புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
284 Posts - 45%
heezulia
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
19 Posts - 3%
prajai
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
7 Posts - 1%
mruthun
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரிக்காக கவிதைகள் சில


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 19, 2012 6:17 pm


நவராத்திரி பாடல் 1

வீரத்தின் தேவி!, வெற்றியின் ஊற்றே!
வேண்டுவ தீந்துவிடு
சாரமும் கெட்டுத் தளர்ந்தவர் கண்டு
சக்தியை ஊற்றிக் கொடு
தூரத்தில் தோன்றுமச் சூரியச் சூழையில்
சொல்லொணாச் சக்தி வைத்தாய்
பாரத்தைக் கொண்டு பற்றினோம் கையைப்
பணிந்தனம் சக்திகொடு

ஆற்றுக்குவேகம் அனலுக்குதீய்ப்பு
அடித்திடும் புயற் துடிப்பு
சீற்றத்துக் காழி செழிப்பதில் பூக்கள்
சிறப்பென நீ படைத்தாய்
வீற்றிருக்குமுன் வெள்ளிமலைபோல்
வீறுடன் நாம் நிமிர
போற்றுகின்றோமெம் புன்மையழித்துப்
பூமியில் மாற்றிவிடு

சேற்றுக்குள் பூத்தால் செந்தாமரைப்பூ
சீ யென்று தள்ளுவதோ
காற்றெனும் மூச்சு காயத்தினோடு
கோபத்தைக் கொண்டிடவோ
மாற்றுக்கு ஏதும் மாறுதலின்றியே
மாவுல கோடிடுமோ
நூற்றுக்கு ஒன்றாய் நாம்வாழல்விட்டு
நிலைதனில் கெடுவதுவோ

கொட்டலாம் மேகம் குமுறலாம் ஆழி
கூரைகள் பிய்த்தெறிந்தே
பட்டதைச் சூறை பாதி முறித்தே
பலமென்று காட்டிடலாம்
வெட்டலாம் மின்னல் வீழலாம் தாரை
வெள்ளமாய் நீர் கொட்டலாம்
விட்டெலாம் நீங்கும் வேகங்கள் வாழ்வில்
வந்திடத் தேறுவமோ


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Oct 19, 2012 8:33 pm

பதமான பைந்தமிழ் பாத்து
பலகாலம் பறந்தாச்சு
பண்ணான பதமெடுத்து
பக்குமாய் பண்ணமைத்து
பாங்குடன் பண் பாடிய
பண்பான பாவலருக்கு
பணிவுடன் பாராட்டு
பாடல்கள் பரவட்டும்
பாரதி பன்மடங்கு அருளட்டும்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 19, 2012 9:39 pm

சதாசிவம் wrote:பதமான பைந்தமிழ் பாத்து
பலகாலம் பறந்தாச்சு
பண்ணான பதமெடுத்து
பக்குமாய் பண்ணமைத்து
பாங்குடன் பண் பாடிய
பண்பான பாவலருக்கு
பணிவுடன் பாராட்டு
பாடல்கள் பரவட்டும்
பாரதி பன்மடங்கு அருளட்டும்

நன்றிகள் பல!! என் உள்ளத்திலிருந்து !!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 19, 2012 9:43 pm

2 வது கவிதை

கருணை காட்டு

அடிமனதிலெழும் கவலை
. அதையறிவ துனதுநிலை
. ஆற்றிவிடு சக்திதேவி
துடித் துளமும் துயருறவும்
. தொலைவிலிருந் தெமையறிவ
. திலைஎனவும் மறுப்பதா நீ
விடிவுகொள இவரெமது
. விளைவிலெழும் புதல்வரென
. விரும்பி எமக்கன்பை யருளி
முடிவையெடு இருகரமும்
. முகை மலரென் றிணையவுனை
. மனமுவந்து கேட்டோம் தேவி

தினம் நடந்த திங்கள்முகம்
. தனையிழந்து குறுகுதென
. தமிழ் சுவைத்து வாழ்ந்த இனமும்
தனமிழந்து தரமழிந்து
. தமிழ் குலைந்து தமையிழந்து
. தவிக்கும்வகை காண்பாய் சக்தி
மனமழிந்து வாழ்விழந்து
. மதிபிழன்று மானிடத்தின்
. மகிமைதனும் இழந்தே தேவி
கனமிழந்து வாடுமெமைக்
. காப்பதற்கு வேண்டுமுடன்
. கருணை கொண்டு காண்பாய் சக்தி


நகையிழந்த சிறுவர்முகம்
. முகையழிந்த மலர்க்கொடியும்
. சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
. புனலிழந்த பொய்கையென
. வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்
. பழியெழுந்த விதமெதுவோ
. குகையொழித்த இருளும்போலே
மிகையழிய மேதினியில்
. அகமகிழ இருப்பதென்ன
. தொகையழியு முன்னர் காப்பாய்

**************************

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 19, 2012 10:02 pm

நவராத்திரி பாடல் 3

தா வென்றேன்

அகிலின் புகையாய் வாசம் திகழும்
- அருமை பூவின்எழிலாய் வாழ
- அருளைத் தாவென்றேன்
துகிலும் சோரத் தாங்கும் கைகள்
- துவளும்நெஞ்சைத் தேற்றும் எண்ணம்
- தேவை கொடுவென்றேன்
மகிமை கொண்டாய் பாலை மண்ணில்
- மருளக் காணும் மானாய் ஆனோம்
- மாற்றம் செய்யென்றேன்
தகித்தே மனதில் தானென் றெண்ணம்
- தலையும் தூக்கா தென்னைக் காப்பாய்
- தமிழைக் கொடுஎன்றேன்

வளையும் கொடிகள் வாழ்வில் காணா
- வலிமை தன்னைத் தாராய் ஒளியே
- வந்தே சேரென்றேன்
துளையும் கொண்டோர் மூங்கில் குழலாய்
- துயரில் ஆடிக் கீதம் பாடித்
- தொழுதே அழுதிட்டேன்
அளையும் மனதின் அகம்பாவந்தான்
- அணியென் றென்னை அருகா துள்ளம்
- அழுக்கைக் களையென்றேன்
விளையும் பொழுதும் வீணென்றாகி
- வெயிலை போலும் வினைகள் சுடுமே
- வேண்டா மதுவென்றேன்

தழையும் கொடியும் ஆடும் உலகில்
- தலையும் மமதை கொண்டே ஆடும்
- தன்மை கொல்லென்றேன்
மழையும் வருமுன் கருமே கம்போல்
- மதியை வந்தே மூடும் இருளாம்
- மோகம் நீக்கென்றேன்
இழையும் உனது அருளால் தூறும்
- இனிமைத் துளிகள் வந்தே உள்ளம்
- எங்கும் பொலியென்றேன்
முளையில் பயிரும் மரமும் வேண்டி
- முகிலை இரக்கும் நிலையில் ஞான
- முதலே தாவென்றேன்

பிழியும் சோகம் விட்டேன் உள்ளப்
- பிறள்வை நீக்கிப் பின்னும் வாழப்
- பெரிதும் உதவென்றேன்
பழியும்தீரப் பகையுபோகப்0
- பணியும் மனதில் பலமும்தந்து
- பண்பை ஊட்டென்றேன்
அழியும் தீமை போகும் மிருளென்
- றாடும்காற்றில் அகலின்சுடராய்
- அன்பைக் கொடுவென்றேன்
இழியும் வண்ணம் இன்றிக் கால்கள்
- இறைமைகொண்டோர் தேசம்ஒன்றில்
- இருக்கும் நிலைகேட்டேன்

************************


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Oct 22, 2012 9:50 am

மிகவும் நன்று. தங்கள் கவிதைகள் பாரதியின் கவிதைகளை போன்று உள்ளன. பாராட்டுக்கள்.






Uploaded with ImageShack.us
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 14, 2012 4:48 pm

நாகசுந்தரம் wrote:மிகவும் நன்று. தங்கள் கவிதைகள் பாரதியின் கவிதைகளை போன்று உள்ளன. பாராட்டுக்கள்.


மிக்க நன்றிகள்!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 14, 2012 9:49 pm

நகையிழந்த சிறுவர்முகம்
. முகையழிந்த மலர்க்கொடியும்
. சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
. புனலிழந்த பொய்கையென
. வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்


உங்கள் கவிதை உணர்வை சாடிய விதம் அருமை

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 15, 2012 3:05 am

பூவன் wrote:நகையிழந்த சிறுவர்முகம்
. முகையழிந்த மலர்க்கொடியும்
. சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
. புனலிழந்த பொய்கையென
. வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்


உங்கள் கவிதை உணர்வை சாடிய விதம் அருமை

மிக்க நன்றிகள் பூவன்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக