புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_c10தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_m10தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_c10தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_m10தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_c10தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_m10தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_c10தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_m10தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_c10தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_m10தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_c10தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_m10தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_c10தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_m10தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_c10தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_m10தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...)


   
   
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Nov 20, 2011 9:12 am

பண்பாடுகள்
பல உண்டு பாரினில்
நமக்கும் உண்டு
நல்ல தமிழ்ப் பண்பாடு;
வழி நெடுக இலக்கியத்தில் - அது
வாழ்வதைக் காணலாம்!

இலக்கியங்கள்
வாழ்க்கையின் வசந்தத்தை
நமக்காக
வடிகட்டித் தருபவைகள்....

துய்த்து இன்புறவும்
பயின்று பயன்பெறவும்
ஏராளமுண்டு இலக்கியங்கள்
துய்த்துப் பாரேன்!
மழையில் நனைந்தால்
மரங்களுக்கு
சளிப்பிடிக்குமா என்ன?

நிறைவு என்பது
முற்றுப் புள்ளியின்
மற்றொரு வடிவம்
படிப்பதில் நிறைவு கொள்ளாதே.

இலக்கியம் படிப்பது
இன்றளவில்
பைத்தியம் என்றானது
பொறியியலும், மருத்துவமும்
அறிவியலின் மகத்துவமும்
அழகுத் தமிழில்
செய்திடல் வேண்டும்

பிச்சைக்காரன் கூட
சக்கரவர்த்திக் கனவு காண்கிறான்;
தமிழ் இன்னும்
மொழிகளின் சக்கரவர்த்தியடா!

ஓங்கி வளர்ந்து
சிறந்த மொழியை
ஒதுங்கி வாழ்ந்து
இறந்த மொழியாகிட
அனுமதிக்காதே!

காலம் வென்ற கல்லணை அமைத்து
கட்டடக் கலைக்கு - புதுக்
கட்டியம் கூறிய
தமிழ் தேசமிது!

வற்றிப் போகாத நீர் இறைத்து
முற்றி வளர்ந்த நெல் அறுத்து
முற்றிப் போகாத காய் பறித்து
மூன்று வேளையும் விருந்து வைத்த
மூத்தகுடி நமது!

அரசக் கட்டிலென்றாலும்
அயர்ந்து உறங்குவது
புலவன் என்றால்
அரசனும் கவரி வீசிய
அறிவு தேசமிது!

நீண்ட ஆயுளுக்கான
நெல்லிக்கனி என்றாலும்
தமிழ் வளர்த்த மூதாட்டிக்கு
தாரை வார்த்த
தாராள தேசமிது!

பால் கொடுத்த மார் காயு முன்னே
வாள் கொடுத்து மகனை
போருக்கு போவென அனுப்பிய
வீர தேசமிது!

கட்டடக் கலை வளர்த்து
கருங்கல் சிலை வடித்து
கலைகளுக்கென்று
தலை நிமிர்வு தந்த
தமிழினமிது!

மீண்டும் இது போல்
படைக்க இயலாத
மீனாட்சி கோவில்;
உள்ளூர் என்பதால் - இந்த
உலகப் பெருமிதத்தை
ஒருமுறைகூடப்
பார்க்காதாரும் உண்டு!

அந்த அதிசயம் பற்றி
எந்தன் அனுபவம்
உரைக்கிறேன் கேள்,

வானம் நோக்கிப் பறக்கும்
வல்லூறுகூட கொஞ்சம்
வாய் பிளந்து பார்க்கும்
வானுயர் கோபுரங்கள்.......

உயிரை
உள்ளே வைத்துத் தைத்து
உருவம் தந்த சிலைகள்.....

கண்டு திரும்பிய போது
எனக்கும் தெரியாமல்
உயிரின் ஒரு துண்டு
அங்கேயே தங்கிவிட்டது.
தெரிந்த பின்னும்
எடுத்துவர மனமில்லை!

நற்றமிழ் சொல்லும்
பொற்காலத்தின் சாட்சியாய்
இந்தப் புதையல்
ஒட்டு மொத்த தமிழினத்துக்கும்
ஒரு உயில் இது

கற்றைக் குழல் முகமும்
கரிய கஜமுகமும்
ஒற்றைக் கல்லிலே
உருவம் தந்து;
ஒற்றைக் காலிலே
தவம் செய்தவனை
ஒற்றைக் கல்லிலே
தவம் செய்ய வைத்த
சிற்பியின் வல்லமை!

நேர்த்தியாய் செய்தவனின்
கீர்த்தி பாட
வார்த்தைதான் போதவில்லை?

கண்டு மகிழக்
கண் கோடி வேண்டும் - அந்த
வண்டு மொய்க்காத் தாமரையை!

யானை தேடி
குதிரை தேடி
சேனை பெருக்கி
போர் வெறிகூடி
ஆணைகள் இட்டு - களத்தினில்
இழுமென முரசில்
எழுமொலி கேட்டு
விழும் தலை நூறு
வீசிடும் வாளால்,
வீழ்த்திய தலைகள்
வீரம் சொல்ல
இரத்தத் துளிகள்
வரலாறு எழுத!

பிணங்களின் எண்ணிக்கை
களத்தினில் கூடினால்
மனம் மகிழ்ந்த
மன்னர்கள் காலம் அது.

வாள் முனையின் ஓசையே
வாழ்க்கை நாதமாய்
வாழ்ந்திருந்தோர் மத்தியிலே
உளிமுனையின் ஓசையிலே
உயிரை உருகவிட்டவனின்
உன்னத அடையாளமாய்
சிறப்புப் புதையலாய்
ஒரு கோவில்!

பொலி மார்பில்
களியாட்டக் கன்னியர் சாய
எண்ணிக்கையில் மனைவியர்
எத்தனையென்றே தெரியாது
பிறன் மனை நோக்காத் தன்மை
அரண்மனைகளுக்குக் கிடையாது.

அரண்மனையின் இந்த
அசிங்கம் துடைத்து
பிரமிப்பூட்டும்
பெருங்கலை வளர்த்து
ஆண்டு மறைந்தாலும்
மாண்டு போகாத
வரலாறாய்
நீண்ட காலம் நிற்கிறார்

ஆ. திருநாவுக்கரசு,
தமிழ் கூடல்



சதாசிவம்
தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Nov 20, 2011 9:18 am

ஐயா, அருமையான, கவிதை பதிவிற்கு நன்றிகள்........

மிகவும் அருமையாக செதுக்கி உள்ளார் கவிஞர்.......நன்றிகள் தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) 678642 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Nov 21, 2011 12:44 pm

மிகவும் நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Nov 21, 2011 1:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக