புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10 
9 Posts - 82%
heezulia
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10 
1 Post - 9%
mruthun
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒடுக்க பட்டவர்களின் ஓலம் !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 15, 2011 4:53 pm

First topic message reminder :

முன்னுரை
நாம் ஈழத்தமிழர்களுக்காக வருந்துகிறோம்.ஆஸ்திரேலியாவில்
இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதற்காக பொங்குகிறோம் . அமெரிக்காவில் பிள்ளையார் உருவப்படம் அவமதிக்க பட்டதற்காக போராடுகிறோம். சீனாவில் வெளியிட்டுள்ள வரைபடத்தில் , இந்திய எல்லைகள் சுருக்கப்பட்டிருப்பதற்காக கவலை படுகிறோம். இவ்வளவு ஏன் ? பல யுகங்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் இராமாயண இதிகாசத்தை படித்துவிட்டு ராமன் 14 வருடங்கள் வனவாசம் போய்விட்டானே என இன்றும் கூறுகிறோம். சிட்டிசன் திரைப்படம் பார்த்துவிட்டு அத்திப்பட்டி கிராம மக்களுக்காக அழுகிறோம் . ஆனால் சற்றேறத்தாழ 20 வருடங்களாக வனவாசம் அனுபவித்த வாச்சாத்தி கிராம மக்களின் ஓலம் நாம் கவனத்திற்கு வராமல் போனது ஏன் ? இன்னும் எத்துனை ஓலங்கள் இது போன்று ஒடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறது ? எத்தனை சகோதரிகளின் கண்ணீர் துளிகள் நமக்கு சாபம் விட காத்து கொண்டிருக்கிறது ?

வாச்சாத்தி கிராமம் !

தர்மபுரி பகுதியில் உள்ள சித்தேரி மலைத்தொடரின் அடிவாரத்தில் தான்
இந்த கிராமம் அமைந்துள்ளது. உழைத்து வாழக்கூடிய மக்கள் அவர்கள். அவர்களை பழங்குடி மக்கள் என்று கூறுகிறார்கள். வர வர நாட்டில் யார் யாரை பழங்குடிகள் என்று கூறுவது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. primary data collection செய்யாமல் secondary data களை மட்டும் வைத்து ஒருமனிதர் வாழ 32 ரூபாய் போதுமென்று கூறிய திட்ட குழுவும் அதை அமைத்த அரசாங்கமும்தான் பழங்குடி அரசாங்கம். வச்சாத்தி மக்களின் முற்போக்கு சிந்தனைகள் வேறு எந்த ஊர் மக்களுக்கும் இல்லை எனலாம். அவர்கள் நவீனமான நாகரீகம் உடைய மக்கள் . பழங்குடி மக்கள் அல்ல.

வாச்சாத்தியில் என்ன பிரச்சனை ?

சித்தேரி மலைபகுதியில் சந்தன மரங்கள் அதிகம். அரூர் மற்றும்
பாப்பிரெட்டிபட்டி வன அலுவலர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுகொண்டு அதனை விற்று வந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அது சட்டவிரோதம் என அறிந்த மக்கள் அச்செயலை செய்யாமல் ஒதுங்கியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் பிரச்சனை முற்றவே வனத்துறை , வருவாய் துறை , காவல் துறை என மூன்று கூட்டுபடையும் சேர்ந்து சந்தன மரங்களை கடத்தி விற்ற கிராம்அ மக்களை விசாரிக்கக் சென்றிருக்கிறார்கள். இளைஞர்களை முதலிலேயே கைது செய்துவிட்டார்கள். எஞ்சியுள்ள பெரியவர்களையும் , பெண்களையும் , இளம் பெண்களையும் துன்புருத்தியிருக்கிரர்கள். அதில் 18 பெண்களை தேர்வு செய்து அரூர் கடத்தி சென்றிருக்கிறார்கள். செய்யவேண்டிய அக்கிரமங்களை எல்லாம் அந்த ஊரிலேயே செய்த பின்னும் ஒரு வாரம் கடத்தி வைத்து துன்புருத்தியிருக்கிறார்கள்.

CPI என்ன சொல்கிறது ?

1992 இல் நடந்த இந்த அட்டுழியத்தை அறிந்த அந்த பகுதி சட்ட மன்ற
உறுப்பினர் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த அண்ணாமலை அந்த மக்களின் சார்பாக அரூர் காவல் நிலையத்தில் புகர் செய்திருக்கிறார். MLA கொடுத்த புகரையே ஏற்றுகொள்ள வில்லையாம். பின்புதான் மாநில பழங்குடி ஆணையத்தின் நேரடி விசாரணையில் நீதிமன்றம் வரை சென்றது.

15 ஆண்கள் , 28 குழந்தைகள்; 90 பெண்கள் என 133 பேர்மீது
வழக்கு பதிவு செய்யபட்டிருக்கிறது. சந்தன மரகடத்தல் , கடத்தலை தடுத்த அதிகாரிகள் மீது கொலை முயற்ச்சி இன்னும் பிற வகைகளில் பதிவு செய்திருந்தார்கள். CPI விசாரித்து உண்மையை கூறியது. அதிகாரிகளின் ஆதிக்க போட்டியில் இந்த மக்கள் பாதிக்க பட்டுவிட்டார்கள். இந்த மக்களில் ஒருசிலர் தான் பணத்திற்காக அந்த செயலை செய்திருக்கிறார்கள். மற்றபடி இந்த சந்தன மர கடத்தலுக்கும் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறியது. மேலும் அந்த ௧௮ இளம் பெண்கள் அடைந்த சித்ரவதை உண்மையென உறுதிசெய்தது.

தீர்ப்பு என்ன ?


தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்பு தீர்ப்பு
அளித்திருக்கிறது. 1992 இல் நடந்த பிரச்னைக்கு 2011 இல் தீர்ப்பு .
வனத்துறை, வருவாய்துறை , காவல் துறை என 269 அதிகாரிகளில் 54 பேர் உயிரிழந்தது போக எஞ்சியுள்ள 215 பெரும் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறியுள்ளது. அதில் 12 பேருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் ; 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ,2000 ரூபாய் அபராதமும் ,; 70 பேருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது. இந்த அபராத தொகையை பாதிக்க பட்ட18 பெண்களுக்கும் பகிர்ந்து கொடுக்க கூறியிருக்கிறது. ( எந்த அறிவுஜீவி , நீதிமான் தீர்ப்பு கூறினார் என தெரியவில்லை. )

நியாயமான தீர்ப்பா ?

அந்த மக்கள் மீது குற்றம் இல்லை என்பதை ஒத்துகொண்டதை தவிர
வேறு எந்த நியாமமும் இந்த தீர்ப்பில் இருப்பதாக நான் கருதவில்லை. 19 வருடங்களாக மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு வாழ்ந்த 18 பெண்களுக்கும் , அவர்களின் வேதனைக்கு தருகிற இடையீட்டு அளவு தலா ஒவ்வொருவருக்கும் 8000 ரூபாய் வரும் . அவர்களை இதைவிட கொடுமைபடுத்த முடியாது . சரி போகட்டும் நீதி மன்றத்தில் ஒரு அளவிற்கு மீறி அபராதம் விதிக்க முடியாது . அரசாங்கமும் , அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு என்ன செய்தது ?

வாச்சாத்தியும் அரசியல் கட்சிகளும் :


கலைஞர் அவர்களும் , ஜெயா அவர்களும், ராமதாஸ் அவர்களும் ,
வைகோ அவர்களும், இதை கண்டுகொள்ளவே இல்லை போல. கோபால புற கோமகனையும் , தைலாபுர தோட்டத்து மாங்கவையும் விட்டுவிடுவதை போல சிறுதாவூர் சீமாட்டியை விட்டுவிடமுடியாது. ஏனென்றால் 1992 லும் சரி அதன் தீர்ப்பு வந்திருக்கிற 2011லும் சரி இவர் தான் முதல்வர்.ஒருவேளை அந்த பெண்கள் அனுபவித்த இன்னல்கள் இவருக்கு பெரிதாய் தெரியவில்லை போல. மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் யை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இவர்களுக்கு குரல் கொடுக்க வில்லை.

சபாஸ் இளைஞர்களே :

உடலியல் வன்முறைக்கு ஆளான பெண்களை அந்த கிராம
இளைஞர்களே திருமணம் செய்துகொண்டுள்ளர்கள். மேலும் அவர்களின் கோபம் முறைப்படுத்த பட்டு சரியான பாதையில் வெளிப்படுத்த பட்டிருக்கிறது.

முடிவுரை :

எது எப்படியோ, புராண காலத்தில் , அஸ்வமேத யாகம்
செய்வதாகட்டும், பின்பு நடந்த அரசர்களின் போர்களாகட்டும், இனகலவரங்கள் ஆகட்டும் , அதிகாரிகளின் அத்துமீறல்கள் ஆகட்டும் , எதுவாய் இருந்தாலும் பாதிக்க படுவது பெண்கள் தான். என்று இந்த நிலை மாறும். இன்னும் எத்துனை ஓலங்கள் இது போன்று ஒடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறது? எத்தனை சகோதரிகளின் கண்ணீர் துளிகள் நமக்கு சாபம் விட காத்து கொண்டிருக்கிறது ?




ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Thank-you015

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 16, 2011 3:45 pm

உதயசுதா wrote:
து தெறி போங்கடா நீங்களும் உங்க ஜனநாயகமும்.

உண்மை தான் அக்கா ! சுதந்திரம் வாங்கிய வருடம் நேரு கூறிய வார்த்தியையே இன்னும் கூறிக்கொண்டிருக்கிறார்கள் .. ஆள்பவர்களை எதிர்த்து கேள்வி கேட்பதுதான் ஜனநாயகம் " எதிர்த்து கேள்வி மட்டும் கேட்டு தொலைப்பதற்கு பதிலாய் அந்த அடிமை வாள்க்கையே மேல் அல்ல வா ?



ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 16, 2011 3:48 pm

kitcha wrote:
...........................பெருமாள் அவர்களுக்கு எல்லோரும் ஓட்டு போடுங்க

நன்றி கிட்சா ! உங்க பகுதியில இப்ப தேர்தல் இல்லையே அப்பறம் ஏன் இப்படி ? .

என்ன உங்களமதிரி வேற யாரும் விதவிதமா திட்ட முடியாது ?





ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 16, 2011 4:01 pm

முஹைதீன் wrote:மிக கேவலமான தீர்ப்பு எதுக்கு இவர்கள் நீதிபதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை இதுபோன்று இன்னும் எத்தனை எத்தனை வழக்குகள் எஞ்சி இருக்கின்றனவோ
உன்மயானா ஜனநாயகம் என்று மலருமோ

நன்றி ! முகைதீன் ! ஜனநாயகம் மலர்வது சத்தியம் இல்லை போல



ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Oct 16, 2011 4:09 pm

இதைப்போன்ற எண்ணற்ற சம்பவங்கள் தினந்தோறும் நம் நாட்டில்
மட்டும் அல்ல உலகம் மிகவும் சர்வ சாதாரணமாக நடக்கிறது

"திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை " என்ற மொழி பொய்த்துவிட்டது

"வலுவுள்ளதே தப்பிப் பிழைக்கும் என்ற மொழியே எங்கும் ஒலிக்கிறது

பணக்காரனின் நாய் விட ஏழையின் உயிர் துச்சமாக போய்விட்டது

முன்பெல்லாம் இளவயது பெண்களின் மானதிற்கு மாத்திரமே
பாதுகாப்பு இல்லாமல் இருந்தது .

ஆனால் இன்றோ 80 வயது கிழவி கூட மானபங்கப்படுத்தப்படுகிறாள்

சொந்த பேரனாலேயே மூதாட்டி ஒருவர் மானபங்கப்பட்டு இருக்கிறார் என்றால் உலகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது ?
இது கொடுமையிலும் கொடுமை

வச்சாத்தி சம்பவம் நடந்து பல வருடங்கள் கழித்து தீர்ப்பு கூறுகின்றனர்
அதுவும் எப்படி ? பாதிக்கப்பட்டவர்களை கேவலப்படுத்தும் விதமாக

இதை விட கொடுமை உலகில் வேறு எங்கும் நடந்திருக்காது
ஆனால் இதை விட கொடுமைகள் யாவும் நம் பாரத நாட்டில்
ஸர்வ சாதாரணமாக நடக்கும்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 16, 2011 4:13 pm

நட்புடன் wrote:அலைகள் ஓய்வதில்லை
ஓலங்களும் ஓயப் போவதில்லை
கழகங்களும் கலங்கப் போவதில்லை
அப்பாவி மக்கள்தான் கலங்கி கசங்கிப் போவார்கள்
தனிமனிதனுக்குள் பண்பாடு எனும் விருக்க்ஷம் வளராதிருந்தால்
சட்டங்களும் புத்தகங்களாவே இருந்துவிடும் அவலங்கள் பட்டங்களாக பறந்துவிடும்இந்நிலை மாறிட மனித மனம் கண்டுபிடிக்கப் படல் வேண்டும் பின்னர் மாறிட துணிந்திட வேண்டும்துணியாத மனதினை வேரறுத்து வகை செய்திட வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும்...
சிந்திக்கத் தூண்டும் பதிப்பு பெருமாள் - சரி இது எப்படி உங்களுக்கு தோன்றியது? அதுவே ஆச்சரியம் தான்.

நன்றி நட்புடன் ! தாங்கள் எப்படி இப்படி எழுத முற்பட்டீர்களோ அப்படித்தான் அடியேனும்
நன்றி ! தாங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நச்



ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 16, 2011 4:18 pm

aathma wrote:
இதை விட கொடுமை உலகில் வேறு எங்கும் நடந்திருக்காது
ஆனால் இதை விட கொடுமைகள் யாவும் நம் பாரத நாட்டில்
ஸர்வ சாதாரணமாக நடக்கும்

நீங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் உண்மைதான் அக்கா !

உள்ளத்தில் சகோதரத்துவம் இருந்தால் .. எல்லோரும் சகோதரிகள் தான்
உள்ளத்தில் கள்ளம் இருந்தால் சகோதரிகள் கூட வெறும் பெண்கள் தான் என்பது
பத்திரிக்கைகள் பதிய மறுக்கிற செய்தி !

வேதனையாய் இருக்கிறது ! நன்றி அக்கா !



ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Oct 16, 2011 4:27 pm

வெறும் பொழுதுபோக்கு பதிவுகளை மாத்திரம் போடாமல்
இவை போன்ற சமூக சிந்தனையான பதிவுகளை ஏற்படுத்தும்
தம்பி பெருமாளுக்கு என் வாழ்த்துகளும் , நன்றிகளும்

உன்னை போன்ற சிலராவது நாட்டில் ,
பெண்கள் குறித்து , நாட்டின் நிலமை குறித்து
கவலை கொள்வதால்தான் நம் நாடு இன்று ஓரளவிற்காவது
சென்று கொண்டு இருக்கிறது முழுவதுமாக அழியாமல்

உன்னை போன்ற இளைஞர்களாய் பார்த்து இந்த நாட்டை
நல்வழிக்கு கொண்டுவந்தால்தான் உண்டு .

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 16, 2011 6:06 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
kitcha wrote:
...........................பெருமாள் அவர்களுக்கு எல்லோரும் ஓட்டு போடுங்க

நன்றி கிட்சா ! உங்க பகுதியில இப்ப தேர்தல் இல்லையே அப்பறம் ஏன் இப்படி ? .

என்ன உங்களமதிரி வேற யாரும் விதவிதமா திட்ட முடியாது ?

நான் சொன்ன ஒட்டு லைக் பட்டன் -
நான் யாரையும் திட்டியது கிடையாது.திட்டுவது போல் உங்களுக்கு தெரிந்து இருக்கு.நான் ஒரு அப்ராணி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 2 Image010ycm
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 16, 2011 6:11 pm

ஒடுக்க பட்டோரின் ஓலம் என் காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது 19 வருடம் கழித்து தீர்ப்பு வழங்குகிறார்கள் அந்த அளவுக்கு இந்தியாவின் சட்டம் இருக்கிறது! எங்கயோ இருந்து படித்து விட்டு பின்னூட்டம் விடுகிறோம்! அவ்வளவு தான். நல்ல இளைஞ்சர் சமுதாயம் தமிழ் நாட்டை ஆண்டால் நல்ல இருக்கும்..!

பகிர்விற்கு நன்றி அண்ணா!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 7:15 pm

படித்து மனம் அழுது வழிகிறது அப்பெண்களுக்காக. ஆத்திரம் வருகிறது வன்முறையாளர்களை மீது. ஆனந்தக்கண்ணீர் வருகிறது அந்த் ஊர் இளைஞர்களின் பொறுப்புணர்ச்சியை நினைத்து.

சமூக அவலங்களை எடுத்துக்காட்டுவது இது போன்ற பதிவுகள்தான். இருட்டறையில் இருக்கும் விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதன் மூலமே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இயலும். சமுதாய அக்கறை கொண்ட இப்பதிவுக்கு நன்றி ஐய்யம் பெருமாள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக