புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_m10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10 
7 Posts - 64%
heezulia
கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_m10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_m10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_m10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_m10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_m10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_m10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_m10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10 
8 Posts - 2%
prajai
கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_m10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_m10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_m10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10 
4 Posts - 1%
mruthun
கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_m10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_m10கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 28, 2011 5:58 pm

கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – பத்து Kpk02

சிறிது நேரம் அமைதி; நான் ஏதும் பேசவில்லை. கொள்ளிவாய்ப் பேய் என்னை உற்றுப் பார்த்தவண்ணம் உட்கார்ந்திருந்தது.

“தன் இனத்தின் குறைபாடுகளைச் சொல்லவேண்டுமாயின் சற்று மென்மையான சொற்களால் சொல்லவேண்டும்; கடுஞ்சொற்களைத் தவிர்க்கவேண்டும். எழுதுபவனின் பண்பாட்டுக் குறைவைத்தான் அந்தக் கடுஞ்சொற்கள் எடுத்துக்காட்டும். நீ சொன்ன இந்தப் பாட்டு என் பண்பாட்டுக் குறைவுக்கு ஓர் எடுத்துக்காட்டு! கனி இருக்கக் காய் எதற்கு? இனிய சொல் இருக்க இன்னாத சொல் எதற்கு? பேராசானின் கட்டளையை மீறினால் இழுக்குத்தான் விளையும்!” என்று சொல்லி அமைதியைக் கலைத்தேன்.

“திருவள்ளுவரின் கட்டளையைச் சொல்கிறீர்! சரி, `மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு’ என்றும் அவர் சொல்லி இருக்கிறாரே? `இடித்தல்’ என்றால் என்ன? கடிந்துரைத்தல்தானே? கடிந்துரைக்கும்போது சில கடுஞ்சொற்களும் கலந்து வருவது இயல்புதான். என்ன சொல்கிறீர்?” என்று கேட்டது கொள்ளிவாய்ப் பேய்.

“தனிமனிதர்கள் சிலரோ சிறு குழுவினரோ சில வேளைகளில் சமுதாயத்துக்குக் கேடு விளைவிப்பது உண்டு. அவ்வாறு நிகழும்போது சமுதாய நலன்கருதி அவர்களைக் கண்டித்துத்தான் ஆகவேண்டும். அவர்களும் சமுதாயத்தின் உறுப்பினர்கள் ஆதலால் அவர்களை உரிமையோடு கடிந்துரைக்கவேண்டும். தனிமனிதர்களைவிட இனமே முதன்மையானது. எனவே அவர்களைக் கண்டிக்கும்போது சில கடுஞ்சொற்களைப் பயன்படுத்துதல் ஏற்புடையது என்று கொள்ளலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக இனத்தையே திட்டித் தீர்ப்பது கூடாது.”

“புலம்பாதீர்! உம்முடைய கழிவிரக்கம் எனக்கு நகைப்பைத்தான் உண்டாக்குகிறது. சரி, இந்தப் பாட்டில் கடுஞ்சொற்கள் என்று நீர் சொல்லும் சொற்கள் ஒருபுறம் இருக்கட்டும். உம் இனத்தவரிடையே உள்ள சில குறைகளைச் சுட்டிக்காட்டி உள்ளீரே, அவை மாறிவிட்டனவா?”

“மாற்றங்கள் மெதுவாகத்தான் ஏற்படும்; இனவளர்ச்சி என்பது படிப்படியாகத்தான் விளையும்.” “மெதுவாகவா? தமிழர்கள் இந்த நாட்டுக்கு வந்து ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் ஆகின்றன. பிற இனங்களுக்கு நிகராகத் தமிழினம் வளர்ச்சி பெறுவதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வேண்டும் என்கிறீர்?”

“இதோ பார், உனக்கென்று சில கருத்துகளை உருவாக்கி வைத்திருக்கிறாய். அந்தக் கருத்துகள் உனக்குள் அப்படியே உறைந்துபோய் இருக்கின்றன. அதனால் அவை உனக்குச் சரியாகவே தெரிகின்றன. உன் சிந்தனை இப்படி இருப்பதனால் உன் கருத்துகளிலிருந்து சற்று விலகிச் சொல்லப்படும் கருத்துகளைக் கேட்டுச் சிந்திக்கவும் நீ மறுக்கிறாய்! உன்னோடு வழக்காட என்னால் இயலாது!”

மீண்டும் அமைதி; கொள்ளிவாய்ப் பேய் இருமத் தொடங்கியது.

“நீ இங்கு வந்து எண்பது ஆண்டுகள் ஆயின என்று சொன்னாய். மீண்டும் தாயகத்துக்குத் திரும்பும் எண்ணம் இல்லையா?” என்று கேட்டேன்.

“திரும்பித்தான் ஆகவேண்டும். உமக்கும் எனக்கும் வேறுபாடு உண்டு. நீங்கள் அனைவரும் இந்த நாட்டுக் குடிமக்கள்; இது உங்கள் நாடு; நீங்கள் என்றென்றும் இங்கு நிலையாக வாழ்வீர்கள். எனக்குக் குடியுரிமை இல்லை. பேய்களுக்கு எந்த நாடும் குடியுரிமை வழங்குவது இல்லை. திரும்பிச் சென்றுதான் ஆகவேண்டும். ஆனால் இப்போது அங்குச் செல்லும் எண்ணம் இல்லை!”

“ஏன்?”

“இப்போதும் என் தமிழ்நாட்டில் அயலினத்தவரின் ஆட்சிதான் நடைபெறுகிறது!”

கொள்ளிவாய்ப் பேய் என்ன சொல்ல வருகிறது என்பது எனக்கு விளங்கிவிட்டது. ஏதும் பேசாமல் இருந்தேன்.

“கேளும்! `எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே’ என்றார் பாவேந்தர். பாவேந்தருக்குப் புகழ்மாலை சூடுபவர்கள் பலருக்கு அவரின் இந்தக் கொள்கை மறந்துபோயிற்று. தமிழகத்தில் பிறந்திருந்தாலும் வேற்றினத்தவர்கள் வேற்றினத்தவர்கள்தாம்! பகலவன் மேற்கே எழுந்தாலும் எழக்கூடும்; அயலவர்கள் ஒருகாலும் தமிழர்களாக ஆகவே முடியாது. இலங்கையில் பிறந்த அயலினத்தவர் ஒருவரின் ஆட்சிதான் இப்போது தமிழகத்தில் நடைபெறுகிறது! தமிழ்நாட்டு மக்கள் நாருக்காக மலரை இழந்துவிட்டார்கள்; வெறும் நடிப்புக்காக மண்ணை இழந்துவிட்டார்கள்!”

கொள்ளிவாய்ப் பேயிடமிருந்து நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது.

"மீண்டும் பாவேந்தரின் பாட்டுக்குச் செல்லவேண்டி உள்ளது. `தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சாய் வருதல் வேண்டும்’ என்னும் பாட்டு நினைவிருக்கிறதா? எப்போது தமிழர் ஒருவர் முதலமைச்சர் ஆகிறாரோ அப்போதே நான் தமிழ்நாட்டுக்குத் திரும்பிச் சென்று விடுவேன். அவர் தமிழாய்ந்த தமிழராக இருக்கவேண்டும் என்பதுகூட கட்டாயம் அன்று; தமிழராக இருந்தால் போதும்!”

“சரி, உன் விருப்பம் விரைவிலேயே நிறைவேறட்டும். நேரம் ஆகிவிட்டது; விடுதிக்குச் செல்லவேண்டும்; வரட்டுமா?” என்று சொன்னபடி எழுந்துகொண்டேன்; கொள்ளிவாய்ப் பேயும் உடன் எழுந்தது.

“சென்று வாரும்; அதற்கு முன் ஒன்று; உம்மிடம் என்ன என்னவோ பேசிவிட்டேன். என்பால் சினமோ வெறுப்போ இல்லையே?” என்று தணிந்த குரலில் கேட்டது.

“அப்படி ஏதும் இல்லை. உன்னைச் சந்தித்ததில் உண்மையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி; உன் பேச்சு என்னை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியது. உனக்கு என் நன்றியறிதலைச் சொல்லிக்கொள்கிறேன். வருகிறேன்!” என்றபடி அங்கிருந்து நடக்கத் தொடங்கினேன்.

கிளைப்பாதைக்கு வந்ததும் திரும்பிப் பார்த்தேன். கடற்கரையில் நின்றபடி என்னையே பார்த்துக்கொண்டு இருந்தது அந்தக் கொள்ளிவாய்ப் பேய். `சட்’டென்று உள்ளத்தை ஒரு துயரம் அழுத்தியது; நெருங்கிய நண்பனைப் பிரிவதுபோல் உணர்ந்தேன். அதை நோக்கிக் கைகூப்பினேன். பேயும் கைகூப்பியது.

விடுதியை நோக்கி விரைந்து நடந்தேன்.

எதிரே கைவிளக்குகளின் ஒளி தெரிந்தது; விடுதி ஊழியர்கள் இருவருடன் உசேன் வந்துகொண்டிருந்தார்.

“என்ன தம்பி, இவ்வளவு நேரம் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்?நான் மிகவும் கலங்கிப்போனேன்!” என்றபடி என் கைகளைப் பற்றிக்கொண்டார் உசேன்.

“நீங்கள் கலங்குவதற்கு ஒன்றுமில்லை உசேன்! இரவில் கடற்கரை மிக அழகாக இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை!” என்றேன்.

அறைக்குச் சென்று குளித்துவிட்டுப் படுத்தேன். உறக்கம் வரவில்லை. நேரம் ஓடிக்கொண்டு இருந்தது.

திடீரென்று யாரோ மெல்ல இருமும் ஓசை கேட்டது; திடுக்கிட்டு இருளில் உற்றுப் பார்க்க முயன்றேன். யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

“இன்னுமா நீர் உறங்கவில்லை? விடிந்ததும் உமக்கு வேலை இருக்கிறது என்று சொன்னீரே?படுக்கையில் புரண்டது போதும்; உறங்கும்!” என்றது ஒரு குரல்.
(நிறைவு)


(குறிப்பு: நீங்கள் படித்தது கதை அன்று; கட்டுரை அன்று; கற்பனையும் அன்று. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சி; அவ்வளவுதான்.)

- அ. நம்பி நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக