புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_m10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10 
18 Posts - 90%
ayyasamy ram
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_m10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10 
2 Posts - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_m10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10 
439 Posts - 55%
heezulia
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_m10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10 
301 Posts - 38%
mohamed nizamudeen
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_m10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10 
25 Posts - 3%
prajai
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_m10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_m10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_m10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_m10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10 
4 Posts - 1%
mini
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_m10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10 
4 Posts - 1%
vista
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_m10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_m10அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!


   
   

Page 1 of 2 1, 2  Next

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 18, 2011 11:53 pm

இரண்டாம் மலர் :: அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே!



என்னுடைய உடன்பிறவா அன்பு தங்கைகளில் ஒருவர் முபினா.கடந்த ஜூலை 22 -ம் தேதி மாலை அவரது அண்ணனின் 10 வயது
பையன் ஹர்ஷத் திடீரென மறைவெய்திவிட்டான்.பள்ளியிலிருந்து வீடு திரும்பி மாடியில் விளையாடிக்கொண்டிருக்கும் போது
மாடியின் சுற்று சுவரில் இருந்து மல்லாந்த வாக்கில் விழுந்து,பின் மண்டையில் அடிபட்டு,இரண்டு நாட்கள் கழித்து
பெங்களூர் மருத்துவ மனையில் அந்த பிஞ்சு இதயம் தன் சுவாசத்தை நிறுத்திக் கொண்டது.தாங்கவே முடியாத கடும் அதிர்ச்சி அலைகளில் அக் குடும்பம் சிக்குண்டது.ஹர்ஷத் இப்போது உயிருடன் இல்லை என்பதே நம்ப முடிவதாக இல்லை.ஒருமுறை அவன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது,முற்றத்தில் கொட்டப்பட்டிருந்த மணலில் விளையாடியவாறே என்னைக் கேட்டான்:"நீங்க இந்துவா?முஸ்லீமா"
நான் சொன்னேன்;"தெரிலியே! நீயே கண்டுபிடியேன் பார்ப்போம்...."
அவன் எதுவும் சொல்லாமல் என்னை சிரித்தபடியே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.மரணச் செய்தி கேட்டதிலிருந்தே அந்த சிரிப்புதான் என் மனக் கண்ணில் அடிக்கடி ஒளிர்ந்துக் கொண்டிருந்தது...மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அந்த சிரிப்பு இழப்பின் வலியுணர்தியபடி இன்னும் அதிர்கிறது...


முபினா கேட்டுகொண்டதற்கு இணங்க ஹர்ஷத்துக்காக எழுதிய கவிதை:
அஞ்சலி மலர்களில் முதல் மலராக......





மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!


மின்னி மறைந்த
எங்கள் செல்லச் சுடரே!


வெகு சீக்கிரம் அழுது விடுவாய்
வெகு சீக்கிரம் சிரித்தும் விடுவாய்
இப்படி வெகு சீக்கிரம் மறைந்தும் விட்டாயே


அன்பின் கருவென பூத்து
அழகின் உருவென மணந்து
அதிர்ச்சி தரும்படி உதிர்ந்த
அர்ஷத் மலரே!


அர்ச்சனைக்குரிய அழுகுப் பூ என்பதால்தானா
இறைவன் உன்னை
இவ்வளவு விரைவில் எடுத்துக்கொண்டான்?


நீ வரும் பேருந்துக்காக
நாங்கள் எல்லோரும் காத்திருப்போம்
செம்மண் பாதையில் புழுதி கிளம்ப
ஓடிவருவாய் எங்களை நோக்கி
ஆனால் இன்றைக்கோ
பேருந்துகள் எல்லாம் சென்றபடி உள்ளன
நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம்
ஐயோ கண்ணே!..
எங்களை நோக்கி ஓடிவர வேண்டிய நீ
இப்படி மரணத்தை நோக்கி ஓடிவிட்டாயே...!


நீ மட்டும் விளையாடியிருந்தால்
எதுவும் பிரச்சனை இல்லை
ஆனால்
அருமை சொந்தமே!
கூடவே சேர்ந்து
விதியும் அல்லவா விளையாடிவிட்டது?


எங்கள் உதடுகள்
உன் பெயரை
உச்சரித்துக் கொண்டே இருக்கும்
எங்கள் நெஞ்சங்கள்
உன் நினைவை ஏந்திக் கொண்டே இருக்கும்


தினந்தோறும் உன்னை
நினைத்துக் கொள்கிறோம் செல்லமே
நினைவுகளால் ஆன ஓர் ஆலயத்தில்
உன்னை நிரந்திரமாய் குடிவைத்திருக்கிறோம்



எங்கள் வானத்தில் நட்சத்திரமாய்
நீயே சுடர்கிறாய்
எங்கள் சுவாசத்தில் பிராணமாய்
நீயே படர்கிறாய்
எங்கள் வயல்களில் தளிராய் நீயே துளிர்ப்பாய்
எங்கள் வாழ்வின் தீபமாய் நீயே ஒளிர்வாய்

இரண்டாம் மலர் :
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 19, 2011 1:12 am

குழந்தைகள் என்றும இறைவனின் செல்ல குழந்தை கள் தான் அவர்கள் இறைவன் அருகில் என்றும் ஏஞ்சலாக இருப்பார்கள் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 19, 2011 3:57 am

அன்புச் சிறுவனின் இழப்புக்காக எனது அஞ்சலியோடு இக்கவிதையை சம்ர்ப்பிக்கிறேன்


பூவே உனைப் பிரிந்து போஎன்று சொன்னது யார்?
புன்னகையை நீமறக்கப் பூஞ்செடியை ஒடித்தது யார்
தாவென்று எமைவிட்டு தவிக்கப் பிரித்துயார்
தரணியிலே உன்நிழலைத் தனியாக எடுத்தவர் யார்?
பாவேந்தி உன்னை பரிதவிக்கும் மனமெடுத்து
பனித்த விழிசொரியப் பாடென்று விட்டது யார்?
நாவேந்தி நல்லதமிழ் நீ பேசக் கேட்டவரை
நானிலத்தில் விட்டே நீ நடைபழகச் சென்றதெங்கே?

பொன்னைப் புழுதியிலும் பூவெடுத்து மண்ணிடையும்
போடும் விதியென்ற பொல்லாப்புத் தான்தெரிந்தால
அன்னை மடியிருத்தி அணைத்துன்னைக் காத்திருப்பாள்
அருந் தந்தைபோராடி அன்புயிரை மீட்டிருப்பார்
நேராக வந்திறைவன் நீவேண்டும் எனக்கொள்ள
தாரார் இவரென்றோ தனியாக நீயிருக்க
கோரச்சுவர் தடக்கி கொழுந்துமுனை கிள்ளுவதாய்
யாரும் அறியாமல் அன்புயிரைக் கொண்டாரோ

தேறா மனங்கொண்டு தீங்கறியா தாய்தந்தை
மாறா அழுதவிழி மாற்றிடவும் வாராயோ
சிறுகால் குதித்தோடி செல்லமென நடை நடந்து
பெறுமோர் உயர்வாழ்வு பேறுடனே இறைசேர்ந்தாய்
தேரேறியோடித் திசையெங்கும் புகழ்பரவப்
பாராளும் மன்னனென பார்த்துவிட ஆசையுடன்
சீராட்டித் தாய் வளர்த்தாள் சிங்கார பொன்னமுதே
வாராயோ மீண்டுமொரு வாழ்வுபெறத் தாய்மடியில்!

-கிரிகாசன்
kirikasan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kirikasan

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 19, 2011 10:19 am

அருமையான கவிதை சார். சூப்பருங்க சூப்பருங்க

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Sat Nov 19, 2011 12:23 pm

அன்புச் சிறுவனின் இழப்புக்காக எனது அஞ்சலியோடு இக்கவிதையை சம்ர்ப்பிக்கிறேன்
விவரிக்க வார்த்தையே இல்லை ...மிக மிக அருமை .நெகிழ்வூட்டும் வரிகளை அர்ப்பணித்து விட்டீர்கள்...நெஞ்சார்ந்த நன்றிகள்... அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 678642

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Nov 19, 2011 2:45 pm

நண்பரே, சிறுவனை இழந்து வாடும் உங்களுக்கும் உங்கள் தங்கை வீட்டாருக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தை உரித்தாக்குகிறேன். எனது அஞ்சலியோடு இச்சிறு இன்னிசை வெண்பாவைச் சமர்ப்பிக்கிறேன்.

ஆனந்தம் அன்பரே ஆறுதலுண் டாகட்டும்
போனவப் பிள்ளையும் போய்வருவ தில்லையே
ஆனதை நாம்நினைத்தே ஆரும் அழவேண்டா
ஞானமாய் நாமிருப்போம் நன்று



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 19, 2011 2:48 pm

அன்பு குழந்தையை இழந்து வாடும் உங்களுக்கும், அக்குழந்தையின் வீட்டாருக்கும் ஆழ்ந்த வருத்ததை தெரிவித்துக்கொள்கிறேன் அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! 440806



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 19, 2011 2:49 pm

மீண்டும் மலர்கள் சாத்துகிறேன்

நிலவினை மூடலாம் மேகம் - உன்
நினைவொன்றை மூடுமோ காலம்
பலதென்று நாளோடிப்போகும் - உன்
பாசத்தில் எம்முள்ளம் ஏங்கும்
உலகென்று ஒன்றோடிப் போகும் - அதில்
உயிர்வாழ்தல் ஏனென்று நாளும்
கலங்கிடும் எம்நெஞ்சம், வாழ்வும் - துயர்
காண்பதே முடிவென்ற தாகும்

அஞ்சிலே போவது பாவம் - நல்
லரும்பினைக் கிள்ளுவ தாகும்
பஞ்செனும் நரைகொண்ட காலம் - வாழ்ந்து
பார்த்தபின் பறிப்ப தென்றாகும்
நெஞ்சிலே ஆசைகள் பூத்து - நீ
நின்றதோர் வயதான பத்து
மிஞ்சிடும் ஆசைகள் கொண்டு - வாழ
முயன்றிடும் போதினில் இன்று

பிரித்ததோ மாபெரும் கொடுமை - இதைப்
புரிவதா இறைவா உன்கடமை?-
தெரியாமற் கூடஓர் பாவம் - வாழ்வில்
செய்ததே இல்லைத் தன்னுள்ளம்
விரியும்நற் கனவுகள் கொண்டு - நன்மை
வேண்டியே வாழ்வையும் கற்று
சரியான நெறியிலே வாழ - அவன்
தலைப்படப் பிரித்தனை ஏனோ

தென்றலாய் வீசுமோர் வாழ்வில் - இன்று
திசைகெட்டுப் புயல்வீச வைத்தாய்
கன்றுதான் பசுவினை விட்டுப் - பெரும்
காட்டிடை தவறிய தாகச்
சென்றதேன் ? செய்திட்ட விதியேன்? - இனி
துயர்கொண்டு அழுவதெம் கதியே!
இன்றுநீ காலம்செய் கோரம் - இனி
எமக்கு யார்? என்செய்தோம் பாவம்?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Nov 19, 2011 2:58 pm

இறைவா த்ரோகம் செய்வது நாங்கள்.
தண்டிக்கபடுபவர் ஏன் எம் அன்புடையார்.
எங்களின் அன்புக்குரியவரை பிரித்து
நீ எடுதுக்கொண்டு எமக்கு தண்டனை கொடுத்தாயோ!
அழுகை


பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Nov 19, 2011 3:02 pm

அன்பு குழந்தையை இழந்து வாடும் உங்களுக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தை உரித்தாக்குகிறேன்!!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக