புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைத்தாலே நடுங்கும் உண்மை கதை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ஞாயிற்றுக்கிழமைக் காலை. வழக்கமான சோம்பலுடன் மனைவி குழந்தைகளுக்கான அன்றைய காலை dose கொஞ்சலோ திட்டோ கொடுத்துவிட்டு, கணினி எதிரே அமர்ந்து இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறீர்கள். சில நொடிகளில் வாசல் கதவை யாரோ தட்ட, குழந்தைகளை ஏவித் திறக்க வைக்கிறீர்கள். FBI மற்றும் உள்ளூர் காவல்துறையினர் துப்பாக்கியைச் சுட்டியபடி உள்ளே நுழைகிறார்கள். சிறுவர் தொடர்பான ஆபாசப் புகைப்படம் மற்றும் திரைப்படங்களைச் சேகரித்ததாகவும் இணையத்தில் பரப்பியதாகவும் குற்றம் சாட்டி உங்களைக் கைது செய்கிறார்கள். பிள்ளைகளும் மனைவியும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, நீங்கள் [அதிர்ச்சி * 2]வுடன் அதிகாரிகளைப் பார்க்கிறீர்கள்.
உங்கள் எதிரிலேயே உங்கள் கணினியிலிருந்து மெகாபைட் மெகாபைட்டாக பலான ஆபாசப் படங்களையும் விடியோக்களையும் எடுத்துக் காட்டுகிறார்கள் அதிகாரிகள். எது எங்கே எப்படி வந்தது என்று தெரியாமல் விழிக்கிறீர்கள். அதிர்ச்சியில், எப்போதோ யூட்யூபில் நமிதாவோ குமிதாவோ "ஈரமான காட்சி"யை ஒரு கணம் சலனப்பட்டுப் பார்த்து ஏமாந்தது நினைவுக்கு வருகிறது. 'அதற்காக இப்படியா?' என்று நினைக்கிறீர்கள். 'மனைவியா மக்களா யார் செய்த வேலை?' என்று பதறுகிறது மனம். எதோ சொல்ல வாயெடுக்கிறீர்கள்.
அதற்குள், "என் புருசன் உத்தமன். கந்தசஷ்டிக் கவசம் தவிர எதுவும் படிக்க மாட்டார். பக்திப்படங்கள், மலேசியா சுப்ரமணியஸ்வாமி கோவில், உள்ளூர் சாய்பாபா கோவில் பற்றி அப்பப்போ இணையத்துல படிப்பார். அதைத் தவிர இந்த குமுதம்... தினமலர்.. தமிழ் ஓவியா.. எங்கள் பிளாக்... இமெயில் அவ்வளவு தான் படிப்பார். எப்பவாவது ஒண்ணு ரெண்டு திருட்டு சன் டிவி, இங்லிஷ் தமிழ் சினிமா படங்கள் பார்ப்போம். குடும்பப் படங்கள் தான். அதுலயும் கூட இங்லிஷ்காரி டிரசை அவுத்தா உடனே டக்குனு கண்ணை மூடிப்போம். இது என்ன விபரீதமா போச்சே? யாரோ சதி பண்ணியிருக்காங்க" என்று உங்கள் மனைவி உங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்.
"சூ, கம்னிருமா" என்ற அதிகாரி, உங்களுக்கு மிரான்டா உரிமைகளை அறிவித்துவிட்டு விலங்கு மாட்டி வெளியே அழைத்துச் சென்று, காவல் வண்டியில் ஏறச் சொல்கிறார்.
"அவரை ஒண்ணும் செய்யாதீங்க. என் புருசன் அரிச்சந்திரன், காந்தி.... அவங்க யாருனு உங்களுக்குத் தெரியாதோ? என்ன கண்றாவி, உள்ளூர் ஆளுங்க எதுவும் நினைவுக்கு வரலையே? யேசுன்னு சொன்னா அடிக்க வருவானோ? அமெரிக்காலே யோக்யனா ஒரு பய நினைவுக்கு வரமாட்றானே.. ம்ம்ம்... ஆம்பிளை மதர் தெரசா மாதிரி... இல்லே, மேன்டேலா மாதிரி... அய்யயோ...அவரை விட்டுறுங்க" என்று புலம்பிக் கொண்டு உங்கள் மனைவி பின்னாலேயே ஓடி வருகிறார்.
கணினியையும் கைக்குக் கிடைத்த ஒன்றிரண்டு டிவிடிக்களையும் எடுத்துக் கொண்டு தொடர்ந்த மற்ற அதிகாரிகள், உங்கள் மனைவி பிள்ளைகளை தடுத்து வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு, வண்டியில் ஏறுகிறார்கள். என்ன ஆகப்போகிறதோ என்று தெரியாமல் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் திகிலுடன் திகைக்கிறீர்கள்.
உங்கள் நிலையை நினைத்துப் பார்க்க முடிகிறதா?
நண்பர் மைகெலுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் அப்படித்தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை படு சாதாரணமாக விடிந்து பெருஞ்சிக்கலில் முடிந்தது.
ஆபாசப் போக்குவரத்தே பெருங்குற்றம். அதிலும் சிறுவர் தொடர்பான ஆபாசமென்றால் மாபெருங்குற்றம். தான் நிரபராதியென்று நம்பியதால் மைகெல் வக்கீல் உதவியுடன் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட முடிவு செய்தார். குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடங்கியதும் மைகெலை வீட்டுக் காவல் என்ற ஜாமீனில் விட்டார்கள். வழக்கு முடியும் வரை எப்பொழுதும் அவருடன் ஒரு காவல்காரர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை.
மைகெலுக்கு அடுத்த வாரமே வேலை பறிபோனது. எல்லாவற்றுக்கும் மேலாகக் குடும்ப, சுற்றுவட்டார அவமானம். பள்ளிக்கூடத்தில் விவரம் தெரிந்து, இரண்டு பிள்ளைகளும் அவமானம் தாங்க முடியாமல் பள்ளிக்குப் போவதையே நிறுத்தி விட்டார்கள். சுற்றுவட்டக் குடும்பங்கள் பொதுவாகவே விலகியிருந்தாலும் இப்பொழுது இன்னும் மோசமாகி விட்டது. மைகெல் வீட்டில் அடிக்கடி கல்லெறி நடக்கத் தொடங்கியது. "வெளியேறு" என்று சீட்டு ஒட்டத் தொடங்கினார்கள். தொலைபேசியில் மிரட்டல்கள் வரத் தொடங்கின. விவாகரத்து கோரிய மனைவியிடம் வழக்கு முடியும் வரை தன்னை நம்புமாறும் உதவி செய்யுமாறும் கெஞ்சி, உறவுத்தவணை வாங்கினார். பிள்ளைகளின் நலனைக் கருதி மைகெலின் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு வழக்கு முடிந்ததும் பார்க்கலாம் என்று அவருடைய தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஒன்றிரண்டு நண்பர்கள் தவிர மற்ற எவருமே ஆறுதலுக்குக் கூடப் பேச்சு வார்த்தை வேண்டாமென்று ஒதுங்கி விட்டனர்.
வக்கீலோ தன்னால் இதற்கு மேல் ஒன்றும் இயலாது என்றும், குற்றத்தை ஒப்புக்கொண்டு குறைந்தபட்ச சிறைத்தண்டனையைப் பெறுமாறும், வற்புறுத்தத் தொடங்கினார். மைகெல் தன் பக்கம் உண்மை இருப்பதாக நம்பியதால் வேறு வக்கீலை வைத்துப் போராட முடிவு செய்தார். புது வக்கீல் இதற்குச் செலவு அதிகமாகும் என்றும் வழக்கு முடிய இரண்டு மூன்று வருடங்கள் ஆகக்கூடுமென்றும், ஒரு லட்சம் டாலர் முன்பணமாகத் தரவேண்டும் என்றும் நிபந்தனை போட்டார்.
உடைந்து போனாலும், மைகெல் செலவைச் சமாளிக்க வீட்டை அடகு வைத்தார். மெர்சடீஸ் காரை அடிமாட்டு விலைக்கு விற்றார். தன்னுடைய வங்கி மற்றும் 401கே சேமிப்புகளை எடுத்தார். ஒரு பெரும்பகுதியை மனைவிக்கு அனுப்பினார். மிச்சப் பணத்திலிருந்து நூறாயிரம் டாலரை வக்கீலிடம் கொடுத்தார். தன்னம்பிக்கையை இழக்காமல் வழக்குத் தொடர்ந்தார்.
அரசுத் தரப்பிலிருந்து சாட்சி மேல் சாட்சியாகக் கொண்டு வந்தார்கள். மைகெல் வீட்டு இணைய இணைப்பிலிருந்து மற்ற அண்மை வீட்டு இணைப்புகளை விட நாற்பது மடங்கு அதிகமாகத் தரவுப்பறிமாற்றம், தொடர்ச்சியாகப் பல நாட்கள் நிகழ்ந்ததற்கான ஒரு வருடத் தொலைபேசி விவரங்களை ஆதாரமாகக் காட்டியதும், வழக்கு ஏறக்குறைய முடிந்து விட்டது. மைகெலுக்கு ஐந்தாண்டுக் கடுங்காவலும் பெரும் அபராதமும் தண்டனையாக விதிக்கப் பட்டது.
சிறையிலடைபட்ட மைகெல் விடவில்லை. தீர்ப்பை எதிர்த்து முறையிடலாமென்ற வக்கீலிடம் எப்படியாவது பணம் புரட்டித் தருவதாகச் சொல்லி அப்பீல் செய்யச் சொன்னார். வீட்டை விற்றார். தன்னுடைய ரோலக்ஸ் கடிகாரங்களிலிருந்து சட்டி பானை வரை எல்லாவற்றையும் விற்றார்.
ஐந்து வருடங்களுக்கான க்ரெடிட் கார்ட் விவரங்கள், மற்ற செலவு விவரங்கள், தொலைபேசி நிறுவனத்திலிருந்து அவர் வீட்டு இணைய இணைப்பு உபயோக விவரங்கள், இன்னும் பல விவரங்கள் தேவையென்றும் அவற்றைப் பெற மைகெலின் அனுமதி வேண்டும் என்றும், அவ்வப்போது வக்கீல் வருவாரே தவிர மைகெல் நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லை. அப்பீல் செய்து மூன்று மாதங்களுக்குப் பிறகு தொடங்க வேண்டிய வழக்கு, இப்பொழுது ஏழு மாதங்களுக்குப் பிறகு தொடருமென்று அறிவிக்கப்பட்டது. அடுத்த நான்கு மாதங்களுக்கு வக்கீலிடமிருந்து தகவலே இல்லை.
அப்பீல் வழக்கு தொடங்கிய முதல் நாளிரவு மைகெல் இருந்த சிறைக்கு வந்தார் வக்கீல். மறுநாள் அவருக்கு நிச்சயம் விடுதலை கிடைக்கும் என்றார். விவரம் எதுவும் சொல்லவில்லை.
மறுநாள் நீதிமன்றத்தில் மைகெலின் ஐந்து வருடத் தொலைபேசி மற்றும் இணைய உபயோக விவரங்களையும் மற்ற க்ரெடிட் கார்ட் விவரங்களையும் சுட்டிக் காட்டினார் வக்கீல். "அண்மை வீட்டுக்காரர்களை விட அதிகத் தரவுப்பறிமாற்றம் செய்ததாகச் சொல்லப்படும் நாட்களில், பத்து நாட்கள் மைகெலும் அவர் குடும்பமும் வீட்டிலோ ஊரிலோ இல்லை. அதற்கு ஆதாரமாக இந்தக் க்ரெடிட் கார்ட் விவரங்களைப் பாருங்கள்" என்று நாள் பட்டியலிட்டு விவரங்களை எடுத்துக் காட்டினார். அவர் எடுத்துக் காட்டிய நாட்களிலும் நேரங்களிலும் மைகெலும் அவர் குடும்பமும் வெளியே சாப்பிடவோ, சினிமா போகவோ, டிஸ்னிலேன்ட், கொலராடோ என்று சுற்றுலா செல்லவோ உபயோகித்த க்ரெடிட் கார்ட் விவரங்களைக் காட்டினார். ஒரு முறை மைகெல் தொழில் தொடர்பாக இங்கிலாந்து சென்றிருந்ததையும் சுட்டிக் காட்டினார். அதே நேரங்களில் மைகெல் வீட்டு இணைய இணைப்பில் அசாதாரண தரவுப்பறிமாற்றம் நடந்ததையும் சுட்டிக்காட்டி, "ஊரிலோ வீட்டிலோ இல்லாதவர் எப்படி இந்த இணைப்பை உபயோகித்திருக்க முடியும்? இப்படிப்பட்ட விவரங்களின் பின்னணியிலும், மைகெல் கணினியின் அருகே இருந்திருக்கவே முடியாத நிலைமையின் அடிப்படையிலும், அவரை விடுதலை செய்ய வேண்டும்" என்று வாதாடினார்.
"அப்படியென்றால் அவருடைய கணினியைப் பயன்படுத்தியது யார்?" என்றார் அரசுத் தரப்பு வக்கீல். "அதானே?" என்றார் FBIக் காரர். "அதானே, நானும் கேட்கிறேன்?" என்றார் உள்ளூர்க் காவலர்.
"அதைக் கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் வேலை. நிரபராதிக்குத் தண்டனை வழங்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன்" என்றபடி வழக்கை ரத்து செய்து மைகெலை விடுதலை செய்தார் நீதிபதி.
மைகெலுக்கு பெரும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைத்தாலும், பழைய வேலையும் உறவுகளும் திரும்பக் கிடைக்கவில்லை. அரசை எதிர்த்து வழக்கு போட்டு பணம் பெற வேண்டும் என்றார். வக்கீலோ "அது சுலபத்தில் நடக்காத காரியம். விடுதலை கிடைத்த வரைக்கும் லாபம் என்று ஊர் போய்ச் சேர். புது வாழ்வு தொடங்கு" என்று மிச்சப்பணத்தை மைகெலிடம் கொடுத்து விட்டு விலகினார்.
மைகெல் நிரபராதியாக வெளியே வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. சென்றவார விடுமுறை நாட்களில் அவருடன் ஒரு மாலைப் பொழுதைக் கழித்தேன். நூறு பவுண்டுகளாவது எடை குறைந்திருப்பார் போல் பட்டது. முகமெங்கும் தேமல். கண்களை அடிக்கடிச் சுருக்கிக் கொண்டு பேசினார். மனைவி மக்கள் திரும்பி வந்துவிட்டாலும் உறவு முறையில் விரிசல் இருப்பதைப் பற்றிப் பேசினார். வாடகை வீட்டில் இருப்பதாகச் சொன்னார். குற்ற நிழலில் இருக்கும் அவருக்கு இப்போதைக்கு வேலை கிடைப்பது அரிதென்பதால் வீட்டு நிலமை மோசமாகியிருப்பதைப் பற்றிப் பேசினார். விடுதலைக்குப் பின்னரும் FBIகாரர்களுடன் ஒத்துழைப்பது பற்றிப் பேசினார். ஸ்ட்ரெஸ் பற்றிப் புலம்பினார். ஹேமாவின் பதிவைப் பற்றிச் சொன்னேன். கணினிப் பக்கமே இனித் தலைகாட்டப் போவதில்லை என்றார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். நிச்சயம் அரசாங்கத்துக்கு எதிராக மானநஷ்ட வழக்கு போடப்போவதாகச் சொன்னார். அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு இரவு பனிரெண்டு மணிக்கு மேல் கிளம்பினேன்.
மைகெல் சொன்ன விவரங்களிலிருந்து:
• இணையத்தில் இன்றைக்கு நிறைய தானியங்கி மென்கள் (bots) கிடைக்கின்றன. சரியான பாதுகாப்பில்லாமல் இணையத்தில் கலந்திருக்கும் கணினிகளை இந்தத் தானியங்கி மென்கள் அடையாளம் கண்டு, அவற்றை ஆபாசப் படங்களின் சேமிப்புக் கிடங்குகளாக உபயோக்கின்றன.
• நம்மில் பெரும்பாலானவர்கள், கணினியில் என்ன இருக்கிறது என்று சோதனை செய்வதில்லை. முன்னூறு கிகாபைட் இருக்கிறது என்ற நினைப்பில் சுத்தம் செய்வதும் இல்லை. அதனால் இந்தத் தானியங்கிகள் இருபது முப்பது கிகாபைட் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இணைய இணைப்பு கிடைக்கும் போதெல்லாம் "இங்கிருக்கிறேன்" என்று அடையாளம் காட்டிச் செயல்படுவதை நாம் கவனிக்கத் தவறுகிறோம்.
• இப்படி நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கணினிகள் இணையத்தில் கலந்திருக்கும் போது, கணினிக்கு ஐந்து பத்து கிகாபைட் என்ற கணக்கில் பிரித்துச் சேமிக்கப்பட்ட ஆபாசப் படங்களை வினியோகம் செய்வதில் எந்தவிதச் சிக்கலும் இல்லை.
• அகப்பட்டுக் கொண்டால், கணினியின் சொந்தக்காரர்கள் தான் சிக்குவார்களே தவிர, இந்தப் படங்களைப் பரப்பும் அசல் குற்றவாளிகளுக்கு எந்தக் கெடுதலும் நேருவதில்லை.
அப்படிப் பார்த்தால் kggம் மீனாட்சியும் முருங்கையும் நீங்களும் நானும் அகப்பட்டுக் கொள்ள வாய்ப்பிருக்கிறதே? அய்யய்யோ! என்ன செய்வது?
சில அடிப்படைச் சுகாதாரங்களையும் பாதுகாப்பு விதிவகைகளையும் கடைபிடிக்கலாம்.
0. நிச்சயமாக கடவுச்சொல் உபயோகிக்க வேண்டும். பாஸ்வேர்ட் இல்லாமல் கணியை உபயோகிக்கவே கூடாது. கடவுச்சொல்லும் சுலபமாகத் திருட முடியாததாக இருக்க வேண்டும்.
1. வீட்டில் இருப்பவர்கள் பொதுவான கணியை உபயோகித்தால், தனித்தனி கடவுச்சொல் உபயோகியுங்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பகுதி (folder or some partition) ஒதுக்குங்கள்
2. வாரம் ஒரு முறை (முடியாவிட்டால் மாதம் ஒரு முறையாவது) கணினியில் இருப்பதைக் கவனியுங்கள். மேலோட்டமாகப் பார்த்தால் கூடப் போதும். disc properties சோதனை செய்து மிகுந்திருக்கும் வெற்றிடங்களை ஒப்பிடுங்கள். திடீரென்று வெற்றிடம் வெகுவாகக் குறைந்திருந்தாலோ அதிகரித்திருந்தாலோ கவனியுங்கள்.
3. இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிப்பதை முடிந்தவரைத் தவிருங்கள். பைர்பாக்ஸ் அல்லது க்ரோம் உலாவிகளை உபயோகியுங்கள்.
4. இணைய இணைப்புக்கென்றுத் தனியாக வைரஸ் தடுப்புகளை உபயோகியுங்கள்
5. இணையப் போக்குவரத்தை விவரிக்கும் மென்பொருள் ஒன்றை உபயோகித்து, உங்கள் கணினியின் இணையப் போக்குவரத்தைக் கண்காணியுங்கள்.
6. தேவையில்லாத பொழுது, இணைய இணைப்பை நிறுத்தி விடுங்கள்
7. எந்தவிதக் கோப்பிணைப்பையும் (file attachment) முற்றும் நம்பினாலொழியத் திறக்காதீர்கள். நண்பர் பாட்டு அனுப்பினால் கூட, 'ஆகா, கேட்டேனே, நன்றாக இருக்கிறது' என்று பொய் சொல்லி பதில் போடுங்கள். சகோதரி புகைப்படம் அனுப்பினால் கூட"அடடா, என்ன அழகு" என்று கூசாமல் பொய் சொல்லுங்கள். தொடவே தொடாதீர்கள். டிலீட். டஸ்ட்பின்!
8. USB விசைகள் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். வின்டோஸ் இன்றைக்கு USB குச்சிகள் வழியாக வரும் வைரஸ்களைத் தடுக்க எந்தப் பாதுக்காப்பும் அளிப்பதில்லை.
9. பிள்ளைகளின் கணினி உபயோகத்திற்கு வரைமுறையும் விதிகளும் கடைபிடியுங்கள்
10. இணையதள அடையாளச்சீட்டுகளை (cookies) முடிந்தவரை ஏற்காதீர்கள்
11. தரவிறக்கங்களைக் கண்காணியுங்கள்; சோதனையிடுங்கள்
12. தானியங்கித் தளமாற்றங்களை அனுமதிக்காதீர்கள் (automatic reloading, routing or opening of additional popups or sites)
13. வீட்டுக் கணினியிலும் வைரஸ் தடுப்பு மென்பொருட்களை உபயோகியுங்கள். இணையத்தில் இலவசமாக நிறைய கிடைத்தாலும் நோர்டன் போன்ற மென்பொருட்களை நிறுவுங்கள். கூகுள் இலவசமாக சாதா நோர்டன் வழங்குகிறது. நெய் மசாலா ஸ்பெசல் நோர்டன் கொஞ்சம் செலவுதான் என்றாலும் முடிந்தவரை நிறுவி உபயோகியுங்கள்
14. திடீரென்று கணினி வேகம் குறைந்தது போலவோ, அல்லது ஏதாவது தேடுவது போலவோ காரணமில்லாமல கரகர என்றால் கொஞ்சம் கவனியுங்கள்
15. பேஸ்புக், லிங்க்டின், மைஸ்பேஸ் உபயோகிக்கும் பொழுது கவனமாக இருங்கள். குறிப்பாக, யூட்யூபில் நூதன் நடித்த படத்தைத் தேடும் போது 'மலையாள மங்கை' என்று ஏதாவது தோன்றினால் விலகுங்கள். நூதன் மலையாளப் படத்தில் நடிக்கவில்லை.
நன்றி : http://moonramsuzhi.blogspot.com/2009/12/blog-post.html
உங்கள் எதிரிலேயே உங்கள் கணினியிலிருந்து மெகாபைட் மெகாபைட்டாக பலான ஆபாசப் படங்களையும் விடியோக்களையும் எடுத்துக் காட்டுகிறார்கள் அதிகாரிகள். எது எங்கே எப்படி வந்தது என்று தெரியாமல் விழிக்கிறீர்கள். அதிர்ச்சியில், எப்போதோ யூட்யூபில் நமிதாவோ குமிதாவோ "ஈரமான காட்சி"யை ஒரு கணம் சலனப்பட்டுப் பார்த்து ஏமாந்தது நினைவுக்கு வருகிறது. 'அதற்காக இப்படியா?' என்று நினைக்கிறீர்கள். 'மனைவியா மக்களா யார் செய்த வேலை?' என்று பதறுகிறது மனம். எதோ சொல்ல வாயெடுக்கிறீர்கள்.
அதற்குள், "என் புருசன் உத்தமன். கந்தசஷ்டிக் கவசம் தவிர எதுவும் படிக்க மாட்டார். பக்திப்படங்கள், மலேசியா சுப்ரமணியஸ்வாமி கோவில், உள்ளூர் சாய்பாபா கோவில் பற்றி அப்பப்போ இணையத்துல படிப்பார். அதைத் தவிர இந்த குமுதம்... தினமலர்.. தமிழ் ஓவியா.. எங்கள் பிளாக்... இமெயில் அவ்வளவு தான் படிப்பார். எப்பவாவது ஒண்ணு ரெண்டு திருட்டு சன் டிவி, இங்லிஷ் தமிழ் சினிமா படங்கள் பார்ப்போம். குடும்பப் படங்கள் தான். அதுலயும் கூட இங்லிஷ்காரி டிரசை அவுத்தா உடனே டக்குனு கண்ணை மூடிப்போம். இது என்ன விபரீதமா போச்சே? யாரோ சதி பண்ணியிருக்காங்க" என்று உங்கள் மனைவி உங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்.
"சூ, கம்னிருமா" என்ற அதிகாரி, உங்களுக்கு மிரான்டா உரிமைகளை அறிவித்துவிட்டு விலங்கு மாட்டி வெளியே அழைத்துச் சென்று, காவல் வண்டியில் ஏறச் சொல்கிறார்.
"அவரை ஒண்ணும் செய்யாதீங்க. என் புருசன் அரிச்சந்திரன், காந்தி.... அவங்க யாருனு உங்களுக்குத் தெரியாதோ? என்ன கண்றாவி, உள்ளூர் ஆளுங்க எதுவும் நினைவுக்கு வரலையே? யேசுன்னு சொன்னா அடிக்க வருவானோ? அமெரிக்காலே யோக்யனா ஒரு பய நினைவுக்கு வரமாட்றானே.. ம்ம்ம்... ஆம்பிளை மதர் தெரசா மாதிரி... இல்லே, மேன்டேலா மாதிரி... அய்யயோ...அவரை விட்டுறுங்க" என்று புலம்பிக் கொண்டு உங்கள் மனைவி பின்னாலேயே ஓடி வருகிறார்.
கணினியையும் கைக்குக் கிடைத்த ஒன்றிரண்டு டிவிடிக்களையும் எடுத்துக் கொண்டு தொடர்ந்த மற்ற அதிகாரிகள், உங்கள் மனைவி பிள்ளைகளை தடுத்து வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு, வண்டியில் ஏறுகிறார்கள். என்ன ஆகப்போகிறதோ என்று தெரியாமல் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் திகிலுடன் திகைக்கிறீர்கள்.
உங்கள் நிலையை நினைத்துப் பார்க்க முடிகிறதா?
நண்பர் மைகெலுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் அப்படித்தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை படு சாதாரணமாக விடிந்து பெருஞ்சிக்கலில் முடிந்தது.
ஆபாசப் போக்குவரத்தே பெருங்குற்றம். அதிலும் சிறுவர் தொடர்பான ஆபாசமென்றால் மாபெருங்குற்றம். தான் நிரபராதியென்று நம்பியதால் மைகெல் வக்கீல் உதவியுடன் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட முடிவு செய்தார். குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடங்கியதும் மைகெலை வீட்டுக் காவல் என்ற ஜாமீனில் விட்டார்கள். வழக்கு முடியும் வரை எப்பொழுதும் அவருடன் ஒரு காவல்காரர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை.
மைகெலுக்கு அடுத்த வாரமே வேலை பறிபோனது. எல்லாவற்றுக்கும் மேலாகக் குடும்ப, சுற்றுவட்டார அவமானம். பள்ளிக்கூடத்தில் விவரம் தெரிந்து, இரண்டு பிள்ளைகளும் அவமானம் தாங்க முடியாமல் பள்ளிக்குப் போவதையே நிறுத்தி விட்டார்கள். சுற்றுவட்டக் குடும்பங்கள் பொதுவாகவே விலகியிருந்தாலும் இப்பொழுது இன்னும் மோசமாகி விட்டது. மைகெல் வீட்டில் அடிக்கடி கல்லெறி நடக்கத் தொடங்கியது. "வெளியேறு" என்று சீட்டு ஒட்டத் தொடங்கினார்கள். தொலைபேசியில் மிரட்டல்கள் வரத் தொடங்கின. விவாகரத்து கோரிய மனைவியிடம் வழக்கு முடியும் வரை தன்னை நம்புமாறும் உதவி செய்யுமாறும் கெஞ்சி, உறவுத்தவணை வாங்கினார். பிள்ளைகளின் நலனைக் கருதி மைகெலின் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு வழக்கு முடிந்ததும் பார்க்கலாம் என்று அவருடைய தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஒன்றிரண்டு நண்பர்கள் தவிர மற்ற எவருமே ஆறுதலுக்குக் கூடப் பேச்சு வார்த்தை வேண்டாமென்று ஒதுங்கி விட்டனர்.
வக்கீலோ தன்னால் இதற்கு மேல் ஒன்றும் இயலாது என்றும், குற்றத்தை ஒப்புக்கொண்டு குறைந்தபட்ச சிறைத்தண்டனையைப் பெறுமாறும், வற்புறுத்தத் தொடங்கினார். மைகெல் தன் பக்கம் உண்மை இருப்பதாக நம்பியதால் வேறு வக்கீலை வைத்துப் போராட முடிவு செய்தார். புது வக்கீல் இதற்குச் செலவு அதிகமாகும் என்றும் வழக்கு முடிய இரண்டு மூன்று வருடங்கள் ஆகக்கூடுமென்றும், ஒரு லட்சம் டாலர் முன்பணமாகத் தரவேண்டும் என்றும் நிபந்தனை போட்டார்.
உடைந்து போனாலும், மைகெல் செலவைச் சமாளிக்க வீட்டை அடகு வைத்தார். மெர்சடீஸ் காரை அடிமாட்டு விலைக்கு விற்றார். தன்னுடைய வங்கி மற்றும் 401கே சேமிப்புகளை எடுத்தார். ஒரு பெரும்பகுதியை மனைவிக்கு அனுப்பினார். மிச்சப் பணத்திலிருந்து நூறாயிரம் டாலரை வக்கீலிடம் கொடுத்தார். தன்னம்பிக்கையை இழக்காமல் வழக்குத் தொடர்ந்தார்.
அரசுத் தரப்பிலிருந்து சாட்சி மேல் சாட்சியாகக் கொண்டு வந்தார்கள். மைகெல் வீட்டு இணைய இணைப்பிலிருந்து மற்ற அண்மை வீட்டு இணைப்புகளை விட நாற்பது மடங்கு அதிகமாகத் தரவுப்பறிமாற்றம், தொடர்ச்சியாகப் பல நாட்கள் நிகழ்ந்ததற்கான ஒரு வருடத் தொலைபேசி விவரங்களை ஆதாரமாகக் காட்டியதும், வழக்கு ஏறக்குறைய முடிந்து விட்டது. மைகெலுக்கு ஐந்தாண்டுக் கடுங்காவலும் பெரும் அபராதமும் தண்டனையாக விதிக்கப் பட்டது.
சிறையிலடைபட்ட மைகெல் விடவில்லை. தீர்ப்பை எதிர்த்து முறையிடலாமென்ற வக்கீலிடம் எப்படியாவது பணம் புரட்டித் தருவதாகச் சொல்லி அப்பீல் செய்யச் சொன்னார். வீட்டை விற்றார். தன்னுடைய ரோலக்ஸ் கடிகாரங்களிலிருந்து சட்டி பானை வரை எல்லாவற்றையும் விற்றார்.
ஐந்து வருடங்களுக்கான க்ரெடிட் கார்ட் விவரங்கள், மற்ற செலவு விவரங்கள், தொலைபேசி நிறுவனத்திலிருந்து அவர் வீட்டு இணைய இணைப்பு உபயோக விவரங்கள், இன்னும் பல விவரங்கள் தேவையென்றும் அவற்றைப் பெற மைகெலின் அனுமதி வேண்டும் என்றும், அவ்வப்போது வக்கீல் வருவாரே தவிர மைகெல் நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லை. அப்பீல் செய்து மூன்று மாதங்களுக்குப் பிறகு தொடங்க வேண்டிய வழக்கு, இப்பொழுது ஏழு மாதங்களுக்குப் பிறகு தொடருமென்று அறிவிக்கப்பட்டது. அடுத்த நான்கு மாதங்களுக்கு வக்கீலிடமிருந்து தகவலே இல்லை.
அப்பீல் வழக்கு தொடங்கிய முதல் நாளிரவு மைகெல் இருந்த சிறைக்கு வந்தார் வக்கீல். மறுநாள் அவருக்கு நிச்சயம் விடுதலை கிடைக்கும் என்றார். விவரம் எதுவும் சொல்லவில்லை.
மறுநாள் நீதிமன்றத்தில் மைகெலின் ஐந்து வருடத் தொலைபேசி மற்றும் இணைய உபயோக விவரங்களையும் மற்ற க்ரெடிட் கார்ட் விவரங்களையும் சுட்டிக் காட்டினார் வக்கீல். "அண்மை வீட்டுக்காரர்களை விட அதிகத் தரவுப்பறிமாற்றம் செய்ததாகச் சொல்லப்படும் நாட்களில், பத்து நாட்கள் மைகெலும் அவர் குடும்பமும் வீட்டிலோ ஊரிலோ இல்லை. அதற்கு ஆதாரமாக இந்தக் க்ரெடிட் கார்ட் விவரங்களைப் பாருங்கள்" என்று நாள் பட்டியலிட்டு விவரங்களை எடுத்துக் காட்டினார். அவர் எடுத்துக் காட்டிய நாட்களிலும் நேரங்களிலும் மைகெலும் அவர் குடும்பமும் வெளியே சாப்பிடவோ, சினிமா போகவோ, டிஸ்னிலேன்ட், கொலராடோ என்று சுற்றுலா செல்லவோ உபயோகித்த க்ரெடிட் கார்ட் விவரங்களைக் காட்டினார். ஒரு முறை மைகெல் தொழில் தொடர்பாக இங்கிலாந்து சென்றிருந்ததையும் சுட்டிக் காட்டினார். அதே நேரங்களில் மைகெல் வீட்டு இணைய இணைப்பில் அசாதாரண தரவுப்பறிமாற்றம் நடந்ததையும் சுட்டிக்காட்டி, "ஊரிலோ வீட்டிலோ இல்லாதவர் எப்படி இந்த இணைப்பை உபயோகித்திருக்க முடியும்? இப்படிப்பட்ட விவரங்களின் பின்னணியிலும், மைகெல் கணினியின் அருகே இருந்திருக்கவே முடியாத நிலைமையின் அடிப்படையிலும், அவரை விடுதலை செய்ய வேண்டும்" என்று வாதாடினார்.
"அப்படியென்றால் அவருடைய கணினியைப் பயன்படுத்தியது யார்?" என்றார் அரசுத் தரப்பு வக்கீல். "அதானே?" என்றார் FBIக் காரர். "அதானே, நானும் கேட்கிறேன்?" என்றார் உள்ளூர்க் காவலர்.
"அதைக் கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் வேலை. நிரபராதிக்குத் தண்டனை வழங்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன்" என்றபடி வழக்கை ரத்து செய்து மைகெலை விடுதலை செய்தார் நீதிபதி.
மைகெலுக்கு பெரும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைத்தாலும், பழைய வேலையும் உறவுகளும் திரும்பக் கிடைக்கவில்லை. அரசை எதிர்த்து வழக்கு போட்டு பணம் பெற வேண்டும் என்றார். வக்கீலோ "அது சுலபத்தில் நடக்காத காரியம். விடுதலை கிடைத்த வரைக்கும் லாபம் என்று ஊர் போய்ச் சேர். புது வாழ்வு தொடங்கு" என்று மிச்சப்பணத்தை மைகெலிடம் கொடுத்து விட்டு விலகினார்.
மைகெல் நிரபராதியாக வெளியே வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. சென்றவார விடுமுறை நாட்களில் அவருடன் ஒரு மாலைப் பொழுதைக் கழித்தேன். நூறு பவுண்டுகளாவது எடை குறைந்திருப்பார் போல் பட்டது. முகமெங்கும் தேமல். கண்களை அடிக்கடிச் சுருக்கிக் கொண்டு பேசினார். மனைவி மக்கள் திரும்பி வந்துவிட்டாலும் உறவு முறையில் விரிசல் இருப்பதைப் பற்றிப் பேசினார். வாடகை வீட்டில் இருப்பதாகச் சொன்னார். குற்ற நிழலில் இருக்கும் அவருக்கு இப்போதைக்கு வேலை கிடைப்பது அரிதென்பதால் வீட்டு நிலமை மோசமாகியிருப்பதைப் பற்றிப் பேசினார். விடுதலைக்குப் பின்னரும் FBIகாரர்களுடன் ஒத்துழைப்பது பற்றிப் பேசினார். ஸ்ட்ரெஸ் பற்றிப் புலம்பினார். ஹேமாவின் பதிவைப் பற்றிச் சொன்னேன். கணினிப் பக்கமே இனித் தலைகாட்டப் போவதில்லை என்றார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். நிச்சயம் அரசாங்கத்துக்கு எதிராக மானநஷ்ட வழக்கு போடப்போவதாகச் சொன்னார். அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு இரவு பனிரெண்டு மணிக்கு மேல் கிளம்பினேன்.
மைகெல் சொன்ன விவரங்களிலிருந்து:
• இணையத்தில் இன்றைக்கு நிறைய தானியங்கி மென்கள் (bots) கிடைக்கின்றன. சரியான பாதுகாப்பில்லாமல் இணையத்தில் கலந்திருக்கும் கணினிகளை இந்தத் தானியங்கி மென்கள் அடையாளம் கண்டு, அவற்றை ஆபாசப் படங்களின் சேமிப்புக் கிடங்குகளாக உபயோக்கின்றன.
• நம்மில் பெரும்பாலானவர்கள், கணினியில் என்ன இருக்கிறது என்று சோதனை செய்வதில்லை. முன்னூறு கிகாபைட் இருக்கிறது என்ற நினைப்பில் சுத்தம் செய்வதும் இல்லை. அதனால் இந்தத் தானியங்கிகள் இருபது முப்பது கிகாபைட் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இணைய இணைப்பு கிடைக்கும் போதெல்லாம் "இங்கிருக்கிறேன்" என்று அடையாளம் காட்டிச் செயல்படுவதை நாம் கவனிக்கத் தவறுகிறோம்.
• இப்படி நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கணினிகள் இணையத்தில் கலந்திருக்கும் போது, கணினிக்கு ஐந்து பத்து கிகாபைட் என்ற கணக்கில் பிரித்துச் சேமிக்கப்பட்ட ஆபாசப் படங்களை வினியோகம் செய்வதில் எந்தவிதச் சிக்கலும் இல்லை.
• அகப்பட்டுக் கொண்டால், கணினியின் சொந்தக்காரர்கள் தான் சிக்குவார்களே தவிர, இந்தப் படங்களைப் பரப்பும் அசல் குற்றவாளிகளுக்கு எந்தக் கெடுதலும் நேருவதில்லை.
அப்படிப் பார்த்தால் kggம் மீனாட்சியும் முருங்கையும் நீங்களும் நானும் அகப்பட்டுக் கொள்ள வாய்ப்பிருக்கிறதே? அய்யய்யோ! என்ன செய்வது?
சில அடிப்படைச் சுகாதாரங்களையும் பாதுகாப்பு விதிவகைகளையும் கடைபிடிக்கலாம்.
0. நிச்சயமாக கடவுச்சொல் உபயோகிக்க வேண்டும். பாஸ்வேர்ட் இல்லாமல் கணியை உபயோகிக்கவே கூடாது. கடவுச்சொல்லும் சுலபமாகத் திருட முடியாததாக இருக்க வேண்டும்.
1. வீட்டில் இருப்பவர்கள் பொதுவான கணியை உபயோகித்தால், தனித்தனி கடவுச்சொல் உபயோகியுங்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பகுதி (folder or some partition) ஒதுக்குங்கள்
2. வாரம் ஒரு முறை (முடியாவிட்டால் மாதம் ஒரு முறையாவது) கணினியில் இருப்பதைக் கவனியுங்கள். மேலோட்டமாகப் பார்த்தால் கூடப் போதும். disc properties சோதனை செய்து மிகுந்திருக்கும் வெற்றிடங்களை ஒப்பிடுங்கள். திடீரென்று வெற்றிடம் வெகுவாகக் குறைந்திருந்தாலோ அதிகரித்திருந்தாலோ கவனியுங்கள்.
3. இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிப்பதை முடிந்தவரைத் தவிருங்கள். பைர்பாக்ஸ் அல்லது க்ரோம் உலாவிகளை உபயோகியுங்கள்.
4. இணைய இணைப்புக்கென்றுத் தனியாக வைரஸ் தடுப்புகளை உபயோகியுங்கள்
5. இணையப் போக்குவரத்தை விவரிக்கும் மென்பொருள் ஒன்றை உபயோகித்து, உங்கள் கணினியின் இணையப் போக்குவரத்தைக் கண்காணியுங்கள்.
6. தேவையில்லாத பொழுது, இணைய இணைப்பை நிறுத்தி விடுங்கள்
7. எந்தவிதக் கோப்பிணைப்பையும் (file attachment) முற்றும் நம்பினாலொழியத் திறக்காதீர்கள். நண்பர் பாட்டு அனுப்பினால் கூட, 'ஆகா, கேட்டேனே, நன்றாக இருக்கிறது' என்று பொய் சொல்லி பதில் போடுங்கள். சகோதரி புகைப்படம் அனுப்பினால் கூட"அடடா, என்ன அழகு" என்று கூசாமல் பொய் சொல்லுங்கள். தொடவே தொடாதீர்கள். டிலீட். டஸ்ட்பின்!
8. USB விசைகள் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். வின்டோஸ் இன்றைக்கு USB குச்சிகள் வழியாக வரும் வைரஸ்களைத் தடுக்க எந்தப் பாதுக்காப்பும் அளிப்பதில்லை.
9. பிள்ளைகளின் கணினி உபயோகத்திற்கு வரைமுறையும் விதிகளும் கடைபிடியுங்கள்
10. இணையதள அடையாளச்சீட்டுகளை (cookies) முடிந்தவரை ஏற்காதீர்கள்
11. தரவிறக்கங்களைக் கண்காணியுங்கள்; சோதனையிடுங்கள்
12. தானியங்கித் தளமாற்றங்களை அனுமதிக்காதீர்கள் (automatic reloading, routing or opening of additional popups or sites)
13. வீட்டுக் கணினியிலும் வைரஸ் தடுப்பு மென்பொருட்களை உபயோகியுங்கள். இணையத்தில் இலவசமாக நிறைய கிடைத்தாலும் நோர்டன் போன்ற மென்பொருட்களை நிறுவுங்கள். கூகுள் இலவசமாக சாதா நோர்டன் வழங்குகிறது. நெய் மசாலா ஸ்பெசல் நோர்டன் கொஞ்சம் செலவுதான் என்றாலும் முடிந்தவரை நிறுவி உபயோகியுங்கள்
14. திடீரென்று கணினி வேகம் குறைந்தது போலவோ, அல்லது ஏதாவது தேடுவது போலவோ காரணமில்லாமல கரகர என்றால் கொஞ்சம் கவனியுங்கள்
15. பேஸ்புக், லிங்க்டின், மைஸ்பேஸ் உபயோகிக்கும் பொழுது கவனமாக இருங்கள். குறிப்பாக, யூட்யூபில் நூதன் நடித்த படத்தைத் தேடும் போது 'மலையாள மங்கை' என்று ஏதாவது தோன்றினால் விலகுங்கள். நூதன் மலையாளப் படத்தில் நடிக்கவில்லை.
நன்றி : http://moonramsuzhi.blogspot.com/2009/12/blog-post.html
கணினி பயன்படுத்துபவர்களுக்கு அற்புதமான கட்டுரை. அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டும். இங்கு வழங்கப்பட்டுள்ள கணினி பாதுகாப்புக் குறிப்புகள் அருமை.
ஆனால் இந்தக் கட்டுரையின் மூலம் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாரோ கஷ்டப்பட்டு எழுதிய கட்டுரையை படுகை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளது சரியானதல்ல.
http://moonramsuzhi.blogspot.com/2009/12/blog-post.html இங்கு இந்தக் கட்டுரை 2009 லேயே வெளியாகியுள்ளது.
ஆனால் இந்தக் கட்டுரையின் மூலம் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாரோ கஷ்டப்பட்டு எழுதிய கட்டுரையை படுகை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளது சரியானதல்ல.
http://moonramsuzhi.blogspot.com/2009/12/blog-post.html இங்கு இந்தக் கட்டுரை 2009 லேயே வெளியாகியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நினைத்தாலே பயமாயிறுகிறது
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
சிவா wrote:
ஆனால் இந்தக் கட்டுரையின் மூலம் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாரோ கஷ்டப்பட்டு எழுதிய கட்டுரையை படுகை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளது சரியானதல்ல.
http://moonramsuzhi.blogspot.com/2009/12/blog-post.html இங்கு இந்தக் கட்டுரை 2009 லேயே வெளியாகியுள்ளது.
ஓ ! அப்படியா அண்ணா !
எனக்கு இதை பற்றி தெரியாது
நான் படுகை தளத்தில் தான் இந்த கட்டுரையை கண்டேன் எனவே நன்றி என்று சொல்லி அந்த தளத்தின் பெயரை குறிப்பிட்டேன்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
கேசவன் wrote: நினைத்தாலே பயமாயிறுகிறது
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அனைவரும் அவசியம் படிக்கவேன்டிய ஒன்று
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப அதிர்ச்சியான ஆனால் அவசியமான தகவல்கள் நிறைந்த கட்டுரை நன்றி ஆத்மா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|