புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
48 Posts - 60%
heezulia
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
3 Posts - 4%
Guna.D
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
43 Posts - 60%
heezulia
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
1 Post - 1%
Guna.D
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெய்ப்பட வேண்டும்.


   
   
பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011
http://www.rajamal.blogspot.com

Postபி.அமல்ராஜ் Sun Oct 30, 2011 11:18 pm

இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகையான ஜீவநதியின் நான்காம் ஆண்டு சிறப்பு கவியரங்கத்தில் மெய்ப்பட வேண்டும் என்கின்ற தலைப்பில் நான் வாசித்த எனது கவிதை. இச்சந்தர்ப்பத்தை வழங்கிய ஜீவநதியின் ஆசிரியர்களுக்கு மிக்க நன்றிகள்.

என்ன சொல்ல?
மெய்பட வேண்டும்..
எம்
இறந்துபோன கனவுகளின் ஒட்டறைகளாவது
இன்னும் உயிர்வாழ்வது மிக்க மகிழ்ச்சி.

நாங்கள் இங்கு - எங்கள்
கனவுகளுக்காய் ஆர்ப்பாட்டம் நடத்த வரவில்லை.
எம் கனவுகள்
ஆங்காங்கே எறிந்துபோன
உயிரறுந்த ஆசை அணுக்களை
அள்ளிப்போக வந்திருக்கிறோம்.

அன்று
தலைகள் அடைக்கப்பட்டன - பின்னர்
சிலைகள் உடைக்கப்பட்டன,
இறுதியில்
முலைகள் கூட சிதைக்கப்பட்டன.
அவர்கள் கனவு என்னவோ
அது அப்படியே மெய்க்கிறது..
நமது கனவுகளை மட்டும்
இன்னும் ஈக்கள்தான் மொய்க்கிறது..

காற்றை தந்து
உயிரை எடுத்தான் கடவுள்,
கனவை தந்து
காவியத்தை கெடுத்தான் தமிழன்.
தடவிப்போகும் காற்றுக்கெல்லாம்
கனவு முளைக்க - நம்
நனவாய் போன கனவு மட்டும் - இன்னும்
கம்பிவேலிக்குள் கழுத்தை நீட்டியபடி..

நாம் கண்ட கனவெல்லாம்
தொடக்கத்தில் அரசு
கடைசியில் அரிசி.

என்னவோ ஏதோ
எட்டி நிறுத்தியும்
முட்டி வருத்தியும்
தட்டி நிமிரும் - நம்
சுகந்திர கனவு மட்டும்
இன்னும் - எங்கள்
குருதி கலந்து
நாடிகளில் அலைந்து
மயிரிளைகளில் நிலைத்து
உயிர் அணுக்களில்
ஆவேசமாய் அமர்ந்திருக்கிறது.

கிலுகிலுப்பைகளின் கனவுகளை கூட
சலசலப்பின்றி மதித்தவர்கள்
மாண்டுவந்த குலத்தின் கனவை
மண்டியிட்டும் மிதித்தார்கள்
நம் வாளேந்திய மகாத்மாக்கள்.

அவர்கள் கனவு என்னவோ
அது அப்படியே மெய்க்கிறது..
நமது கனவுகளை மட்டும்
இன்னும் ஈக்கள் தான் மொய்க்கிறது..

அவர்களுக்கு - நம்
தொங்கிய நாக்குகள்
வசதியாய் போனது
நொடியில் அறுத்தெறிய,
மிஞ்சிய கைகளும்
எஞ்சிய கால்களும்
இலகுவாய் போனது
வினாடியில் தறித்தெறிய,
மயங்கி கிடந்த குற்றுயிரும்
மயக்கம் கெடுத்த மானமும்
அலாதியாய் போனது கற்பழிக்க,
செத்து மடிந்த தந்தையும்
சாகத்துடித்த தம்பியும்
சாபமாய் வழிவிட்டது - எம்மை
சாதகமாய் கொன்று குவிக்க.
இத்தனைக்குள்ளும்
பைகளில் இருந்த
கனவு சுகந்திரம்
பத்திரமாய் காப்பாற்றப்பட்டது.

அவர்கள் கனவு என்னவோ
அது அப்படியே மெய்ப்பட்டது..
நமது கனவுகள் மட்டும்
ஆங்காங்கே பிய்க்கப்பட்டது..

நாங்கள் -
எட்டி நடந்த
படிகளில் இட்டனர் வெடி,
முட்டி கடக்க
முடிகையில் விட்டனர் அடி,
முடிந்தும் தடுக்க
முந்தானையில் முடிந்தனர் சதி,
புரண்டும் மிரண்டும் - நாம்
படுக்கையில் வைத்தனர் தீ.
இவற்றிட்குள்ளும் - நம்
சுகந்திர கனவு
கலைக்கப்படாமலே
காப்பாற்றப்பட்டது - எங்கள்
கிழிந்த பைகளுக்குள்.

எதுவரினும்
இதுவேனும் மெய்ப்படட்டும்.

கனவுகள் மெயக்கவேண்டி
நாங்கள்
கனகபுரம் தொடங்கி
கன்னியாகுமரி வரை
காவடி எடுத்தோம்.
நீங்கள்
பந்தல் போட்டு
பந்தி பரிமாறினீர்கள்.

முடக்கிய மூச்சு
அடங்கிய வீச்சில்
அத்லாந்திக் வரை அலறினோம்
நீங்கள்
சிம்பொனி கேட்டு
சிலிர்த்து தூங்கினீர்கள்.

இப்படி - எங்கள்
கனவுகள் மெயக்கவேண்டி
கண்களையே கடிந்துகொண்டோம்
நாம்.

இனியேனும்
கனவுகள் வேண்டாம்
எங்கள்
காலங்களாவது மெய்ப்படட்டும்.

கொடுக்கும்படி கேட்டோம் - அவர்கள்
கைகளில் இருந்தது எம் நேரம்.
கும்பிட்டும் கேட்டோம் - அப்போ எங்கள்
கைகளில் உயிரின் பாரம்.
இறுதியில் -
விட்டுவிடும்படி கெஞ்சினோம் - அவர்கள்
மனங்களில் இருக்கவேயில்லை ஈரம்.

அன்றெல்லாம்
காலமாகிப்போன கனவுகளுக்காய் - இன்று
கண்களை கசக்கி கனாக்காணுகின்றோம் - அவை
மெய்ப்படவேண்டும் என்பதற்காய்.

இறுதியாக,
கனவுகள் கனக்க
ஆசைகள் அவசரப்பட
நம் - ஆறடி உருவங்கள் மெல்ல
ஆரவாரமின்றி அடங்கிப்போகிறது
நம் - காலம் கடந்த
கனவுகள் மெல்ல
மெய்ப்படும் என்கிற நம்பிக்கையில்..



பி.அமல்ராஜ் - இலங்கை.
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 1:38 am

ஆங்காங்கே எறிந்துபோன
உயிரறுந்த ஆசை அணுக்களை
அள்ளிப்போக வந்திருக்கிறோம்.

நம்
நனவாய் போன கனவு மட்டும் - இன்னும்
கம்பிவேலிக்குள் கழுத்தை நீட்டியபடி..

கனவுகள் கனக்க
ஆசைகள் அவசரப்பட
நம் - ஆறடி உருவங்கள் மெல்ல
ஆரவாரமின்றி அடங்கிப்போகிறது
நம் - காலம் கடந்த
கனவுகள் மெல்ல
மெய்ப்படும் என்கிற நம்பிக்கையில்..


உங்கள் வரிகளின் தாகம் என்றாவது தீரும் என்ற நம்பிக்கையில் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மெய்ப்பட வேண்டும். Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக