புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
48 Posts - 43%
heezulia
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
414 Posts - 49%
heezulia
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_m10ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா !


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Oct 21, 2011 1:55 pm

ஆயிரம் மரம் வைத்த ஆபூர்வ திம்மக்கா !

Friday 21 October 2011 02:05:36 AM |



சாலு மரத திம்மக்கா’ என்றால், கர்நாடகாவுக்கே தெரியும்!

எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில்... இன்று சாலை நெடுக இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் சலசலக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை முழுக்க வரிசையாக (சாலுத) நின்று, ஊருக்கே நிழலாற்றும் அம்மரங்களை நட்டு வளர்த்த திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது... 101!

இந்த பசுமைச் சேவைக்காக... சிறந்த தேசியக் குடிமகன் விருது, நான்கு குடியரசுத் தலைவர்களின் கையால் பெற்ற விருதுகள், மூன்று பிரதமர்களிடமிருந்து பெற்ற விருதுகள், பல முதலமைச்சர்கள் அதிசயித்து அளித்த மாநில விருதுகள், தன்னார்வ, பெண் நல நிறுவனங்கள் வழங்கிய விருதுகள், பட்டங்கள் என குவித்திருக்கும் திம்மக்கா பாட்டியின் கூதூர் கிராமம் இருப்பது... செல்போன் சிக்னல்கூட கிடைக்காத, பெங்களூரு ஊரக மாவட்டமான மாகடி தாலுகாவில்!

பயணம் நெடுகிலும் திம்மக்கா பாட்டி வளர்த்திருக்கும் ஆலமரங்கள் தலையசைத்து வரவேற்கின்றன. வாசலில் நம்மைக் கண்டவுடன், முந்தானையில் முடிந்திருந்த கசங்கிய 10 ரூபாய் நோட்டைக் கொடுத்து, டீ வாங்கிவர ஆள் அனுப்புகிறார். உடனடியாகக் குளித்து, விபூதி பூசி, பளிச்சென அணிந்து சிரிக்கிறார்... ஐந்து நிமிடங்களுக்குள்!

''ஏழைக் குடும்பத்துல பிறந்தவ நான். 16 வயசுல, என் எசமான் சிக்கையா கையில புடிச்சுக் கொடுத்துட்டாங்க. பேகூர்ல இருந்து கூதூருக்கு வந்துட்டோம். கல்யாணமாகி 10 வருஷம் ஆகியும், குழந்தை எதுவும் உண்டாகல. ஏறாத கோயில் இல்லை. விரதம் இருந்தே உடம்பு வீணா போச்சு. அக்கம்பக்கம் ஜாடை மாடையா பேசின பேச்சு, உயிரை வதைச்சுது. காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் காட்டுல உழைச்சுட்டு வீடு வந்தா, சோறு இறங்காது... நிம்மதியான தூக்கமும் இருக்காது. ஒரு கட்டத்துல தூக்கு மாட்டிக்கலாம்னு நினைக்கற அளவுக்கு மனசு வெறுத்துட்டேன்''

- இதைச் சொல்லும்போது, இந்த 101 வயதிலும் கண்கள் இடுங்குகின்றன.

''வயித்துல சுமந்து வளர்க்கறது மட்டும்தான் உசுரா..? ஆண்டவன் படைப்புல ஆடு, மாடு, மரம், செடினு எல்லாமே உயிருதான்ங்கிற உண்மையை, அப்போ என் மனசு தவிச்ச தவிப்பு மூலமா உணர்ந்தேன். 'குழி பறிச்சு, கன்று நட்டு, தண்ணிவிட்டு... அந்தச் செடியையே புள்ளையா வளர்ப்போம். ஊர்ல எல்லாரோட புள்ளைகளும் அவுங்கவங்க அப்பன், ஆத்தாவைத்தான் பார்த்துக்குவாங்க. ஆனா, என் புள்ளைங்க வளர்ந்து, இந்த ஆத்தாவுக்கு மட்டுமில்ல... ஊருக்கே நிழல் கொடுக்கும்’னு என் மனசுக்கு ஒரு தெளிவு கிடைச்சுது.

இந்த கூதூர் முழுக்க பொட்டல் காடுதான். வெக்கையா தகிக்கும். ரோட்டோர சுமைதாங்கிக் கல் பக்கத்துல ஒரு ஆலங்கன்று நட்டு வளர்த்தேன். ஆரம்பத்துல, 'இது என்னாடி கிறுக்குத்தனம்?’னு கோபப்பட்டார் என் எசமான். ஆனா... அந்தச் செடி வேர் பிடிச்சு, இலை துளிர்த்து வளர்ந்தப்போ... வயிறு குளிர்ந்து, மனசு குளிர்ந்து நான் அடைஞ்ச சந்தோஷத்தை ரசிச்சவர், அதுக்குப் பிறகு மரம் நடுற வேலைகள்ல எனக்கு உதவிகள் செய்ய ஆரம்பிச்சார்!

காடு, மேடுனு அலைஞ்சி, திரிஞ்சி நிறைய ஆலமரக் கன்றுகளா கொண்டு வந்து, பதியம் போட்டு வளர்த்து, கொஞ்சம் பெருசானதும், ரோட்டோரத்துல குழி தோண்டி நட்டோம். இப்படி ஆலமரக் கன்றுகளா நட்டுட்டே இருந்தோம். மழை வரும்போதே குழிவெட்டி சேமிச்சாதான் தண்ணி. அப்படி சேர்ந்த தண்ணியை கிணத்துல, குளத்துல இருந்து எடுத்துட்டு வந்து நானும் எசமானும் கஷ்டம் பார்க்காம ஊத்தி ஊத்தி வளர்த்தோம்.

ஒரு தடவை குடிக்கக்கூட தண்ணி இல்லாத அளவுக்கு பஞ்சம். பக்கத்து ஊர்ல இருந்து ஆளுக்கு ரெண்டு மண்பானையில தண்ணி எடுத்துட்டு வந்து செடிகளுக்கு ஊத்தினோம். சுடுவெயில்ல தலையில ஒண்ணு, இடுப்புல ஒண்ணுனு ரெண்டு பானையோட வரும்போது, கல் தடுக்கி விழுந்து, முட்டியில ரத்தம். கீழ கிடந்து அழ ஆரம்பிச்சுட்டேன். 'சரியாயிடும்’னு என் எசமான் பதறிக் கட்டுப்போட, 'தண்ணியெல்லாம் கொட்டிப் போச்சேனுதான் அழுவறேன்’னு நான் சொல்ல, கண்கலங்கிட்டார்!''

- நாமும் கலங்கித்தான் போனோம்.

''அப்படி நாங்க அரும்பாடுபட்டு வளர்த்த ஆயிரம் மரங்கள்தான், இன்னிக்கு உயர வளர்ந்து ஒய்யாரமா நிக்குது. இந்தப் பொட்டல் காட்டுக்கு வர்ற சாலையைச் சோலையாக்கித் தந்திருக்கு. தன் காலடியில கிடக்கிற அத்தனை பேருக்கும் நிழல் தருது. ஊரோட வெம்மையைத் தணிச்சு, குளிர்ந்த காத்தைக் கடத்துது. 'மரத்தை வெச்ச மகராசி, நீ நல்லா இருக்கணும்!’னு சனங்க எல்லாம் சொல்லும்போது, நல்ல புள்ளையைப் பெத்த புண்ணியவதி மனசு குளிர்ற மாதிரி, என் மனசும் குளிர்ந்து போகுது!''

- திம்மாக்காவின் வார்த்தைகளை, சுற்றி நின்ற ஊர்க்கூட்டம் நன்றியும், நெகிழ்ச்சியுமாக ஆமோதித்தது !

திம்மக்கா பாட்டியின் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, இப்போது முதுமையில், தனிமையில் இருக்கிறார் பாட்டி. ஆனால்... சர்க்கரை, ரத்த அழுத்தம் என எந்த நோயும் இல்லை. கண் பார்வை அத்தனை துல்லியம். டெலிபோனில் பேசுமளவுக்கு கேட்கும் ஆற்றல். அவருடன் நடந்தால் மூச்சு வாங்குகிறது நமக்கு. அரசாங்கம் வழங்கும் முதியோர் நலத்திட்டத் தொகையான 500 ரூபாயை மட்டுமே ஆதார வருமானம். வாசலில் சாணி தெளிப்பது முதல் சமையல் வரை வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார் இந்த 101 வயதிலும்!

''ஊர்ல இருந்து டவுன் ரொம்ப தூரம்ங்கறதால, அவசர ஆத்திரத்துக்கு மருத்துவ உதவி இல்ல; பிரசவத்துக்குப் போற பொண்ணுங்க ரொம்ப சிரமப்படுறாங்க. எனக்கு பெங்களூருல, கவர்மென்ட் வீடு கொடுத்துருக்கு. ஆனா, அதை நான் பார்த்ததுகூட கிடையாது. அதெல்லாம் எனக்கு தேவையில்ல... எங்க ஊருல ஆஸ்பத்திரி கட்டிக்கொடுத்தா போதும்!'' என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் இந்த 'செஞ்சுரி' பாட்டி... ஓர் ஆச்சர்யக்குறிதான்!’

http://www.thedipaar.com/news/news.php?id=35669



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக