புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10 
2 Posts - 18%
heezulia
கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10 
372 Posts - 49%
heezulia
கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10 
25 Posts - 3%
prajai
கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_m10கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..?


   
   
nhchola
nhchola
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Postnhchola Thu Nov 17, 2011 11:52 pm

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான காரணங்கள்:

1 . கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை, மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தளங்கள் பற்றிய ரஷ்ய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (Site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

2 . தமிழ்நாடு அரசின் அரசானை எண்.828 (29.04.1991- பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization zone) இருக்கும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்ககூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மை நிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை. AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்ககூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ. சுற்றளவுக்குள் 10,000 த்திற்கு அதிகமான மக்கள் வாழும் ஊர்கள் இருக்ககூடாது. ஆனால்,

* கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியள்ள 3 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.

* 10 கி.மீ. சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியில் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் தொகை இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.

* 30 கி.மீ. சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ. தூரத்திற்குள் இருக்கிறது.

* 20 கி.மீ. சுற்றளவுக்குள் சுற்றுலாத் தளங்களோ, சரித்திர பிரசத்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும், உலக பிரசத்திப் பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ. சுற்றளவுக்குள் இருக்கிறது.

இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் மக்களை வெளியேற்றுவதோ, பாதிகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, மக்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.

3. அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடங்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்காரியங்கள், ரஷ்யாவில் இருந்து தாறுமாறாகவும் தலைகீழாகவும் வந்த உதிரிபாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவாயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.09.2006 அன்று அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதிகலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை?

4. உலைகளை குளிர்விக்கும் சூடான கதிவேச்சு கலந்த தண்ணீரையும், உப்பகற்றி ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் விஷமாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின், விவசாயிகளின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அளிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றலும், அணு உலைகளின் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.

5. பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. 2003 பிப்ரவரி 9 -ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19 -ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கண்ணன்குளம், அஞ்சுகிராமம், அழகப்பபுரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசர்களும் தோன்றின.

இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21 -ம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11,2011 அன்று நடந்த புகுஷிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள், ஜப்பானின் மேலாண்மையில் இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை.

6. அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார். ஆகஸ்ட் 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.

7. 2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம்ஷ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரஷ்ய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரஷ்யா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், நஷ்ட ஈடு வழங்க வேண்டும், என இந்தியா கேட்க, அந்தமாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்குகின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என ரஷ்யா கையை விரித்தது. 2008 -ம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நட்டு உடன்படிக்கை ஒன்றின் 13 -வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரஷ்யா. போபால் விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.

8. அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சினை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணுஉலைகள் வருடத்திற்கு சுமார் 30 டன் யுரேனியத்தை உபயோகிக்கும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய விஷத்தை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் விஷ உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீர் வெப்பநிலை அதிகரித்து கதிர்வீச்சால் நஞ்சாக்கப்பட்டு மீன்வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். மீனவ மக்களின், மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு விஷமாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும், அணுஉலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131,132,133, சீசியம் 134,136,137 ஐசோடோப்புகள், ஸ்ட்ராண்டியம், டீரிஷியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரின், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக நாம் வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த விஷத்தை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மனவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.

9. 1988 -ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் துவக்க மதிப்பீடே 17,000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006 -ம் ஆண்டு இயங்கும் ஏற்றும், 15,500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001 -ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6,755 கோடி முதலீடு செய்ய, ரஷ்யா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத்தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரஷ்ய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 10 வருடங்கள் கழிந்த நிலையில் இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் யூகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.

10. நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022 -ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கேட்டரிங் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலியில் அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 90% மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். ஸ்விட்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணுஉலைகளை மூடிவிட முடிவெடுத்திருக்கின்றன. புகுஷிமா விபத்து நடந்த ஜப்பான் நாட்டிலே கட்டப்பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்டனர். 28 பழைய உலைகளை மூடிவிட்டனர்.

நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பேனர்ஜி அவர்களின் அரசு ஹரிப்பூர் என்னும் இடத்தில் ரஷ்ய உதவியுடன் கட்டப்படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதிகளிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாமென்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன.

"கருப்பான, அழுக்கான தமிழர்கள்" என்று நம்மை வருணித்திருக்கும் ஓர் அமெரிக்க தூதர் சொல்வது போல நம்மை இந்திய அரசும் இழிவாக பார்க்கிறதோ என்னும் அச்சமும், சந்தேகமும் மனதில் எழுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் நம்மைக் காப்பாற்ற முன்வருவார்கள் என எதிர்பார்த்து ஏங்கிக் கிடக்கிறோம்.

இறுதியாக, அவரது ஒரு சில கேள்விகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.

* மக்களுக்காக மின்சாரமா அல்லது மிசாரத்திர்காக மக்களா?

* ரஷ்யா, அமெரிக்க, பிரெஞ்சு நாட்டுக் கம்பெனிகளின் லாபம் முக்கியமா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா?

மத்திய மாநில ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களா...?

http://www.kumarinetwork.com/

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 12:00 am

அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடங்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்காரியங்கள், ரஷ்யாவில் இருந்து தாறுமாறாகவும் தலைகீழாகவும் வந்த உதிரிபாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவாயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.09.2006 அன்று அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதிகலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை?


நல்ல கேள்விகள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் மூடவேண்டும்..? Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக