புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_m10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10 
48 Posts - 51%
heezulia
எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_m10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_m10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_m10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_m10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_m10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10 
48 Posts - 51%
heezulia
எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_m10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_m10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_m10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_m10எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter)


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 22, 2011 1:48 am

எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter)
எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter):

ஒன்பது எண்களில் 3ம் எண்ணிற்குத் தனிச்சிறப்பு உண்டு. தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியது. எப்போதுமே அடுத்தவர்க்கு நல்லது மட்டுமே செய்பவர்கள் இவர்கள்தான். இவர்களது திறமையையும், புத்திசாலித் தனத்தையும் மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டு, இவர்களுக்குரிய மரியாதையைச் செய்ய மாட்டார்கள். தனக்கு எதிரியான 6 எண்காரர்களுக்கும் இவர்கள் நன்மையே செய்வார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு உதவாமல், பல பிரச்சினைகளைக் கொடுப்பார்கள்.
தன்னை நம்பி வருவோர்க்கு நிச்சயம் உதவி செய்வார்கள். தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்று மட்டும் மிகவும் எதிர்பார்ப்பார்கள். முகஸ்துதி செய்வதன் மூலம் மற்றவர்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். தங்களது உடை விஷயத்திலும், தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் விஷயத்திலும் ஆர்வமாக இருக்க மாட்டார்கள். மானத்தை மறைப்பதற்காக உடை அணிகிறோம் என்று மட்டும் நினைப்பார்கள்.
அடுத்தவர்களிடம் உதவி கேட்டுச் செல்ல மாட்டார்கள். சுயகௌரவம் பார்ப்பது இவர்களது குறைபாடாகும். இதனாலேயே பல நல்ல வாய்ப்புகளை இவர்கள் வாழ்க்கையில் இழந்திருப்பார்கள்.
இவர்கள் பழைய சாத்திரங்கள், பழைய பழக்கங்கள் ஆகியவற்றின் மீது மிகவும் மதிப்பும், மரியா£தையும் கொண்டவர்கள். எனவே, கட்டுப்பாடுகளை மீறப் பயப்படுவார்கள். பெயர் கெட்டு விடுமோ என்று பெரிதும் அஞ்சுவார்கள். உயிருக்குச் சமமாக கௌரவத்தைக் காப்பாற்றுவார்கள்.
இவர்கள் அடுத்தவர்களின் வேலைக்காக மிகவும் அலைவார்கள். இவர்களின் பேச்சில் மனச்சாட்சி, விதி, நேர்மை, பாலம் போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள்.
இவர்கள் சுதந்திரமாக வாழவே பிரியப்படுவார்கள். கோயில் நிர்வாகம், ஊர்த்தலைமை போன்ற பதவிகளில் கௌரவமாக (ஊதியம் பெறாமல்) வேலை செய்ய விரும்புவார்கள். அன்பிற்கு அடிபணிவார்கள். அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் அடிபணிய மறுப்பார்கள். சில சமயங்களில் ஆவேசமாகவும் எதிர்ப்பார்கள். கையில் பணமிருந்தால் அழுகுக்காகவும், சிக்கனத்திற்காகவும் (தேவையைப் பற்றிக் கவலைப்படாமல்) பொருட்களை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வார்கள்.
சொத்துக்கள் விஷயத்திலும் விட்டுக் கொடுக்கும் குணம் அதிகம் உண்டு. ‘‘என் தம்பிதானே வைத்துக் கொள்ளப் போகிறான், வைத்துக் கொள்ளட்டும்.’’ என்று எதார்த்தமாக நினைப்பார்கள். தங்களத உரிமையை விட்டுக் கொடுத்து விடுவார்கள். இந்தக் குணத்தால் பல அன்பர்கள் பிற்காலத்தில் கவலைப்படுவார்கள்.
இவர்கள் தீனிப்பிரியர்கள். காபி, டீ, டிபன் போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்வார்கள்.
குரு ஆதிக்கம் நன்கு அமையப் பெற்றவர்கள். அன்பிலும், பக்தியிலும், சிறந்தவர்கள். ஏதாவது ஒரு துறையில் தனித் திறமையைக் காட்டுவார்கள். தேசப்பற்றும் நினைந்தவர்கள். பிறந்த நாட்டிற்காக உயிரையும் கொடுக்கத் தாயராவார்கள். பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்திருப்பார்கள். பார்ப்பதற்குக் கடுமையானவர்களாகத் தோன்றினாலும், வெள்ளை மனதுடன் மற்றவர்களிடம் பழகுவார்கள்.
ஆனால் குரு பலம் குறைந்தவர்கள் கடன் என்னும் பள்ளத்தில் விழுந்து விடுவார்கள். சிந்திக்காமல் பல காரியங்களில் இறங்கித் தாங்களே சிக்கிக் கொள்வார்கள். சில அன்பர்களுக்குக் காதல் தோல்விகளும் ஏற்பட்டிருக்கும்.

கூட்டாளிகள், நண்பர்கள்
இவர்களுக்கு 3, 12, 21, 30, 9, 18, 27 ஆகிய நாட்களில் பிறந்தவர்களும், கூட்டு எண் 3 மற்றும் 9 என வரும் அன்பவர்களும் மிகவும் உதவுவார்கள். மேற்கண்ட எண்களில் பிறந்தவர்களைக் கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் வைத்துக் கொள்ளலாம். 2ம் எண்களாலும் நன்மை ஏற்படும்.
1 எண்காரர்களின் மூலம் சில நன்மைகள் ஏற்பட்டாலும் அவை நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. 6, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களிடமும் கூட்டு எண் 6, 8 வரும் அன்பர்களிடமும் கவனமாக இருக்க வேண்டும். 3ம் தேதிக்காரர்களை இவர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

திருமண வாழ்க்கை
இவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து (பிறந்த எண் அல்லது விதி எண்) கொண்டால், வாழ்க்கைப் பயணம், இனிமையாக இருக்கும். 2 எண்காரர்களையும் மணந்து கொள்ளலாம். இவர்களை அனுசரித்துப் போவார்கள்.
இவர்களின் நோய்கள்
இவர்களுக்குத் தோல் வியாதிகள்தான் முதல் எதிரி. பெரும்பாலோருக்கு வயிற்று வலியும், மலச்சிக்கலும், வாய்வுக் கோளாறுகளும் உண்டு. வாய்ப்புண், குடல் சம்பந்தமான நோய்களும் ஏற்படும். மூச்சுப் பிடிப்பு, சொறி சிரங்கு போன்றவைகளாலும் அடிக்கடி தொந்தரவுகள் உண்டு.
நெல்லிக்கனியும், எலுமிச்சை மற்றும் கீரை வகைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை உடலுக்கு உறுதியையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கும்.

இவர்களுக்கான தொழில்கள்
இவர்களுக்கு ஆசிரியர், சோதிடர்கள் போன்ற அறிவைத் தூண்டும் தொழில்கள் சிறப்பு தரும். நல்ல அரசு உத்தியோகங்கள் கிடைக்கும் யோகம் உண்டு. தர்ம ஸ்தாபனங்களில் உத்தியோகம் கிடைக்கும். பேச்சாளர்கள் இவர்கள் சிறந்த நுண்ணிய சாத்திர ஆராய்ச்சியார்கள், ஆலோசனையாளர்கள் போன்ற துறைகளிலும் பிரகாசிப்பார்கள். பல அன்பர்கள் புத்தக விற்பனையாளர்களாகவும், பள்ளிகள் நடத்துபவர்களாவும் இருப்பார்கள். அரசியல் ஈடுபாடும் ஏற்படும். (உ.ம். கலைஞர் கருணாநிதி) நன்கு பிரகாசிப்பார்கள். எழுத்தாளர்கள், பேப்பர் கடைகள், அச்சுத் தொழில் ஆகியவையும் இவர்களுக்கு நன்கு அமையும். கல்லூரிப் பேராசிரியர்கள், தத்துவப் பேராசிரியர்கள், மேலாளர்கள் போன்ற தொழில்களும் சிறப்புத் தரும். இராணுத்திலும் நன்கு பிரகாசிப்பார்கள்.

குருவின் யந்திரம் & குரு & 27
10 5 12
11 9 7
6 13 8

குருவின் மந்திரம்
தேவா நாஞ்ச ரி(ரீ)ணாஞ்ச
குரும் காஞ்சந ஸ்ந்(நி)பம்
புத்திதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்

எண் 3 சிறப்புப் பலன்கள்
இந்த எண் தேவர்களுக்குக் குருவான பிரஹஸ்பதியினுடையது. எல்லோருக்கும் நல்ல ஆலோசனைகள் சொல்வதும், நல்ல வழி காட்டுவதும் இவர்கள்தான். ‘‘குரு பார்க்க கோடி நன்மை’’ என்கிறது சோதிடம். இந்த 3ம் எண்காரர்களால் உலகத்தில் உள்ள மற்ற அனைவருக்கும் நன்மைகளே ஏற்படும்.
இவர்களிடம் மற்ற அனைவரையும் விடத் தாங்கள்தான் அறிவிலும், அதிகாரத்திலும் உயர்ந்து விளங்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்கேற்ற உழைப்பும் உண்டு. பிறரைக் கட்டுப்படுத்தி, தனது ஆதிக்கத்தைச் செலத்த வேண்டும் என்கிற தீவிர எண்ணங்களும் உண்டு. எந்த ஒரு செயலிலும் கட்டுப்பாடும், ஒழுங்கும் இருக்க வேண்டும் என்பார்கள். தங்களுடைய மேலதிகாரிகள், முதலாளிகள் போன்றவர்களுக்கு மிகவும் விசுவாசமாகவும், உண்மையாகவும் இருப்பார்கள். மனச்சாட்சி பார்த்துச் செயல்படுவார்கள். எனவே, வியாபாரத்திலும் அல்லது உத்தியோகத்திலும் வெகுவிரைவில் முன்னேறி விடுவார்கள்.
இவர்களது கண்டிப்பான நடத்தையின் மூலம் சில எதிரிகளும் ஏற்பட்டு விடுவார்கள். கர்வம் ஓரளவு வந்து விடும். அடுத்தவரைப் புகழ்ந்து பேசத் தயங்குவார்கள். சுதந்திர எண்ணங்களும், அடுத்தவர்களை விட மேலே இருக்க வேண்டும் என்று தீவிர எண்ணமும் உண்டு. உலகம் பாராட்டும் ஆன்மீகத் தலைவராகவோ, ராஜதந்திரியாகவோ, தங்களை வருத்திக்கொண்டு தியாகங்கள் புரியும் தேசியத் தலைவர்களாகவோ விளங்குவார்கள் இவர்களே. சுவாமி விவேகானந்தர், இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்த பாபு இராஜேந்திர பிரசாத் போன்ற மகான்கள் எல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்களே. நாணயம், பண்புடைமை, ஒழுக்கம் போன்ற நற்குணங்கள் நிறைந்தவர்கள். கடுமையான உழைப்பாளிகள். 3ன் பலம் குறைந்தால் இவர்களது உழைப்பினை எளிதான மற்றவர்கள் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் நல்ல பெயர் பெறுவார்கள். பல அன்பர்கள் ஆசிரியர்களாகவும் கல்லூரிப் பேராசிரியர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் மதப்பற்றும், தங்களது பண்பாடு, கலாசாரம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடும், நம்பிக்கையும் உடையவர்கள். புதிய நாகரிக முன்னேற்றங்களைக் குறை கூறுவார்கள். பிறருடைய நிர்ப்பந்தங்களுக்காக எந்த ஒரு ஒவ்வாத செயலையும் செய்ய மாட்டார்கள். இதனாலேயே பழமைவாதிகள் என்று முத்திரை குத்தப்படுவார்கள். இவர்களது பேச்சு உரையாடல்களில் இறைவன், விதி, நியாயம் போன்ற வார்த்தைகள் அதிகம் காணப்படும்.
குறுக்கு வழியில் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளத் தயங்குவார்கள். தங்களது விடாமுயற்சியும், சலியாத உழைப்பினாலும் எப்படியும் முன்னேறி விடுவார்கள். தங்களுடைய இயல்புக்கும், தகுதிக்கும் அப்பாற்பட்ட பதவியை அடைய விரும்ப மாட்டார்கள். அந்தஸ்து, கௌரவம் பார்ப்பதால், மற்றவர்களுக்குக் கடின மனத்தினர்கள் போல் தோன்றுவார்கள். இவர்களுக்குச் சமூகத்தில் நல்லவர், வல்லவர் என்ற பெயர் கிடைக்கும். அதனால் பண விஷயக்ளில் லாபத்தை எதிர்பார்க்க மாட்டார்கள். பொதுவாகப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிப்பில் 3ம் எண்காரர்கள் சிறந்து விளங்குவார்கள்.
3ம் எண்ணின் வலிமை குறைந்தால் தன்னம்பிக்கை குறையும். இதனால் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி, முன்னேற வகையறியாது பலர் முடங்கிக் கிடப்பார்கள். இந்த எண்களில் பிறந்த பல திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேறாததற்கு இதுதான் காரணம். கடன்கள், எதிரிகளால் பாதிப்பு எண்ணின் பலம் குறைந்தால் நிச்சயம் ஏற்படும். இந்த திறமைசாலிகளைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் திறமை என விளம்பரப்படுத்திக் கொண்டு, புகழ்பெறுவது சில தந்திரசாலிகளின் நடைமுறையாகும்.
எனவே, குருவின் (3), ஆதிக்க நிலை உணர்ந்து, எண்ணின் பலத்தை அதிகரித்துக் கொண்டால், பொருளாதாரத்தில் முன்னேற்றம், அரசாங்க ஆதரவு, தொழில் முன்னேற்றம் நிச்சயம் ஏற்படும்.
இவர்களுக்குப் பெரிய சிரமங்களும், துன்பங்களும் வராது. அப்படி வந்தாலும், வெகு நாட்கள் இருக்காது. வந்த சுகதுக்கங்கள் அனைத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்வார்கள். பல 3ம் தேதி அன்பர்கள் புகழ்மிக்க எழுத்தாளர்களாகவும், கலைஞர்களாகவும் விளங்குகிறார்கள்.
காதல் விவகாரங்கள் இவருக்கு வெற்றியைத் தருவது இல்லை. தங்களது கலாசாரத்தை விட்டு வெளியே வரத் தயங்குவார்கள். நல்ல மனைவி இயற்கையாகவே அமைந்து விடுவார்கள். 3, 9, 1 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை மணந்தால், நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். வீண் செலவுகள் அதிகமாகச் செய்வார்கள். ரேஸ், லாட்டரி போன்ற துறைகளில் அதிர்ஷ்டம் குறைவுதான்.
எண் 6க்குப் பகையாக இருப்பதால், 3ம் எண்காரர்கள் தங்களது பெயரில் (தனியாக) அசையாச் சொத்துக்கள் வாங்கக் கூடாது. அனுபவத்தில் பல பிரச்சினைகளைக் கொடுக்கும். தனது மனைவி பெயரிலோ அல்லது இருவரின் கூட்டுப் பெயரிலோ வாங்கலாம். மற்றவர்களை ஏமாற்றி, அதன் மூலம் வருமானம் பெற விரும்ப மாட்டார்கள். சட்டத் தொழில் செய்பவர்கள், நீதிபதிகள், வக்கீல்கள், ஆன்மீகத் தலைவர்கள் இந்த எண்காரர்களே, வங்கி, இன்சூரன்ஸ் போன்ற அரசு உத்தியோகங்களை அடையலாம். ஜோதிடம், ஆன்மீகம் மாந்தரிகம் போன்றவற்றில் ஈடுபாடு மிக உண்டு.
பெரிய வியாபாரத்தை நடத்தினாலும் நியாயமான லாபத்தையே எதிர்பார்ப்பார்கள். இவர்களை நம்பிக் காரியங்களை ஒப்படைத்தால், தங்களை உயிரைக் கொடுத்தாவது அவற்றைச் செய்து முடித்து விடுவார்கள். நாணயஸ்தர்கள்.

உடல் அமைப்பு
நடுத்தரமான உயரமுடையவர்கள். முகமானது சற்று நீண்டிருக்கும். புருவங்கள் அடர்ந்தும் நீண்டும் இருக்கும். பெரிய உதடுகள் அமையும். பல் வரிசையாக இருக்கும். தலைமுடி நரைத்தல், வழுக்கை விழுதல் இளமையிலேயே ஏற்படும். கம்பிரமான உடல் அமைப்பு உண்டு.

அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்
தங்கம் சிறந்த உலோகமா-கும். பொன்நிற உடைகள் அதிர்ஷ்டத்தைத் தரும். செவ்வந்திக் கல் எனப்படும் கினீமீtலீஹ்st கற்கள் மிகவும் யோகமானவை. புஷ்பராகம் கற்களும் நல்ல பலன்களைத் தரும். கனகபுஷ்பராகம் கல்லும் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்
தாமரைப் பூ நிறமே சிறந்தது. கத்திரிப்பு நிறம் மற்றும் நீலம் கலந்த வண்ணங்ககள் சிறப்புத் தரும். மஞ்சள் நிறமும் நன்மை அளிக்கக்கூடியதே.
கருநீலம், கருப்பு, பச்சை நிறங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நாட்கள்
ஒவ்வொரு மாதத்திலும் 3, 9, 12, 18, 21, 27, 30 தேதிகள் மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதேபோன்று கூட்டு எண் 3 அல்லது 9 வரும் எண்களும் பலன்களைத் தரும்.
ஒவ்வொரு மாதத்திலும் 6, 8, 15, 17, 24, 26 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 6 அல்லது 8 வரும் தேதிகளிலும் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிட வேண்டும்
இப்போது 3 எண் குறிக்கும் நாளில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் பற்றிப் பார்ப்போம்.

3&ஆம் தேதி பிறந்தவர்கள் : சிறந்த சிந்தனையாளர்கள். தங்களுடைய ஆற்றலை ஆக்கரீதியாகப் பயன்படுத்திவெற்றி காண்பார்கள். பொறியியல், கணிதம், விஞ்ஞானம் போன்ற ஏதாவது ஒரு துறையில் வல்லுநர்களாக வருவார்கள். சிறந்த எழுத்தாளராகவும் இருப்பார்கள். கதை, கவிதை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். 21 வயதிற்கு மேல்தான் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
12&ஆம் தேதி பிறந்தவர்கள் : வாழ்க்கையில் தனியாகப் போராடப் பிறந்தவர்கள். தாய், தந்தையின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். உறவினர்களால் பயன் இல்லை. பேச்சிலே இணையற்றவர்கள். அதிகாரமாகப் பேசி தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். இவர்களது பெற்றோரின் பொருளாதார நிலையும் பாதிக்கப்படலாம். மற்றவர்களுக்காகவே உழைப்பார்கள். படிப்பு, தொழில் ஆகியவற்றில் இவர்கள் சுயமாகவே போராடி முன்னேறி விடுவார்கள். வறுமையான இளமை வாழ்வைத் தவிர்க்க முடியாது! தங்கள் தகுதியை வளர்த்துக் கொண்டால் நீதிபதிகள், வக்கீல்கள், பேராசிரியர்கள் ஆகிய பெரும் பதவிகள் தேடிவரும்.
21&ஆம் தேதி பிறந்தவர்கள்: எப்போதும் தங்களின் நலன் பற்றியே சிந்திப்பவர்கள். தங்களுக்குப் பிரயோசனமாக இருக்கும் தொழில்களிலேயே நாட்டம் செலுத்துவார்கள். வாழ்க்கையின் முன் பகுதியில் பல ஏற்றத் தாழ்வுகள் மூலம் நல்ல அனுபவங்களைப் பெறுவார்கள். பலமுறை தோல்விகளைச் சந்தித்தாலும் சலிக்காமல் உழைப்பார்கள். நடுவயதில் இவர்கள் பல வாழ்க்கைப் பிரச்சினைகளை சந்திப்பார்கள். உலகத்தில் புதிதாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்படுவார்கள். அதன் மூலம் பெரும் புகழும், செல்வமும் அடைவார்கள். எழுத்தும், பத்திரிகைத் தொழிலும் நன்கு அமையும்.
தங்களது வாழ்க்கையின் பிற்பகுதியில், தாங்கள் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, ஆனந்தமான வாழ்க்கை வாழ்வார்கள். அலைபாயும் (2 எண்) வாழ்க்கையானது இவர்களது திட்டமிட்ட உழைப்பால் இன்ப வாழ்வாக (1 எண் ) மாறி விடும். காரணம் சந்திரன் சூரியனுடன் சேர்ந்து மூன்றாக மாறுவதால், நல்ல பிற்கால இன்ப வாழ்க்கை உண்டு.
30&ஆம் தேதி பிறந்தவர்கள்: மிகுந்த திறமைசாலிகள், பணத்தைவிடச் சுயதிருப்தியை பிரதானமாக நினைப்பார்கள். எதையும் துருவித் துருவி ஆராயும் குணம் உண்டு. உயிராபத்து வந்தால் கூட பயப்படாமல் சாதனை செய்ய விரும்புபவர்கள். பொருளாதாரத்தில் திருப்திகரமான நிலை இருக்காது. ஊதாரித்தனமாக பணத்தைச் செலவழித்துப் பின்பு வருந்துவார்கள். ஒற்றர்கள், தூதர்கள், துப்பறிவாளர்கள் போன்றவர்கள் இந்த எண்காரர்களே. கௌரவம் எப்போதும் கிடைக்கும். தனிமையிலே சிந்திப்பதில் நாட்டம் உள்ளவர்கள். அரசியல் தொடர்பும் ஏற்படும். பலருக்கும் வழுக்கையும், நரையும் விரைவில் ஏற்படும். படிப்பறிவைக் கொடுக்கும் எண் இது.

எண் 3க்கான (குரு) தொழில்கள்
குருவுக்கே உரிய ஆலோசனைத் தொழில்கள் (Consultancy) ஆசிரியர், பேராசிரியர் போன்ற தொழில்கள் மிகப் பொருத்தமான தொழில்கள்! நிர்வாக சக்தி மிகுந்தவர்களாக இருப்பதால் அரசியல், நிர்வாகம், வங்கி போன்ற தொழில்களில் பிரகாசிப்பார்கள். பல மொழிகளின் மீது நாட்டம் கொள்வார்கள். அறிவுத் தாகம் கொண்டு எதையாவது படித்துக் கொண்டே இருப்பார்கள். வயது இவர்களுக்குத் தடையில்லை.
மேலும் நீதித்துறையிலும், வழக்கறிஞர், கோவில் அறப்பணிகள் போன்றவையும் இவர்களுக்குள்ள தொழில்கள். ஆன்மீகப் பேச்சாளர்கள், சோதிடர்கள், புத்தகம் வெளியிடுதல், எழுதல், பொது கௌரவப் பணிகள் போன்றவையும் இவர்களுக்கு ஒத்த தொழில்கள்.
அரசியல் துறையிலும் மிக உயர்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். MLA, MP போன்ற பதவிகளும், அமைச்சர் பதவிகளும் தேடி வரு. அரசாங்க நிறுவனங்கள், இராணுவம் போன்றவற்றிலும் தலைமைப் பொறுப்புகளை ஏற்று நன்முறையில் செய்வார்கள்.
மற்றவர்களுக்கு ஆலோசனை செய்வதிலும், காரியங்களை திறம்பட ஏற்று நடத்துதலிலும் வல்லவர்கள். ஆனால் எதுவும் முறைப்படி நடக்க வேண்டும் என எதிர்ப்பார்கள். மிகச் சிறந்த குமாஸ்தாக்கள், கணக்காளர்கள் இவர்களே.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - குரு (Jupiter) Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக