புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் வேண்டுமா? Poll_c10பணம் வேண்டுமா? Poll_m10பணம் வேண்டுமா? Poll_c10 
21 Posts - 70%
heezulia
பணம் வேண்டுமா? Poll_c10பணம் வேண்டுமா? Poll_m10பணம் வேண்டுமா? Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
பணம் வேண்டுமா? Poll_c10பணம் வேண்டுமா? Poll_m10பணம் வேண்டுமா? Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
பணம் வேண்டுமா? Poll_c10பணம் வேண்டுமா? Poll_m10பணம் வேண்டுமா? Poll_c10 
1 Post - 3%
viyasan
பணம் வேண்டுமா? Poll_c10பணம் வேண்டுமா? Poll_m10பணம் வேண்டுமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் வேண்டுமா? Poll_c10பணம் வேண்டுமா? Poll_m10பணம் வேண்டுமா? Poll_c10 
213 Posts - 42%
heezulia
பணம் வேண்டுமா? Poll_c10பணம் வேண்டுமா? Poll_m10பணம் வேண்டுமா? Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
பணம் வேண்டுமா? Poll_c10பணம் வேண்டுமா? Poll_m10பணம் வேண்டுமா? Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பணம் வேண்டுமா? Poll_c10பணம் வேண்டுமா? Poll_m10பணம் வேண்டுமா? Poll_c10 
21 Posts - 4%
prajai
பணம் வேண்டுமா? Poll_c10பணம் வேண்டுமா? Poll_m10பணம் வேண்டுமா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பணம் வேண்டுமா? Poll_c10பணம் வேண்டுமா? Poll_m10பணம் வேண்டுமா? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பணம் வேண்டுமா? Poll_c10பணம் வேண்டுமா? Poll_m10பணம் வேண்டுமா? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பணம் வேண்டுமா? Poll_c10பணம் வேண்டுமா? Poll_m10பணம் வேண்டுமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பணம் வேண்டுமா? Poll_c10பணம் வேண்டுமா? Poll_m10பணம் வேண்டுமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பணம் வேண்டுமா? Poll_c10பணம் வேண்டுமா? Poll_m10பணம் வேண்டுமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் வேண்டுமா?


   
   
dhanabalan
dhanabalan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 04/11/2011

Postdhanabalan Fri Nov 04, 2011 7:04 pm

தலைப்பை பார்த்து, பல கற்பனைகளோடு எதிர்பார்க்கும் நண்பர்களே...! இது கதை... போன பதிவில் பணம்.பணம்..பணம்...என்ற தலைப்பில் பாட்டுக்களை கேட்டோம்... இப்போது பணத்தைப் பற்றி ஒரு சின்ன கதை!



ஒரு நாள் விவசாயி ஒருவன் தன் ஊரின் பக்கத்தில் உள்ள காட்டின் வழியாகப் போய் கொண்டிருந்தான். அங்கே மிகவும் பெரிய மரம் ஒன்று இருந்தது. அவன் மரத்தின் நிழலை அடைந்ததும், "பணம் வேண்டுமா...பணம்...?" என்று ஒரு குரல் கேட்டது.

விவசாயி சுற்றும் முற்றும் பார்த்தான். மேலும் கீழும் பார்த்தான். அவன் கண்ணுக்கு ஒருவரும் தென்படவில்லை. ஆயினும் மீண்டும் குரல் ஒலித்தது. "பணம் வேண்டுமா...பணம்...?" என்று கேட்டது. அது மாயக்குரல். உருவமற்ற ஒருவனுடைய குரல் அசரீரி.

ஏழை விவசாயி வியப்பு மிகுந்து விழித்தான். மிரள மிரளப் பார்த்தான். ஒருவரும் இல்லை என்றாலும் குரலோசை உண்மையாகவே இருந்தது.

"பணம், ஏழு பெட்டி நிறைய என்னிடம் இருக்கிறது. உனக்கு வேண்டுமா? உடனே சொல்," என்று கொஞ்சம் அதிகாரமாகவே கேட்டது குரல்.

பணம் வேண்டாமென்று சொல்ல மனம் வருமா? அதுவும் ஏழு பெட்டி பணம்!

"வேண்டும்!" என்று மறுகுரல் கொடுத்தான் விவசாயி. உடனே அசரீரி சிரித்தது.

"அப்படியென்றால் வந்த வழியே திரும்பிப் போ. உன் வீடு போய் சேர். ஏழு பெட்டிகளையும் நான் வைத்தாயிற்று," என்று கூறியது.

விவசாயி திரும்பினான். வீடு நோக்கி ஓடினான். நிற்காமல், குடல் தெறிக்க ஓட்டம் பிடித்தான். அங்கே கண்ட காட்சி அவனை மெய்சிலிர்க்க வைத்தது. மாயக்குரல் பொய் சொல்லவில்லை என்பதை உணர்ந்தான்.

அவனுடைய வீட்டுக் கூடத்தில் ஏழு பெட்டிகள் ஒன்றையடுத்து ஒன்று வரிசையாக இருந்தன. கண்களைக் கவரும் ஒளி வீசின.

விவசாயி முகத்திலும் புன்முறுவல் படர்ந்தது. மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. அவன் மெதுவாக அடியெடுத்து வைத்தான். பெட்டிகளை நெருங்கி அவற்றை திறந்து திறந்து பார்த்தான். ஆனால், ஏழாவது பெட்டியைப் பார்த்ததும் அவன் மனம் திடுக்கிட்டது. ஏனென்றால் அதில் பாதியளவு தான் பணம் இருந்தது.

"ஆறு பெட்டியும், அரைப்பெட்டி பணமும் ... இது என்ன கணக்கு?" என்று நினைத்தான் விவசாயி. அந்த அரைப்பெட்டி நிறைந்தால் தானே, ஏழு பெட்டி பணத்துக்கும் அவன் உரியவன் ஆவான்? ஆகவே, அவன் ஆறு பெட்டிகளை மறந்தான். அரைப்பெட்டியையே நினைக்கத் தொடங்கினான். அதை நிரப்புவதே தன் முதல் வேலையாகக் கருதினான்.

அடுத்த விநாடி, அவன் தன் நகைப் பெட்டியைத் திறந்தான். அதிலிருந்த ஆபரணங்களை எல்லாம் எடுத்தான். தன் மனைவியையும் அழைத்து, அவள் அணிந்திருந்த கம்மல், வளையல், அட்டிகை ஆகியவற்றையும் கழற்றிக் கொடுக்கும்படி ஆணையிட்டான்.

விவசாயி அவற்றை உருக்கினான். பணமாக மாற்றி அந்த பெட்டியில் போட்டான். பெட்டி நிறையவில்லை.

விவசாயி சிந்தித்தான். வீட்டிலிருந்த நெல் முழுவதையும் விற்றான். பாத்திரங்களை விற்றான். பண்டங்களை விற்றான். தொழுவத்தில் கட்டியிருந்த பசுவும் கன்றும் அவன் கண்களில் பட்டன. உடனே அவற்றை அவிழ்த்துக் கொடு போய் சந்தையில் விற்றான். எல்லாவற்றையும் பணமாக மாற்றி பெட்டியில் போட்டான். பெட்டி நிறையவில்லை.

விவசாயிக்கு ஆத்திரம் வந்தது. அவனுக்கு வேலை மீது நாட்டம் செல்லவில்லை. உண்ணவும் தயங்கினான். அவன் உண்ண நினைத்தாலும், ஏமாற்றமே அடைந்திருப்பான். சமையல் செய்ய ஒரு பிடி அரிசியும் இருக்கவில்லை. பாவம் அவன் மனைவியும் பட்டினி கிடந்தாள்.

திடீரென்று, அவனுக்கு மற்றோர் எண்ணம் தோன்றியது. தான் வேலை செய்த பண்ணையாரிடம் ஒடினான். கை கட்டி நின்றான். கூலி போதவில்லை என்று முறையிட்டான்.

பண்ணையார் மிகவும் நல்லவர். குறை கேட்டதும் மனம் இறங்கி அவனுக்கு இரு மடங்கு கூலி அளந்தார். ஆயினும் விவசாயியின் வீட்டில் பட்டினி தாண்டவம் ஆடிற்று. அதிகமாகக் கிடைத்த தானியத்தையும் விற்று பணமாக மாற்றி பெட்டியில் போட்டான். பெட்டி நிறையவில்லை.

விவசாயியும் அவன் மனைவியும் எலும்பும் தோலுமாக இளைத்துப் போயினர். உடுத்திக் கொள்ளக் கந்தல் துணியும் இல்லாமல் திண்டாடினர். என்றாலும் விவசாயி தன் ஆசையைக் கை விடவில்லை. பிச்சை எடுக்கவும் துணிந்தான். ஊரார் சிரித்தனர். மனைவி புலம்பி அழுதாள்.

பிச்சையெடுத்த பணத்தையும் சிறுகச் சிறுகச் சேமித்து, அந்த அரைப்பெட்டியில் போட்டான். பெட்டி நிறையவில்லை.

விவசாயி நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போனான். காலம் நகர்ந்தது. வாரங்கள் மாதங்கள் ஆயின.

ஒரு நாள் பண்ணையார் அவனை அழைத்தார். அவனுடைய துயரத்துக்கு காரணம் கேட்டார். "ஒரு மடங்கு ஊதியம் பெற்ற போது நீ மகிழ்ச்சியாக இருந்தாய். இப்போது இரு மடங்கு ஊதியம் அடைகிறாய். ஆனால், ஏன் இளைத்துத் துரும்பாகி விட்டாய்?" என்றார்.

தலை குனிந்து நின்றான் விவசாயி. மீண்டும் பண்ணையார், "நீ அந்த மரத்தின் அசரீரியின் ஆசை வார்த்தைக்கு அடிமைப்பட்டாயா? அதன் சொல்லைக் கேட்டு ஏழு பெட்டி பணத்தையும் வாங்கிக் கொண்டாயா?" என்று வினவினார். தன்னுடைய ரகசியம் எப்படி தெரிந்தது என்று தலையை சொறிந்த விவசாயியைப் பார்த்து, பண்ணையார், " உன்னிடம் கேட்டதை போல என்னிடமும் அந்த மரம் கேட்டது. ஆனால் நான், 'பணமும் வேண்டாம்... சங்கடமும் வேண்டாம்.' என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டேன்." என்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறினார்.

பண்ணையார் மற்றொரு விபரத்தையும் எடுத்துக் கூறினார். "அந்த பணம் மாயமானது. ஏன்னென்றால் அந்த பணம் இலவசமாக வந்த பணம். அதை செலவிட ஒருவராலும் இயலாது. மேலும் மேலும் சேர்க்கத் தூண்டுமே தவிர, நல்ல வழியில் ஓர் எள்ளத்தனையும் செலவிட அது இடம் கொடுக்காது."

விவசாயி கையைப் பிசைந்தான். தன் அறியாமையை நினைத்து வருந்தினான். உடனே பண்ணியார் அவனை நோக்கி," ஓடு, ஓடு," என அவசரப்படுத்தினார்.

எங்கே ஓடுவான் அவன்?

மாயக்குரல் ஒலித்த மரத்திற்கு சென்று பண்ணையார் சொல்லிக் கொடுத்தபடியே, "எனக்கு ஏழு பெட்டி பணம் வேண்டாம்" என்று கூவினான். அசரீரியும் "சரி" என்றது.

விவசாயி வீடு திரும்பினான். அவன் மனதில் இருந்த சுமை எங்கேயோ பறந்து போயிற்று. கூடத்தில் இருந்த ஏழு பெட்டிகளும் மாயமாய் மறைந்தன. அவற்றைப் பின்பற்றி அங்கே குடி கொண்டிருந்த ஆசையும் துன்பமும் ஒழிந்தன.

உண்மையாக உழைக்க ஆரம்பித்தான் விவசாயி. இழந்து போன எல்லா செல்வங்களும் அவனை வந்தடைந்தது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக