புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘‘கடாபி கொல்லப்பட்டது எப்போது, பின்னணி என்ன?’’
Page 1 of 1 •
- Cynthia Francisபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010
லிபிய அதிபர் கேர்ணல் முவமர் கடாபி கொல்லப்படுவிட்டார். இதுவரைக்கும், சர்வதேச நாணய நிதியத்திடம்(IMF) கடன்பெறாத நாடாகத் திகழ்ந்த லிபிய அதிபர், மேற்கின் சூழ்ச்சியால், அவர் பிறந்த நகரத்தின் தெருக்களில், மனிதகுலம் வெட்கித் தலைகுனியும் வகையில் கொன்று போடப்பட்டுள்ளார்.
ஆபிரிக்காவின் சிங்கமாகவும், கொடூரமான இத்தாலிய காலனி ஆதிக்கத்தை எதிர்த்து யுத்தம் செய்த ஒமார் முக்தாரின் மறு அவதாரமாகவும் தன்னைத் தானே வர்ணித்துக்கொண்ட கடாபியின் முடிவு, ஏகாதிபத்தியங்களை இன்னொரு முறை உலக மக்களுக்கு நிர்வாணமாகக் காட்டியுள்ளது.
யார் கடாபி?
1969-ம் ஆண்டு மேற்கு நாடுகளின் கைப்பொம்மையாக செயல்பட்டு வந்த லிபிய அரசை, சதிப் புரட்சியின் ஊடாக வீழ்த்தி ஆட்சிக்கு வந்தவர் கடாபி. அவ்வேளையில், வட ஆப்ரிக்காவில் மிகப்பெரும் அமெரிக்க இராணுவ தளம் அமைந்திருந்த நாடு லிபியா.
லிபியாவை 1971 வரைக்கும் இராணுவத் தளமாக உபயோகிப்பதற்கான ஒப்பந்தம், மேற்கு சார்பு அரசிற்கும் அமெரிக்காவிற்கும் கைச்சாத்தானது.
ஏவுகணைகளை பரீட்சிப்பதற்கும், எரி குண்டுகளைப் பிரயோகிப்பதற்கும், அழிவு ஆயுதங்களை வட ஆப்பிரிக்க நாடுகளில் வினியோகிப்பதற்குமே இப்பயிற்சித் தளம் அமெரிக்க அரசால் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், 1970-ல் கடாபி அரசால், அமெரிக்கா அங்கிருந்து வெளியேற்றப்பட்டது.
1960-ம் ஆண்டு லிபியாவில் பெட்ரோலிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், மேற்கு நாடுகள் லிபியாவைக் கழுகுகள்போல வட்டமிட ஆரம்பித்தன. மேற்கில் குடிகொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், லிபியா அரசோடும் கடாபியோடும் வியாபார ஒப்பந்தங்கள் செய்வதற்காக, அத்தனை கதவுகளையும் தட்டியும் உதைத்தும் பார்த்தன. எதுவும் திறக்கப்படவில்லை.
அமரிக்க ஐரோப்பியக் கொள்ளளைக்காரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அரசியல் நகர்வும், கடாபி ஆட்சிக்கு வந்ததும் நடந்தேறியது. லிபியாவின் அனைத்து வங்கிகள், தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. தனக்கு நெருக்கமானவர்கள் உட்பட, அனைவருக்கும் கடாபி அரசு தனி உரிமையை மறுத்தது.
இது, மேற்கின் எண்ணைப் பசியை தற்காலிகமாகவேனும் மட்டுப்படுத்தியது. மேற்கு வல்லரசுகள், லிபியாவைக் கொள்ளையிடுவதற்கான வாய்ப்புக்கள் அனைத்தையும் இழந்து போயின.
அப்போதுதான் தலைப்பில் சொன்னது நிகழ்ந்தது. தேசிய மயமாக்கலுக்கான செய்தி வெளியான இரவு விடிவதற்குள், கடாபிக்கு மேற்குலகம் மரணதண்டனை விதித்துவிட்டது. கடாபி, அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் மன்னிக்க முடியாத நிரந்தர எதிரியாக்கப்பட்டார்.
சௌதி அரரேபியா, பஹ்ரெயின் போன்ற நாடுகளின் எண்ணைப் பிரபுகள், தமது மில்லியன்களை அமெரிக்க, ஐரோப்பிய வங்களில் பாதுகாப்ப்பாகப் பதுக்கி வைத்துக்கொண்டு, அமரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் எப்போதெல்லம் இஸ்லாமியப் அடிப்படைவாதம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர்.
ஆனால் கடாபி, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை லிபியாவிலோ, ஆப்பிரிக்க நாடுகளிலோ விரும்பியதே இல்லை. மேற்குலகின் கொள்ளைக்கான நிகழ்ச்சி நிரலுக்கு, இதுவே மிகப்பெரும் தடையாக அமைந்தது.
கடாபி எழுதிய “பச்சை நூல்,” இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும், மேற்கின் கடன் பெறும் ஜனநாயகத்தையும் நிராகரித்தது.அண்மையில் அமெரிக்க நிறுவனமொன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், 80 சதவீத அரேபியர்கள் அமரிக்காவினதும் ஐரோப்பாவினதும் தலையீட்டை வெறுப்பதாக கணிப்பிடப்பட்டது.
எண்ணை கண்டுபிடிக்கப்பட்ட மறு கணத்திலிருந்து, கடித்துக் குதறப்படும் அரேபிய மக்களின் இந்த நீண்டகால வெறுப்புணர்வும், கடாபியின் ஏகாதிபத்திய எதிர்ப்பும் இணைந்து, அவரை ஆப்பிரிக்காவிலும்ம் அரபுநாடுகளிலும் கதாநாயகனாக்கியிருந்தது.
லிபியா:
லிபியா என்ற சிறிய நாடு, தனக்குள்ளேயே தனது தேவைக்கும் அதிகமான வளங்களைக் கொண்டிருந்தது. மேற்கின் கொள்ளைக்கு உட்படுத்தப்படாததால், அவை லிபியாவினதும் ஆப்பிரிக்காவினதும் எல்லைக்குள்ளேயே நிலைகொண்டிருந்தது.
லிபிய மக்கள் பல நீண்ட ஆண்டுகளாக வறுமைக்கோட்டை அறிந்திருக்கவில்லை. உயர் கல்வி கற்கும் ஒவ்வொருவருக்கும் இலவசக் கல்வியோடு அரச அடிப்படை ஊதியமும் வழங்கப்பட்டது. ஊதியம் குறைந்தோருக்கு அரச மானியம் வழங்கப்பட்டது. லிபியாவில் அரசியல் அல்லது அரசியலோடு தொடர்புடையதாகக் காணப்பவை தவிர, இதர அனைத்தையும் சுதந்திரமாக மக்கள் மேற்கொள்ளக்கூடிய நிலையே காணப்பட்டது.
இதனால், லிபிய மக்கள் மத்தியிலும் கடாபி கதாநாயகனாகத்தான் நீண்ட காலம் வாழ்ந்தார்.
இவற்றின் காரணமாக சிறிய இராணுவத்தை வைத்துக்கொண்டே, மேற்குலகின் உதவியின்றி, மக்கள் எதிர்ப்பின்றி, ஆட்சி நடத்தக்கூடிய வலிமையை கடாபி பெற்றிருந்தார். கடாபிக்கு எதிரானவர்கள், மேற்கின் ஒடுக்குமுறைக்குத் துணைபோகின்றவர்களாகவே காணப்பட்டனர். இன்றுவரைக்கும், கடாபி அதிகாரத்திற்குக் கிடைக்கப்பெற்றிருந்த மக்கள் ஆதரவின் காரணமாகவே, சிறிய இராணுவத்தைக் கொண்டிருந்த லிபியாவை வீழ்த்தவும், கடாபியைக் கொலை செய்யவும், மேற்குலகிற்கு மிக நீண்ட கால எல்லை தேவைப்பட்டது.
கடாபி, ஏகதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார் என்பதைவிட, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது, அரபுலகிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும், உள் நாட்டிலும், அவரின் அதிகாரத்தை நிலைநாட்ட உதவியது என்பதே உண்மை. இதுவே அவரது அரசியலுக்கு வசதியானதாக அமைந்தது.
கடாபியைக் கொலைசெய்வதற்கான திட்டம், சில வருடங்களின் முன்னமே ஆரம்பமாகிவிட்டது என்பதால், ‘அரபுலகின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட எழுச்சிகளை, தமது அதிகாரத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொண்ட நேட்டோ அதிகாரமும், அதன் அடியாள் அமைப்பான ‘ஐக்கிய நாடுகள் நிறுவனமும்’ லிபியாவைக் கொள்ளையிடுவதற்காக மிக நேர்த்தியான திட்டங்களை வகுத்தன.’
மேற்குலக ஊடகங்களில், ‘‘நாகரீகத்தைக் கற்றுக்கொள்ள வாய்பளித்தும், கடாபி அரசு பயன்படுத்திகொள்வதாயில்லை’’ என்பன போன்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கடாபி அழிவின் ஆரம்பம்:
இவை அனைத்திற்கும் மேலாக, கடாபியின் அழிவு 2000-மாவது ஆண்டுகளின் நடுப்பகுதியிலிருந்தே ஆரம்பமாகிவிட்டது எனலாம். ‘நாட்டில், உள் கட்டுமானங்களை மேப்படுத்துவது’ என்ற தலையங்கத்தில், கடாபி, ‘உலகமயமாதல் மற்றும் நவ தாராளவாத நிக்ழ்ச்சி நிரலுக்குள்’ லிபியாவை உட்படுத்திக் கொள்கிறார்.
இதன் மறுபக்கமானது, ஏனைய அனைத்து நாடுகளிலும் நடந்ததுபோன்றே, லிபியாவையும் மேற்குலக நாடுகளின் புதிய சுரண்டல் அமைப்பு முறைக்கு உட்படுத்தியது. சுரண்டல், சிறுகச் சிறுக ஆரம்பிக்கிறது. புற்றுநோய் போன்று நாட்டை அரித்துச் செல்கின்றது.
உலகமயமாதல் செயற்படுத்தப்படும்போதெல்லாம், ‘இரண்டு பிரதான சமூகக் கூறுகள்’ உருவாவது வழமை.
முதலாவதாக, ‘வறுமையும் வேலையின்மையும் அதிகரிக்கும்’, இரண்டாவதாக ‘மிகச்சிறிய, விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்களைக்கொண்ட மேல்தட்டு வர்க்கம், அபரிமிதமாக பணத்தையும் மூலதனத்தையும் பெருக்கிக் கொள்ளும்’.
ஆக, லிபியாவில் வறுமை தலைகாட்டத் தொடங்கியது. மக்கள் விரக்திக்கும் வெறுப்பிற்கும் உள்ளானார்கள். அவர்களின் மிகச்சிறிய பகுதி, இஸ்லாமிய அடிப்படைவாதத்தோடு தம்மை அடையாளப்படுத்திக்கொண்டது. இதில், வேடிக்கை என்னவென்றால், ‘‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’’ என்று வாய் கிழியக் கூக்குரல் போடும் அமெரிக்காவும் ஐரோப்பாவும், ‘சவுதி அரேபிய அடிமைகளின்’ உதவியோடு, லிபியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கடாபிக்கு எதிராகத் தூண்டின. கடாபிக்கு எதிரான மக்கள் உணர்வு, கடந்த முப்பது வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்தது.பின்னர், தொழில் துறையில் இரண்டு பிரதான மாற்றங்கள் நிகழ்ந்தன. எண்ணைச் சுத்திகரிப்பு நிறுவனங்கள், வங்கிகள், உப தொழில்கள் போன்றவையெல்லாம் தனியார் மயமாகின. அப்படியே, பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கும் உள்ளாகின. ஏகாதிபத்தியங்கள், அமைதியாக வாழ்ந்த லிபிய மக்களின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தன. 2004&ம் ஆண்டின் பின்னர், ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை, சுற்றுலாத் துறை போன்றவை, முழுவதுமாக ஏகாதிபத்திய நிறுவனங்களின் கைகளுக்கு மாறின.
இவற்றின் உள்ளூர் பிரதினிதிகளாக, இனக் குழுக்களின் தலைவர்கள், கடாபி இராணுவத்தின் உயர் அதிகாரிகள், கடாபி குடும்பத்தினர் ஆகியோர் உருவாகினர்.
உலகமயமாதல் ஊடுருவிய அனைத்து இடங்களிலும், மற்றொரு நச்சு விதையை ஏகபோகங்கள் விதைப்பது வழக்கம். அரசு சார்பற்ற நிறுவன்ங்கள்(ழிநிளி) அல்லது தன்னார்வ நிறுவனங்களே அவை.
தன்னார்வ நிறுவனங்களில் பிரதானமாக, அமரிக்கன் எய்ட்ஸ், கிரிஸ்டியன் எய்ட்ஸ், உபந்து, போர் வேர்க்ஸ் போன்ற தன்னார்வர் நிறுவனங்களே, 2004-ம் ஆண்டளவில், முதன் முதமில் லிபியாவிற்குள் உதவி என்ற பெயரில் உள் நுழைந்தன. சிறிது சிறிதாக தம்மை நிலைப்படுத்திகொண்ட இத்தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைத் தொடர்ந்து, வெவ்வேறு நோக்கங்களுக்காக அவை லிபியா முழுவதும் விதைக்கப்பட்டன.
இவை, இரண்டு பிரதான நடவடிக்கைகளை மேற்கொண்டன. உளவறிதல், மிகப் பிரதானமான ஒன்று. இரண்டாவதாக, நுகர்வுக் கலாச்சாரத்தில் ஈடுபாடுகொண்ட, படித்த மேல் மத்தியதரவர்க்கத்தை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சார்பாளர்களாக மாற்றியது. கருத்தை உருவாக்கும் வலிமைகொண்ட இவர்களுக்கு, அதீத பணம் ஊதியமாக வழங்கப்பட்டது.
அதே சமயம், உலகமயமாதல் உருவாக்கிய மேல்தட்டு வர்க்கத்தின் பெரும்பகுதியை, கடாபியின் குடும்பத்தினரும் அவரது நண்பர்களும், இராணுவ உயர் அதிகாரிகளும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர். கடாபியின் முதலீடுகள் நாடு கடந்தது. தவிர, இதன் இரண்டாவது தளத்தில் உருவான பணக்கார மத்தியதர வர்க்கமான கலாச்சார உலக மயமாதலிற்கு உட்பட்ட, மேற்குலகை ஆதரிக்கும் நுகர்வு வர்க்கம் ஒன்றும் உருவானது.
இந்த வர்க்கத்தினரையும், வெறுப்பிற்கு உள்ளான பகுதியினரையும் மேற்கின் உளவு அமைப்புக்கள் பயன்படுத்திகொள்ள ஆரம்பித்தன. எண்ணை மோகம்கொண்ட ஏகாதிபத்திய அரசுகள், கடாபியின் மரணப் பொறியை, அவரின் கோட்டைக்குள்ளேயே உருவாக்க ஆரம்பித்தன. இதே வேளை, மேற்கின் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்ட கடாபி, மேற்கின் அரசுகளோடு உறவை வளர்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தின் சூத்திரதாரிகளில் ஒருவர் எனக் கருதப்படும் முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர், கடாபியின் கன்னத்தில் முத்தமிட்ட செய்திப்படங்கள் உலகப் பத்திரிகைகளை ஆக்கிரமித்தன. இறுதியில், ஒபாமாவரைக்கும் கடாபியை கட்டித் தழுவியிருக்கின்றனர். இது மேற்குலகின் இன்னொரு பிரச்சாரமே.
இது நாள்வரை, மேற்கின் கொள்ளைக்கு எதிராகப் போராடும் ஒரு வீரனாகக் கருதப்பட்ட கடாபியின் ஒமர் முக்தார் பிம்பம், இப்போது சுக்கு நூறாக நொருங்கிப் போகிறது. இதன் இன்னொரு வடிவமாக, ஆப்கானிஸ்தான் கைதிகளின் சித்திரவதைக் கூடங்களில் ஒன்றாக லிபியாவும் பயன்படுத்தப்பட்டது. ஆக, உலகமயமாதல் கடாபியை தலைகீழாக மாற்றிப்போட்டது.
முன்பிருந்த கடாபி, 2005-ம் ஆண்டுக்குப் பிறகு, மேற்கில் தங்கியிருக்கும் பலமிழந்த கோழை மனிதனாக மதிப்பிழந்து போனார். அப்போதே கடாபியின் முடிவு நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.
2005-ன் பின்னான கடாபி, அரசியல் ரீதியாகக் கொலை செய்யப்பட்ட ஒரு நடை பிணமாகவே வலம் வந்தார். உலகமயமாதலால் அரசியல் கொலை செய்யப்பட்ட நாற்பண்டு சர்வாதிகாரியின் உடல், இப்போது அழிக்கப்பட்டுவிட்டது.
இன்னுமிருக்கும் பின்னணிகள் என்ன?
-மிகுதி விரைவில்..
ஆபிரிக்காவின் சிங்கமாகவும், கொடூரமான இத்தாலிய காலனி ஆதிக்கத்தை எதிர்த்து யுத்தம் செய்த ஒமார் முக்தாரின் மறு அவதாரமாகவும் தன்னைத் தானே வர்ணித்துக்கொண்ட கடாபியின் முடிவு, ஏகாதிபத்தியங்களை இன்னொரு முறை உலக மக்களுக்கு நிர்வாணமாகக் காட்டியுள்ளது.
யார் கடாபி?
1969-ம் ஆண்டு மேற்கு நாடுகளின் கைப்பொம்மையாக செயல்பட்டு வந்த லிபிய அரசை, சதிப் புரட்சியின் ஊடாக வீழ்த்தி ஆட்சிக்கு வந்தவர் கடாபி. அவ்வேளையில், வட ஆப்ரிக்காவில் மிகப்பெரும் அமெரிக்க இராணுவ தளம் அமைந்திருந்த நாடு லிபியா.
லிபியாவை 1971 வரைக்கும் இராணுவத் தளமாக உபயோகிப்பதற்கான ஒப்பந்தம், மேற்கு சார்பு அரசிற்கும் அமெரிக்காவிற்கும் கைச்சாத்தானது.
ஏவுகணைகளை பரீட்சிப்பதற்கும், எரி குண்டுகளைப் பிரயோகிப்பதற்கும், அழிவு ஆயுதங்களை வட ஆப்பிரிக்க நாடுகளில் வினியோகிப்பதற்குமே இப்பயிற்சித் தளம் அமெரிக்க அரசால் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், 1970-ல் கடாபி அரசால், அமெரிக்கா அங்கிருந்து வெளியேற்றப்பட்டது.
1960-ம் ஆண்டு லிபியாவில் பெட்ரோலிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், மேற்கு நாடுகள் லிபியாவைக் கழுகுகள்போல வட்டமிட ஆரம்பித்தன. மேற்கில் குடிகொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், லிபியா அரசோடும் கடாபியோடும் வியாபார ஒப்பந்தங்கள் செய்வதற்காக, அத்தனை கதவுகளையும் தட்டியும் உதைத்தும் பார்த்தன. எதுவும் திறக்கப்படவில்லை.
அமரிக்க ஐரோப்பியக் கொள்ளளைக்காரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அரசியல் நகர்வும், கடாபி ஆட்சிக்கு வந்ததும் நடந்தேறியது. லிபியாவின் அனைத்து வங்கிகள், தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. தனக்கு நெருக்கமானவர்கள் உட்பட, அனைவருக்கும் கடாபி அரசு தனி உரிமையை மறுத்தது.
இது, மேற்கின் எண்ணைப் பசியை தற்காலிகமாகவேனும் மட்டுப்படுத்தியது. மேற்கு வல்லரசுகள், லிபியாவைக் கொள்ளையிடுவதற்கான வாய்ப்புக்கள் அனைத்தையும் இழந்து போயின.
அப்போதுதான் தலைப்பில் சொன்னது நிகழ்ந்தது. தேசிய மயமாக்கலுக்கான செய்தி வெளியான இரவு விடிவதற்குள், கடாபிக்கு மேற்குலகம் மரணதண்டனை விதித்துவிட்டது. கடாபி, அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் மன்னிக்க முடியாத நிரந்தர எதிரியாக்கப்பட்டார்.
சௌதி அரரேபியா, பஹ்ரெயின் போன்ற நாடுகளின் எண்ணைப் பிரபுகள், தமது மில்லியன்களை அமெரிக்க, ஐரோப்பிய வங்களில் பாதுகாப்ப்பாகப் பதுக்கி வைத்துக்கொண்டு, அமரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் எப்போதெல்லம் இஸ்லாமியப் அடிப்படைவாதம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர்.
ஆனால் கடாபி, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை லிபியாவிலோ, ஆப்பிரிக்க நாடுகளிலோ விரும்பியதே இல்லை. மேற்குலகின் கொள்ளைக்கான நிகழ்ச்சி நிரலுக்கு, இதுவே மிகப்பெரும் தடையாக அமைந்தது.
கடாபி எழுதிய “பச்சை நூல்,” இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும், மேற்கின் கடன் பெறும் ஜனநாயகத்தையும் நிராகரித்தது.அண்மையில் அமெரிக்க நிறுவனமொன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், 80 சதவீத அரேபியர்கள் அமரிக்காவினதும் ஐரோப்பாவினதும் தலையீட்டை வெறுப்பதாக கணிப்பிடப்பட்டது.
எண்ணை கண்டுபிடிக்கப்பட்ட மறு கணத்திலிருந்து, கடித்துக் குதறப்படும் அரேபிய மக்களின் இந்த நீண்டகால வெறுப்புணர்வும், கடாபியின் ஏகாதிபத்திய எதிர்ப்பும் இணைந்து, அவரை ஆப்பிரிக்காவிலும்ம் அரபுநாடுகளிலும் கதாநாயகனாக்கியிருந்தது.
லிபியா:
லிபியா என்ற சிறிய நாடு, தனக்குள்ளேயே தனது தேவைக்கும் அதிகமான வளங்களைக் கொண்டிருந்தது. மேற்கின் கொள்ளைக்கு உட்படுத்தப்படாததால், அவை லிபியாவினதும் ஆப்பிரிக்காவினதும் எல்லைக்குள்ளேயே நிலைகொண்டிருந்தது.
லிபிய மக்கள் பல நீண்ட ஆண்டுகளாக வறுமைக்கோட்டை அறிந்திருக்கவில்லை. உயர் கல்வி கற்கும் ஒவ்வொருவருக்கும் இலவசக் கல்வியோடு அரச அடிப்படை ஊதியமும் வழங்கப்பட்டது. ஊதியம் குறைந்தோருக்கு அரச மானியம் வழங்கப்பட்டது. லிபியாவில் அரசியல் அல்லது அரசியலோடு தொடர்புடையதாகக் காணப்பவை தவிர, இதர அனைத்தையும் சுதந்திரமாக மக்கள் மேற்கொள்ளக்கூடிய நிலையே காணப்பட்டது.
இதனால், லிபிய மக்கள் மத்தியிலும் கடாபி கதாநாயகனாகத்தான் நீண்ட காலம் வாழ்ந்தார்.
இவற்றின் காரணமாக சிறிய இராணுவத்தை வைத்துக்கொண்டே, மேற்குலகின் உதவியின்றி, மக்கள் எதிர்ப்பின்றி, ஆட்சி நடத்தக்கூடிய வலிமையை கடாபி பெற்றிருந்தார். கடாபிக்கு எதிரானவர்கள், மேற்கின் ஒடுக்குமுறைக்குத் துணைபோகின்றவர்களாகவே காணப்பட்டனர். இன்றுவரைக்கும், கடாபி அதிகாரத்திற்குக் கிடைக்கப்பெற்றிருந்த மக்கள் ஆதரவின் காரணமாகவே, சிறிய இராணுவத்தைக் கொண்டிருந்த லிபியாவை வீழ்த்தவும், கடாபியைக் கொலை செய்யவும், மேற்குலகிற்கு மிக நீண்ட கால எல்லை தேவைப்பட்டது.
கடாபி, ஏகதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார் என்பதைவிட, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது, அரபுலகிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும், உள் நாட்டிலும், அவரின் அதிகாரத்தை நிலைநாட்ட உதவியது என்பதே உண்மை. இதுவே அவரது அரசியலுக்கு வசதியானதாக அமைந்தது.
கடாபியைக் கொலைசெய்வதற்கான திட்டம், சில வருடங்களின் முன்னமே ஆரம்பமாகிவிட்டது என்பதால், ‘அரபுலகின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட எழுச்சிகளை, தமது அதிகாரத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொண்ட நேட்டோ அதிகாரமும், அதன் அடியாள் அமைப்பான ‘ஐக்கிய நாடுகள் நிறுவனமும்’ லிபியாவைக் கொள்ளையிடுவதற்காக மிக நேர்த்தியான திட்டங்களை வகுத்தன.’
மேற்குலக ஊடகங்களில், ‘‘நாகரீகத்தைக் கற்றுக்கொள்ள வாய்பளித்தும், கடாபி அரசு பயன்படுத்திகொள்வதாயில்லை’’ என்பன போன்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கடாபி அழிவின் ஆரம்பம்:
இவை அனைத்திற்கும் மேலாக, கடாபியின் அழிவு 2000-மாவது ஆண்டுகளின் நடுப்பகுதியிலிருந்தே ஆரம்பமாகிவிட்டது எனலாம். ‘நாட்டில், உள் கட்டுமானங்களை மேப்படுத்துவது’ என்ற தலையங்கத்தில், கடாபி, ‘உலகமயமாதல் மற்றும் நவ தாராளவாத நிக்ழ்ச்சி நிரலுக்குள்’ லிபியாவை உட்படுத்திக் கொள்கிறார்.
இதன் மறுபக்கமானது, ஏனைய அனைத்து நாடுகளிலும் நடந்ததுபோன்றே, லிபியாவையும் மேற்குலக நாடுகளின் புதிய சுரண்டல் அமைப்பு முறைக்கு உட்படுத்தியது. சுரண்டல், சிறுகச் சிறுக ஆரம்பிக்கிறது. புற்றுநோய் போன்று நாட்டை அரித்துச் செல்கின்றது.
உலகமயமாதல் செயற்படுத்தப்படும்போதெல்லாம், ‘இரண்டு பிரதான சமூகக் கூறுகள்’ உருவாவது வழமை.
முதலாவதாக, ‘வறுமையும் வேலையின்மையும் அதிகரிக்கும்’, இரண்டாவதாக ‘மிகச்சிறிய, விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்களைக்கொண்ட மேல்தட்டு வர்க்கம், அபரிமிதமாக பணத்தையும் மூலதனத்தையும் பெருக்கிக் கொள்ளும்’.
ஆக, லிபியாவில் வறுமை தலைகாட்டத் தொடங்கியது. மக்கள் விரக்திக்கும் வெறுப்பிற்கும் உள்ளானார்கள். அவர்களின் மிகச்சிறிய பகுதி, இஸ்லாமிய அடிப்படைவாதத்தோடு தம்மை அடையாளப்படுத்திக்கொண்டது. இதில், வேடிக்கை என்னவென்றால், ‘‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’’ என்று வாய் கிழியக் கூக்குரல் போடும் அமெரிக்காவும் ஐரோப்பாவும், ‘சவுதி அரேபிய அடிமைகளின்’ உதவியோடு, லிபியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கடாபிக்கு எதிராகத் தூண்டின. கடாபிக்கு எதிரான மக்கள் உணர்வு, கடந்த முப்பது வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்தது.பின்னர், தொழில் துறையில் இரண்டு பிரதான மாற்றங்கள் நிகழ்ந்தன. எண்ணைச் சுத்திகரிப்பு நிறுவனங்கள், வங்கிகள், உப தொழில்கள் போன்றவையெல்லாம் தனியார் மயமாகின. அப்படியே, பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கும் உள்ளாகின. ஏகாதிபத்தியங்கள், அமைதியாக வாழ்ந்த லிபிய மக்களின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தன. 2004&ம் ஆண்டின் பின்னர், ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை, சுற்றுலாத் துறை போன்றவை, முழுவதுமாக ஏகாதிபத்திய நிறுவனங்களின் கைகளுக்கு மாறின.
இவற்றின் உள்ளூர் பிரதினிதிகளாக, இனக் குழுக்களின் தலைவர்கள், கடாபி இராணுவத்தின் உயர் அதிகாரிகள், கடாபி குடும்பத்தினர் ஆகியோர் உருவாகினர்.
உலகமயமாதல் ஊடுருவிய அனைத்து இடங்களிலும், மற்றொரு நச்சு விதையை ஏகபோகங்கள் விதைப்பது வழக்கம். அரசு சார்பற்ற நிறுவன்ங்கள்(ழிநிளி) அல்லது தன்னார்வ நிறுவனங்களே அவை.
தன்னார்வ நிறுவனங்களில் பிரதானமாக, அமரிக்கன் எய்ட்ஸ், கிரிஸ்டியன் எய்ட்ஸ், உபந்து, போர் வேர்க்ஸ் போன்ற தன்னார்வர் நிறுவனங்களே, 2004-ம் ஆண்டளவில், முதன் முதமில் லிபியாவிற்குள் உதவி என்ற பெயரில் உள் நுழைந்தன. சிறிது சிறிதாக தம்மை நிலைப்படுத்திகொண்ட இத்தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைத் தொடர்ந்து, வெவ்வேறு நோக்கங்களுக்காக அவை லிபியா முழுவதும் விதைக்கப்பட்டன.
இவை, இரண்டு பிரதான நடவடிக்கைகளை மேற்கொண்டன. உளவறிதல், மிகப் பிரதானமான ஒன்று. இரண்டாவதாக, நுகர்வுக் கலாச்சாரத்தில் ஈடுபாடுகொண்ட, படித்த மேல் மத்தியதரவர்க்கத்தை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சார்பாளர்களாக மாற்றியது. கருத்தை உருவாக்கும் வலிமைகொண்ட இவர்களுக்கு, அதீத பணம் ஊதியமாக வழங்கப்பட்டது.
அதே சமயம், உலகமயமாதல் உருவாக்கிய மேல்தட்டு வர்க்கத்தின் பெரும்பகுதியை, கடாபியின் குடும்பத்தினரும் அவரது நண்பர்களும், இராணுவ உயர் அதிகாரிகளும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர். கடாபியின் முதலீடுகள் நாடு கடந்தது. தவிர, இதன் இரண்டாவது தளத்தில் உருவான பணக்கார மத்தியதர வர்க்கமான கலாச்சார உலக மயமாதலிற்கு உட்பட்ட, மேற்குலகை ஆதரிக்கும் நுகர்வு வர்க்கம் ஒன்றும் உருவானது.
இந்த வர்க்கத்தினரையும், வெறுப்பிற்கு உள்ளான பகுதியினரையும் மேற்கின் உளவு அமைப்புக்கள் பயன்படுத்திகொள்ள ஆரம்பித்தன. எண்ணை மோகம்கொண்ட ஏகாதிபத்திய அரசுகள், கடாபியின் மரணப் பொறியை, அவரின் கோட்டைக்குள்ளேயே உருவாக்க ஆரம்பித்தன. இதே வேளை, மேற்கின் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்ட கடாபி, மேற்கின் அரசுகளோடு உறவை வளர்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தின் சூத்திரதாரிகளில் ஒருவர் எனக் கருதப்படும் முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர், கடாபியின் கன்னத்தில் முத்தமிட்ட செய்திப்படங்கள் உலகப் பத்திரிகைகளை ஆக்கிரமித்தன. இறுதியில், ஒபாமாவரைக்கும் கடாபியை கட்டித் தழுவியிருக்கின்றனர். இது மேற்குலகின் இன்னொரு பிரச்சாரமே.
இது நாள்வரை, மேற்கின் கொள்ளைக்கு எதிராகப் போராடும் ஒரு வீரனாகக் கருதப்பட்ட கடாபியின் ஒமர் முக்தார் பிம்பம், இப்போது சுக்கு நூறாக நொருங்கிப் போகிறது. இதன் இன்னொரு வடிவமாக, ஆப்கானிஸ்தான் கைதிகளின் சித்திரவதைக் கூடங்களில் ஒன்றாக லிபியாவும் பயன்படுத்தப்பட்டது. ஆக, உலகமயமாதல் கடாபியை தலைகீழாக மாற்றிப்போட்டது.
முன்பிருந்த கடாபி, 2005-ம் ஆண்டுக்குப் பிறகு, மேற்கில் தங்கியிருக்கும் பலமிழந்த கோழை மனிதனாக மதிப்பிழந்து போனார். அப்போதே கடாபியின் முடிவு நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.
2005-ன் பின்னான கடாபி, அரசியல் ரீதியாகக் கொலை செய்யப்பட்ட ஒரு நடை பிணமாகவே வலம் வந்தார். உலகமயமாதலால் அரசியல் கொலை செய்யப்பட்ட நாற்பண்டு சர்வாதிகாரியின் உடல், இப்போது அழிக்கப்பட்டுவிட்டது.
இன்னுமிருக்கும் பின்னணிகள் என்ன?
-மிகுதி விரைவில்..
லிபிய அதிபர் கேர்ணல் முவமர் கடாபி கொல்லப்படுவிட்டார். இதுவரைக்கும், சர்வதேச நாணய நிதியத்திடம்(IMF) கடன்பெறாத நாடாகத் திகழ்ந்த லிபிய அதிபர், மேற்கின் சூழ்ச்சியால், அவர் பிறந்த நகரத்தின் தெருக்களில், மனிதகுலம் வெட்கித் தலைகுனியும் வகையில் கொன்று போடப்பட்டுள்ளார்.
ஆபிரிக்காவின் சிங்கமாகவும், கொடூரமான இத்தாலிய காலனி ஆதிக்கத்தை எதிர்த்து யுத்தம் செய்த ஒமார் முக்தாரின் மறு அவதாரமாகவும் தன்னைத் தானே வர்ணித்துக்கொண்ட கடாபியின் முடிவு, ஏகாதிபத்தியங்களை இன்னொரு முறை உலக மக்களுக்கு நிர்வாணமாகக் காட்டியுள்ளது.
யார் கடாபி?
1969-ம் ஆண்டு மேற்கு நாடுகளின் கைப்பொம்மையாக செயல்பட்டு வந்த லிபிய அரசை, சதிப் புரட்சியின் ஊடாக வீழ்த்தி ஆட்சிக்கு வந்தவர் கடாபி. அவ்வேளையில், வட ஆப்ரிக்காவில் மிகப்பெரும் அமெரிக்க இராணுவ தளம் அமைந்திருந்த நாடு லிபியா.
லிபியாவை 1971 வரைக்கும் இராணுவத் தளமாக உபயோகிப்பதற்கான ஒப்பந்தம், மேற்கு சார்பு அரசிற்கும் அமெரிக்காவிற்கும் கைச்சாத்தானது.
ஏவுகணைகளை பரீட்சிப்பதற்கும், எரி குண்டுகளைப் பிரயோகிப்பதற்கும், அழிவு ஆயுதங்களை வட ஆப்பிரிக்க நாடுகளில் வினியோகிப்பதற்குமே இப்பயிற்சித் தளம் அமெரிக்க அரசால் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், 1970-ல் கடாபி அரசால், அமெரிக்கா அங்கிருந்து வெளியேற்றப்பட்டது.
1960-ம் ஆண்டு லிபியாவில் பெட்ரோலிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், மேற்கு நாடுகள் லிபியாவைக் கழுகுகள்போல வட்டமிட ஆரம்பித்தன. மேற்கில் குடிகொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், லிபியா அரசோடும் கடாபியோடும் வியாபார ஒப்பந்தங்கள் செய்வதற்காக, அத்தனை கதவுகளையும் தட்டியும் உதைத்தும் பார்த்தன. எதுவும் திறக்கப்படவில்லை.
அமரிக்க ஐரோப்பியக் கொள்ளளைக்காரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அரசியல் நகர்வும், கடாபி ஆட்சிக்கு வந்ததும் நடந்தேறியது. லிபியாவின் அனைத்து வங்கிகள், தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. தனக்கு நெருக்கமானவர்கள் உட்பட, அனைவருக்கும் கடாபி அரசு தனி உரிமையை மறுத்தது.
இது, மேற்கின் எண்ணைப் பசியை தற்காலிகமாகவேனும் மட்டுப்படுத்தியது. மேற்கு வல்லரசுகள், லிபியாவைக் கொள்ளையிடுவதற்கான வாய்ப்புக்கள் அனைத்தையும் இழந்து போயின.
அப்போதுதான் தலைப்பில் சொன்னது நிகழ்ந்தது. தேசிய மயமாக்கலுக்கான செய்தி வெளியான இரவு விடிவதற்குள், கடாபிக்கு மேற்குலகம் மரணதண்டனை விதித்துவிட்டது. கடாபி, அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் மன்னிக்க முடியாத நிரந்தர எதிரியாக்கப்பட்டார்.
சௌதி அரரேபியா, பஹ்ரெயின் போன்ற நாடுகளின் எண்ணைப் பிரபுகள், தமது மில்லியன்களை அமெரிக்க, ஐரோப்பிய வங்களில் பாதுகாப்ப்பாகப் பதுக்கி வைத்துக்கொண்டு, அமரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் எப்போதெல்லம் இஸ்லாமியப் அடிப்படைவாதம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர்.
ஆனால் கடாபி, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை லிபியாவிலோ, ஆப்பிரிக்க நாடுகளிலோ விரும்பியதே இல்லை. மேற்குலகின் கொள்ளைக்கான நிகழ்ச்சி நிரலுக்கு, இதுவே மிகப்பெரும் தடையாக அமைந்தது.
கடாபி எழுதிய “பச்சை நூல்,” இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும், மேற்கின் கடன் பெறும் ஜனநாயகத்தையும் நிராகரித்தது.
அண்மையில் அமெரிக்க நிறுவனமொன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், 80 சதவீத அரேபியர்கள் அமரிக்காவினதும் ஐரோப்பாவினதும் தலையீட்டை வெறுப்பதாக கணிப்பிடப்பட்டது.
எண்ணை கண்டுபிடிக்கப்பட்ட மறு கணத்திலிருந்து, கடித்துக் குதறப்படும் அரேபிய மக்களின் இந்த நீண்டகால வெறுப்புணர்வும், கடாபியின் ஏகாதிபத்திய எதிர்ப்பும் இணைந்து, அவரை ஆப்பிரிக்காவிலும்ம் அரபுநாடுகளிலும் கதாநாயகனாக்கியிருந்தது.
லிபியா:
லிபியா என்ற சிறிய நாடு, தனக்குள்ளேயே தனது தேவைக்கும் அதிகமான வளங்களைக் கொண்டிருந்தது. மேற்கின் கொள்ளைக்கு உட்படுத்தப்படாததால், அவை லிபியாவினதும் ஆப்பிரிக்காவினதும் எல்லைக்குள்ளேயே நிலைகொண்டிருந்தது.
லிபிய மக்கள் பல நீண்ட ஆண்டுகளாக வறுமைக்கோட்டை அறிந்திருக்கவில்லை. உயர் கல்வி கற்கும் ஒவ்வொருவருக்கும் இலவசக் கல்வியோடு அரச அடிப்படை ஊதியமும் வழங்கப்பட்டது. ஊதியம் குறைந்தோருக்கு அரச மானியம் வழங்கப்பட்டது. லிபியாவில் அரசியல் அல்லது அரசியலோடு தொடர்புடையதாகக் காணப்பவை தவிர, இதர அனைத்தையும் சுதந்திரமாக மக்கள் மேற்கொள்ளக்கூடிய நிலையே காணப்பட்டது.
இதனால், லிபிய மக்கள் மத்தியிலும் கடாபி கதாநாயகனாகத்தான் நீண்ட காலம் வாழ்ந்தார்.
இவற்றின் காரணமாக சிறிய இராணுவத்தை வைத்துக்கொண்டே, மேற்குலகின் உதவியின்றி, மக்கள் எதிர்ப்பின்றி, ஆட்சி நடத்தக்கூடிய வலிமையை கடாபி பெற்றிருந்தார். கடாபிக்கு எதிரானவர்கள், மேற்கின் ஒடுக்குமுறைக்குத் துணைபோகின்றவர்களாகவே காணப்பட்டனர். இன்றுவரைக்கும், கடாபி அதிகாரத்திற்குக் கிடைக்கப்பெற்றிருந்த மக்கள் ஆதரவின் காரணமாகவே, சிறிய இராணுவத்தைக் கொண்டிருந்த லிபியாவை வீழ்த்தவும், கடாபியைக் கொலை செய்யவும், மேற்குலகிற்கு மிக நீண்ட கால எல்லை தேவைப்பட்டது.
கடாபி, ஏகதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார் என்பதைவிட, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது, அரபுலகிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும், உள் நாட்டிலும், அவரின் அதிகாரத்தை நிலைநாட்ட உதவியது என்பதே உண்மை. இதுவே அவரது அரசியலுக்கு வசதியானதாக அமைந்தது.
கடாபியைக் கொலைசெய்வதற்கான திட்டம், சில வருடங்களின் முன்னமே ஆரம்பமாகிவிட்டது என்பதால், ‘அரபுலகின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட எழுச்சிகளை, தமது அதிகாரத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொண்ட நேட்டோ அதிகாரமும், அதன் அடியாள் அமைப்பான ‘ஐக்கிய நாடுகள் நிறுவனமும்’ லிபியாவைக் கொள்ளையிடுவதற்காக மிக நேர்த்தியான திட்டங்களை வகுத்தன.’
மேற்குலக ஊடகங்களில், ‘‘நாகரீகத்தைக் கற்றுக்கொள்ள வாய்பளித்தும், கடாபி அரசு பயன்படுத்திகொள்வதாயில்லை’’ என்பன போன்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கடாபி அழிவின் ஆரம்பம்:
இவை அனைத்திற்கும் மேலாக, கடாபியின் அழிவு 2000-மாவது ஆண்டுகளின் நடுப்பகுதியிலிருந்தே ஆரம்பமாகிவிட்டது எனலாம். ‘நாட்டில், உள் கட்டுமானங்களை மேப்படுத்துவது’ என்ற தலையங்கத்தில், கடாபி, ‘உலகமயமாதல் மற்றும் நவ தாராளவாத நிக்ழ்ச்சி நிரலுக்குள்’ லிபியாவை உட்படுத்திக் கொள்கிறார்.
இதன் மறுபக்கமானது, ஏனைய அனைத்து நாடுகளிலும் நடந்ததுபோன்றே, லிபியாவையும் மேற்குலக நாடுகளின் புதிய சுரண்டல் அமைப்பு முறைக்கு உட்படுத்தியது. சுரண்டல், சிறுகச் சிறுக ஆரம்பிக்கிறது. புற்றுநோய் போன்று நாட்டை அரித்துச் செல்கின்றது.
உலகமயமாதல் செயற்படுத்தப்படும்போதெல்லாம், ‘இரண்டு பிரதான சமூகக் கூறுகள்’ உருவாவது வழமை.
முதலாவதாக, ‘வறுமையும் வேலையின்மையும் அதிகரிக்கும்’, இரண்டாவதாக ‘மிகச்சிறிய, விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்களைக்கொண்ட மேல்தட்டு வர்க்கம், அபரிமிதமாக பணத்தையும் மூலதனத்தையும் பெருக்கிக் கொள்ளும்’.
ஆக, லிபியாவில் வறுமை தலைகாட்டத் தொடங்கியது. மக்கள் விரக்திக்கும் வெறுப்பிற்கும் உள்ளானார்கள். அவர்களின் மிகச்சிறிய பகுதி, இஸ்லாமிய அடிப்படைவாதத்தோடு தம்மை அடையாளப்படுத்திக்கொண்டது. இதில், வேடிக்கை என்னவென்றால், ‘‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’’ என்று வாய் கிழியக் கூக்குரல் போடும் அமெரிக்காவும் ஐரோப்பாவும், ‘சவுதி அரேபிய அடிமைகளின்’ உதவியோடு, லிபியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கடாபிக்கு எதிராகத் தூண்டின. கடாபிக்கு எதிரான மக்கள் உணர்வு, கடந்த முப்பது வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்தது.
பின்னர், தொழில் துறையில் இரண்டு பிரதான மாற்றங்கள் நிகழ்ந்தன. எண்ணைச் சுத்திகரிப்பு நிறுவனங்கள், வங்கிகள், உப தொழில்கள் போன்றவையெல்லாம் தனியார் மயமாகின. அப்படியே, பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கும் உள்ளாகின. ஏகாதிபத்தியங்கள், அமைதியாக வாழ்ந்த லிபிய மக்களின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தன. 2004&ம் ஆண்டின் பின்னர், ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை, சுற்றுலாத் துறை போன்றவை, முழுவதுமாக ஏகாதிபத்திய நிறுவனங்களின் கைகளுக்கு மாறின.
இவற்றின் உள்ளூர் பிரதினிதிகளாக, இனக் குழுக்களின் தலைவர்கள், கடாபி இராணுவத்தின் உயர் அதிகாரிகள், கடாபி குடும்பத்தினர் ஆகியோர் உருவாகினர்.
உலகமயமாதல் ஊடுருவிய அனைத்து இடங்களிலும், மற்றொரு நச்சு விதையை ஏகபோகங்கள் விதைப்பது வழக்கம். அரசு சார்பற்ற நிறுவன்ங்கள்(ழிநிளி) அல்லது தன்னார்வ நிறுவனங்களே அவை.
தன்னார்வ நிறுவனங்களில் பிரதானமாக, அமரிக்கன் எய்ட்ஸ், கிரிஸ்டியன் எய்ட்ஸ், உபந்து, போர் வேர்க்ஸ் போன்ற தன்னார்வர் நிறுவனங்களே, 2004-ம் ஆண்டளவில், முதன் முதமில் லிபியாவிற்குள் உதவி என்ற பெயரில் உள் நுழைந்தன. சிறிது சிறிதாக தம்மை நிலைப்படுத்திகொண்ட இத்தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைத் தொடர்ந்து, வெவ்வேறு நோக்கங்களுக்காக அவை லிபியா முழுவதும் விதைக்கப்பட்டன.
இவை, இரண்டு பிரதான நடவடிக்கைகளை மேற்கொண்டன. உளவறிதல், மிகப் பிரதானமான ஒன்று. இரண்டாவதாக, நுகர்வுக் கலாச்சாரத்தில் ஈடுபாடுகொண்ட, படித்த மேல் மத்தியதரவர்க்கத்தை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சார்பாளர்களாக மாற்றியது. கருத்தை உருவாக்கும் வலிமைகொண்ட இவர்களுக்கு, அதீத பணம் ஊதியமாக வழங்கப்பட்டது.
அதே சமயம், உலகமயமாதல் உருவாக்கிய மேல்தட்டு வர்க்கத்தின் பெரும்பகுதியை, கடாபியின் குடும்பத்தினரும் அவரது நண்பர்களும், இராணுவ உயர் அதிகாரிகளும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர். கடாபியின் முதலீடுகள் நாடு கடந்தது. தவிர, இதன் இரண்டாவது தளத்தில் உருவான பணக்கார மத்தியதர வர்க்கமான கலாச்சார உலக மயமாதலிற்கு உட்பட்ட, மேற்குலகை ஆதரிக்கும் நுகர்வு வர்க்கம் ஒன்றும் உருவானது.
இந்த வர்க்கத்தினரையும், வெறுப்பிற்கு உள்ளான பகுதியினரையும் மேற்கின் உளவு அமைப்புக்கள் பயன்படுத்திகொள்ள ஆரம்பித்தன. எண்ணை மோகம்கொண்ட ஏகாதிபத்திய அரசுகள், கடாபியின் மரணப் பொறியை, அவரின் கோட்டைக்குள்ளேயே உருவாக்க ஆரம்பித்தன. இதே வேளை, மேற்கின் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்ட கடாபி, மேற்கின் அரசுகளோடு உறவை வளர்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தின் சூத்திரதாரிகளில் ஒருவர் எனக் கருதப்படும் முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர், கடாபியின் கன்னத்தில் முத்தமிட்ட செய்திப்படங்கள் உலகப் பத்திரிகைகளை ஆக்கிரமித்தன. இறுதியில், ஒபாமாவரைக்கும் கடாபியை கட்டித் தழுவியிருக்கின்றனர். இது மேற்குலகின் இன்னொரு பிரச்சாரமே.
இது நாள்வரை, மேற்கின் கொள்ளைக்கு எதிராகப் போராடும் ஒரு வீரனாகக் கருதப்பட்ட கடாபியின் ஒமர் முக்தார் பிம்பம், இப்போது சுக்கு நூறாக நொருங்கிப் போகிறது. இதன் இன்னொரு வடிவமாக, ஆப்கானிஸ்தான் கைதிகளின் சித்திரவதைக் கூடங்களில் ஒன்றாக லிபியாவும் பயன்படுத்தப்பட்டது. ஆக, உலகமயமாதல் கடாபியை தலைகீழாக மாற்றிப்போட்டது.
முன்பிருந்த கடாபி, 2005-ம் ஆண்டுக்குப் பிறகு, மேற்கில் தங்கியிருக்கும் பலமிழந்த கோழை மனிதனாக மதிப்பிழந்து போனார். அப்போதே கடாபியின் முடிவு நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.
2005-ன் பின்னான கடாபி, அரசியல் ரீதியாகக் கொலை செய்யப்பட்ட ஒரு நடை பிணமாகவே வலம் வந்தார். உலகமயமாதலால் அரசியல் கொலை செய்யப்பட்ட நாற்பண்டு சர்வாதிகாரியின் உடல், இப்போது அழிக்கப்பட்டுவிட்டது.
courtesy: http://inioru.com/?p=23926
image/guardian.co.uk
ஆபிரிக்காவின் சிங்கமாகவும், கொடூரமான இத்தாலிய காலனி ஆதிக்கத்தை எதிர்த்து யுத்தம் செய்த ஒமார் முக்தாரின் மறு அவதாரமாகவும் தன்னைத் தானே வர்ணித்துக்கொண்ட கடாபியின் முடிவு, ஏகாதிபத்தியங்களை இன்னொரு முறை உலக மக்களுக்கு நிர்வாணமாகக் காட்டியுள்ளது.
யார் கடாபி?
1969-ம் ஆண்டு மேற்கு நாடுகளின் கைப்பொம்மையாக செயல்பட்டு வந்த லிபிய அரசை, சதிப் புரட்சியின் ஊடாக வீழ்த்தி ஆட்சிக்கு வந்தவர் கடாபி. அவ்வேளையில், வட ஆப்ரிக்காவில் மிகப்பெரும் அமெரிக்க இராணுவ தளம் அமைந்திருந்த நாடு லிபியா.
லிபியாவை 1971 வரைக்கும் இராணுவத் தளமாக உபயோகிப்பதற்கான ஒப்பந்தம், மேற்கு சார்பு அரசிற்கும் அமெரிக்காவிற்கும் கைச்சாத்தானது.
ஏவுகணைகளை பரீட்சிப்பதற்கும், எரி குண்டுகளைப் பிரயோகிப்பதற்கும், அழிவு ஆயுதங்களை வட ஆப்பிரிக்க நாடுகளில் வினியோகிப்பதற்குமே இப்பயிற்சித் தளம் அமெரிக்க அரசால் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், 1970-ல் கடாபி அரசால், அமெரிக்கா அங்கிருந்து வெளியேற்றப்பட்டது.
1960-ம் ஆண்டு லிபியாவில் பெட்ரோலிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், மேற்கு நாடுகள் லிபியாவைக் கழுகுகள்போல வட்டமிட ஆரம்பித்தன. மேற்கில் குடிகொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், லிபியா அரசோடும் கடாபியோடும் வியாபார ஒப்பந்தங்கள் செய்வதற்காக, அத்தனை கதவுகளையும் தட்டியும் உதைத்தும் பார்த்தன. எதுவும் திறக்கப்படவில்லை.
அமரிக்க ஐரோப்பியக் கொள்ளளைக்காரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அரசியல் நகர்வும், கடாபி ஆட்சிக்கு வந்ததும் நடந்தேறியது. லிபியாவின் அனைத்து வங்கிகள், தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. தனக்கு நெருக்கமானவர்கள் உட்பட, அனைவருக்கும் கடாபி அரசு தனி உரிமையை மறுத்தது.
இது, மேற்கின் எண்ணைப் பசியை தற்காலிகமாகவேனும் மட்டுப்படுத்தியது. மேற்கு வல்லரசுகள், லிபியாவைக் கொள்ளையிடுவதற்கான வாய்ப்புக்கள் அனைத்தையும் இழந்து போயின.
அப்போதுதான் தலைப்பில் சொன்னது நிகழ்ந்தது. தேசிய மயமாக்கலுக்கான செய்தி வெளியான இரவு விடிவதற்குள், கடாபிக்கு மேற்குலகம் மரணதண்டனை விதித்துவிட்டது. கடாபி, அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் மன்னிக்க முடியாத நிரந்தர எதிரியாக்கப்பட்டார்.
சௌதி அரரேபியா, பஹ்ரெயின் போன்ற நாடுகளின் எண்ணைப் பிரபுகள், தமது மில்லியன்களை அமெரிக்க, ஐரோப்பிய வங்களில் பாதுகாப்ப்பாகப் பதுக்கி வைத்துக்கொண்டு, அமரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் எப்போதெல்லம் இஸ்லாமியப் அடிப்படைவாதம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர்.
ஆனால் கடாபி, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை லிபியாவிலோ, ஆப்பிரிக்க நாடுகளிலோ விரும்பியதே இல்லை. மேற்குலகின் கொள்ளைக்கான நிகழ்ச்சி நிரலுக்கு, இதுவே மிகப்பெரும் தடையாக அமைந்தது.
கடாபி எழுதிய “பச்சை நூல்,” இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும், மேற்கின் கடன் பெறும் ஜனநாயகத்தையும் நிராகரித்தது.
அண்மையில் அமெரிக்க நிறுவனமொன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், 80 சதவீத அரேபியர்கள் அமரிக்காவினதும் ஐரோப்பாவினதும் தலையீட்டை வெறுப்பதாக கணிப்பிடப்பட்டது.
எண்ணை கண்டுபிடிக்கப்பட்ட மறு கணத்திலிருந்து, கடித்துக் குதறப்படும் அரேபிய மக்களின் இந்த நீண்டகால வெறுப்புணர்வும், கடாபியின் ஏகாதிபத்திய எதிர்ப்பும் இணைந்து, அவரை ஆப்பிரிக்காவிலும்ம் அரபுநாடுகளிலும் கதாநாயகனாக்கியிருந்தது.
லிபியா:
லிபியா என்ற சிறிய நாடு, தனக்குள்ளேயே தனது தேவைக்கும் அதிகமான வளங்களைக் கொண்டிருந்தது. மேற்கின் கொள்ளைக்கு உட்படுத்தப்படாததால், அவை லிபியாவினதும் ஆப்பிரிக்காவினதும் எல்லைக்குள்ளேயே நிலைகொண்டிருந்தது.
லிபிய மக்கள் பல நீண்ட ஆண்டுகளாக வறுமைக்கோட்டை அறிந்திருக்கவில்லை. உயர் கல்வி கற்கும் ஒவ்வொருவருக்கும் இலவசக் கல்வியோடு அரச அடிப்படை ஊதியமும் வழங்கப்பட்டது. ஊதியம் குறைந்தோருக்கு அரச மானியம் வழங்கப்பட்டது. லிபியாவில் அரசியல் அல்லது அரசியலோடு தொடர்புடையதாகக் காணப்பவை தவிர, இதர அனைத்தையும் சுதந்திரமாக மக்கள் மேற்கொள்ளக்கூடிய நிலையே காணப்பட்டது.
இதனால், லிபிய மக்கள் மத்தியிலும் கடாபி கதாநாயகனாகத்தான் நீண்ட காலம் வாழ்ந்தார்.
இவற்றின் காரணமாக சிறிய இராணுவத்தை வைத்துக்கொண்டே, மேற்குலகின் உதவியின்றி, மக்கள் எதிர்ப்பின்றி, ஆட்சி நடத்தக்கூடிய வலிமையை கடாபி பெற்றிருந்தார். கடாபிக்கு எதிரானவர்கள், மேற்கின் ஒடுக்குமுறைக்குத் துணைபோகின்றவர்களாகவே காணப்பட்டனர். இன்றுவரைக்கும், கடாபி அதிகாரத்திற்குக் கிடைக்கப்பெற்றிருந்த மக்கள் ஆதரவின் காரணமாகவே, சிறிய இராணுவத்தைக் கொண்டிருந்த லிபியாவை வீழ்த்தவும், கடாபியைக் கொலை செய்யவும், மேற்குலகிற்கு மிக நீண்ட கால எல்லை தேவைப்பட்டது.
கடாபி, ஏகதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார் என்பதைவிட, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது, அரபுலகிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும், உள் நாட்டிலும், அவரின் அதிகாரத்தை நிலைநாட்ட உதவியது என்பதே உண்மை. இதுவே அவரது அரசியலுக்கு வசதியானதாக அமைந்தது.
கடாபியைக் கொலைசெய்வதற்கான திட்டம், சில வருடங்களின் முன்னமே ஆரம்பமாகிவிட்டது என்பதால், ‘அரபுலகின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட எழுச்சிகளை, தமது அதிகாரத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொண்ட நேட்டோ அதிகாரமும், அதன் அடியாள் அமைப்பான ‘ஐக்கிய நாடுகள் நிறுவனமும்’ லிபியாவைக் கொள்ளையிடுவதற்காக மிக நேர்த்தியான திட்டங்களை வகுத்தன.’
மேற்குலக ஊடகங்களில், ‘‘நாகரீகத்தைக் கற்றுக்கொள்ள வாய்பளித்தும், கடாபி அரசு பயன்படுத்திகொள்வதாயில்லை’’ என்பன போன்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கடாபி அழிவின் ஆரம்பம்:
இவை அனைத்திற்கும் மேலாக, கடாபியின் அழிவு 2000-மாவது ஆண்டுகளின் நடுப்பகுதியிலிருந்தே ஆரம்பமாகிவிட்டது எனலாம். ‘நாட்டில், உள் கட்டுமானங்களை மேப்படுத்துவது’ என்ற தலையங்கத்தில், கடாபி, ‘உலகமயமாதல் மற்றும் நவ தாராளவாத நிக்ழ்ச்சி நிரலுக்குள்’ லிபியாவை உட்படுத்திக் கொள்கிறார்.
இதன் மறுபக்கமானது, ஏனைய அனைத்து நாடுகளிலும் நடந்ததுபோன்றே, லிபியாவையும் மேற்குலக நாடுகளின் புதிய சுரண்டல் அமைப்பு முறைக்கு உட்படுத்தியது. சுரண்டல், சிறுகச் சிறுக ஆரம்பிக்கிறது. புற்றுநோய் போன்று நாட்டை அரித்துச் செல்கின்றது.
உலகமயமாதல் செயற்படுத்தப்படும்போதெல்லாம், ‘இரண்டு பிரதான சமூகக் கூறுகள்’ உருவாவது வழமை.
முதலாவதாக, ‘வறுமையும் வேலையின்மையும் அதிகரிக்கும்’, இரண்டாவதாக ‘மிகச்சிறிய, விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்களைக்கொண்ட மேல்தட்டு வர்க்கம், அபரிமிதமாக பணத்தையும் மூலதனத்தையும் பெருக்கிக் கொள்ளும்’.
ஆக, லிபியாவில் வறுமை தலைகாட்டத் தொடங்கியது. மக்கள் விரக்திக்கும் வெறுப்பிற்கும் உள்ளானார்கள். அவர்களின் மிகச்சிறிய பகுதி, இஸ்லாமிய அடிப்படைவாதத்தோடு தம்மை அடையாளப்படுத்திக்கொண்டது. இதில், வேடிக்கை என்னவென்றால், ‘‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’’ என்று வாய் கிழியக் கூக்குரல் போடும் அமெரிக்காவும் ஐரோப்பாவும், ‘சவுதி அரேபிய அடிமைகளின்’ உதவியோடு, லிபியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கடாபிக்கு எதிராகத் தூண்டின. கடாபிக்கு எதிரான மக்கள் உணர்வு, கடந்த முப்பது வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்தது.
பின்னர், தொழில் துறையில் இரண்டு பிரதான மாற்றங்கள் நிகழ்ந்தன. எண்ணைச் சுத்திகரிப்பு நிறுவனங்கள், வங்கிகள், உப தொழில்கள் போன்றவையெல்லாம் தனியார் மயமாகின. அப்படியே, பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கும் உள்ளாகின. ஏகாதிபத்தியங்கள், அமைதியாக வாழ்ந்த லிபிய மக்களின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தன. 2004&ம் ஆண்டின் பின்னர், ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை, சுற்றுலாத் துறை போன்றவை, முழுவதுமாக ஏகாதிபத்திய நிறுவனங்களின் கைகளுக்கு மாறின.
இவற்றின் உள்ளூர் பிரதினிதிகளாக, இனக் குழுக்களின் தலைவர்கள், கடாபி இராணுவத்தின் உயர் அதிகாரிகள், கடாபி குடும்பத்தினர் ஆகியோர் உருவாகினர்.
உலகமயமாதல் ஊடுருவிய அனைத்து இடங்களிலும், மற்றொரு நச்சு விதையை ஏகபோகங்கள் விதைப்பது வழக்கம். அரசு சார்பற்ற நிறுவன்ங்கள்(ழிநிளி) அல்லது தன்னார்வ நிறுவனங்களே அவை.
தன்னார்வ நிறுவனங்களில் பிரதானமாக, அமரிக்கன் எய்ட்ஸ், கிரிஸ்டியன் எய்ட்ஸ், உபந்து, போர் வேர்க்ஸ் போன்ற தன்னார்வர் நிறுவனங்களே, 2004-ம் ஆண்டளவில், முதன் முதமில் லிபியாவிற்குள் உதவி என்ற பெயரில் உள் நுழைந்தன. சிறிது சிறிதாக தம்மை நிலைப்படுத்திகொண்ட இத்தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைத் தொடர்ந்து, வெவ்வேறு நோக்கங்களுக்காக அவை லிபியா முழுவதும் விதைக்கப்பட்டன.
இவை, இரண்டு பிரதான நடவடிக்கைகளை மேற்கொண்டன. உளவறிதல், மிகப் பிரதானமான ஒன்று. இரண்டாவதாக, நுகர்வுக் கலாச்சாரத்தில் ஈடுபாடுகொண்ட, படித்த மேல் மத்தியதரவர்க்கத்தை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சார்பாளர்களாக மாற்றியது. கருத்தை உருவாக்கும் வலிமைகொண்ட இவர்களுக்கு, அதீத பணம் ஊதியமாக வழங்கப்பட்டது.
அதே சமயம், உலகமயமாதல் உருவாக்கிய மேல்தட்டு வர்க்கத்தின் பெரும்பகுதியை, கடாபியின் குடும்பத்தினரும் அவரது நண்பர்களும், இராணுவ உயர் அதிகாரிகளும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர். கடாபியின் முதலீடுகள் நாடு கடந்தது. தவிர, இதன் இரண்டாவது தளத்தில் உருவான பணக்கார மத்தியதர வர்க்கமான கலாச்சார உலக மயமாதலிற்கு உட்பட்ட, மேற்குலகை ஆதரிக்கும் நுகர்வு வர்க்கம் ஒன்றும் உருவானது.
இந்த வர்க்கத்தினரையும், வெறுப்பிற்கு உள்ளான பகுதியினரையும் மேற்கின் உளவு அமைப்புக்கள் பயன்படுத்திகொள்ள ஆரம்பித்தன. எண்ணை மோகம்கொண்ட ஏகாதிபத்திய அரசுகள், கடாபியின் மரணப் பொறியை, அவரின் கோட்டைக்குள்ளேயே உருவாக்க ஆரம்பித்தன. இதே வேளை, மேற்கின் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்ட கடாபி, மேற்கின் அரசுகளோடு உறவை வளர்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தின் சூத்திரதாரிகளில் ஒருவர் எனக் கருதப்படும் முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர், கடாபியின் கன்னத்தில் முத்தமிட்ட செய்திப்படங்கள் உலகப் பத்திரிகைகளை ஆக்கிரமித்தன. இறுதியில், ஒபாமாவரைக்கும் கடாபியை கட்டித் தழுவியிருக்கின்றனர். இது மேற்குலகின் இன்னொரு பிரச்சாரமே.
இது நாள்வரை, மேற்கின் கொள்ளைக்கு எதிராகப் போராடும் ஒரு வீரனாகக் கருதப்பட்ட கடாபியின் ஒமர் முக்தார் பிம்பம், இப்போது சுக்கு நூறாக நொருங்கிப் போகிறது. இதன் இன்னொரு வடிவமாக, ஆப்கானிஸ்தான் கைதிகளின் சித்திரவதைக் கூடங்களில் ஒன்றாக லிபியாவும் பயன்படுத்தப்பட்டது. ஆக, உலகமயமாதல் கடாபியை தலைகீழாக மாற்றிப்போட்டது.
முன்பிருந்த கடாபி, 2005-ம் ஆண்டுக்குப் பிறகு, மேற்கில் தங்கியிருக்கும் பலமிழந்த கோழை மனிதனாக மதிப்பிழந்து போனார். அப்போதே கடாபியின் முடிவு நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.
2005-ன் பின்னான கடாபி, அரசியல் ரீதியாகக் கொலை செய்யப்பட்ட ஒரு நடை பிணமாகவே வலம் வந்தார். உலகமயமாதலால் அரசியல் கொலை செய்யப்பட்ட நாற்பண்டு சர்வாதிகாரியின் உடல், இப்போது அழிக்கப்பட்டுவிட்டது.
courtesy: http://inioru.com/?p=23926
image/guardian.co.uk
- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
உலகின் சர்வாதிகாரி அனைவருக்கும் இது ஒரு பாடம்....
உலகையே கட்டி ஆள நினைக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் இது ஒரு அபாய மணி.....
உலகையே கட்டி ஆள நினைக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் இது ஒரு அபாய மணி.....
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|