புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
251 Posts - 52%
heezulia
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
18 Posts - 4%
prajai
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
2 Posts - 0%
Barushree
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_m10மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 28, 2011 3:28 pm

செங்கனிகள் தூங்குமிளஞ் சோலைதனில் தொங்கி
அங்குமிங்கென் றாடுங்கவி ஆற்றலுடை எண்ணம்
திங்கள்எழிற் பொன்வதனச் சேர்மறைகள் மொய்த்த
பங்கமுறும் வண்ணமெழப், பால்நிலவுங் கதிரோன்

செங்கனலும் வெண்குளிரு மொன்றுபடச்சேரும்
தங்கமெனும் பொற்கணத்துத் தகதகப்பைப் போலே
அங்கொருவள் ஒசையிட்டு ஆனந்தமாய் பாடும்
சங்கொலித்துத் தோற்றமதி சற்று நாணி போமோ

தங்குமதன் நெய்பிரியத் தாகமுற்ற தீபத்
தொங்குதிரி கொள்ளொளியின் தோன்றுநிலைகண்டே
வெந் தணலும் உண்ண,வரும் வீழ்புனலில் தருமென்
சந்தணத்தின் நிறமெடுத்த சாந்தரூப உள்ளம்

செங்குருதி குறுகுறுக்க சீறுமலைபோலும்
பங்கயத்தின் இலைபடிந்த பொய்கையின் நீர்துள்ளி
அங்குமிங்கு ஆடுவதாய் அன்பு கொண்டவாழ்வை
தங்கமலர் மனமெடுத்தல் தரணியிலே புதிதோ

சிந்தனைக்குள் சினம்பொரிந்து சீண்டுவதைக் கண்டு
வெந்தபுண்ணில் வீழ்நயமாய் வேந்தனுடைவாளும்
தந்தசுகம் என்னருமை தன்னில் மனம்பாடும்
விந்தைகொள விழிநிறைத்த வியனுலகே வாழ்க!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 28, 2011 3:34 pm

மனதின் எண்ணங்களைப் போல் இந்தக்கவிதையையும் புரிந்துகொள்ள
முடியவில்லையா

இந்தக் கவிக்கான சிறு குறிப்புகள்:
செங்கனிகள் தூங்குமிளஞ் சோலைதனில் தொங்கி
அங்குமிங்கென் றாடுங்கவி ஆற்றலுடை எண்ணம்
திங்கள்எழிற் பொன்வதனச் சேர்மறைகள் மொய்த்த
பங்கமுறும் வண்ணமெனப், பால்நிலவுங் கதிரோன்



சிவந்த கனிகள் தூங்கும் சோலை மரங்களில் ஊஞ்சல்போல் அங்குமிங்கும் ஆடும் குரங்குகள் (கவி) போன்றது மன எண்ணங்கள் (மனம் ஒரு குரங்கு)
நிலவின் முகத்தில் காணும் மறைகள் (கறுப்பு நிறம்) போன்று
பங்கமுள்ள அல்லது களங்கமான நிலைகொண்டது மனம்.

( நிலவும் சூரியனும் )

செங்கனலும் வெண்குளிரு மொன்றுபடச்சேரும்
தங்கமெனும் பொற்கணத்துத் தகதகப்பில் மின்னி
அங்கொருவள் ஒசையிட்டு ஆனந்தமாய் பாடும்
சங்கொலித்துத் தோற்றமதி சற்று நாணிப் போமோ


நிலவும் சூரியனும் (முறையே சூடும் குளிருக்கும் உதாரணமானவை) ஒன்றுசேரும் நேரம் சூரியகிரகணமாகும் அவ்வேளையில் காணும் தகதகப்புபோன்றுமின்னிக் கொள்வது எமது மனமாகும்.
(( இங்கு சூரியனும் சந்திரனுமொன்று சேர்ந்தால் சூரிய கிரகணமாகும் (பொற்கணத்து)))

அந்தநேரத்தில் தக தகக்கும் ஒளி கிடையாது. எனவே எதிர்மறையாக மனம் இருள்
கொண்டது என்பதை இகழ்ச்சியாக அப்படி புகழப்பட்டது.

அங்கொரு “வள்” ஓசையிடுவது நாய் . நாய் குரைத்து ஊளையிடும்போது
(சங்கொலிபோன்று தோற்றுமென கூறப்பட்டது --தவறென்றால் மன்னிக்கவும்)
அப்படிப்பட்ட ஓசைக்கு மதி (சூரியனை மறைக்கும் நிலவானது)
பயந்து விட்டு விலகி ஓடியா போகும்? (இல்லை. )
நிலவைப் பார்த்து நாய் குரைத்தது என்பார்கள் பிரயோசனமில்லை

அதுபோல் மனதை மறைக்கும் மாயைஇருளை நாம் முயன்றும் நீக்க முடியுமா என கொள்க

தங்குமதன் நெய்பிரியத் தாகமுற்ற தீபத்
தொங்குதிரி கொள்ளொளியின் தோற்றநிலை கொண்டே
வெந் தணலும் உண்ண,வரும் வீழ்புனலில் பட்ட
சந்தணத்தின் நிறமெடுத்த சாந்தரூப உள்ளம்


1. விளக்கில் தங்கியிருக்கும் நெய் எரிந்து முடிய திரியில் எண்ணெய்க்கான
தாகமுற்ற நிலைபோலவும் (அச்சமயம் எரிந்துகருகும் இருள் கவ்வும்)
2. வெந்தணலில் எரிகின்ற ( தீ உண்ணும்) சந்தணக் கட்டையானது வரும்
வீழ்புனல் (மழை) பட்ட வுடன் கரியாகிப்போகும் , அதுபோன்றும்---
கருமையானது உள்ளம். (சாந்த ரூப உள்ளம் -- மீண்டும் இகழ்வுக்காய்
புகழப்பட்டது)

செங்குருதி குறுகுறுக்கச் சீறுமலை போலும்
பங்கயத்தின் இலைபடிந்த பொய்கையில் நீர்துள்ளி
அங்குமிங்கு ஆடுவதாய் அன்பு கொண்டவாழ்வை
தங்கமெனும் மனமெடுத்தல் தரணியிலே புதிதோ


உடலில் இளரத்தம் உள்ளபோது குறுகுறுப்பை துடிப்பை ஏற்படுத்தும் மனமானது
கடலலைபோல் சீறியெழுந்தாலும்.

உண்மையில் தாமரையின் இலை பொய்கையில் படிந்து கிடந்து ஒன்றாக வாழ்ந்தும்,
பொய்கையின் நீர் துள்ளி ஏறினால் இலை தள்ளி விழுத்திவிடும். அது போன்று
அன்பு கொண்ட (அன்பற்ற) உள்ளங்கள் வாழும் இந்த உலகானது ஒன்றும்
அதிசயமில்லை

சிந்தனைக்குள் சினமெழுந்து செந்துளிர்கள்போலும்
வெந்தபுண்ணில் வீழ்நயமாய் வேந்தனுடை வாளும்
தந்தசுகம் என்னருமை, தன்னில் மனம்பாடும்
விந்தைகொள விழிநிறைத்த வியனுலகின் இன்பம்!


அப்படிப்பட்ட உள்ளங்கள் கோபமுற்றபோது தீபோலும் நிறங்கொண்டு சிவந்து
முளைக்கும் தளிர்களாகவும் ஏற்கனவே காணும் புண்ணில் அரசன் கைகொண்ட வாள்
பதம்பார்க்கும் போது (வெட்டும்போது) ஏற்படும் வேதனையைஉண்டாக்குவதாலும் -
(இகழ்வுக்காக ’தந்த சுகம் என்னருமை’ என்றேன்) இந்த உலகம் எவ்வளவு இன்பமாக
உள்ளது! (பெரும் நரகம் என்று பொருள் கொள்க)

-கிரிகாசன்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 28, 2011 3:39 pm

ஐயா,

முதலில் கவியைப் படித்தேன், படிக்க நன்றாக அருமையாக இருந்தது. பொருள் புரிவதில் மிகச் சிரமமாய் இருந்தது.

இப்பொழுது தாங்கள் இட்ட விளக்கம் படித்து, நன்றாக விளங்கியது, அருமையான விளக்கத்துடன் கூடிய கவி ஐயா,

நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 28, 2011 3:53 pm

பிஜிராமன் wrote:ஐயா,

முதலில் கவியைப் படித்தேன், படிக்க நன்றாக அருமையாக இருந்தது. பொருள் புரிவதில் மிகச் சிரமமாய் இருந்தது.

இப்பொழுது தாங்கள் இட்ட விளக்கம் படித்து, நன்றாக விளங்கியது, அருமையான விளக்கத்துடன் கூடிய கவி ஐயா,

நன்றிகள்

மனம் மகிழ தரும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றிகள்! என்றும் அன்புடன்
கிரிகாசன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Nov 28, 2011 3:55 pm

உங்கள் விளக்கம் படித்ததும் என் கலக்கம் தீர்ந்தது,
நன்றி கிரி. மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை 2825183110 மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை 2825183110




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 28, 2011 4:15 pm

உமா wrote:உங்கள் விளக்கம் படித்ததும் என் கலக்கம் தீர்ந்தது,
நன்றி கிரி. மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை 2825183110 மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை 2825183110

நிச்சயமாக இதற்கு விளக்கம் வேண்டும். புரிந்து கொள்ளாமல் இருப்பதற்காகவே மறைபொருளில் வேண்டுமென்றே எழுதப்பட்டது புரியாமல் பின் புரிந்து கொள்வதில் ஒரு சுவை இருப்பதாக எண்ணினேன்
நன்றிகள் தங்கள் பாராட்டுக்கு!
-கிரிகாசன்

கனி இலையில் மறையு மொரு
தனி நிலவு முகில் மறையும்
, இனிகவிதை பொருள் மறையும்
இவை அறிய மகிழ்வுஅன்றோ

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Nov 28, 2011 4:18 pm

kirikasan wrote:
உமா wrote:உங்கள் விளக்கம் படித்ததும் என் கலக்கம் தீர்ந்தது,
நன்றி கிரி. மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை 2825183110 மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை 2825183110

நிச்சயமாக இதற்கு விளக்கம் வேண்டும். புரிந்து கொள்ளாமல் இருப்பதற்காகவே மறைபொருளில் வேண்டுமென்றே எழுதப்பட்டது புரியாமல் பின் புரிந்து கொள்வதில் ஒரு சுவை இருப்பதாக எண்ணினேன்
நன்றிகள் தங்கள் பாராட்டுக்கு!
-கிரிகாசன்

கனி இலையில் மறையு மொரு
தனி நிலவு முகில் மறையும்
, இனிகவிதை பொருள் மறையும்
இவை அறிய மகிழ்வுஅன்றோ

நீங்கள் வித்யாசமானவர் மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை 2825183110

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 28, 2011 4:20 pm

kirikasan wrote:மனதின் எண்ணங்களைப் போல் இந்தக்கவிதையையும் புரிந்துகொள்ள
முடியவில்லையா

இந்தக் கவிக்கான சிறு குறிப்புகள்:


செங்கனலும் வெண்குளிரு மொன்றுபடச்சேரும்
தங்கமெனும் பொற்கணத்துத் தகதகப்பில் மின்னி
அங்கொருவள் ஒசையிட்டு ஆனந்தமாய் பாடும்
சங்கொலித்துத் தோற்றமதி சற்று நாணிப் போமோ


நிலவும் சூரியனும் (முறையே சூடும் குளிருக்கும் உதாரணமானவை) ஒன்றுசேரும் நேரம் சூரியகிரகணமாகும் அவ்வேளையில் காணும் தகதகப்புபோன்றுமின்னிக் கொள்வது எமது மனமாகும்.
(( இங்கு சூரியனும் சந்திரனுமொன்று சேர்ந்தால் சூரிய கிரகணமாகும் (பொற்கணத்து)))

அந்தநேரத்தில் தக தகக்கும் ஒளி கிடையாது. எனவே எதிர்மறையாக மனம் இருள்
கொண்டது என்பதை இகழ்ச்சியாக அப்படி புகழப்பட்டது.

அங்கொரு “வள்” ஓசையிடுவது நாய் . நாய் குரைத்து ஊளையிடும்போது
(சங்கொலிபோன்று தோற்றுமென கூறப்பட்டது --தவறென்றால் மன்னிக்கவும்)
அப்படிப்பட்ட ஓசைக்கு மதி (சூரியனை மறைக்கும் நிலவானது)
பயந்து விட்டு விலகி ஓடியா போகும்? (இல்லை. )
நிலவைப் பார்த்து நாய் குரைத்தது என்பார்கள் பிரயோசனமில்லை

அதுபோல் மனதை மறைக்கும் மாயைஇருளை நாம் முயன்றும் நீக்க முடியுமா என கொள்க


-கிரிகாசன்
கவிதையை விளக்கமாக கொடுத்தமைக்கு நன்றிகள்.. மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை 224747944 மனதின் எண்ணங்கள் (புரிந்துகொள்ள முடிவதில்லை) கவிதை 224747944



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக