற்கு வந்தார்.
1 .காணமல் போன 100 குழந்தைகளும் பெரிய பெரிய பணக்காரர்கள் குழந்தைகள் அல்ல ,
2 . 99 ஆண் குழந்தைகளும் ஒரே ஒரு பெண் குழந்தையும் காணவில்லை.
3 . மேலும் இந்த குழந்தைகளின் பிறந்தநாள் ஒரே தேதி என்பது அவருக்கு இன்னும் அதிக பயத்தை கொடுத்தது.


விரைந்து, ராம் சரணின் வீட்டிற்கு சென்றார். அங்கே ராம் சரணின் மனைவி மட்டும்தான் அழுது கொண்டே இருந்தார். ராம் சரனை காணவில்லை. மாலை நேரத்திலே வெளியே சென்றார். இன்னும் வரவில்லை. என் கணவருக்கும் ஏதும் நேர்ந்திருக்குமா என கேட்டாள். அவளை சமாதான படுத்தும் வேளையில் , போகும் போது ஏதும் சொல்லிவிட்டு சென்றாரா ? என்றான்.

கவலை படாதே நம் மகள் கிடைக்க தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு பூஜை செய்ய போகிறேன். அதன் பின் நம் மகள் கிடைத்துவிடுவாள் என்று திருமேனி கூறியிருக்கிறார் என்று சொல்லிவிட்டு சென்றார். அப்போது தொலை பேசியின் அருகில் அன்று பார்த்த பழைய குறிப்பில் ஏதோ திருத்தம் செய்ய பட்டிருந்தது. அதை எடுத்து வைத்துகொண்டு வெளியே வந்தார்.

அந்த துண்டு சீட்டில் திரௌபதி குழலுக்கு பெண் ரத்தம் தேவையில்லை. என்று எழுத பட்டிருந்தது. மேலும் திருமேனி பங்களா என்றும் இருந்தது. திருமேனி பங்களாவா ஐயோ அது மோசமான இடம் ஆச்சே ! வேகவேகமாக தன்னுடைய ஜீப்பை எடுத்துகொண்டு தனி ஆளாய் சென்னை அடையாரில் இருந்து மகாபலிபுரத்திற்கு சென்றார்.

நள்ளிரவு 12 மணி. திருமேனியின் பங்களாவில் தாழம்பூவின் வாசமும் , ரத்த நெடியும் ரஞ்சனுக்கு மயக்கத்தை தந்தது. உள்ளே ஏதோ மந்திர உச்சாடனங்கள் நடந்துகொண்டிருந்தன. ஜன்னலின் ஒரு ஓரத்தில் ஒளிந்திருந்து பார்த்தான். எதிரே முப்பிரி நூல் அணிந்து அமர்ந்திருந்தார். 60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் பார்ப்பதற்கே சற்று அச்சத்தை தந்தார் இவர்தான் திருமேனியாய் இருக்க வேண்டும் போல என எண்ணினான். அவர்கூறினார் . நாளைக்கு தேய்பிறை அஷ்டமி கால பைரவர் வழிபாட்டிற்கு உரிய நேரம். அந்த நாளில் தான் நாம் நினைத்ததை செய்யமுடியும். நாம் கொடுக்க போகும் பலிக்கு கௌரவர்கள் 99 பேர் போதும். பெண் குழந்தை தேவை இல்லை என்பதால் நீ உன் மகளை அழைத்து செல்லலாம். ஆனால் தேவியின் உத்தரவு மாற்றி வந்தால் நீ உன் குழந்தையினையும் கொடுக்க வேண்டும் என்றார்.

பலமுறை ஜோவியினை உருட்டிபர்த்துவிட்டு , தேவி உன் மகளையும் சேர்த்து கேட்கிறாள். என்றார். முதலில் வேண்டாம் என்ற தேவி இப்போது என்மகளையும் என் கேட்கிறாள் என்றான் ராம்சரண். மேலும் ஒரு முறை ஜோவியினை உருட்டிவிட்ட திருமேனி .. இங்கே அந்நிய வடை அடிக்கிறது. தேவிக்கு இப்போது நாம் கொடுத்த காவலை அவளால் முழுமையாக ஏற்றுகொள்ள முடியவில்லை. அதனால் தேவி நாம் கேள்விகளுக்கு சரியாய் பதில் கூரமறுக்கிறாள். வெளியே யார் என பாருங்கடா என கத்தினார்.

அந்த கத்தலில் அலறி அடித்து வெளிய ஓடிய இன்ஸ்பெக்டர் ரஞ்சன். பின் சுதாகரித்து மறைந்துகொண்டார். அதற்குள் அவரது தனிப்படைகள் அங்கு வந்து சேர்ந்தது. நள்ளிரவு 2 மணிக்கு திருமேனியினையும், ராம் சரணையும் கைது செய்த ரஞ்சன் அவர்களிடம் ஒரு விளக்கத்தை கேட்டான்.
திரௌபதி குழலுக்கு பெண் ரத்தம் தேவையில்லை அது என்ன என்றான். திருமேனி ஏதும் சொல்லவில்லை. ராம் சரனை தனியே அழைத்துசென்று கொடுக்க வேண்டியதை கொடுத்து வாங்க வேண்டிய தகவலை வாங்கினான் .

' 2005 ஆம் ஆண்டு , மார்கழிமாதம் சொர்க்கவாசல் திறக்கிற தினத்தில் , அதிகாலை 3 மணிக்கு , கொவ்ரவர்களும் , பாண்டவர்களும் இந்த பூமியில் மறு அவதாரம் எடுத்திருப்பதாக ஓலை சுவடி மூலம் அறிந்தோம். கௌரவர்களில் 99 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவார்கள். மேற்கண்ட தேதியில் , அதே நேரத்தில் சிசேரியன் அல்லாது சுகபிரசவம் ஆன குழந்தைகளின் பட்டியலை தயார் செய்து கடத்தினோம். அந்த 100 கௌரவர்களின் மறுபிறப்பகிய இந்த குழந்தைகளை திரௌபதிக்கு பலியிட்டால் புதையல் கிடைப்பதற்கான யோகம் உண்டு என்று திருமேனி கூறினார். அதனால் தான் நான் அவரின் செயலுக்கு துணை புரிந்தேன் என்றான்.

பின் அந்த பங்களாவில் மறைத்துவைகப்ட்டிருந்த 100 குழந்தைகளையும் கைப்பற்றி அழைத்துசென்றர்கள். திருமேனியின் வீட்டிலிருந்த திரௌபதி யின் சிலையில் ஒரு பிரகாசமான ஒளிவீசி பழைய ரத்த கரைகளை அழித்தது. ௦௦




கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 17 Thank-you015
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Thu Dec 22, 2011 8:26 pm

ஜேன் செல்வகுமார் wrote:
மகிழ்ச்சி
மிக்க நன்றி ஜேன் செல்வகுமார் அவர்களே...

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Thu Dec 22, 2011 8:26 pm

வை.பாலாஜி wrote:வாழ்த்துக்கள் தமிழ் முகில் , கதை சிறப்பாக உள்ளது . இருவரையும் கைது செய்தது வரை கதை மிக நேர்த்தியாக உள்ளது .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பரே...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 22, 2011 8:31 pm

சிறப்பாக கதை எழுதிய பி.தமிழ்முகில் மற்றும் அய்யம்பெருமாள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். சூப்பருங்க

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Thu Dec 22, 2011 8:36 pm

உங்களது கதையும் அருமயாக உள்ளது நண்பரே....வாழ்த்துகள்.
மகிழ்ச்சி
உங்களது வாழ்த்துகளுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி....

Sponsored content

PostSponsored content



Page 17 of 27 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 22 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக